search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோமதி அம்மன்"

    • வடக்கு ரத வீதியில் உள்ள மண்டகப்படியில் இருந்து மண்டகப்படிதாரர்கள் கிளம்பி கோவிலுக்கு சென்றனர்.
    • விழாவை முன்னிட்டு கோவிலில் கோமதி அம்மனுக்கு அனுக்ஞை பூஜை நடந்தது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மண்டகப்படி தாரர்களான கம்மவார் நாயுடு மகாஜன சங்கம் சார்பில் கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று சுருள் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. வடக்கு ரத வீதியில் உள்ள மண்டகப்படியில் இருந்து கிளம்பி கோவிலுக்கு சென்றனர்.

    பின்னர் கோவிலில் கோமதி அம்மனுக்கு அனுக்ஞை பூஜை நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ, கம்மவார் நாயுடு மகாஜன சங்க மண்டல தலைவர் சரஸ்வதி ஓட்டல் சின்னசாமி, நகர தலைவர் பொறியாளர் அசோக்குமார், செயலாளர் வெங்கடபதி, பொருளாளர் சங்கரநாராயணன், ஆர்.வி.எஸ். துரைராஜ், டாக்டர்கள் சுப்பாராஜ், போத்திராஜ், சாந்தி, அம்சவேணி, வக்கீல்கள் மாதவரம், புஷ்பராஜ், பிரதாப் மற்றும் வக்கீல்கள், சமுதாய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த சமுதாய மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஈசன் தன் மேனியின் ஒரு பாதியை நாராயணருக்கு தந்தார். எனவே அம்மன் ஈசனை மணம் புரிய முடியவில்லை.
    • சங்கர நாராயணர் சன்னதியில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதில்லை.

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது சங்கரன்கோவில். திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஒரு சிவஸ்தலம். ஈஸ்வரன் திருநாமம் சங்கரலிங்கம். அம்மன் திருநாமம் கோமதி. அம்மனுக்கு இன்னொரு திருநாமம் ஆவுடை அம்பாள். அரசு ஆவணங்களில் இந்த ஊர் பெயர் சங்கர நைனார் கோவில் என்று தான் உள்ளது. காலப்போக்கில் மருவி சங்கரன்கோவில் என்று தற்பொழுது அறியப்படுகிறது.

    மதுரை ஆண்ட உக்கிரமபாண்டிய மன்னரால் பதினொன்றாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோவில் இது. இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு இங்கு சங்கரநாராயணன் சன்னதி உள்ளது. சிவபெருமானும் விஷ்ணுவும் சரிபாதியாக அமைந்துள்ள சன்னதி இது. லிங்கோத்பவர் தோன்றிய புற்று இந்த சுவாமி சன்னதியில் வட மேற்கு பகுதியில் காணலாம்.

    சுவாமி கோவிலில் யோக நரசிம்மருக்கும் பிரம்மாவுக்கும் தனி சன்னதிகள் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூவரும் எழுந்தருளியுள்ள ஸ்தலம் சங்கரன்கோவில்.

    தல வரலாறுபடி ஆடி மாதம் கோமதி அம்மன் புன்னைவனத்தில் தவம் செய்தாள். ஆனால் ஈசன் தன் மேனியின் ஒரு பாதியை நாராயணருக்கு தந்தார். எனவே அம்மன் ஈசனை மணம் புரிய முடியவில்லை. அம்மன் ஐப்பசியில் மீண்டும் தவம் இருந்து சங்கரலிங்க சுவாமியை மணம் புரிந்தார் என்பது ஸ்தல புராணம். எனவே தான் இந்த கோவிலில் ஆடி தபசும் ஐப்பசி தபசும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    கோமதி அம்மன் சன்னதியில் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை உள்ளது. சங்கர நாராயணர் சன்னதியில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதில்லை. இந்த கோவிலில் தினமும் ஏழு கால பூஜை நடைபெறுகிறது. அர்த்த ஜாம பூஜையின்போது அம்மன் சன்னதியில் பால் நிவேதனம் செய்யப்படுகிறது. அந்த பால் பருகினால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் அருளுகிறாள் அன்னை கோமதி. இங்குள்ள புற்றுமண் சகல நோய்களை தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.

    ×