search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ramiz raja"

    • 2010-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மேட்ச் பிக்சிங்.
    • அப்போது ரமீஸ் ராஜா வர்ணனையாளராக இருந்து அவர்களை அடையாளப்படுத்தினார்.

    பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் முகமது ஆமிர். இவர் 2010-ல் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார். அதன்பின் தண்டனை முடிந்த பிறகு மீண்டும் அணியில் இணைந்தார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் 2010 போட்டியின்போது வர்ணனையாளராக செயல்பட்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் முன்னாள் தலைவருமான ரமீஸ் ராஜா, முகமது ஆமிருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரமீஸ் ராஜா கூறியதாவது:-

    முகமது ஆமிர் விவகாரத்தில் என்னுடைய பார்வை மிகவும் நேரடியானது. கிரிக்கெட்டை சரி செய்வதாக நான் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சமூகமும், ரசிகர்களும் புரிந்து கொள்வது முக்கியம் என நான் நம்புகிறேன்.

    முகமது அமிர் மேட்ச் பிக்சில் ஈடுபட்டபோது லார்ட்ஸ் மைதானத்தில் நான் வர்ணணை செய்து கொண்டிருந்னே். நான் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்டியதால் வெறுப்பு என்னை நோக்கி வீசப்படும் என உணர்ந்தேன். மீடியாக்களால் நான் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டேன். அதை என்னால் மறக்க முடியாது.

    உலகின் எங்கெல்லாம் இது போன்று மேட்ச் பிக்கிங் ஈடுபட்ட வீரர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். அவர்கள் மீது எனக்கு அனுதாபம் இருக்கலாம். ஆனால், என்னுடைய அகராதியில் மன்னிப்பு என்பது கிடையாது. கடவுள் மறுத்தால் கூட என்னுடைய மகன் இதுபோன்ற செயல் செய்திருந்தால் நான் அவனை நிராகரிப்பேன்.

    இவ்வாறு ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

    • வீரர்களின் கடினமான காலத்தில் அவர்களுக்கு துணையாக கிரிக்கெட் வாரியம் இருக்க வேண்டும்.
    • வீரர்களுக்கு எப்படி ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதற்கு பிசிசிஐ ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.

    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வீரராக ஒரு காலத்தில் விளங்கியவர் உமர் அக்மல். கம்ரான் அக்மலின் தம்பியான உம்ரான் அக்மல் பாகிஸ்தானுக்கு 16 டெஸ்ட், 121 ஒருநாள் போட்டி மற்றும் 84 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

    உமர் அகமல் ஸ்பாட் பிக்சிங் செய்ய சொல்லி புக்கிகள் தன்னை அணுகியது குறித்து புகார் அளிக்காத குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தான் அணியில் இருந்து உமர் மாலிக் தடை விதிக்கப்பட்டார்.

    எனினும் தமது செயலுக்கு அவர் மன்னிப்பு கூறியதையடுத்து தடை நீக்கப்பட்டு உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.ஆனால் இதுவரை ஒரு முறை கூட மீண்டும் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சேர்க்க வாய்ப்பு தரவில்லை.

    இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா உமர் அக்மலின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைந்து விட்டதாக வெளிப்படையாக கூறியிருந்தார்.

    தற்போது இதற்கு பதில் அளித்துள்ள உமர் அகமல்:-

    ரமீஸ் ராஜா இவ்வாறு கூறியதற்கு நான் உண்மையிலே வெட்கப்படுகிறேன். பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்து இருக்கிறேன். ஆனால் என்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தப்படும் விதம் சரியல்ல. வீரர்களின் கடினமான காலத்தில் அவர்களுக்கு துணையாக கிரிக்கெட் வாரியம் இருக்க வேண்டும்.

    உதாரணத்துக்கு விராட் கோலியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் கிரிக்கெட் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றாலும் அவருக்கு தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் வாய்ப்பு கொடுத்தது. இதன் மூலம் தற்போது அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி உள்ளார். வீரர்களுக்கு எப்படி ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதற்கு பிசிசிஐ ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.

    ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அப்படி செய்யவில்லை ரமீஷ் ராஜா என் பெயரை குறிப்பிடாமல் எனக்கு வாய்ப்பில்லை என்று சொல்லியிருந்தால் கூட என் மனது அமைதியாக இருக்கும் என்று உமர் அக்மல் வேதனை தெரிவித்துள்ளார்.

    அண்மையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பிராஸ் அகமதுக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்த நிலையில், உமர் அக்மலும் மீண்டும் அணிக்குள் வர போராடுகிறார்.

    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.
    • புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக கடந்த ஆண்டு செப்டம்பரில் ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டார்.

    பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து, பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை 3-0 என கைப்பற்றியது. இதனால் பாகிஸ்தான் நிர்வாகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

    இந்நிலையில், இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமினம் செய்யப்பட்டுள்ளார்.

    • டி20 கிரிக்கெட் போன்று டெஸ்ட் போட்டியை வீரர்களை பார்க்க வேண்டும்.
    • டி20 வீரர்களை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு செய்ய வேணடும் என ரமீஸ் ராசா விருப்பம்.

    இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடரை அனைவரும் உற்று நோக்கினர். இதற்கு காரணம் இங்கிலாந்து அணியின் அணுகுமுறைதான்.

    இங்கிலாந்து அணி எந்தவித அச்சமின்றி தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுதான். வெற்றிக்காக மட்டுமே விளையாட வேண்டும். டிரா என்பதில் பலனில்லை என்ற கொள்கையை வகுத்துள்ளது.

    இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுலும் வங்காளதேசத்திற்கு எதிராக அதே அணுகுமுறையில்தான் விளையாடுவோம் என்றார். ஆனால், முதல் இன்னிங்சில் இந்திய விக்கெட்டுகள் சரிய நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜாவும், அதிரடி ஆட்டத்தை விரும்புவதாகவும் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை டி20 கிரிக்கெட் போன்று பார்க்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து பாபர் அசாமிடம் கேட்டபோது, எல்லா விசயங்களும் ஒரே நாள் அல்லது ஒரு வாரத்தில் மாற்றிவிட முடியாது என்றார்.

    2-வது டெஸ்ட் போட்டியை நேரில் பார்த்தபோது பேட்டியளித்த போது ரமீஸ் ராஜா கூறியதாவது:-

    இங்கிலாந்தை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டு, ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் டி20 போன்று விளையாட வேண்டும் என பாபர் அசாமிடம் நான் பரிந்துரைத்தேன். ஆகவே, நீங்கள் சிறந்த டி20 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். இது பாகிஸ்தானின் மீது கட்டாயப்படுத்தப்பட்ட மனநிலை, இது எனக்கு முற்றிலும் பிடிக்கும்.

    தற்போது இங்கிலாந்து விளையாடி வருவதுபோன்று, இது டி20 வடிவ கிரிக்கெட் என வருங்கால வீரர்கள் கருத வேண்டும் என விரும்புகிறேன்.

    இவ்வாறு ரமீஸ் ராஜா தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து பாபர் அசாமிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பாபர் அசாம் பதில் அளித்து கூறியதாவது:-

    கதவு எதற்காகவும் மூட்டப்படவில்லை. எல்லாவற்றிற்காகவும் திட்டம் தீட்டப்பட்டது. ஒவ்வொரு வடிவ கிரிக்கெட்டிற்கும் நான் அதை செய்கிறோம். விசயங்கள் நீங்கள் ஒரே நாள் அல்லது ஒரு வாரத்தில் மாற்ற முடியாது. அதற்கு நேரம் எடுக்கும். மனநிலையை மாற்றுவதற்கு நேரம் தேவை. அப்புறம், நாங்கள் பாதுகாப்பான ஆட்டத்தை விளையாடும்போது, பத்திரிகையாளர்கள் நீங்கள் ஏன் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனக் கேட்கிறார்கள்.

    நாங்கள் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது, ஏன் மாற்று வழியில் விளையாடவில்லை எனக் கேட்கிறார்கள். அங்கே எப்போதுமே கேள்விகள் எழுப்பப்படும், எல்லோரையும் சந்தோசப்படுத்த முடியாது. இறுதியாக போட்டியின் முடிவுதான் விசயம். முடிவு சரியாக கிடைக்காவிடில், கேள்விகள் எழுப்பப்படும். நாம் என்ன செய்தோம்? என்பது விசயம் அல்ல...

    இவ்வாறு பாபர் அசாம் தெரிவித்தார்.

    • 14 வருடங்களாக இந்திய அணி பாகிஸ்தானிற்கு செல்லவில்லை.
    • இந்திய அணி மறுப்பு தெரிவித்தால், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

    உலகில் அதிக அளவிலான கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானும். இந்த இரு அணிகளும் மோதிக்கொண்டால் அந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது. எனவே, சர்வதேச போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளும் பல ஆண்டுகளாக இரு தரப்பு போட்டிகளில் மோதிக்கொள்வதில்லை. ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை போன்ற பொதுவான தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருகின்றன. இந்தியா அணி பாகிஸ்தான் சென்று கடைசியாக விளையாடியது 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டிக்குத்தான். அதேபோல், பாகிஸ்தான் அணி கடைசியாக 2016-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்தியா வந்தது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் மோதல் போக்கே இதற்கு காரணம்.

    குறிப்பாக, 2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று விளையாடப் போவதில்லை என் முடிவெடுத்து. எனவே, 14 வருடங்களாக இந்திய அணி பாகிஸ்தானிற்கு செல்லவில்லை.

    இந்நிலையில், 2023-ம் ஆண்டில் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானிலும், அதன் பின்னர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன. முதலாவதாக ஆசிய கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், இதில் இந்திய அணி பங்கேற்காது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். இது பாகிஸ்தான் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "பாகிஸ்தானிற்கு வந்து விளையாட இந்திய அணி மறுப்பு தெரிவித்தால், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியும் பங்கேற்காது.

    பாகிஸ்தான் தொடரில் பங்கேற்கவில்லை என்றால் போட்டிகளை யார் பார்க்கப் போகிறார்கள். எங்கள் அணி சிறப்பான முறையில் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணியின் பொருளாதாரத்தை முன்னேற்ற நாம் சிறப்பாக விளையாடினால்தான் முடியும். கடந்த ஒரு ஆண்டில், பாகிஸ்தான் அணி இந்திய அணியை இரு முறை வீழ்த்தியுள்ளது" என்று அதில் கூறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இவ்வாறு அதிரடி முடிவு எடுத்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் அதற்கு என்ன பதில் தரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    • குரூப் 12-ல் திணறிய பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு முன்னேறியது.
    • முதல் இடம் பிடித்த இந்தியா அரையிறுதியோடு வெளியேற்றம்.

    இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்து உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உலகின் பிரபலமான டி20 கிரிக்கெட்டான ஐ.பி.எல். இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தானைத் தவிர மற்ற நாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டும் ஐ.பி.எல். தொடரில் இருந்து தனது விளையாட்டை மேம்படுத்திக் கொண்டேன் என பல்வேறு நாட்டு வீரர்கள் தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியால் ஐ.பி.எல். தொடங்கிய பிறகு உலகக் கோப்பையை வென்றது கிடையாது.

    பாகிஸ்தான் ரசிகர்கள், முன்னாள் தலைவர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில், அந்நாட்டு கிரிக்கெட சங்கத்தின் தலைவர் ரமீஸ் ராஜா, ஐ.பி.எல். தொடரை குறைத்து மதிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ''பில்லியன் டாலர் லீக் அணிகள் எங்களுக்கு பின்னால் உள்ளன. பாகிஸ்தான் வீரர்கள் பில்லியன் டாலர் லீக் கிரிக்கெட் வீரர்களை விட சிறந்தவர்கள். நாங்கள் ஏதோ ஒன்றை சரியாக செய்து கொண்டிருக்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

    ×