என் மலர்
நீங்கள் தேடியது "Child birth"
- குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- சீனாவில் ஒரு குழந்தைக் கொள்கை10 ஆண்டுகளுக்கு முன்பு கைவிட்டது.
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதனால் சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருகிறது.
இதையடுத்து குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குழந்தை பிறப்பை அதிகரிக்க பல சலுகைகளை அறிவித்தது. இருந்த போதிலும் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை.
இந்த நிலையில் மேலும் ஒரு திட்டத்தை சீன அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.44 ஆயிரம்) மானியம் வழங்கப்படும் சீன அர சாங்கம் அறிவித்தது. இந்த நிதி குழந்தையின் 3 வயது வரை வழங்கப்படும். அதன் படி ஒரு குழந்தைக்கு ரூ.1.30 லட்சம் மானியம் வழங்கப் படும்.
மேலும் 2022 மற்றும் 2024ம் ஆண்டுக்கு இடையில் பிறந்த குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் பகுதியளவு நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயன் அடையும். குழந்தைகளை வளர்ப்பதற்கான நிதிச் சுமையைக் குறைக்க உதவும். இளம் தம்பதிகளின் கருவுறுதல் கவலைகளைத் தணிக்கும் என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரி வித்துள்ளது.
சீனாவில் ஒரு குழந்தைக் கொள்கை10 ஆண்டுகளுக்கு முன்பு கைவிட்டது. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளில் அதன் மக்கள்தொகை தொடர்ந்து சரிந்து வருகிறது.
- ஒரு குழந்தை பிறந்த பின்னர் இரண்டாவது முறை மகப்பேறு அடையாத நிலையை இரண்டாம்பட்ச குழந்தையின்மை என்று கூறப்படுகிறது.
- உடல் பருமன் இருந்தால் அதைக் குறைப்பதற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
குழந்தையின்மை என்பது, திருமணமான தம்பதியர் தொடர்ந்து ஒரு வருடம் தாம்பத்தியத்தில் இருந்தும் மகப்பேறு அடையாத நிலையாகும். இதை முதன்மை குழந்தைப் பேறின்மை என்றும், ஒரு குழந்தை பிறந்த பின்னர் இரண்டாவது முறை மகப்பேறு அடையாத நிலையை இரண்டாம்பட்ச குழந்தையின்மை என்றும் கூறப்படுகிறது.
காரணம்
உலகம் முழுவதும் குழந்தையில்லா தம்பதிகளின் விகிதம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், நாகரிக வாழ்வியல் முறைகள், தவறான உணவுப்பழக்கம், குறைந்த பட்ச உடற்பயிற்சி கூட இல்லாதிருத்தல், மன அழுத்தம், மனக்கவலைகள். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலிருப்பது, பொருளாதார நெருக்கடிகள், கொஞ்ச நாட்கள் இளமையை நன்கு அனுபவித்துவிட்டு அதன் பின்னர் குழந்தையைப் பற்றி யோசிக்கலாம் என்று கருத்தரித்தலை தள்ளிப்போடுதல், மருத்துவர் ஆலோசனையின்றி கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவது, ஆண், பெண் இனப்பெருக்க மண்டல பிரச்சனைகள் உள்பட குழந்தையின்மைக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.
ஆண்களுக்கான உடலியல் பிரச்சனை
அசூஸ்பெர்மியா (விந்தணுக்கள் இல்லாத நிலை), ஏஸ்பெர்மியா (விந்து நீரே வெளியாகாமல் இருப்பது), ஒலிகோஸ்பெர்மியா (விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவு), அஸ்தினோஸ்பெர்மியா (விந்தணுக்களின் இயக்க குறைபாடு), டெரடோஸ்பெர்மியா (விந்தணுக்களின் அமைப்பில் ஏற்படும் குறைபாடு), ஹைபோஸ்பெர்மியா (விந்தணுக்களின் அளவு குறைபாடுகள்), நெக்ரோசூஸ்பெர்மியா (விந்து நீரில் உயிருள்ள விந்தணுக்கள் இல்லாத நிலை), தாம்பத்திய குறைபாடுகள் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு.
பெண்களுக்கான உடலியல் பிரச்சனை
சினைப்பை நீர்க்கட்டிகள், கருப்பை தசை கட்டிகள், எண்டோமெட்ரியோசிஸ், அடினோமயோமா, சினைப்பாதை அடைப்புகள், புரோஜஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன், புரோலாக்டின், ஆன்டி முல்லரின் ஹார்மோன் போன்றவைகளின் சீரற்ற செயல்பாடுகள்.
சித்த மருத்துவம்
சித்த மருத்துவத்தில் குழந்தைப் பேறின்மை நீங்கி கருத்தரிக்க உதவும் சித்த மருத்துவக் குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. இதை சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்துவது நல்லது.
பெண்களுக்கு
* மாதவிடாய் காலங்களில் அரசமரத் தளிர் இலைகளை அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கரு உண்டாகும். இதை உடல் ரீதியான காரணம் இல்லாமல் மகப்பேறு தாமதமடையும் ஏராளமான பெண்களுக்கு அனுபவ ரீதியாக பலன் தந்துள்ளது.
* மாதவிடாய் ஒழுங்காக வருவதற்கு அசோகப்பட்டை, முள்முருக்கு பூ, கருஞ்சீரகம், மரமஞ்சள், சதகுப்பை, சோற்றுக் கற்றாழை போன்ற மூலிகை மருந்துகள் நற்பலனைத் தரும்.
* விஸ்ணுகிரந்தி செடியை பொடி செய்து மாதவிலக்கு வந்த முதல் மூன்று நாட்கள் வெந்நீரில் சாப்பிட்டு வர மகப்பேறு உண்டாகும்.
* புத்திரச் சீவி விதையை பொடி செய்து காலை, இரவு இருவேளை தேனில் கலந்து சாப்பிட்டால் குழந்தைப்பேறு உண்டாகும்.
ஆண்களுக்கு
* முருங்கை விதை, வாதுமை விதைகள், நெருஞ்சில் விதை, நீர்முள்ளி விதை, ஆலம் விதை, பூனைக்காலி விதை, முள்ளங்கி விதை போன்றவை விந்தணுக்களை அதிகரிக்கும்.
* விறைப்புத்தன்மை குறைபாடுகள் சீராக, நிலப்பனைக் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, அமுக்கரா கிழங்கு, பூமிசர்க்கரைக் கிழங்கு, சாதிக்காய், சாதிபத்திரி, மதனகாமப்பூ, கசகசா, வாலுழுவை போன்ற மூலிகைகள் நல்ல பலனைத் தரும்.
* உடல் பருமன் இருந்தால் அதைக் குறைப்பதற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆண், பெண் இருவரும் தினமும் ஹெகல் பயிற்சி செய்து வர நல்ல பலன் கிடைக்கும். அதிக கலோரி ஆற்றலைத் தரும் இனிப்பு வகைகள், பேக்கரி உணவுகள், நொறுக்குத் தீனிகள் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* மன அழுத்தம், மன உளைச்சல், மனக்கவலை இன்றி ஒருமித்த உணர்வுடன், பிரார்த்தனைகளுடன் கணவன்-மனைவி சேரும்போது, இல்லத்தில் துள்ளி விளையாட பிள்ளைச் செல்வம் பிறக்கும்.
- கள்ளக்காதலன் மூலம் தனக்கு பிறந்த குழந்தையை எப்படி வெளியுலகிற்கு காட்டுவது? என்று கவலையுற்றார்.
- கொல்லப்பட்ட குழந்தையின் உடலை கடற்கரையில் தோண்டப்பட்ட குழியில் போட்டு மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவ னந்தபுரம் அஞ்சுதெங்கு பகுதியை சேர்ந்தவர் ஜூலி (வயது 40). இவரது கணவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் ஜூலி தனது 15 வயது மகனுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் ஜூலிக்கு வேறொருடருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதனால் ஜூலி கர்ப்பமானார்.
கணவர் இறந்து 12 ஆண்டுகள் தனியாக வாழ்ந்து வரும் நிலையில், கள்ளக்காதலனால் தான் கர்ப்பமானதை, கள்ளக்காதலை போன்று ஜூலி யாரிடமும் கூறாமல் ரகசியமாக வைத்துள்ளார். நாட்கள் செல்லச்செல்ல அவரது வயிறு பெரிதாக தொடங்கியது.
அதன்பிறகும் அவர் தான் கர்ப்பமாக இருப்பதை யாரிடமும தெரிவிக்கவில்லை. அவர் ரகசியமாக மருத்துவரிடம் உடல்நிலையை பரிசோதித்தபடி இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜூலிக்கு குழந்தை பிறந்திருக்கிறது.
கள்ளக்காதலன் மூலம் தனக்கு பிறந்த குழந்தையை எப்படி வெளியுலகிற்கு காட்டுவது? என்று கவலையுற்றார். ஆகவே அவர் அந்த குழந்தையை கொலை செய்து புதைத்துவிட திட்டமிட்டார். அதன்படி அங்குள்ள கடற்கரைக்கு பிறந்த குழந்தையை எடுத்துச்சென்றிருக்கிறார்.
அங்கு குழந்தையின் மூக்கு மற்றும் வாயை பொத்தி மூச்சு திணற வைத்து கொடூரமாக கொலை செய்தார். குழந்தை பிறந்த சில மணித்துளிகளிலேளே இந்த கொடூர செயலில் ஜூலி ஈடுபட்டுள்ளார். கொல்லப்பட்ட குழந்தையின் உடலை கடற்கரையில் தோண்டப்பட்ட குழியில் போட்டு மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் கடற்கரையில் ஜூலி புதைத்த குழந்தையின் உடல் வெளியே வந்துவிட்டது. நாய்கள் குழந்தையின் உடலை கடித்து குதறியபடி இருந்தன. இதனைப்பார்த்த சிலர் குழந்தை பிணம் கிடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் குழந்தை உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் குழந்தை மூச்சை திணறடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. குழந்தையை கொன்றது யார்? என்று துப்பு துலக்கும் நடவடிக்கை யில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
அப்போது தான், ஜூலிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்ததை போலீ சார் கண்டறிந்தனர். இதை யடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் தனக்கு குழந்தையே பிறக்க வில்லை, அந்த குழந்தைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் ஜூலி வீடு உள்ள பகுதியை சேர்ந்த சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஜூலி கர்ப்பமாக இருந்ததும், அங்குள்ள ஒரு மருத்துவ மனையில் குழந்தை பெற்றதும் தெரியவந்தது. அக்கம்பக்கத்தினர் கூறிய தகவல்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை தெரிவித்து ஜூலியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவர் தனக்கு குழந்ைதை பிறந்ததையும், அதனை மூச்சு திணறடித்து கொன்று கடற்கரையில் புதைத்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஜூலியை போலீசார் கைது செய்தனர்.
கணவர் இறந்து விதவை யாக வாழ்ந்து வந்தநிலையில், கள்ளக்காதலன் மூலம் கருவுற்று குழந்தை பெற்றது வெளியே தெரிந்தால் தன்னை அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கேவலமாக பேசுவார்கள் என்பதால், கர்ப்பமானதையும், குழந்தை பெற்றதையும் மறைத்துவிட்டதாகவும், பெற்ற குழந்தையை பிறந்த சிறிது நேரத்தி லேயே கொன்று புதைத்து விட்டதாகவும் போலீசாரிடம் ஜூலி தெரிவித்திருக்கிறார்.
கள்ளக்காதலன் மூலம் பிறந்த குழந்தையை பெற்ற தாயே கொடுரமாக கொன்று புதைத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






