search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alcohol Prohibition"

    • மதுப்பழக்கத்தால் எவ்வளவு இளைஞர்கள் பணி செய்யும் திறனை இழக்கிறார்கள்?
    • மதுவின் பயன்பாட்டால் தமிழகத்தின் மாநில ஓட்டுமொத்த உற்பத்தி மதிப்பு எந்த அளவுக்கு குறைகிறது?

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மதுக்கடைகளின் மது விற்பனை நேரத்தை மாற்றியமைக்கும் திட்டம் இல்லை; 90 மிலி மதுப்புட்டிகளை அறிமுகம் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்திருக்கிறார். 90 மிலி மது கிடைக்காததால் பலரும் அதிக அளவு மதுவை வாங்கி, பகிர்ந்து கொள்ள கூட்டாளி கிடைக்காமல் எவ்வளவு நேரம் காத்துக்கிடக்கிறார்கள்? என்பன போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த வினாக்களுக்கு விடை காண்பதற்காக தமிழக அரசு அதன் பொன்னான நேரத்தையும், பணத்தையும் செலவிட்டு கணக்கெடுப்பு நடத்தியுள்ளது என்று அமைச்சர் ஒருவரே கூறுவதைத் தான் பொறுப்புள்ள குடிமகனாக தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    மதுப்பழக்கத்தால் எவ்வளவு இளைஞர்கள் பணி செய்யும் திறனை இழக்கிறார்கள்? மதுவின் பயன்பாட்டால் தமிழகத்தின் மாநில ஓட்டுமொத்த உற்பத்தி மதிப்பு எந்த அளவுக்கு குறைகிறது? என்பன உள்ளிட்ட விடை காணப்பட வேண்டிய வினாக்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழ்நாட்டு மக்களிடம் பொதுவாக்கெடுப்பை நடத்தி, அதன் முடிவுகளை செயல்படுத்துவது தான் நன்மை. அதற்கு தயாரா? என்பதை தமிழக அரசும், மதுவிலக்குத்துறை அமைச்சரும் தெளிவு படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக அரசு பெண்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள், பட்டதாரிகள், விளையாட்டு வீரர்கள், விபத்துகளில் சிக்கியோர் என பலருக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
    • மதுவை ருசித்து அதற்கு அடிமையாகும் ஒரு புதிய தலைமுறை தமிழகத்தில் உருவாகிக் கொண்டிருப்பதை தமிழக அரசு கவனிக்க தவறுவது வருத்தம் அளிக்கிறது

    நெல்லை:

    காந்தியவாதி செங்கோட்டை விவேகானந்தன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நலத்திட்டங்கள்

    தமிழக அரசு பெண்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள் விவசாயிகள், தொழில் முனைவோர், வயதானோர், பட்டதாரிகள், விளையாட்டு வீரர்கள், விபத்துகளில் சிக்கியோர் என பலருக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

    புதிய சாலைகள், பாலங்கள், கல்லூரிகள், சுகாதார வளாகம், நான்குவழி, விரைவு சாலைகள், மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகள் என நாட்டின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்துவதை போல் நாட்டில் மதுவினால் ஏற்படும் தீமைகள், உயிர் பலிகள், ஆபத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    வருத்தம் அளிக்கிறது

    மதுவை ருசித்து அதற்கு அடிமையாகும் ஒரு புதிய தலைமுறை தமிழகத்தில் உருவாகிக் கொண்டிருப்பதை தமிழக அரசு கவனிக்க தவறுவது வருத்தம் அளிக்கிறது. காந்தியவாதிகள் கேட்பதெல்லாம் பூரண மதுவிலக்கு கொள்கை அமலாவது மட்டுமே. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவது வரவேற்கத்தக்கது.

    ஆனால் அனைத்தையும் மறந்து மக்கள் அரசை நிந்திப்பது இந்த மது கடைகளால் சாதாரண மக்களும், சான்றோர் பெருமக்களும் வருந்துகின்ற பொது விஷயம் மதுக்கடைகளை வீதிகள் தோறும் திறந்து வைப்பதே. இதன் மூலம் குற்றங்கள் அதிகரிக்கிறது. எனவே அரசு மதுக்கடைகளை மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    பூரண மது விலக்கு

    மது கடைகளால் வருவாய் வருகிறது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மதுக்கடைகளை மூடினால் இன்னும் வருவாய் அதிகரிக்கும். எப்படி என்றால் குற்றங்களின் எண்ணிக்கை குறையும். சாவுகளின் எண்ணிக்கை குறையும் எனவே தமிழக அரசு உடனே பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    இவர் அவர் கூறினார்.

    பேட்டியின் போது ஓய்வுபெற்ற தாசில்தார் முத்துசாமி, திருமாறன் டாக்டர் ஏகலைவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சிவகங்கை ஆதி திராவிடர் நல விடுதியில் மாணவிகளுடன் மதுவிலக்கு ஆணையர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
    • தூய்மைப் பணியாளர்களிடம் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்திட அறிவுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட அலுவலக சிறு கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் மதிவாணன், கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் திட்ட செயல்பாடுகள், ஈராண்டு ஆய்வு மற்றும் கள ஆய்வுகள் மேற்கொண்டனர்.

    இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, கல்வித்துறை, ஆகியத் துறைகளின் சார்பில், துறை ரீதியாக செயல்ப டுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன் பயன்கள், நிதிநிலை, மற்றும் செலவி னங்கள் ஆகியவை குறித்தும், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மேற்கொ ள்ளப்பட்டு வரும் நட வடிக்கைகள் குறித்தும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேற்கண்ட துறைகள் ரீதியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், இதுவரை மேற்கொண்ட திட்டப்பணிகள், மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதி நிலைகள் ஆகியவை தொடர்பாக எடுத்துரைத்தனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தவும், அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளை முழு மையாக நிறைவேற்றவும், தேவையான நிதி மற்றும் சலுகைகளை பெற்றுத் தருவதற்கு அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் எனவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்துத்துறை அலுவலர்கள் தற்போது முனைப்போடு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொண்டு திட்டங்களின் பயன்களை முழுமையாக பொதுமக்களுக்கு சென்றடையச் செய்ய வேண்டும் என அலுவ லர்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையார் மதிவாணன் அறிவுறுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவைகளின் செயல்பாடுகள் குறித்து ஆணையர் ஆய்வு செய்தார். சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காஞ்சிரங்கால் ஊராட்சியிலுள்ள உயிர் எரிவாயு ஆலை, இயற்கை எரிவாயு மின் இயக்கி நிலையத்தில் ஆய்வு செய்து, மின் உற்பத்தித்திறன் மற்றும் தூய்மைப் பணியா ளர்களிடம் பணியின் போது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்திட அறிவுறுத்தி னார்.

    கலெக்டர் அலுவலக வளாக அருகிலுள்ள சிவகங்கை படிப்பக வட்ட மையத்தில், போட்டித் தேர்விற்கான பல்வேறு வகையான புத்தகங்கள் இருப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து சிவகங்கை ஆதிதி ராவிடர் நல மாணவியர் விடுதியில், ஆதிதிராவிடர் பள்ளி, கல்லூரி விடுதி மாணவியர்களுடன் விழிப்புணர்வு கலந்து ரையாடல் நிகழ்ச்சியில் ஆணையர் பங்கேற்றார்.

    இந்த நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் வானதி, கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), ரத்தினவேல் (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி மற்றும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பொது சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை போன்ற துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×