search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அச்சடிப்பு"

    • சிவகாசியில் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
    • அச்சடிக்கப்பட்ட பாடபுத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருகிறது.



    அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. 

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அச்சகத் தொழிலில் முக்கிய இடம் வகிக்கிறது. ஆண்டுதோறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் இங்கு தான் அச்சிடப்படுகிறது. சிவகாசியில் செயல்பட்டு வரும் அச்சகங்களில் லட்சக்கணக்கான பணியா ளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    ஒவ்வொரு கல்வி ஆண்டின் போதும் பள்ளிகளுக்கு தேவையான பாடப்புத்த கங்கள் சிவகாசி அச்சகங்க ளில் தயாராவது வழக்கம். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல், பிளஸ்-2 வகுப்பு வரையில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் விலையில்லா பாடப்புத்தக மாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் மூலம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ஆண்டிற்கு தேவை யான பாடப்புத்தகங்கள் கணக்கிடப்பட்டு, அச்சகங்களுக்கு டெண்டர் மூலம் அச்சிடும் பணிகள் வழங்கப்படும்.

    இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பாட புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது 75 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் அச்சடிக்கப்பட்ட பாட புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்தபணிகள் தமிழகத்திற்கு 85 சதவீதம் வழங்கப்பட்டாலும் 15 சதவீத பணிகளை ஆந்திர மாநிலதிற்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் 100 சதவீத பணிகளையும் தமிழகத்திற்கே வழங்கி தமிழக அச்சக தொழிலில் ஈடுபடுவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அச்சக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க சீன அரசு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக சீன ஊடகத்தில் வெளியான செய்தியை நிதி அமைச்சகம் மறுத்துள்ளது. #IndianCurrency #RBI #China #Congress
    புதுடெல்லி:

    சீனாவில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றில், ‘இந்தியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுடன் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சீன ரூபாய் நோட்டு அச்சடிப்பு கார்பரேஷனின் தலைவர் லியூ குயிஷெங் பேட்டியளித்திருந்தார். 

    இந்த செய்தியை மேற்கோள் காட்டி காங்கிரஸ் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில், சீன ஊடகத்தில் வெளியான செய்தி தவறானது என நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.

    இந்திய ரூபாய்கள் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள அச்சகங்கள் மூலமே அச்சடிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க சீன அரசு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. #IndianCurrency #RBI #China #Congress
    புதுடெல்லி:

    பட்டுசாலை பொருளாதார திட்டத்தின் கீழ் வெளிநாடுகளின் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை சீனாவில் உள்ள அரசு நிறுவனம் தற்போது தொடங்க உள்ளது. சீனாவின் ரூபாயான யுவானை அதிகளவில் அச்சடிப்பதற்காக நாடு முழுவதும் பல புதிய அச்சகங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

    ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றில் சீன ரூபாய் நோட்டு அச்சடிப்பு கார்பரேஷனின் தலைவர் லியூ குயிஷெங், “அண்டை நாடுகள் மற்றும் மிக நெருக்கமான நட்புறவில் உள்ள நாடுகளுக்கு ரூபாய் நோட்டு அச்சடிக்க ஒப்பந்தம் செய்துள்ளோம்” என அவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    இந்தியா, வங்காளதேசம், இலங்கை, நேபாளம், தாய்லாந்து, மலேசியா, பிரசில், போலந்து ஆகிய நாடுகளுடன் ரூபாய் நோட்டு அச்சடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். 

    இந்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கி மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மேற்கண்ட செய்தியை கொண்டு மத்திய அரசை காங்கிரஸ் கட்சி தாக்கியுள்ளது. ‘இந்திய ரூபாய் நோட்டையே வெளிநாட்டில் அச்சடிப்பதுதான் மேக் இன் இந்தியாவா’ என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பிராந்திய நாடுகளில் சீனாவின் கரம் வலுவாக இறங்குவதை இந்தியா ஏன் எதிர்க்கவில்லை எனவும் அவர் தனது கேள்வியில் குறிப்பிட்டுள்ளார். 
    ×