search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா பாகிஸ்தான் தொடர்"

    • டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 313 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 299 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 313 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. முகமது ரிஸ்வான் 88 ரன்னும், ஆமிர் ஜமால் 82 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 299 ரன்களில் ஆல்அவுட் ஆனது. லபுசேன் 60 ரன்னும், மிட்செல் மார்ஷ் 54 ரன்னும் எடுத்து வெளியேறினர். அலேக்ஸ் கேரி 38 ரன்னில் அவுட்டானர்.

    பாகிஸ்தான் சார்பில் ஆமீர் ஜமால் 6 விக்கெட்டும், அகா சல்மான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    14 ரன்கள் முன்னிலையில் உள்ள பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் முன்னணி வீரர்களை அவுட்டாக்கினார். அயூப் 33 ரன்னும், பாபர் அசாம் 23 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

    ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட் கைப்பற்றினார்.

    இன்னும் இரு தினங்கள் உள்ள நிலையில் எஞ்சியுள்ள 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா கைப்பற்றி எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்க உள்ளது.
    • உங்களுக்கு அது போன்ற பை தான் வேண்டும் என நினைக்கிறேன்., என்னிடம் ஒரு பை உள்ளது, அதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் கடைசி போட்டி சிட்னியில் நாளை நடைபெற உள்ளது. அதற்காக மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு சென்ற போது இடையே அவரது பை காணாமல் போயுள்ளது.

    அந்தப் பையில் டேவிட் வார்னரின் டெஸ்ட் போட்டிகளில் அணியும் தொப்பி உள்ளது. ஆஸ்திரேலிய வீரர்களை பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகளுக்கு என பிரத்யேகமாக அளிக்கப்படும் பச்சை நிற தொப்பி அவர்களுக்கு மிகப் பெரும் கவுரவமான ஒன்று.

    திருடப்பட்ட அந்த பையில் அவரது இரண்டு பச்சை நிற தொப்பி உள்ளது. அதில் ஒன்று அவருக்கு முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன போது அளிக்கப்பட்டது. அதை அணிந்து தன் கடைசி போட்டியில் ஆட வேண்டும் என நினைத்து இருந்த வார்னர் தற்போது சோகத்தில் இருக்கிறார்.

    இந்த நிலையில் முகம் தெரியாத திருடனிடம் டேவிட் வார்னர் உருக்கமான வேணடுகோளை விடுத்து கோரிக்கை வைத்து இருக்கிறார் வார்னர்.

    அவர் தனது பையை திரும்ப ஒப்படைக்குமாறு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். "என் லக்கேஜில் இருந்து என் பையை யாரோ ஒருவர் எடுத்து இருக்கிறார்கள். அதில் என் குழந்தைகளுக்கு வாங்கிய சில பரிசுப் பொருட்கள் உள்ளன. அதில் தான் என் பச்சை நிற தொப்பியும் உள்ளது. அது எனக்கு உணர்வுரீதியான ஒன்று. என் கடைசி டெஸ்ட் போட்டியில் அதை அணிந்து செல்ல வேண்டும் என விரும்புகிறேன். உங்களுக்கு அது போன்ற பை தான் வேண்டும் என நினைக்கிறேன்., என்னிடம் ஒரு பை உள்ளது, அதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது.

    இவ்வாறு வார்னர் கூறினார்.

    • 2-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. கடந்த 26-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்த நிலையில், பாகிஸ்தான் 264 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 54 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 262 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    317 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 237 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது.

    2-வது டெஸ்ட் போட்டியின் போது ஸ்மித் - பாபர் அசாம் குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மைதானத்தில் களமிறங்கும் பேட்டர்கள் ஸ்டெம்ப் பக்கத்தில் நின்று லெக் ஸ்டெம்ப் மற்றும் நடு ஸ்டெம்ப் திசையில் சரியாக நிற்கிறேனா என்பதை நடுவரிடம் கேட்டு அதற்கு ஏற்றார்போல் மார்க் பண்ணுவார்கள்.

    அந்த வகையில் பாபர் அசாம் ஆடுகளத்திற்கு வந்து ஸ்டெம்ப் பக்கத்தில் நின்று நடுவரிடம் கேட்பார். அப்படி எடுக்கும் போது ஸ்டெம்ப் பின்னால் நின்ற ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஏதோ (சரியாவே எடுக்க தெரியல என்பது போல) கூறினார். உடனே பாபர் அசாம் பேட்டை நீட்டி ஏதோ (நீ எடுத்து கொடுக்கிறாயா என்பது போல) கூறினார். உடனே ஸ்மித் கையெடுத்து கும்பிட்டு ஆள விடு சாமி என்பது போல சென்றார்.

    பேட்டர்கள் இப்படி எடுக்க வரும் போது எல்லாம் ஸ்மித் இது மாதிரி எதாவது சொல்லுவது வழக்கமாக கொண்டுள்ளார். அதற்கும் மேலாக அவர்கள் மார்க் செய்து வச்ச இடத்தை தடம் தெரியாத மாதிரி அழித்து விடவும் செய்துள்ளார். அந்த வகையில் இது நடந்துள்ளது. ஆனால் இது சற்று வித்தியாசமாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    • ஆஸ்திரெலியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.
    • ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது.

    பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்திலும் 2-வது டெஸ்ட்டில் 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    2 டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. பாகிஸ்தான் அணி 1999-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் இருந்து ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றதில்லை. அங்கு தொடர்ந்து 16 டெஸ்டுகளில் தோற்று இருக்கிறது.

    ஒரு நாட்டில் தொடர்ச்சியாக அதிக டெஸ்டுகளில் தோற்று பரிதாபத்திற்குரிய அணியாக பாகிஸ்தான் திகழ்கிறது. இதற்கு முன்பு வங்காளதேசம் சொந்த மண்ணில் தொடர்ந்து 13 டெஸ்டில் தோற்று இருந்தது.

    • பாகிஸ்தான் அணி 237 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. கடந்த 26-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்த நிலையில், பாகிஸ்தான் 264 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 54 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிறகு 187 ரன்கள் எடுத்திருந்தது. அலேக்ஸ் கேரி 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய அலேக்ஸ் கோரி 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலியா 262 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி, மிர் ஹம்சா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா 316 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    317 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் விளையாடியது. தொடக்க வீரர்கள் சபீக் 4 ரன்னிலும் இமாம் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கேப்டன் மசூத்- பாபர் அசாம் ஜோடி நிதானமாக விளையாடினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மசூத் 60 ரன்களில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து பாபர் அசாம் 41 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சகீல் 24, ரிஸ்வான் 35, சல்மான் 50, ஜமால் 0, அஃப்ரிடி 0, ஹம்சா 0 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    இதனால் பாகிஸ்தான் அணி 237 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது.

    • இன்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
    • அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 318 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 264 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், நாதன் லயன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 54 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத திரையில் காதலர்கள் மடியில் படுத்து இருப்பது போன்ற காட்சி வெளியானது. இதனை பார்த்த அந்த காதலர்கள் முகத்தை மூடிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். நல்ல வேலை செய்தீர்கள் கேமரான் மேன், கொடுத்த வேலைக்கு மேல் கூடுதல் வேலை பார்த்துள்ளீர்கள், போட்டியை காண வந்தீர்களா காதல் செய்ய வந்தீர்களா, என சில ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். பல ரசிகர்கள் போட்டியை வீடியோ எடுக்க சொன்னா அப்பாவி காதலர்களை வீடியோ எடுத்து காட்டிக் கொடுத்து வீட்டீர்களே கேமரா மேன் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • மிட்செல் மார்ஷ் 96 ரன்களிலும் ஸ்மித் 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
    • பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி, ஹம்சா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 318 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்து இருந்தது.முகமது ரிஸ்வான் 26 ரன்னும், அமீர் ஜமால் 2 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் 264 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியா ஸ்கோரை விட 54 ரன் குறைவாகும். அப்துல்லா ஷபீக் 62 ரன்னும், கேப்டன் ஷான் மசூத் 54 ரன்னும், முகமது ரிஸ்வான் 42 ரன்னும், அமீர் ஜமால் 33 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார். நாதன் லயனுக்கு 4 விக்கெட் டும், ஹாசல்வுட்டுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தது.

    54 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆஸ்திரேலிய அணி 16 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்து திணறியது.

    உஸ்மான் கவாஜா ரன் எதுவும் எடுக்காமலும், லபுஷேன் 4 ரன்னிலும் ஷகீன் ஷா அப்ரிடி பந்தில் ஆட்டம் இழந்தனர். வார்னர் 4 ரன்னிலும், டிரெவிஸ் ஹெட் ரன் எதுவும் எடுக்காமலும் மிர் ஹம்சா பந்தில் அவுட் ஆனார்கள்.

    இந்நிலையில் 5-வது விக்கெட்டுக்கு ஸ்டீவ் சுமித்-மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்ஷ் 96 ரன்னில் அவுட் ஆனார். 3-ம் நாள் ஆட்டம் முடியும் நேரத்தில் ஸ்மித் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனால் 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. அலெக்ஸ் கேரி 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி, ஹம்சா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • 3-வது நாள் உணவு இடைவெளி வரை ஆஸ்திரேலியா 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
    • உஸ்மான் கவாஜா 0, மார்னஸ் லபுஸ்ஷேன் 4 ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி 26-ம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா கடுமையாகப் போராடி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 63 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அமீர் ஜமால் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அப்துல்லா ஷபிக் 62 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    அதைத்தொடர்ந்து 54 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா 0, மார்னஸ் லபுஸ்ஷேன் 4 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இந்நிலையில் 3-வது நாள் உணவு இடைவெளி வந்தது. இந்த இடைவெளி முடிந்து போட்டி மீண்டும் துவங்குவம் நேரத்தில் பெவிலியனில் இருந்த 3-வது நடுவர் ரிச்சர்ட் இல்லிங்ஒர்த் திடீரென காணவில்லை. அதன் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. நடுவர் எங்கே என்று அனைவரும் தேடிப் பார்த்தனர்.

    சில நிமிடங்கள் கழித்து மிகவும் சோர்வாக வந்த அம்பயர் நாற்காலியில் அமர்ந்து தாம் லிஃப்டில் மாட்டிக் கொண்டதாக வேடிக்கையாக தெரிவித்தார். மைதானத்தின் மற்றொரு தளத்திற்கு சென்று வரும் வழியில் அவர் லிஃப்டில் மாட்டிக்கொண்டதாக தெரிகிறது. அதன் பின் அதிலிருந்து வந்த அவர் நாற்காலியில் அமர்ந்து "நான் நன்றாக இருக்கிறேன்" என்பது போல் கையை சிக்னல் கொடுத்தது ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.


    குறிப்பாக பேட்டிங் செய்வதற்காக களத்தில் இருந்த டேவிட் வார்னர் மற்றும் எஞ்சிய 2 அம்பயர்களும் 3வது அம்பயர் லிஃப்டில் மாட்டிக் கொண்டார் என்பதை அறிந்து வாய்விட்டு சிரித்தார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பாகிஸ்தான் அணி 2-ம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்தது.
    • இந்த போட்டியில் பாபர் அசாம் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்து இருந்தது. லபுஷேன் 44 ரன்னுடனும், டிரெவிஸ் ஹெட் 9 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்த னர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது.

    தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 96.5 ஓவரில் 318 ரன்னில் ஆல் அவுட் ஆனது. லபுஷேன் 63 ரன்னும், மிச்சேல் மார்ஷ் 41 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் அமீர் ஜமால் 3 விக்கெட்டும், ஷகீன்ஷா அப்ரிடி, மிர் ஹம்சா, ஹசன் அலி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 2-ம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் பாபர் அசாம் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில் எக்ஸ் தளத்தில் AUSvPAK மற்றும் பாபர் அசாம் பெயர் ட்ரெண்டானது. அவர் அறிமுகமானது முதல் இப்படி ஒரு மோசமான சாதனையை படைத்ததில்லை. ஒரு காலண்டர் ஆண்டில் டெஸ்ட் தொடரில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் இருப்பது இதுவே முதல் முறை. இந்த ஆண்டில் பாகிஸ்தான் அணி 5 டெஸ்ட் தொடர்களில் விளையாடி உள்ளது.

    மேலும் கடந்த 10 போட்டிகளில் ஒரு சதம் மட்டுமே விளாசிய இவர் அடுத்து தொடர்ச்சியாக 9 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்க முடியாமல் திணறி வருகிறார். இதனை வைத்து ரசிகர்கள் அவரை டிரோல் செய்து வருகின்றனர்.

    • மசூத் மற்றும் சபீக் அரை சதம் விளாசினர்.
    • ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் நாதன் லயன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போரன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. மழைக்காரணமாக நேற்றைய ஆட்டத்தின் பெரும்பகுதி ஆட்டம் தடைபட்டதால் முதல் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா 66 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. லபுசேன் 44 ரன்களுடனும், டிராவிட் ஹெட் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்மிழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா 318 ரனனில் ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் ஷா அப்ரிடி, மிர் ஹம்சா, ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆமிர் ஜமால் 3 விக்கெட் சாய்த்தார்.

    பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபீக்- இமாம் களமிறங்கினர். இந்த ஜோடி வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு விளையாடினர். இதனால் லயனை பந்து வீச பேட் கம்மின்ஸ் அழைத்தார். அதற்கு பலன் கிடைக்கும் வகையில் இமாம் 10 ரன்களில் அவர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து சபீக்குடன் கேப்டன் மசூத் ஜோடி சேர்ந்து நேர்த்தியாக விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபீக் அரை சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது. சபீக் 62 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த பாபர் அசாம் 1 ரன்னில் அவுட் ஆக அரை சதம் விளாசிய கேப்டன் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சகீல் 9 ரன்னிலும் சல்மான் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

    இதனால் பாகிஸ்தான் அணி 170 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ரிஸ்வான் மற்றும் ஜமால் ஜோடி சேர்ந்து பொறுமையாக விளையாடினர்.

    இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்தது. ரிஸ்வான் 29 ரன்களிலும் ஜமால் 2 ரன்களில் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் நாதன் லயன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    • ஆஸ்திரேலிய அணியின் ஓய்வு அறையில் ஒரு பட்டியல் குறித்த புகைப்படம் வைரலானது.
    • அந்த பட்டியலில் 3 இந்திய வீரர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது.

    மெல்போர்ன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் பெர்த் நகரில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று காலை தொடங்கியது.

    டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் ஓய்வு அறையில் ஒரு பட்டியல் குறித்த புகைப்படம் வைரலானது. அதில் தலைசிறந்த சுழற்பந்து ஆல்ரவுண்டர்கள் பட்டியல் இருந்தது. அதில் ஷகிப் அல் ஹசன், டிராவிஸ் ஹெட், சமித் பாட்டீல், ரிச்சி பெனாட், டேனியல் வெட்டோரி மற்றும் சர் கேரி சோபர்ஸ் போன்ற சில பெயர்கள் பட்டியலில் இருந்தது.

    இந்த பட்டியலில் அஸ்வின், அக்சர் படேல், 3 இந்திய வீரர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    • முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
    • பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, ஜமால், சல்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

    மெல்போர்ன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் பெர்த் நகரில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று காலை தொடங்கியது. ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. முதல் டெஸ்டில் விளையாடிய அணியே களம் இறங்கியது.

    பாகிஸ்தான் அணியில் சர்ப்ராஸ் அகமது, குர்ரம் ஷசாத், பகீன் அஷ்ரப் ஆகியோருக்கு பதிலாக முகமது ரிஸ்வான், ஹாசன் அலி, மிர் ஹம்சா ஆகியோர் இடம் பெற்றனர்.

    டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர்-உஸ்மான் கவாஜா களம் இறங்கினர். டேவிட் வார்னர் 2 ரன்னில் இருந்தபோது கேட்ச்சை தவறவிட்டனர். அதன்பின் இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் (27.1. ஓவர்) சேர்த்தது. வார்னர் 38 ரன்னில் அவுட் ஆனார். சிறிது நேரத்தில் கவாஜாவும் (42 ரன்) ஆட்டமிழந்தார். அதன் பின் லபுஸ்சேன்-ஸ்பீலன் சுமித் ஜோடி நிதானமாக விளையாடியது. ஆஸ்திரேலியா 42.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது லபுஸ்சேன் 14 ரன்னிலும், சுமித் 2 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து மழை நின்ற பின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. பொறுமையுடன் விளையாடிய ஸ்மித் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் புஸ்சேன் - ஹேட் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, ஜமால், சல்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

    ×