search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kirti Azad"

    • ஷ்ரேயாஸ், இஷான் ஆகிய இருவரை மட்டும் தண்டிப்பது சரியல்ல.
    • ரோகித் சர்மா அல்லது விராட் கோலியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாநில அணிக்காக உள்ளூரில் விளையாட வேண்டும்.

    இந்திய அணியின் 2023 -24 வருடத்திற்கான மத்திய சம்பள ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிசன் ஆகிய 2 வீரர்களை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இஷான், ஷ்ரேயாஸ் மட்டுமல்லாமல் இந்தியாவுக்காக விளையாடாத நேரங்களில் கேப்டன் ரோகித், கோலி உள்ளிட்ட அனைத்து வீரர்களும் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டுமென்று 1983 உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்த முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் கேட்டுக் கொண்டுள்ளார்.

     

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அனைவரும் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டும். இப்போது ஐபிஎல் மீது மட்டுமே ஆர்வம் இருக்கிறது. பொழுதுபோக்கிற்கு ஐபிஎல் நன்றாக இருக்கும். ஆனால் உண்மையான கிரிக்கெட் 5 நாட்கள் விளையாடுவதில் தான் உள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது உங்களுடைய ஃபார்மை தக்க வைக்க உதவும்.

    எனவே ரோகித் சர்மா அல்லது விராட் கோலியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாநில அணிக்காக உள்ளூரில் விளையாட வேண்டும்.

    அங்கிருந்து தான் நீங்கள் நாட்டுக்காக விளையாட வந்தீர்கள். அதனால் ஷ்ரேயாஸ், இஷான் ஆகிய இருவரை மட்டும் தண்டிப்பது சரியல்ல. அனைவரையும் தண்டிக்க வேண்டும். அனைவரையும் ஒரே கண்ணாடியில் பார்க்க வேண்டும்.

    எங்களுடைய கேரியரை துவங்கும் போது நாங்கள் எங்களுடைய மாநில அணிக்காக மிகவும் பெருமையுடன் உள்ளூரில் விளையாடுவோம். அந்த பெருமையான உணர்வை தற்போதைய இளம் வீரர்களிடம் பார்க்க முடியவில்லை.

    இவ்வாறு கீர்த்தி ஆசாத் கூறினார்.

    பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கீர்த்தி ஆசாத் எம்பி, இன்று ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் சேர உள்ளார். #KirtiAzad
    புதுடெல்லி:

    முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்திஆசாத். இவர் பா.ஜனதா கட்சியின் எம்.பி. ஆகவும் இருக்கிறார். பீகார் மாநிலம் தர்பாங்கா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவராக இருக்கும் மத்திய மந்திரி அருண் ஜெட்லியை பகிரங்கமாக விமர்சனம் செய்தார்.

    இதனால் பா.ஜனதாவில் இருந்து ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இன்று  ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளார்.

    நேற்று மாலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், “என் மீது தவறு எதுவும் இல்லாதபட்சத்தில் நான் பா.ஜனதாவில் இருந்து ‘சஸ்பெண்டு’ (தற்காலிக நீக்கம்) செய்யப்பட்டிருக்கிறேன். கட்சிக்கு விரோதமான எந்த நடவடிக்கையிலும் நான் ஈடுபடவில்லை.

    தனியார் நிறுவனமான டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக போராடினேன். அதற்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா எனது முதுகில் குத்தி விட்டார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் 3 வட இந்திய மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை பறி கொடுத்தது. அதன்மூலம் மாநிலங்களில் அக்கட்சி தனது செல்வாக்கை இழந்து விட்டது தெளிவாக தெரிகிறது. உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் 120 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு பா.ஜனதா அதிக தொகுதியை இழக்க நேரிடும்” என்றார்.

    கீர்த்தி ஆசாத் தர்பாங்கா தொகுதியில் 3 தடவை பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். #KirtiAzad
    ×