search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cockfighting"

    • ஏலூர், கிருஷ்ணா மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் அதிக அளவில் நேற்று சேவல் சண்டைகள் நடத்தப்பட்டன.
    • ஏ.டி.எம்.மில் பணம் இல்லாததால் பொதுமக்களுக்கு அவதி ஏற்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களாக சேவல் சண்டை களை கட்டி உள்ளது. மாநிலம் முழுவதும் இந்த சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் அதனை மீறி போட்டிகள் நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வயல்வெளிகளில் பிரமாண்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நூற்றுக்கணக்கான சேவல்கள் பங்குபெறும் சண்டைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஏலூர், கிருஷ்ணா மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் அதிக அளவில் நேற்று சேவல் சண்டைகள் நடத்தப்பட்டன. இந்த இடங்களில் துரித உணவு மையங்கள் டீக்கடைகள் என பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது.

    சில அரங்கங்களில் மதுபானம் குட்கா மற்றும் புகையிலை பொருட்களும் விற்கப்பட்டன.

    சேவல்களுக்கு ஆற்றல் மிக்க உணவுகள் வழங்கப்பட்டன. சில இடங்களில் சேவல்களுக்கு வயாகரா மாத்திரை வழங்கப்பட்டது.


    காலில் கட்டப்பட்ட கத்தியுடன் சேவல்கள் ஆக்ரோஷமாக மோதின. ஒவ்வொரு சேவல்கள் மீதும் லட்ச கணக்கில் பணம் பந்தயமாககட்டப்பட்டது.

    இதற்காக சூதாட்ட மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தன . பணம் அதிகமாக கட்டப்பட்டதால் சேவல் சண்டை நடந்த பகுதிகளில் நேற்று ஏ.டி.எம்.மில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல ஏ.டி.எம். மையங்கள் பணம் இல்லாமல் காலியாக கிடந்தன.

    இதனை தவிர்க்க சேவல் சண்டை நடைபெற்ற இடங்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யவும் ஏற்பாடு செய்தனர் .அதன் மூலமாக பலர் பந்தயம் கட்டினர். நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.500 கோடி வரை பணம் பந்தயமாக கட்டப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

    சங்கராந்தி பண்டிகை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்.மில் பணம் இல்லாததால் பொதுமக்களுக்கு அவதி ஏற்பட்டது.

    இது குறித்து தொழிலாளி ஒருவர் கூறுகையில்,

    நான் சேவல் சண்டையில் முதலில் ஒரு லட்சத்தை இழந்தேன். ஆனால் அதற்கு பிறகு பணம் கட்டி ரூ.3 லட்சம் வென்றேன் என தெரிவித்துள்ளார். இதேபோல பலரும் சேவல் சண்டைகளில் பணம் வென்றதாக தெரிவித்துள்ளனர்.

    • இளைஞர்கள் குவிந்ததால் சேவல் சண்டை பெரும் வரவேற்பை பெற்றது.
    • ஆந்திராவில் பெரிய அளவில் 30 இடங்களில் சேவல் சண்டை நடந்தது.

    திருப்பதி:

    ஆந்திராவில் நேற்று சங்கராந்தி பண்டிகை கோலபாலமாக கொண்டாடப்பட்டது. சங்கராந்தி பண்டிகையையொட்டி நடத்தப்படும் சேவல் சண்டை தொடங்கியது.

    கிருஷ்ணா, என்.டி.ஆர், மேற்கு கோதாவரி கிழக்கு, கோதாவரி, கோணசீமா , ஏலூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கன்னவரம், சிஞ்சிநாடா, பூபால பள்ளி, திருவூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    டிஜிட்டல் திரைகள் பேனர்கள் கடைகள் ஓட்டல்கள் துரித உணவகங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்ததால் சேவல் சண்டை பெரும் வரவேற்பை பெற்றது.

    சேவல் சண்டைக்கு ஆந்திர மாநில அரசு தடை விதித்து இருந்தாலும் வரவேற்பு அதிக அளவில் இருந்ததால் கண்டும் காணாமல் இருந்து விட்டனர்.


    பல்வேறு கிராமங்களில் இருந்து ரூ.2 லட்சம் முதல் அதற்கு மேற்பட்ட விலையுயர்ந்த சேவல்கள் கொண்டு வரப்பட்டு இருந்தன. சென்னை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சாப்ட்வேர் என்ஜினியர்கள் திரளாக வந்திருந்தனர்.

    சேவல்கள் மீது ரூ.50 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரை பணத்தை பந்தயமாக கட்டினார். இதனால் ஒரே நாளில் பல கோடி ரூபாய் கைமாறியதாக கூறப்படுகிறது.

    நேற்று ஆந்திராவில் பெரிய அளவில் 30 இடங்களில் சேவல் சண்டை நடந்தது.

    3 நாட்கள் நடைபெறும் போட்டிகளில் பல கோடி வரை பந்தயம் நடைபெறும் என சேவல் சண்டை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    • ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
    • சோதனையில் சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் குமாரசாமி தெரு பகுதியில், சேவல் சண்டை நடைபெற்று வருவதாக ராசிபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.

    அப்போது சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அங்கிருந்து 5 சேவல்கள், ரொக்கம் ரூ. 500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் சேவல் சண்டையில் ஈடுபட்டதாக தட்டான்குட்டை பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 25), குமாரசாமி தெருவைச் சேர்ந்த பெரியசாமி (32), அணைப்பாளையம் மூர்த்தி (30), கண்ணூர்பட்டி சதீஷ்குமார்(33), தட்டான்குட்டை கேசவன்(22), சந்திரசேகரன்(26), முள்ளுவாடிகேட் சுரேஷ் (32), முனியப்பன்(36), மணிமாறன்(35), லட்சுமணன்(40) உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பிறகு அவர்களை ஜாமினில் விடுதலை செய்தனர்.

    • சிலர் பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபடுவது தெரியவந்தது.
    • போலீசாரை கண்டதும் பந்தயம் கட்டி சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த நபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த விடையூர் ஏரி பகுதியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சிலர் அங்கு பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபடுவது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் பந்தயம் கட்டி சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த நபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    அவர்களில் சீனிவாசன், ஜானகிராமன், விக்னேஸ்வரன், பாலாஜி, பார்த்திபன், ஆசான்பாஷா உள்பட 6 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் மீது திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×