என் மலர்
நீங்கள் தேடியது "Cockfighting"
- சுமார் 20,000 டாலர்கள் பரிசுத் தொகையைத் திருடிச் சென்றனர்.
- குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஈக்வடார் நாட்டில் சேவல் சண்டையின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். ஒன்பது பேர் காயமடைந்தனர்.
மனாபி மாகாணத்தில் வலென்சியாவில் உள்ள சேவல் சண்டை அரங்கில் கடந்த வியாழக்கிழமை இரவு 11:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. சண்டையை பார்க்க மக்கள் கூடியிருந்த நிலையில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு சுமார் 20,000 டாலர்கள் பரிசுத் தொகையைத் திருடிச் சென்றனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு டொமிங்கோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் 12 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த தாக்குதல் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்த விசாரணை நடந்து வரும் சூழலில் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
- சோதனையில் சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வந்ததை போலீசார் கண்டறிந்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் குமாரசாமி தெரு பகுதியில், சேவல் சண்டை நடைபெற்று வருவதாக ராசிபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அங்கிருந்து 5 சேவல்கள், ரொக்கம் ரூ. 500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் சேவல் சண்டையில் ஈடுபட்டதாக தட்டான்குட்டை பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 25), குமாரசாமி தெருவைச் சேர்ந்த பெரியசாமி (32), அணைப்பாளையம் மூர்த்தி (30), கண்ணூர்பட்டி சதீஷ்குமார்(33), தட்டான்குட்டை கேசவன்(22), சந்திரசேகரன்(26), முள்ளுவாடிகேட் சுரேஷ் (32), முனியப்பன்(36), மணிமாறன்(35), லட்சுமணன்(40) உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பிறகு அவர்களை ஜாமினில் விடுதலை செய்தனர்.
- இளைஞர்கள் குவிந்ததால் சேவல் சண்டை பெரும் வரவேற்பை பெற்றது.
- ஆந்திராவில் பெரிய அளவில் 30 இடங்களில் சேவல் சண்டை நடந்தது.
திருப்பதி:
ஆந்திராவில் நேற்று சங்கராந்தி பண்டிகை கோலபாலமாக கொண்டாடப்பட்டது. சங்கராந்தி பண்டிகையையொட்டி நடத்தப்படும் சேவல் சண்டை தொடங்கியது.
கிருஷ்ணா, என்.டி.ஆர், மேற்கு கோதாவரி கிழக்கு, கோதாவரி, கோணசீமா , ஏலூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கன்னவரம், சிஞ்சிநாடா, பூபால பள்ளி, திருவூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
டிஜிட்டல் திரைகள் பேனர்கள் கடைகள் ஓட்டல்கள் துரித உணவகங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்ததால் சேவல் சண்டை பெரும் வரவேற்பை பெற்றது.
சேவல் சண்டைக்கு ஆந்திர மாநில அரசு தடை விதித்து இருந்தாலும் வரவேற்பு அதிக அளவில் இருந்ததால் கண்டும் காணாமல் இருந்து விட்டனர்.

பல்வேறு கிராமங்களில் இருந்து ரூ.2 லட்சம் முதல் அதற்கு மேற்பட்ட விலையுயர்ந்த சேவல்கள் கொண்டு வரப்பட்டு இருந்தன. சென்னை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சாப்ட்வேர் என்ஜினியர்கள் திரளாக வந்திருந்தனர்.
சேவல்கள் மீது ரூ.50 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரை பணத்தை பந்தயமாக கட்டினார். இதனால் ஒரே நாளில் பல கோடி ரூபாய் கைமாறியதாக கூறப்படுகிறது.
நேற்று ஆந்திராவில் பெரிய அளவில் 30 இடங்களில் சேவல் சண்டை நடந்தது.
3 நாட்கள் நடைபெறும் போட்டிகளில் பல கோடி வரை பந்தயம் நடைபெறும் என சேவல் சண்டை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
- ஏலூர், கிருஷ்ணா மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் அதிக அளவில் நேற்று சேவல் சண்டைகள் நடத்தப்பட்டன.
- ஏ.டி.எம்.மில் பணம் இல்லாததால் பொதுமக்களுக்கு அவதி ஏற்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களாக சேவல் சண்டை களை கட்டி உள்ளது. மாநிலம் முழுவதும் இந்த சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் அதனை மீறி போட்டிகள் நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வயல்வெளிகளில் பிரமாண்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நூற்றுக்கணக்கான சேவல்கள் பங்குபெறும் சண்டைகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஏலூர், கிருஷ்ணா மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் அதிக அளவில் நேற்று சேவல் சண்டைகள் நடத்தப்பட்டன. இந்த இடங்களில் துரித உணவு மையங்கள் டீக்கடைகள் என பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது.
சில அரங்கங்களில் மதுபானம் குட்கா மற்றும் புகையிலை பொருட்களும் விற்கப்பட்டன.
சேவல்களுக்கு ஆற்றல் மிக்க உணவுகள் வழங்கப்பட்டன. சில இடங்களில் சேவல்களுக்கு வயாகரா மாத்திரை வழங்கப்பட்டது.

காலில் கட்டப்பட்ட கத்தியுடன் சேவல்கள் ஆக்ரோஷமாக மோதின. ஒவ்வொரு சேவல்கள் மீதும் லட்ச கணக்கில் பணம் பந்தயமாககட்டப்பட்டது.
இதற்காக சூதாட்ட மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தன . பணம் அதிகமாக கட்டப்பட்டதால் சேவல் சண்டை நடந்த பகுதிகளில் நேற்று ஏ.டி.எம்.மில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல ஏ.டி.எம். மையங்கள் பணம் இல்லாமல் காலியாக கிடந்தன.
இதனை தவிர்க்க சேவல் சண்டை நடைபெற்ற இடங்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யவும் ஏற்பாடு செய்தனர் .அதன் மூலமாக பலர் பந்தயம் கட்டினர். நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.500 கோடி வரை பணம் பந்தயமாக கட்டப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
சங்கராந்தி பண்டிகை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்.மில் பணம் இல்லாததால் பொதுமக்களுக்கு அவதி ஏற்பட்டது.
இது குறித்து தொழிலாளி ஒருவர் கூறுகையில்,
நான் சேவல் சண்டையில் முதலில் ஒரு லட்சத்தை இழந்தேன். ஆனால் அதற்கு பிறகு பணம் கட்டி ரூ.3 லட்சம் வென்றேன் என தெரிவித்துள்ளார். இதேபோல பலரும் சேவல் சண்டைகளில் பணம் வென்றதாக தெரிவித்துள்ளனர்.
- ஆந்திராவில் சேவல் சண்டைக்கு மாநில அரசு தடை விதித்து உள்ளது.
- சேவல் சண்டைகள் பங்கேற்பவர்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பந்தயம் கட்டுகின்றனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகையின் போது சேவல் சண்டை பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திரா மாநிலம் அன்னமய்யா விஜயநகரம் கல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம், விசாகப்பட்டினம் வட ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் சேவல் சண்டை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
சண்டை சேவல்களின் கால்களில் கத்தியை கட்டி பந்தயம் நடத்துவதால் அதனை கண்டுகளிக்கும் பொதுமக்கள் மீது சேவல்கள் விழும் போது அதன் கால்களில் கட்டப்பட்டுள்ள கத்தியில் வெட்டுப்பட்டு பலர் உயிரிழந்து உள்ளனர். இதனால் ஆந்திராவில் சேவல் சண்டைக்கு மாநில அரசு தடை விதித்து உள்ளது.
போலீசாரின் தடையை மீறி சங்கராந்தி தொடங்குவதற்கு முன்பே தற்போது வட ஆந்திராவில் ஆங்காங்கே சேவல் சண்டை நடந்து வருகிறது. தொடங்கியுள்ள சேவல் சண்டை பிப்ரவரி மாத கடைசி வரை நடைபெறும்.
போலீசார் சேவல் சண்டை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதால் பந்தய நடத்துபவர்கள் புதிய இடங்களை தேர்வு செய்து சேவல் சண்டை நடத்தி வருகின்றனர். சேவல் சண்டைகள் பங்கேற்பவர்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பந்தயம் கட்டுகின்றனர். இதனால் சேவல் சண்டையில் பல கோடி ரூபாய் பந்தயம் கட்டப்பட்டு வருகிறது.
அனகா பள்ளி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சேவல் சண்டை நடத்தி க்கொண்டு இருந்த 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 சண்டை சேவல்களையும், ரூ.60 ஆயிரத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சினிமா செட்டிங் போல் அமைக்கப்பட்டு இருந்த பெரிய கூண்டுகளில் இருந்து சேவல் திறந்து விடப்பட்டன.
- சேவல்கள் சண்டையிடும் போது கத்தி வெட்டுப்பட்டு சில சேவல்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தன.
ஆந்திராவில் சங்கராந்தியையொட்டி தடையை மீறி ஆண்டுதோறும் பாரம்பரியமான சேவல் சண்டை நடத்தப்படுகிறது.
நேற்று சங்கராந்தி பண்டிகை என்பதால் ஆந்திராவில் ஆட்டுக்கிடா சண்டை, பட்டம் விடுதல், சேவல் சண்டை கோலாகலமாக நடந்தது.
தடையை மீறி பாரம்பரிய சேவல் சண்டை ஆங்காங்கே நடந்தது. கிருஷ்ணா மாவட்டத்தில் எட்புகல்லு, உப்பலூர், காங்கிபாடு, அம்பாபுரம் உள்ளிட்ட இடங்களில் சேவல் சண்டை நடந்தது. சேவல் சண்டை பிரம்மாண்ட திரைகள் மற்றும் எல்.இ.டி. டி.வி.கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்தனர்.
சினிமா செட்டிங் போல் அமைக்கப்பட்டு இருந்த பெரிய கூண்டுகளில் இருந்து சேவல் திறந்து விடப்பட்டன.
ஆக்ரோஷமாக கூண்டுகளில் இருந்து வெளியே வந்த சேவல்கள் நீயா நானா என போட்டி போட்டு அந்தரத்தில் குதித்து சண்டையிட்டன. சேவல்களின் கால்களில் கூர்மையான கத்திகள் கட்டப்பட்டு இருந்தன.
இதனால் சேவல்கள் சண்டையிடும் போது கத்தி வெட்டுப்பட்டு சில சேவல்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தன.
சேவல் சண்டையை பார்க்க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், சிறியவர்கள், பெரியவர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து இருந்ததால் கூட்டம் அலைமோதியது.
சண்டையிடும் சேவல்கள் மீது லட்சக்கணக்கில் போட்டி போட்டு பந்தயம் கட்டினர். இதனால் நேற்று ஒரே நாளில் கிருஷ்ணா மாவட்டத்தில் மட்டும் ரூ.400 கோடிக்கு மேல் சேவல் பந்தயம் நடந்ததாக கூறப்படுகிறது.
- சேவல் சண்டை நடந்த இடங்களில் கண்ணாடிகளை உடைத்து காரில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளை அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
- கடந்த 3 நாட்களில் ரூ. 1,500 கோடிக்கு சண்டையில் பந்தயம் நடந்ததாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஆந்திராவில், சங்கராந்தி பண்டிகையையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக சேவல் பந்தயம் நடந்தது. பாரம்பரியமான சேவல் சண்டை காண்பதற்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குவிந்தனர்.
பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்காக பவுன்சர்கள் மற்றும் பெண் பவுன்சர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆண்கள் மட்டுமின்றி இளம் பெண்களும் சேவல் மீது பந்தயம் கட்டினர். சில பெண்கள் காய்கறி வாங்கும் பைகளில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகளை எடுத்து வந்து பந்தயத்தில் ஈடுபட்டனர். சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ. 50 லட்சத்தை பந்தயம் கட்டி இழந்தார். பின்னர் சூதாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் ரூ 5 லட்சத்தை வென்றார். அமலாபுரத்தில் நடந்த பந்தயத்தில் சேவல் ஒன்று ரூ.1.20 கோடியை வென்று அசத்தியது.
பேரா வலி அடுத்த கந்தவள்ளியில் நடந்த சேவல் பந்தயத்தை காண வந்த வாலிபர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மற்றொரு வாலிபர் சேவல் பந்தயத்தில் பணத்தை இழந்ததால் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அங்கிருந்தவர்கள் வாலிபரை மீட்டு தனது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சேவல் சண்டை நடந்த இடங்களில் கடந்த 3 நாட்களாக மதுபான கடைகள் இரவு பகல் பாராமல் திறந்து இருந்தனர்.
இதனால் மது மற்றும் மாமிச விருந்து நடந்தது.
மேலும் சிலர் பெண்களை அழைத்து வந்து குத்தாட்டம் நடத்தினர். தெலுங்கானாவை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் சேவல் பந்தயம் நடத்தும் அமைப்பாளர்கள் தன்னிடம் ரூ.7 லட்சத்தை மோசடி செய்ததாக ராம புறப்பாடு போலீசில் புகார் செய்தார்.
சேவல் சண்டை நடந்த இடங்களில் கண்ணாடிகளை உடைத்து காரில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளை அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 நாட்களில் ரூ. 1,500 கோடிக்கு சண்டையில் பந்தயம் நடந்ததாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
- சண்டை சேவல்கள் மீது பந்தயமாக கோடிக்கணக்கில் பணத்தை கட்டினர்.
- ராஜேந்திரன் என்பவரது சேவல் பந்தயத்தில் பங்கேற்று தோற்றுப் போனது.
திருப்பதி:
ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையையொட்டி பாரம்பரிய சேவல் சண்டை பந்தயம் கடந்த 3 நாட்களாக நடந்தது. இதில் சண்டை சேவல்கள் மீது பந்தயமாக கோடிக்கணக்கில் பணத்தை கட்டினர்.
சேவல் பந்தயத்தில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் கைமாறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம், என்.ஆர். பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது சேவல் பந்தயத்தில் பங்கேற்று தோற்றுப் போனது.
இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் அதை கொன்று ஏலம் விட முடிவு செய்தார். இது குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். இதனைக் கண்ட ஏராளமானோர் ஏலத்தில் கலந்து கொண்டனர்.
சேவலை கொன்று சுத்தம் செய்து முழு சேவலாக எண்ணையில் வறுத்தார். பின்னர் வறுக்கப்பட்ட சேவல் ஏலம் விடப்பட்டது. பலரும் போட்டி போட்டு சேவல் கறியை ஏலம் கேட்டனர். இதில் ஜாலி புடியை சேர்ந்த மாகந்தி நவீன் சந்திரபோஸ் என்பவர் ரூ.1, 11.111 ரூபாய்க்கு வறுக்கப்பட்ட சேவலை ஏலத்தில் எடுத்தார்.
இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். பந்தயத்தில் தோற்ற சேவலை வறுத்து ஏலம் விட்டதில் அதிக லாபம் கிடைத்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்தார். உரிமையாளர் கோபம் அவருக்கு லாபத்தை கொடுத்தது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சிலர் பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபடுவது தெரியவந்தது.
- போலீசாரை கண்டதும் பந்தயம் கட்டி சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த நபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த விடையூர் ஏரி பகுதியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சிலர் அங்கு பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபடுவது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் பந்தயம் கட்டி சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த நபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
அவர்களில் சீனிவாசன், ஜானகிராமன், விக்னேஸ்வரன், பாலாஜி, பார்த்திபன், ஆசான்பாஷா உள்பட 6 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் மீது திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






