என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்"

    • ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
    • இந்தப் போட்டிக்கான கோப்பை, சின்னத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 12 ம் தேதி வரை ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பை மற்றும் சின்னத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

    தொடக்க நாளில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொரியா, ஜப்பானை எதிர்கொள்கிறது.

    இந்தியா தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது.

    • முதல் போட்டியில் மலேசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்கடித்தது
    • பிரீத்தி தூபே, லால்ரெம் சியாமி, மனிஷா சவுகான் ஆகியோர் தலா 2 கோல் அடித்தனர்.

    மகளிர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் டிராபி போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகின்றன. முதல் போட்டியில் மலேசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்கடித்தது. தென் கொரியாவுடன் நடந்த இரண்டாவது போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.

    இந்நிலையில் இன்று பீகார் மாநிலம் ராஜ்கிர் மைதானத்தில் வைத்து மாலை 4.45 மணிக்குத் தொடங்கிய போட்டியில் இந்திய அணி தாய்லாந்து அணியுடன் பலப்பரீட்சை செய்தது. இந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்டுத்திய இந்திய அணி 13-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தைத் தோற்கடித்துள்ளது.

    குறிப்பாக இளம் இந்திய வீராங்கனை தீபிகா அதிகபட்சமாக ஐந்து கோல்களை விளாசினார். ஆட்டத்தில் 3வது, ,19வது, 43வது, 45வது, 45வது நிமிடங்களில் தீபிகா கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வலு சேர்த்தார்.

    மேலும் பிரீத்தி தூபே, லால்ரெம் சியாமி, மனிஷா சவுகான் ஆகியோர் தலா 2 கோல்களும் பியூட்டி டங் டங், நவ்நீத் கவுர் தலா 1 கோலும் அடித்தனர். அடுத்ததாக வரும் சனிக்கிழமை நவம்பர் 16 ஆம் தேதி சீனாவுடன் இந்தியா மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் 47, 48 வது நிமிடங்களில் தீபிகா கோல் அடித்தார்.
    • தொடரில் 5 வெற்றிகளுடன் இந்தியா அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

    8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடைபெற்று வருகிறது. வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென்கொரியா, சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். முதல் போட்டியில் மலேசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்கடித்தது. தென் கொரியாவுடன் நடந்த இரண்டாவது போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.

    மூன்றாவதாக தாய்லாந்துடன் நடைபெற்ற போட்டியில் 13-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. நேற்று சீனாவுடன் நடந்த போட்டியில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது இந்தியா. இந்நிலையில் இன்று ஜப்பானுடன் இந்தியா பலப்பரீட்சை செய்தது இந்தியா.

     

    விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் 47, 48 வது நிமிடங்களில் தீபிகா கோல் அடித்தார். 37 வது நிமிடத்தில் துணை கேப்டன் நவ்நீத் கவுர் கோல் விளாசினார். இதன்படி 3- 0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

    எனவே தொடரில் 5 வெற்றிகளுடன் இந்தியா அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை அரையிறுதீயில் மீண்டும் ஜப்பானை எதிர்கொள்கிறது இந்தியா. 

    ×