search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "allowed"

    • பல்வேறு வழக்குகள் நிலுவை தொடர்பாக, பணியிடம் நிரப்புவதில் ஆண்டுக்கணக்கில் இழுபறி நீடிக்கிறது.
    • சனிக்கிழமை வேலை நாள் பணிகளை மண்டல அளவில் போக்குவரத்து இணை கமிஷனர்கள் கண்காணித்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்

    திருப்பூர்:

    மாநிலம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.,) 5 ஆய்வாளர்கள் பணிபுரிய வேண்டிய இடங்களில் இருவரும், 3 பேர் பணியாற்ற கூடிய இடங்களில் ஒருவரும் பணிபுரிகின்றனர்.பல்வேறு வழக்குகள் நிலுவை தொடர்பாக, பணியிடம் நிரப்புவதில் ஆண்டுக்கணக்கில் இழுபறி நீடிக்கிறது. இதனால் ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

    வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், நிலுவையில் உள்ள ஓட்டுனர் உரிம விண்ணப்பங்களுக்காக டெஸ்டிங் பணி மட்டும் சனிக்கிழமைகளில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பணி நாளாக மாற்றினால், முன்கூட்டியே மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி, செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    சனிக்கிழமை வேலை நாள் பணிகளை மண்டல அளவில் போக்குவரத்து இணை கமிஷனர்கள் கண்காணித்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    இதுதொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் தரப்பில் இருந்து, அனைத்து ஆர்.டி.ஓ.,க்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் பரவலாக மழை நீடித்து வருகிறது.
    • இன்று காலை ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக ஆய்க்குடியில் 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இதனால் அங்கு கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

    குளிக்க அனுமதி

    இந்நிலையில் இன்று காலை நீர்வரத்து சீரானதை தொடர்ந்து ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் மெயினருவியில் மட்டும் 3-வது நாளாக தடை நீடித்தது.

    அங்கும் நீர்வரத்து சீரான பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மெயினருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் பழையகுற்றாலம் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க சென்றனர்.

    அணை நிலவரம்

    அணை பகுதிகளை பொறுத்தவரை கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 25 மில்லிமீட்டரும், குண்டாறில் 18.6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. தொடர்மழையின் காரணமாக கடனா அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 71.80 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 79.25 அடியாகவும் உள்ளது.

    குண்டாறு அணையில் 34.50 அடி நீர் இருப்பு உள்ளது. அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 63 அடியாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நெல் மற்றும் வாழை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
    • சாலை பராமரிப்பு பணியால் மீண்டும் கோவிலுக்கு செல்ல வனத்துறை சார்பில் கடந்த 3 மாதங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி வனத்துறை சோதனை சாவடியில் இருந்து, திருமலைநம்பி கோவில் வரையில் 4 கிலோ மீட்டர் தூரமுள்ள மலைப்பாதை பராமரிப்பு பணிகள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.33 லட்சம் செலவில் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கியது. இதனைத்தொடர்ந்து திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். முதல் பாலத்தில் இருந்து, கோவில் வரை வீல் டிராக் அமைக்கும் பணிகள் மந்தமாக நடப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் தற்போது சாலை பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. ஆனால் பக்தர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே தற்போது சாலை பராமரிப்பு பணியால் மீண்டும் கோவிலுக்கு செல்ல வனத்துறை சார்பில் கடந்த 3 மாதங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர். தற்போது சாலை பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதால் திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. #keezhadiresearch #centralgovernment
    புதுடெல்லி:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கீழடி. இங்கு பண்டைய தமிழர் நாகரீகம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிய கடந்த 2015-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது. முதற்கட்டமாக நடந்த இந்த அகழாய்வில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. இதனையடுத்து 2016-ம் ஆண்டு 2-ம் கட்டமாகவும், 2017-ம் ஆண்டு 3-ம் கட்டமாகவும் கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்றது. இதில் கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என சுமார் 1,600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. 

    அகழாய்வு முடிவில் கீழடியில் வைகை ஆற்றின் கரையோரத்தில் பண்டைய தமிழர்கள் நகரம் அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதனைத்தொடர்ந்து கீழடியில் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கீழடியில் ஆய்வு செய்து 4-ம் கட்ட அகழாய்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.

    இந்த நிலையில், கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 2018-19-ம் ஆண்டில் அகழாய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். கீழடியில் மீண்டும் அகழாய்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #keezhadiresearch #centralgovernment
    நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பை தளர்த்தி இருக்கும் சுப்ரீம் கோர்ட்டு, அந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு மேலும் ஒரு வார காலம் அவகாசம் வழங்கி இருக்கிறது. #NEET #NEETUGExam #SupremeCourt
    புதுடெல்லி:

    மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுதேர்வை எழுதுவதற்கான வயது உச்சவரம்பை இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயம் செய்ததன் அடிப்படையில், சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) சில மாதங்களுக்கு முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் நீட் தேர்வை எழுதுவதற்கு பொதுப் பிரிவு மாணவர்களுக்கான வயது உச்சவரம்பு 25 என்றும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 30 என்றும் கூறப்பட்டு இருந்தது.



    இந்த அறிவிப்பை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த ஜலாலுதீன், சுரேஷ் என்ற இரு மாணவர்கள் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, சி.பி.எஸ்.இ.யின் அறிவிப்பை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தது.

    இந்த நிலையில், இந்த வயது உச்சவரம்பை ரத்து செய்யக்கோரி அந்த மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாட்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், நீட் தேர்வை எழுதுவதற்கான வயது உச்சவரம்பை தளர்த்தி உத்தரவு பிறப்பித்தனர்.

    நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    2019-ம் ஆண்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் மனுதாரர்கள் உள்ளிட்ட 25 முதல் 30 வயது வரையிலான மாணவர்கள் விண்ணப்பிக்கவும், தேர்வை எழுதவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    தேசிய தேர்வு முகமையின் இணையதளம், இதுபோன்ற மாணவர்கள் 2019-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் மேலும் ஒரு வாரத்துக்கு திறந்து இருக்கும். அதாவது இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுகிறது. (நீட் தேர்வுக்கு நவம்பர் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.)

    இந்த வயது வரம்பை தளர்த்தி பிறப்பித்துள்ள உத்தரவு இடைக்கால உத்தரவுதான். பொதுப்பிரிவுக்கான வயது வரம்பை தளர்த்துவது என்பது இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தது ஆகும்.

    இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

    இட ஒதுக்கீடு பிரிவினர் 30 வயது வரை நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் நிலையில், 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப்பிரிவு மாணவர்களுக்கு தற்போது இந்த இடைக்கால சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது என்றும், எனவே அவர்கள் விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், நீட் தேர்வு பிரச்சினை தொடர்பான கேரள மாணவர்களின் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக காலக்கெடுவை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து உத்தரவிட்டு இருக்கிறது.  #NEET #NEETUGExam #SupremeCourt
    ரெயில் நிலையங்களில் உணவகம் நடத்த குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அனுமதி தரக்கூடாது. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    இந்தியாவில் உள்ள ரெயில் நிலையங்களில் உணவகம் நடத்த ரெயில்வே நிர்வாகம் லைசென்ஸ் வழங்குகிறது. ஈரோடு ரெயில் நிலையத்தில் உணவகம் நடத்த பி.கே.அமினா என்பவருக்கு ரெயில்வே நிர்வாகம் லைசென்ஸ் வழங்கியது. லைசென்ஸ் காலம் முடிவடைந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டது.

    இந்தநிலையில், மீண்டும் லைசென்சை புதுப்பிக்கக்கோரி அமினா, ரெயில்வே துறையை நாடினார். அவரது கோரிக்கையை ரெயில்வே நிர்வாகம் எதிர்த்தது. இதைத்தொடர்ந்து அவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர், ‘ரெயில் நிலையங்களில் உணவகம் நடத்த குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அனுமதி தரக்கூடாது. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். மனுதாரருக்கு ஏற்கனவே ஒருமுறை லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளது’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 
    இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் மாணவர்களின் பாச போராட்டத்தால் அதே பள்ளியில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டு, தனது பணியை தொடங்கினார். #TeacherBhagawan
    பள்ளிப்பட்டு:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் பகவான். இவர் சில தினங்களுக்கு முன் பணிநிரவலில் திருத்தணியை அடுத்த அருங்குளம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

    இதையடுத்து வெளியகரம் பள்ளியில் பணி விடுவிப்பு கடிதம் பெற்று திரும்பிய பகவானை மாணவ-மாணவிகள் வழிமறித்து வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என்று கதறி அழுதனர்.



    இதையடுத்து ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் தொடர்ந்து 10 நாட்கள் பணியாற்ற அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள். மாணவர்கள் ஆசிரியர் பகவானை வழிமறித்து கதறி அழுதபோது தலைமை ஆசிரியர் அரவிந்த் மாணவ-மாணவிகளையும், அவர்களது பெற்றோரையும் அமைதிபடுத்த பகவானுக்கு வழங்கிய பணி விடுவிப்பு கடிதத்தை அவர்கள் முன்னால் கிழித்து எறிந்தார்

    இதையடுத்து மாணவ- மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் அமைதியாகி கலைந்து சென்றனர். இந்த நிலையில் ஆசிரியர் பகவானுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பணி விடுவிப்பு கடிதம் வழங்கப்பட்டு அவர் சனிக்கிழமை அருங்குளம் பள்ளிக்கு சென்று பணியில் சேர்ந்துவிட்டார்.



    இந்த நிலையில் மாணவர்களின் பாச போராட்டம் மற்றும் பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர் பகவானை வெளியகரம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் மாற்றுபணியில் பணியாற்ற கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதையடுத்து ஆசிரியர் பகவான் கடந்த திங்கட்கிழமை முதல் மாற்றுப்பணியில் வெளியகரம் பள்ளியிலேயே தனது பணியை தொடங்கினார்.  #TeacherBhagawan  #tamilnews  
    ×