search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதி திராவிடர் நல விடுதியில் மாணவிகளுடன் மதுவிலக்கு ஆணையர்  கலந்துரையாடல்
    X

    சிவகங்கை ஆதி திராவிடர் நல விடுதியில் மாணவிகளுடன் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை ஆணையர் மதிவாணன் கலந்துரையாடினார்.

    ஆதி திராவிடர் நல விடுதியில் மாணவிகளுடன் மதுவிலக்கு ஆணையர் கலந்துரையாடல்

    • சிவகங்கை ஆதி திராவிடர் நல விடுதியில் மாணவிகளுடன் மதுவிலக்கு ஆணையர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
    • தூய்மைப் பணியாளர்களிடம் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்திட அறிவுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட அலுவலக சிறு கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் மதிவாணன், கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் திட்ட செயல்பாடுகள், ஈராண்டு ஆய்வு மற்றும் கள ஆய்வுகள் மேற்கொண்டனர்.

    இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, கல்வித்துறை, ஆகியத் துறைகளின் சார்பில், துறை ரீதியாக செயல்ப டுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன் பயன்கள், நிதிநிலை, மற்றும் செலவி னங்கள் ஆகியவை குறித்தும், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மேற்கொ ள்ளப்பட்டு வரும் நட வடிக்கைகள் குறித்தும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேற்கண்ட துறைகள் ரீதியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், இதுவரை மேற்கொண்ட திட்டப்பணிகள், மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதி நிலைகள் ஆகியவை தொடர்பாக எடுத்துரைத்தனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தவும், அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளை முழு மையாக நிறைவேற்றவும், தேவையான நிதி மற்றும் சலுகைகளை பெற்றுத் தருவதற்கு அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் எனவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்துத்துறை அலுவலர்கள் தற்போது முனைப்போடு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொண்டு திட்டங்களின் பயன்களை முழுமையாக பொதுமக்களுக்கு சென்றடையச் செய்ய வேண்டும் என அலுவ லர்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையார் மதிவாணன் அறிவுறுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவைகளின் செயல்பாடுகள் குறித்து ஆணையர் ஆய்வு செய்தார். சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காஞ்சிரங்கால் ஊராட்சியிலுள்ள உயிர் எரிவாயு ஆலை, இயற்கை எரிவாயு மின் இயக்கி நிலையத்தில் ஆய்வு செய்து, மின் உற்பத்தித்திறன் மற்றும் தூய்மைப் பணியா ளர்களிடம் பணியின் போது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்திட அறிவுறுத்தி னார்.

    கலெக்டர் அலுவலக வளாக அருகிலுள்ள சிவகங்கை படிப்பக வட்ட மையத்தில், போட்டித் தேர்விற்கான பல்வேறு வகையான புத்தகங்கள் இருப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து சிவகங்கை ஆதிதி ராவிடர் நல மாணவியர் விடுதியில், ஆதிதிராவிடர் பள்ளி, கல்லூரி விடுதி மாணவியர்களுடன் விழிப்புணர்வு கலந்து ரையாடல் நிகழ்ச்சியில் ஆணையர் பங்கேற்றார்.

    இந்த நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் வானதி, கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), ரத்தினவேல் (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி மற்றும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பொது சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை போன்ற துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×