என் மலர்
செய்திகள்

விபத்தில் காயமடைந்த டிரைவரிடம் பணம் பறித்த போலீஸ்காரர்கள்
டெல்லியில் விபத்தில் காயமடைந்த டிரைவரிடம் பணம் பறித்தது தொடர்பாக 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். #DelhiAccident #ConstablesSuspended
புதுடெல்லி:
டெல்லியின் கோத்வாலி பகுதியில், சனிக்கிழமை இரவு ஒரு லாரி விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, போலீசார் வைத்திருந்த பேரிகார்டுகளை இடித்து தள்ளிவிட்டு, எதிரே வந்த சில வாகனங்கள் மீது மோதி பின்னர் கவிழ்ந்தது. இதில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் காயமடைந்தார்.
போலீசார் அங்கு சென்று டிரைவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
ஆனால், விபத்தில் காயமடைந்த டிரைவரிடம் போலீசார் மிரட்டி அவரிடம் இருந்து 3000 ரூபாய் பணத்தை பறித்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று அடித்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். #DelhiAccident #ConstablesSuspended
டெல்லியின் கோத்வாலி பகுதியில், சனிக்கிழமை இரவு ஒரு லாரி விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, போலீசார் வைத்திருந்த பேரிகார்டுகளை இடித்து தள்ளிவிட்டு, எதிரே வந்த சில வாகனங்கள் மீது மோதி பின்னர் கவிழ்ந்தது. இதில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் காயமடைந்தார்.
போலீசார் அங்கு சென்று டிரைவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
ஆனால், விபத்தில் காயமடைந்த டிரைவரிடம் போலீசார் மிரட்டி அவரிடம் இருந்து 3000 ரூபாய் பணத்தை பறித்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று அடித்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். #DelhiAccident #ConstablesSuspended
Next Story






