search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடஒதுக்கீடு மசோதா"

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள இடஒதுக்கீடு மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். எல்லோரும் ஏழை என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். #ReservationBill
    புதுடெல்லி:

    பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு (உயர் சாதியினர்) அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக, அரசியல் சட்டத்தில் 124-வது திருத்தம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

    இதையடுத்து, மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர்சந்த் கெலாட் கடந்த 8-ந் தேதி தாக்கல் செய்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவு குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.


    இதுகுறித்து சிதம்பரம் கூறியிருப்பதாவது,

    பாஜக அரசின் கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் 95 சதவீதம், அதாவது 125 கோடி, ஏழைகளாம்! மாதம் ரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழை, மாதம் 6000 வருமானமுள்ளவரும் ஏழை. இது எப்படி இருக்கு! 

    ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #ReservationBill #ReservationForGeneralCast #PChidambaram

    பாராளுமன்றத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. செயல்பட்டது என்று கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார். #DMK #Kanimozhi #ADMK #BJP
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி., டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    பொருளாதாரத்தில் பின் தங்கிய பொது பிரிவினருக்கு 10 சதவீத இடம் ஒதுக்கீடு செய்து மத்திய பா.ஜனதா அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மக்களை ஏமாற்றுவதற்காக இதை செய்துள்ளனர்.

    இந்த இடஒதுக்கீட்டை தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இதுபற்றிய கருத்தை பதிவு செய்துள்ளார். பாராளுமன்றத்திலும் தி.மு.க. இதை எதிர்த்து ஓட்டு போட்டுள்ளது.

    அ.தி.மு.க.வும் இந்த சட்டத்தை எதிர்ப்பது போல பேசினார்கள். ஆனால் அது வெறும் நடிப்பு. அ.தி.மு.க. எம்.பி.க்கள் எதிர்த்து ஓட்டுப் போடவில்லை. பா.ஜனதா ஆணைப்படி அவர்கள் வெளிநடப்பு செய்து விட்டனர்.

    இதன்மூலம் பா.ஜனதாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. செயல்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. இந்த சட்ட மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.

    பொது பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆண்டு வருமானம் 8 லட்சம் இருக்கலாம் என்று நிர்ணயித்து இருக்கிறார்கள். நாட்டில் மற்ற பிரிவில் 97 சதவீதம் பேர் குறைந்த வருமானம் உள்ளவர்கள்தான். அவர்களுக்கு என்ன நியாயம்?

    மத்திய பா.ஜனதா அரசு இந்துத்துவா, இந்துஸ்தான் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது. பள்ளிகளில் இந்தியை திணிக்க முயற்சி செய்து வருகிறது. இந்தியை எதிர்க்கும் திராவிட இயக்கத்துக்கு எதிராக செயல்படுகிறார்கள்.


    டி.டி.வி.தினகரன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்ததாக கூறினார்கள். அவரை விமர்சனம் செய்ய தினகரனுக்கு எந்தவித தகுதியும் இல்லை.

    இவ்வாறு கனிமொழி கூறினார்.

    டி.கே.ரங்கராஜன் கூறியதாவது:-

    கனிமொழிக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனக்கும் அவருக்கும் எந்தவித மோதலோ, கருத்து வேறுபாடோ இல்லை.

    10 சதவீத இடஒதுக்கீடு பிரச்சனையில், அகில இந்திய கட்சி என்ற அளவில் சில மாநிலங்களை கருத்தில் கொண்டு ஆதரவாக ஓட்டு போடும் நிலை ஏற்பட்டது. ஆனால் சட்ட மசோதாவை ஆதரித்து பேசவில்லை. குறைகளை சுட்டிக்காட்டி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #Kanimozhi #ADMK #BJP
    பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. #RajyaSabha #10pcquota #economicallybackward
    புதுடெல்லி:

    நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இவ்வகையில் ஒட்டுமொத்தமாக பல்வேறு பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உள்ளது.
     
    இதேபோல், முற்பட்ட வகுப்பினர்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கூடுதலாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக இயற்றப்பட்ட மசோதா பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு அ.தி.மு.க., தி.மு.க.,  ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.



    இந்த மசோதா மீதான விவாதம் சுமார் 10 மணி நேரங்களுக்கும் மேலாக நடைபெற்றது. இறுதியில், வாக்கெடுப்பு நடத்த முடிவுசெய்யப்பட்டது. 

    இந்நிலையில், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக 165 வாக்குகள் பதிவாகின. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. #RajyaSabha #10pcquota #economicallybackward
    பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. #LokSabha #10pcquota #economicallybackward
    புதுடெல்லி:

    நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இவ்வகையில் ஒட்டுமொத்தமாக பல்வேறு பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உள்ளது.
     
    இதேபோல், முற்பட்ட வகுப்பினர்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கூடுதலாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக இயற்றப்பட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர் சந்த் கேலாட் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவை சட்டமாக்க, அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் அரசியலமைப்பு சாசன திருத்த மசோதாவாக இது தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்த மசோதா மீதான விவாதம் மாலை 6 மணியில் இருந்து நடைபெற்றது. சுமார் 4 மணி நேரங்களுக்கும் மேலாக இந்த
    விவாதம் நடைபெற்றது. பிரதமர் மோடி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பலர் இரவு 10 மணிக்கு மேல் மக்களவைக்கு வருகை தந்தனர். இறுதியில், வாக்கெடுப்பு நடத்த முடிவுசெய்யப்பட்டது. வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்தால் தான் இந்த மசோதா நிறைவேற்றம் அடையும்.

    இந்நிலையில், இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக 323 வாக்குகளும் எதிர்ப்பு தெரிவித்து 3 வாக்குகளும் பதிவாகின. இதனால் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில் நாளை பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் நடைபெறவுள்ளது. #LokSabha #10pcquota #economicallybackward
    பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. #10pcquota #economicallybackward
    புதுடெல்லி:

    நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இவ்வகையில் ஒட்டுமொத்தமாக பல்வேறு பிரிவினருக்கான  இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உள்ளது.

    இதேபோல், முற்பட்ட வகுப்பினர்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களுக்குஉயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கூடுதலாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.


    இதுதொடர்பாக இயற்றப்பட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர் சந்த் கேலாட் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவை சட்டமாக்க, அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் அரசியலமைப்பு சாசன திருத்த மசோதாவாக இது தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்த மசோதாவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வரவேற்பு தெரிவித்துள்ளார். எனினும், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தேர்தல் காலத்து தந்திரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  #10pcquota #economicallybackward #introducedinLokSabha
    ×