search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு இடைத்தேர்தல்"

    • தென்காசி மாவட்டத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி சீமான் பேச்சுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்திருந்தார்.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட சீமான் கனிமொழிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

    ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவு திரட்டி பேசினார்.

    சீமான் பேசுகையில், உன் பெரியாரிடம் வெங்காயம் தான் உள்ளது. என் தலைவனிடம் வெடிகுண்டு உள்ளது. நீ வெங்காயத்தை என் மீது வீசு, நான் வெடிகுண்டை உன் மீது வீசுவேன்.

    வெடிகுண்டை வைத்திருக்கிறேன், இன்னும் வீசவில்லை. நான் வெடிகுண்டை வீசினால் உன்னை புதைத்த இடத்தில் புல் கூட முளைக்காது என்று பேசி உள்ளார்.

    இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள்.

    அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி சீமான் பேச்சுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்திருந்தார். அதில் பேசிய அவர் " மக்களுக்காக போராடி எத்தனை முறை சிறை சென்றாலும் நீதி மன்றத்தில் பெரியார் ஒரு முறை கூட மன்னிப்பு கேட்டது இல்லை.


    நான் செய்தது தவறு இல்லை எனக்கு கொடுக்கப்படும் தண்டனையை கொடுங்கள் என கர்ஜித்த ஒரு மனிதர். தமிழ் தமிழ் எனக் கூறிக்கொண்டு தமிழையும் தமிழர்களையும் கொச்சைப்படுத்தக் கூடிய, பெரியாரை இழிவுபடுத்தக்கூடிய சில கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழல் உள்ளது" எனவும் சீமானின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக கனிமொழி பேசியிருந்தார்.

    அதனைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட சீமான் கனிமொழிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் "

    சும்மா கூலி காலினுலாம் பேசக்கூடாது.. எனக்கு தெரிந்து கனிமொழி அவர்களுடைய அப்பாவையும், பேரறிஞர் அண்ணாவையும் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

    ஏனென்றால், நான் பெரியாரை இழிவுபடுத்தி பேசவில்லை பெரிய பேசிய கருத்துக்களை பற்றி தான் பேசுகிறேன். பெரியார் பற்றி மட்டும் தான் மற்றவர்கள் பேசுகிறார்கள். ஆனால், பெரியார் என்ன எழுதி வைத்தார்? என்ன பேசினார் என்பது பற்றி யாரும் பேசமாட்டிக்கிறார்கள். இதனை எடுத்து பேசுவதற்கு உங்களுடைய யாருக்கும் துணிவு இல்லை. பெரியார் யார் தெரியுமா? என்று கேட்கிறீர்கள் யார் என்று கேட்டல் சொல்லமாட்டிக்கிறீர்கள்.

    திமுக அளவிற்கு பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, அவர்களைவிட யாரவது இழிவா பேசியிருக்கிறார்களா? கனிமொழி சொல்லும் பெரிய கூலி அவருடைய அப்பா தான். அப்போ நீங்க உங்களுடைய தந்தையை தான் எதிர்த்து பேசிக்கொண்டு இருக்கிறீர்களா? தமிழகத்தில் இத்தனை தொகுதி இருந்தும் நீங்கள் ஏன் தூத்துக்குடிக்கு சென்று போட்டியிட்டீர்கள் என்ற காரணத்தை சொல்ல முடியுமா?. தூத்துக்குடி மக்களை நம்ப வைத்து ஏமாற்றியவர் நீங்கள். அதனைவிட்டுவிட்டு சும்மா சும்மா கூலி காலினுலாம் சொல்லாதீங்க..உங்க அப்பா தான் பெரிய கூலி" எனவும் சீமான் சற்று ஆவேசத்துடன் பேசினார்.

    • முன்னதாக திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் தி.மு.க. கழகத்தின் கொடியையும் ஏற்றி வைத்தார்.
    • சிறுவர், சிறுமிகள் அமைச்சர் முன்பு சிலம்பம் சுற்றியும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர்.

    சென்னை:

    சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள சானிக் குளம் திருவள்ளுவர் மன்றம் அருகில் துறைமுகம் மேற்கு பகுதி 54-வது வட்டம் சார்பில் 400 மங்கையர்கள் ஒன்றுகூடி தைத்திருநாள் மற்றும் சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார்.

    முன்னதாக திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் தி.மு.க. கழகத்தின் கொடியையும் ஏற்றி வைத்தார்.

    தொடர்ந்து உரி அடித்தும் சிலம்பம் சுற்றியும் அப்பகுதி மக்களுடன் சமத்துவ பொங்கலை கொண்டாடினார். மேலும் அப்பகுதி சிறுவர், சிறுமிகள் அமைச்சர் முன்பு சிலம்பம் சுற்றியும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர்.

    சிலம்பம் சுழற்றிய சிறுவர் சிறுமிகளுக்கு ரொக்கமாக பரிசுத்தொகையையும் வழங்கி பாராட்டினார்.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபுவிடம் ஐ.ஐ.டி. மாணவி பாலியல் குற்ற சம்பவம் தொடர்பான கேள்விக்கு, நடைபெறுகின்ற குற்றச் சம்பவங்களை தடுப்பது ஒரு புறம், நடந்து முடிந்த பிறகு அதன் மீது நடவடிக்கை எடுப்பது மறுபுறம்.

    இந்த ஆட்சியில் இன்னார் இனியவர் என்று பாகுபாடு கிடையாது. தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்ற சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது.

    ஐ.ஐ.டி. சம்பவம் தொடர்பாக உரிய குற்றவாளி கைது செய்து கடுமையானப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்றார்.

    ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு, 'யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே' என்பார்கள். அதுபோல 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வெற்றிக்கு உண்டான அறிகுறியாக வெற்றிக்குரிய வெளிச்சமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இருக்கும்.

    பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிக்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசன் காங்கிரஸ், தி.மு.க. இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
    • டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை ரத யாத்திரையில் ராகுல்காந்தியுடன் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கே மீண்டும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

    எனவே காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    இல்லையென்றால் அவரது மனைவி வரலட்சுமி, 2-வது மகன் சஞ்சய் சம்பத், மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் மனைவி பூர்ணிமா ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இளங்கோவன் போட்டியிட விரும்பாதபட்சத்தில் தனது ஆதரவாளர் யாருக்காவது சீட் கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து இளங்கோவனை போட்டியிட அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட போவதாகவும் தகவல் பரவி வருகிறது.

    கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசன் காங்கிரஸ், தி.மு.க. இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இணைவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 24-ந்தேதி டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை ரத யாத்திரையில் ராகுல்காந்தியுடன் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அதேபோல் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றபோது அவரை வாழ்த்தி கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×