search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்னி நட்சத்திரம்"

    • வெயிலின் வெப்பம் அதிகரித்து மாலை 6 மணி வரை அனல் காற்றின் தாக்கம் நிலவி வருகிறது.
    • இளநீர், நுங்கு, தர்பூசணி மற்றும் பழரசங்கள், குளிர்பானங்களை அருந்தி வருகின்றனர்.

    காங்கயம் :

    அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் திருப்பூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது. மாவட்டத்தின் கிராம பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக சுட்டெரிக்கும் கோடை வெயிலின் உக்கிர தாக்கம் அதிக அளவு ஏற்பட்டு உள்ளது. இதன்படி காலை 7 மணிக்கு மிதமான வெயில் அடிக்க தொடங்கி மதியம் 12 மணிக்கு மேல் வெயிலின் வெப்பம் அதிகரித்து மாலை 6 மணி வரை அனல் காற்றின் தாக்கம் நிலவி வருகிறது. பின்னர் இரவு நேரங்களிலும் வெயிலின் உக்கிர தாக்கத்தினால் வெப்பத்துடன் கூடிய சூடான அனல் காற்று வீசி வருகிறது. இதனால் நகர, கிராம பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவ, மாணவிகள் மிகவும் பாதிப்பு அடைந்து உள்ளனர். வெயிலின் உக்கிர தாக்கத்தை குறைக்கும் விதமாக இளநீர், நுங்கு, தர்பூசணி மற்றும் இனிப்பு வகை பழரசங்கள், குளிர்பானங்களை அருந்தி வருகின்றனர். மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் நகர, சுற்றுப்புற கிராம பகுதிகளில் பல்வேறு வீடுகளில் மின் விசிறிகள், ஏ.சி எந்திரங்கள் பகல், இரவு நேரங்களில் அதிக அளவில் இயங்கி வருகின்றன. இதனால் மின் தேவைகளின் பயன்பாடு அதிகரித்து உள்ளது.

    கோடை முடிந்தும் இளநீர் விற்பனை நடைபெற்று வருகிறது. இதுபற்றி இளநீர் வியாபாரிகள் கூறியதாவது:- பொதுவாக ஆண்டு முழுவதும் இளநீர் விற்பனை இருந்து கொண்டே இருக்கும். இதில் கோடை காலத்தில் இளநீர் விற்பனை நன்கு சூடு பிடித்து விறுவிறுப்பாக விற்பனையாகும். இதன்படி சுட்டெரிக்கும் கோடை வெயில் காலகட்டத்தில் ஒரு இளநீரின் விலை ரூ.40 முதல் ரூ.60 வரை என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படும். இந்தநிலையில் இந்த ஆண்டு கடந்த 2 மாதங்களாக சுட்டெரிக்கும் கோடை வெயிலின் உக்கிர தாக்கம் தொடங்கி அதிக அளவில் வெப்பம் வெளியேறி வருகிறது. இதனால் வழக்கத்தை விட இந்த ஆண்டு கடந்த 2 மாதத்திற்கு முன்பே இளநீர் விற்பனை விறுவிறுப்பு அடைந்தது. தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெப்பத்தின் தாக்கம் உள்ளதால் இளநீர் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு சாதாரண இளநீர் ஒன்று ரூ.30-க்கும், செவ்விளநீர் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். வெயிலின் தாக்கத்தால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. அவ்வாறு பாதிக்கப்படும் கால்நடைகளை எப்படி கண்டறிவது,எவ்வாறு பாதுகாக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை சுத்தமான குளிர்ந்த நீர் குடிக்க கொடுக்க வேண்டும். கால்நடை கொட்டகைகளில் உப்புக் கட்டிகளை கட்டி தொங்க விட வேண்டும். அதன் வாயிலாக கால்நடைகளில் தண்ணீர் பருகும் தன்மை அதிகரித்து, உப்பு சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கலாம். மாட்டுக்கொட்டையில் கூரைக்கு மேலே நீர் தெளிப்பான் அமைக்கலாம். கால்நடைகளை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை, 3மணி முதல் இரவு 7 மணி வரையிலும் மேய்ச்சலுக்கு அனுப்பலாம்.கோடைக்காலங்களில் கால்நடைகளின் தீவன தேவைகளை பூர்த்தி செய்ய மண்ணில்லா நீரியல் பசுந்தீவன உற்பத்தி, அசோலா பசுந்தீவன உற்பத்தி ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.பருவ காலங்களில் பசுந்தீவனம் அதிகமாக இருக்கும் போது, அவற்றினை ஊறுகாய் தீவனமாக மாற்றி சேமித்து வைத்து கோடையில் உணவாக தரலாம்.

    பொதுவாக கொடிக்காய்புளி, வாகை, வேம்பு, கருவேல், சுபாபுல், மா, பலா, ஆல், அகத்தி, அரசு போன்ற மரங்களின் இலைகளை ஆடுகளுக்கு சிறந்த உணவாகும். கிராமங்களில் அதிகமாக கோடையில் கிடைக்கும் செவ்வேல் மற்றும் கருவேல் உலர் காய்கள் ஆடுகளுக்கு சிறந்த புரதச் சத்து மிக்க உணவாகும். இவ்வாறு அவர் கூறினார். ஒரு ஆடு 8 முதல் 12 லிட்டர் அளவுக்கு தினமும் நீர் அருந்தும். அதிக வெப்பநிலை நிலவுவதால் மேய்ச்சல் பகுதியில் நல்ல சுத்தமான குடிநீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.கோழிகளுக்கு உச்சி வெயில் நேரத்தில் தீவனம் அளிக்க கூடாது. இரவிலும், விடியல் காலையிலும், வெயில் குறைந்த நேரங்களில் அதிக தீவனம் எடுக்கும். கோழிகளுக்கு வழக்கத்தை விட அதிகமான இடவசதி அளிக்க வேண்டும்.

    கோழிகளுக்கு குடிநீரில் வைட்டமின், 'சி' மருந்தினை, கோழி ஒன்றுக்கு தலா 10 மி.லி., கிராம் வீதம் கலந்து கொடுத்தால் அயற்சி ஓரளவு குறையும். மேலும் அயற்சி நீக்கும் பி காம்பளக்ஸ் வைட்டமின், குளுக்கோஸ் போன்றவை கலந்து கொடுக்கலாம் என்றனர்.

    • கடலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி யடைந்து வருகின்றனர்.
    • நாளை மறுநாள் திறக்க இருந்த பள்ளிகள் 14-ந் தேதி திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

    கடலூர்:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி சுட்டெரிக்கும் வெயில் பதிவாகி வருகின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் முதல் தற்போது வரை சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி யடைந்து வருகின்றனர். மேலும் அனல் காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்து வருவதோடு வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலை ஓரங்களில் உள்ள பழச்சாறுகள், கரும்பு சாறு, இளநீர், நுங்கு, பழ வகைகள் போன்றவற்றை பொது மக்கள் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். மேலும் மதிய வேளையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெருமளவில் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

    இது மட்டும் இன்றி காலை முதல் மதியம் வரை கடுமையான வெயில் மற்றும் அனல் காற்று வீசி வருவதால் இரவு நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் புழுக்கம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் தூக்கமின்றி இருப்பதையும் காண முடிந்தது. இந்த நிலையில் கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் நாளை மறுநாள் திறக்க இருந்த பள்ளிகள் 14-ந் தேதி திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 1 -ந்தேதி 102.2, 2- ந் தேதி 104.5, 3- ந் தேதி 104, 4 -ந் தேதி 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி இருந்தது. கடலூரில் இன்று காலை 11.30 மணி நிலவரப்படி 101.48 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. பொதுமக்கள் கடும் வெயிலால் கடுமையாக பாதிப்படைந்து வரு வது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து வானிலையாளர் பாலமுருகனிடம் கேட்டபோது, கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி தற்போது வரை வழக்கத்தை விட அதிக அளவில் பதிவாகி வருகின்றது. இதில் கடந்த நான்கு நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி உள்ளது. இந்த நிலையில் கடல் பகுதியில் இருந்து மேற்கு திசை காற்று மிக வலிமையாக வறண்ட காற்றாக வருவதால் அனல் காற்று அதிகரித்து சுட்டெரிக்கும் வெயில் தாக்கி வருகின்றது.

    மேலும் கிழக்கு பகுதியிலிருந்து வரக்கூடிய ஈரக்காற்று மதியம் ஒரு மணி முதல் 2 மணிக்குள் காற்று வந்தால் வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் தற்போது கிழக்கு காற்று தாமதமாக வருகின்றது. இது மட்டும் இன்றி தென்மேற்கு பருவமழை எப்போதும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படும். ஆனால் இதனால் வரை தென்மேற்கு பருவ மழை கேரளா பகுதியில் தொடங்காததால் தமிழகத்தில் தொடர்ந்து வெயில் தாக்கி வருகின்றது. இந்த வருடம் தென்மேற்கு பருவக்காற்று நிலை இதுவரை அடையாததால் சற்று காலதாமதம் ஆகும் என எண்ணப்படுகிறது. இது மட்டும் இன்றி அந்தமான் பகுதியில் தற்போது தான் தென்மேற்கு பருவ மழை நிலை கொண்டு தொடங்கும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளா பகுதியில் தென்மேற்கு மழை தொடங்கும் பட்சத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படும். எனவே வருகிற 2 நாட்களும் இதே போன்ற வறண்ட நிலை மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என தெரிவித்தார். ஆகையால் பொதுமக்கள் தமிழக அரசின் நிபந்தனைக்கு உட்பட்டு வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை கோடை காலமாகும்.
    • கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு, வெயி லின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும்.

    சேலம்:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை கோடை காலமாகும். இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். குறிப்பாக கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு, வெயி லின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும். இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கி யதில் இருந்தே தமிழகத்தின் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து இருந்தது.

    அக்னி நட்சத்திரம்

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்தி ரம் தொடங்கியது. அதன் பிறகு மே மாதம் 8-ந்தே திக்கு மேல் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக மதிய நேரத்தில் வெயில் சுட்டெரித்தது.

    சேலத்தில் அதிகபட்சமாக 106 பாரன்ஹீட் வெப்ப நிலை நிலவியது. இதனால் கூலி வேலைக்கு செல் ேவார், தொழிலா ளர்கள், அலுவலக வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டி கள், பாதசாரி கள் கடும் அவதிக்குள்ளா கினர். இர வில் கடும் புழுக்கம் ஏற்பட்ட தால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளா கினர்.

    இன்றுடன்...

    இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் (29-ந்தேதி) முடிவடைகிறது. இதனால் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரம் தொடங்கும்.
    • சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களில் வெப்ப சலனத்தால் மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

    சென்னை:

    அக்னி நட்சத்திரம் விடைபெற்ற பிறகாவது சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் குறையுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது. ஆனால் வெப்ப அனல்கள் இன்னும் 2 வாரங்களுக்கு குறைய போவதில்லை என்றே வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

    நேற்று 13 இடங்களில் வெப்பம் சதம் அடித்த நிலையில் தொடர்ந்து இதே நிலைதான் ஜூன் முதல் வாரம் வரை நீடிக்கும் என்றார். தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான். அவர் மேலும் கூறியதாவது-

    அக்னி வெயிலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பொதுவாகவே தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மேற்கு திசையில் இருந்து தரைக்காற்று அதிகமாக வீசும்.

    இது ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் இருந்து வெப்ப காற்றை இழுத்து வரும். இதனால் வட தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரம் வரை இதே நிலைதான் நீடிக்க வாய்ப்பு.

    தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரம் தொடங்கும். இந்த பருவ மழை சென்னைக்கு கிடைக்காது. கேரளா, கன்னியாகுமரி, வால்பாறை, காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்யும்.

    சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களில் வெப்ப சலனத்தால் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. அதுவும் ஜூன் முதல் வாரத்துக்கு பிறகுதான்.

    வேலூருக்கு பிறகு அதிக வெப்பம் பதிவாகும் நகரமாக சென்னை உள்ளது.

    இந்த மாதத்தில் மட்டும் இரண்டு நாட்கள் உச்ச வெப்ப நிலை பதிவானது. அதாவது நுங்கம்பாக்கத்தில் 16-ந்தேதி 108.7 டிகிரியும், 27-ந்தேதி 106.88 டிகிரியும் பதிவாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது.
    • வெயிலின் தாக்கம் குறையுமா என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

    சென்னை :

    தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. ஆனாலும் வெயிலின் தாக்கம் இல்லாமலேயே இருந்தது. ஆனால் போகப் போக அதன் கோரத் தாண்டவத்தை காட்டத் தொடங்கியது. அதிலும் அக்னி நட்சத்திரத்தின் பிற்பகுதியில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. கடந்த வாரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 109 டிகிரி வெயில் பதிவானது. இதுதான் இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பப்பதிவாக தற்போது வரை இருந்துவருகிறது.

    இந்த நிலையில் வாட்டி வதைத்துவந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் (திங்கட்கிழமை) விடைபெற உள்ளது. இதற்கு பிறகாவது வெயிலின் தாக்கம் குறையுமா என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

    ஆனால் அக்னி நட்சத்திரம் விடைபெற்றாலும், தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்னும் ஒரு வார காலத்துக்கு வெயிலின் தாக்கம் இயல்பைவிட சற்று அதிகமாகவே இருக்கும் என்றும், இன்றும், நாளையும் (செவ்வாய்க்கிழமை) ஓரிரு இடங்களில் 100 டிகிரி முதல் 104 டிகிரி வரை வெயில் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • இன்று தொடங்கி 29-ந்தேதி வரை 25 நாட்கள் இருக்கிறது.
    • பகல் பொழுதில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்கலாம்.

    சென்னை

    சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலமான அக்னிநட்சத்திரம் என்ற கத்திரி வெயில் எனப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை மாதம் 21-ந் தேதி தொடங்கி, வைகாசி 14-ந் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது.

    அதாவது இன்று (வியாழக்கிழமை) தொடங்கி, வருகிற 29-ந்தேதி முடிவடைகிறது. இந்த 25 நாட்களும் கத்திரி வெயில் காலத்தில் வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு சூரியனின் கதிர்கள் சுட்டெரிக்கும்.

    அக்னி நட்சத்திர காலங்களில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால் பகல் பொழுதில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்கலாம். கோடை காலம் வந்தாலே அதிகளவு தண்ணீர் குடிப்பதுடன், ஐஸ் சர்பத், பழங்கள், மோர் சாதம் என குளிர்ந்த ஆகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

    பருத்தி ஆடைகளை அணிவதுடன் வெளியே செல்லும்போது குடைகளை எடுத்து செல்வது நல்லது என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    இதற்கிடையில், தமிழகத்தில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி தொடர்ந்து நிலவுவதாலும், காற்றில் ஈரப்பததத்தின் அளவு கூடியிருப்பதாலும் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் சற்று தணிந்து வருகிறது.

    இருந்தாலும், அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குவதால் இந்த கால கட்டத்தில் வெயிலின் தாக்கம் உக்கிரமாகவே இருக்க வாய்ப்பு உள்ளது என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • அக்னி நட்சத்திரம் என்பது சூரியனுடைய சஞ்சாரம் தொடர்பாக அமையும் காலப்பகுதியாகும்.
    • பெரும்பாலும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும் வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இணைந்த பகுதியாகும்.

    ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் பிறந்து சித்திரை மாதம் 21-ஆம் நாள் முதல் வைகாசி மாதம் 14-ஆம் நாள் வரை வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனை "அக்னி நட்சத்திரம்" என்று சொல்வர்.

    அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறும்.

    இவ்வருட அக்னி நட்சத்திர காலம் சோபகிருது வருடம் சித்திரை:21, மே 4 ந்தேதி துவங்கி, வைகாசி:15 மே 29 ந்தேதி நிவர்த்தியாகிறது.

    இந்த காலத்தில் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் நேரம். அப்போது சூரியனுக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுக்கப்படுகிறது. சூரியன் என்பது விண்மீன் தான். மற்ற காலங்களில் நாம் அதனை சூரியன் என்கிறோம்.

    அக்னி நட்சத்திரம் என்பது சூரியனுடைய சஞ்சாரம் தொடர்பாக அமையும் காலப்பகுதியாகும். பெரும்பாலும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும் வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இணைந்த பகுதியாகும்.

    இந்நாட்களில் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும், இடையில் ஏழு நாட்கள் மிக அதிகமாகவும் கடைசி ஏழு நாட்கள் சுமாராகவும் வெப்பத்தை தரும்.

    இந்த காலகட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும். அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும். அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும். அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும்.

    அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும். இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள். இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது. அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது.

    பொதுவாக சித்திரை, வைகாசி மாதங்களில் பூமியானது சூரியனுக்கு அருகே செல்வதால் வெப்பம் கடுமையாக இருக்கிறது. ஜோதிட ரீதியில் காணும்போது, உத்திராயண புண்ணிய காலத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்கிறார்.

    இதன்படி தை ஒன்றாம் நாள் முதல் தன் வடக்குத் திசைப் பயணத்தைத் தொடங்குவார். சித்திரை ஒன்றாம் தேதி அவர் பூமிக்கு நெருக்கமாக இருப்பார். ஆனி மாதக் கடைசியில் அவர் வடகோடி எல்லையை அடைந்துவிடுகிறார். வெயிலின் கடுமை அதிகமாக இருப்பதால் இதைக் கத்திரி வெயில் என்று குறிப்பிட்டார்கள்.

    -சிவசங்கர்

    • ஈரோடு, கரூரில் இதுவரை 105 டிகிரியை கடந்து வெயில் பதிவாகி இருக்கிறது.
    • 25 நாட்கள் நீடிக்கும் இந்த வெயில் காலம் 28-ந்தேதியுடன் விடைபெறும்.

    சென்னை :

    தமிழ்நாட்டில் கோடை காலம் மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஆரம்பிக்கும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் கணிசமான வெயில் பதிவு இருந்து, அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலமான மே மாதத்தில் உச்சகட்ட வெப்பம் பதிவாகும்.

    அந்த வகையில் இந்த ஆண்டு 'ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது' என்று சொல்வது போல, மார்ச் மாதம் ஆரம்பத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது.

    அதிலும் கடந்த மாதத்தில் (ஏப்ரல்) பெரும்பாலான இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகி இருந்தன. அதிலும் குறிப்பாக ஈரோடு, கரூர், வேலூர், சேலம், தர்மபுரி, மதுரை, திருத்தணி, திருப்பத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் அதிகமாக வெப்பத்தின் தாக்கத்தை உணர முடிகிறது. இதில் ஈரோடு, கரூரில் இதுவரை 105 டிகிரியை கடந்து வெயில் பதிவாகி இருக்கிறது.

    ஆரம்பமே இப்படி இருக்கிறது என்றால், 'கிளைமேக்ஸ்' எப்படி இருக்குமோ? என்று சொல்லும் அளவுக்கு அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கிறது. அதன்படி, வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. 25 நாட்கள் நீடிக்கும் இந்த வெயில் காலம் 28-ந்தேதியுடன் விடைபெறும்.

    வானிலை ஆய்வு மையத்தை பொறுத்தவரையில், அக்னி நட்சத்திரம் என்பது போன்ற பெயரை அவர்கள் உச்சரிப்பது இல்லை. இருந்தாலும், கோடை காலத்தின் இறுதி பகுதியான மே மாதத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதை அவர்கள் மறுக்கவில்லை.

    அந்த வகையில் இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், அனல் காற்றுடன் அதிகபட்ச வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    அக்னி நட்சத்திரம் காலத்தில், கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 17-ந்தேதி திருத்தணியில் 113.9 டிகிரி வெயில் பதிவானதுதான் அதிகபட்ச வெயில் பதிவாக கூறப்படுகிறது. அதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டில் சென்னை மற்றும் வேலூரில் 113 டிகிரியும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டை பொறுத்தவரையில், அக்னி நட்சத்திரம் காலம் வாட்டி வதைக்குமா?, இதுவரை பதிவான வெயில் அளவை விட அதிகமாக பதிவாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ×