என் மலர்

    நீங்கள் தேடியது "kuladeivam"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம்.
    • குடும்பப் பெரியவர்களிடம் குலதெய்வம் பற்றி தெரிந்துகொண்டு வழிபடலாம்.

    ஆன்மிக ரீதியாக ஒரு குடும்பத்துக்கு மூன்று தெய்வ அம்சங்கள் பாதுகாப்பாக இருந்து அருள் புரிவதாக ஐதீகம். அதாவது, ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம். அடுத்தது, குலதெய்வம். பிறகு காவல் தெய்வம் ஆகியவையாகும். அந்த அடிப்படையில் குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம். வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்தை வழிபட்டால் குலம் தழைத்து, சந்ததியினருக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும்.

    படிப்பு, தொழில் என்று பல்வேறு காரணங்களினால் பிறந்த மண்ணைவிட்டு, வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வாழவேண்டிய நிலை பலருக்கும் உள்ளது. எப்போதேனும் ஒருமுறை பிறந்த ஊருக்குச் சென்றாலும்கூட, குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபடமுடியாத நிலை காணப்படுகிறது. முன்பெல்லாம் குடும்பப் பெரியவர்கள் நம்முடைய குலதெய்வம் பற்றியும், குலதெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றியும் எடுத்துச் சொல்வார்கள். ஆனால், இன்று சிலருக்கு குலதெய்வம் எது என்றே தெரிந்துகொள்ளமுடியாத நிலையில், குடும்பப் பெரியவர்களிடம் குலதெய்வம் பற்றி தெரிந்துகொண்டு வழிபடலாம்.

    குல தெய்வம் பற்றி எதுவுமே அறிய இயலாத நிலையில் இருப்பவர்கள் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றியில் திருநீறு அல்லது திருமண் இட்டுக்கொண்டு, வீட்டின் தலைவாசல் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத்துணி சாற்றி, வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலைப்படிக்கு பூஜை செய்து வேண்டிக் கொண்டால், குடும்பத்தின் குல தெய்வம் பற்றிய தகவல் விரைவில் தெரியவரும் என்ற தகவலை ஆன்மிக சான்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குலதெய்வத்தின் அருள் இருந்தால் எந்த பிரச்சனைகளும் நம்மை அண்டாது.
    • கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    'ஓம் பவாய நம,

    ஓம் சர்வாய நம,

    ஓம் ருத்ராய நம,

    ஓம் பசுபதே நம,

    ஓம் உக்ராய நம,

    ஓம் மஹாதேவாய நம,

    ஓம் பீமாய நம,

    ஓம் ஈசாய நம'

    என்ற மந்திரத்தை தினமும் 108 முறை காலை மற்றும் மாலை வேளைகளில் பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் குலதெய்வத்தின் அருளைப் பெறலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கலசம் முழுவதும் நூலைச் சுற்ற வேண்டும்.
    • நூல் சுற்றத் தெரியாதவர்கள், பட்டுத் துணியை சுற்றலாம்.

    நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் குடியிருக்க, வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பார்கள். மேலும் மனதில் தீய எண்ணங்கள் இன்றி, நேர்மறையான வார்த்தைகளைப் பேசி வாழ்பவர்களின் வீட்டில் லட்சுமி குடியேறுவாள் என்பது நம்பிக்கை. அதே போல் நம்முடைய குலதெய்வ சக்தியையும், நாம் நம்முடைய வீட்டில் குடியேற்றலாம் என்கிறார்கள்.

    அதற்கு மஞ்சள், மண், சந்தனம், குங்குமம், விபூதி, சாம்பிராணி, அடுப்புக்கரி போன்றவற்றை சிறிதளவு எடுத்து, அதை ஒரு சிவப்பு துணியில் வைத்து முடிச்சுப் போட்டு, வீட்டின் வாசல்படி உட்புறம் நிலைப்படியின் மையத்தில் மேல் பகுதியில் ஆணி அடித்து மாட்டி வைக்க வேண்டும். பின்னர் தினமும் அதற்கு தூப, தீபம் காட்டி வழிபட்டு வந்தால், குலதெய்வ சக்தியை வீட்டில் வரவழைக்கலாம் என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்து.

    ஒரு கலச சொம்பில், சிறிதளவு வெட்டிவேர், பச்சை கற்பூரம், ஏலக்காய், பன்னீர் ஆகியவற்றை போட வேண்டும். பன்னீர் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்னர் அந்த கலசம் முழுவதும் நூலைச் சுற்ற வேண்டும். நூல் சுற்றத் தெரியாதவர்கள், பட்டுத் துணியை சுற்றலாம்.

    பின்னர் வீட்டின் பூஜை அறையில் ஒரு பலகை வைத்து, அதன் மீது வாழை இலை போட்டு, அதில் பச்சரிசி பரப்பி, அதன் மீது கலச சொம்பை வைக்க வேண்டும். கலசத்தின் மீது வாழைப்பூவை, நுனிப் பகுதி மேல்நோக்கி இருக்கும்படி வைக்க வேண்டும். வாழைப்பூவுக்கும், கலசத்திற்கும் இடையில் மாவிலை அல்லது வெற்றிலை சுற்றி வைக்க வேண்டும்.

    பின்னர் கலசத்திற்கு வில்வ இலை அல்லது ஊமத்தம் பூ கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். கலசத்தின் மீது வைத்திருக்கும் வாழைப்பூ, மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும். பூஜை செய்வதற்கு அந்த மூன்று நாட்களே போதுமானது. தொடர்ந்து பூஜை செய்ய விரும்புவர்கள், வாழைப்பூவை மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பூஜை முடிந்ததும் பச்சரிசியை சமையல் செய்தும், வாழைப்பூவை வடை செய்தும், அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.

    கலசத்தில் உள்ளவற்றை வீட்டைச் சுற்றி தெளித்தும், குளிக்கும் நீாில் விட்டு நீராடவும் செய்ய வேண்டும். அதோடு 'ஓம் பவாய நம, ஓம் சர்வாய நம, ஓம் ருத்ராய நம, ஓம் பசுபதே நம, ஓம் உக்ராய நம, ஓம் மஹாதேவாய நம, ஓம் பீமாய நம, ஓம் ஈசாய நம' என்ற மந்திரத்தை தினமும் 108 முறை காலை மற்றும் மாலை வேளைகளில் பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் குலதெய்வத்தின் அருளைப் பெறலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரே ஒரு குறிக்கோளை வைத்துதான் வேண்டுதல் மேற்கொள்ளப்பட வேண்டும்.
    • எச்சில் படாத பாத்திரமாக இருக்க வேண்டும்.

    ஒரு வீட்டின் முன்னேற்றத்திற்கு குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்று. தினம்தோறும் இஷ்ட தெய்வத்தை வேண்டி வழிபட்டாலும், குலதெய்வத்தின் நாமத்தை ஒரு முறையாவது உச்சரித்து, தீபம் ஏற்றுவது நம்முடைய வீட்டிற்கு மிகவும் நல்லது.

    குலதெய்வத்தை வியாழக்கிழமை அன்று, இந்த முறைப்படி விரதமிருந்து வழிபடும் போது, நீங்கள் என்ன நினைத்து விரதத்தை தொடங்குகிறீர்களோ, அந்த வேண்டுதலானது 14வது வாரம் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    வியாழக்கிழமை காலையிலேயே வீட்டை துடைத்து சுத்தம் செய்துவிடுங்கள். அதன் பின்பு குளித்து முடித்துவிட்டு, இறைவனுக்கு பூக்களை அணிவித்து, ஒரே ஒரு தீபம் ஏற்றி வைத்து, உங்களின் குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து, உங்களுடைய வேண்டுதலை சொல்லி உங்களது விரதத்தை தொடங்க வேண்டும். சில பேருக்கெல்லாம் வாழ்க்கையில் தீர்க்கவே முடியாத கஷ்டம் என்று ஒன்று கட்டாயம் இருக்கும். அந்த கஷ்டம் தீர வேண்டும் என்று கூட, வேண்டுதலை வைக்கலாம். 14 வாரமும் அந்த வேண்டுதலை நினைத்துதான் விரதத்தை மேற்கொள்ள வேண்டும். ஒரே ஒரு குறிக்கோளை வைத்துதான் வேண்டுதல் மேற்கொள்ளப்பட வேண்டும். வேண்டுதலை மாற்றக்கூடாது.

    காலையில் உங்களது விரதத்தை தொடங்கலாம். உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள், உடல் ஆரோக்கியத்தோடு இருப்பவர்கள், அந்த நாள் முழுவதும் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். அதுவும், குறிப்பாக நாட்டு பசும்பாலால் செய்யப்பட்ட தயிர் சாதத்தை மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது கோடி புண்ணியத்தை உங்கள் குலத்திற்கே தேடித் தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அந்த தயிர் சாதத்தில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டால் இன்னும் உத்தமம். பிடிக்காதவர்கள் உப்பு சேர்த்துக் கொள்ளலாம் தவறில்லை.

    வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் பெண்களாக இருந்தால், இந்த வியாழக்கிழமை நாள் முழுவதுமே குலதெய்வத்தை நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கலாம். அதாவது நீங்கள் வேலை செய்தது போக மீதம் இருக்கும் நேரத்தில். மாலை நேரம் வழக்கம் போல் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து உங்கள் வீட்டில் இருக்கும் வெள்ளிக்கிண்ணமாக இருந்தாலும் சரி, அல்லது பித்தளை பாத்திரமாக இருந்தாலும் சரி. கண்ணாடிக் கிண்ணமாக இருந்தாலும் சரி. ஏதாவது ஒரு கிண்ணத்தை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். எச்சில் படாத பாத்திரமாக இருக்க வேண்டும். சில்வர் பாத்திரத்தை பயன்படுத்த வேண்டாம்.

    அந்த சிறிய கிண்ணத்தில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, உங்கள் மனதில் இருக்கும் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று சொல்லி, மனமுருகி, மாலையும் குலதெய்வத்தை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். மாலை தீபம் ஏற்றிவைத்து உங்களது விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள். அதனால் இரவு நிச்சயம் சாப்பிடக் கூடாது. ஒரு வேலை தயிர் சாதம் சாப்பிடுவதோடு மட்டும் விரதம் இருக்கலாம்.

    14வது வாரம் உங்களது விரதம் முடியும்போது, அந்த ஒரு ரூபாய் நாணயங்களை குலதெய்வக் கோவில்களில் கொண்டுபோய் செலுத்திவிடலாம். குலதெய்வக் கோயில் தூரமாக உள்ளவர்கள், ஒரு மஞ்சள் துணியை எடுத்து, அந்த நாணயங்களை, முடிந்து வைத்து விடுங்கள். எப்போது குலதெய்வ கோயிலுக்கு செல்கிறீர்களோ, அப்போது அந்த நாணயங்களை குலதெய்வ கோயிலில் சேர்த்து விடுங்கள்.

    வாரம் தோறும் வரும் வியாழக்கிழமை அன்று, மேல் சொல்லப்பட்ட முறைப்படி சுலபமான முறையில் குலதெய்வ வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால் போதும். 14வது வாரம் வியாழக்கிழமை அன்று, உங்களது இந்த விரதம் முடியும் போது, உங்களது வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். நம்பிக்கையோடு பிரார்த்தனை வைத்து குல தெய்வத்தை வேண்டி தான் பாருங்களேன்! ரொம்ப நாளா உங்க வீட்ல இருக்கிற பிரச்சினை கூட விரைவில் ஒரு முடிவுக்கு வரும். இந்த விரதத்திற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை, உங்கள் வேண்டுதல் நிறைவேறிய பின்பு தான், உங்களால் உணர முடியும். ஆனால், நீங்கள் வைக்கும் வேண்டுதல் நிறைவேறுவதற்கான முயற்சியை, நீங்கள்தான், இடைவிடாமல் தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்பதை மட்டும் மறந்துடாதீங்க! உங்களை கைதூக்கி விடும் ஒரு ஊன்றுகோல் தான் உங்கள் குலதெய்வம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
    • குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும்.

    ஒருவருக்கு குல தெய்வம், இஷ்ட தெய்வம், வழிபடு தெய்வம், மந்திரத்திற்குரிய தெய்வம் என்று பல்வேறு நிலைகளில் வழிபாட்டுக்கு உரிய தெய்வங்கள் இருக்கலாம். பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும், அந்த தெய்வங்களில் மிகவும் வலிமையானதாக ஒருவரது குல தெய்வமே குறிப்பிடப்படுகிறது. காரணம், பாரம்பரியமாக அதற்கு முன்னோர்கள் வழிபாடுகளை செய்து வந்துள்ளதால் குலம் காக்கும் தெய்வமாக போற்றப்படுவது ஐதீகம். தனது அருளை குலதெய்வம் அளிப்பதுடன், மற்ற தெய்வ வழிபாடுகளுக்கான பலன்களையும் அளிப்பது ஒருவரது குல தெய்வம்தான் என்பதை ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாள் செய்யாததை கோள் செய்யும் என்றும், கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும் என்றும் சொல்லப்படுகிறது.

    ஒரு குடும்பத்தின் முன்னோர்களில் தெய்வமாக மாறிய புண்ணிய ஆன்மாக்கள், சம்பந்தப்பட்ட குலத்தை சார்ந்தவர்களைக் காக்கும் வல்லமை பெற்றவை என்பது ஆன்மிக ரகசியமாகும். அவை, ஒருவரது பூர்வ கர்ம வினைகளையும் கூட அகற்றி விடும் சக்தி பெற்றவை என்றும் சொல்லப்படுகின்றன. குல தெய்வங்கள் இல்லாத குடும்பத்தினர் எந்த தெய்வத்தையும், எந்த ஆலயத்திலும் சென்று வழிபட்டு, பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கத்தை ஓரளவுக்கு நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால், முற்றிலும் நிவர்த்தி செய்ய இயலாது என்ற ஆன்மிக சூட்சுமத்தை சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, ஒவ்வொருவருக்கும் இரண்டு விதமான பூர்வ ஜென்ம கர்ம வினைகள் இருக்கின்றன. அவை, முன்னோர் செய்த பாவ, புண்ணியங்களால் வரும் நன்மை, தீமைகள் மற்றும் அவரவர் வாழ்கையில் செய்துள்ள பாவ, புண்ணியங்களால் ஏற்படும் நன்மை, தீமைகள் ஆகியவையாகும்.

    பொதுவாக, குறிப்பிட்ட ஒரு பரம்பரையில் வழிகாட்டியாய் வாழ்ந்து, மறைந்த முன்னோர்கள் அல்லது கன்னியாக இருந்து மறைந்த பெண்களை தங்கள் வீட்டுத் தெய்வமாக வழிபடுவது தமிழர் கிராமிய பண்பாடாக இன்றும் உள்ளது. பெரும்பாலும், பெண் வடிவமாகவே இருக்கும் அவற்றை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், குல சாமி என்று பல்வேறு பெயர்களால் அழைப்பர். அந்த நிலையில் குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும் இறை சக்தியாக இருந்து வருகிறது. குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குல தெய்வத்தின் அனுக்கிரகம் இல்லை என்றால் ஒருவர் எவ்வளவு சக்தி வாய்ந்த ஹோமம் அல்லது யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை என்பதை ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ளது இலந்தைகுளம் என்ற கிராமம்.
    • இந்த குலதெய்வத்தை வழிபடும் மக்கள் வெள்ளை நிற ஆடைகளையே அணிகிறார்கள்.

    முன்னோர் ஏற்படுத்திய பல பழக்கவழக்கங்களை பல நூறு ஆண்டுகளாக தொன்றுதொட்டு கடைப்பிடித்து வந்துள்ளோம். ஆனால், அவற்றில் பலவற்றை காலப்போக்கில் பலரும் மறந்துவிடுகிறோம். இருப்பினும் ஆங்காங்கே பழமையான பழக்க வழக்கங்களை மறக்காமல் பின்பற்றுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். அந்த வகையில் சிறுதெய்வ வாக்கினை பின்பற்றும் வகையில் ஒரு கிராமத்தில் உள்ள மக்கள், பல நூறு ஆண்டுகளாக ஒரு பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். அதுபற்றிய சுவாரசியமான தகவலை இங்கே பார்க்கலாம்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ளது, இலந்தைகுளம் என்ற கிராமம். இங்கு வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தினர், பல தலைமுறைகளாக வெள்ளை உடைகளை மட்டுமே உடுத்தி வருகின்றனர். ஒரு காலத்தில் கணவனை இழந்த பெண்கள்தான் வெள்ளை ஆடையை அணிவார்கள் என்ற நிலை இருந்தது. அந்த நிலை இப்போது வெகுவாக மாறியிருக்கிறது.

    ஆனால் இலந்தைகுளம் கிராமத்தில் பெண்கள் மட்டுமின்றி, ஆண்கள் மற்றும் குழந்தைகளும் கூட தங்களின் வாழ்நாள் முழுவதும் வெள்ளை நிற ஆடைகளையே அணிந்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதுபற்றி அந்த கிராமத்தைச் சேர்ந்த புஷ்பலதா என்ற பெண் கூறும்போது, "பல தலை முறைகளுக்கு முன்பு பொம்மியம்மாள் என்ற பெண், தெய்வீகத் தன்மையுடன் வாழ்ந்துள்ளார். அவரை எங்களின் மூதாதையர்களும் அவர்களைத் தொடர்ந்து நாங்களும் தெய்வமாக வணங்கி வருகிறோம்.

    அந்த பொம்மியம்மாள், 'என்னை நினைத்து வெள்ளை உடை உடுத்தி தொடர்ந்து வணங்குபவர்களை, சகல வசதிகளையும், நன்மைகளையும் தந்து காத்தருள்வேன்' என்று கூறியுள்ளார். அவரது வாக்கின்படி, பல தலைமுறைகளாக நாங்கள் வெள்ளை உடைகளை உடுத்தி, அவரை வணங்கி வருகிறோம்" என்றார்.

    பொம்மியம்மாளுக்கு, சேடபட்டி சின்னக்கட்டளை பகுதியில் பீடம் அமைக்கப்பட்டு உள்ளது. அழகர் மலை அடிவாரத்தில் வீற்றிருக்கும் கள்ளழகரின் தங்கைதான் பொம்மியம்மாள் என்று சொல்கிறார்கள். ஆண்டுதோறும் சித்திரை மாத பவுர்ணமி அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழாவின்போது, இலந்தைகுளம் கிராமத்தில் உள்ளவர்கள், பொம்மியம்மாளை சின்னக்கட்டளையில் உள்ள அவரது பீடத்தில் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    இலந்தைகுளத்தில் இருப்பவர்கள் பொம்மியம்மாளை நினைத்து வெள்ளை நிற ஆடை அணிவதைப் போல, பல்வேறு கிராமங்களில் இருந்தபடி அந்த குலதெய்வத்தை வழிபடும் மக்களும் கூட அங்கு வெள்ளை நிற ஆடைகளையே அணிகிறார்கள். பொம்மியம்மாளை குலதெய்வமாக வழிபடுபவர்கள், தங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு அரைஞாண் கயிறைக் கூட, வெள்ளை துணியில்தான் கட்டுகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் துணிகள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் மட்டுமே இருக்கின்றன.

    பள்ளிக்கூடம் செல்வதற்கு சீருடை அவசியம் என்பதால் அந்த நேரத்தில் மட்டும், பள்ளி செல்லும் பிள்ளைகள் சீருடை அணிகிறார்கள். பள்ளி முடிந்து வந்ததும், அவர்களும் வெள்ளை நிற ஆடைக்கு மாறிவிடுகிறார்கள். பொம்மியம்மாளை வணங்கும் பெண்கள், பூ, பொட்டு, நகை அணிகிறார்கள். ஆனால் வீட்டில் இருந்தாலும், வேலைக்குச் சென்றாலும், விசேஷ நிகழ்வுகளுக்குச் சென்றாலும் வெள்ளை நிற ஆடைதான் அவர்கள் மகிழ்வுடன் அணியும் ஆடையாக இருக்கிறது.

    குலதெய்வம் என்பது ஆண்கள் வழியில் வரும் வழிபாடு என்பதால், இங்கிருந்து திருமணமாகி வேறு வீட்டிற்குச் செல்லும் பெண்கள், புகுந்த வீட்டின் பழக்க வழக்கப்படி இருக்கலாம். அவர்களுக்கு இந்த வெள்ளை நிற ஆடை கட்டுப்பாடு கிடையாது. அதே நேரம், வேறு ஒரு இடத்தில் இருந்து திருமணாகி பொம்மியம்மாளை குலதெய்வமாக ஏற்று வரும் பெண்கள், வெள்ளை நிற ஆடையை அணிந்துதான் ஆக வேண்டும் என்பது அவர்களது குல வழக்கமாக இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வருடம் ஒரு முறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்தை வழிபட்டால், நம்முடைய குலம் தழைத்து, வரும் சந்ததியினருக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும்.
    ஆன்மிக ரீதியாக ஒரு குடும்பத்துக்கு மூன்று தெய்வ அம்சங்கள் பாதுகாப்பாக இருந்து அருள்புரிவதாக ஐதீகம். அதாவது, ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம். அடுத்தது குலதெய்வம். பிறகு காவல் தெய்வம். அந்த அடிப்படையில் குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம். வருடம் ஒரு முறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்தை வழிபட்டால், நம்முடைய குலம் தழைத்து, வரும் சந்ததியினருக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும்.

    குல தெய்வம் பற்றி எதுவுமே அறிய இயலாத நிலையில் இருப்பவர்கள், வளர்பிறை வெள்ளிக்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றியில் திருநீறு அல்லது திருமண் இட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் வீட்டின் தலைவாசல் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத்துணி சாத்தி, வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலை படிக்கு பூஜை செய்து வழிபட வேண்டும். அதன்மூலம் குடும்பத்தின் குலதெய்வம் பற்றிய தகவல் விரைவில் தெரியவரும் என்பது ஆன்மிக சான்றோர்களின் அறிவுரையாகும்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியமானது என்பதை, மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் குறிப்பிட்டுள்ளார்.
    குல தெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியமானது என்பதை, மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் குறிப்பிட்டுள்ளார்.

    “ஒரு குடும்பத்தின் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வமே ‘குலதெய்வம்’ ஆகும். முன்னோர்கள் என்றால், தந்தைவழி பாட்டன்- பாட்டி ஆகியோரை கணக்கில் கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள தந்தை வழி பாட்டன் வரிசையில், கச்சிதமான ஒழுங்குமுறை இருப்பதை காண முடியும். அதை ‘கோத்திரம்’ (உட்பிரிவு) என்று சொல்வார்கள். மற்ற கோத்திரத்தில் பிறந்த பெண்கள்தான் ஒரு குடும்பத்தில் வாழ்ந்த முன்னோர்களின் வாழ்க்கைத் துணையாக இருந்திருப்பார்கள். ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்படாமல் வாழ்க்கை பாதையை அவர்கள் அமைத்துக்கொண்டிருப்பார்கள். அதனால், பரம்பரையானது சங்கிலி போல ஒரே சகோதரத்துவ தொடர்ச்சியாக அமைந்து இருக்கும். இது ஒரு முக்கியமான சமூக உளவியல் ஒழுங்குமுறை சார்ந்த விஷயமாகும்.

    அவர்கள் அனைவருமே கோத்திர வழி மாறாதபடி, குலதெய்வம் என்னும் தெய்வ சக்தியை வழி வழியாக பிரார்த்தனை செய்திருப்பார்கள். தலைமுடி எடுப்பது, காது குத்துவது போன்ற நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும். இந்த உலகத்தில் ஆயிரம் கோவில்கள் இருந்தாலும், குலதெய்வக் கோவிலுக்கு சின்ன வயதிலேயே அனைவரையும், தாய்- தந்தையர் அழைத்துச் சென்று வழிபடக் கற்றுக் கொடுத்திருப்பார்கள். அதன்படி குல தெய்வ கோவிலில் நிற்கும்போது, குறிப்பிட்ட ஒருவரது பரம்பரை வரிசையில் அவர் நிற்பதாக ஐதீகம். அந்த வரிசை முறையிலான தொடர்பை வேறு எந்த விதத்திலும் அமைத்துக்கொள்ள இயலாது.”
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தனது அருளை மட்டுமல்லாது, மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் அளிக்கும் சக்தி குலதெய்வத்திற்கு மட்டுமே உண்டு என்று சான்றோர்கள் குறிப்பிடு கின்றனர்.
    ஆன்மிக ரீதியில் ஒருவருக்கு தனிப்பட்ட முறையில், குலதெய்வம், இஷ்ட தெய்வம், வழிபடு தெய்வம், மந்திரத்திற்குரிய தெய்வம் என்று தெய்வங்கள் இருக்கலாம். பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும், அந்த தெய்வங்களில் மிகவும் வலிமையானதாக இருப்பது, அவரது குலதெய்வம் மட்டுமே. காரணம், பாரம்பரியமாக அதற்கு முன்னோர்கள் வழிபாடுகளை செய்து வந்துள்ளதால் குலம் காக்கும் தெய்வமாக அது போற்றப்படுகிறது.

    தனது அருளை மட்டுமல்லாது, மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் அளிக்கும் சக்தி குலதெய்வத்திற்கு மட்டுமே உண்டு என்று சான்றோர்கள் குறிப்பிடு கின்றனர். ‘நாள் செய்யாததை கோள் செய்யும்’ என்றும், ‘கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்’ என்றும் சொல்வார்கள்.

    ஒரு குடும்பத்தின் முன்னோர்களில் தெய்வமாக மாறிய புண்ணிய ஆன்மாக்கள், சம்பந்தப்பட்ட குலத்தை சார்ந்தவர்களைக் காக்கும் வல்லமை பெற்றவை என்பது ஆன்மிக ரகசியமாகும். அவை, ஒருவரது பூர்வ கர்ம வினைகளையும் கூட அகற்றி விடும் சக்தி பெற்றவை. குல தெய்வங்கள் தெரியாதவர்கள், எந்த தெய்வத்தையும், எந்த ஆலயத்திலும் சென்று வழிபட்டுக் கொள்ளலாம். ஆனால் அதன் மூலம் பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கத்தை ஓரளவுக்குதான் நிவர்த்தி செய்ய முடியும். அதுவே குலதெய்வ வழிபாடு என்றால், நம்முடைய கர்மாக்கள் முற்றிலும் நிவர்த்தியாகிவிடும் என்பதுதான் அதன் சிறப்பு அம்சம்.

    பொதுவாக, குறிப்பிட்ட ஒரு பரம்பரையில் வழிகாட்டியாய் வாழ்ந்து, மறைந்த முன்னோர்கள் அல்லது கன்னியாக இருந்து மறைந்த பெண்களை தங்கள் வீட்டுத் தெய்வமாக விரதம் இருந்து வழிபடுவது தமிழர் கிராமிய பண்பாடாக இன்றும் உள்ளது. பெரும்பாலும், பெண் வடிவமாகவே இருக்கும் அவற்றை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், குல சாமி என்று பல்வேறு பெயர்களால் அழைப்பார்கள். அந்த நிலையில் குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும் இறை சக்தியாக இருந்து வருகிறது. குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குல தெய்வத்தின் அனுக்கிரகம் இல்லை என்றால், ஒருவர் எவ்வளவு சக்தி வாய்ந்த ஹோமம் அல்லது யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலனை பெற முடியாது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    யார் ஒருவர் குலதெய்வத்தை விடாமல், விரதம் இருந்து ஐதீகத்துடன் வழிபாடு செய்து வருகிறாரோ, அவரை எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது.
    உலகில் எத்தனையோ கடவுள் உருவங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கடவுள் பிடிக்கும். சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுள்களை விரதம் இருந்து மனதார வழிபடுவார்கள்.

    சமீப காலமாக விரதம் இருந்து சீரடி சாய்பாபாவை இஷ்ட தெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் எண்ணிக்கையும், சித்தர்களின் ஜீவசமாதிகளை தேடிச் சென்று வழிபடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தப்படி உள்ளது. அது போல பரிகாரத்தலங்களை புற்றீசல் போல மொய்க்கும் பக்தர்களையும் காணலாம்.

    இறை வழிபாடு இப்படி பல கோணங்களில் இருந்தாலும், நாம் நமது குலதெய்வத்தை மட்டும் எந்த விதத்திலும் மறந்து விடக் கூடாது. ஏனெனில் நம் குலத்தை காத்து, பாதுகாப்புடன் வாழ வைப்பதே நமது குலதெய்வம்தான்.

    குலதெய்வத்தை நினைக்காமல், பூஜிக்காமல் நாம் தொடங்கும் எந்த ஒரு செயலும் முழுமை பெறாது. குலதெய்வ வழிபாட்டை மறந்து விட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பது, கடன், நோய், குடும்பத்துக்குள் பிரச்சினை என்று குழப்பமும், மன அமைதியின்மையும் ஏற்பட்டு விடும். இத்தகைய பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமானால், ஆண்டுக்கு ஒரு தடவையாவது குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குலதெய்வத்துக்கு உரிய படையல் போட்டு திருப்தி ஏற்படுத்த வேண்டும்.

    குலதெய்வம் மகிழ்ச்சி அடைந்தால், உங்கள் குலமே செழிக்கும். தினம், தினம் குலதெய்வத்தை வணங்குபவர்களுக்கு எந்த குறையும் வராது குதூகலம்தான் வரும். பூர்வீக ஊரில் இருப்பவர்களுக்கு குலதெய்வத்தை வழிபட எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறி விட்டவர்களுக்கு, குல தெய்வ வழிபாடு செய்வது என்பது அரிதான ஒன்றாகும்.

    அப்படிப்பட்டவர்களுக்காகவே ஆண்டுக்கு ஒரு தடவை பங்குனி உத்திரம் தினத்தன்று ‘‘குலதெய்வ வழிபாடு’’ செய்யும் பழக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குல தெய்வ வழிபாட்டுக்குரிய பங்குனி உத்திரம் 9-ந்தேதி (ஞாயிறு) வருகிறது.

    அன்று குலதெய்வம் இருக்கும் ஆலயத்தில் நீங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும். நீங்கள் எத்தனை கடவுள்களை வணங்கினாலும் சரி.... குல தெய்வத்தை வழிபடாவிட்டால் குண்டுமணி அளவுக்கு கூட பிரயோஜனம் இல்லை. ஆகையால் குலதெய்வத்தை அவசியம் வழிபடுங்கள்.

    யார் ஒருவர் குலதெய்வத்தை விடாமல், விரதம் இருந்து ஐதீகத்துடன் வழிபாடு செய்து வருகிறாரோ, அவரை எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது. அதுதான் குல தெய்வ வழிபாட்டின் மகிமை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print