search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "extorting money"

    • சண்முக சுந்தரத்ைத கத்தியை காட்டி மிரட்டி ரூ.900-ஐ பறித்து சென்றார்.
    • முகமது மீரானை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    கோவை மாவட்டம் அன்னூர் சாலையை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் பல்லடத்தை அடுத்த அருள்புரம்- திருப்பூர் செல்லும் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாரில் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவர் நேற்று காலை சாலையில் நடந்து சொல்லும்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் சண்முக சுந்தரத்ைத கத்தியை காட்டி மிரட்டி ரூ.900-ஐ பறித்து சென்றார்.

    இது குறித்து பல்லடம் போலீசில் சண்முக சுந்தரம் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்டவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த அபுதாகீர் மகன் முகமது மீரான்(வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து முகமது மீரானை போலீசார் கைது செய்து, பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன், சீனிவாசனை கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து ரூ.200 மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    பு.புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவர் தனது நண்பருடன் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

    இதையடுத்து அவர்கள் சந்துருவிடம் வழி கேட்பது போல் நடித்து சந்துருவின் பாக்கெட்டில் இருந்த ரூ.200-யை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயற்சி செய்தனர்.

    அப்போது அவர் சத்தம் போட்டார். அவரது சத்தத்தை ேகட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை துரத்தி பிடித்தனர். தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் புளியம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (22) சீனிவாசன் (25) என தெரிய வந்தது.

    இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.200 மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    டெல்லியில் விபத்தில் காயமடைந்த டிரைவரிடம் பணம் பறித்தது தொடர்பாக 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். #DelhiAccident #ConstablesSuspended
    புதுடெல்லி:

    டெல்லியின் கோத்வாலி பகுதியில், சனிக்கிழமை இரவு ஒரு லாரி விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, போலீசார் வைத்திருந்த பேரிகார்டுகளை இடித்து தள்ளிவிட்டு, எதிரே வந்த சில வாகனங்கள் மீது மோதி பின்னர் கவிழ்ந்தது. இதில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் காயமடைந்தார்.

    போலீசார் அங்கு சென்று டிரைவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    ஆனால், விபத்தில் காயமடைந்த டிரைவரிடம் போலீசார் மிரட்டி அவரிடம் இருந்து 3000 ரூபாய் பணத்தை பறித்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று அடித்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். #DelhiAccident #ConstablesSuspended
    ×