search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைக்க"

    • பெரும்பாலான வீடுகளில் போதிய இடவசதி இல்லாததால் பல்வேறு வீடுகளில் உறிஞ்சி குழாய்கள் அமைக்க முடியவில்லை.
    • இதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் கட்டாயம் உறிஞ்சி குழாய் அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. உறிஞ்சிக்குழாய் அமைக்காமல் கழிவுநீரை சாக்கடையில் விடுபவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அந்த கழிவுநீரை விடும் பைப்பை அடைப்பதற்கான நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கியுள்ளனர். ஆனால் இதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வீடுகளில் இடம் இல்லாதவர்களுக்கு மாற்று வழி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட கட்டையன்விளை பகுதியில் சுமார் 1500 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் கழிவுநீர் உறிஞ்சிக் குழாய்கள் அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி கூறி வருகிறது. ஆனால் பெரும்பாலான வீடுகளில் போதிய இடவசதி இல்லாததால் பல்வேறு வீடுகளில் உறிஞ்சி குழாய்கள் அமைக்க முடியவில்லை.

    இந்த நிலையில் உறிஞ்சி குழாய்கள் அமைக்காத வீடுகளில் கழிவுநீர் குழாய்களை சீல் வைக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக அந்த வார்டு கவுன்சிலர் உதயகுமார் தலைமையில் ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது.

    அதில் கட்டையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு மாற்று ஏற்பாடுகளை மாநகராட்சி செய்து தர வேண்டும். மேலும் பாதாள சாக்கடை திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில் கழிவுநீர் வெளியேற்றுவது தொடர்பாக உறிஞ்சி குழாய்கள் அமைப்பதால் ஏற்கனவே போர்வெல் அமைத்திருக்கும் இடங்களில் கழிவுகள் கலக்க வாய்ப்பு இருக்கிறது.

    எனவே மாநகராட்சி தனது முடிவை மறு பரிசீலனை செய்து தற்போது உள்ள நடைமுறைபடியே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த பின் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று இது தொடர்பாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அந்த பகுதி பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து கட்டையன்விளை பகுதியில் இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கவுன்சிலர் உதயகுமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் அந்தப் பகுதியில் திரண்டனர். ஏ.டி.எஸ்.பி. சுப்பையா, டி.எஸ்.பி. நவீன்குமார் மற்றும் மாநகராட்சி நகர்நல அலுவலர் ராம்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் மாநகராட்சி சார்பில் சானல் கரை பகுதியையொட்டி உறிஞ்சி கிணறு அமைக்கப்பட்டு தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக பொதுமக்கள் தெரிவித்து கலைந்து சென்றனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் அதிகமுள்ள மாவட்டமாகும்.

    கன்னியாகுமரி:

    பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட புலியூர் குறிச்சி அருகே உள்ள உதயகிரி கோட்டையினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் அதிகமுள்ள மாவட்டமாகும். குறிப்பாக, சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் கன்னியாகுமரி கடற்கரை, லெமூரியா கடற்கரை, பூம்புகார் படகுதளம், திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டில் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை புரிகிறார்கள்.

    சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கு பல்வேறு முன்வரைவு திட்டங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பல ஆண்டுகளுக்கு முன்பு படைவீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட உதயகிரி கோட்டையினை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    உதயகிரி கோட்டை வளாகத்தில் ரூ.32 லட்சம் மதிப்பில் அம்ரூத் திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்படவுள்ள பூங்கா பணிகள் ரூ.13 லட்சம் மதிப்பில் வளாகத்திலுள்ள குளத்தினை தூர்வாரும் பணியினையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு இப் பணிகளை விரைந்து முடித்திட பத்மநாபபுரம் நகராட்சி ஆணையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து படைத்தளபதி டிலனாய் கல்லறையினை பார்வையிடப்பட்டது.உதயகிரி கோட்டை வளாகத்தினை தூய்மைப்படுத்து வது, தொங்குபாலம் அமைப்பது தொடர்பான திட்டத்தினை வகுத்திட வனத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. வளாகத்திலுள்ள மீன் அருங்காட்சியகத்தினை மேம்படுத்துவது அதிகமான விலங்குகள், பறவைகளை இங்கு கொண்டு வருவ தற்கான நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.

    சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையினை அதிகப்படுத்திடவும் வனத்துறை உள்ளிட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட பிரம்மபுரம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சமையலறை கூடத்தினை ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இச்சமையலறை பயன்பாட் டிற்கு வரும்போது பத்மநாபபுரம் நகராட்சி விலவூர் திருவிதாங்கோடு, இரணியல், வில்லுக்குறி ஆகிய நான்கு பேரூராட்சிக்குட்பட்ட 20 பள்ளிகளை சேர்ந்த சுமார் 1900 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் லெனின் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • நோய்களுக்கு ஆளாகி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
    • இப்பகுதியில் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளது.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள செருப்பங்கோடு கிராம மக்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர், கல்குளம் தாசில்தார் மற்றும் குருந்தன் கோடு வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கட்டிமாங்கோடு ஊராட்சி, செருப்பங்கோடு கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    மக்கள் நெருக்கம் மிகுந்த இந்த பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் குழந்தைகள், பெண்கள் உட்பட பொதுமக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே விவசாய தோட்டமான தென்னந் தோப்பில் தனியார் நிறுவனம் டவர் அமைக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது. டவர் அமைக்கும் பணியை அரசு அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமை கோரி இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யும் உரிமங்களை பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமை கோரி விண்ணப்பிக்க விரும்பும் சிறு வணிகர்கள் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே அவர்களது வியாபாரத்தை தொடங்குவதற்கு ஏதுவாக இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யும் உரிமங்களை பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி தற்போது விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் வெடி பொருள் விதிகள் 2008-ன் படி தேவைப்படும் ஆவணங்களுடன் அங்கீகரி க்கப்பட்ட சேவை மையங்கள் ஏதேனும் ஒன்றில் சேவை கட்டணமாக ரூ.500 செலுத்தி விண்ணப்பம் செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    எனவே விண்ணப்ப ங்களை வரும் 30-ந் தேதி முடிய பதிவு செய்யலாம். 30-ந் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ண ப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    குறிப்பிட்ட காலக்கெ டுவிற்குள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்தவர்கள் பொது சேவை மையங்களில் பதிவு செய்யப்பட்டதற்காக வழங்கப்படும் ஒப்புகை சீட்டுடன் புல வரைபடம் (6 நகல்கள்) கிரைய பத்திர நகல்கள்-6 (அசல் மற்றும் 5 நகல்கள்), சேவை கட்டணம் ரூ.500 செலுத்திய தற்கான ரசீது, முகவரிக்கான ஆதாரம் ( நிரந்தர கணக்கு எண் அட்டை/ ஆதார் அட்டை/ குடும்ப அட்டை), சொத்து வரி செலுத்திய தற்கான ரசீது மற்றும் கடவு சீட்டு அளவு புகைப்படம்-2 ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் அலுவல–கத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    மேற்படி விண்ணப்பம் ஏற்கப்பட்டது எனில் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • தற்போது இந்த கிராமப் பகுதியில் ரெயில்வே தரைப்பாலம் புதியதாக அமைக்க உள்ளனர்.
    • இந்த பாலத்தின் வழியாக லாரிகள் மூலம் வெளிப்பகுதிகளுக்கு உற்பத்தி பொருட்களை கொண்டு செல்ல முடியாது.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தையொட்டி பொர்படா குறிச்சி, விலம்மார் கிராமம், காட்ட நந்தல் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர், மேலும் இங்கு வசிப்பவர்கள் விவசாயம், அரிசி ஆலை, நாட்டு சர்க்கரை ஆலை ஆகிய தொழில்களை செய்து வருகின்றனர்.

    இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை பல்வேறு இடங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்வதற்கு தச்சூர் கிராமம் வழி முக்கிய இடமாக உள்ளது. தற்போது இந்த கிராமப் பகுதியில் ரெயில்வே தரைப்பாலம் புதியதாக அமைக்க உள்ளனர்.

    அவ்வாறு தரைப்பாலம் அமைத்தால், இந்த பாலத்தின் வழியாக லாரிகள் மூலம் வெளிப்பகுதிகளுக்கு உற்பத்தி பொருட்களை கொண்டு செல்ல முடியாது. எனவே அதற்கு பதிலாக இந்தப் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் ஏராளமானோர் சேலம் ரெயில் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். ரெயில்வே கோட்ட மேலாளரிடம் அவர்கள் மனு கொடுத்தனர்,

    • தாளவாடி தாலுகா கேர்மாளம் பஞ்சாயத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
    • மலைப் பகுதியில் டவர் இல்லாததால், போன் பயன்படுத்த முடியவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகா கேர்மாளம் பஞ்சாயத்து, திங்களூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு வந்து மனு வழங்கினர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கேர்மாளம் பஞ்சாயத்தில் கேர்மாளம், சி.கே.பாளையம், ஜோகனூர், ஜெ.ஆர்.எஸ்.புரம், கானகரை, குடியூர், சி.பி.தொட்டி, ஒருத்தி, தலுதி போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம்.

    இப்பகுதியில் தொலைதொடர்பு வசதி இல்லை. இங்கு, 10-ம் வகுப்பு வரை உள்ள 5 பள்ளிகள் செயல் படுகின்றன. கொரோனா காலத்தில் இங்குள்ள பள்ளி குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் கூட பங்கேற்க முடியவில்லை.

    அங்கிருந்து 12 கி.மீ., தூரம் சென்றால் கர்நாடகா மாநிலத்தின் டவர் இணைப்பு கிடைக்கும். அல்லது 9 கி.மீ. மலைப்பகுதியை கடந்தால் சத்தியமங்கலம் டவர் கிடைக்கும். 

    ஆனால், மலைப் பகுதியில் டவர் இல்லாததால், போன் பயன்படுத்த முடியவில்லை. குன்றி, திங்களூர் பகுதியில் தனியார் டவர் தற்போது அமைத்துள்ளனர்.

    திங்களூரில் 'ஏ' கிராமப் பகுதியில் தனியார் டவர் இருந்தும், கேர்மாளம் பகுதியில் பயன்படாது. எனவே இப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் செல்போன் டவர் அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
    • மேலும் பேரூராட்சி பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க கூடாது என தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அன்பரசன் முன்னிலை வைத்தார். செயல் அலுவலர் கணேசன் அனைவரையும் வரவேற்றார் .கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பொத்தனூர் பேரூராட்சியில் 2015 -2016 -ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் அபிவிருத்தி பணிகள் ரூ. 6.41 கோடியில் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. திட்டத்திற்கு செலுத்தப்பட்ட பேரூராட்சி பங்கு தொகை ரூ. 1 கோடியில் பயன்படுத்தாத தொகை ரூ.35 லட்சத்தை தற்போது பொத்தனூர் பேரூராட்சி 9-வது வார்டில் உள்ள புதுத் தெருவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆய்வுக்கூட்ட அறிவுரைகளைத் தொடர்ந்து சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உத்தரவுபடி பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் ,சிக்கன் குனியா, மலேரியா போன்ற நோய்கள் வராமல் தடுக்க 10 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான செலவினத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தங்களது பொதுநிதியில் மேற்கொள்ள மன்றத்தின் அனுமதி பெறுதல், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    வழிகாட்டு நிதிமுறைகளின்படி பேரூராட்சி பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்காக கள ஆய்வு செய்து செயல் அலுவலரின் குறிப்பாணை பரிந்துரையுடன் அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு மன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை நிராகரித்தனர். மேலும் பேரூராட்சி பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க கூடாது என தெரிவித்தனர்.

    • ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்திற்கு உட்பட்ட 13கிராம மக்கள் நிலக்கரி கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
    • நிலக்கரி குடோன் அமைந்தால் காற்று மாசுபடும், பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படும். இந்த பகுதியை சுற்றி ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். ஏற்கனவே மாசுவால் அவதியடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் வெள்ளியம்பாளையம், புலவனூர், முத்துராண்டி பாளையம், வாய்ப்பாடி புதூர், முருகம்பாளையம், வேலாயுதம்பாளையம், பனியம்பள்ளி, கொமாரபாளையம், எளையாம்பாளையம், துலுக்கம் பாளையம், மாடுகட்டிபாளையம், கவுண்டம்பாளையம் ஆகிய 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்

    அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    எங்கள் பகுதியில் தனியார் நிறுவனம் பல நபர்களிடம் இருந்து நிலங்களை வாங்கி உள்ளது. எங்கள் பகுதி ஆடு, மாடு மேய்த்தல் மற்றும் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட பூமி ஆகும். இந்த பகுதியில் நிலக்கரி குடோன் அமைக்க முயற்சி நடத்துவதாக நாங்கள் அறிகிறோம்.

    இங்கு மேற்படி நிலக்கரி குடோன் அமைந்தால் காற்று மாசுபடும், பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படும். இந்த பகுதியை சுற்றி ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். ஏற்கனவே மாசுவால் அவதியடைந்து வருகின்றனர்.

    எனவே எங்கள் பகுதியில் நிலக்கரி குடோன் மற்றும் வேறு எந்த தொழிற்சாலையும் அமைக்க நடவடிக்கை எடுக்க கூடாது.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த இச்சிபாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து தேங்காய் நார் தொழிற்சாலை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.

    • ஈரோடு மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 15 முதல் 20 டன் அளவில் பழங்களை பழுக்க வைக்கும் கூடாரம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது.
    • விருப்பம் உள்ள விவசாயிகள் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தமிழ்செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் பழங்களை பழுக்க வைத்து சந்தைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் 15 முதல் 20 டன் அளவில் பழங்களை பழுக்க வைக்கும் கூடாரம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது.

    விருப்பம் உள்ள விவசாயிகள் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இதன்படி ஈரோடு ஜெகன்– 94455 12170, மொடக்குறிச்சி மேகலா–96266 62333, கொடுமுடி தியாகராஜன்– 80721 02951, பவானி மல்லிகா– 95437 89894, அம்மாபேட்டை குணவதி – 97507 51385, அந்தியூர் மரகதமணி– 94427 55132, பெருந்துறை குருசரஸ்வதி – 97906 11101, சென்னிமலை சிந்திரா– 97870 45557, கோபி சசிகலா – 93621 19780, டி.என்.பாளையம் கார்த்திக்குமார் – 98427 28398, நம்பியூர் சாந்தி – 94867 94383, சத்தியமங்கலம் பிரியா – 90959 50500, பவானிசாகர் பிருந்தா – 96005 69830, தாளவாடி சாந்தி – 94867 94383 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு சிந்தன் நகரில் இன்று பாதாள சாக்கடை கழிவுநீர் ஊற்று நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயமுருகன், நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் சிந்தன் நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாளசாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுகுறித்து கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்துள்ளனர். எனினும் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் கைவிடவில்லை.

    ஏற்கனவே கடந்த 2 வாரத்திற்கு முன்பு இங்கு பணிகள் மேற்கொள்ள வந்த மாநகராட்சி அதிகாரிகளை இப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து பணிகளை செய்ய விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைப்பதற்கு குழிகள் தோண்டுவதற்காக இன்று மீண்டும் மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது.

    அப்போது மாநகராட்சி உதவி பொறியாளர் செல்வராஜ், மாலதி செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் இருந்தனர். இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இங்கு ஒன்று திரண்டனர்.

    அவர்கள் பாதாள சாக்கடை கழிவு நீர் ஊற்று நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயமுருகன், நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் பணிகள் செய்ய விடாமல் தடுக்க சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது

    இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் போலீசார் பாதுகாப்புடன் மாநகராட்சி பணியாளர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பள்ளி, கோவில்கள் உள்ளன. திடீரென மாநகராட்சி சார்பில் குடியிருப்பு மத்தியில் பாதாள சாக்கடை கழிவுநீர்ஊற்று நிலையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

    இதற்கு நாங்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து மனு அளித்துள்ளோம். ஆனால் இன்று திடீரென மாநகர் சார்பில் பணிகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் வந்தனர். நாங்கள் பணிகளை மேற்கொள்ளாமல் அவர்க ளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். இருந்தாலும் போலீசார் உதவியுடன் பணிகளை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.

    இது சம்பந்தமாக எங்களிடம் எந்த ஒரு கருத்தும் இதுவரை கேட்கப்படவில்லை. குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் ஊற்று நிலையம் அமைந்தால் எங்கள் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக பள்ளி குழந்தைகள் இந்த வழியாகத்தான் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்.

    இதனால் துர்நாற்றம், சுகாதார கெடு, நோய் தொற்று பரவ ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் இந்த திட்டம் அமைக்கப்படுவதற்கு பதில் ஊரின் ஒதுக்குப்புறமாக இந்தத் திட்டத்தை அமைக்க வேண்டும் என்று கூறி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×