என் மலர்
நீங்கள் தேடியது "G Parameshwara"
- பரமேஷ்வரா தொடர்புடைய 16 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.
- ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை.
கர்நாடக மாநில நடிகையான ரன்யா ராவ், தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் வெளிநாட்டில் இருந்து பலமுறை தங்கம் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கர்நாடக மாநில போலீஸ் துறை (Home Minister) அமைச்சரான பரமேஷ்வரா தொடர்புடைய கல்வி நிறுவனம், ரன்யா ராவின் 40 லட்சம் ரூபாய் கிரெடிட் கார்டு பில்லை செலுத்தியிருந்தது. இது அமலாக்கத்துறைக்கு சந்தேகத்தை எழுப்பியது. இது தொடர்பாக பரமேஷ்வரா தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை கடந்த இரண்டு நாட்களாக 16 இடங்களில் சோதனை நடத்தியது.
இந்த சோதனை தொடர்பாக கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறுகையில் "அரசியல்வாதிகளாகிய நாங்கள் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிக்கு செல்கிறோம். சிலர் அறக்கட்டளை வைத்திருக்கிறார்கள். பரமேஷ்வரா 10 முதல் 15 லட்சம் வரை கொடுத்திருக்கலாம். அவர் தூய்மையானவர், நேர்மையானவர்" என ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பரமேஷ்வரா தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்த கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள கோஷ்டி பிரிவுதான் காரணம் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரகலாத் ஜோஷி கூறியதாவது:-
அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியது யார்?. காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பிரிவினர் காரணமாக, அமலாக்கத்துறைக்கு அனைத்து தகவலும் அனுப்பப்பட்டுள்ளது. இப்போது அவர்கள் இங்கே ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்.
பரமேஸ்வராவை நான் மதிக்கிறேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர் ஒரு பண்பட்ட அரசியல்வாதி. விஷயம் என்னவென்றால், புகார்கள் வந்ததால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பிரிவினர் அமலாக்கத்துறையிடம் புகார் அளித்தனர்.
- நாட்டில் மிகவும் வலுவான ராணுவ உளவுத்துறையை நாம் கொண்டுள்ளோம்.
- பல்வேறு நிலைகளில் அவை சிறப்பாக செயல்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே உள்ளது பைசாரன் பள்ளத்தாக்கு. அடர்ந்த பைன் மரக் காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட இந்த இடம் மினி ஸ்விட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. பஹல்காம் மற்றும் பைசாரன் ஜம்மு-காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத்தலமாகும்.
இந்த பகுதியில் நேற்று திடீரென சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் ஒவ்வொருவரின் பெயரை கேட்டு, தாக்குதல் நடத்தியுள்ளனர். கொலை செய்யப்பட்ட அனைவரும் ஆண்கள் எனக் கூறப்படுகிறது.
2019ஆம் ஆண்டு புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த கொடூர தாக்குதல் உளவுத்துறை தோல்வியாகும் என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா கூறியதாவது:-
நாட்டில் மிகவும் வலுவான ராணுவ உளவுத்துறையை நாம் கொண்டுள்ளோம். பல்வேறு நிலைகளில் அவை சிறப்பாக செயல்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் எப்படி, எங்கிருந்து தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு வந்தார்கள் என்பதில் ஏன் உளவுத்துறை தோல்வி நடைபெற்றது என்பதுதான் முக்கிய கேள்வி.
மத்திய அரசு இந்த விசயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்துக்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டுள்ளது இன்னும் கவலை அளிக்கிறது.
இவ்வாறு பரமேஷ்வரா தெரிவித்தார்.
மேலும், இது தேசிய பாதுகாப்பு மற்றும் நமது சமூகத்தின் பாதுகாப்பு பற்றிய கேள்வி. இதில் நாம் ஏன் அரசியலை கொண்டு வர வேண்டும். நாம் எந்த அரசியல் கட்சியின் பெயரையும் பயன்படுத்தக்கூடாது. நான் எந்த அரசியல் கட்சியின் பெயரையும் பயன்படுத்தவில்லை எனக் கூறியுள்ளார்.
பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளுடன் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா பெங்களூரு விகாச சவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் சிமெண்டு சாலைகளை அமைப்பது, சாலை குழிகளை மூடுவது, குப்பை பிரச்சினையை தீர்ப்பது ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதில் மாநகராட்சி மேயர் கங்காம்பிகே, கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்ட்னர். இந்த கூட்டத்திற்கு பிறகு பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளின் பணியில் குறைகளை கண்டறிந்து, கர்நாடக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. பெங்களூருவில் சாலை குழிகளை மூடும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அதிகாரிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு, 27-ந் தேதிக்குள்(நாளை) நகரில் சாலைகளில் உள்ள அனைத்து குழிகளையும் மூட வேண்டும்.
சாலை குழிகள் மூடியது குறித்த ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். சாலைகளை மூட தவறினால் சம்பந்தப்பட்ட மண்டல இணை கமிஷனரே அதற்கு பொறுப்பாவார். சாலைகளை தரம் உயர்த்த, ‘டெண்டர் சூர்‘, சிமெண்டு சாலைகள் அமைக்கும் திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை வருகிற மே மாதத்திற்குள் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
100 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.945 கோடி செலவில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில சாலைகளில் கடுமையான போக்குரத்து நெரிசல் உண்டாகிறது. இதனால் அத்தகைய சாலைகளில் இந்த சாலை மேம்பாட்டு பணிகள் முடிவடையாமல் உள்ளன. நடப்பு ஆண்டில் ரூ.665 கோடி செலவில் 63 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை மேம்பாட்டு பணிகளுக்கான டெண்டர் அழைக்கப்பட்டுள்ளது. இதில் 41 சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன.
குப்பையை அகற்றும் பணிக்கு கடந்த 2 ஆண்டுகளாக டெண்டர் விடவில்லை. இப்போது அதற்கு டெண்டர் விட முடிவு செய்துள்ளோம். குப்பைகளை அகற்றும் எந்திரங்களை ஒப்பந்ததாரர் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளோம். குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு 10 மாதங்களுக்குள் பணிகள் முடி வடைந்து அமல்படுத்தப்படும்.
தெருக்களில் எல்.இ.டி. விளக்குகளை பொருத்த டெண்டர் பணிகள் முடிவடைந்துவிட்டன. மந்திரிசபையில் இதற்கு ஒப்புதல் வழங்கப்படும். அரசு-தனியார் பங்களிப்பில் ரூ.800 கோடியில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. சுதந்திர பூங்காவில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டிட பணிகளை விரைவாக முடிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். ஜே.சி.ரோட்டிலும் அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அதில் கூடுதலாக 2 மாடிகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சியை பிரிப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. பெங்களூருவுக்கு என்று தனி சட்டத்தை இயற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. துப்புரவு தொழிலாளர்கள் தங்களுக்கு ஏதாவது பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பரமேஸ்வரா கூறினார். #Parameshwara






