search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Steve Waugh"

    • உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கவலை இல்லை.
    • நான் நியூசிலாந்தில் இருந்திருந்தால் இந்த டெஸ்ட் தொடரிலேயே விளையாடமாடடேன்.

    சிட்னி:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு சென்று 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இதற்கான தென்ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம், ரபடா, யான்சென், இங்கிடி, கேஷவ் மகராஜ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. அந்த சமயத்தில் உள்நாட்டில் தென்ஆப்பிரிக்க 20 ஓவர் லீக் போட்டி நடப்பதால் அதற்கான ஒப்பந்தத்தில் முன்னணி வீரர்கள் இருப்பதால், தேசிய அணியை தவிர்த்துள்ளனர். இதனால் இதுவரை சர்வதேச போட்டியில் ஆடாத நீல் பிராண்ட் என்ற வீரர் தலைமையில் 2-ம் தர அணி நியூசிலாந்துக்கு அனுப்பப்படுகிறது.

    இதற்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கவலை இல்லை. நான் நியூசிலாந்தில் இருந்திருந்தால் இந்த டெஸ்ட் தொடரிலேயே விளையாடமாடடேன். முன்னணி வீரர்கள் இன்றி விளையாடும் போட்டி எதற்கு என்று தெரியவில்லை.

    நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு அவர்கள் உரிய மரியாதை கொடுக்காத போது, எதற்காக விளையாட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் அழிவை நோக்கி செல்கிறதா என்று கேட்க வைக்கிறது. ஐ.சி.சி மற்றும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இதில் ஐ.சி.சி.யோ அல்லது சம்பந்தப்பட்டவர்களோ விரைவில் தலையிடாவிட்டால் டெஸ்ட் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்டாகவே இருக்காது. ஏனெனில் நீங்கள் உங்களது திறமையை மிகச்சிறந்த வீரர்களுக்கு எதிராக சோதிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடும். பெரிய கிரிக்கெட் வாரியங்கள் தங்களது வீரர்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஊக்குவிக்க வேண்டும்.' என்றார்.

    உலகக்கோப்பையில் இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் ஜொலிப்பார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் கணித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இங்கிலாந்து  ஆடுகளங்கள் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், சுமார் 55 போட்டிகளில் 45-க்கும் மேற்பட்டதில் 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் முன்னணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு அணிகளும் தலா 9 ஆட்டங்களில் விளையாடும் என்பதால் முன்னணி பேட்ஸ்மேன்கள் சர்வ சாதாரணமாக 500 ரன்களை தாண்டுவார்கள்.



    இந்நிலையில் ரன் குவிப்பில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் ஆகியோர் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் கூறியுள்ளார். #AUSvIND #SteveWaugh

    சிட்னி:

    வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. இந்த முறையாவது தொடரை வெல்லுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இதனால் இந்த டெஸ்ட் தொடர் மீது அதிக எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு முன்னாள் வீரர்களும் இந்த டெஸ்ட் போட்டித் தொடர் குறித்து தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் கணித்துள்ளார். இது தொடர்பாக இணைய தளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய அணி தன்னை நல்ல முறையில் தயார் படுத்தி உள்ளது. இதனால் இந்திய அணிக்கு கனிசமான வாய்ப்பு இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் உண்மையிலேயே மிகுந்த பரபரப்புடன் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    விராட்கோலி மிக சிறந்த பேட்ஸ்மேன். தெண்டுல்கர், லாராவை போன்று அவரும் மிகப் பெரிய வீரர்.


    இந்த டெஸ்ட் தொடரில் யார் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    இவ்வாறு ஸ்டீவ்வாக் கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் கூறியதாவது:-

    விராட்கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. இதனால் இந்தியா மிகப் பெரிய ஸ்கோரை குவிக்கும். ஆஸ்திரேலிய பேட்டிங்குக்கு சவால் விடும் வகையில் இருக்கும்.

    அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. கும்மின்ஸ், ஸ்டார்க், ஹாசல வுட் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர்கள். அவர்கள் திறமை வாய்ந்த வேகப்பந்து வீரர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீரர் லாசன் கூறும் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. 3 வேகப்பந்து வீரர்கள், ஒன்று அல்லது 2 சுழற்பந்து வீரர்களுடன் இந்திய அணி களம் இறங்கும் என்றார். #AUSvIND #SteveWaugh

    டெண்டுல்கர், லாரா போன்று விராட் கோலியும் சிறந்த வீரர் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் புகழாரம் சூட்டியுள்ளனர். #AUSvIND #SteveWaugh #BrianLara #SachinTendulkar #ViratKohli
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் இணைய தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    விராட் கோலி ஒரு சிறந்த வீரர். அவர் மிகப்பெரிய வெற்றியை நேசிக்கிறார். டெண்டுல்கர், லாரா போன்றே விராட் கோலியும் சிறந்த வீரர். அபாயகரமான பேட்ஸ்மேன். சிறந்த பேட்ஸ்மேனாக உருவாகி உள்ளார்.



    தற்போதுள்ள இந்திய அணி கடந்த 15 ஆண்டுகளில் சிறந்த அணி என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுவதை என்னால் ஏற்க இயலாது. நான் விளையாடிய இந்திய அணிகளை விட தற்போதுள்ள அணி சிறந்ததாக கருதவில்லை. வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க அவர் அவ்வாறு கூறி இருக்கலாம். இது போன்ற கருத்துக்களை அவர் தவிர்த்து இருக்கலாம்.

    ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலானதே தற்போதுள்ள இந்திய அணி நல்ல தயார் நிலையில் ஆஸ்திரேலியாவை சந்திக்க இருக்கிறது. இதனால் இந்த தொடர் பரபரப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஸ்டீவ்வாக் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 1999-ல் உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #AUSvIND #SteveWaugh #BrianLara #SachinTendulkar #ViratKohli
    கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை தவிர்த்து மற்ற அனைத்து சாதனைகளையும் விராட் கோலி முறியடித்து விடுவார் என்று கருதுவதாக ஸ்டீவ்வாக் தெரிவித்தார். #SteveWaugh #ViratKohli #DonBradman
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டை நேசித்து விளையாடுகிறார். தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்ற வெறி, உத்வேகம், ஆர்வம், ஆக்ரோஷம், உடல்தகுதி எல்லாமே அவரிடம் இருக்கிறது. கடுமையான காயங்கள் ஏதும் அடையாமல் இருந்தால் அவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை தவிர்த்து மற்ற அனைத்து சாதனைகளையும் முறியடித்து விடுவார் என்று கருதுகிறேன்.



    டெஸ்ட் கிரிக்கெட்டில் பிராட்மேன் வைத்துள்ள சராசரியை (99.94) அவரால் எட்ட முடியாது’ என்றார். 29 வயதான விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 73 டெஸ்டில் ஆடி 24 சதங்கள் உள்பட 6,331 ரன்களும் (சராசரி 54.57), 216 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 38 சதங்கள் உள்பட 10,232 ரன்களும் (சராசரி 59.53) குவித்துள்ளார்.

    சூப்பர் பார்மில் உள்ள விராட் கோலி மூன்று வடிவிலான போட்டிகளையும் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) சேர்த்து கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மட்டும் 7,824 ரன்கள் குவித்து, இந்த காலக்கட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரராக திகழ்கிறார். அடுத்த இடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (6,371 ரன்) உள்ளார். #SteveWaugh #ViratKohli #DonBradman
    ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் மிகவும் சுயநலவாதி என்று சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே குற்றம்சாட்டியுள்ளார். #Warne #SteveWaugh
    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே. இவர் புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். விரைவில் வெளிவரக்கூடிய ‘No Spin’ என்ற இந்த புத்தகத்திலும் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கை வசைபாடியுள்ளார். அவர் அந்த புத்தகத்தில் கூறி இருப்பது பற்றி டைம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த புத்தகத்தில் வார்னே கூறியிருப்பதாவது:-

    ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான ஸ்டீவ் வாக் மிகப்பெரிய சுயநலவாதி. அவரை போன்ற சுயநலவாதி வேறு யாருமில்லை. 1999-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது நான் அணிக்கு துணை கேப்டனாக இருந்தேன். முதல் 3 டெஸ்ட் போட்டியில் எனது பந்துவீச்சு சுமாராக இருந்தது. இதனால் 4-வது டெஸ்டில் என்னை அணியில் இருந்து ஸ்டீவ் வாக் நீக்கினார்.

    ஆலன் பார்டர் என் மீது நம்பிக்கை வைத்து இருந்தார். ஆனால் அவர் நீக்கியது ஏமாற்றமாக இருந்தது. முக்கியமான போட்டியில் அவர் என்னை நம்பவில்லை. ஸ்டீவ் வாக்கை நான் நல்ல நண்பராக கருதியவன். நான் எப்போதுமே அவருக்கு ஆதரவாக இருந்துள்ளேன். ஆனால் அந்த இடத்தில் என்னை கைவிட்டு விட்டார். இதனால் நான் மனம் உடைந்து போனேன்.

    முதல் 3 டெஸ்ட்டில் ஸ்டீவ் வாக்கின் கேப்டன் ஷிப் மற்றும் பீல்டிங் வியூகம் குறித்து சில வீரர்கள் என்னிடம் விமர்சனம் செய்தனர். நான் அப்போதும் கூட ஸ்டீவ் வாக்குக்கு ஆதரவாகவே பதில் அளித்தேன். ஆனால் அவர் எனக்கு கைமாறு செய்யவில்லை.

    கேப்டன் கனவுடன் ஸ்டீவ் வாக் முற்றிலும் வேறு ஒரு மனிதராகி விட்டார். அவர் என்னை நீக்கியதால் அல்ல. நான் சரியாக ஆடவில்லை எனில் நீக்குவது பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் வெறும் ஆட்டம் மட்டுமே அங்கு வி‌ஷயமில்லை. அதையும் தாண்டி சில வி‌ஷயங்கள் இருந்தன என்பதுதான் முக்கியம்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது டெஸ்டில் என்னை நீக்கியதால் ஸ்டீவ் வாக்கை பழி தீர்க்க நினைத்தேன்.



    1999 உலக கோப்பையை வென்ற பிறகு இலங்கை சென்றோம். காயம் அடைந்த ஸ்டீவ் வாக் 2-வது டெஸ்டில் ஆட வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்தார். நான் அப்போது பழி தீர்க்க ஆசைப்பட்டேன். அவர் ஆடக்கூடாது என்று நான் நினைத்தேன். ஆனால் ஸ்டீவ் வாக் பக்கம் பயிற்சியாளர் இருந்ததால் அவருக்கு சாதகமாகி விட்டது.

    இவ்வாறு வார்னே தனது புத்தகத்தின் ஒரு பகுதியில் தெரிவித்துள்ளார்.

    ஸ்டீவ்வாக் 1999-ல் ஆஸ்திரேலிய அணிக்கு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    உலகிலேயே சிறந்த கிரிக்கெட் யுக்தியை விராட் கோலி பெற்றுள்ளார் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஸ்டீவாக் கூறியுள்ளார். #ViratKohli
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் அபாரமான ஆட்டததை வெளிப்படுத்தி இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 200 ரன்கள் (149, 51) அடித்தார். கடினமான ஆடுகளத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.

    இங்கிலாந்து தொடருக்கு முன் விராட் கோலி இங்கிலாந்து மண்ணில் விளையாடுவதை வைத்துதான் சிறந்த வீரரா? என்பதை தீர்மானிக்க முடியும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வந்தனர்.

    இந்நிலையில் முதல் சதத்தை பதிவு செய்த விராட் கோலியை தலைசிறந்த வீரர் என்று அனைத்து பத்திரிகைகளும் எழுதி வருகிறது. இந்நிலையில் உலகிலேயே சிறந்த யுக்தியை விராட் கோலி பெற்றுள்ளார் என்று ஸ்டீவ் வாக் புகழாரம் சூட்டியுள்ளார்.

    விராட் கோலி குறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில் ‘‘போட்டி எந்தவொரு நிலையில் இருந்தாலும் அதை விராட் கோலி மீட்டுக்கொண்டு வந்துவிடுவார். உலக கிரிக்கெட்டில் வேறு யாரிடமும் இல்லாத சிறந்த யுக்தியை கோலி பெற்றுள்ளார்.



    விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் சிறந்த யுக்தியை பெற்றுள்ளனர். ஏபி டி வில்லியர்ஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இதனால் விராட் கோலி தலைசிறந்த வீரராக உருவாகியுள்ளார்.

    விராட் கோலி பிரையன் லாரா, தெண்டுல்கர், விவியன் ரிச்சர்ட்ஸ், மியான்தத் மற்றும் போதும் சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழும் வீரரை போல் அதிக நேரம் விளையாட விரும்புகிறார். இது அவரை சிறந்த வீரராக உருவாக்குகிறது’’ என்றார்.
    ×