search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Snoring"

    • ராஜேஷ்க்கு கடந்த 5 மாதமாக மூக்கடைப்பு மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் இருந்து வந்துள்ளது.
    • மூக்கினுள் இருந்த காளான் கண்ணுக்குள் ஊடுருவியதை அகற்றினர்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கச்சிமைலூர் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் ராஜேஷ் (வயது 7) இவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த 5 மாதமாக மூக்கடைப்பு மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் இவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் கணேஷ் ராஜா, வாசவி, ஞானவேல் மற்றும் மயக்கமருந்து மருத்துவர்கள் மகேந்திரவர்மன், தினேஷ், சிலம்பரசன், முத்துக்குமார், சாந்தி, சரண்ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பரிசோதனை செய்தனர். அதில் அவரது மூக்கில் சிறிய அளவிலான 3 பேட்டரிகள் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு எண்டோஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூக்கில் இருந்த பேட்டரிகளை அகற்றினர்.

    தொடர்ந்து இதே மருத்துவ குழுவினர் எலவனாசூர் கோட்டை கீழப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் அருண்குமார் (27) பொறியியல் படித்துள்ளார். இவருக்கும் மூச்சு விடுதலில் சிரமம் மற்றும் தலைவலி கண் பார்வைத் திறன் குறைபாடு இருந்துள்ளது. இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவரது மூக்கினுள் இருந்த காளான் கண்ணுக்குள் ஊடுருவியதை அகற்றினர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தென்தொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் இளையராஜா (29), சங்கராபுரம் அருகே காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஜிந்தா குமார் மகன் ஹரிதாஸ் (11) மற்றும் கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சியை சேர்ந்த சரவணன் (35) ஆகியோருக்கு குறட்டை வியாதி இருந்துள்ளது. இதையொட்டி இவர்கள் 3- பேரும் கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குறட்டை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அனைவருக்கும் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினர்.

    இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் உஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது, எண்டோஸ்கோபி, பூஞ்சை நோய், குறட்டை வியாதி ஆகியவற்றிற்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இதில் பயனாளிகள் அனைவருக்கும் தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் குறட்டை வியாதிக்கு 8 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது மேலும் தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரியில் அதிக பிரசவம் நமது கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறுகிறது என கூறினார். அப்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு, துணை முதல்வர் ஷமீம், நிலைய மருத்துவர் அனுபமா, உதவி நிலைய மருத்துவர்கள் பழமலை, பொற்செல்வி மற்றும் அனைத்து துறை தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    • 'குறட்டை' தீவிரமான உடல்நலக் கோளாறின் அறிகுறியாக இருக்கலாம்.
    • குறட்டை பிரச்சினையை தீர்ப்பதற்கு இயற்கை வழிகள் சிலவற்றைக் காண்போம்.

    தூங்கும்போது, மூச்சுக்காற்று தொண்டைப் பகுதியில் உள்ள மெல்லிய தளர்வான திசுக்களின் வழியாகச் செல்வதால் ஏற்படும் அதிர்வு ஒலியையே 'குறட்டை' என்கிறோம். குறட்டை வருவது இயல்பானதுதான் என்றாலும், பலருக்கு இது மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவிடுகிறது. சில நேரங்களில், 'குறட்டை' தீவிரமான உடல்நலக் கோளாறின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதிகப்படியான உடல் எடையைக் குறைத்தல், மதுப்பழக்கத்தை தவிர்த்தல், பக்கவாட்டு நிலையில் படுத்து உறங்குதல், சற்று உயரமான தலையணையைப் பயன்படுத்துதல் போன்ற ஒரு சில வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமாக குறட்டை விடுவதை நிறுத்த முடியும். இதுதவிர குறட்டை பிரச்சினையை தீர்ப்பதற்கு இயற்கையான வழிகள் சிலவற்றைக் காண்போம்.

    நீராவி பிடித்தல்: குறட்டைக்கான காரணங்களில் ஒன்று மூக்கில் ஏற்படும் அடைப்பு. இதனால், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும். இதற்கு ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதில் இருந்து வரும் நீராவியை 10 நிமிடங்களுக்கு மூக்கு வழியாக உள்ளிழுக்க வேண்டும். படுக்கைக்குச் செல்லும் முன்பு இவ்வாறு செய்யலாம். இதனால், மூக்கில் உண்டாகும் அடைப்பு நீங்கி, குறட்டை விடுவது நிற்கும்.

    புதினா மற்றும் வெந்தயம்: செரிமானப் பிரச்சினைகளாலும் குறட்டை ஏற்படலாம். இதற்கு, புதினா மற்றும் வெந்தயம் சிறந்த தீர்வாகும். வெந்தயம் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்து, அதை தூங்கச் செல்வதற்கு முன்பு சாப்பிடலாம். அதேபோல், ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயப் பொடி மற்றும் சிறிதளவு புதினா இலைகளைப் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இந்த நீரை வடிகட்டி, அதில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். இதனால், செரிமான பிரச்சினை நீங்குவதுடன், இரவில் நிம்மதியான உறக்கமும் கிடைக்கும்.

    ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன்: அரை டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் அரை டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் நன்றாகக் கலந்து, படுக்கைக்குச் செல்லும் முன்பு சாப்பிடலாம். இதுதவிர ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தூங்கச் செல்வதற்கு முன்னர் குடிக்கலாம். இது தொண்டைக்கு இதமாக இருப்பதுடன், குறட்டையையும் தடுக்கும்.

    பூண்டு: பூண்டில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இது சுவாச மண்டலத்தைச் சுத்தப்படுத்தி, நாசி பாதையில் சளி படிவதைத் தடுத்து குறட்டையைக் குறைக்கும். 2 அல்லது 3 பூண்டு பற்களை எடுத்து மென்று சாப்பிடவும். பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கவும். படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் குறட்டை நிற்கும்.

    • ஒருவரது குறட்டை சத்தம் யாரையும் தூங்க முடியாமல் செய்துவிடும்.
    • ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

    ஒருவரது குறட்டை சத்தம் அந்த அறையில்- சில சமயங்களில் அந்த வீட்டில், யாரையும் தூங்க முடியாமல் செய்துவிடும். குறட்டை விடுவதால் அவர்களாலேயே தொடர்ந்து தூங்க முடியாது. அப்படி வரும் தூக்கமும் ஆழ்ந்த தூக்கமாக இருக்காது.

    உடல் எடை அதிகரிக்கும்போதும், வயது ஏற ஏறவும் குறட்டை ஏற்படுகிறது. ஒருவித ஒவ்வாமையாலும் சைனஸ் பிரச்சினையாலும், மூக்கிலிருக்கும் மெல்லிய தடுப்புச் சுவர் வளைவதாலும், தொண்டையிலும் அடிநாக்கிலும் தசைநார்கள் வலுவிழப்பதாலும், குடிப்பழக்கத்தாலும், தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதாலும், தொண்டையில் உள்ள சதை தடிப்பதாலும் குறட்டை ஏற்படலாம். அதுவே குழந்தைகளுக்கு என்றால் டான்சில் அல்லது அடினாய்டுகள் ஏற்படுவதால் உள்நாக்கு நீண்டு, காற்று செல்லும் வழியை தடுத்தாலும் குறட்டை ஏற்படலாம்.

    பொதுவாகவே குறட்டை விடுபவர்களுக்கு தூக்கக்குறைவு ஏற்பட்டு, அடுத்த நாள் வேலைக்குச் செல்லும்போது அல்லது வேலையில் இருக்கும்போது கண்ணைச் செருகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

    இதயத் தசைகள் விரிவடையும். சில வேளைகளில் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றுக்கும் இது காரணமாக அமையலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    • குறட்டை பிரச்சினையை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்கள் கைகொடுக்கும்.
    • சில பழக்கவழக்கங்களை பின்பற்றுவது குறட்டையில் இருந்து விடுபட வழிவகுக்கும்.

    குறட்டை, தூக்கக்கோளாறு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். இது தூக்க சுழற்சியையும் தொந்தரவு செய்யக்கூடியது. தூங்கும்போது, கழுத்து தசைகள் இலகுவாகும். அப்போது மூக்கு, தொண்டை பாதை குறுகியதாக மாறும். அதனால் காற்று நுரையீரலுக்குள் செல்வது சிரமமாகும். மேலும் திசுக்கள் அதிர்வுக்குள்ளாகும். குறட்டை விடும்போதுதான் இந்த பிரச்சினைகள் உண்டாகும். குறட்டை பிரச்சினையை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்கள் கைகொடுக்கும்.

    சோயா: குறட்டை பிரச்சினை இருப்பவர்கள் பால் பொருட்களை உட்கொள்வது நல்லதல்ல. பசுவின் பால், பாலாடைக்கட்டி போன்றவை கபத்தை அதிகரிக்கும். இதனால் இரவில் குறட்டை பிரச்சினையும் அதிகமாகும். பால் பொருட்களுக்கு மாற்றாக சோயா பால் உள்ளிட்ட பிற சோயா பொருட்களை உட்கொள்ளலாம். அவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு குறட்டையையும் குறைக்கும்.

    தண்ணீர்: தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவது சளியை போக்கும். மார்புக்கும் இதமளிக்கும். சளி உருவாகுவதை தடுக்க உடலில் எப்போதும் நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். பருகினால் மார்புக்கு இதமளித்து குறட்டை பிரச்சினையில் இருந்து விடுபடவும் உதவும்.

    தூக்கம்: போதுமான நேரம் தூங்குவதும் குறட்டையை தவிர்க்க உதவும். உடலும், உள்ளமும் உற்சாகமாக இல்லாவிட்டால் தொண்டை, நாக்கு தசைகள் இறுக்கமடைந்துவிடக்கூடும். அதனாலும் குறட்டை உருவாகிவிடும். தினமும் 7 மணிநேர தூக்கம் அவசியம். தூங்குவதில் சிக்கல் இருந்தால் குறட்டை பிரச்சினையும் தலைதூக்கிவிடும்.

    பாதாம்: மெலடோனின் நிறைந்த உணவுகள் குறட்டையை குறைக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மெலடோனின் என்பது அடிப்படையில் ஒரு ஹார்மோனாகும். பாதாம், கிவி, செர்ரி மற்றும் அன்னாசி போன்ற பழங்களில் இந்த ஹார்மோன் நிறைந்திருக்கிறது. அவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது குறட்டையில் இருந்து விடுபட உதவும்.

    நாசி ஸ்பிரே: நாசி ஸ்பிரேக்கள் பயன்படுத்துவதும் குறட்டையை கட்டுப்படுத்த உதவும். தூங்குவதற்கு முன்பு தலையை நன்றாக சாய்த்துக்கொண்டு மூக்கு வழியாக ஸ்பிரேயை தெளிக்கலாம்.

    பூண்டு: சூடான உணவுகள் குறட்டையை குறைக்க உதவும். பூண்டுவை வறுத்து சூடாக சாப்பிடுவது சளியை போக்கவும், அது உருவாகுவதைத் தடுக்கவும் உதவும். பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. பூண்டின் ருசி நாக்குக்கும் விருந்து படைக்கும். அதன் வாச னையும் நிறைய பேருக்கு பிடிக்கும்.

    சாமந்தி டீ: சாமந்தி டீயில் ஆல்பா பிசபோலோல் மற்றும் டைமசோலின் ஆகிய அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உள்ளன. இவை குறட் டையை குறைக்க உதவும். காலையிலோ அல்லது மாலையிலோ சூடாக சாமந்தி டீ பருகலாம்.

    மிளகுக்கீரை எண்ணெய்: இந்த எண்ணெய்யில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை நாசியின் உள் புறத்தில் உள்ள அழற்சியைக் குறைக்க உதவும். நாசி அடைப்பை திறந்து குறட்டையை நிறுத்த உதவும்.

    இஞ்சி: இஞ்சி மற்றும் தேன் கலந்த டீ பல நோய்களை கட்டுப்படுத்தக்கூடியது. காலையிலும், இரவிலும் இந்த டீயை பருகுவது குறட்டை பிரச்சினை குறைவதற்கு உதவும். இரவில் நல்ல தூக்கமும் வரும். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை தொண்டைக்கு இதமளிக்கும். குறட்டையையும் போக்கும்.

    நெய்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் நெய் குறட்டையை கட்டுப்படுத்தவும் உதவும். அதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

    மேலும் சில பழக்கவழக்கங்களை பின்பற்றுவது குறட்டையில் இருந்து விடுபட வழிவகுக்கும்.

    * உடல் பருமன் கொண்டிருந்தால் அதனை குறைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    * புகைப்பழக்கம் கொண்டவர்களாக இருந்தால் அதனையும் கைவிட வேண்டும்.

    * தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாக்கு, தொண்டைகளுக்குரிய பயிற்சிகளை மேற்கொள்வதும் பலன் தரும்.

    * இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தில் நீராவி பிடிப்பதும் நல்லது. பயன்படுத்தும் தலையணையை அடிக்கடி மாற்றுவதும் அவசியம்.

    நாம் விடும் குறட்டை, நம் உடலையே பாதிக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிவீர்களா? நமது குறட்டை நம் ஆயுளை குறைக்கும் என்றால் அதை நம்புவீர்களா?. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குறட்டை, பொதுவாக இந்த வார்த்தையை நாம் பல இடங்களில் கேலிக்காக பயன்படுத்தி வருகிறோம். குறட்டையால் கணவன்-மனைவி இருவரும் விவாகரத்து வரை சென்றதாக நகைச்சுவையாக கூறுவது உண்டு. இந்த குறட்டையால் பாதிக்கப்படுவது பக்கத்தில் தூங்குபவர்கள் மட்டுமல்ல, சம்பந்தப்பட்டவரும்தான். இது பற்றி கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கோவன் நுரையீரல் மற்றும் ஸ்லீப் மருத்துவ மைய டாக்டர் பால.கலைக்கோவன் கூறியதாவது:-

    குறட்டை என்பது நமது உடல் சோர்வான நிலையில் வருவது என்று பலர் நினைப்பது உண்டு. அது ஒரு ஆபத்தில்லா பிரச்சினை என்றும் நம்புவதுண்டு. ஆனால் நாம் விடும் குறட்டை, நம் உடலையே பாதிக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிவீர்களா? நமது குறட்டை நம் ஆயுளை குறைக்கும் என்றால் அதை நம்புவீர்களா?. ஆம் அப்படிப்பட்ட ஒரு பிரச்சனைதான் OBSTRUCTIVE SLEEP APNEA

    ( OSA ) குறட்டையுடன் கூடிய தூக்கத்தில் மூச்சுத்திணறல்

    OSA ஏன் ஏற்படுகிறது என்றும், அதன் அறிகுறிகள் என்ன என்பதையும் பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம். குறட்டை உள்ள அனைவருக்கும் இந்த OSA நோய் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. அப்படி என்றால் சாதாரண குறட்டைக்கும், OSA குறட்டைக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிப்பது எப்படி?

    OSA ஏன் ஏற்படுகிறது ?

    நாம் சுவாசிக்கும் காற்று, நமது மூக்கின் வழியாக உள்ளே சென்று தொண்டை பகுதியை கடந்து நுரையீரலுக்கு செல்லும். நாம் விழிப்புடன் இருக்கும் நேரத்தில், இந்த பாதையில் அடைப்பு ஏற்படாது. ஆனால் தூங்கும்போது அந்த தொண்டை தசைகள் தளர்ந்து, மூச்சு உள்ளே செல்வது தடைபடும். இந்த தடைப்பட்ட மூச்சுபாதை வழியாக நாம் மூச்சுவிடும் போது வரும் சத்தம் தான் “குறட்டை“

    தூக்கத்தின் ஒரு பகுதியில் மட்டும் (ஆழ்நிலை தூக்கம் REM SLEEP ) இது போன்ற தொண்டை சதைகள் தளர்வது உண்டு. அது அளவுக்கு மீறி தடைப்பட்டால், காற்று நுரையீரலுக்கு உள்ளே போவது, முழுவதுமாக தடைபடும் போது இந்த OSA (தூக்கத்தில் மூச்சுத்திணறல்) ஏற்படும்.

    OSA வின் அறிகுறிகள் என்ன ?

    (1) தூக்கத்தின் போது அதிகப்படியான குறட்டை

    (2) தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவது போல் உணர்தல்

    (3) தூங்கும் போது மூச்சுவிடுவதை நிறுத்துவது

    (4) பகல் நேரத்தில் அதிகமாக தூக்கம் வருதல்

    (5) காலை எழுந்தவுடன் தலைவலி ஏற்படுவது

    (6) அதிகமான மறதி, சோர்வு, ஆர்வமின்மை ஏற்படுவது

    (7) தாம்பத்ய உறவில் ஈடுபாடு இல்லாமை

    (8) வாகனம் ஓட்டும் போது தூக்கம் வருவது

    (9) அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது கூட தூக்கம் வருவது

    (10) காலை எழுந்தவுடன் நாக்கு வறண்டு போய் ,தொண்டையோடு ஒட்டிபோன உணர்வுடன் தாகம் எடுத்தல். இந்த அறிகுறிகளுள் 3-க்கு மேல் இருந்தால் உங்களுக்கு OSA இருக்க வாய்ப்புள்ளது .

    சர்க்கரை நோய் ( Diabetes ) , ரத்த அழுத்தம் ( High Blood pressure ) , இருதய நோய் ( HEART ATTACK ) , பக்கவாதம் ( STROKE ) , குழந்தையின்மை ( Infertility ) , ஞாபக மறதி ( Memory loss ) ,திடீர் மரணம் ( Sudden Death ) உள்ளிட்டவைகள் OSA வினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகும்.

    மேற்கண்ட OSA அறிகுறிகள் உள்ளவர்கள் தக்கநேரத்தில் தகுந்த மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் பால.கலைக்கோவன் கூறினார்.
    ×