search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பில்லியன் டாலர் லீக் வீரர்களை விட பாகிஸ்தான் வீரர்கள் சிறந்தவர்கள்- ரமீஸ் ராஜா
    X

    பில்லியன் டாலர் லீக் வீரர்களை விட பாகிஸ்தான் வீரர்கள் சிறந்தவர்கள்- ரமீஸ் ராஜா

    • குரூப் 12-ல் திணறிய பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு முன்னேறியது.
    • முதல் இடம் பிடித்த இந்தியா அரையிறுதியோடு வெளியேற்றம்.

    இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்து உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உலகின் பிரபலமான டி20 கிரிக்கெட்டான ஐ.பி.எல். இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தானைத் தவிர மற்ற நாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டும் ஐ.பி.எல். தொடரில் இருந்து தனது விளையாட்டை மேம்படுத்திக் கொண்டேன் என பல்வேறு நாட்டு வீரர்கள் தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியால் ஐ.பி.எல். தொடங்கிய பிறகு உலகக் கோப்பையை வென்றது கிடையாது.

    பாகிஸ்தான் ரசிகர்கள், முன்னாள் தலைவர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில், அந்நாட்டு கிரிக்கெட சங்கத்தின் தலைவர் ரமீஸ் ராஜா, ஐ.பி.எல். தொடரை குறைத்து மதிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ''பில்லியன் டாலர் லீக் அணிகள் எங்களுக்கு பின்னால் உள்ளன. பாகிஸ்தான் வீரர்கள் பில்லியன் டாலர் லீக் கிரிக்கெட் வீரர்களை விட சிறந்தவர்கள். நாங்கள் ஏதோ ஒன்றை சரியாக செய்து கொண்டிருக்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×