search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode east"

    • 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
    • டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதோடு அயோத்தியின் மில்கிபூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    இதே போல் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

    • வாக்குப்பதிவு மாலை 6.00 மணிக்கு நிறைவு பெறுகிறது.
    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்தத் தொகுதிக்கு கடந்த மாதம் 7-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இடைத்தேர்தலில் தி.மு.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவு பெற்ற நிலையில், தற்போது வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை ஒட்டி தொகுதி முழுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, அந்தத் தொகுதியில் உள்ள அரசின் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளின் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் வாக்குரிமை உள்ள அனைவரும் அவசியம் வாக்களிக்க வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    • செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி வைப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.
    • ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளராக இருந்தவர் செந்தில் முருகன்.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அதிமுக நிர்வாகி செந்தில் முருகன் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி வைப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.

    ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளராக இருந்தவர் செந்தில் முருகன்.

    அதிமுக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    ஆனால், தலைமை எடுத்த முடிவுக்கு மாறாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததால் கட்சியில் இருந்து செந்தில் முருகன் நீக்கம் செய்யப்படுவதாக இபிஎஸ் அறிவித்துள்ளார்.

    • மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
    • திமுகவுக்கு எதிரான வாக்குகளை பெறுவதற்காக சீமான் இவ்வாறு அவர் பேசுகிறார்

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி முழு ஆதரவு அளிக்கு"ம் என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியது தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர், "ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தத்துவம் இருக்கிறது. மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்க வேண்டும். இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது இந்த கருத்தை அவர் கூறுவது இடைத்தேர்தலை மனதில் வைத்து பேசுகிறார் என்று அர்த்தம்.

    திமுகவுக்கு எதிரான வாக்குகளை பெறுவதற்காக சீமான் இவ்வாறு அவர் பேசுகிறார் என்று நினைக்கிறேன். பெரியார் குறித்து அவதூறு கருத்துகளை கூறி மக்களை திசை திருப்ப முடியாது" என்று தெரிவித்தார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது உறுதி என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
    • பா.ஜ.க. போட்டியிட்டால் ஆதரிப்போம் என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க.வும் காங்கிரசுக்காக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 11 அமைச்சர்களை உள்ளடக்கிய 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை தி.மு.க. அமைத்துள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரையில் த.மா.கா. ஏற்கனவே போட்டியிட்ட தொகுதி. அதனால் த.மா.கா. போட்டியிடக் கூடும் என கூறப்பட்டது. ஆனால் இம்முறை அ.தி.மு.க. இ.பி.எஸ். அணி போட்டியிட விரும்பியதால் அதனை த.மா.கா. ஏற்றுக்கொண்டது.

    பா.ஜ.க. போட்டியிட்டால் ஆதரிப்போம் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி. மக்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர். இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும். விரைவில் வேட்பாளர் தேர்வு நடைபெறும். நாங்கள் இருவரும் இணைந்து கையெழுத்திட்டால்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் நிலை உள்ளது. எடப்பாடி பழனிசாமி தாமாக முன்வந்து இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ததால், ஒரே ஒரு பதவியாக ஒருங்கிணைப்பாளர் பதவிதான் உள்ளது என தெரிவித்தார்.

    ×