search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Loksabha polls"

    • ராஜஸ்தானில் யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி பன்ஸ்வாரா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
    • அரசு தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவதை தடுப்பதற்கு உரிய சட்டம் இயற்றப்படும் என தெரிவித்தார்.

    ஜெய்ப்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

    இந்நிலையில், ராஜஸ்தானில் இன்று யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி பன்ஸ்வாரா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் கட்சியின் இளைஞர்களுக்கான 5 தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினர். அவை பின்வருமாறு:

    பொதுத்துறை நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும்.

    அனைத்து இளைஞர்களுக்கும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு பயிற்சி. MNREGA போன்றே இந்தப் பயிற்சியை ஒரு சட்டமாக்குவோம். இளைஞர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். மேலும் பயிற்சியின் போது ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.

    சிறு தொழில்களைத் தொடங்கத் தயாராக இருக்கும் இளைஞர்களுக்கு ஆதரவாக ரூ.5,000 கோடியில் ஸ்டார்ட்அப் ஃபண்ட் உருவாக்கப்படும்

    கிக் தொழிலாளர்கள் எனப்படும் உணவு டெலிவரி உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு நாடுமுழுவதும் சட்டம் இயற்றப்படும்

    தேர்வு தாள் கசிவு விவகாரத்தைத் தடுக்க, காகிதக் கசிவுக்கு எதிராக காங்கிரஸ் சட்டம் கொண்டுவரும். அரசு போட்டித் தேர்வுகளை அரசு மட்டுமே நடத்தும், அவுட்சோர்சிங் எதுவும் இருக்காது என தெரிவித்தார்.

    சாமானிய மக்கள், பாஜக அரசு மீது நம்பிக்கை வைத்திருப்பதால் வரும் பொதுத் தேர்தலில் அரசுக்கு எந்த சவாலும் இல்லை என்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார். #Rajnath #LSPolls
    கிரேட்டர் நொய்டா:

    கிரேட்டர் நொய்டாவில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில், கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டுவதற்கு, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று அடிக்கல் நாட்டினார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, வரும் தேர்தல் பாஜக அரசுக்கு பெரிய சவாலாக இருக்குமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், அரசுக்கு எந்த சவாலும் இல்லை என கூறினார்.

    பின்னர் கொல்கத்தாவில் மம்தா தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தங்கள் வலிமையை காட்டியது குறித்த கேள்விக்கு பதிலளித்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:-


    பாஜகவின் வெற்றியைப் பார்த்து பயந்துபோனதால், அனைவரும் ஒன்றுசேர்ந்துள்ளனர். பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற பயம் அவர்களுக்கு வந்துவிட்டது. ஆனால் மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி. மோடி தலைமையில் நாங்கள் வலுவான பிரபலமான தலைமையை பெற்றிருக்கிறோம். சாமானிய மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

    4.5 ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. எனவே, வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது இருந்த சூழ்நிலை உங்களுக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajnath #LSPolls
    ×