என் மலர்
நீங்கள் தேடியது "vidudhalai siruthaigal party"
- முருக பக்தர்கள் மாநாட்டில் தான் திராவிட இயக்கமாய் உருவான அதிமுக பங்கேற்றுள்ளது.
- முருகன் பெயரை பயன்படுத்தி தமிழ்நாட்டை பலியிடுவதை எப்படி ஆதரிக்க முடியும்?
"ஆர்எஸ்எஸ் அமைப்பின் சதிச்செயலைக் கூட புரிந்து கொள்ளாமல் அதிமுக தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இரண்டகம் செய்யும் அதிமுகவை தமிழ்நாடும் மக்களும் மன்னிக்க மாட்டார்கள்" என விசிக துணை பொதுச்செயலாளர்
வன்னிஅரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சூரனை வதம் செய்த முருகா திராவிடத்தை அழிக்க வேலெடுத்து வா என மதுரை மாவட்டம் முழுக்க இந்து முன்னணியினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
இந்த மாநாட்டில் தான் திராவிட இயக்கமாய் உருவான அதிமுக பங்கேற்றுள்ளது.
ஆரியத்தின் ஆபத்து குறித்தும் அதை அழித்தொழிக்க வேண்டிய தேவை குறித்தும் அறிஞர் அண்ணா அவர்கள் எச்சரித்துள்ளார்.
அந்த பேரறிஞர் அண்ணாவின் பெயரிலான இயக்கம் இப்படி ஆரியத்திடம் மண்டியிடுவது அறிஞர் அண்ணாவுக்கு மட்டும் செய்யக்கூடிய துரோகமல்ல; தமிழ்நாட்டுக்கே செய்யக்கூடிய துரோகமாகும்.
முருகனை வழிபடுவது என்பது வேறு; ஆனால் முருகன் பெயரை பயன்படுத்தி தமிழ்நாட்டை பலியிடுவதை எப்படி ஆதரிக்க முடியும்?
RSS அமைப்பின் சதிச்செயலை கூட புரிந்து கொள்ளாமல், அதிமுக தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இரண்டகம் செய்யும் அதிமுகவை தமிழ்நாடும் மக்களும் மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு.
பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது.
அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் தொல். திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கடந்த தேர்தலிலும் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது.
ஆனால், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறது.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்," நாளை டெல்லி சென்று மேல்முறையீடு செய்ய உள்ளோம்" என்றார்.
- திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது
- தேர்தல் ஆணையத்திடம் திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்
பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது.
அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கடந்த தேர்தலிலும் விசிகவுக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது. ஆனால், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்.
சிதம்பரம் மக்களவை தொகுதியில் வி.சி.க சார்பில் போட்டியிடுகிறார் திருமாவளவன். விழுப்புரம் மக்களவை தொகுதியில் விசிக சார்பில் ரவிக்குமார் போட்டியிடுகிறார்
- அனுமதி பெறாமல் நட இருந்த கொடிக்கம்பத்தை காவல்துறையினர் அப்புறப்படுத்திச் சென்றனர்.
- கொடிக்கம்பத்தை எடுத்துச் சென்றதைக் கண்டித்து வி.சி.க நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.
மதுரையில் காவல்துறையினர் எடுத்துச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் மீண்டும் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொடிகம்பத்தை மீண்டும் வழங்கியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் நடனமாடி கொண்டாடினர்.
புதூர் பகுதியில் அனுமதி பெறாமல் நட இருந்த கொடிக்கம்பத்தை காவல்துறையினர் அப்புறப்படுத்திச் சென்றனர்.
இதனால், கொடிக்கம்பத்தை எடுத்துச் சென்றதைக் கண்டித்து வி.சி.க நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், விசிக கொடுக்கம்பம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிரேன் மூலம் எடுத்து வரப்பட்ட 62 அடி உயர கொடிக்கம்பத்தை நடுவதற்கான பணியில் விசிக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
விசிக கொடி ஏற்றுவதில் பல்வேறு காரணங்களை கூறி மதுரை ஆட்சியர் தடை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, மூத்த அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என திருமாவளவன் கூறி இருந்த நிலையில் கொடிக்கம்பம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- "சீட் ஷேர் அல்ல, பவர் ஷேர் தான் முக்கியம்" என திருமாவளவன் பேசிய வீடியோ விவாதப் பொருளானது.
- மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல செயற்குழுவில் பேசிய உரையின் சுருக்கம்.
ஆட்சி, அதிகாரம், அமைச்சரவையில் பங்கு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார்.
" சீட் ஷேர் அல்ல, பவர் ஷேர் தான் முக்கியம்" என திருமாவளவன் பேசிய வீடியோ விவாதப் பொருளானது.
1999ம் ஆண்டு தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்தபோதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும், செப்டம்பர் 12ம் தேதி அன்று மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல செயற்குழுவில் பேசிய உரையின் சுருக்கம் என குறிப்பிட்டு திருமாவளவன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
திருமாவளவனின் எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட வீடியோவின் முழு வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.






