search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinayagar idols"

    • தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் காவல்துறையின் அனுமதி பெற்று வைக்கப்பட்ட 85 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது.
    • தமிழகத்தின் பாரம்பரிய மேல தாளங்கள் மற்றும் கேரளாவின் செண்டை மேளம் என 12 வகையான மேளங்கள் முழங்க சிலம்பாட்டம், முளைப்பாரிகளுடன் ஊர்வலம் நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி நகரம் மற்றும் புறநகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகள் விஜர்சன விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி நகரின் முக்கிய சாலைகளின் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் காவல்துறையின் அனுமதி பெற்று வைக்கப்பட்ட 85 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது.

    தூத்துக்குடி நகர பகுதியில் இருந்து வரக்கூடிய 74 விநாயகர் சிலைகள், புதுக்கோட்டை பகுதியில் இருந்து வரக்கூடிய விநாயகர் 11 சிலைகள் மற்றும் வீடுகளில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகள் உட்பட விநாயகர் சிலைகள் அனைத்தும் திரேஸ்புரம் மற்றும்

    முத்தையாபுரம் வழியாக தூத்துக்குடி புதியதுறைமுகம் கடலில் கரைக்கப்பட்டது.

    முத்தையாபுரம் வழியாக 32 விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு அய்யம்பாண்டி தலைமை தாங்கினார். பா.ஜ.க. தெற்கு மண்டல தலைவர் மாதவன், இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் நாராயணராஜ், விநாயகர் ஊர்வல பொறுப்பாளர் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி வர்த்தக பிரிவு மாநில துணைத்தலைவர் ஜெகன் கலந்து கொண்டு பேசினார். விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலத்தை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன் தொடங்கி வைத்து பேசினார்.

    தமிழகத்தின் பாரம்பரிய மேல தாளங்கள் மற்றும் கேரளாவின் செண்டை மேளம் என 12 வகையான மேளங்கள் முழங்க சிலம்பாட்டம், முளைப்பாரிகளுடன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் பாலசுப்பிரமணியன், ஆறுமுகம் என மூத்த காரியத்தர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் விநாயகர் சிலை கமிட்டி பொறுப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் பால்மாணிக்கம், செல்வி, துர்க்கையப்பன், பிரபு முருகேசன், முருகன் மற்றும் பொறுப்பாளர்கள் ஆண்கள்- பெண்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விநாயகர் சிலைகள் விஜர்சன விழா மற்றும் ஊர்வலத்தை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர டி.எஸ்.பி. சத்யராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், பிரேம் ஆனந்த், அய்யப்பன், ராஜாராம், சண்முகம், வின்சென்ட் அன்பரசி, செந்தில்குமார், அலெக்ஸ் ராஜ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது.
    • விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுற்றுச்சூழலை பாதுகாக்க

    நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது.

    அதன்படி தென்காசி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் விநாயகர் சிலையை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    பாதுகாப்பான முறையில்

    விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவை உள்ளிட்ட பொருட்களை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

    சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் எண்ணெய், வண்ணபூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ண பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.

    இயற்கை சாயம்

    சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர்சார்ந்த மக்க கூடிய நச்சு கலப்படமற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ணப் பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சிலையை கரைக்க இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இடங்கள் அறிவிப்பு

    அதன்படி கடையம் பகுதியை சேர்ந்தவர்கள் ராமநதி அணை, ஆழ்வார்குறிச்சி கடனாநதி ஆறு, தென்காசி யானை பலம் அருகில், குற்றாலம் சிற்றாறு, இலஞ்சி, செங்கோட்டை குண்டாறு அணை, புளியரை ஆறு, லாலா குடியிருப்பு, அச்சன்புதூர் அனுமான் ஆறு, கரிசல் குடியிருப்பு அருகில், பாவூர்சத்திரம் பகுதியில் பாவூர்சத்திரம் குளம், கடையநல்லூர் மேலக்கடையநல்லூர், கடையநல்லூர் கருப்பாநதி அணை, வாசுதேவநல்லூர் சிமெண்ட் தொட்டி, ராஜ் பிரிக்ஸ் சேம்பர், நெல்கட்டும்செவல், வாசுதேவநல்லூர் ராயகிரி பிள்ளையார் மந்தையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் படி கரைக்க அனுமதிக்கப்படும்.

    மேலும் விபரங்ளுக்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    விருத்தாசலம், மங்கலம்பேட்டை பகுதியில் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
    விருத்தாசலம்:

    ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படு கிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகிற 13-ந் தேதி கொண்டாடப்படுகிறது. சதுர்த்தியையொட்டி இந்துக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதமாக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் விருத்தாசலம், மங்கலம்பேட்டை பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதன்படி சிவன், பார்வதியுடன் இருப்பது போன்ற விநாயகர், 3 தலையுடன் இருக்கும் விநாயகர், மயில் விநாயகர், அன்ன விநாயகர், மாட்டு வண்டிகளில் அமர்ந்தபடி செல்வது போன்ற விநாயகர், ஐந்துமுக சிங்க விநாயகர், நந்தி விநாயகர், பாகுபலி விநாயகர், மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்வது போன்ற விநாயகர், வலம்புரி விநாயகர், 5 தலை நாகத்துடன் இருக்கும் விநாயகர் உள்ளிட்ட பலவிதமான வடிவங்களில் 2 அடி முதல் 13 அடி உயரம் வரை சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பல்வேறு வண்ணங்களில் வர்ணம் பூசும் பணியும் நடந்து வருகிறது.

    இதுகுறித்து மங்கலம்பேட்டையை சேர்ந்த விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளி ஒருவர் கூறுகையில், நாங்கள் களிமண், வண்டல்மண், ஆற்றுமணல், கிழங்கு மாவு கொண்டு இந்த விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறோம். இதனை தண்ணீரில் கரைத்தால், நீர் நிலைகள் மாசுபடாது என்றார். 
    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருவள்ளூரில் தயாராகும் விநாயகர் சிலைகள் ரூ. 100 முதல் ரூ. 15000 வரை விற்கப்படுகிறது.
    திருவள்ளூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 13-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    விழாவையொட்டி விநாயகர் சிலையை பொது இடங்களில் 3 நாள், 5 நாள், 7 நாள்கள் என வைத்து பூஜித்து, பின்னர் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்காக திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையோரம் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சாட் பவுடர் மூலம் விநாயகர் சிலைகளை பல வடிவங்களில் வடிவமைத்து வருகின்றனர்.

    விநாயகர் சிலை சுமார் 1 அடி உயரம் முதல் 13 அடி உயரம் வரை வடிவமைக்கின்றனர். ரூ. 100 முதல் 15,000 வரை விற்கப்படுகிறது. பாம்பு விநாயகர், சிவன் பார்வதியுடன் விநாயகர், கிருஷ்ணருடன் விநாயகர், மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகன விநாயகர், கருட வாகன விநாயகர் உள்ளிட்ட பல வடிவங்களில் சிலைகளை தயார் செய்து விற்பனைக்கு தயாராக வைத்துள்ளனர்.

    இது குறித்து சிலை செய்யும் தொழிலாளர்கள் கூறும்போது சிலைகளில் பூசப்படும் வண்ணங்கள் ரசாயனக் கலவை இல்லாமல், எளிதில் நீர் நிலையில் கரையக்கூடியது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் சிலையில் பயன்படுத்தி வருகிறோம்’ என்றனர். #tamilnews
    திண்டுக்கல் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    திண்டுக்கல்:

    நாடு முழுவதும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் முக்கியமான இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள். பின்னர் அதனை ஊர்வலமாக கொண்டு சென்று ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 1,500 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட திட்டமிடப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில் மட்டும் 1,000 சிலைகள் வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதை முன்னிட்டு திண்டுக்கல், நொச்சிஓடைப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    திண்டுக்கல்- நத்தம் சாலையில் உள்ள நொச்சி ஓடைப்பட்டியில் உள்ள தனியார் சிலை தயாரிப்பு நிறுவனத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக் கப்பட்டு பல்வேறு இடங் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தற்போது, சுமார் 100-க்கும் மேற்பட்ட சிலைகள் தயாரித்து வண்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து அந்த நிறுவன உரிமையாளர் கஜேந்திரனிடம் கேட்டபோது, ‘ஆர்டரின்பேரில் சிலைகள் தயாரித்து அனுப்பி வைக்கிறோம். உயரத்துக்கு ஏற்றாற்போல ரூ.4 ஆயிரத்து 500 முதல் ரூ.20 ஆயிரம் வரை விநாயகர் சிலை உள்ளது. மேலும், மண்பானைகள், அகல்விளக்கு, மண்ணால் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில் ஆகியவற்றையும் விதவிதமாக தயாரிக்கிறோம். ரசாயனம் கலக்காமல் ஒரு மணி நேரத்தில் நீரில் கரையும் வகையில் விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்கிறோம்’ என்றார். 
    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூரில் பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    கரூர்:

    ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் அன்றைய நாளில் களிமண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது.



    இதையொட்டி கரூர் திருமாநிலையூர் சுங்ககேட் பகுதியில் பொம்மைகள் செய்து பிழைப்பு நடத்தி வரும் ராஜஸ்தானை சேர்ந்த சத்ராராம் என்கிற தொழிலாளி தனது குடும்பத்துடன் சேர்ந்து தற்போது விநாயகர் சிலைகளை பலவடிவங்களில் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    வீட்டில் வைத்து பூஜை செய்யும் வகையில் சிறிய அளவிலான சிலைகள் மற்றும் 4 அடியிலிருந்து 9 அடி உயரம் வரையிலான பெரிய சிலைகளும் தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர். பெரிய விநாயகர் சிலைகள் ரூ.15 ஆயிரம், ரூ.12 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.8 ஆயிரம் என்கிற விலையில் விற்கப்படுகின்றன. கையில் தூக்கி செல்லும் வகையிலான சிறிய சிலைகள் ரூ.150 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

    மேலும் சாக்பீஸ் தயாரிக்க பயன்படுத்தும் மாவினை கொண்டு இந்த சிலைகள் உருவாக்கப்படுவதால் நீர்நிலைகளில் கரைக்கும் போது சுற்றுப்புறத்திற்கு தீங்கு ஏற்படாது என சிலைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். பக்தர்களுக்கு பிடித்த வகையில் யானைமுக விநாயகர், வெற்றிவிநாயகர், எலி-புலியின் மேல் அமர்ந்திருக்கும் விநாயகர், ராஜவிநாயகர், சுயம்புவிநாயகர், கற்பக விநாயகர் என பல்வேறு வகையிலான சிலைகள் தயாரிக்கப்பட்டு வருவதால் கரூர், குளித்தலை, மாயனூர், நெரூர், வாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பக்தர்கள், கோவில் நிர்வாகத்தினர் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளி சத்ராராமிடம் கேட்ட போது கூறியதாவது:-

    ராஜஸ்தானை சேர்ந்த எங்களது குடும்பத்தினர் கடந்த சில ஆண்டுகளாக கரூரில் தங்கி கொலுபொம்மைகள் உள்ளிட்டவை செய்து தள்ளு வண்டியில் தெரு தெருவாக சென்று விற்று பிழைப்பு நடத்தி வருகிறோம். அந்த வகையில் தற்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருவதையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிப்பில் இறங்கியுள்ளோம். திருச்சியிலிருந்து சாக்பீஸ் தயாரிக்கப்படும் மாவினை வாங்கி வந்து தண்ணீரில் கரைத்து லாவகமாக அச்சில் வார்த்து அதனை காயவைத்து சிலைகளாக உருவாக்கி வருகிறோம். பெரிய அளவிலான சிலைகளை தயாரிக்கும் போது அதன்உள்புற பகுதியில் தேங்காய்நார்கள் உள்ளிட்டவற்றை சேர்த்து அதன் கட்டமைப்பை வலிமையானதாக உருவாக்குகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே போல் இந்து முன்னணி சார்பில் 108 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட இருப்பதையொட்டி கரூர் செட்டிப்பாளையம் பகுதியில் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. தற்போது அந்த சிலைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு அலங்கார ஒப்பனைகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது ஆகும். 
    ×