search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy Gandhi Market"

    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • இனிவரும் காலங்களிலும் மழை அதிகரித்தால் சின்ன வெங்காயத்தின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாநகரின் மத்திய பகுதியில் உள்ள காந்தி மார்க்கெட்டில் தினமும் மொத்த மற்றும் சில்லறை காய்கறி விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இங்கிருந்து அருகாமையில் உள்ள சில மாவட்டங்களுக்கும் காய்கறி சப்ளை செய்யப்படுகிறது.

    அந்த அடிப்படையில் காந்தி மார்க்கெட்டுக்கு தினமும் 250 டன் சின்ன வெங்காயம் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து இங்கு வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பருவமழை பாதிப்பினால் சின்ன வெங்காயம் வரத்து சரிந்துள்ளது. இதனால் விலையும் மெல்ல மெல்ல உயர்ந்து விட்டது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று சின்ன வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ.100 விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    நேற்று முன்தினம் ரூ.80-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் இன்றைய தினம் மேலும் விலை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

    இதுபற்றி திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க பொறுப்பாளர் கமலக்கண்ணன் கூறும் போது, மழையின் காரணமாக ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் சின்ன வெங்காயம் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இன்று 50 டன் சின்ன வெங்காயம் மட்டுமே திருச்சி மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறது. விலை ஏற்றத்தினால் சின்ன வெங்காயம் வாங்குவதை மக்கள் குறைத்துள்ளனர்.

    சாம்பாருக்கு அதிகம் சின்ன வெங்காயம் பயன்படுத்துகிறார்கள். தற்போது விலை ஏறி உள்ளதால் அதற்கு பதிலாக பெரிய வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். பெரிய வெங்காயம் கிலோ ரூ.20 முதல் ரூ.40 என்ற அளவில் உள்ளதால் அதன் விற்பனை அதிகரித்து உள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இனிவரும் காலங்களிலும் மழை அதிகரித்தால் சின்ன வெங்காயத்தின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது என்றார்.

    ×