என் மலர்
நீங்கள் தேடியது " அமித் ஷா"
- பாஜக பூத் கமிட்டி மாநாடு அமித் ஷா தலைமையில் நெல்லையில் நடைபெற்றது.
- திமுக-வின் ஊழல் பட்டியலை அமித் ஷா சுட்டிக்காட்டினார்.
அமித் ஷா தலைமையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு நெல்லையில் நடைபெற்றது. மாநாட்டு மேடையில் அமித் ஷா முன்னிலையில் திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தன்னை பாஜக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த மாநாட்டில் பேசிய அமித் ஷா "தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல், எல்காட் ஊழல், மணல் கொள்ளை ஊழல், இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூட திமுக-வின் ஊழல் செய்கிறார்கள். தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமையும்" என்றார்.
- முதலமைச்சர் நிதிஷ் குமாரால் பீகார் மாநில நிர்வாகத்தை கட்டுப்படுத்தவில்லை.
- பிரதமர் மோடி, அமித் ஷா ஆகிய இருவரால் இங்கே நிர்வாகம் நடத்தப்படுகிறது.
பீகாரில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக பீகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு கூறியதாவது:-
முதலமைச்சர் நிதிஷ் குமாரால் பீகார் மாநில நிர்வாகத்தை கட்டுப்படுத்தவில்லை. பிரதமர் மோடி, அமித் ஷா ஆகிய இருவரால் இங்கே நிர்வாகம் நடத்தப்படுகிறது. இதனால் இந்தியாவின் குற்றங்களில் தலைநகராக பீகார் மாறிவருவதற்கு இருவரும்தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஆதார் கார்டு, ரேசன் கார்டு ஆகியவை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆவணங்கள் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறிவிட்டது. வாக்காளர்கள் பட்டியல் தீவிர திருத்த பணியை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தேர்தல் ஆணையம் சரியான நேரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் , வீதியில் இறங்கி போராடுவோம்.
இவ்வாறு கிருஷ்ணா அல்லவாரு தெரிவித்துள்ளார்.
- மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
- மணிப்பூரில் மீண்டும் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் ராணுவப்படை அதிகாரிகள் ஆகியோருடன் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.
மும்பை:
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தையடுத்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மராட்டிய மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தார். அவர் மணிப்பூர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். மணிப்பூரில் மீண்டும் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் உள்துறை அமைச்சக அதிகாரிகள், ராணுவப்படை அதிகாரிகள் ஆகியோருடன் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.
மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த உடனே எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான நீண்ட கால திட்டங்கள் குறித்தும் அவர் ஆலோசிக்க உள்ளார்.
ஐதராபாத்:
உத்தரபிரதேசம் உள்ளிட்ட பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் முகலாயர் ஆட்சி காலங்களில் சூட்டப்பட்ட நகரங்களின் பெயர்களை மாற்றி வருகிறார்கள்.
இவ்வாறு 25-க்கும் மேற்பட்ட நகரங்களின் பெயர் இதுவரை மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மஜ்லிஷ் கட்சியின் தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான ஓவைசி தெலுங்கானாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது பெயர் மாற்றம் பிரச்சினையை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவில் பல நகரங்களுக்கு ஏற்கனவே இருக்கும் பெயர்களை தொடர்ந்து மாற்றி வருகிறார்கள். ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் தலைவரின் பெயர் அமித் ஷா என்று உள்ளது.
இதில் ஷா என்பது பெர்சிய (ஈரான்) பெயர் ஆகும். எனவே, ஷா என்ற பெயரை அவர் வைத்துக் கொள்ள கூடாது.

இதனால் அமித் ஷா தனது பெயரையும் மாற்றிக் கொள்ள வேண்டும். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஒரு லட்சம் மாடுகள் கொடுப்போம் என்று கூறுகிறார்கள்.
மாட்டுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காக மாடு கொடுக்கப் போகிறார்களா? என்னிடம் மாட்டை கொடுத்தால் நான் மரியாதை கொடுக்க முடியுமா?
ஒவ்வொரு மாடும் தினமும் 16 கிலோ தீவனம் சாப்பிடும். இவர்கள் ஒரு லட்சம் மாடுகள் கொடுத்தால் தினமும் 16 லட்சம் கிலோ உணவு தேவைப்படும். இவ்வளவு உணவுக்கு எங்கே போவது?
நான் உண்மையை பேசினால் நான் அவதூறாக பேசுவதாக கூறுவார்கள். நான் எதார்த்தத்தைதான் கூறுகிறேன்.
தெலுங்கானா மாநிலம் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.
இவ்வாறு ஓவைசி பேசினார். #Owaisi #BJP #AmitShah






