search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "state president"

    • போலீசார் தடியடி மற்றும் தண்ணீர் பீய்ச்சியடித்து வன்முறையை கட்டுப்படுத்தினர்.
    • கைது செய்தவர்கள் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் மக்களை நேரில் சென்று சந்தித்து குறைகளை கேட்கும் நவ கேரளா சதாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் நடந்தது. இந்த நிகழ்ச்சியை கண்டித்து கேரள மாநில இளைஞர் காங்கிரசார் மற்றும் மாணவர் காங்கிர சார் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    கடந்த மாதம் 20-ந்தேதி அவர்கள் கேரள தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதனை தொடர்ந்து போலீசார் தடியடி மற்றும் தண்ணீர் பீய்ச்சியடித்து வன்முறையை கட்டுப்படுத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கேரள மாநில எதிர்க்கட்சி தலைவர் சதீசன், எம்.எல்.ஏ.க்கள் ஷாபி பரம்பில், வின் செண்ட், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    போலீசாரின் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியது, பொதுச் சொத்துக்களை நாசம் செய்தது, அதிகாரிகளை தாக்குதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்குகளின் கீழ் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பத்தனம் திட்டா ஆத்தூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். அவரை திருவனந்தபுரம் கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் மக்களை நேரில் சென்று சந்தித்து குறைகளை கேட்கும் நவ கேரளா சதாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் நடந்தது. இந்த நிகழ்ச்சியை கண்டித்து கேரள மாநில இளைஞர் காங்கிரசார் மற்றும் மாணவர் காங்கிர சார் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    கடந்த மாதம் 20-ந்தேதி அவர்கள் கேரள தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதனை தொடர்ந்து போலீசார் தடியடி மற்றும் தண்ணீர் பீய்ச்சியடித்து வன்முறையை கட்டுப்படுத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கேரள மாநில எதிர்க்கட்சி தலைவர் சதீசன், எம்.எல்.ஏ.க்கள் ஷாபி பரம்பில், வின் செண்ட், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    போலீசாரின் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியது, பொதுச் சொத்துக்களை நாசம் செய்தது, அதிகாரிகளை தாக்குதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்குகளின் கீழ் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பத்தனம் திட்டா ஆத்தூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். அவரை திருவனந்தபுரம் கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பிஒய் விஜயேந்திர எடியூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • கடந்த 6 மாதங்களாக கர்நாடகா மாநில புதிய பாஜக தலைவர் நியமனம் செய்யப்படாமல் இருந்தது.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்ததை அடுத்து அம்மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து நளின் குமார் கட்டீல் ராஜினாமா செய்தார்.

    இதைதொடர்ந்து, கடந்த 6 மாதங்களாக கர்நாடகா மாநில புதிய பாஜக தலைவர் நியமனம் செய்யப்படாமல் இருந்தது.

    இதேபோல், கர்நாடக மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரையும் பாஜக நியமிக்கப்படாமல் இருந்தது.

    இந்நிலையில், கர்நாடக மாநில பாஜக புதிய தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பிஒய் விஜயேந்திர எடியூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தந்தையின் சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.

    கர்நாடக தேர்தலில் பாஜக தோல்வியடைந்த நிலையில், புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாநிலத் தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார்.

    உசிலம்பட்டி

    மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு கள்ளர் மாணவ-மாணவிகள் விடுதிகளை மிகவும் சிறுபான்மை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசின் அரசு ஆணை எண் 40-யை ரத்து செய்யக்கோரி தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையினர் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநிலத் தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார்.

    மாநில இணைச் செயலாளர் சவுந்தரபாண்டியன், மாவட்ட தலைவர் பாண்டி, மாவட்ட செயலாளர் அசோக், செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் மலைச்சாமி, மாணவரணி தினேஷ், நிர்வாகிகள் ஆண்டித்தேவர், சோலை ராஜ், பழனி, கண்ணன் முன்னிலை வகித்தனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள சத்ய பால் மாலிக், பா.ஜ.க ஆதரவாளர் தான் என அம்மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்தர் ரெய்னா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir #BJP #SatyaPalMalik #RavinderRaina
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் என்.என் வோஹ்ரா ஆளுநராக இருந்துவந்தார். அவர் சமீபத்தில் நீக்கப்பட்டு, அவரது இடத்துக்கு சத்ய பால் மாலிக் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் அவர் புதிய ஆளுநராக பதவியேற்றார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்தர் மாலிக், முன்னாள் ஆளுநர் என்.என் வோஹ்ரா தனது கருத்தில் நிலையாக இருந்ததால் தான் அவரை மாற்றியதாக தெரிவித்துள்ளார். மேலும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கவர்னர் சத்ய பால் மாலிக் எங்களுடைய ஆதரவாளர்தான் எனவும் ரெய்னா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் மெஹ்பூபா முப்தி தலைமையில் கூட்டணியில் நடைபெற்ற ஆட்சியை பா.ஜ.க தாமே முன்வந்து கலைத்தது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #BJP #SatyaPalMalik #RavinderRaina
    கர்நாடகம் மாநிலத்தின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து குமாரசாமி விடுவிக்கப்பட்டுள்ளார். #SecularJanataDal #StatePresident #Kumaraswamy
    பெங்களூரு:

    மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக தேவே கவுடா செயல்பட்டு வருகிறார். கர்நாடகம் மாநில தலைவராக அவரது மகன் குமாரசாமி இருந்து வந்தார்.

    இதற்கிடையே, சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் குமாரசாமி முதல் மந்திரியாக பதவியேற்றார்.

    இதையடுத்து, அவரது பணிச்சுமையை குறைக்கும் வகையில் மதசார்பற்ற ஜனதா தளத்தின் மாநில தலைவர் பதவியில் இருந்து குமாரசாமியை விடுவித்து தேவே கவுடா இன்று நடவடிக்கை எடுத்துள்ளார். குமாரசாமிக்கு பதிலாக, விஷ்வநாத் என்பவரை மாநில தலைவராக நியமனம் செய்துள்ளார்.

    மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் தேவே கவுடா சார்ந்திருக்கும் ஒக்காலிகா இனத்தவருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுவதாக ஒரு கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில், தற்போது அக்கட்சியின் மாநில தலைவர் பதவி குருபா இனத்தவரை சேர்ந்த விஷ்வநாத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    சித்தராமையாவின் நெருங்கிய நண்பரான விஷ்வநாத், கடந்த மே மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து மதசார்பற்ற ஜனதா தளத்தில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #SecularJanataDal #StatePresident #Kumaraswamy
    பாராளுமன்ற தேர்தலுக்கு தயார்படுத்த தேசிய தலைவர் அமித்ஷா அடுத்த மாதம் சென்னை வருகிறார் என்று பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல் தெரிவித்துள்ளார். #BJP #amitshah #tamilisai
    சென்னை:

    பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா கட்சி வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு தங்களை பலப்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கு தயார்படுத்த தேசிய தலைவர் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.



    அடுத்த மாதம் அவர் சென்னை வருகிறார். சென்னையில் பா.ஜனதாவின் வாக்குகளை பலப்படுத்த கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. அமித்ஷாவின் வருகை தொண்டர்களுக்கு ஒரு உற்சாகமாக அமையும்.

    தமிழகத்தை பொறுத்தவரை ஒரு மாற்றம் வேண்டும். குறிப்பாக பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி அதிக எம்.பி.க்களை பெற வேண்டும். அதற்கான பணிகளை நாங்கள் செய்வோம்.

    இன்று தமிழகத்தில் பல வளர்ச்சி திட்டங்கள் வரவேண்டும். ஆனால் எல்லா வளர்ச்சி திட்டங்கள் பற்றியும் தவறான கருத்து உள்ளது. சேலம்-பசுமை சாலை திட்டம் பல கோடியில் வர இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு அது ஒரு நல்ல திட்டம். இப்போதே அந்த திட்டத்தை பற்றி ஒருசில குழுக்கள் எதிர்த்து பிரசாரம் செய்ய தயாராகி வருகிறது.

    அதில் எந்த அளவிற்கு காடுகள் பாதுகாக்கப்பட வேண்டுமோ, எந்த அளவிற்கு மக்களின் நிலங்கள் பாதுகாக்கப்படுமோ, எவ்வளவு குறைவாக பாதிப்பு ஏற்படுத்த முடியுமோ அந்த அளவிற்குதான் அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. மக்களுக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வரவேண்டும்.

    தென்மேற்கு பருவ மழை வர இருக்கிறது. அரசு அதற்கான ஆயத்த பணிகளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #amitshah #tamilisai

    ×