என் மலர்
நீங்கள் தேடியது "ரேவதி"
- நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார்.
- இப்படத்தில் ஃபகத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நடிகர் மம்மூட்டி உடல்நிலைக் காரணமாக 7 மாதங்கள் ஓய்வில் இருந்தார். இதனால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார்.
இந்த நிலையில், மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் PATRIOT படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'.
- இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.
படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது கொடைக்கானலில் மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் நடிகை ரேவதி இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ரேவதி இதற்கு முன் விஜய்யுடன் 2002 ஆம் ஆண்டு வெளியான தமிழன் திரைப்படத்தில அவருக்கு சகோதரியாக நடித்து இருந்தார். ஜன நாயகன படத்தில் விஜய்-க்கு அம்மா கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடிகை ரேவதி தற்பொழுது ஒரு திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜன நாயகன் படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகிறது. விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி படத்தின் டீசரை படக்குழு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
- கை கொடுக்கும் கை, புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், பகல் நிலவு, மௌன ராகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரேவதி.
- தற்போது இந்தியில் 'சலாம் வெங்கி' என்ற படத்தை ரேவதி இயக்கி வருகிறார்.
1983-ஆ ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரேவதி. அதன்பின் கை கொடுக்கும் கை, புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், பகல் நிலவு, மௌன ராகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து 80 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மேலும் மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து பிரபலமடைந்தார். ரேவதி சில படங்களையும் இயக்கியுள்ளார்.
தற்போது இந்தியில் 'சலாம் வெங்கி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கஜோல், விஷால் மற்றும் ஜெத்வா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இப்படம் அடுத்த மாதம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

ரேவதி - சல்மான் கான்
அதன் ஒரு பகுதியாக சல்மான்கான் நடத்தும் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட ரேவதி, 32 வருடங்களுக்குப் பிறகு சல்மான்கானுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மணீஷ் சர்மா இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் 'டைகர் 3' படம் உருவாகிறது. இப்படத்தில் கதாநாயகியாக கத்ரீனா கைஃப் நடிக்கவுள்ளார். மேலும் ஷாருக்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ரேவதி நடிக்கவிருக்கும் கதாப்பாத்திரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 2002 ஆண்டு மிதிர் மை ஃப்ரண்ட் என்ற ஆங்கில் திரைப்படத்தை இயக்கினார்.
- ரேவதி தற்பொழுது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
1980-1990 காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரேவதி. 1983 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். நடித்த முதல் திரைப்படமே மிகப் பெரியளவில் வெற்றிப் பெற்றது. இப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

அதே ஆண்டில் கட்டத்தே கிளிக்கூடு என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து மலையாள திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகினார். இப்படமும் மிகப்பெரியளவில் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து தமிழ், மலையாள, தெலுங்கு. இந்தி திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.

தான் நடிக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் மிகவும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். 1986 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதை தொடர்ந்து புன்னகை மன்னன், கிழக்கு வாசல், தேவர் மகன், மறுபடியும், அஞ்சலி, மகளிர் மட்டும் என பல தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.

அதற்கு பின் இயக்கத்தில் கால் பதித்தார். 2002 ஆண்டு மிதிர் மை ஃப்ரண்ட் என்ற ஆங்கில் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சிறந்த ஆங்கில திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. அதை தொடர்ந்து ஃபிர் மிலேங்கே என்ற இந்தி திரைப்படத்தை இயக்கினார். கேரளா கஃபே என்ற மலையாள ஆந்தாலஜி திரைப்படத்தில் ஒரு கதையை இயக்கினார். அதைத்தொடர்ந்து சலாம் வெங்கி என்ற இந்தி திரைப்படத்தை இயக்கினார்.

அதைத்தொடர்ந்து பல தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடரில் நடித்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பின் 2017 ஆம் ஆண்டு தனுஷ் இயக்கத்தில் பவர் பாண்டி திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். 2019 ஆம் ஆண்டு வெளியான வைரஸ் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார்.

இந்நிலையில் தற்பொழுது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒரு வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார். சித்தார்த் ராமசாமி இந்த சீரிஸில் இணை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.


இச்சூழலில் நடிகை ரேவதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படம் ஷூட்டிங் தளத்தில் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தால் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். அதற்கு நன்றி தெரிவித்து அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்






