search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகிலேயே சிறந்த யுக்தியை விராட் கோலி பெற்றுள்ளார்- ஸ்டீவ் வாக் புகழாரம்
    X

    உலகிலேயே சிறந்த யுக்தியை விராட் கோலி பெற்றுள்ளார்- ஸ்டீவ் வாக் புகழாரம்

    உலகிலேயே சிறந்த கிரிக்கெட் யுக்தியை விராட் கோலி பெற்றுள்ளார் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஸ்டீவாக் கூறியுள்ளார். #ViratKohli
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் அபாரமான ஆட்டததை வெளிப்படுத்தி இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 200 ரன்கள் (149, 51) அடித்தார். கடினமான ஆடுகளத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.

    இங்கிலாந்து தொடருக்கு முன் விராட் கோலி இங்கிலாந்து மண்ணில் விளையாடுவதை வைத்துதான் சிறந்த வீரரா? என்பதை தீர்மானிக்க முடியும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வந்தனர்.

    இந்நிலையில் முதல் சதத்தை பதிவு செய்த விராட் கோலியை தலைசிறந்த வீரர் என்று அனைத்து பத்திரிகைகளும் எழுதி வருகிறது. இந்நிலையில் உலகிலேயே சிறந்த யுக்தியை விராட் கோலி பெற்றுள்ளார் என்று ஸ்டீவ் வாக் புகழாரம் சூட்டியுள்ளார்.

    விராட் கோலி குறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில் ‘‘போட்டி எந்தவொரு நிலையில் இருந்தாலும் அதை விராட் கோலி மீட்டுக்கொண்டு வந்துவிடுவார். உலக கிரிக்கெட்டில் வேறு யாரிடமும் இல்லாத சிறந்த யுக்தியை கோலி பெற்றுள்ளார்.



    விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் சிறந்த யுக்தியை பெற்றுள்ளனர். ஏபி டி வில்லியர்ஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இதனால் விராட் கோலி தலைசிறந்த வீரராக உருவாகியுள்ளார்.

    விராட் கோலி பிரையன் லாரா, தெண்டுல்கர், விவியன் ரிச்சர்ட்ஸ், மியான்தத் மற்றும் போதும் சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழும் வீரரை போல் அதிக நேரம் விளையாட விரும்புகிறார். இது அவரை சிறந்த வீரராக உருவாக்குகிறது’’ என்றார்.
    Next Story
    ×