என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Revathy"

    • எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'.
    • இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.

    படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது கொடைக்கானலில் மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் நடிகை ரேவதி இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

    ரேவதி இதற்கு முன் விஜய்யுடன் 2002 ஆம் ஆண்டு வெளியான தமிழன் திரைப்படத்தில அவருக்கு சகோதரியாக நடித்து இருந்தார். ஜன நாயகன படத்தில் விஜய்-க்கு அம்மா கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    நடிகை ரேவதி தற்பொழுது ஒரு திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஜன நாயகன் படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகிறது. விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி படத்தின் டீசரை படக்குழு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

    • 2002 ஆண்டு மிதிர் மை ஃப்ரண்ட் என்ற ஆங்கில் திரைப்படத்தை இயக்கினார்.
    • ரேவதி தற்பொழுது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

    1980-1990 காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரேவதி. 1983 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். நடித்த முதல் திரைப்படமே மிகப் பெரியளவில் வெற்றிப் பெற்றது. இப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

     

    அதே ஆண்டில் கட்டத்தே கிளிக்கூடு என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து மலையாள திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகினார். இப்படமும் மிகப்பெரியளவில் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து தமிழ், மலையாள, தெலுங்கு. இந்தி திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.

     

    தான் நடிக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் மிகவும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். 1986 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதை தொடர்ந்து புன்னகை மன்னன், கிழக்கு வாசல், தேவர் மகன், மறுபடியும், அஞ்சலி, மகளிர் மட்டும் என பல தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.

     

    அதற்கு பின் இயக்கத்தில் கால் பதித்தார். 2002 ஆண்டு மிதிர் மை ஃப்ரண்ட் என்ற ஆங்கில் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சிறந்த ஆங்கில திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. அதை தொடர்ந்து ஃபிர் மிலேங்கே என்ற இந்தி திரைப்படத்தை இயக்கினார். கேரளா கஃபே என்ற மலையாள ஆந்தாலஜி திரைப்படத்தில் ஒரு கதையை இயக்கினார். அதைத்தொடர்ந்து சலாம் வெங்கி என்ற இந்தி திரைப்படத்தை இயக்கினார்.

     

    அதைத்தொடர்ந்து பல தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடரில் நடித்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பின் 2017 ஆம் ஆண்டு தனுஷ் இயக்கத்தில் பவர் பாண்டி திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். 2019 ஆம் ஆண்டு வெளியான வைரஸ் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார்.

     

    இந்நிலையில் தற்பொழுது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒரு வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார். சித்தார்த் ராமசாமி இந்த சீரிஸில் இணை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

     

     

    இச்சூழலில் நடிகை ரேவதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படம் ஷூட்டிங் தளத்தில் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தால் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். அதற்கு நன்றி தெரிவித்து அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

     

    மலையாள பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் கொடுமை அதிகரித்து வருவதாக நடிகைகள் ரேவதி, பார்வதி, ரீமாகல்லிங்கல், பத்மபிரியா ஆகியோர் ஆவேசம் பேசியுள்ளார்கள். #MeToo
    கேரளாவில் பிரபல நடிகை ஒருவர் ஓடும் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தற்போது நடிகர் திலீப் ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

    இந்த சம்பவத்துக்கு பிறகு நடிகர் திலீப் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அப்போது நடிகர்சங்கத்தின் தலைவராக இன்னசென்ட் இருந்து வந்தார். அதன்பிறகு தனது உடல் நிலையை காரணம் காட்டி அவர் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

    அதன்பிறகு நடிகர் சங்க புதிய தலைவராக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் நடிகர் சங்க கூட்டத்தை கூட்டி நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் இணைத்தனர். இதற்கு பாதிக்கப்பட்ட நடிகையும், மேலும் நடிகைகள் ரீமாகல்லிங்கல், கீதுமோகன்தாஸ் உள்பட சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தங்கள் உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தனர். இதனால் தன் மீதான குற்றச்சாட்டில் தான் நிரபராதி என்று நிரூபிக்கும் வரை நடிகர் சங்கத்தில் இணைய விரும்பவில்லை என்று திலீப் அறிவித்ததால் இந்த பிரச்சினை சற்று ஓய்ந்தது.

    தற்போது சில நடிகைகள் பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்து வரும் சூழ்நிலையில் மலையாள பட உலகை சேர்ந்த நடிகைகளும் இது தொடர்பாக ஆவேசமாக குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

    மலையாள பெண் சினிமா கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த நடிகைகள் ரேவதி, பத்மபிரியா, பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யாநம்பீசன், அர்ச்சனா பத்மினி ஆகியோர் கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது மலையாள பட உலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளதாக அவர்கள் ஆவேசமாக குற்றம் சாட்டினார்கள்.



    நடிகை பார்வதி கூறும் போது, நடிகை கடத்தல் சம்பவத்தில் நடிகர் திலீப்பை காப்பாற்ற நடிகர் சங்கம் முயற்சி செய்தபோதே அவர்கள் மீதான நம்பிக்கை போய்விட்டது. தங்களுக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை மாற்ற அவர்கள் அவ்வப் போது நாடகம் நடத்துகிறார்கள். பாதிக்கப்பட்ட நடிகை பற்றி அவர்களுக்கு கவலை கிடையாது என்றார்.

    புள்ளிக்காரன் ஸ்டாரா என்ற படத்தில் நான் நடித்த போது அந்த படத்தின் தயாரிப்பு நிர்வாகியான ஷெரின் ஸ்டான்லி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுபற்றி நான் மலையாள தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்தில் புகார் செய்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனக்கு பட வாய்ப்புகள் பறிபோனது தான் நடந்தது’ என்றார்.

    நடிகைகள் பேட்டியின் போது சரமாரியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி சுமார் 40 நிமிடம் ஆவேசமாக பேசினார்கள். நடிகை பார்வதி பேட்டி அளிக்கும் போது கண்ணீர்விட்டு கதறினார். அவரை சக நடிகைகள் ஆறுதல் கூறி தேற்றினார்கள். 
    ×