என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாயத்து தேர்தல்"

    • மகாராஷ்டிரா பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.
    • கணேஷ் அளித்த ஆலோசனையின்படி, தனது மூன்றாவது மகளான பிராச்சியை கொலை செய்ய பாண்டுரங் முடிவு செய்தார்

    மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டம் கேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங் (28).

    முடிதிருத்தும் நிலையம் வைத்து நடத்தி வரும் இவருக்கு இவருக்கு ஒரு மகன் மற்றும் 6 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.

    வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் பாண்டுரங் போட்டியிட விரும்பினார்.

    ஆனால், மகாராஷ்டிரா பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.

    இதை அறிந்த பாண்டுரங், தனது நண்பரும் தற்போதைய கிராம பஞ்சாயத்துத் தலைவருமான கணேஷ் ஷிண்டே என்பவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

    கணேஷ் அளித்த ஆலோசனையின்படி, தனது மூன்றாவது மகளான பிராச்சியை கொலை செய்ய பாண்டுரங் முடிவு செய்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை, மகள் பிராச்சியை பைக்கில் அழைத்துக்கொண்டு தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்திற்கு பாண்டுரங் சென்றுள்ளார். அங்குள்ள நிஜாம்சாகர் கால்வாயில் மகளை தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.

    கால்வாயில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, நிஜாமாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் அடையாளத்தை அறிந்து, மகாராஷ்டிரா சென்று குடும்பத்தினரிடம் விசாரித்துள்ளனர். 

    விசாரணையில் பாண்டுரங் உண்மையை ஒப்புக்கொண்டார்.  பாண்டுரங் மற்றும் சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த கணேஷ் ஷிண்டே ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    அரசியல் பதவிக்காகக் பெற்ற மகளையே தந்தை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.  

    • பஞ்சாயத்துத் தேர்தலின் போது "தெருநாய்கள் மற்றும் குரங்குகள் தொல்லையை ஒழிப்போம்" என்று வாக்குறுதி அளித்தனர்.
    • கிராமங்களின் பெண் பஞ்சாயத்து தலைவர்கள் மீது வழக்குபதியப்பட்டது.

    தெலுங்கானாவில் உள்ள கிராமங்களில் சுமார் 300 தெருநாய்கள் விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    ஹனுமகொண்டா மாவட்டத்தில் உள்ள ஷியாம்பேட் மற்றும் அரேபள்ளி கிராமங்களில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

    பஞ்சாயத்துத் தேர்தலின் போது "தெருநாய்கள் மற்றும் குரங்குகள் தொல்லையை ஒழிப்போம்" என்று வேட்பாளர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற, பஞ்சாயத்து தலைவர்கள் இவ்வாறு செய்ததாக தெரியவந்துள்ளது.

    பஞ்சாயத்து தலைவர்கள் இருவரை வாடகைக்கு அமர்த்தி, தெருநாய்களுக்கு விஷ ஊசி செலுத்தி அவற்றைக் கொன்றுள்ளனர். பின்னர் அந்த உடல்களை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் குழிதோண்டிப் புதைத்துள்ளனர்.

    விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், இதில் ஷியாம்பேட் மற்றும் அரேபள்ளி கிராமங்களின் பெண் பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களின் கணவர்கள், பஞ்சாயத்துச் செயலாளர்கள் மற்றும் நாய்களைக் கொன்ற கூலி ஆட்கள் ஆகிய 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த ஒரு மாதத்தில் மட்டும் தெலுங்கானா முழுவதிலும் உள்ள பல்வேறு கிராமங்களில் இதேபோல 900 நாய்கள் கொல்லப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

    • தினாஜ்பூர் மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்கள் 3 பேரை சுட்டுக்கொன்றனர்.
    • வீடு ஒன்றில் 7 பைகளில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளின் போது எதிர்கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை மனுதாக்கல் செய்யவிடாமல் தடுத்ததாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இதற்கிடையில் தினாஜ்பூர் மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்கள் 3 பேரை சுட்டுக்கொன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

    இன்று காலை பாங்கூர் என்ற பகுதியில் ஆட்கள் யாரும் இல்லாத வீடு ஒன்றில் 7 பைகளில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி அறிந்ததும் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து சென்றனர்.

    7 பைகளில் இருந்த வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வெடிகுண்டுகளை பதுக்கி வைத்தது யார்?என்று தெரியவில்லை. பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கும் வகையில் நாசவேலைக்காக இந்த குண்டுகளை யாராவது வைத்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது மேற்கு வங்க மாநிலத்தில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×