search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sterilite plant"

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது போன்ற மோசடி நாடகத்தில்தான் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது என்று வைகோ தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #SterlitePlant
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2018 மே 22-ம் நாள் ஸ்டெர்லைட்டை எதிர்க்கும் போராட்டங்களை நசுக்கும் நோக்கத்துடன் தமிழக அரசின் காவல்துறை ஈவு இரக்கமின்றி 13 பேரை சுட்டுக்கொன்றது. அதில் 11 பேருக்கு உச்சந்தலையிலும், மார்பிலும் குண்டுகள் பாய்ந்துள்ளன என்று ஆதார பூர்வமாக செய்தி வந்துள்ளது.

    லட்சக்கணக்கான மக்கள் ஆலைக்கு எதிராக எரிமலையாய் சீறியதால் அ.தி.மு.க. அரசு மிகப்பெரிய கபட நாடகத்தை நடத்தியது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் ஆலையை மூடுவதற்குரிய ஆணைகளைப் பிறப்பித்தன.

    2018 டிசம்பர் 15-ந்தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வு அளித்தத் தீர்ப்பு, அமர்வின் முறையான முத்திரைகளோடு வெளி வருவதற்கு முன்பே ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமத்தின் இணைய தளத்தில் பிற்பகல் 1.15 நிமிடத்துக்கே பதிவாகியது அநீதியின் உச்ச கட்டமாகும்.


    தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தினுடைய தீர்ப்பு டிசம்பர் 15-ந்தேதி பிற்பகல் 1.15 நிமிடத்துக்கு வேதாந்தா குழுமத்திற்கு செய்தி வெளியிடும் அமைப்பாக உள்ள அப்பாஸ் பாண்டியா அமைப்பின் மூலம் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது. நீதித்துறை வரலாற்றில், ஸ்டெர்லைட் வழக்கில் நீதி குழிதோண்டி புதைக்கப்பட்டது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது.

    தொடக்கத்திலிருந்தே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவே செயல்பட்டதை உரிய ஆதாரங்களோடு பக்கம் பக்கமாக என்னால் பட்டியலிட முடியும். இப்பொழுதும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு மிக தந்திரமாக தமிழக அரசு ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்த முயலும்.

    சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை டிசம்பர் 21-ந்தேதி ஆணைப் பிறப்பித்துள்ள நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தைத் தற்போது அணுகக்கூடாது; கேவியட் மட்டும் தாக்கல் செய்ய வேண்டும்.

    சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தை அணுகினால் அப்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்துக்குச் செல்லலாம்.

    தமிழக அரசு, சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, ஆலையை மூடுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழக அமைச்சரவையைக் கூட்டி, ஆலையை மூடுவதற்கான காரணங்களை வரிசைப்படுத்தி, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும். அத்துடன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தானும் வழக்குத் தொடுக்க வேண்டும்.

    ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு, “முயலோடும் சேர்ந்து ஓடுவது; அதே வேளையில் வேட்டை நாயுடன் சேர்ந்து விரட்டுவது, தமிழில் ஒரு பழமொழி உண்டு, “பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது”. இந்த மோசடி நாடகத்தில்தான் தமிழக அரசு ஸ்டெர்லைட் பிரச்சனையில் ஈடுபட்டு வருகிறது.

    இவ்வாறு வைகோ கூறி உள்ளார். #MDMK #Vaiko #SterlitePlant
    சம்மன் அனுப்பப்பட்டதால் விஜயபாஸ்கர் குற்றவாளி அல்ல என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #TNMinister #Jayakumar #Vijayabaskar #DMK
    ராயபுரம்:

    ராயபுரத்தில் உள்ள பள்ளியில் மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா கலந்து கொண்டனர்.

    முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் நடைபாதை அமைக்கப்படும். கூட்டணி அமைக்க இது உரிய நேரம் அல்ல. கூட்டணி குறித்து கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். இதுபற்றி ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.

    தமிழகத்தில் தாமரை மலரும் என்று கூறுவது அவர்களது ஆர்வம். இதனை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை இரட்டை இலைதான். மற்றவர்களுக்கு இடம் இல்லை.

    தமிழ் இனத்தை எதிர் காலத்தில் அழிக்க காங்கிரசுடன் தி.மு.க. கைகோர்க்கிறதா? குற்றவாளியை தண்டிக்க வேண்டியது நீதிமன்றம்தான். ஒரு வழக்கில் சம்மன் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். அது பெரிய வி‌ஷயம் அல்ல. சம்மன் அனுப்பியதால் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றவாளி அல்ல.


    ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தி.மு.க.வினர் டீக்கடை, பிரியாணி கடை என்று ஒரு கடை விடாமல் அடாவடியில் ஈடுபடுகிறார்கள்.

    பொழுது விடிந்தால், ஒரு கடை விடாமல் மன்னிப்பு கேட்பதே மு.க.ஸ்டாலினின் வேலையாய் போய்விட்டது. கலைஞர் சிலைத்திறப்பு நிகழ்ச்சிக்கு மின்சாரத்தை சென்னை மாநகராட்சியிடம் இருந்து திருடி எடுத்துள்ளனர். அதற்கு ஆதாரம் உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். (அப்போது அமைச்சர் ஜெயக்குமார் செல்போனில் உள்ள வீடியோ ஆதாரத்தை காண்பித்தார்).

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தி.மு.க. ஆட்சி காலத்தில் என்ன செய்தார்கள்? அவர்கள் பேசுவதை ஏற்கமுடியாது. மூடிய ஆலையை திறக்க வாய்ப்பே இல்லை. உள்ளத்தில் ஒன்று வைத்து உதட்டில் ஒன்று பேசுவது நாங்கள் அல்ல.

    கஜா புயல் நிவாரண தொகையை மத்திய அரசிடம் இருந்து பெற தமிழக அரசு போராடி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Jayakumar #Vijayabaskar #DMK
    ×