search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "manipulation"

    • விருதுநகரில் செல்போன் விற்பனை கடையில் ரூ.6½ லட்சம் கையாடல் நடந்துள்ளது.
    • இந்த புகாரின் அடிப்படையில் பெண் ஊழியரிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அல்லம்பட்டியில் உள்ள மாத்திநாயக்கன்பட்டி ரோட்டை சேர்ந்தவர் கணேசன்(43). இவர் மதுரை ரோட்டில் செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை கடை வைத்துள்ளார். இவரது கடையில் பாண்டியன்நகரை சேர்ந்த ஆர்த்திலட்சுமி(22) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று கடையில் இருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கணேசன் ஆய்வு செய்தார். அப்போது ஆர்த்தி லட்சுமி கடையில் இருந்து பணம் எடுத்த காட்சிகள் பதிவாகியிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணேசன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடையின் வரவு-செலவு கணக்கை சரிபார்த்தார். விற்பனை பணம் ரூ.6 லட்சத்து 43 ஆயிரம் கையாடல் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து கணேசன் விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார். அதில் கடை பெண் ஊழியர் ஆர்த்திலட்சுமி பணத்தை கையாடல் செய்ததோடு ஒரு பவுன் தங்க மோதிரத்தை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஆர்த்திலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×