search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Hockey Champions Trophy"

    • இந்தியா, ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான், சீனா, மற்றும் மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.
    • தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த பாஸ் தி பால் கோப்பைக்கு கலெக்டர் ஷஜீவனா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில், 7-வது "ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி" தொடர்பாக "பாஸ் தி பால் கோப்பைக்கு" கலெக்டர் ஷஜீவனா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்தியா, ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான், சீனா, மற்றும் மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

    16 ஆண்டுகளுக்கு பின்பு நமது மாநிலத்தில் நடைபெற உள்ளது. சர்வதேச அளவிலான இப்போட்டிகளை சிறப்பாக கொண்டாடவும் இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தவும், பாஸ் தி பால் டிராபி டூர் தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களை கடந்து தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த பாஸ் தி பால் கோப்பைக்கு கலெக்டர் ஷஜீவனா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சரவணக்குமார் எம்.எல்.ஏ., விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கோப்பையுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். விளையாட்டு வீரர்களுக்கு இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், தேனி மாவட்ட ஏ.எஸ்.பி. சுகுமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, தேனி-அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், தேனி ஹாக்கி சங்க தலைவர் செந்தில், ஹாக்கி சங்க செயலாளர், சங்கிலிகாளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #AsianHockey
    மஸ்கட்:

    5-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆண்கள் ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், ஓமன் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    தொடக்க நாளான நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஓமனை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 11-0 என்ற கோல் கணக்கில் ஓமனை ஊதி தள்ளியது. இந்திய அணி தரப்பில் தில்பிரீத்சிங் 3 கோலும், லலித் உபாத்யாய், ஹர்மன்பிரீத் சிங், நீலகண்ட ஷர்மா, கேப்டன் மன்தீப்சிங், குர்ஜந்த் சிங், ஆகாஷ்தீப் சிங், வருண்குமார், சிங்லென்சனா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

    மற்றொரு லீக் ஆட்டத்தில் மலேசியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பானை வீழ்த்தி முதல் வெற்றியை தனதாக்கியது.

    இன்று (சனிக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் தென்கொரியா-ஜப்பான் (இரவு 8.25 மணி), இந்தியா-பாகிஸ்தான் (இரவு 10.40 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ஹரேந்திரசிங் கருத்து தெரிவிக்கையில், ‘பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து தான் எங்களுக்கு உண்மையான போட்டி தொடங்குகிறது. ஆசிய விளையாட்டு போட்டியில் அரைஇறுதியில் தோல்வி கண்ட பிறகு சில நாட்கள் எங்கள் அணியினர் கவலையுடன் இருந்தனர். ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கத்தை வெல்ல முடியாமல் போன ஏமாற்றம் நமது வீரர்கள் மனதில் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் கடந்த காலத்தில் நடந்ததை அதிகம் நினைக்கக்கூடாது. ஓமனுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் எங்கள் அணியை சேர்ந்த 9 வீரர்கள் கோல் அடித்தனர். இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவது அடுத்த ஒரு மாதத்தில் நடக்க இருக்கும் உலக கோப்பை போட்டிக்கு நன்றாக தயாராகுவதற்கு உறுதுணையாக இருக்கும்’ என்றார். #AsianHockey

    ×