என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டுக்கு இரண்டகம் செய்யும் அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்- வன்னி அரசு
- முருக பக்தர்கள் மாநாட்டில் தான் திராவிட இயக்கமாய் உருவான அதிமுக பங்கேற்றுள்ளது.
- முருகன் பெயரை பயன்படுத்தி தமிழ்நாட்டை பலியிடுவதை எப்படி ஆதரிக்க முடியும்?
"ஆர்எஸ்எஸ் அமைப்பின் சதிச்செயலைக் கூட புரிந்து கொள்ளாமல் அதிமுக தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இரண்டகம் செய்யும் அதிமுகவை தமிழ்நாடும் மக்களும் மன்னிக்க மாட்டார்கள்" என விசிக துணை பொதுச்செயலாளர்
வன்னிஅரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சூரனை வதம் செய்த முருகா திராவிடத்தை அழிக்க வேலெடுத்து வா என மதுரை மாவட்டம் முழுக்க இந்து முன்னணியினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
இந்த மாநாட்டில் தான் திராவிட இயக்கமாய் உருவான அதிமுக பங்கேற்றுள்ளது.
ஆரியத்தின் ஆபத்து குறித்தும் அதை அழித்தொழிக்க வேண்டிய தேவை குறித்தும் அறிஞர் அண்ணா அவர்கள் எச்சரித்துள்ளார்.
அந்த பேரறிஞர் அண்ணாவின் பெயரிலான இயக்கம் இப்படி ஆரியத்திடம் மண்டியிடுவது அறிஞர் அண்ணாவுக்கு மட்டும் செய்யக்கூடிய துரோகமல்ல; தமிழ்நாட்டுக்கே செய்யக்கூடிய துரோகமாகும்.
முருகனை வழிபடுவது என்பது வேறு; ஆனால் முருகன் பெயரை பயன்படுத்தி தமிழ்நாட்டை பலியிடுவதை எப்படி ஆதரிக்க முடியும்?
RSS அமைப்பின் சதிச்செயலை கூட புரிந்து கொள்ளாமல், அதிமுக தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இரண்டகம் செய்யும் அதிமுகவை தமிழ்நாடும் மக்களும் மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






