search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman devotees"

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கும் வழிபாட்டு உரிமை வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #thirumavalavan #sabarimalatemple

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மானம்பாடி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 500 பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பனை விதைகளை விதைத்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    வருகிற டிசம்பர் மாதம் 10-ந் தேதி அன்று திருச்சியில் ‘‘தேசம் காப்போம்’’ என்ற மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அடுத்த ஆண்டு (2019) ஆகஸ்டு மாதம் 17-ந் தேதிக்குள் தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கப்படும்.


    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து, பாம்பும் சாகக்கூடாது, தடியும் நோகக்கூடாது என்ற அடிப்படையில் உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கும் வழிபாட்டு உரிமை வேண்டும். கோவிலுக்குள் பெண்களை அனுமதித்தால் ஐதீகமும், பாரம்பரியமும் பாதிக்காது. அது பெண்களுக்கான ஜனநாயக உரிமை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் தமிழருவி, மண்டல செயலாளர் விவேகானந்தன், கும்பகோணம் சட்டசபை தொகுதி செயலாளர் முல்லை வளவன், வடக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி தமிழ், விவசாய அணஇ பொருளாளர் வெண்மணி, தஞ்சை மைய மாவட்ட செயலாளர் சொக்கா. ரவி, உள்பட பலர் கலந்து கொண்டனர். #thirumavalavan #sabarimalatemple

    கேரளாவில் சபரிமலையை சுற்றியுள்ள பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் பகுதிகளில் அமலில் உள்ள தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. #144extended #sabarimala144extended #sabarimalaverdict #sabarimalaprotests
    திருவனந்தபுரம்:

    சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றனர்.

    இவர்களை நுழைய விடாமல் தடுக்கும் போராட்டம் வலுத்த நிலையில் சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இன்று ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற இரு பெண்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில், மேலும் அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் தற்போது அமலில் உள்ள  144 தடை உத்தரவை  நீட்டிக்குமாறு பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இதையடுத்து, பரிமலையை சுற்றியுள்ள பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் பகுதிகளில் அமலில் உள்ள தடை உத்தரவை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் நூஹ் இன்று மாலை உத்தரவிட்டுள்ளார். #144extended #sabarimala144extended #sabarimalaverdict #sabarimalaprotests
    சபரிமலை செல்லும் பெண் பக்தர்களை தாக்குவது கண்டிக்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #SabarimalaProtests #SabarimalaVerdict #Thirunavukkarasar

    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆற்றுப்படுகையில் மணல் திருட்டு நடந்து வருகிறது. ஆளுங்கட்சியை பயன்படுத்தி ஒருசிலர் இரவில் டிராக்டர் மூலமாக மணல் கடத்துகிறார்கள்.

    இதை மாவட்ட கலெக்டர், தாசில்தார் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

    இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை அடிக்கடி அடித்து துரத்தி விட்டு அவர்களின் படகுகளை எடுத்து சென்று விடுகின்றனர். மீனவர்களையும் கைது செய்கின்றனர். பா.ஜனதா ஆட்சியில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.

    மீனவர்களுக்கு பாதுகாப்பு தரப்படும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது பா.ஜனதா. ஆனால் காங்கிரஸ் ஆட்சியின்போது மீனவர்களையும், படகுகளையும் பிடித்து செல்வார்கள். ஆனால் ஒரு சில நாட்களிலேயே அவர்களை விடுதலை செய்வார்கள்.

     


    ஆனால் பா.ஜனதா ஆட்சியில் பிடிக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட படகுகள் பயனற்று போய்விட்டது. மேலும் ஒருசில படகுகளை மீட்டு கொண்டு வந்தாலும் அதை உபயோகப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதற்காக மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். மீனவர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகள் இதை கவனத்தில் கொண்டு மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி உள்ளது. மத்திய- மாநில அரசுகளின் ஊழல்கள் பொய்களை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் இந்தமாத இறுதியில் நடத்த இருக்கிறோம்.

    சபரிமலையில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். ஆண், பெண் இருவரும் சமம் என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வருகிற பெண்களை தாக்குவது, கார் கண்ணாடியை உடைப்பது என்று வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

    எடப்பாடி பழனிசாமி மீது நீதிமன்றம் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து அதை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஒரு முதல்-அமைச்சர் மீதே சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

    மேலும் பல அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் முன்பிருந்த ஆட்சியாளர்களை குற்றம் சொல்லி எதிர்க்கட்சிகளை பயமுறுத்துவதுபோல் பேசுவது சரியானதல்ல. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். தப்பிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #SabarimalaProtests #SabarimalaVerdict #Thirunavukkarasar

    சபரிமலை செல்லும் பாதையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், 4 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #SabarimalaProtests #SabarimalaVerdict #SabarimalaTemple #Section144 #Pamba #Nilakkal
    பத்தனம்திட்டா:

    கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்புக்கு எதிராக கேரள மாநிலத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று ஐப்பசி மாத சிறப்பு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டது.

    ஆனால், சபரிமலைக்கு வரும் அனைத்து பாதைகளிலும் போராட்டக்குழுவினர் முகாமிட்டு, பெண்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 10 வயதுக்கு உட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதித்தனர். பெண் பத்திரிகையாளர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

    சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்ததால், நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். நிலக்கல் பகுதியில் 10க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    இதற்கிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்கக்கோரி சர்வதேச இந்து பரிஷத் அமைப்பு சார்பில் இன்று நள்ளிரவு முதல் நாளை மறுநாள் அதிகாலை வரை முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதனால் இன்று நள்ளிரவு முதல் பம்பா, நிலக்கல், சன்னிதானம் மற்றும் எலவுங்கல் பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என மாவட்ட கலெக்டர்  தெரிவித்துள்ளார்.

    உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக யாரும் போராடக்கூடாது என்றும் மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே கேட்டுக்கொண்டுள்ளார்.  #SabarimalaProtests #SabarimalaVerdict  #SabarimalaTemple #Section144 #Pamba #Nilakkal
    ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் புனித நீராடிய வட மாநில பெண் பக்தரின் 12ம பவுன் மதிப்புள்ள தங்க செயின் மற்றும் ரொக்கம் பணம் திருடுபோனது.

    ராமேசுவரம்:

    மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்த யோகேஷ் கலே மனைவி விருசாலி (36). இவர் உறவினர்களுடன் ராமேசுவரம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.

    அக்னிதீர்த்தம் கடற்கரையில் நீராட செல்லும் போது அவர் அணிந்திருந்த 12ம பவுன் தங்க செயினை கழற்றி கைப்பையில் வைத்தார். அந்த பையில் ரூ.10 ஆயிரம் பணமும் இருந்தது.

    பின்னர் அந்தப் பகுதியில் இருந்த அடையாளம் தெரியாத வயதான பெண்ணிடம் கைப் பையை கொடுத்து பார்த்துக்கொள்ளுமாறு நீராட சென்றார்.

    விருசாலி திரும்பி வந்து பார்த்தபோது அந்த மூதாட்டியை காணவில்லை. திருடு போன நகையின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இதையறிந்த விருசாலி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ராமேசுவரம் கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் வேலம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நகையுடன் மாயமான மூதாட்டியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×