search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுராக் காஷ்யப்"

    • . கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.
    • படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளது.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும். கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது

    ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். சிறுமியின் பாலியல் வன்கொடுமையை மையமாக பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மக்களை ஆட்டிப்படைக்கிறது.

    படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளது. அந்த வெற்றியைத் தொடர்ந்து ஓடிடியிலும் மக்களின் வரவேற்பு அமோகமாகவுள்ளது.

    மகாராஜா திரைப்படம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி நெட்பிலிகஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த வார அதிகமாக பார்க்கப்பட்ட இந்திய திரைப்படங்களின் வார பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது மகாராஜா திரைப்படம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • . இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர்.
    • இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும். கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது

    ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். சிறுமியின் பாலியல் வன்கொடுமையை மையமாக பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மக்களை ஆட்டிப்படைக்கிறது.

    படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அரண்மனை திரைப்படத்திற்கு பிறகு 100 கோடி வசூலித்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. படம் வெற்றிகரமாக 25 நாட்கள் முடிவடைந்த நிலையில் தற்பொழுது ஓடிடி-யில் வெளியாகவுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

    மகாராஜா திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி நெட்பிலிகஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    திரையரங்கில் பார்க்க தவரவிட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி படத்தை பார்க்குமாரு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அனுராக் காஷ்யப் மற்றும் சுந்தர் சி நடித்த ஒன் 2 ஒன் திரைப்படத்தின் டீசர் வெளியானது.
    • அனுராக் காஷ்யப் மற்றும் குல்ஷன் தேவைய்யா ’பேட் காப்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளனர்.

    மகாராஜா திரைப்படத்தில் அவரது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் அனுராக் காஷ்யப். இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

    சமீபத்தில் அனுராக் காஷ்யப் மற்றும் சுந்தர் சி நடித்த ஒன் 2 ஒன் திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில் அவர் சமீபத்தில் கலந்துக் கொண்ட பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அவர் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்.

    அங்கு  ஜெயில் குறித்து கேட்கப்பட்ட  கேள்விக்கு பதிலளிக்கு விதமாக " ஆம் நான் ஜெயிலில்  இருந்திருக்கிறேன்,  யார அடிக்கக்கூடாதோ அவங்கள அடிச்சதுனால நான் ஜெயிலுக்கு போனேன், நான் தப்பான ஆள் மேல கைய வச்சிட்டேன். நான் ஒரு இரவு முழுசா ஜெயில்ல இருந்தேன். யார் அடிச்சு நான் ஜெயிலுக்கு போனேனோ அவரே தான் என்னோட வாழ்க்கை மாறுனதுக்கு முக்கியமான காரணம், அவரே தான் என்னய ஜெயில்ல இருந்து வெளில கொண்டு வந்தாரு" என்று கூறினார்.

    இவ்வாறு கூறியவுடன் அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சி அடந்தனர், மேலும் அனுராக் யார் அந்த நபர் என்ற விவரத்தை கூறவில்லை.

    தற்பொழுது அனுராக் காஷ்யப் மற்றும் குல்ஷன் தேவைய்யா 'பேட் காப்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளனர். இந்த தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இந்த தொடரை ஆதித்யா தத் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பரமபதம் விளையாட்டு திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கே.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர் சி நாயகனாக நடித்துள்ளார்.
    • படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 சமீபத்தில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் 100 கோடி வசூலித்த பெருமையை பெற்றது. சுந்தர் சி அடுத்ததாக கலகலப்பு பாகம் 2 மற்றும் சில படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். அதே சமயம் படங்களிலும் நடித்து வருகிறார்.

    பரமபதம் விளையாட்டு திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கே.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர் சி நாயகனாகவும், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்கும் "ஒன் 2 ஒன்" படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்த படத்தை 24 HRS புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

    அதைத்தொடர்ந்து படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டிரைலர் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. அனுராக் காஷ்யப் மற்றும் சுந்தர் சி இருவருக்கும் உள்ள போட்டா போட்டி மற்றும் மைண்ட் கேமாக கதைக்களம் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இப்படம் சுந்தர் சி நடிக்கும் 20 வது திரைப்படமாகும்.

    அனுராக் காஷ்யப் லியோ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தாலும், சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா திரைப்படத்தில் அசத்தலான வில்லன் நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.

    இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - எஸ். கே.ஏ. பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன், படத்தொகுப்பு சி.எஸ். பிரேம் குமார், கலை இயக்கம் - ஆர். ஜனார்த்தனன் மேற்கொண்டுள்ளனர்.

    படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் கே.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர் சி நாயகனாகவும், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளனர்.
    • படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு கடந்த ஆண்டு வெளியிட்டது.

    சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 சமீபத்தில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் 100 கோடி வசூலித்த பெருமையை பெற்றது. சுந்தர் சி அடுத்ததாக கலகலப்பு பாகம் 2 மற்றும் சில படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். அதே சமயம் படங்களிலும் நடித்து வருகிறார்.

    இயக்குநர் கே.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர் சி நாயகனாகவும், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்கும் "ஒன் 2 ஒன்" படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்த படத்தை 24 HRS புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

    இப்படத்தை குறித்து புதிய அப்டேட் வந்துள்ளது. படத்தின் டிரைலர் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுக் குறித்து வெளியிட்ட போஸ்டரில் சுந்தர் சி மிகவும் கோவத்துடன் காணப்படுகிறார். அனுராக் காஷ்யப் ஒரு முகமுடியை பார்த்து சிரித்துக் கொண்டு இருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அனுராக் காஷ்யப் லியோ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தாலும், சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா திரைப்படத்தில் அசத்தலான வில்லன் நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.

    இவர்களுடன் பரமபதம் விளையாட்டு படத்தில் நடித்த விஜய் வர்மன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - எஸ். கே.ஏ. பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன், படத்தொகுப்பு சி.எஸ். பிரேம் குமார், கலை இயக்கம் - ஆர். ஜனார்த்தனன் மேற்கொண்டுள்ளனர்.

    படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

    படத்தின் ப்ரொமோஷன் பணிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி துபாயில் உள்ள மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் மகாராஜா படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டு ஜொலித்தது. இதைக்காண படக்குழுவினர் துபாய் சென்றனர்.

    புர்ஜ் கலீஃபாவுடன் விஜய் சேதுபதி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்நிலையில் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ரிலீஸ் ட்ரைலர் வெளியாகியுள்ளது. சலூன் கடை வைத்திருக்கும் விஜய் சேதுபதியின் வாழ்வின் ஏற்படும் திருப்பங்களே இப்படத்தின் கதை என இந்த ட்ரைலரை பார்த்தால் தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் சேதுபதி தற்போது நித்திலன் இயக்கத்தில் மகாராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    விஜய் சேதுபதி தற்போது நித்திலன் இயக்கத்தில் மகாராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் மகாராஜா திரைப்படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டது.

    இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. நேற்று ஐதராபாத்தில் உள்ள அபர்னா மாலில் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

    அதில் விஜய் சேதுபதி அளித்துள்ள பேட் டியில், "மகாராஜா எனக்கு 50வது படமாக அமைந்தது மகிழ்ச்சி. சினிமாவில் எல்லோரிடம் இருந்தும் ஒவ்வொரு விஷயத்தை கற்று இருக் கிறேன். விமர்சனம், பாராட்டுகளை சமமாகவே பார்க்கிறேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் துபாயில் வேலை பார்த்தேன்.

    பல வருடங்களுக்கு பிறகு துபாயில் புர்ஜ் கலிபாவில் எனது படத்தின் போஸ்டர் வந்த போது ஜெயிக்க வேண்டும் என்று துபாய் தெருக்களில் சுற்றியது தான் நினைவுக்கு வந்தது. நிறைய படங்களில் நடித்த பிறகும் ஒரு நடிகனாக எனக்கு நிறைவு ஏற்படவில்லை.

    என்னை மக்கள் செல்வன் என்று அழைக்கும் போது கேட்க நன்றாக இருக்கிறது. 50 படங்களில் நடித்து விட்டேன். பல படங்களுக்கு எனக்கு முழுமையான சம்பளம் இன்னும் வர வில்லை. காசோலை கூட பணம் இன்றி திரும்பி வந்து இருக் கிறது. ஆனாலும் தயாரிப்பாளர்கள் படம் எடுக்க வருவதை நான் வரவேற்கிறேன். எனக்கு படம் இயக்க ஆர்வம் இருக்கிறது. விரைவில் படம் டைரக்ட் செய்வேன்

     

    ரசிகர்கள் தொலைவில் இருந்து வர வேண்டி இருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க நான் ரசிகர்கள் சந்திப்பு நடத்துவது இல்லை'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்
    • மகாராஜா திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

    படத்தின் ப்ரொமோஷன் பணிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி துபாயில் உள்ள மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் மகாராஜா படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டு ஜொலித்தது. இதைக்காண படக்குழுவினர் நேற்று துபாய் சென்றனர்.

    புர்ஜ் கலீஃபாவுடன் விஜய் சேதுபதி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. சமீபத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் , இத்திரைப்படம் விஜய் சேதுபதிக்கு நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

    சினிமாவில் நடிப்பதற்கு முன் விஜய் சேதுபதி துபாயில் அக்கவுண்டண்ட் வேலை செய்தார், ஆனால் தற்பொழுது அவரது வளர்ச்சியால் துபாயின் சொத்தான புர்ஜ் கலீஃபாவில் அவரது முகம் கொண்ட போஸ்டர் திரையிடப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே சேதுபதியின் வளர்ச்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • கடந்த ஆண்டு வெளியான லியோ திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
    • அவர் அடுத்து இயக்க போகும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று மும்பையில் தொடங்கியது.

    பாலிவுட் சினிமாவில் சர்ச்சைக்குரிய படங்களை எடுக்கும் இயக்குனர்களில் அனுராக் காஷ்யப் முக்கியமானவர். அவர் எடுக்கும் திரைப்படங்கள் ஒரு மாறுபட்ட கதைக்களத்துடன் மற்றும் முரண் பட்ட சிந்தனையுடன் இருக்கும், கடந்த ஆண்டு வெளியான லியோ திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    அவர் அடுத்து இயக்க போகும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று மும்பையில் தொடங்கியது. இப்படத்தில் பாபி தியால் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சன்யா மல்ஹோத்ரா இணைந்து நடிக்கவுள்ளார். இவர்களுடன் ஜோஜு ஜார்ஜ் மற்றும் சபா அசாத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இது ஒரு திரில்லர் கதைக்களத்துடன் உருவாக இருக்கும் படமாகும்.

    சன்யா மல்ஹோத்ரா 'லவ் ஹாஸ்டல்' திரைப்படத்திற்கு பிறகு பாபி தியாலுடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார். மலையாள சினிமாவில் புகழ் பெற்ற நடிகரான ஜோஜு ஜார்ஜ் இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் களம் இறங்கியுள்ளார்.

    இப்படத்தை நிகில் திவேதி தயாரிக்கவுள்ளார். இந்தாண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தென்மேற்கு பருவ காற்று படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
    • அடுத்ததாக விஜய் சேதுபதியின் 50 வது படமான மஹாராஜா படத்தில் நடித்துள்ளார்.

    தனக்கென ஒரு பாணியில் நடிப்பை வெளிப்படுத்துபவர் விஜய் சேதுபதி. 2010 ஆம் ஆண்டு வெளியான தென் மேற்கு பருவ காற்று படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றார்.

    மாஸ்டர், விக்ரம், பேட்ட மற்றும் ஜவான் திரைப்படங்களில் நட்சத்திர நடிகர்களுக்கு வில்லனாக நடித்தார். கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    அடுத்ததாக விஜய் சேதுபதியின் 50 வது படமான மஹாராஜா படத்தில் நடித்துள்ளார். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு அஜனீஷ் லோக்னாத் இசையமைக்க தினேஷ் புருஷோத்தம்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு வெளியான நிலையில். இத்திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'One 2 One' திரைப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு தனது X பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
    • சிங்கம் சிறுத்தை எனும் இப்பாடலை விஜய் சேதுபதி மற்றும் சுந்தர் சி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

    கே. திருஞானம் இயக்கத்தில் சுந்தர் சி நாயகனாகவும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்கும் 'One 2 One' திரைப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு தனது X பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.

    இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - எஸ். கே.ஏ. பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன், படத்தொகுப்பு சி.எஸ். பிரேம் குமார். கலை இயக்கம் ஆர். ஜனார்த்தனன் மேற்கொண்டுள்ளனர். இந்த படத்தை 24 IIRS புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. சிங்கம் சிறுத்தை எனும் இப்பாடலை விஜய் சேதுபதி மற்றும் சுந்தர் சி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

    இப்படத்தில் ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன் வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர் சி நடித்துள்ளார்.அவருக்கு இணையான வில்லன் பாத்திரத்தில், இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகை நீது சந்த்ரா மற்றும் விஜய் வர்மன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முழுதும் நிறைவடைந்த நிலையில், படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனுராக் காஷ்யப் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.

    இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். இவர் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் லக் பை சான்ஸ், பூத் நாத் ரிட்டர்ன் போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.


    அனுராக் காஷ்யப் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான லியோ படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    இந்நிலையில் அனுராக் காஷ்யப் தமிழில் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் இவரே இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு ஒரு நேர்காணலில் ஜி.வி.பிரகாஷ் பிரபல இயக்குனருடன் இணையவுள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    ஜி.வி.பிரகாஷ் தற்போது ரிபெல், இடிமுழக்கம், கள்வன் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் சைரன், எஸ்.கே.21, சூர்யா 43 போன்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். எனவே இந்த பட வேலைகள் முடிந்த பிறகு அனுராக் கஷ்யப் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×