search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zika virus"

    • நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
    • மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு பணியில் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியபோது டெங்கு, எலிக்காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவியது. அதன் தொடர்ச்சியாக கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவியது.

    அடுத்தடுத்து தொற்று நோய்கள் பரவியது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் அங்கு தற்போது ஜிகா வைரஸ் பரவி வருகிறது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது தலச்சேரி. இங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் வக்கீல்கள், நீதிபதிகள், ஊழியர்கள் சிலருக்கு தலைவலி, கண்வலி, மூட்டுவலி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தன.

    இதையடுத்து அங்கிருந்த 3 நீதிமன்றங்கள் 2 நாட்கள் மூடப்பட்டன. நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதில் நோய் பாதிப்பு இருந்த 23 பேரிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. அதில் நீதிமன்ற ஊழியர்கள் 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் 8 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜிகா வைரஸ் ஏடிஸ் கொசுக்களால் பரவக்கூடியது. இதனால் மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு பணியில் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறும்போது, ஜிகா வைரஸ் பரவல் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கர்ப்பிணி பெண்கள் சுகாதாரத்துறையின் சிறப்பு கண்காணிப்பில் உள்ளனர் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் முதல்முறையாக கர்நாடகாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • ஜிகா வைரஸ் பாதிப்பால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் ராய்ச்சூரை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு 'ஜிகா வைரஸ்' பாதிப்பு உறுதியாகி உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் முதல்முறையாக கர்நாடகாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் கூறுகையில், "மாநிலத்தில் முதல் முறையாக ஜிகா வைரஸ் பதிவாகி உள்ளது. இதனால் நிலைமையை அரசு கவனமாக கண்காணித்து வருகிறது. அதைக் கையாள எங்கள் துறை நன்கு தயாராக உள்ளது" என்றார்.

    கான்பூர் மாவட்டத்தில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 45 பேர் ஆண்கள், 21 பேர் பெண்கள் ஆவர்.
    கான்பூர் :

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த 23-ந் தேதி இந்திய விமானப்படை அதிகாரி ஒருவருக்கு முதல் முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அடுத்தடுத்து மேலும் சிலருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே, இந்திய விமானப்படை நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களிடையே மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, லக்னோவில் உள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், 30 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, கான்பூர் மாவட்டத்தில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 45 பேர் ஆண்கள், 21 பேர் பெண்கள் ஆவர். நோய்ப்பரவலை தடுக்க கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறைக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
    இந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் அமெரிக்கர்களில், கர்ப்பிணிகள் யாரும் ராஜஸ்தான் மற்றும் அதன் அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #zikaVirus
    வாஷிங்டன் :

    இந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் அமெரிக்கர்களில், கர்ப்பிணிகள் யாரும் ராஜஸ்தான் மற்றும் அதன் அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்காவின் தேசிய அளவிலான நோய் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கண்ட மாநிலங்களில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. கர்ப்ப காலத்தில் இந்த வைரஸ் தாக்கினால், கடுமையான குறைபாடுடன் கூடிய குழந்தை பிறக்கும். எனவே கர்ப்பிணிகள் அங்கு செல்ல வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது. #zikaVirus
    ராஜஸ்தான் மாநிலத்தில் 61 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். #Zikavirus
    ஜெய்பூர் :

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜெய்பூர் மாவட்டத்தில் 50 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது  மருத்துவமனை பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள சாஸ்திரி நகரை சேர்ந்தவர்கள். அந்த பகுதியில் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பாக ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 61 - ஆக உள்ளதென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் 11 கர்ப்பிணி பெண்களும் அடக்கம் என்பது நினைவு கூறத்தக்கது.

    டெங்கு, சிக்குன்குனியாவைத் தொடர்ந்து, கொசுக்கடியால் உருவாகும் புதிய கிருமி தொற்றான ஜிகா வைரஸ் பாதிப்பு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் உணரப்பட்டது.

    இந்த வைரஸ் முதன்முதலில் 1947-ஆம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika) என்ற காட்டில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த வைரஸ் கிருமி பற்றி தெரிய வந்தது. சமீபகாலத்தில், 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ஜிகா வைரஸ் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. #Zikavirus
    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்முறையாக 85 வயது பெண்ணுக்கு ஜிகா நோய்த்தொற்று ஏற்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது. #Zikavirus #RajasthanWoman
    ஜெய்ப்பூர்:

    டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான கொசுக்களின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஜிகா நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட 24 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் படுவேகமாக பரவியது.  

    தாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்கிறது. இதனால், ஜிகா பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன. இந்நோயானது, சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் ‘ஏடிஸ்’ கொசுக்களால் பரவுவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், செக்ஸ் மூலமாகவும் ஜிகா பரவுவதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. 

    இந்நோயை குணப்படுத்தும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஏற்கனவே பிரேசில் நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஜிகா நோய் பாதிப்புடன் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    தீராத காய்ச்சல், கண்கள் சிவப்பாக மாறி இருப்பது, மூட்டுவலி, சோர்வு, தலைவலி போன்றவை இந்த நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறிகளாகும். கடந்த 2017-ம் ஆண்டில் குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத் நகரை சேர்ந்த மூன்று பேருக்கு ஜிகா நோய்த்தொற்று ஏற்பட்டது. 

    இதேபோல், தமிழ்நாட்டில் முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம், நாட்றாம்பள்ளி பகுதியை சேர்ந்த 27 வயது நபருக்கு ஜிகா நோய்த்தொற்று ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர்.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த 85 பெண்ணுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக சமீபத்தில் தெரியவந்துள்ளது.

    தொடர்ந்து காய்ச்சல், மூட்டுவலி, சோர்வு, தலைவலி போன்றவற்றால் அவதிப்பட்டு வந்த அந்தப் பெண், இங்குள்ள சாவாய் மான் சிங் மருத்துவமனையில் கடந்த 11-9-2018 அன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    பின்னர், அவரது சிறுநீர் உள்ளிட்டவை கடந்த 18-ம் தேதி புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பட்டன. பரிசோதனை முடிவில் அவருக்கு ஜிகா நோய்த்தொற்று உள்ளது தெரியவந்தது. இதைதொடர்ந்து உரிய சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை தேறிய அவர் சில நாட்களுக்கு பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பான தகவல் ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். #Zikavirus  #RajasthanWoman
    ×