என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்னி வெயில்"

    • சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதுடன் வானம் இருட்டியது.
    • காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதுடன் வானம் இருட்டியது.

    இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    மேலும், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள்து. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • வெயில் கடுமையாக இருப்பதாலும் அதனை தணிக்கை செய்ய இந்த கடலில் சிறியவர் முதல் பெரியவர் வரை குளித்து வருகிறார்கள்.
    • ஊராட்சி பேரூராட்சி நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    விழுப்புரம்:

    மரக்காணம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தீர்த்தவாரி பகுதியில் பல்வேறு ஊர்களில் இருந்தும் உள்ளூரிலிருந்தும் காலை மாலை என 100 -க்கும் மேற்பட்டோர் இந்த கடலில் குளித்து ஆனந்த குளியல் போடுவது வழக்கம். இதனால் கடந்த சில வாரங்களாக அக்னி வெயில் கடுமையாக இருப்பதாலும் அதனை தணிக்கை செய்ய இந்த கடலில் வெயிலில் இருந்து தப்பிக்க சிறியவர் முதல் பெரியவர் வரை குளித்து வருகிறார்கள். இதனால அலைக்கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் ஒரு சில சமயங்களில் உயிர் பலி ஏற்படுகிறது. எனவே மரக்காணம் போலீசார் எச்சரிக்கை பலகை வைத்து எச்சரித்து வருகின்றனர். இது சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் அல்லது ஊராட்சி பேரூராட்சி நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    ×