என் மலர்
நீங்கள் தேடியது "places"
- நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது.
- விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுற்றுச்சூழலை பாதுகாக்க
நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது.
அதன்படி தென்காசி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் விநாயகர் சிலையை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பாதுகாப்பான முறையில்
விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவை உள்ளிட்ட பொருட்களை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் எண்ணெய், வண்ணபூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ண பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.
இயற்கை சாயம்
சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர்சார்ந்த மக்க கூடிய நச்சு கலப்படமற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ணப் பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சிலையை கரைக்க இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடங்கள் அறிவிப்பு
அதன்படி கடையம் பகுதியை சேர்ந்தவர்கள் ராமநதி அணை, ஆழ்வார்குறிச்சி கடனாநதி ஆறு, தென்காசி யானை பலம் அருகில், குற்றாலம் சிற்றாறு, இலஞ்சி, செங்கோட்டை குண்டாறு அணை, புளியரை ஆறு, லாலா குடியிருப்பு, அச்சன்புதூர் அனுமான் ஆறு, கரிசல் குடியிருப்பு அருகில், பாவூர்சத்திரம் பகுதியில் பாவூர்சத்திரம் குளம், கடையநல்லூர் மேலக்கடையநல்லூர், கடையநல்லூர் கருப்பாநதி அணை, வாசுதேவநல்லூர் சிமெண்ட் தொட்டி, ராஜ் பிரிக்ஸ் சேம்பர், நெல்கட்டும்செவல், வாசுதேவநல்லூர் ராயகிரி பிள்ளையார் மந்தையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் படி கரைக்க அனுமதிக்கப்படும்.
மேலும் விபரங்ளுக்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோபி:
தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபி அடுத்த குள்ளம்பாளையத்தில் அவரது வீட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செலவம் தலைமையில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 1,250 தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. அரசு அதில் தனிக்கவனம் செலுத்தி, வேகப்படுத்தி வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து, தற்போது தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் வெளிப்படை தன்மையோடு நிரப்பப்பட்டு வருகிறது.
தங்களது குழந்தைகளை ஆங்கில வழிக்கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் பெற்றோர்களிடத்தில் அதிகமாக உள்ளது. தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் 50 சதவீதம் வரை ஆங்கிலவழியில் மாணவர்கள் படிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதன்மூலம் கிராமப்புற மாணவர்களும் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியும். ஏற்கனவே, அரசு அறிவித்த படி தேர்வு எழுதிய சிறப்பாசிரியர்களுக்கான காலிபணியிடங்கள் ஒளிமறைவின்றி முறைப்படி வெளிப்படைத் தன்மையோடு நிரப்பப்படும்.
மேலும் கூடுதல் காலி பணியிடங்களுக்கு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த கல்வியாண்டிலிருந்து 1 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மாற்றியமைக்கப்படும். சென்னையில் உள்ள அண்ணா நூலகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சியளிக்கப்படும்.
இதில் மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உடனுக்குடன் சந்தேகத்தை நிவர்த்தி செய்வார்கள். இதன் மூலம் மத்தியஅரசு கொண்டு வரும் எந்த தேர்வையும் எதிர்கொள்ளும் அளவிற்கு மாணவர்கள் உருவாக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அமைச்சரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மனு ஒன்றை அளித்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட அவர் முதல்வரிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். #ministersengottaiyan