என் மலர்
நீங்கள் தேடியது "குழந்தை பேறு"
- ஒரு குழந்தை பிறந்த பின்னர் இரண்டாவது முறை மகப்பேறு அடையாத நிலையை இரண்டாம்பட்ச குழந்தையின்மை என்று கூறப்படுகிறது.
- உடல் பருமன் இருந்தால் அதைக் குறைப்பதற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
குழந்தையின்மை என்பது, திருமணமான தம்பதியர் தொடர்ந்து ஒரு வருடம் தாம்பத்தியத்தில் இருந்தும் மகப்பேறு அடையாத நிலையாகும். இதை முதன்மை குழந்தைப் பேறின்மை என்றும், ஒரு குழந்தை பிறந்த பின்னர் இரண்டாவது முறை மகப்பேறு அடையாத நிலையை இரண்டாம்பட்ச குழந்தையின்மை என்றும் கூறப்படுகிறது.
காரணம்
உலகம் முழுவதும் குழந்தையில்லா தம்பதிகளின் விகிதம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், நாகரிக வாழ்வியல் முறைகள், தவறான உணவுப்பழக்கம், குறைந்த பட்ச உடற்பயிற்சி கூட இல்லாதிருத்தல், மன அழுத்தம், மனக்கவலைகள். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலிருப்பது, பொருளாதார நெருக்கடிகள், கொஞ்ச நாட்கள் இளமையை நன்கு அனுபவித்துவிட்டு அதன் பின்னர் குழந்தையைப் பற்றி யோசிக்கலாம் என்று கருத்தரித்தலை தள்ளிப்போடுதல், மருத்துவர் ஆலோசனையின்றி கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவது, ஆண், பெண் இனப்பெருக்க மண்டல பிரச்சனைகள் உள்பட குழந்தையின்மைக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.
ஆண்களுக்கான உடலியல் பிரச்சனை
அசூஸ்பெர்மியா (விந்தணுக்கள் இல்லாத நிலை), ஏஸ்பெர்மியா (விந்து நீரே வெளியாகாமல் இருப்பது), ஒலிகோஸ்பெர்மியா (விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவு), அஸ்தினோஸ்பெர்மியா (விந்தணுக்களின் இயக்க குறைபாடு), டெரடோஸ்பெர்மியா (விந்தணுக்களின் அமைப்பில் ஏற்படும் குறைபாடு), ஹைபோஸ்பெர்மியா (விந்தணுக்களின் அளவு குறைபாடுகள்), நெக்ரோசூஸ்பெர்மியா (விந்து நீரில் உயிருள்ள விந்தணுக்கள் இல்லாத நிலை), தாம்பத்திய குறைபாடுகள் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு.
பெண்களுக்கான உடலியல் பிரச்சனை
சினைப்பை நீர்க்கட்டிகள், கருப்பை தசை கட்டிகள், எண்டோமெட்ரியோசிஸ், அடினோமயோமா, சினைப்பாதை அடைப்புகள், புரோஜஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன், புரோலாக்டின், ஆன்டி முல்லரின் ஹார்மோன் போன்றவைகளின் சீரற்ற செயல்பாடுகள்.
சித்த மருத்துவம்
சித்த மருத்துவத்தில் குழந்தைப் பேறின்மை நீங்கி கருத்தரிக்க உதவும் சித்த மருத்துவக் குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. இதை சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்துவது நல்லது.
பெண்களுக்கு
* மாதவிடாய் காலங்களில் அரசமரத் தளிர் இலைகளை அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கரு உண்டாகும். இதை உடல் ரீதியான காரணம் இல்லாமல் மகப்பேறு தாமதமடையும் ஏராளமான பெண்களுக்கு அனுபவ ரீதியாக பலன் தந்துள்ளது.
* மாதவிடாய் ஒழுங்காக வருவதற்கு அசோகப்பட்டை, முள்முருக்கு பூ, கருஞ்சீரகம், மரமஞ்சள், சதகுப்பை, சோற்றுக் கற்றாழை போன்ற மூலிகை மருந்துகள் நற்பலனைத் தரும்.
* விஸ்ணுகிரந்தி செடியை பொடி செய்து மாதவிலக்கு வந்த முதல் மூன்று நாட்கள் வெந்நீரில் சாப்பிட்டு வர மகப்பேறு உண்டாகும்.
* புத்திரச் சீவி விதையை பொடி செய்து காலை, இரவு இருவேளை தேனில் கலந்து சாப்பிட்டால் குழந்தைப்பேறு உண்டாகும்.
ஆண்களுக்கு
* முருங்கை விதை, வாதுமை விதைகள், நெருஞ்சில் விதை, நீர்முள்ளி விதை, ஆலம் விதை, பூனைக்காலி விதை, முள்ளங்கி விதை போன்றவை விந்தணுக்களை அதிகரிக்கும்.
* விறைப்புத்தன்மை குறைபாடுகள் சீராக, நிலப்பனைக் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, அமுக்கரா கிழங்கு, பூமிசர்க்கரைக் கிழங்கு, சாதிக்காய், சாதிபத்திரி, மதனகாமப்பூ, கசகசா, வாலுழுவை போன்ற மூலிகைகள் நல்ல பலனைத் தரும்.
* உடல் பருமன் இருந்தால் அதைக் குறைப்பதற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆண், பெண் இருவரும் தினமும் ஹெகல் பயிற்சி செய்து வர நல்ல பலன் கிடைக்கும். அதிக கலோரி ஆற்றலைத் தரும் இனிப்பு வகைகள், பேக்கரி உணவுகள், நொறுக்குத் தீனிகள் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* மன அழுத்தம், மன உளைச்சல், மனக்கவலை இன்றி ஒருமித்த உணர்வுடன், பிரார்த்தனைகளுடன் கணவன்-மனைவி சேரும்போது, இல்லத்தில் துள்ளி விளையாட பிள்ளைச் செல்வம் பிறக்கும்.
- ஈசன் தன் மேனியின் ஒரு பாதியை நாராயணருக்கு தந்தார். எனவே அம்மன் ஈசனை மணம் புரிய முடியவில்லை.
- சங்கர நாராயணர் சன்னதியில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது சங்கரன்கோவில். திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஒரு சிவஸ்தலம். ஈஸ்வரன் திருநாமம் சங்கரலிங்கம். அம்மன் திருநாமம் கோமதி. அம்மனுக்கு இன்னொரு திருநாமம் ஆவுடை அம்பாள். அரசு ஆவணங்களில் இந்த ஊர் பெயர் சங்கர நைனார் கோவில் என்று தான் உள்ளது. காலப்போக்கில் மருவி சங்கரன்கோவில் என்று தற்பொழுது அறியப்படுகிறது.
மதுரை ஆண்ட உக்கிரமபாண்டிய மன்னரால் பதினொன்றாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோவில் இது. இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு இங்கு சங்கரநாராயணன் சன்னதி உள்ளது. சிவபெருமானும் விஷ்ணுவும் சரிபாதியாக அமைந்துள்ள சன்னதி இது. லிங்கோத்பவர் தோன்றிய புற்று இந்த சுவாமி சன்னதியில் வட மேற்கு பகுதியில் காணலாம்.
சுவாமி கோவிலில் யோக நரசிம்மருக்கும் பிரம்மாவுக்கும் தனி சன்னதிகள் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூவரும் எழுந்தருளியுள்ள ஸ்தலம் சங்கரன்கோவில்.
தல வரலாறுபடி ஆடி மாதம் கோமதி அம்மன் புன்னைவனத்தில் தவம் செய்தாள். ஆனால் ஈசன் தன் மேனியின் ஒரு பாதியை நாராயணருக்கு தந்தார். எனவே அம்மன் ஈசனை மணம் புரிய முடியவில்லை. அம்மன் ஐப்பசியில் மீண்டும் தவம் இருந்து சங்கரலிங்க சுவாமியை மணம் புரிந்தார் என்பது ஸ்தல புராணம். எனவே தான் இந்த கோவிலில் ஆடி தபசும் ஐப்பசி தபசும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
கோமதி அம்மன் சன்னதியில் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை உள்ளது. சங்கர நாராயணர் சன்னதியில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதில்லை. இந்த கோவிலில் தினமும் ஏழு கால பூஜை நடைபெறுகிறது. அர்த்த ஜாம பூஜையின்போது அம்மன் சன்னதியில் பால் நிவேதனம் செய்யப்படுகிறது. அந்த பால் பருகினால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் அருளுகிறாள் அன்னை கோமதி. இங்குள்ள புற்றுமண் சகல நோய்களை தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.
- நம் வீட்டு பெண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் மூலம் வற்றாத செல்வம் உண்டாகும்.
- இந்த திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசிக்க திருமணம் கூடிவரும்.
பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக் கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும்.
நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபுரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும்.
தெய்வத்திருமணங்களை தரிவிப்பதே நம் வீட்டில் மங்கள விழாக்கள் நடக்க வேண்டியதை நாம் சிந்திப்பதற்காக அமைந்தவைகள் ஆகும்.
இந்த திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசிக்க திருமணம் கூடிவரும்.
இறைவன் அவதரித்த ஆராட்டு விழாக்களை இன்று நினைப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
பங்குனி உத்திரம் விரதம் இருந்து நாராயணர் லட்சுமிதேவியை அடைந்ததைப் போல்
நம் வீட்டு பெண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் மூலம் வற்றாத செல்வம் உண்டாகும்.
கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள்.
கல்வியும், செல்வமும் சேர்வதன் மூலம் சிறந்த தொழில் அதிபர்களாகவும், சிறந்த வேலையை பெறுபவர்களாகவும் நாம் அமைகின்றோம்.
லாபம் பெருகும், நிம்மதி தொடரும். உத்யோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன்
சொந்தங்களின் அனுசரனையும் அமைந்து குடும்ப ஒற்றுமையுடன், குடும்ப பாரம்பரிய ஒற்றுமையும் உண்டாகும்.
- வேலையில்லாத ஆண்களை குறி வைத்து பேஸ்புக் மூலம் ஒரு கும்பல் பணம் மோசடியில் ஈடுபட்டு வருகிறது.
- சமூக வலைதள பயனர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
புதுடெல்லி:
டிஜிட்டல் மயமாகி விட்ட இன்றைய காலத்தில் இணையதளம் மூலமாக நூதன முறைகளில் பல்வேறு மோசடிகளும் அரங்கேறிய வண்ணம் உள்ளன.
அரசின் உதவித்தொகை பெற்று தருகிறோம், லிங்கை தொட்டால் பரிசு என்பது உள்பட பல்வேறு வகைகளில் ஆசை காட்டி மக்களிடம் பணத்தை மோசடி பேர்வழிகள் அபேஸ் செய்கிறார்கள்.
இது தொடர்பாக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தும், டிஜிட்டல் மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆனாலும் ஆசைகாட்டி பணம் பறிப்பவர்களிடம் படிக்காத ஏழைகள் முதல் படித்தவர்கள் வரை ஏமாறும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் வேலையில்லாத ஆண்களை குறி வைத்து பேஸ்புக் மூலம் ஒரு கும்பல் பணம் மோசடியில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பேஸ்புக்கில் பரவும் சில வீடியோக்களில் இளம்பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி, குழந்தைபேறு இல்லாத பெண்களை 3 மாதங்களுக்குள் கர்ப்பமாக்கும் ஆண்களுக்கு ரூ.20 லட்சம் வரை ரொக்கப்பரிசு வழங்கப்படும் என ஆசை காட்டுகின்றனர்.
இதை பார்க்கும் வேலையில்லாத இளைஞர்கள் பண ஆசையில் அந்த வீடியோவில் இருக்கும் எண்களை தொடர்பு கொள்ளும் போது மோசடி காரர்கள் அந்த வாலிபர்களிடம் ஆசை ஆசையாக பேசுவார்கள். அதாவது, எங்களது கார் டிரைவர் உங்களை ஓட்டலுக்கு அழைத்து செல்வார். அங்கு நீங்கள் மேடமை சந்திப்பீர்கள். நீங்கள் மேடத்துடன் உடலுறவு கொண்டு அவர்களை கர்ப்பம் தரிக்க வைத்தால் ரூ.20 லட்சம் கிடைக்கும். கர்ப்பம் தரிக்க முடியாவிட்டாலும் உங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என கூறுகிறார்கள்.
இதை நம்பிய வாலிபர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்தால் உடனே இந்த வேலைக்கான அடையாள அட்டைக்கு ரூ.999 கட்டணம் செலுத்த வேண்டும் என ஆரம்பிப்பார்கள். தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி அந்த வாலிபர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் வரை பணத்தை கறக்கிறார்கள்.
பின்னர் தொடர்பு எண்ணை மாற்றி விட்டு இளைஞர்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது.
மத்திய பிரதேசம், அரியானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வேலையில்லாத இளைஞர்களை குறி வைத்து நடத்தப்படும் இந்த நூதன மோசடியில் ஏராளமான இளைஞர்கள் பணத்தை இழந்துள்ளனர். அரியானா மாநிலத்தின் ஹிசார் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 2 மாதங்களுக்குள் இந்த கும்பலிடம் ரூ.1 லட்சம் வரை இழந்துள்ளார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர் ரூ.1 லட்சம் வரை இழந்துள்ளார். இந்த மோசடி கும்பல் பேஸ்புக்கில் 9 வகையான கணக்குகளை வைத்துள்ளனராம். அதில், 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதுபோன்று பெண்களை கர்ப்பமாக்கினால் பணம், பரிசு என ஆசை காட்டி மோசடி செய்ததாக பீகாரை சேர்ந்த 8 பேர் கும்பலை ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போலீசார் கைது செய்திருந்தனர்.
அதன் பிறகு சில மாதங்கள் இது போன்ற மோசடிகள் ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நூதன மோசடிகள் அரங்கேறி வருகிறது.
எனவே சமூக வலைதள பயனர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.






