search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Will Smith"

    • பேட் பாய்ஸ் படத்தின் முதல் பாகம் 1995 ஆம் ஆண்டு வெளியானது.
    • 2003 ஆம் ஆண்டு இப்படத்தின் 2-ம் பாகமும், 2020-ம் ஆண்டு 3-ம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்றன.

    ஹாலிவுட் பிரபல நடிகர் வில் ஸ்மித் நடிக்கும் பேட் பாய்ஸ் படத்தின் 4-ம் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

    பேட் பாய்ஸ் படத்தின் முதல் பாகம் 1995 ஆம் ஆண்டு வெளியானது. இதில் வில் ஸ்மித் மற்றும் மார்ட்டின் லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை பிடிக்கும் மியாமி டிடெக்ட்டிவ் கதாபாத்திரங்களில் அவர்கள் நடித்திருந்தனர். இப்படம் அப்போது மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    இதனை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு இப்படத்தின் 2-ம் பாகமும், 2020-ம் ஆண்டு 3-ம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்றன. இப்படத்தின் 4-ம் பாகம் இந்தாண்டு வெளியாகயுள்ளது. இது தொடர்பாக வில் ஸ்மித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சக நடிகர் மார்ட்டின் லாரன்ஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

    அதில், "பேட் பாய்ஸ் படத்தின் 4-ம் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்தது. மார்ட்டின் லாரன்ஸ் உடன் நடிப்பது ஒவ்வொரு முறையும் மேஜிக் போன்று உள்ளது. ஜூன் 7-ம் தேதி இப்படம் வெளியாகும்" என தெரிவித்துள்ளார். 

    கய் ரிட்சி இயக்கத்தில் மெனா மசூத் - நாமி ஸ்காட் - வில் சுமித் நடிப்பில் வெளியாகி இருக்கும் `அலாதின்' படத்தின் விமர்சனம்.
    நாயகன் மெனா மசூத், அவரது குரங்குடன் சேர்ந்து சிறிய அளவில் திருடி தனது பிழைப்பை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அக்ரபா ராஜ்ஜியத்தின் இளவரசியான நாமி ஸ்காட் மாறுவேடத்தில் ஊருக்குள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாள். அப்போது மெனா மசூத்துடன், நாமி ஸ்காட்டுக்கு பழக்கம் ஏற்படுகிறது. 

    நாமி ஸ்காட் இளவரசி என்று அறியாமல் அவருடன் பழக ஆரம்பிக்க, இருவரும் புரிதலில் வரும் வேளையில் இளவரசியின் காப்பு காணாமல் போகிறது. இளவரசியின் காப்பை தனது குரங்கு திருடியதை அறிந்து மெனா மசூத் அதனை திரும்ப கொடுப்பதற்காக அரச காவல்களை தாண்டி அரண்மனைக்குள் செல்கிறார்.



    இது அந்த நாட்டு சுல்தானின் முக்கிய ஆலோசகரான மர்வான் கென்சாரிக்கு தெரிய வருகிறது. இதையடுத்து மெனா மசூத் மூலம் குகையில் இருக்கும் அற்புத விளக்கை எடுக்க மர்வான் முடிவு செய்கிறார். அவர் மூலமாக நாமி ஸ்காட் இளவரசி என்பதும் தெரியவருகிறது. பின்னர் மர்வானின் ஆலோசனையின் பேரில், அந்த குகைக்கு செல்லும் மெனா மசூத், விளக்கை எடுத்துக் கொண்டு வெளியே வர, அற்புத விளக்கை வாங்கிவிட்டு நாயகனை குகைக்குள் தள்ளிவிடுகிறார் மர்வான்.

    இதற்கிடையே மர்வான் வாங்கிய விளக்கை குரங்கு திருடி விடுகிறது. அந்த விளக்கை தேய்க்க விளக்கில் இருந்து வெளியே வரும் வில் சுமித் மெனா மசூத்துக்கு மூன்று வரங்களை அளிக்கிறார்.



    இளவரசியை கரம்பிடிக்க நினைக்கும் மெனா மசூத், அதில் ஒரு வரத்தின் மூலம் ராஜாவாகிறார். பின்னர், மெனா மசூத், இளவரசியை பெண் பார்க்க செல்ல அந்த அற்புத விளக்கு மெனா மசூத்திடம் இருப்பது மர்வானுக்கு தெரிய வருகிறது.

    கடைசியில், மெனா மசூத் - இளவரசியுடன் சேர்ந்தாரா? மர்வான் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டாரா? ஜீனியான வில் சுமித்துக்கு விடுதலை கிடைத்ததா? என்பதே அலாதின் படத்தின் மீதிக்கதை.



    மெனா மசூத், நாமி ஸ்காட் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து மனதில் பதிகின்றனர். வில் சுமித் தனது அலாதியான காமெடி பேச்சால் ரசிக்க வைக்கிறார். மர்வான் கென்சாரி ஆசை கலந்த வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

    அலாவுதீன் கதையை தற்போதைய தொழில்நுட்பத்தின் மூலம் வண்ணமயமாக கொடுத்திருக்கிறார் கய் ரிட்சி. படத்தில் வசனங்கள் கூட பாடல்களாகவே நகர்கின்றன. படத்தின் தொடக்கமும், முடிவும் ஒரே புள்ளியில் இருப்பது சிறப்பு. தமிழ் வசனங்கள், பாடல் வரிகள் என அனைத்துமே ரசிக்கும்படியாக உள்ளன.

    ஆலன் மென்கெனின் இசையும், ஆலன் ஸ்டீவார்ட்டின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம்.

    மொத்தத்தில் `அலாதீன்' அற்புதம்.

    ×