search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஒருநாள் அல்லது ஒரு வாரத்தில் எல்லாவற்றையும் மாற்ற முடியாது: ரமீஸ் ராசாவுக்கு பாபர் அசாம் பதிலடி
    X

    ஒருநாள் அல்லது ஒரு வாரத்தில் எல்லாவற்றையும் மாற்ற முடியாது: ரமீஸ் ராசாவுக்கு பாபர் அசாம் பதிலடி

    • டி20 கிரிக்கெட் போன்று டெஸ்ட் போட்டியை வீரர்களை பார்க்க வேண்டும்.
    • டி20 வீரர்களை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு செய்ய வேணடும் என ரமீஸ் ராசா விருப்பம்.

    இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடரை அனைவரும் உற்று நோக்கினர். இதற்கு காரணம் இங்கிலாந்து அணியின் அணுகுமுறைதான்.

    இங்கிலாந்து அணி எந்தவித அச்சமின்றி தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுதான். வெற்றிக்காக மட்டுமே விளையாட வேண்டும். டிரா என்பதில் பலனில்லை என்ற கொள்கையை வகுத்துள்ளது.

    இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுலும் வங்காளதேசத்திற்கு எதிராக அதே அணுகுமுறையில்தான் விளையாடுவோம் என்றார். ஆனால், முதல் இன்னிங்சில் இந்திய விக்கெட்டுகள் சரிய நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜாவும், அதிரடி ஆட்டத்தை விரும்புவதாகவும் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை டி20 கிரிக்கெட் போன்று பார்க்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து பாபர் அசாமிடம் கேட்டபோது, எல்லா விசயங்களும் ஒரே நாள் அல்லது ஒரு வாரத்தில் மாற்றிவிட முடியாது என்றார்.

    2-வது டெஸ்ட் போட்டியை நேரில் பார்த்தபோது பேட்டியளித்த போது ரமீஸ் ராஜா கூறியதாவது:-

    இங்கிலாந்தை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டு, ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் டி20 போன்று விளையாட வேண்டும் என பாபர் அசாமிடம் நான் பரிந்துரைத்தேன். ஆகவே, நீங்கள் சிறந்த டி20 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். இது பாகிஸ்தானின் மீது கட்டாயப்படுத்தப்பட்ட மனநிலை, இது எனக்கு முற்றிலும் பிடிக்கும்.

    தற்போது இங்கிலாந்து விளையாடி வருவதுபோன்று, இது டி20 வடிவ கிரிக்கெட் என வருங்கால வீரர்கள் கருத வேண்டும் என விரும்புகிறேன்.

    இவ்வாறு ரமீஸ் ராஜா தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து பாபர் அசாமிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பாபர் அசாம் பதில் அளித்து கூறியதாவது:-

    கதவு எதற்காகவும் மூட்டப்படவில்லை. எல்லாவற்றிற்காகவும் திட்டம் தீட்டப்பட்டது. ஒவ்வொரு வடிவ கிரிக்கெட்டிற்கும் நான் அதை செய்கிறோம். விசயங்கள் நீங்கள் ஒரே நாள் அல்லது ஒரு வாரத்தில் மாற்ற முடியாது. அதற்கு நேரம் எடுக்கும். மனநிலையை மாற்றுவதற்கு நேரம் தேவை. அப்புறம், நாங்கள் பாதுகாப்பான ஆட்டத்தை விளையாடும்போது, பத்திரிகையாளர்கள் நீங்கள் ஏன் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனக் கேட்கிறார்கள்.

    நாங்கள் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது, ஏன் மாற்று வழியில் விளையாடவில்லை எனக் கேட்கிறார்கள். அங்கே எப்போதுமே கேள்விகள் எழுப்பப்படும், எல்லோரையும் சந்தோசப்படுத்த முடியாது. இறுதியாக போட்டியின் முடிவுதான் விசயம். முடிவு சரியாக கிடைக்காவிடில், கேள்விகள் எழுப்பப்படும். நாம் என்ன செய்தோம்? என்பது விசயம் அல்ல...

    இவ்வாறு பாபர் அசாம் தெரிவித்தார்.

    Next Story
    ×