search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirru"

    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை திரிஷாவின் நீண்ட நாள் கனவு விரைவில் நனவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #Trisha
    திரிஷா நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. தென் இந்தியாவின் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்துவிட்ட திரிஷா இன்னும் ரஜினியுடன் மட்டும்தான் இணைந்து நடிக்கவில்லை.

    எந்த பேட்டி என்றாலும் திரிஷா ஏக்கமாக இதனை குறிப்பிடுவார். அவரது ஏக்கம் தீரும் நேரம் வந்துவிட்டது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் திரிஷாவும் நடிக்கிறாராம். ஏற்கனவே சிம்ரன் ஒரு கதாநாயகியாக நடிக்கும் நிலையில், திரிஷாவும் காதலியாக நடிக்கிறார். ரஜினியின் இளவயது தோற்றத்துக்கு திரிஷா ஜோடியாக இருக்கலாம் என்று செய்தி வருகிறது.



    திரிஷா நடிப்பில் கடைசியான வெளியான மோகினி படம் போதிய வரவேற்பை பெறாத நிலையில், 96, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 1818, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட படங்கள் திரிஷா கைவசம் உள்ளன. #Rajinikanth #Trisha

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இமாச்சல பிரதேசத்தில் நடந்தது. டார்ஜிலிங் மலைப் பகுதியில் முக்கிய காட்சிகளை படமாக்கினார்கள். பின்னர் சில நாட்கள் ஓய்வு எடுக்க சென்னை வந்த ரஜினிகாந்த், அரசியல் நடவடிக்கை குறித்து மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உறுப்பினர் சேர்க்கையையும் தீவிரப்படுத்தினார். 

    அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள டேராடூன் சென்றார். அங்கு 2 வாரங்களாக படப்பிடிப்பு நடந்தது. அதில் ரஜினிகாந்த் - சிம்ரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி விடுதி வார்டன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. பகலில் விடுதியில் பணியாற்றும் அவர் இரவில் தாதாவாக மாறி சமூக விரோதிகளுடன் மோதுவதுபோல் திரைக்கதை அமைத்து இருப்பதாக சொல்கிறார்கள். விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.



    டேராடூனில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே இன்று அல்லது நாளை படப்பிடிப்பை முடித்து ரஜினிகாந்த் சென்னை திரும்ப இருக்கிறார்.

    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் பணிகள் குறித்தும் ரஜினி ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மதுரையிலும் சில காட்சிகளை படமாக்குகின்றனர். தற்போது 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த மாதம் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #Rajinikanth #VijaySethupathi

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தில் ரஜினியுடன் முதல்முறையாக இரண்டு முக்கிய பிரபலங்கள் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். #Rajinikanth
    ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டேராடூனில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது டேராடூனில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    ரஜினிகாந்த் நேற்று முன்தினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருவதாக நேற்று தெரிவித்திருந்தோம். இந்த நிலையில், படக்குழு அந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. 

    இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் டுவிட்டர் பக்கத்தில் நடிகை சிம்ரன் மற்றும் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் இருவரும் ரஜினியுடன் முதல்முறையாக இணைவதாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய கதாபாத்திரங்களில் பாபி சிம்ஹா, அஞ்சலி, மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரஜினி இந்த படத்தில் பேராசிரியராக நடிப்பதாகவும், மாணவர்களை நல்வழிப்படுத்தும் கதாபாத்திரத்தில் வலம் வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    ரஜினி நடிப்பில் அடுத்ததாக `2.0' வருகிற நவம்பர் 29-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Rajinikanth #Simran #NawazuddinSiddiqui

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் ரஜினி ஜோடியாக சிம்ரன் நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth
    காலா படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் படத்தின் தலைப்பு முடிவு செய்யப்படாத நிலையில், படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்து, தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு உத்தரகாண்ட்டில் துவங்கி இருக்கிறது.

    இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய கதாபாத்திரங்களில் பாபி சிம்ஹா, அஞ்சலி, மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.



    சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விரைவில் ரஜினி, விஜய் சேதுபதி சந்திக்கும் காட்சிகளையும், 2 வாரங்களில் ரஜினி மொத்த சம்பந்தப்பட்ட காட்சிகளையும் முடித்துவிட்டு ஓரிரு மாதங்களில் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #Rajinikanth #Simran

    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் குறித்து பரவிய வதந்திக்கு கார்த்திக் சுப்புராஜ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். #Rajinikanth
    நடிகர் ரஜினிகாந்த் காலா படத்திற்கு பின்னர், பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இன்னும் படத்தின் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை.

    இந்த படத்திற்கான படப்பிடிப்பு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் நடந்து வந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்று இருந்தார். முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், கடந்த 10-ந் தேதி சென்னை வந்தடைந்தார். 

    இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் நிலையில், படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் ரஜினியின் நண்பராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மறுத்துள்ளதுடன், ”படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த படத்தில் பகத் பாசில் இணையவுள்ளார் என்பது பொய்யான தகவலாகும். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக பாபி சிம்ஹா மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிக்கின்றனர்” என்று கூறியுள்ளார். 



    சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Rajinikanth

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் முக்கிய பிரபலம் ஒருவரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் துவங்க இருப்பதாகவும், தொடர்ந்து காசியிலும் படப்பிடிப்பை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த நிலையில், மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் பகத் பாசில் இந்த படத்தில் ரஜினியின் நண்பராக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பகத் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவும், பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

    படப்பிடிப்பு இமாச்சல பிரதேசம், மேற்கு வங்காளம் பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் நடந்து வருகிறது. ஆனால் படத்தின் கதை முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் நடப்பது தானாம். அதுவும் ஊட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் நடக்கும் கதை. இதில் கல்லூரியின் பேராசிரியராக ரஜினிகாந்த் நடித்து வருவதாக படக்குழுவில் இருந்து தகவல் வருகிறது.#Rajinikanth #KarthikSubbaraj

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மேற்கு வங்காளத்தில் வேகமாக நடந்து வருகிறது. வரும் 10-ஆம் தேதி தமிழகம் திரும்பும் படக்குழு அடுத்து விரைவில் மீண்டும் டேராடூனுக்கு செல்ல இருக்கிறது.

    படப்பிடிப்பு இமாச்சல பிரதேசம், மேற்கு வங்காளம் பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் நடந்து வருகிறது. ஆனால் படத்தின் கதை முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் நடப்பது தானாம். அதுவும் ஊட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் நடக்கும் கதை. இதில் கல்லூரியின் பேராசிரியராக ரஜினிகாந்த் நடித்து வருவதாக படக்குழுவில் இருந்து தகவல் வருகிறது.



    இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். #Rajinikanth #KarthikSubbaraj

    கார்த்திக் சுப்புராஜ் - ரஜினிகாந்த் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முக்கிய பிரபலம் ஒருவரும் படக்குழுவில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #KarthikSubbaraj
    ரஜினிகாந்த் நடிப்பில் `காலா' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில் துவங்கி நடந்து வரும் நிலையில், படத்தின் சண்டைப் பயிற்சியாளராக பீட்டர் ஹெய்ன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

    பீட்டர் ஹெய்ன் ஏற்கனவே ரஜினியுடன் சிவாஜி, எந்திரன் மற்றும் கோச்சடையான் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி - பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு திரு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தை பொங்கலில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #Rajinikanth #KarthikSubbaraj

    ரஜினிகாந்த் நடிப்பில் `காலா' படம் உலகமெங்கம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது. #Rajinikanth #KarthikSubbaraj
    ரஜினிகாந்த் நடிப்பில் `காலா' படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படத்திற்கும் நல்ல விமர்சனங்களே வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    இந்த நிலையில், ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் இன்று துவங்கியிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்ரன், மேகா ஆகாஷ், பாபி சிம்ஹா, சனத் ரெட்டி உட்பட பலரும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 



    அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு திரு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தை பொங்கலில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #Rajinikanth #KarthikSubbaraj

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் ரஜினி பேராசிரியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #KarthikSubbaraj
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பு இமயமலை பகுதிகளில் நடக்க இருக்கிறது. கடந்த மாதம் படப்பிடிப்பு நடத்தவிருக்கும் தளங்களை தேர்வு செய்ய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ஒளிப்பதிவாளர் திரு இமயமலை, காத்மாண்டு ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தனர்.

    கடந்த வாரம் ரஜினி மற்றும் மற்ற நடிகர், நடிகைகளுக்கான ஆடைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று இருக்கின்றன. இந்த படத்துக்கான முதல் பகுதி படப்பிடிப்பை ஒரு மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு. கடந்த சனிக்கிழமை ரஜினி விதவிதமான ஆடைகளில் தோன்றும் போட்டோஷூட் நடந்தது. ’கபாலி’ மற்றும் ’காலா’ படங்களில் தனது வெள்ளைத் தாடியுடன் தோன்றிய ரஜினிகாந்த் இந்த படத்தில் கறுப்பு முடி, தாடியோடு தோன்றுகிறார்.

    சில நாட்களாக அந்த தோற்றத்தில் தான் வலம் வருகிறார் ரஜினி. இமயமலையில் உள்ள டார்ஜிலிங் பகுதியில் இருக்கும் புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. ’இமயமலையில் படப்பிடிப்பு நடைபெறுவதால் இது ஏதோ சாமியார் கதை என்று யாரும் நினைக்க வேண்டாம், இது முழுக்க ரஜினி ரசிகர்களுக்கான படம்!’ என்று கூறி இருக்கிறார் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். 



    படப்பிடிப்பு கல்லூரியில் தொடங்க இருப்பதால் ரஜினி பேராசிரியராக நடிக்கிறார் என்று ஒரு தகவல் சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.  #Rajinikanth #KarthikSubbaraj

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் தனுஷ் பட நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Rajinikanth
    ரஜினி நடிப்பில் `காலா' படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. காலா படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. நேற்று ஐதராபாத்தில் நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரஜினி, தனுஷ், ரஞ்சித் உள்ளிட்டோர் ஐதராபாத் சென்றிருந்தனர். 

    ஜுன் 2-வது வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இதுவரை வயதான தோற்றத்தில் வலம் வந்த ரஜினி நேற்று ஐதராபாத் நிகழ்ச்சியில் கருப்பு முடி, தாடியுடன் வந்தார். அடுத்த படத்திற்காக ரஜினி கருப்பு முடி, தாடிக்கு மாறியிருப்பதாக கூறப்படுகிறது. 

    சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக சிம்ரன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள மேகா ஆகாஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 



    இதுதவிர முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா, சனத் ரெட்டி உள்ளிட்டோரும் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Rajinikanth #MeghaAkash

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் தேசிய விருது நடிகர் ஒருவரும் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth #BobbySimha
    ரஜினி நடிப்பில் `காலா' படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. ரஜினி தற்போது அரசியல் கட்சி தொடங்குவதில் வேலைகளை கவனித்து வருகிறார். விரைவில் கட்சிப் பெயர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதற்கிடையே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். காலா ரிலீசுக்கு பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படும் நிலையில், படத்தில் இடம்பெறும் கலைஞர்கள் தேர்வு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று படக்குழு அறிவித்துள்ளது. 



    மேலும் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பதாகவும், அவருக்கு இந்த படத்தில் ஒரு பலமான வேடம் என்றும் கூறப்படும் நிலையில், படத்தில் தேசிய விருது நடிகர் பாபி சிம்ஹாவும் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மெர்குரி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சனத் ரெட்டியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். படக்குழுவில் யார்? யார்? இடம்பெற்றுள்ளார்கள் என்று அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். #Rajinikanth #BobbySimha
    ×