என் மலர்
கோவில்கள்
கேதுவால் நாம் மேலும் பலன்கள் பெற செல்ல வேண்டிய தலம் திருக்கூடலூரில் உள்ள ஆடுதுறை பெருமாள் கோவிலாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்கள் வரிசையில் இறுதியில் 9-வது இடத்தில் இருப்பவர் கேது. ராகுவின் தொடர்ச்சியாக இவர் உள்ளார். கேதுவால் ஆதிக்கம் செலுத்தப்படு கிறவர்கள் ஆன்மீகத் துறையில் அதிக நாட்டம் கொண்டவராக இருப்பார்கள். யோகம் மாந்திரீகம் போன்றவற்றில் ரகசியமாக ஈடுபடுவார்கள். நீதியும் நேர்மையும் தவறாமல் ஒழுங்கமாக வாழ்வார்கள். இவர்களில் பலரிடம் முன் கோபம் காணப்படும்.
இவர்களுக்கு உண்மையான நண்பர்கள் கிடைப்பது அபூர்வம். எந்தக் கஷ்டம் வந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆடம்பரமாக ஆடை அணிவதில் விருப்பம் இராது. ஆனால் எப்போதும் தூய்மையான ஆடைகளை அணிந்திருப்பார்கள். எதிலும் நிதானமாகவே நடந்து கொள்வார்கள். கேதுவால் நாம் மேலும் பலன்கள் பெற செல்ல வேண்டிய தலம் திருக்கூடலூரில் உள்ள ஆடுதுறை பெருமாள் கோவிலாகும்.
புராணப்பெயர் - திருக்கூடலூர், வடதிருக் கூடலூர்,ஆடுதுறைப் பெருமாள் கோயில்.
மூலவர் - வையம் காத்த பெருமாள் (ஜகத்ரட்சக பெருமாள்)
உற்சவர் - வையம் காத்த பெருமாள்
தாயார் - பத்மாசினி தாயார் (புஷ்பவல்லி தாயார்)
தீர்த்தம் - சக்ர தீர்த்தம்
திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்
திருவையாறிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம். இது ஆடுதுறை பெருமாள் கோயில் மற்றும் சங்கம சேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
கோயிலில் வரதராஜ பெருமாள், ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களுக்கு தனிச் சந்நதிகள் உண்டு.ராஜ கோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது.கோயிலுக்கு உள்ளே ஒரு மண்டபத்துத் தூண்களில் ராணி மங்கம்மா மற்றும் அவரது அமைச்சர்கள் உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன.
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் மூலவர் வையம் காத்த பெருமாள், உய்யவந்தார், ஜகத்ரட்சகன் என்றெல்லாம் அழைக்கப் படுகிறார்.கையில் செங்கோல் ஏந்தி காட்சி தரும் உற்சவருக்கும் அந்த பெயர்.
நந்தக முனியும், தேவர்களும் ஒன்று கூடி ஹிரண்யாக்ஷணின் கொடுமையிலிருந்து பூவுலகை காக்க மகாவிஷ்ணுவை வேண்டிய காரணத்தால் இத்தலம் திருக்கூடலூர் என்ற பெயர் பெற்றது நந்தக முனியின் மகளான உஷை, தலப் பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்ததாகவும், அவள் மீது மையல் கொண்ட சோழ மன்னன் அவளை மணந்ததாகவும் அவனது அமைச்சர்களின் பொய்யான தகவல்களால், மன்னன் அவளைப் பிரிந்ததாகவும், பின் பெருமாளே அவர்கள் மீண்டும் கூடி வாழ காரணமாக இருந்ததாகவும், அதனால் கூடலூர் என பெயர் பெற்றதாகவும் கதையும் உண்டு
காவிரி இவ்விடத்தில் திருமாலை வணங்கி பாப விமோசனம் பெற்று இழந்த பொலிவை திரும்பிப் பெற்றாள். அம்பரீசன்,திருமங்கையாழ்வார்,பிரம்மா, கங்கை,யமுனை, சரஸ்வதி ஆகியோர் பெருமாளின் தரிசனம் பெற்று வழிபட்ட புண்ணியத் தலம் இதுவாகும்.
இக்கோவிலின் மூலவரான வையம் காத்த பெருமாள் நின்று கோலத்துடன் கிழக்கு திசையை நோக்கியவாறு சேவை தருகின்றார். மூலவருக்கு உய்யவந்தான், ஜெகத்ரட்சகன் என்ற பிற பெயர்களும் உண்டு. நந்தக மகரிஷிக்கு இம்மூலவர் பிரதியட்சம் ஆனவர். தாயார் பதம்மாசினி என்றழைக்கப்படும் புஷ்பவல்லி தாயார் ஆவார்.
திருமங்கையாழ்வார் இக்கோவிலில் பத்து பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். தேவர்களும் நந்தக மகரிஷியுடன் கூடி நின்று பெருமாளை பிரதியட்சமாக கூடி நின்ற கண்டமையால் கூடலூர் என்று பெயர் பெற்றது. இதனை சங்கம ஷேத்திரம் என்று பண்டிதர்கள் கூறுவர்.
ஒரு சமயம் காவிரி நதியில் பெரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாய் இத்தலம் முழுமையாக மூழ்கி மண் மேடாகிப் போனது. அப்போது மதுரையம்பதியை ஆண்டு வந்த ராணி மங்கம்மாளின் கனவில் எம்பெருமான் தோன்றி இத்தலத்து கோவில் மண்மேட்டில் புதைந்து கிடக்கும் விபரத்தைத் தெரிவித்ததாகவும், எம்பெருமானாகிய பெருமாளின் ஆணைப்படி இத்தலம் ராணி மங்கம்மாவால் புதுப்பிக்கப்பட்டது என்றும் வரலாறு கூறுகின்றது. உற்சவமூர்த்தி தனது பெயரான ஜெகத்ரட்சகன் என்ற பெயருக்கு ஏற்றவாறு தமது கரத்தில் செங்கோல் ஏந்தி காணப்படுகின்றார்.
இவர்களுக்கு உண்மையான நண்பர்கள் கிடைப்பது அபூர்வம். எந்தக் கஷ்டம் வந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆடம்பரமாக ஆடை அணிவதில் விருப்பம் இராது. ஆனால் எப்போதும் தூய்மையான ஆடைகளை அணிந்திருப்பார்கள். எதிலும் நிதானமாகவே நடந்து கொள்வார்கள். கேதுவால் நாம் மேலும் பலன்கள் பெற செல்ல வேண்டிய தலம் திருக்கூடலூரில் உள்ள ஆடுதுறை பெருமாள் கோவிலாகும்.
புராணப்பெயர் - திருக்கூடலூர், வடதிருக் கூடலூர்,ஆடுதுறைப் பெருமாள் கோயில்.
மூலவர் - வையம் காத்த பெருமாள் (ஜகத்ரட்சக பெருமாள்)
உற்சவர் - வையம் காத்த பெருமாள்
தாயார் - பத்மாசினி தாயார் (புஷ்பவல்லி தாயார்)
தீர்த்தம் - சக்ர தீர்த்தம்
திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தத் தலம்
திருவையாறிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம். இது ஆடுதுறை பெருமாள் கோயில் மற்றும் சங்கம சேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
கோயிலில் வரதராஜ பெருமாள், ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களுக்கு தனிச் சந்நதிகள் உண்டு.ராஜ கோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது.கோயிலுக்கு உள்ளே ஒரு மண்டபத்துத் தூண்களில் ராணி மங்கம்மா மற்றும் அவரது அமைச்சர்கள் உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன.
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் மூலவர் வையம் காத்த பெருமாள், உய்யவந்தார், ஜகத்ரட்சகன் என்றெல்லாம் அழைக்கப் படுகிறார்.கையில் செங்கோல் ஏந்தி காட்சி தரும் உற்சவருக்கும் அந்த பெயர்.
நந்தக முனியும், தேவர்களும் ஒன்று கூடி ஹிரண்யாக்ஷணின் கொடுமையிலிருந்து பூவுலகை காக்க மகாவிஷ்ணுவை வேண்டிய காரணத்தால் இத்தலம் திருக்கூடலூர் என்ற பெயர் பெற்றது நந்தக முனியின் மகளான உஷை, தலப் பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்ததாகவும், அவள் மீது மையல் கொண்ட சோழ மன்னன் அவளை மணந்ததாகவும் அவனது அமைச்சர்களின் பொய்யான தகவல்களால், மன்னன் அவளைப் பிரிந்ததாகவும், பின் பெருமாளே அவர்கள் மீண்டும் கூடி வாழ காரணமாக இருந்ததாகவும், அதனால் கூடலூர் என பெயர் பெற்றதாகவும் கதையும் உண்டு
காவிரி இவ்விடத்தில் திருமாலை வணங்கி பாப விமோசனம் பெற்று இழந்த பொலிவை திரும்பிப் பெற்றாள். அம்பரீசன்,திருமங்கையாழ்வார்,பிரம்மா, கங்கை,யமுனை, சரஸ்வதி ஆகியோர் பெருமாளின் தரிசனம் பெற்று வழிபட்ட புண்ணியத் தலம் இதுவாகும்.
இக்கோவிலின் மூலவரான வையம் காத்த பெருமாள் நின்று கோலத்துடன் கிழக்கு திசையை நோக்கியவாறு சேவை தருகின்றார். மூலவருக்கு உய்யவந்தான், ஜெகத்ரட்சகன் என்ற பிற பெயர்களும் உண்டு. நந்தக மகரிஷிக்கு இம்மூலவர் பிரதியட்சம் ஆனவர். தாயார் பதம்மாசினி என்றழைக்கப்படும் புஷ்பவல்லி தாயார் ஆவார்.
திருமங்கையாழ்வார் இக்கோவிலில் பத்து பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். தேவர்களும் நந்தக மகரிஷியுடன் கூடி நின்று பெருமாளை பிரதியட்சமாக கூடி நின்ற கண்டமையால் கூடலூர் என்று பெயர் பெற்றது. இதனை சங்கம ஷேத்திரம் என்று பண்டிதர்கள் கூறுவர்.
ஒரு சமயம் காவிரி நதியில் பெரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாய் இத்தலம் முழுமையாக மூழ்கி மண் மேடாகிப் போனது. அப்போது மதுரையம்பதியை ஆண்டு வந்த ராணி மங்கம்மாளின் கனவில் எம்பெருமான் தோன்றி இத்தலத்து கோவில் மண்மேட்டில் புதைந்து கிடக்கும் விபரத்தைத் தெரிவித்ததாகவும், எம்பெருமானாகிய பெருமாளின் ஆணைப்படி இத்தலம் ராணி மங்கம்மாவால் புதுப்பிக்கப்பட்டது என்றும் வரலாறு கூறுகின்றது. உற்சவமூர்த்தி தனது பெயரான ஜெகத்ரட்சகன் என்ற பெயருக்கு ஏற்றவாறு தமது கரத்தில் செங்கோல் ஏந்தி காணப்படுகின்றார்.
திருவெள்ளியங்குடி தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு வைணவ திருத்தலமாகும். இது ஆழ்வார்களால் பாடற்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
கோவிலின் பெயர் : கோலவில்ராமன் திருக் கோவில், திருவெள்ளியங்குடி, தஞ்சாவூர் மாவட்டம்.
மூலவர் : கோலவல்வில்லி ராமன்
கோலம் : கிழக்குப் பார்த்த புஜங்க சயனம்
தாயார் : மரகதவல்லி
உற்சவர் : சிருங்கார சுந்தரன்
விமானம் : புஷ்கலா வர்த்தக விமானம்
தல விருட்சம் : கதலி மரம் (வாழை மரம்)
தீர்த்தம் : சுக்ர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், பராசுர தீர்த்தம்.
காட்சி கண்டவர்கள் : பிரம்மா, இந்திரன், சுக்கிரன், பராசுர முனிவர், மயன், மார்க்கண்டேயர், பூமாதேவி.
பாசுரங்கள் : 10
சிறப்புகள் : 108 திவ்ய தேசங்களில் சுருடாழ்வார் நான்கு கரங்களுடன் சங்கு சக்கரத்துடன் காட்சி அளிப்பது இங்கு மட்டும்தான். கருங்கல் தரையில் தல விருட்சமான செங்கதலி வாழை வருடம் தோறும் பூத்துக் காய்ப்பது ஒரு அதிசயம். இந்தத் தலத்தைச் சுற்றியே நவக்கிரகத் தலங்கள் அனைத்தும் அமைந்துள்ளன.
வெள்ளிக்கிழமைகளில் இந்தத் தலத்தை வழிபட்டால் சகல பாவங்களும் நீங்கி அனைத்து விதமான நன்மைகளையும் பெறலாம். ஒரு மண்டலத்திற்கு விளக்கேற்றி வழிபட்டால் கண் பார்வை தெளிவாகும்.
செல்லும் வழி : கும்பகோணம் அணைக்கரை பாதையில் சோழபுரம் என்ற ஊரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் அணைக்குடி வழியாகவும் செல்லலாம்.
மூலவர் : கோலவல்வில்லி ராமன்
கோலம் : கிழக்குப் பார்த்த புஜங்க சயனம்
தாயார் : மரகதவல்லி
உற்சவர் : சிருங்கார சுந்தரன்
விமானம் : புஷ்கலா வர்த்தக விமானம்
தல விருட்சம் : கதலி மரம் (வாழை மரம்)
தீர்த்தம் : சுக்ர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், பராசுர தீர்த்தம்.
காட்சி கண்டவர்கள் : பிரம்மா, இந்திரன், சுக்கிரன், பராசுர முனிவர், மயன், மார்க்கண்டேயர், பூமாதேவி.
பாசுரங்கள் : 10
சிறப்புகள் : 108 திவ்ய தேசங்களில் சுருடாழ்வார் நான்கு கரங்களுடன் சங்கு சக்கரத்துடன் காட்சி அளிப்பது இங்கு மட்டும்தான். கருங்கல் தரையில் தல விருட்சமான செங்கதலி வாழை வருடம் தோறும் பூத்துக் காய்ப்பது ஒரு அதிசயம். இந்தத் தலத்தைச் சுற்றியே நவக்கிரகத் தலங்கள் அனைத்தும் அமைந்துள்ளன.
வெள்ளிக்கிழமைகளில் இந்தத் தலத்தை வழிபட்டால் சகல பாவங்களும் நீங்கி அனைத்து விதமான நன்மைகளையும் பெறலாம். ஒரு மண்டலத்திற்கு விளக்கேற்றி வழிபட்டால் கண் பார்வை தெளிவாகும்.
செல்லும் வழி : கும்பகோணம் அணைக்கரை பாதையில் சோழபுரம் என்ற ஊரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் அணைக்குடி வழியாகவும் செல்லலாம்.
பிருகு மகரிஷியின் புதல்வனாக அவதரித்தவர் பார்கவன். அவருக்கு சுக்கிரன் என்ற பெயரும் உண்டு. அசுரர்களுக்கு குருவாக விளங்கிய சுக்கிரன் காசிக்கு சென்று ஒரு லிங்க பிரதிஷ்டை செய்து பல ஆண்டு காலம் கடுமையான தவம் செய்தார். அவர் முன்னே பரமசிவன் தோன்றி அவர் தவத்தை மெச்சி இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ம்ருத சஞ்ஜீவினி என்ற மந்திரத்தை உபதேசித்தார்.
இவரது சக்தியை அறிந்த அசுரர்கள் சுக்கிரனை தங்கள் குல குருவாக ஏற்றுக்கொண்டார்கள். தேவர்களுக்கும் இவர்களுக்கும் போர் நடந்துகொண்டே இருக்கும்.
அசுரர்கள் இறந்துவிட்டால் ம்ருத சஞ்ஜீவினி மந்திரத்தை பிரயோகித்து உயிர்ப்பிக்க செய்து விடுவார் சுக்கிரன். தேவர்களுக்கும் குருவாகிய பிருகஸ்பதிக்கும் இந்த வித்தை தெரியாது. ஆகையால் தன் மகன் கசன் என்பவனை சுக்கிரனிடம் அனுப்பி ம்ருத சஞ்ஜீவினி மந்திரத்தை கற்று வர அனுப்பினார்.
சுக்கிரனுக்கு நான்கு குமாரர்களும், தேவயானை, கரசை என்று இரண்டு குமாரிகளும் உண்டு. இவர் வெண்மையான நிறமுடையவர். அதனால் இவருக்கு வெள்ளி என்றும் பெயர் உண்டு.
மகாபலி சக்கரவர்த்தியிடம் திருமால் வாமனராக வந்து மூன்றடி மண் கேட்டபோது, சுக்கிராச்சாரியார் அவ்வாறு மூன்றடி மண் கொடுக்க வேண்டாம் என தடுக்க, மகாபலி அதை கேளாமல் நீர் வார்த்து கொடுக்க முனைந்த போது நீர்வார்க்கும் கெண்டியின் மூக்கினுள் சுக்கிரர் வண்டாக உருவெடுத்து நீர்வராமல் அடைத்துக் கொள்ள, அது கண்ட மகாபலி தனது பவித்திரத்தை கெண்டியின் மூக்குள் செருக, அது சுக்கிரனின் ஒரு கண்ணில் குத்த அதனால் சுக்கிரர் ஒரு கண் இழந்தவரானார். நவக்கிரகங்களில் சுக்கிர பகவான் ஒரு தனிச்சிறப்பு இடத்தை பெறுகிறார்.
சுக்கிரனை சுக்கிரபகவான் பென் கிரகமாகக்கருதப்படுகிறார். அவர் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களுக்கு அஷ்ட லட்சுமிகளின் அருளைத் தருவார். உல்லாசத்தையும் சரச சல்லாபத்தையும் கொடுப்பார். கேந்திரங்களில் அமர்ந்தால் பல தோஷங்கள் நீக்குவார் வியாபாரத்தை பெருக்குவார். அவர், ‘களத்திரகாரன்’ என்று குறிப்பிடப்படுகிறார். அவர் மூலமாக கணவனைப் பற்றியும், மனைவியைப் பற்றியும் அவர்களிடையே நிலவும் உறவை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
அவர் செல்வாக்கு, ஆடை அணிகலன்கள், வண்டி, வாகனம், நிதி, சுகம், காமம், சயன சுகம், வீடு, இசை, நாட்டியம், கவிதை, நாடகம், பாடல்கள், வாசனைப் பொருள்கள் போன்றவற்றைத் தருவார்.
சுக்கிரனால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறவர்கள் அழகாகவும், அலங்காரம் செய்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களாவும் சுறுசுறுப்பாகச் செயல்படுபவர்களாவும், கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவராகவும் இருப்பார்கள். மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் கண்களைப் பெற்றிருப்பார்கள். அன்பு, இரக்கம் போன்றவற்றைப் பெற்ற இவர்கள் மனப்பூர்வமாக மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டால்.
அதைச் செய்து முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். இவர்களுக்கு மனைவி மூலமாக அதிர்ஷ்டம் உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்குக் குறைவிருக்காது. தெய்வீகப் பணிகளில் சிறப்பாகச் செயலாற்றுவார்கள். பல அற்புதங்களைச் செய்து காட்டுவார்கள். சுக்கிரன் கோட்சார ரீதியாய் ஜென்ம ராசிக்கு 1,5,8,9,11,12-ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் நற்பலன்களையும் ஏனைய இடங்களில் மாறான பலன்களையும் அளிக்கும்.
சுக்கிரன் மாக்கோள் ஒவ்வொரு ராசியையும், கடக்க ஒரு மாதமாகும். அதனால் இதன் மாற்றத்தை பற்றி அறிய மக்கள் பெருமளவு கவனம் செலுத்த மாட்டார்கள்.
சுக்கிர தசை நடைமுறையில் இருக்கும் காலங்களில் அதனால் தீய பலன்கள் நடக்காமல் இருக்க அதி தேவதையான மகாலட்சுமியை பிரதி வெள்ளிக்கிழமை தோறும் வழிபட்டு வருவது நன்மை அளிக்கும்.
மேலும் குரு தோஷங்களைப் போக்கி குரு கிரகம் தொடர்பான பலன்களைப் பெற திருவெள்ளியங்குடி தலத்துக்கு சென்று கோலவல்வில்லி ராமனை வழிபட வேண்டும்.
திருவெள்ளியங்குடி தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு வைணவ திருத்தலமாகும். இது ஆழ்வார்களால் பாடற்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. வாமனாவதராதத்துடன் தொடர்புடைய இத்திருத்தலம் நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்ட திருத்தலம் என்ற சிறப்புக்குறியது. பிரம்மாண்டபுராணமும், விஷ்ணு புராணமும் இத்தலம் என்ற சிறப்புக்குரியது. குறித்த ஏராளம் தகவல்களைத் தெரிவிக்கின்றன.
நவகிரகங்களில் சுக்கிரனாகிய வெள்ளி இத்தல பெருமானை தவமிருந்து வழிபட்டமையால் இந்த ஊர் வெள்ளியங்குடி என்ற பெயர் பெற்றது. சுக்ரபுரி என்றும் அழைப்பர்.
வாமனனாக அவதாரம் எடுத்து வந்த திருமாலுக்கு மூன்றடி மண் தானமளிக்க தயாரானார் மகாபலிச் சக்ரவர்த்தி. வந்திருப்பது சாதாரணச் சிறுவன் அல்ல என்று மகாபலிக்கு உணர்த்தினார் சுக்ராச்சாரியார். ஆனால் அதைக் கேட்கும் மன நிலையில் மகாபலிச் சக்ரவர்த்தி இல்லை. மகாபலி நீர் வார்த்து தானம் தரவிருக்கும் கமண்டல பாத்திரத்தின் நீர் வரும் துளையை ஒரு வண்டாக உருமாறி அடைத்து கொண்டார் சுக்ராச்சாரியார்.
இதை அறிந்த பகவான் நீர் வரும் தூவாரத்தை ஒரு குச்சியால் குத்த ஒரு கண்னை இழந்தார் சுக்ராசாரியர். மீண்டும் இத்தல பெருமானை நோக்கி தவமிருந்து இழந்த கண்னை பெற்றார். அசுரர்களுக்கு தச்சராக இருந்த மயன் தவமிருந்து திருமாலை வேண்ட சங்குசக்கரதாரியாக காட்சி தந்தார். பரமாத்மா இராமபிரானாக காட்சி அளிக்குமாறு வேண்டினார். திருமாலும் இராமபிரானாக காட்சி தந்தார்.
பராசரன், மார்க்கண்டேயர், இந்திரன், பிரம்மா, பூமிதேவி ஆகியோர் வழிபட்ட புண்னிய தலம். இத்தலத்து மூலவரான கோமளவல்லி ராமர் கிடந்த கோலத்துடன் புஜங்க சயனாய் கிழக்கு முகம் நோக்கி சேவை தருகின்றார். பிரம்மா, இந்திரன், மயன், மார்க்கண்டேயர், பராசுரர், சுக்கிரன், பூமாதேவி ஆகியோருக்கு இத்தலத்துப் பெருமாள் பிரதியட்சம் ஆனவர். இத்தலத்து தாயார் மரகதவல்லித் தாயார் ஆவார். உற்சவ மூர்த்தி சிருங்கார சுந்தரன் என்றழைக்கப்படுகின்றார். திருமங்கையாழ்வார் இத்தலத்தில் பத்து பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
இத்தலத்தில் சுக்கிரனாகிய வெள்ளி எம்பெருமானை நோக்கி தவம் இருந்து சேவித்தபடியால் இத்தலத்திற்கு வெள்ளியங்குடி என்ற பெயர் உண்டானது. இந்த சுக்கிரன் பிருகு முனிவரின் மகனாவார். பார்க்கவன் என்ற பெயரைக் கொண்டவர். ஒருசமயம் சுக்கிரனாகிய பார்க்கவன் குபேரனை மிரட்டியபோது, குபேரன் சிவபெருமானிடம் முறையிட்டதால் பார்க்கவனை எடுத்து சிவபெருமான் விழுங்கினார். இதைக்கண்ட அசுரர்களும், தேவர்களும் வேண்டிக் கொண்டதன் பயனாய் சிவபெருமான் தன் சுக்கிலத்தின் வழியே பார்க்கவனை வெளியாக்கினார். அதன் காரணமாய் வெண்ணிறமும் பிரகாசமும் பெற்றதால் சுக்கிரன் என்ற பெயரினைப் பெற்றார்.
இவ்வாறு வெளிவந்த சுக்கிரன் கோசல நாட்டின் மன்னராக, வேடனாக, அன்னமாக, பண்டார சந்நிதியாக, சூரியகுல குருவாக பல பிறவிகள் எடுத்து முடிவில் வேதப் பிராமணராக கங்கைக்கரையில் வாழ்ந்து வந்தார். அப்போது பிருகு முனிவரும் யமதர்மனும் இவரை சந்தித்து ஞானத்தை உண்டாக்கி சுக்ராச் சாரியாராக மாற்றினர்.
இந்த சுக்ராச்சாரியாருக்கும் பிரம்மனுக்கும், இந்திரனுக்கும் மார்க்கண்டயருக்கும் பராசுர மகரிஷிக்கும் அசுர குலத்தில் தோன்றியத் தச்சன் மயனுக்கும் இத்தலத்து மூலவர் பிரதியட்சம் ஆனவர். இத்தலத்து எம்பெருமானை தரிசித்துச் சேவித்தால் 108 தலத்து எம்பெருமானை சேவித்த பலன் கிடைத்திடும் என்று கூறப்படுகிறது.
ராவணனின் மனைவியான மண்டோதரியின் தந்தை மயன் அசுர தச்சன் ஆவார். மகாபாரதம் நடைபெற்ற காலத்தில் அர்ச்சுணனிடம் அடைக்கலம் ஆனார். பின் பாண்டவர்கள் ராஜசூய யாகம் நடத்த ஒரு மாபெரும் மணி மண்டபத்தை நிர்ணயித்த கலைஞன் ஆவார். இம்மயன் அசுரர்களுக்காக வானில் தவழும் திரிபுரத்தையும் இறந்தவர்களை பிழைத்திட வைத்திடும் அமுத கிணற்றையும் படைத்தார்.
இதை அறிந்த எம்பெருமான் பசுவாகவும், பிரம்மா பசுங்கன்றாக வும் உருவெடுத்துச் சென்று அமுத கிணற்றினை நக்கி வறண்டு போக வைத்தனர். அமுத கிணறு வறண்டது கண்ட மயன் தன் மருமகனாகிய ராவணனை கொன்ற ஸ்ரீ ராமபிரானை தரிசித்திட வேண்டி இத்தலத்திற்கு வந்தபோது எம்பெருமான் சங்கு சக்கரம் இல்லாது கோலவில் ராமனாக தன் கையின் மீது தலைவத்து புஜங்க சயனத்தில் மயனுக்கு சேவை தந்ததாக கூறப்படுகிறது.
இத்தலத்தில் அனேக மகான்கள் தங்கி வியாச பூஜை செய்துள்ளார்கள். மேலும் உலகளாவிய நன்மைகளைத் தந்திடும் சுக்கிரனாகிய வெள்ளியின் தத்துவ விளக்கத்தை உணர்த்திடும் தலமே திருவெள்ளியங்குடி ஆகும். இத்தலத்தில் வாழை மரம் தல விருட்சமாக உள்ளது. இத்தலம் போலவே திருக்கதம்பனூர் தலத்திலும் வாழை மரம் தலவிருட்சமாக உள்ளது. இக்கோவிலில் சுக்கிர தீர்த்தம், இந்திர தீர்த்தம், பராசர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை புஷ்கரணிகளாக உள்ளன. இக்கோவில் கோபுர விமானம் புஷ்கலா வர்த்த விமான அமைப்புடன் உள்ளது.
இவரது சக்தியை அறிந்த அசுரர்கள் சுக்கிரனை தங்கள் குல குருவாக ஏற்றுக்கொண்டார்கள். தேவர்களுக்கும் இவர்களுக்கும் போர் நடந்துகொண்டே இருக்கும்.
அசுரர்கள் இறந்துவிட்டால் ம்ருத சஞ்ஜீவினி மந்திரத்தை பிரயோகித்து உயிர்ப்பிக்க செய்து விடுவார் சுக்கிரன். தேவர்களுக்கும் குருவாகிய பிருகஸ்பதிக்கும் இந்த வித்தை தெரியாது. ஆகையால் தன் மகன் கசன் என்பவனை சுக்கிரனிடம் அனுப்பி ம்ருத சஞ்ஜீவினி மந்திரத்தை கற்று வர அனுப்பினார்.
சுக்கிரனுக்கு நான்கு குமாரர்களும், தேவயானை, கரசை என்று இரண்டு குமாரிகளும் உண்டு. இவர் வெண்மையான நிறமுடையவர். அதனால் இவருக்கு வெள்ளி என்றும் பெயர் உண்டு.
மகாபலி சக்கரவர்த்தியிடம் திருமால் வாமனராக வந்து மூன்றடி மண் கேட்டபோது, சுக்கிராச்சாரியார் அவ்வாறு மூன்றடி மண் கொடுக்க வேண்டாம் என தடுக்க, மகாபலி அதை கேளாமல் நீர் வார்த்து கொடுக்க முனைந்த போது நீர்வார்க்கும் கெண்டியின் மூக்கினுள் சுக்கிரர் வண்டாக உருவெடுத்து நீர்வராமல் அடைத்துக் கொள்ள, அது கண்ட மகாபலி தனது பவித்திரத்தை கெண்டியின் மூக்குள் செருக, அது சுக்கிரனின் ஒரு கண்ணில் குத்த அதனால் சுக்கிரர் ஒரு கண் இழந்தவரானார். நவக்கிரகங்களில் சுக்கிர பகவான் ஒரு தனிச்சிறப்பு இடத்தை பெறுகிறார்.
சுக்கிரனை சுக்கிரபகவான் பென் கிரகமாகக்கருதப்படுகிறார். அவர் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களுக்கு அஷ்ட லட்சுமிகளின் அருளைத் தருவார். உல்லாசத்தையும் சரச சல்லாபத்தையும் கொடுப்பார். கேந்திரங்களில் அமர்ந்தால் பல தோஷங்கள் நீக்குவார் வியாபாரத்தை பெருக்குவார். அவர், ‘களத்திரகாரன்’ என்று குறிப்பிடப்படுகிறார். அவர் மூலமாக கணவனைப் பற்றியும், மனைவியைப் பற்றியும் அவர்களிடையே நிலவும் உறவை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
அவர் செல்வாக்கு, ஆடை அணிகலன்கள், வண்டி, வாகனம், நிதி, சுகம், காமம், சயன சுகம், வீடு, இசை, நாட்டியம், கவிதை, நாடகம், பாடல்கள், வாசனைப் பொருள்கள் போன்றவற்றைத் தருவார்.
சுக்கிரனால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறவர்கள் அழகாகவும், அலங்காரம் செய்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களாவும் சுறுசுறுப்பாகச் செயல்படுபவர்களாவும், கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவராகவும் இருப்பார்கள். மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் கண்களைப் பெற்றிருப்பார்கள். அன்பு, இரக்கம் போன்றவற்றைப் பெற்ற இவர்கள் மனப்பூர்வமாக மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டால்.
அதைச் செய்து முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். இவர்களுக்கு மனைவி மூலமாக அதிர்ஷ்டம் உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்குக் குறைவிருக்காது. தெய்வீகப் பணிகளில் சிறப்பாகச் செயலாற்றுவார்கள். பல அற்புதங்களைச் செய்து காட்டுவார்கள். சுக்கிரன் கோட்சார ரீதியாய் ஜென்ம ராசிக்கு 1,5,8,9,11,12-ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் நற்பலன்களையும் ஏனைய இடங்களில் மாறான பலன்களையும் அளிக்கும்.
சுக்கிரன் மாக்கோள் ஒவ்வொரு ராசியையும், கடக்க ஒரு மாதமாகும். அதனால் இதன் மாற்றத்தை பற்றி அறிய மக்கள் பெருமளவு கவனம் செலுத்த மாட்டார்கள்.
சுக்கிர தசை நடைமுறையில் இருக்கும் காலங்களில் அதனால் தீய பலன்கள் நடக்காமல் இருக்க அதி தேவதையான மகாலட்சுமியை பிரதி வெள்ளிக்கிழமை தோறும் வழிபட்டு வருவது நன்மை அளிக்கும்.
மேலும் குரு தோஷங்களைப் போக்கி குரு கிரகம் தொடர்பான பலன்களைப் பெற திருவெள்ளியங்குடி தலத்துக்கு சென்று கோலவல்வில்லி ராமனை வழிபட வேண்டும்.
திருவெள்ளியங்குடி தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு வைணவ திருத்தலமாகும். இது ஆழ்வார்களால் பாடற்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. வாமனாவதராதத்துடன் தொடர்புடைய இத்திருத்தலம் நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்ட திருத்தலம் என்ற சிறப்புக்குறியது. பிரம்மாண்டபுராணமும், விஷ்ணு புராணமும் இத்தலம் என்ற சிறப்புக்குரியது. குறித்த ஏராளம் தகவல்களைத் தெரிவிக்கின்றன.
நவகிரகங்களில் சுக்கிரனாகிய வெள்ளி இத்தல பெருமானை தவமிருந்து வழிபட்டமையால் இந்த ஊர் வெள்ளியங்குடி என்ற பெயர் பெற்றது. சுக்ரபுரி என்றும் அழைப்பர்.
வாமனனாக அவதாரம் எடுத்து வந்த திருமாலுக்கு மூன்றடி மண் தானமளிக்க தயாரானார் மகாபலிச் சக்ரவர்த்தி. வந்திருப்பது சாதாரணச் சிறுவன் அல்ல என்று மகாபலிக்கு உணர்த்தினார் சுக்ராச்சாரியார். ஆனால் அதைக் கேட்கும் மன நிலையில் மகாபலிச் சக்ரவர்த்தி இல்லை. மகாபலி நீர் வார்த்து தானம் தரவிருக்கும் கமண்டல பாத்திரத்தின் நீர் வரும் துளையை ஒரு வண்டாக உருமாறி அடைத்து கொண்டார் சுக்ராச்சாரியார்.
இதை அறிந்த பகவான் நீர் வரும் தூவாரத்தை ஒரு குச்சியால் குத்த ஒரு கண்னை இழந்தார் சுக்ராசாரியர். மீண்டும் இத்தல பெருமானை நோக்கி தவமிருந்து இழந்த கண்னை பெற்றார். அசுரர்களுக்கு தச்சராக இருந்த மயன் தவமிருந்து திருமாலை வேண்ட சங்குசக்கரதாரியாக காட்சி தந்தார். பரமாத்மா இராமபிரானாக காட்சி அளிக்குமாறு வேண்டினார். திருமாலும் இராமபிரானாக காட்சி தந்தார்.
பராசரன், மார்க்கண்டேயர், இந்திரன், பிரம்மா, பூமிதேவி ஆகியோர் வழிபட்ட புண்னிய தலம். இத்தலத்து மூலவரான கோமளவல்லி ராமர் கிடந்த கோலத்துடன் புஜங்க சயனாய் கிழக்கு முகம் நோக்கி சேவை தருகின்றார். பிரம்மா, இந்திரன், மயன், மார்க்கண்டேயர், பராசுரர், சுக்கிரன், பூமாதேவி ஆகியோருக்கு இத்தலத்துப் பெருமாள் பிரதியட்சம் ஆனவர். இத்தலத்து தாயார் மரகதவல்லித் தாயார் ஆவார். உற்சவ மூர்த்தி சிருங்கார சுந்தரன் என்றழைக்கப்படுகின்றார். திருமங்கையாழ்வார் இத்தலத்தில் பத்து பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
இத்தலத்தில் சுக்கிரனாகிய வெள்ளி எம்பெருமானை நோக்கி தவம் இருந்து சேவித்தபடியால் இத்தலத்திற்கு வெள்ளியங்குடி என்ற பெயர் உண்டானது. இந்த சுக்கிரன் பிருகு முனிவரின் மகனாவார். பார்க்கவன் என்ற பெயரைக் கொண்டவர். ஒருசமயம் சுக்கிரனாகிய பார்க்கவன் குபேரனை மிரட்டியபோது, குபேரன் சிவபெருமானிடம் முறையிட்டதால் பார்க்கவனை எடுத்து சிவபெருமான் விழுங்கினார். இதைக்கண்ட அசுரர்களும், தேவர்களும் வேண்டிக் கொண்டதன் பயனாய் சிவபெருமான் தன் சுக்கிலத்தின் வழியே பார்க்கவனை வெளியாக்கினார். அதன் காரணமாய் வெண்ணிறமும் பிரகாசமும் பெற்றதால் சுக்கிரன் என்ற பெயரினைப் பெற்றார்.
இவ்வாறு வெளிவந்த சுக்கிரன் கோசல நாட்டின் மன்னராக, வேடனாக, அன்னமாக, பண்டார சந்நிதியாக, சூரியகுல குருவாக பல பிறவிகள் எடுத்து முடிவில் வேதப் பிராமணராக கங்கைக்கரையில் வாழ்ந்து வந்தார். அப்போது பிருகு முனிவரும் யமதர்மனும் இவரை சந்தித்து ஞானத்தை உண்டாக்கி சுக்ராச் சாரியாராக மாற்றினர்.
இந்த சுக்ராச்சாரியாருக்கும் பிரம்மனுக்கும், இந்திரனுக்கும் மார்க்கண்டயருக்கும் பராசுர மகரிஷிக்கும் அசுர குலத்தில் தோன்றியத் தச்சன் மயனுக்கும் இத்தலத்து மூலவர் பிரதியட்சம் ஆனவர். இத்தலத்து எம்பெருமானை தரிசித்துச் சேவித்தால் 108 தலத்து எம்பெருமானை சேவித்த பலன் கிடைத்திடும் என்று கூறப்படுகிறது.
ராவணனின் மனைவியான மண்டோதரியின் தந்தை மயன் அசுர தச்சன் ஆவார். மகாபாரதம் நடைபெற்ற காலத்தில் அர்ச்சுணனிடம் அடைக்கலம் ஆனார். பின் பாண்டவர்கள் ராஜசூய யாகம் நடத்த ஒரு மாபெரும் மணி மண்டபத்தை நிர்ணயித்த கலைஞன் ஆவார். இம்மயன் அசுரர்களுக்காக வானில் தவழும் திரிபுரத்தையும் இறந்தவர்களை பிழைத்திட வைத்திடும் அமுத கிணற்றையும் படைத்தார்.
இதை அறிந்த எம்பெருமான் பசுவாகவும், பிரம்மா பசுங்கன்றாக வும் உருவெடுத்துச் சென்று அமுத கிணற்றினை நக்கி வறண்டு போக வைத்தனர். அமுத கிணறு வறண்டது கண்ட மயன் தன் மருமகனாகிய ராவணனை கொன்ற ஸ்ரீ ராமபிரானை தரிசித்திட வேண்டி இத்தலத்திற்கு வந்தபோது எம்பெருமான் சங்கு சக்கரம் இல்லாது கோலவில் ராமனாக தன் கையின் மீது தலைவத்து புஜங்க சயனத்தில் மயனுக்கு சேவை தந்ததாக கூறப்படுகிறது.
இத்தலத்தில் அனேக மகான்கள் தங்கி வியாச பூஜை செய்துள்ளார்கள். மேலும் உலகளாவிய நன்மைகளைத் தந்திடும் சுக்கிரனாகிய வெள்ளியின் தத்துவ விளக்கத்தை உணர்த்திடும் தலமே திருவெள்ளியங்குடி ஆகும். இத்தலத்தில் வாழை மரம் தல விருட்சமாக உள்ளது. இத்தலம் போலவே திருக்கதம்பனூர் தலத்திலும் வாழை மரம் தலவிருட்சமாக உள்ளது. இக்கோவிலில் சுக்கிர தீர்த்தம், இந்திர தீர்த்தம், பராசர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை புஷ்கரணிகளாக உள்ளன. இக்கோவில் கோபுர விமானம் புஷ்கலா வர்த்த விமான அமைப்புடன் உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ளது பொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
புதுக்கோட்டை அருகே உள்ளது இலுப்பூர். இலுப்பை மரங்கள் நிறைந்து விளங்கியதால் ‘இலுப்பையூர்’ என அழைக்கப்பட்டு, பின்னர் அதுவே மருவி தற்போது ‘இலுப்பூர்’ என அழைக்கப்படுகிறது. இங்குதான் பொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் ஆலயம் இருக்கிறது.
இந்த ஆலயத்தின் காலம் உறுதியாகக் கூற முடியவில்லை. எனினும் முன் மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவற்றில் காணப்படும் கல்வெட்டுகளில், குலசேகர பாண்டியன் (1190-1218) மற்றும் சுந்தர பாண்டியன் (1218-1244) ஆகியோரது கல்வெட்டுகள் காணப்படுகின்றன. எனவே இந்த ஆலயம் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் முன்னால் ஒரே கல்லால் செய்த கொடி கம்பம் உள்ளது. இக்கொடி கம்பத்தின் அடிப்பகுதியில் கிழக்கில் விநாயகர், வடக்கில் ஒற்றை காலை மடக்கி தவம் புரியும் முனிவரின் உருவம், மேற்கில் லிங்கத்தின் மீது பால் பொழியும் பசுவின் சிற்பம், தெற்கில் பீடத்தின் மீது அமர்ந்து காணப்படும் முனிவரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இதனை அடுத்து 16 கால் மண்டபம் உள்ளது.
கோவிலின் நுழைவு வாசலில் மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. உள்ளே நுழைந்ததும் முன் மண்டபம் உள்ளது. கொடி கம்பம், பலி பீடம், நந்தி ஆகியவை இங்கு காட்சி தருகின்றன. முன் மண்டபம் 12 தூண்களுடனும், யாளி, ஆறு கரங்களுடன் நர்த்தன விநாயகர் மற்றும் நாயக்கர் மன்னர்களின் உருவங்களுடனும் காணப்படுகிறது. வலது புறம் நடராஜ சபை அழகிய வேலைப்பாடுகளுடன் காட்சி அளிக்கிறது. அடுத்ததாக சிறப்பு மண்டபமும், அதை அடுத்து மகா மண்டபமும் உள்ளன. மகா மண்டபத்தின் வலது புறம் அன்னை சொர்ணாம்பாள் சன்னிதி உள்ளது. அன்னையின் இன்னொரு பெயர் ‘பொன்னம்மாள்’ என்பதாகும்.
அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள கருவறையில் இறைவன் பொன்வாசி நாதர், லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவனின் பிறபெயர்கள் ‘ஹேம விருத்திஸ்வரர்’ மற்றும் ‘பொன் வளர்ச்சி நாதர்’ என்பதாகும். இதுவே நாளடைவில் மருவி ‘பொன்வாசி நாதர்’ என அழைக்கப்படுகிறது.
இங்கு அன்னை தென் முகம் நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு நான்கு கரங்கள். அன்னை தன் மேலிரு கரங்களில் தாமரை மலரைத் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரை காட்டியும் அருள்கிறாள். இத்தல இறைவி, லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகிய மூன்று தேவிகளின் சக்தியுடன் இணைந்து கருணையுடன் காட்சி தருவது சிறப்பம்சமாகும்.
இறைவனின் வட்டவடிவ விமான கோபுரத்தில் அஷ்டதிக்கு பாலகர்கள், எட்டு திசையை நோக்கி காவல் புரிவது போல் காணப்படுகிறது. மிகவும் வரலாற்று சிறப்பு வாய்ந்த பழமையான சிவன் கோவில்களில்தான் இது போன்ற அமைப்பு உள்ள விமானத்தைக் காணலாம்.
இந்த ஆலய திருச்சுற்றின் தெற்கில் நால்வர் திருமேனிகளும், மேற்கில் கன்னிமூலை கணபதி, வீர விநாயகர், லட்சுமி நாராயணன், விசுவநாதர், விசாலாட்சி, பூரண - புஷ்கலா சமேத ஐயனார், ஸ்ரீதேவி- பூதேவி சமேத மகாவிஷ்ணு, வீரபத்ரர், அருணகிரிநாதர், ஆத்ம லிங்கம், கஜலட்சுமி ஆகியோர் திருமேனிகள் அருள்பாலிக்கின்றன. வடக்கில் சண்டிகேசுவரர் சன்னிதியும், வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள், கிழக்கில் பட்டினத்தார் திருமேனிகளும் உள்ளன. மேற்கு பிரகாரத்தில் வள்ளி - தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் சுப்ரமணியருக்கு கந்த சஷ்டி உற்வசம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி யின் போது ஆறு நாட்களும் ஸ்தந்த ஹோமம் நடை பெறுவதுடன் சூரசம்ஹாரமும் சிறப்பாக நடைபெறும். நவராத்திரியின் போது ஒன்பது நாட்களும் இறைவன், இறைவிக்கு சகஸ்ரநாம பாராயணம் நடை பெறுவதுடன், பத்தாம் நாள் இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடையப்பட்டி கிராமம் சென்று அம்பு போடும் வைபோவமும் நடைபெறும்.
இறைவனின் தேவக் கோட்டத்தில் தென்புறம் கொங்கணச் சித்தர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, துர்க்கை, பிச்சாடனர் அருள்பாலிக்க, இறைவியின் தேவ கோட்டத்தில் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்திகள் அருள்பாலிக்கின்றனர்.
இத்தல இறைவன் பொன்வாசி நாதரையும், இறைவி பொன்னம்மாள் அம்பிகையையும் வழிபட்டுதான், தேவர்களின் குருவான குரு பகவான், ‘பொன்னன்’ என்ற பெயரை பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இத்தலத்தில் வழிபாடு செய்வோருக்கு பொன்னும் பொருளும் விருத்தியாகும். தவிர அட்சய திருதியை நன்னாளில் இத்தலத்தில் வழிபாடு செய்வோருக்கு அனைத்து நலன்களும் விருத்தியாகும்.
சித்திரை மாதம் 10 நாட்கள் இங்கு பிரம்மோற்சவம் நடை பெறுகிறது. 8-ம் நாள் திருக்கல்யாண உற்சவமும், 9-ம் நாள் தேரோட்டமும் நடைபெறும். 10-ம் நாளில் தீர்த்தவாரியுடன் விழா இனிதே நிறைவுபெறும். இந்த நாட்களில் பஞ்ச மூர்த்திகள் தினசரி காலை, மாலை என இரு வேளையும் வீதியுலா வருவதுண்டு.
ஆலயத்தின் தல விருட்சம் வில்வம் மற்றும் மகிழ மரம். இறைவியின் சன்னிதியின் வலது புறம் பள்ளியறையும், இடது புறம் காலபைரவர் சன்னிதியும் உள்ளன. கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ ஆராதனைகள் நடை பெறும். திருமணம் நடைபெற வேண்டியும், குழந்தை பெற வேண்டியும் பள்ளியறையில் 48 நாட்கள் பால் பழம் வைக்க, அவர்கள் வேண்டுதல் நிறைவேறுவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.
ராமபிரானும், லட்சுமணரும் சீதா பிராட்டியைத் தேடி தென் திசை செல்லும் போது, இத்தலத்தின் வழியாக சென்றதாகவும் அப்போது இங்குள்ள இறைவன் -இறைவியை சிவபூஜை செய்து வழிபட்டதாகவும் ஐதீகம் உள்ளது.
‘சொர்ணம்’ என்றால் ‘பொன்.’ தங்கள் பெயரிலேயே பொன்னைக் கொண்ட இத்தல இறைவன், இறைவிக்கு அர்ச்சனை தட்டில் நகைகளுடன் ஆராதனை செய்து நகைக் கடை தொடங்குபவர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பது உண்மை.
புதியதாய் நகை வாங்கும் பக்தர்கள் அர்ச்சனை தட்டில் பூ, பழம், தேங்காயுடன் வாங்கிய நகைகளை வைத்து இறைவன் இறைவியை ஆராதனை செய்வது இங்கு வழக்கமாக உள்ளது. இதனால் அவர்கள் மேலும் மேலும் நகைகள் வாங்குவது நிஜம்.
களவு போன நகைகள் திரும்ப கிடைப்பதற்கு பாதிக்கப்பட்ட பக்தர்கள், இங்கு அருள்பாலிக்கும் இறைவன், இறைவிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் ஒரு மண்டல காலத்திற்குள் களவு போன நகைகள் திரும்ப கிடைப்பது உறுதியாம்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
பொன்னை வாரி வழங்கும் இத்தல இறைவன் பொன்வாசி நாதரையும் அன்னை பொன்னம்மாளையும் நாமும் ஒருமுறை தரிசித்து பயன் பெறலாமே!
அமைவிடம்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ளது இந்த பொன்வாசி நாதர் ஆலயம். விராலிமலையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டையில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் உள்ளது. மேற்கூறிய மூன்று ஊர்களில் இருந்தும் நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.
ஜெயவண்ணன்
இந்த ஆலயத்தின் காலம் உறுதியாகக் கூற முடியவில்லை. எனினும் முன் மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவற்றில் காணப்படும் கல்வெட்டுகளில், குலசேகர பாண்டியன் (1190-1218) மற்றும் சுந்தர பாண்டியன் (1218-1244) ஆகியோரது கல்வெட்டுகள் காணப்படுகின்றன. எனவே இந்த ஆலயம் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் முன்னால் ஒரே கல்லால் செய்த கொடி கம்பம் உள்ளது. இக்கொடி கம்பத்தின் அடிப்பகுதியில் கிழக்கில் விநாயகர், வடக்கில் ஒற்றை காலை மடக்கி தவம் புரியும் முனிவரின் உருவம், மேற்கில் லிங்கத்தின் மீது பால் பொழியும் பசுவின் சிற்பம், தெற்கில் பீடத்தின் மீது அமர்ந்து காணப்படும் முனிவரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இதனை அடுத்து 16 கால் மண்டபம் உள்ளது.
கோவிலின் நுழைவு வாசலில் மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. உள்ளே நுழைந்ததும் முன் மண்டபம் உள்ளது. கொடி கம்பம், பலி பீடம், நந்தி ஆகியவை இங்கு காட்சி தருகின்றன. முன் மண்டபம் 12 தூண்களுடனும், யாளி, ஆறு கரங்களுடன் நர்த்தன விநாயகர் மற்றும் நாயக்கர் மன்னர்களின் உருவங்களுடனும் காணப்படுகிறது. வலது புறம் நடராஜ சபை அழகிய வேலைப்பாடுகளுடன் காட்சி அளிக்கிறது. அடுத்ததாக சிறப்பு மண்டபமும், அதை அடுத்து மகா மண்டபமும் உள்ளன. மகா மண்டபத்தின் வலது புறம் அன்னை சொர்ணாம்பாள் சன்னிதி உள்ளது. அன்னையின் இன்னொரு பெயர் ‘பொன்னம்மாள்’ என்பதாகும்.
அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள கருவறையில் இறைவன் பொன்வாசி நாதர், லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவனின் பிறபெயர்கள் ‘ஹேம விருத்திஸ்வரர்’ மற்றும் ‘பொன் வளர்ச்சி நாதர்’ என்பதாகும். இதுவே நாளடைவில் மருவி ‘பொன்வாசி நாதர்’ என அழைக்கப்படுகிறது.
இங்கு அன்னை தென் முகம் நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு நான்கு கரங்கள். அன்னை தன் மேலிரு கரங்களில் தாமரை மலரைத் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரை காட்டியும் அருள்கிறாள். இத்தல இறைவி, லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகிய மூன்று தேவிகளின் சக்தியுடன் இணைந்து கருணையுடன் காட்சி தருவது சிறப்பம்சமாகும்.
இறைவனின் வட்டவடிவ விமான கோபுரத்தில் அஷ்டதிக்கு பாலகர்கள், எட்டு திசையை நோக்கி காவல் புரிவது போல் காணப்படுகிறது. மிகவும் வரலாற்று சிறப்பு வாய்ந்த பழமையான சிவன் கோவில்களில்தான் இது போன்ற அமைப்பு உள்ள விமானத்தைக் காணலாம்.
இந்த ஆலய திருச்சுற்றின் தெற்கில் நால்வர் திருமேனிகளும், மேற்கில் கன்னிமூலை கணபதி, வீர விநாயகர், லட்சுமி நாராயணன், விசுவநாதர், விசாலாட்சி, பூரண - புஷ்கலா சமேத ஐயனார், ஸ்ரீதேவி- பூதேவி சமேத மகாவிஷ்ணு, வீரபத்ரர், அருணகிரிநாதர், ஆத்ம லிங்கம், கஜலட்சுமி ஆகியோர் திருமேனிகள் அருள்பாலிக்கின்றன. வடக்கில் சண்டிகேசுவரர் சன்னிதியும், வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள், கிழக்கில் பட்டினத்தார் திருமேனிகளும் உள்ளன. மேற்கு பிரகாரத்தில் வள்ளி - தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் சுப்ரமணியருக்கு கந்த சஷ்டி உற்வசம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி யின் போது ஆறு நாட்களும் ஸ்தந்த ஹோமம் நடை பெறுவதுடன் சூரசம்ஹாரமும் சிறப்பாக நடைபெறும். நவராத்திரியின் போது ஒன்பது நாட்களும் இறைவன், இறைவிக்கு சகஸ்ரநாம பாராயணம் நடை பெறுவதுடன், பத்தாம் நாள் இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடையப்பட்டி கிராமம் சென்று அம்பு போடும் வைபோவமும் நடைபெறும்.
இறைவனின் தேவக் கோட்டத்தில் தென்புறம் கொங்கணச் சித்தர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, துர்க்கை, பிச்சாடனர் அருள்பாலிக்க, இறைவியின் தேவ கோட்டத்தில் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்திகள் அருள்பாலிக்கின்றனர்.
இத்தல இறைவன் பொன்வாசி நாதரையும், இறைவி பொன்னம்மாள் அம்பிகையையும் வழிபட்டுதான், தேவர்களின் குருவான குரு பகவான், ‘பொன்னன்’ என்ற பெயரை பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இத்தலத்தில் வழிபாடு செய்வோருக்கு பொன்னும் பொருளும் விருத்தியாகும். தவிர அட்சய திருதியை நன்னாளில் இத்தலத்தில் வழிபாடு செய்வோருக்கு அனைத்து நலன்களும் விருத்தியாகும்.
சித்திரை மாதம் 10 நாட்கள் இங்கு பிரம்மோற்சவம் நடை பெறுகிறது. 8-ம் நாள் திருக்கல்யாண உற்சவமும், 9-ம் நாள் தேரோட்டமும் நடைபெறும். 10-ம் நாளில் தீர்த்தவாரியுடன் விழா இனிதே நிறைவுபெறும். இந்த நாட்களில் பஞ்ச மூர்த்திகள் தினசரி காலை, மாலை என இரு வேளையும் வீதியுலா வருவதுண்டு.
ஆலயத்தின் தல விருட்சம் வில்வம் மற்றும் மகிழ மரம். இறைவியின் சன்னிதியின் வலது புறம் பள்ளியறையும், இடது புறம் காலபைரவர் சன்னிதியும் உள்ளன. கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ ஆராதனைகள் நடை பெறும். திருமணம் நடைபெற வேண்டியும், குழந்தை பெற வேண்டியும் பள்ளியறையில் 48 நாட்கள் பால் பழம் வைக்க, அவர்கள் வேண்டுதல் நிறைவேறுவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.
ராமபிரானும், லட்சுமணரும் சீதா பிராட்டியைத் தேடி தென் திசை செல்லும் போது, இத்தலத்தின் வழியாக சென்றதாகவும் அப்போது இங்குள்ள இறைவன் -இறைவியை சிவபூஜை செய்து வழிபட்டதாகவும் ஐதீகம் உள்ளது.
‘சொர்ணம்’ என்றால் ‘பொன்.’ தங்கள் பெயரிலேயே பொன்னைக் கொண்ட இத்தல இறைவன், இறைவிக்கு அர்ச்சனை தட்டில் நகைகளுடன் ஆராதனை செய்து நகைக் கடை தொடங்குபவர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பது உண்மை.
புதியதாய் நகை வாங்கும் பக்தர்கள் அர்ச்சனை தட்டில் பூ, பழம், தேங்காயுடன் வாங்கிய நகைகளை வைத்து இறைவன் இறைவியை ஆராதனை செய்வது இங்கு வழக்கமாக உள்ளது. இதனால் அவர்கள் மேலும் மேலும் நகைகள் வாங்குவது நிஜம்.
களவு போன நகைகள் திரும்ப கிடைப்பதற்கு பாதிக்கப்பட்ட பக்தர்கள், இங்கு அருள்பாலிக்கும் இறைவன், இறைவிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் ஒரு மண்டல காலத்திற்குள் களவு போன நகைகள் திரும்ப கிடைப்பது உறுதியாம்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
பொன்னை வாரி வழங்கும் இத்தல இறைவன் பொன்வாசி நாதரையும் அன்னை பொன்னம்மாளையும் நாமும் ஒருமுறை தரிசித்து பயன் பெறலாமே!
அமைவிடம்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ளது இந்த பொன்வாசி நாதர் ஆலயம். விராலிமலையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டையில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் உள்ளது. மேற்கூறிய மூன்று ஊர்களில் இருந்தும் நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.
ஜெயவண்ணன்
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வீரட்டேஸ்வரர் ஆலயம். இதற்கு கொருக்கை திருத்தலம் என்றும் பெயர்.
தேவர்களுக்கும், அரசர்களுக்கும் அவ்வப்போது போர் நடந்துகொண்டே இருக்கும். தேவர்கள் போர் முடிந்து ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தால், அசுரர்கள் அதற்கு இடம்கொடுக்கவே மாட்டார்கள். தேவர்களுக்கு இம்சை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இதனை தேவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சிவபெருமானை சந்தித்தனர். தங்களைக் காப்பாற்றும்படி முறையிட்டனர்.
“முருகன் வருவான்; உங்களைக் காப்பாற்றுவான்” என்று கூறிவிட்டு, தவத்தில் உட்கார்ந்து விட்டார். ஆண்டுகள் பல கடந்தும் அசுரர்களின் தொல்லை தீரவில்லை. முருகனும் வந்த பாடில்லை. சிவன் தவமும் கலையவில்லை.
இதையடுத்து மன்மதனை அழைத்த தேவர்கள், காமக்கணை வீசி சிவனான யோகீஸ்வரரின் தவத்தை கலைக்கும்படி கூறினர். ஆனால் அதற்கு மன்மதன் மறுத்துவிட்டான். “சிவன் மீது கணை வீச மறுத்தால், சாபம் அளித்து விடுவோம்” என்று தேவர்கள் பயமுறுத்தியதால், வேறு வழியின்றி சிவனின் மீது மன்மதன் பாணம் ஏவினான்.
அதுவரை கிழக்கு நோக்கி இருந்த சிவன், மேற்கு நோக்கி திரும்ப, அவரது நெற்றிக்கண் பார்வை பட்டு மன்மதன் எரிந்துபோனான். தனது மான சீகப் புதல்வனை இழந்த மகாவிஷ்ணுவும், தன் கணவனை இழந்த ரதியும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
“உன் கணவன், உன் கண்ணுக்கு மட்டுமே தெரிவான். மற்றவர் கண்ணுக்கு அருபமாகத் தெரிவான்” என ரதியிடம் கூறிய யோகீஸ்வரர், மன்மதனுக்கு உயிர்பிச்சை அளித்தார்.
இந்த யோகீஸ்வரர் அருள்பாலிக்கும் தலம் கொருக்கை. இங்குள்ளது வீரட்டேஸ்வரர் ஆலயம். இறைவி ஞானாம்பிகை அம்மன். இறைவன் யோகீஸ்வரர். இவருக்கு ‘காமதகன மூர்த்தி’ என்ற பெயரும் உண்டு. பிரம்மாவும், சிவனும் ஒரே கோவிலில் அருள்புரிவது சிறப்பம்சம். காமதகனபுரம், கடுவனம் என்ற பெயர்களும் இந்த ஊருக்கு உண்டு.
ஊரின் நடுநாயகமாய் அமைந்துள்ளது வீரட்டேஸ்வரர் ஆலயம். நவக்கிரகங்கள், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி ஆகியோரின் திருமேனிகளும் இங்கு உள்ளன. உட்பிரகாரத்தில் வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணியர், குறுங்கை விநாயகர், சோமாஸ்கந்தர் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருக்கின்றனர்.
சிவபெருமான் யோக மூர்த்தியாக இடது காலை மடித்து வலது காலைத் தொங்க விட்டு அமர்ந்துள்ளார். பின் இரு கரங்களில் மான், மழு ஏந்தி, முன் வலதுகரம் அபய முத்திரையுடனும் முன் இடது கரத்தை முழங்கால் மீது நீட்டி வைத்தவாறும் உள்ளார். இறைவனுக்குச் சுற்றிலும் சனகாதி முனிவர்கள் உள்ளனர். இவருக்கு இடப்புறம் நின்ற கோலத்தில் அம்பிகை காட்சியளிக்கிறாள். இந்த அன்னையை ‘பூரணி’ என்று அழைப்பார்கள். இந்தச் சன்னிதிக்கு எதிரில், மன்மதன் கரும்பு வில், மலர்ப் பாணத்துடனும், ரதிதேவி கிளியை ஏந்தியும் காட்சி அளிக்கின்றனர்.
இறைவன் மேல் பாணம் போடும் முன், மன்மதன் கங்கணம் கட்டிக் கொண்ட இடம் ‘கங்கணம் புத்தூர்’ எனவும், வில் எடுத்த ஊர் ‘வில்லியநல்லூர்’ எனவும், நாண் ஏற்றிய ஊர் ‘நாரண மங்கலம்’ எனவும், மன்மதன் எரிந்த இடம் ‘விபூதி குட்டை’ என்ற பெயருடனும் கொருக்கையை சுற்றிய ஊர்களாக அமைந்துள்ளன.
திரிசூல கங்கை என அழைக்கப்படும் தீர்த்தம், கோவிலுக்கு எதிரே உள்ளது. கோவிலில் நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. சித்திரை வருடப் பிறப்பு, ஆடி மாதப் பிறப்பு, மார்கழி ஐப்பசி மாதப் பிறப்புகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மாசி மகம் அன்று சுவாமியும், அம்மனும் வீதி உலா வருவார்கள்.
தொடர்ச்சியாக 11 நாட்கள், இத்தல இறைவனுக்கு பால், தேன் கொண்டு அபிஷேகம் செய்து, அந்த தீர்த்தத்தில் கடுக்காய் அரைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
புத்திர பாக்கியம் பெற, திருமண தடை நீங்க இத்தல இறைவனை வேண்டிக்கொள்கிறார்கள். மேலும் பேசுவதில் தடுமாற்றம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் பேச்சு வன்மை பிறக்கும் என்கிறார்கள். சிவராத்திரி அன்று இறைவனையும், இறைவியையும் லட்ச தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபடுகிறார்கள். அப்போது ஆலயம் ஜொலிப்பதைக் காண கண் கோடி வேண்டும்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் மணல்மேடு என்ற இடம் உள்ளது. இங்கிருந்து தென்கிழக்கே 6 கிலோமீட்டர் சென்றால், கொருக்கை திருத்தலத்தை அடையலாம்.
“முருகன் வருவான்; உங்களைக் காப்பாற்றுவான்” என்று கூறிவிட்டு, தவத்தில் உட்கார்ந்து விட்டார். ஆண்டுகள் பல கடந்தும் அசுரர்களின் தொல்லை தீரவில்லை. முருகனும் வந்த பாடில்லை. சிவன் தவமும் கலையவில்லை.
இதையடுத்து மன்மதனை அழைத்த தேவர்கள், காமக்கணை வீசி சிவனான யோகீஸ்வரரின் தவத்தை கலைக்கும்படி கூறினர். ஆனால் அதற்கு மன்மதன் மறுத்துவிட்டான். “சிவன் மீது கணை வீச மறுத்தால், சாபம் அளித்து விடுவோம்” என்று தேவர்கள் பயமுறுத்தியதால், வேறு வழியின்றி சிவனின் மீது மன்மதன் பாணம் ஏவினான்.
அதுவரை கிழக்கு நோக்கி இருந்த சிவன், மேற்கு நோக்கி திரும்ப, அவரது நெற்றிக்கண் பார்வை பட்டு மன்மதன் எரிந்துபோனான். தனது மான சீகப் புதல்வனை இழந்த மகாவிஷ்ணுவும், தன் கணவனை இழந்த ரதியும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
“உன் கணவன், உன் கண்ணுக்கு மட்டுமே தெரிவான். மற்றவர் கண்ணுக்கு அருபமாகத் தெரிவான்” என ரதியிடம் கூறிய யோகீஸ்வரர், மன்மதனுக்கு உயிர்பிச்சை அளித்தார்.
இந்த யோகீஸ்வரர் அருள்பாலிக்கும் தலம் கொருக்கை. இங்குள்ளது வீரட்டேஸ்வரர் ஆலயம். இறைவி ஞானாம்பிகை அம்மன். இறைவன் யோகீஸ்வரர். இவருக்கு ‘காமதகன மூர்த்தி’ என்ற பெயரும் உண்டு. பிரம்மாவும், சிவனும் ஒரே கோவிலில் அருள்புரிவது சிறப்பம்சம். காமதகனபுரம், கடுவனம் என்ற பெயர்களும் இந்த ஊருக்கு உண்டு.
ஊரின் நடுநாயகமாய் அமைந்துள்ளது வீரட்டேஸ்வரர் ஆலயம். நவக்கிரகங்கள், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி ஆகியோரின் திருமேனிகளும் இங்கு உள்ளன. உட்பிரகாரத்தில் வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணியர், குறுங்கை விநாயகர், சோமாஸ்கந்தர் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருக்கின்றனர்.
சிவபெருமான் யோக மூர்த்தியாக இடது காலை மடித்து வலது காலைத் தொங்க விட்டு அமர்ந்துள்ளார். பின் இரு கரங்களில் மான், மழு ஏந்தி, முன் வலதுகரம் அபய முத்திரையுடனும் முன் இடது கரத்தை முழங்கால் மீது நீட்டி வைத்தவாறும் உள்ளார். இறைவனுக்குச் சுற்றிலும் சனகாதி முனிவர்கள் உள்ளனர். இவருக்கு இடப்புறம் நின்ற கோலத்தில் அம்பிகை காட்சியளிக்கிறாள். இந்த அன்னையை ‘பூரணி’ என்று அழைப்பார்கள். இந்தச் சன்னிதிக்கு எதிரில், மன்மதன் கரும்பு வில், மலர்ப் பாணத்துடனும், ரதிதேவி கிளியை ஏந்தியும் காட்சி அளிக்கின்றனர்.
இறைவன் மேல் பாணம் போடும் முன், மன்மதன் கங்கணம் கட்டிக் கொண்ட இடம் ‘கங்கணம் புத்தூர்’ எனவும், வில் எடுத்த ஊர் ‘வில்லியநல்லூர்’ எனவும், நாண் ஏற்றிய ஊர் ‘நாரண மங்கலம்’ எனவும், மன்மதன் எரிந்த இடம் ‘விபூதி குட்டை’ என்ற பெயருடனும் கொருக்கையை சுற்றிய ஊர்களாக அமைந்துள்ளன.
திரிசூல கங்கை என அழைக்கப்படும் தீர்த்தம், கோவிலுக்கு எதிரே உள்ளது. கோவிலில் நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. சித்திரை வருடப் பிறப்பு, ஆடி மாதப் பிறப்பு, மார்கழி ஐப்பசி மாதப் பிறப்புகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மாசி மகம் அன்று சுவாமியும், அம்மனும் வீதி உலா வருவார்கள்.
தொடர்ச்சியாக 11 நாட்கள், இத்தல இறைவனுக்கு பால், தேன் கொண்டு அபிஷேகம் செய்து, அந்த தீர்த்தத்தில் கடுக்காய் அரைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
புத்திர பாக்கியம் பெற, திருமண தடை நீங்க இத்தல இறைவனை வேண்டிக்கொள்கிறார்கள். மேலும் பேசுவதில் தடுமாற்றம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் பேச்சு வன்மை பிறக்கும் என்கிறார்கள். சிவராத்திரி அன்று இறைவனையும், இறைவியையும் லட்ச தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபடுகிறார்கள். அப்போது ஆலயம் ஜொலிப்பதைக் காண கண் கோடி வேண்டும்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் மணல்மேடு என்ற இடம் உள்ளது. இங்கிருந்து தென்கிழக்கே 6 கிலோமீட்டர் சென்றால், கொருக்கை திருத்தலத்தை அடையலாம்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பேருந்து நிலையத்தின் அருகில் கோவில்பத்து என்றழைக்கப்படும் இடத்தில் இந்த திருத்தெளிச்சேரி - பார்வதீஸ்வரர் கோவில் உள்ளது.
மூன்று வயதிலேயே ஞானப்பாலருந்தி ‘தோடுடைய செவியன்..’ என்று தேன் தமிழ்ப்பா இசைக்கத் தொடங்கிய ஆளுடைப்பிள்ளை திருஞான சம்பந்தர். பின்னர் அவர் திருக்கோவில்கள் தோறும் சென்று வழிபட்டுப் பண்ணிசைத்து வந்தார். அவர் திருக்கடவூர், திருவேட்டக்குடி ஆகிய தலங்களைத் தரிசித்து தேவாரம் பாடி விட்டு, காரைக்கால் நகரினை நோக்கி வந்தார்.
அங்கு சிவபெருமானால் ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரிய, காரைக்கால் அம்மையார் பிறந்த புனித பூமியினைக் கால்களால் மிதிக்கக்கூடாது என்று அஞ்சி, மண்ணைத் தொட்டு வணங்கி விட்டு, நகரின் வடபுறம் உள்ள திருத்தெளிச் சேரியிலேயே நின்றுகொண்டார்.
அங்கிருந்த சிவாலயத்தின் முன் உள்ள விநாயகரை வணங்கினார். எனவே அந்த விநாயகர் ‘ஞானசம்பந்த விநாயகர்’ என்றே அழைக்கப்படுகிறார். அதன் பிறகு, சம்பந்தர் பூஞ்சோலைகள் சூழ்ந்த கோவிலில் நுழைந்து, முக்கன் பரமனைப் பணிந்து இத்தலத்தைப் பற்றி, பதினோரு தேவாரப் பாக்களைப் பொழிந்தார்.
‘பூவலர்ந்தன கொண்டு, முப்போதுமும் பொற்கழல்
தேவர் வந்து வணங்கி மிகு தெளிச் சேரியீர்.
மேவருந் தொழிலாளொரு கேழற்பின் வேடனாம்
பாவ கங்கொடு நின்றது போலுறும் பான்மையே’ என்பது இந்த தலத்தில் அவரது முதல் பதிகம் ஆகும்.
அத்தகு தேவாரப்பாடல் சிறப்புடைய இந்த ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஐந்துநிலை ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றதும், முன் மண்டபத்தில் ஸ்தம்ப விநாயகருடன் கொடிமரமும், பலிபீடமும், அமர்ந்த நிலையிலே நந்திய பெருமானும் காட்சி தருகின்றனர். உள்ளே நுழைந்ததும் மேற்கு பார்த்த தனி கருவறையில் சிவபிரான் ‘பார்வதீஸ்வரர்’ என்ற நாமம் தாங்கி காட்சி தருகிறார். தெற்கு நோக்கிய தனிக் கருவறையில் அம்பிகை ‘சுயம்வர தபஸ்வினி’ என்ற பெயரில் நின்ற கோலத்தில் அருள்கிறாள்.
அம்பாள் தவமிருந்து இறைவனைப் பூஜித்த தலமாதலால், இங்கே அம்மைக்கு இத்திருப்பெயர் வழங்கலாயிற்று. சுவாமியும் பார்வதி ஈஸ்வரர் என்றே போற்றப்படுகிறார். எனவே இத்தல அம்மையப்பர் தனது அன்பர்களின் திருமணம் கைகூட, கருணைபொழிபவர் என்பது ஐதீகம். அதனை மெய்ப்பிக்கும் வகையில் சுவாமி சன்னிதி சுவற்றிலும், உள் திருச்சுற்றிலும் அம்பிகை ஐயனை பூஜிக்கும் சிற்பங்கள் மிளிர்கின்றன.
சுவாமி சன்னிதியை பார்த்தபடி எதிரில் வடபுறம், ஐந்துகரப் பெருமான் அருள்பாலிக்கிறார். தென்புறம் நின்ற திருக்கோலத்தில் வள்ளி - தெய்வானை சமேத வேலவன் காட்சி தருகிறார். அதையடுத்து யானைகள் துதிக்கும் கஜலட்சுமி அருள்கிறார். அம்பாள் சன்னிதியின் பக்கத்தில், தென்திசை நோக்கியபடி சிவகாமி அம்மை உடனிருக்க தில்லை நடராசர் தனிச் சன்னிதியில் ஆடிக்கொண்டிருக்கிறார்.
மேற்கு பார்த்த கோவிலாதலால் துர்க்கை அம்மனும், அதை அடுத்து கோமுகமும், அதன் மேலே நான்முகனும் காட்சி தருகின்றனர். சண்டிகேசர் சற்று தள்ளி தனியே வீற்றிருப்பது மாறுபாடான நிலையாகும். வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்களும், மேற்கு நோக்கிய கால பைரவரும் தோற்றம் தருகின்றனர். சனீஸ்வரர் இங்கே, காகத்தின் மேல் வலது காலை மடித்து வைத்து இடக்காலை தொங்க விட்டபடி அமர்ந்திருப்பது வித்தியாசமான காட்சியாகும். சனீஸ்வரனுக்குரிய திருநள்ளாறு கோவிலோடு இணைந்த கோவில் என்பதால், இங்கும் சனீஸ்வரருக்கு சிறப்பு உள்ளதெனவும், சனீஸ்வரருக்கு உற்சவமூர்த்தி உள்ளதெனவும் தெரிவிக்கின்றனர்.
ஏர் ஏந்திய சிவன், மேற்கு நோக்கி தனிச்சன்னிதியில் சுவாமி, அம்பாள் ஐம்பொன் திருமேனிகள் கண்ணைக் கவருகின்றன. சுவாமி கையில் ஏர்கலப்பை ஏந்தியுள்ளது தான் பெருஞ்சிறப்பு. சிவபெருமான் ஒரு ஆனி மாத நன்னாளில் இவ்வூரில் உள்ள நிலத்தை உழுது விதை தெளித்து, முன்னோடி விவசாயியாக காட்சி தந்தார் என்கிறது தல புராணம். இதனால் தான் இவ்வூர் ‘தெளிச்சேரி’ என்றாயிற்று.
இறைவன் திருத்தினை நகரிலும், திருநாட்டியத்தான் குடியிலும், கோவை பேரூரிலும் விவசாயியாக அம்பிகையுடன் வயலில் வேலை செய்த செய்திகள் நம்மைச் சிலிர்க்கச் செய்கின்றன. இக்கோவிலின் உள் சுற்றின் தென்புறம் தட்சிணாமூர்த்தி சுவாமி, சிங்கங்கள் தாங்கி நிற்கும் சிம்மாசனத்தின் மீது அமர்ந்துள்ளார். எனவே இவர் அரசனைப் போல அள்ளித்தருவார் என்பது நம்பிக்கை. தெற்கு சுவரோரம் அறுபத்து மூன்று நாயன்மார்களும் வரிசையாக வீற்றிருப்பது அற்புதமான தோற்றமாகும்.
இந்த சிவாலயத்தில் பங்குனி மாதம் 13-ந் தேதியில் இருந்து 19-ந் தேதி வரை 7 நாட்கள் தினமும் மாலை 5.30 மணியளவில் சூரியக் கதிர்கள் லிங்கத்தைத் தழுவி அவரை பூசிப்பது அரிய காட்சியாகும். இதனால் இறைவன் ‘பாஸ்கரேஸ்வரர்’ எனவும் புகழப்படுகிறார். வெளிச்சுற்றில் வன்னி மரம் அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. இது தல விருட்சமாக விளங்குவதால் இத்தலத்துக்கு ‘சமீவனம்’ என்றொரு பெயரும் உள்ளது.
இந்த ஆலயத்தில் சிவராத்திரி, நவராத்திரி உட்பட அனைத்து விழாக்களும் உரிய முறைப்படி நடத்தப்படுகின்றன. ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
அமைவிடம்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பேருந்து நிலையத்தின் அருகில் கோவில்பத்து என்றழைக்கப்படும் இடத்தில் இந்த திருத்தெளிச்சேரி - பார்வதீஸ்வரர் கோவில் உள்ளது.
டாக்டர் ச.தமிழரசன்
அங்கு சிவபெருமானால் ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரிய, காரைக்கால் அம்மையார் பிறந்த புனித பூமியினைக் கால்களால் மிதிக்கக்கூடாது என்று அஞ்சி, மண்ணைத் தொட்டு வணங்கி விட்டு, நகரின் வடபுறம் உள்ள திருத்தெளிச் சேரியிலேயே நின்றுகொண்டார்.
அங்கிருந்த சிவாலயத்தின் முன் உள்ள விநாயகரை வணங்கினார். எனவே அந்த விநாயகர் ‘ஞானசம்பந்த விநாயகர்’ என்றே அழைக்கப்படுகிறார். அதன் பிறகு, சம்பந்தர் பூஞ்சோலைகள் சூழ்ந்த கோவிலில் நுழைந்து, முக்கன் பரமனைப் பணிந்து இத்தலத்தைப் பற்றி, பதினோரு தேவாரப் பாக்களைப் பொழிந்தார்.
‘பூவலர்ந்தன கொண்டு, முப்போதுமும் பொற்கழல்
தேவர் வந்து வணங்கி மிகு தெளிச் சேரியீர்.
மேவருந் தொழிலாளொரு கேழற்பின் வேடனாம்
பாவ கங்கொடு நின்றது போலுறும் பான்மையே’ என்பது இந்த தலத்தில் அவரது முதல் பதிகம் ஆகும்.
அத்தகு தேவாரப்பாடல் சிறப்புடைய இந்த ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஐந்துநிலை ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றதும், முன் மண்டபத்தில் ஸ்தம்ப விநாயகருடன் கொடிமரமும், பலிபீடமும், அமர்ந்த நிலையிலே நந்திய பெருமானும் காட்சி தருகின்றனர். உள்ளே நுழைந்ததும் மேற்கு பார்த்த தனி கருவறையில் சிவபிரான் ‘பார்வதீஸ்வரர்’ என்ற நாமம் தாங்கி காட்சி தருகிறார். தெற்கு நோக்கிய தனிக் கருவறையில் அம்பிகை ‘சுயம்வர தபஸ்வினி’ என்ற பெயரில் நின்ற கோலத்தில் அருள்கிறாள்.
அம்பாள் தவமிருந்து இறைவனைப் பூஜித்த தலமாதலால், இங்கே அம்மைக்கு இத்திருப்பெயர் வழங்கலாயிற்று. சுவாமியும் பார்வதி ஈஸ்வரர் என்றே போற்றப்படுகிறார். எனவே இத்தல அம்மையப்பர் தனது அன்பர்களின் திருமணம் கைகூட, கருணைபொழிபவர் என்பது ஐதீகம். அதனை மெய்ப்பிக்கும் வகையில் சுவாமி சன்னிதி சுவற்றிலும், உள் திருச்சுற்றிலும் அம்பிகை ஐயனை பூஜிக்கும் சிற்பங்கள் மிளிர்கின்றன.
சுவாமி சன்னிதியை பார்த்தபடி எதிரில் வடபுறம், ஐந்துகரப் பெருமான் அருள்பாலிக்கிறார். தென்புறம் நின்ற திருக்கோலத்தில் வள்ளி - தெய்வானை சமேத வேலவன் காட்சி தருகிறார். அதையடுத்து யானைகள் துதிக்கும் கஜலட்சுமி அருள்கிறார். அம்பாள் சன்னிதியின் பக்கத்தில், தென்திசை நோக்கியபடி சிவகாமி அம்மை உடனிருக்க தில்லை நடராசர் தனிச் சன்னிதியில் ஆடிக்கொண்டிருக்கிறார்.
மேற்கு பார்த்த கோவிலாதலால் துர்க்கை அம்மனும், அதை அடுத்து கோமுகமும், அதன் மேலே நான்முகனும் காட்சி தருகின்றனர். சண்டிகேசர் சற்று தள்ளி தனியே வீற்றிருப்பது மாறுபாடான நிலையாகும். வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்களும், மேற்கு நோக்கிய கால பைரவரும் தோற்றம் தருகின்றனர். சனீஸ்வரர் இங்கே, காகத்தின் மேல் வலது காலை மடித்து வைத்து இடக்காலை தொங்க விட்டபடி அமர்ந்திருப்பது வித்தியாசமான காட்சியாகும். சனீஸ்வரனுக்குரிய திருநள்ளாறு கோவிலோடு இணைந்த கோவில் என்பதால், இங்கும் சனீஸ்வரருக்கு சிறப்பு உள்ளதெனவும், சனீஸ்வரருக்கு உற்சவமூர்த்தி உள்ளதெனவும் தெரிவிக்கின்றனர்.
ஏர் ஏந்திய சிவன், மேற்கு நோக்கி தனிச்சன்னிதியில் சுவாமி, அம்பாள் ஐம்பொன் திருமேனிகள் கண்ணைக் கவருகின்றன. சுவாமி கையில் ஏர்கலப்பை ஏந்தியுள்ளது தான் பெருஞ்சிறப்பு. சிவபெருமான் ஒரு ஆனி மாத நன்னாளில் இவ்வூரில் உள்ள நிலத்தை உழுது விதை தெளித்து, முன்னோடி விவசாயியாக காட்சி தந்தார் என்கிறது தல புராணம். இதனால் தான் இவ்வூர் ‘தெளிச்சேரி’ என்றாயிற்று.
இறைவன் திருத்தினை நகரிலும், திருநாட்டியத்தான் குடியிலும், கோவை பேரூரிலும் விவசாயியாக அம்பிகையுடன் வயலில் வேலை செய்த செய்திகள் நம்மைச் சிலிர்க்கச் செய்கின்றன. இக்கோவிலின் உள் சுற்றின் தென்புறம் தட்சிணாமூர்த்தி சுவாமி, சிங்கங்கள் தாங்கி நிற்கும் சிம்மாசனத்தின் மீது அமர்ந்துள்ளார். எனவே இவர் அரசனைப் போல அள்ளித்தருவார் என்பது நம்பிக்கை. தெற்கு சுவரோரம் அறுபத்து மூன்று நாயன்மார்களும் வரிசையாக வீற்றிருப்பது அற்புதமான தோற்றமாகும்.
இந்த சிவாலயத்தில் பங்குனி மாதம் 13-ந் தேதியில் இருந்து 19-ந் தேதி வரை 7 நாட்கள் தினமும் மாலை 5.30 மணியளவில் சூரியக் கதிர்கள் லிங்கத்தைத் தழுவி அவரை பூசிப்பது அரிய காட்சியாகும். இதனால் இறைவன் ‘பாஸ்கரேஸ்வரர்’ எனவும் புகழப்படுகிறார். வெளிச்சுற்றில் வன்னி மரம் அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. இது தல விருட்சமாக விளங்குவதால் இத்தலத்துக்கு ‘சமீவனம்’ என்றொரு பெயரும் உள்ளது.
இந்த ஆலயத்தில் சிவராத்திரி, நவராத்திரி உட்பட அனைத்து விழாக்களும் உரிய முறைப்படி நடத்தப்படுகின்றன. ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
அமைவிடம்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பேருந்து நிலையத்தின் அருகில் கோவில்பத்து என்றழைக்கப்படும் இடத்தில் இந்த திருத்தெளிச்சேரி - பார்வதீஸ்வரர் கோவில் உள்ளது.
டாக்டர் ச.தமிழரசன்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ளது தாண்டிக்குடி முருகன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது சான்றோர் வாக்கு. ஒரு அழகான மலையின் மீது பல சிறப்புகளோடு குமரக்கடவுள் காட்சி தரும் ஒரு அற்புதமான ஆலயம்தான், தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோவில். இது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ளது.
தமிழ் கடவுளான முருகக் கடவுள், தன் ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலையில் மலைவளம் கண்டபிறகு, தாண்டிக்குடி என்ற இந்தப் பகுதிக்கு வந்தார். முருகன் இங்கிருக்கும் போதுதான் அகஸ்தியரின் சீடரான இடும்பன், கயிலாயத்தில் இருந்து சிவகிரி, சக்திகிரி என்று இரண்டு மலைகளை சுமந்துகொண்டு பழனி வந்து சேர்ந்தார். இதையறிந்த முருகப்பெருமான், அந்த இரண்டு மலைகளில் ஒன்று, தனக்கு இருப்பிடமாகிக் கொள்ள உரியது என கருதி தாண்டிக் குதித்தார். இதன் காரணமாகவே இந்த இடம் `தாண்டிக்குதி' என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி `தாண்டிக்குடி' ஆனது.
பன்றிமலை சுவாமிகளின் வேண்டுகோளின்படி, முருகப்பெருமானே இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது. கோவில் கட்டுவதற்கான பொருட்களை வழங்க, சம்பந்தப்பட்ட நபர்களின் கனவில் தோன்றி கொடுக்கக் கூறினார். தற்போது கோவிலில் உள்ள மூலவர் சிலை கூட, ஸ்தபதி ஒருவரின் கனவில் முருகனே சென்று கூறி அதன் மூலம் நிறுவப்பெற்றதுதான். திருப்பணி வேலைகள் முருகப்பெருமானின் மேற்பார்வையிலேயே முடிந்தது என்ற தகவலும் இங்கே கூறப்படுகிறது.
இங்கு மூலவரான முருகன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பழனி முருகன் கோவிலில் உள்ள மூலவரின் அமைப்பே இக்கோவிலிலும் உள்ளது. பழனி மலை முருகன் சிலையில் இருக்கும் அத்தனை அம்சங்களும் அப்படியே இந்த சிலையில் இருப்பதால், இத்தல முருகனையும், `பழனி முருகன்' என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.
ஆலய அமைப்பு
கொடைக்கானல் செல்லும் பாதையில் இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மலைக்கிராமமான தாண்டிக்குடி. இந்த மலைக்கிராமத்தின் மலையின் உச்சியில் உள்ளது, தாண்டிக்குடி பாலமுருகன் ஆலயம். தாண்டிக்குடி கிராமத்தில் இருந்து கோவிலை சென்றடைய மூன்று கிலோமீட்டர் அழகான மலைப் பாதையில் பயணம் செய்தால், பாலமுருகன் ஆலயத்தை அடைந்து விடலாம். மலையின் உச்சியில் இப்படி ஒரு அற்புதமான ஆலயமா எனப் பிரமித்து மெய்சிலிர்த்துப் போகும் அளவுக்கு சிறப்பு வாய்ந்தது இந்த ஆலயம்.
தாண்டிக்குடி செல்லும் வழிநெடுகிலும் ஒரு தெய்வீகத் தன்மை காணப்படுகிறது. நம்மையும் அறியாமல் அந்த தெய்வீகத்தன்மை அந்த முருகன் கோவிலுக்கு நம்மையும் அழைத்துச் செல்லும்.
ஆலயத்தின் உள்ளே நுழையும் முன்பாக உள்ள அலங்கார வளைவில் ஆண்டிக்கோலத்தில் முருகப்பெருமானின் உருவம் வடிக்கப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றிலும் மரங்களும், புல்வெளிகளும் சூழ்ந்து நம் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. முதலில் நமக்கு தரிசனம் தருவது விநாயகப்பெருமான். அவரை தரிசனம் செய்து விட்டு நேராக சென்றால், அழகிய கொடி மரம், பலிபீடம், விநாயகர் உள்ளனர்.
அடுத்ததாக மகா மண்டபத்திற்குள் பிரமாண்டமான மயில் வாகனம், கருவறையில் இருக்கும் முருகப்பெருமானை நோக்கி உள்ளது. அர்த்த மண்டபத்தில் சன்னிதிகள் எதுவும் கிடையாது. அதற்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. மகா மண்டபத்தில் இருந்துதான் முருகப்பெருமானை தரிசனம் செய்ய முடியும். கருவறையில் முருகப் பெருமான், ராஜ அலங்காரத்தில் கையில் வேலோடு அற்புதமாக காட்சி தருகிறார். சண்முக கடவுளை மனதார வணங்கி விட்டு கோவிலை சுற்றி வந்தால், இடும்பன், பைரவர், நாகராஜர், நவக்கிரக சன்னிதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன.
இக்கோவிலில் மாதம் தோறும் வரும் கிருத்திகை சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. உற்சவர் சிலையை தேரில் வைத்து கோவிலை சுற்றி வந்து சிறப்பு பூஜை செய்கிறார்கள். ஆலயத்தில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இந்தக் கோவில் இருக்கும் குன்றின் மேலே நின்று, கீழே அடிவாரத்தில் இருக்கும் தாண்டிக்குடி கிராமத்தைப் பார்த்தால் முருகப்பெருமானின் வாகனமான மயிலின் வடிவத்தில் இருப்பது மெய்சிலிர்ப்பை உண்டாக்குகிறது. இந்த ஆலயத்தில் உள்ள பாலமுருகனிடம் மன முருகி வேண்டி, அது நடந்துவிட்டால் கோவிலுக்கு திருப்பணி செய்ய உதவுவதை பக்தர்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். காலையில் சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்படும். பிற்பகலில் பலவிதமான காவடிகள், கோவிலின் அடிவாரத்தில் உள்ள தாண்டிக்குடி கிராமத்திற்குச் சென்று வரும். திரு மணத்தடை உள்ளவர்கள், இங்கிருக்கும் காலபைரவருக்கு ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில், 27 மிளகை ஒரு அகல் விளக்கில் வைத்து அதில் நெய் ஊற்றி தீபமேற்ற வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 11 வாரங்கள் செய்தால், விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
இந்த ஆலயத்தை கட்டிய பன்றிமலை சுவாமி களுக்கு இந்த ஆலய வளாகத்துக்குள்ளேயே தனியாக ஒரு ஆலயம் உள்ளது. இங்கும் தினமும் பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. இங்கும் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள்.
மலை உச்சியில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த அற்புத ஆலயத்தை அடைவது மிகவும் கடினம் என்பதால், அங்கு செல்ல முருகப்பெருமானின் பரிபூரண அருள் நமக்கு மிகவும் அவசியம். அதனால்தான் மலை அடிவாரத்தில் உள்ள தாண்டிக்குடி கிராமத்தில் உள்ள மக்கள் மேலே வந்து சிரமப்படக்கூடாது என்பதற்காக ஆலயத்தில் ஓர் மணி கட்டப்பட்டுள்ளது. இறைவனுக்கு பூஜை செய்யப்படும்போது ஒலிக்கப்படும் இந்த மணி, அடிவாரம் வரையிலும் நன்றாக கேட்கும். அப்போது கிராம மக்கள் அங்கிருந்தபடியே முருகப்பெருமானை நினைத்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருக் கிறார்கள்.
மலை கிராமம் என்பதால் போக்குவரத்து வசதி மிக குறைவுதான். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு என்ற ஊரில் இருந்து தாண்டிக்குடி கிராமத்துக்கு செல்ல பேருந்து வசதிகள் இருந்தாலும் அங்கிருந்து மலைமீதுள்ள ஆலயம் செல்ல வாடகை வாகனங்களைதான் அமர்த்த வேண்டும்.
கோவிலின் சிறப்பம்சங்கள்
கோவிலின் அருகில் வலதுபுறம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படும், மலைப் பாறை ஒன்று உள்ளது. பழனி திருத்தலத்தை நோக்கி இருக்கும் அந்த பாறையில் கால் தடம் ஒன்று காணப்படுகிறது. அது முருகப்பெருமானின் கால் தடம் என்கிறார்கள். இங் கிருந்துதான் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பழனி மலைக்கு முருகப்பெருமான் தாண்டிச் சென்றதாகவும், அதில் ஏற்பட்ட கால் தடம்தான் இது என்று கூறப்படுகிறது.
அதே போல் இந்தப் பாறையில் ஒரு வேலின் தோற்றம், மயிலின் தோற்றம், அனுமனின் தோற்றம், பாம்பின் தோற்றம் ஆகியவை காணப்படுகின்றன. அதை விட சிறப்பு, இங்குள்ள பாறையின் மீது எந்நாளும் வற்றாத சுனை ஒன்று இருக்கிறது. சுனையில் ஒரு வேல் நடப்பட்டுள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், இந்தச் சுனை நீரை எடுத்துச் சென்று சுவாமியின் திருவடியில் வைத்து பூஜிக்க வேண்டும். பின்னர் ஆலயத்தில் தரப்படும் விபூதி மற்றும் சந்தனத்தை அந்த நீரில் கலந்து அருந்தினால், விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
பொ.பாலாஜிகணேஷ்
தமிழ் கடவுளான முருகக் கடவுள், தன் ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலையில் மலைவளம் கண்டபிறகு, தாண்டிக்குடி என்ற இந்தப் பகுதிக்கு வந்தார். முருகன் இங்கிருக்கும் போதுதான் அகஸ்தியரின் சீடரான இடும்பன், கயிலாயத்தில் இருந்து சிவகிரி, சக்திகிரி என்று இரண்டு மலைகளை சுமந்துகொண்டு பழனி வந்து சேர்ந்தார். இதையறிந்த முருகப்பெருமான், அந்த இரண்டு மலைகளில் ஒன்று, தனக்கு இருப்பிடமாகிக் கொள்ள உரியது என கருதி தாண்டிக் குதித்தார். இதன் காரணமாகவே இந்த இடம் `தாண்டிக்குதி' என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி `தாண்டிக்குடி' ஆனது.
பன்றிமலை சுவாமிகளின் வேண்டுகோளின்படி, முருகப்பெருமானே இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது. கோவில் கட்டுவதற்கான பொருட்களை வழங்க, சம்பந்தப்பட்ட நபர்களின் கனவில் தோன்றி கொடுக்கக் கூறினார். தற்போது கோவிலில் உள்ள மூலவர் சிலை கூட, ஸ்தபதி ஒருவரின் கனவில் முருகனே சென்று கூறி அதன் மூலம் நிறுவப்பெற்றதுதான். திருப்பணி வேலைகள் முருகப்பெருமானின் மேற்பார்வையிலேயே முடிந்தது என்ற தகவலும் இங்கே கூறப்படுகிறது.
இங்கு மூலவரான முருகன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பழனி முருகன் கோவிலில் உள்ள மூலவரின் அமைப்பே இக்கோவிலிலும் உள்ளது. பழனி மலை முருகன் சிலையில் இருக்கும் அத்தனை அம்சங்களும் அப்படியே இந்த சிலையில் இருப்பதால், இத்தல முருகனையும், `பழனி முருகன்' என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.
ஆலய அமைப்பு
கொடைக்கானல் செல்லும் பாதையில் இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மலைக்கிராமமான தாண்டிக்குடி. இந்த மலைக்கிராமத்தின் மலையின் உச்சியில் உள்ளது, தாண்டிக்குடி பாலமுருகன் ஆலயம். தாண்டிக்குடி கிராமத்தில் இருந்து கோவிலை சென்றடைய மூன்று கிலோமீட்டர் அழகான மலைப் பாதையில் பயணம் செய்தால், பாலமுருகன் ஆலயத்தை அடைந்து விடலாம். மலையின் உச்சியில் இப்படி ஒரு அற்புதமான ஆலயமா எனப் பிரமித்து மெய்சிலிர்த்துப் போகும் அளவுக்கு சிறப்பு வாய்ந்தது இந்த ஆலயம்.
தாண்டிக்குடி செல்லும் வழிநெடுகிலும் ஒரு தெய்வீகத் தன்மை காணப்படுகிறது. நம்மையும் அறியாமல் அந்த தெய்வீகத்தன்மை அந்த முருகன் கோவிலுக்கு நம்மையும் அழைத்துச் செல்லும்.
ஆலயத்தின் உள்ளே நுழையும் முன்பாக உள்ள அலங்கார வளைவில் ஆண்டிக்கோலத்தில் முருகப்பெருமானின் உருவம் வடிக்கப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றிலும் மரங்களும், புல்வெளிகளும் சூழ்ந்து நம் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. முதலில் நமக்கு தரிசனம் தருவது விநாயகப்பெருமான். அவரை தரிசனம் செய்து விட்டு நேராக சென்றால், அழகிய கொடி மரம், பலிபீடம், விநாயகர் உள்ளனர்.
அடுத்ததாக மகா மண்டபத்திற்குள் பிரமாண்டமான மயில் வாகனம், கருவறையில் இருக்கும் முருகப்பெருமானை நோக்கி உள்ளது. அர்த்த மண்டபத்தில் சன்னிதிகள் எதுவும் கிடையாது. அதற்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. மகா மண்டபத்தில் இருந்துதான் முருகப்பெருமானை தரிசனம் செய்ய முடியும். கருவறையில் முருகப் பெருமான், ராஜ அலங்காரத்தில் கையில் வேலோடு அற்புதமாக காட்சி தருகிறார். சண்முக கடவுளை மனதார வணங்கி விட்டு கோவிலை சுற்றி வந்தால், இடும்பன், பைரவர், நாகராஜர், நவக்கிரக சன்னிதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன.
இக்கோவிலில் மாதம் தோறும் வரும் கிருத்திகை சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. உற்சவர் சிலையை தேரில் வைத்து கோவிலை சுற்றி வந்து சிறப்பு பூஜை செய்கிறார்கள். ஆலயத்தில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இந்தக் கோவில் இருக்கும் குன்றின் மேலே நின்று, கீழே அடிவாரத்தில் இருக்கும் தாண்டிக்குடி கிராமத்தைப் பார்த்தால் முருகப்பெருமானின் வாகனமான மயிலின் வடிவத்தில் இருப்பது மெய்சிலிர்ப்பை உண்டாக்குகிறது. இந்த ஆலயத்தில் உள்ள பாலமுருகனிடம் மன முருகி வேண்டி, அது நடந்துவிட்டால் கோவிலுக்கு திருப்பணி செய்ய உதவுவதை பக்தர்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். காலையில் சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்படும். பிற்பகலில் பலவிதமான காவடிகள், கோவிலின் அடிவாரத்தில் உள்ள தாண்டிக்குடி கிராமத்திற்குச் சென்று வரும். திரு மணத்தடை உள்ளவர்கள், இங்கிருக்கும் காலபைரவருக்கு ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில், 27 மிளகை ஒரு அகல் விளக்கில் வைத்து அதில் நெய் ஊற்றி தீபமேற்ற வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 11 வாரங்கள் செய்தால், விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
இந்த ஆலயத்தை கட்டிய பன்றிமலை சுவாமி களுக்கு இந்த ஆலய வளாகத்துக்குள்ளேயே தனியாக ஒரு ஆலயம் உள்ளது. இங்கும் தினமும் பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. இங்கும் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள்.
மலை உச்சியில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த அற்புத ஆலயத்தை அடைவது மிகவும் கடினம் என்பதால், அங்கு செல்ல முருகப்பெருமானின் பரிபூரண அருள் நமக்கு மிகவும் அவசியம். அதனால்தான் மலை அடிவாரத்தில் உள்ள தாண்டிக்குடி கிராமத்தில் உள்ள மக்கள் மேலே வந்து சிரமப்படக்கூடாது என்பதற்காக ஆலயத்தில் ஓர் மணி கட்டப்பட்டுள்ளது. இறைவனுக்கு பூஜை செய்யப்படும்போது ஒலிக்கப்படும் இந்த மணி, அடிவாரம் வரையிலும் நன்றாக கேட்கும். அப்போது கிராம மக்கள் அங்கிருந்தபடியே முருகப்பெருமானை நினைத்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருக் கிறார்கள்.
மலை கிராமம் என்பதால் போக்குவரத்து வசதி மிக குறைவுதான். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு என்ற ஊரில் இருந்து தாண்டிக்குடி கிராமத்துக்கு செல்ல பேருந்து வசதிகள் இருந்தாலும் அங்கிருந்து மலைமீதுள்ள ஆலயம் செல்ல வாடகை வாகனங்களைதான் அமர்த்த வேண்டும்.
கோவிலின் சிறப்பம்சங்கள்
கோவிலின் அருகில் வலதுபுறம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படும், மலைப் பாறை ஒன்று உள்ளது. பழனி திருத்தலத்தை நோக்கி இருக்கும் அந்த பாறையில் கால் தடம் ஒன்று காணப்படுகிறது. அது முருகப்பெருமானின் கால் தடம் என்கிறார்கள். இங் கிருந்துதான் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பழனி மலைக்கு முருகப்பெருமான் தாண்டிச் சென்றதாகவும், அதில் ஏற்பட்ட கால் தடம்தான் இது என்று கூறப்படுகிறது.
அதே போல் இந்தப் பாறையில் ஒரு வேலின் தோற்றம், மயிலின் தோற்றம், அனுமனின் தோற்றம், பாம்பின் தோற்றம் ஆகியவை காணப்படுகின்றன. அதை விட சிறப்பு, இங்குள்ள பாறையின் மீது எந்நாளும் வற்றாத சுனை ஒன்று இருக்கிறது. சுனையில் ஒரு வேல் நடப்பட்டுள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், இந்தச் சுனை நீரை எடுத்துச் சென்று சுவாமியின் திருவடியில் வைத்து பூஜிக்க வேண்டும். பின்னர் ஆலயத்தில் தரப்படும் விபூதி மற்றும் சந்தனத்தை அந்த நீரில் கலந்து அருந்தினால், விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
பொ.பாலாஜிகணேஷ்
இலங்கையில் உள்ள எண்ணற்ற ஆலயங்களில் தமிழர்களின் பெருமையாக விளங்கும், பத்ரகாளியம்மன் ஆலயம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இலங்கையில் எண்ணற்ற ஆலயங்கள், தமிழ் மக்களின் கலைகளையும், கலாசாரத்தையும் காப்பாற்றி வருகின்றன. அந்த வகையில் தமிழர்களின் பெருமையாக விளங்கும், பத்ரகாளியம்மன் ஆலயம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. இலங்கை நாட்டின் வட மேல் மாகாணத்தில் அமைந்துள்ள, உடப்பு என்ற கடற்கரை கிராமத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.
தல வரலாறு
கி.பி. 1850-ல் இந்தப் பகுதியில் வசித்து வந்த இந்திய வம்சாவழித் தமிழர்கள், காலரா என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டனர். இந்த நோய்க்கு அஞ்சிய மக்கள், பயத்தில் ஊரை விட்டு காலி செய்ய முற்பட்டனர். அப்போது அங்கிருந்த காளி பக்தரான கொத்த கிழவன் என்பவர், இறையருள் வந்து ஆடியபடி, அருள்வாக்கு கூறினார்.
“யாரும் ஊரை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை. காளியான நான் உங்கள் ஊரில் வாழ்கிறேன். உங்கள் அனைவரையும் நான் காப்பாற்றுவேன். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான். அதாவது, பச்சை ஓலை கொண்டு எனக்கு குடில் ஏற்படுத்துங்கள். அதனுள் கும்பம் வைத்து, அதில் கடல் நீரை ஊற்றி விளக்கு ஏற்றுங்கள். அந்த நீரில் விளக்கெரியும். கும்பத்தில் வேப்பிலைக் கொம்பை வையுங்கள். அந்த வேப்பிலை கொம்பானது, 10 நாட்களில் பூத்துக் காய்த்து குலுங்கும்” என்று கூறினார்.
அதன்படியே அந்த பகுதி மக்கள் அனைவரும், அம்மனுக்கு பச்சை ஓலை கொண்டு, குடில் அமைத்து வேப்பிலை கும்பம் வைத்தனர். அனைத்தும் அந்த அருள் வாக்கின் படியே நடந்தது. அதன்பின்னர், ஊரில் பரவியிருந்த நோயின் தாக்கம் குறையத் தொடங்கியது. மக்களும் நோய்களில் இருந்து முற்றிலுமாக நீங்கி, மீண்டும் இன்பமாக வாழத் தொடங்கினர். அதன்பின் ஆண்டுதோறும் இந்த வழக்கத்தின்படி திருவிழா நடைபெற்று வருகிறது.
ஆலய விழா
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பரணி நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு 10 நாட்கள் பிரமோற்சவம் நடைபெறுகிறது. பத்தாம் நாளன்று ‘வேள்வி விழா’ நடைபெறும். அன்றைய தினம் கால்நடை பலி கொடுக்கப்படும். ஆனால் அது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி, பத்து நாட்கள் விழாவை ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, விழாவை சிறப்பாக நடத்துகின்றனர்.
மீன்பிடி தொழிலை செய்து வரும் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், இந்த விழா காலத்தில் மட்டும் சைவர்களாக இருந்து விழாவை வெகு சிறப்பாக நடத்துகின்றனர். கி.பி. 1900-ல், காசியில் இருந்து வந்த கங்காதர சுவாமிகள், இந்த ஆலயத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது இந்தப் பகுதி மக்கள், நாள் தவறாமல் மீன்பிடித் தொழிலை செய்து வருவதையும், அம்மன் வழிபாட்டில் குறை இருப்பதையும் கண்டு மனம் வருந்தினார்.
இதையடுத்து அவர் இந்தப் பகுதி மக்களிடம், வாரத்திற்கு ஒரு நாள், வெள்ளிக்கிழமை அன்று மட்டும் மீன்பிடித் தொழிலை விட்டு விட்டு, அம்மன் வழிபாட்டில் ஈடுபடுமாறு சத்திய வாக்கு பெற்றுக் கொண்டார். அதன்படி இன்றும் கூட இந்தப் பகுதி மீனவர்கள் வெள்ளிக்கிழமைகளில் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குள் செல்வதில்லை. அன்றைய தினம் அம்மனை வழிபட்டு வருகின்றனர். 1920-ல் இந்த ஆலயம் புனரமைக்கப்பட்டது. 1950-ல் ஆலயத்தில் பிற பரிகார தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 1982-ல் இந்த ஆலயம், மீண்டும் புனரமைக்கப்பட்டு, வெகு சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
தொன்மை சிறப்பு
உடப்பு கிராமத்தில் வாழும் பெரும்பாலானவர்கள், இந்திய வம்சாவழி சேர்ந்தவர்கள் ஆவர். ராமேஸ்வரத்தில் உள்ள ‘அக்கா மடம்’, ‘தங்கச்சி மடம்’ பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் இவர்கள். மீன்பிடித் தொழிலை தங்களுடைய வாழ்வாதாரமாக கொண்டவர்கள். கி.பி. 1650-ல் இவர்கள் சமுதாயத்தைச் சேர்ந்த கமலக்கன்னி என்ற அழகிய இளம் பெண்ணை மணம் புரிய இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னன் விரும்பினான். ஆனால் அதற்கு அந்த பெண் சம்மதிக்கவில்லை. பெண்ணுக்கு விருப்பம் இல்லாததால், உறவினர்களும்கூட அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.
இதனால் கோபம் கொண்ட மன்னன், அந்தப் பகுதியையே அழித்து, பெண்ணை திருமணம் செய்வது என முடிவுக்கு வந்தான். மன்னனின் கோபத்தில் இருந்து தப்பிக்க நினைத்த அந்தப் பகுதியில் வாழ்ந்த 18 குடும்பத்தைச் சேர்ந்த மக்கள், 18 படகுகளில் ஏறி, பாக் ஜலசந்தி வழியாக இலங்கையை நோக்கி பயணமானார்கள்.
இதுபற்றி அறிந்த மன்னன், மற்றொரு படகில் அவர்களை துரத்திச் சென்றான். நடுக்கடலில் படகு சென்று கொண்டிருந்தபோது, மன்னனிடம் இருந்து தப்பிப்பதற்காக, கமலக்கன்னி கடலில் குதித்து தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டாள். கமலக்கன்னி இறந்ததும், இனி தான் அவர்களை துரத்துவதில் உபயோகம் இல்லை என்பதை உணர்ந்து மன்னன் தன்னுடைய நாடு திரும்பினான். 18 படகுகளில் சென்றவர்களும், இலங்கையில் உள்ள உடப்பு என்ற பகுதியில் குடியேறினர். அங்கு மானத்துக்காகவும், தங்களுக்காகவும் உயிர்த் தியாகம் செய்த கமலக்கன்னியை, தங்களுடைய குலதெய்வமாக நினைத்து மதித்து வழிபடத் தொடங்கினர். ஆடி மாத செவ்வாய்க்கிழமை அன்று படையல் வைத்து தங்களைக் காத்தருளுமாறு வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இலங்கை உடப்புப் பகுதியில் பார்த்தசாரதி திரவுபதி அம்மன், அய்யனார், மாரியம்மன் கோவில்களில், பிற மத வழிபாட்டுத் தலங்களும் அமைந்துள்ள இதில் மிகப்பெரிய ஆலயமாக திரவுபதி அம்மன் கோவில் இருக்கிறது. இந்தக் கடற்கரை கிராமத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர். என்றாலும் சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களும் அதிக அளவில் மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள்.
இங்குள்ள பத்ரகாளியம்மன், தன்னை வழிபடுபவர் களுக்கு நோய் தீர்க்கும் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள். இந்த ஆலயத்தில் வழங்கப்படும் ‘காயம்’ என்னும் நைவேத்திய பிரசாதம், குழந்தை இல்லாத தம்பதியினருக்கு, குழந்தை வரம் அருளும் வரப்பிரசாதமாக திகழ்கின்றது.
ஆலய அதிசயம்
தல வரலாற்றில் கூறியபடி, ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் நடைபெறும் விழாவில், இன்றளவும் கடல் நீரைக் கொண்டே விளக்கு ஏற்றுகிறார்கள். அது சுடர் விட்டு எரியும் அதிசயத்தைக் காண பக்தர்கள் திரள்வதும் வாடிக்கையாக இருக்கிறது. அதே போல் விழாவின் கோவில் கும்பத்தில் நட்டு வைக்கப்படும், வேப்பிலைக் கொம்பு, பத்து நாட்களில் பூத்துக்குலுங்கி காய் காய்த்து பழமாகும் அதிசயமும் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருப்பது, இத்தல பத்ரகாளி அம்மனின் சக்தியை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.
அமைவிடம்
இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள புத்தளம் மாவட்டத்தில்தான் உடப்பு என்ற அழகிய கடற்கரை கிராமம் அமைந்துள்ளது. இது கொழும்புக்கு வடக்கே 105 கிலோமீட்டர் தூரத்திலும், சிலாபம் நகரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது. பஞ்சேஸ்வரங்களில் ஒன்றான முன்னேஸ்வரம் என்ற பழமையான சிவாலயம், இங்கிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பனையபுரம் அதியமான்.
தல வரலாறு
கி.பி. 1850-ல் இந்தப் பகுதியில் வசித்து வந்த இந்திய வம்சாவழித் தமிழர்கள், காலரா என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டனர். இந்த நோய்க்கு அஞ்சிய மக்கள், பயத்தில் ஊரை விட்டு காலி செய்ய முற்பட்டனர். அப்போது அங்கிருந்த காளி பக்தரான கொத்த கிழவன் என்பவர், இறையருள் வந்து ஆடியபடி, அருள்வாக்கு கூறினார்.
“யாரும் ஊரை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை. காளியான நான் உங்கள் ஊரில் வாழ்கிறேன். உங்கள் அனைவரையும் நான் காப்பாற்றுவேன். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான். அதாவது, பச்சை ஓலை கொண்டு எனக்கு குடில் ஏற்படுத்துங்கள். அதனுள் கும்பம் வைத்து, அதில் கடல் நீரை ஊற்றி விளக்கு ஏற்றுங்கள். அந்த நீரில் விளக்கெரியும். கும்பத்தில் வேப்பிலைக் கொம்பை வையுங்கள். அந்த வேப்பிலை கொம்பானது, 10 நாட்களில் பூத்துக் காய்த்து குலுங்கும்” என்று கூறினார்.
அதன்படியே அந்த பகுதி மக்கள் அனைவரும், அம்மனுக்கு பச்சை ஓலை கொண்டு, குடில் அமைத்து வேப்பிலை கும்பம் வைத்தனர். அனைத்தும் அந்த அருள் வாக்கின் படியே நடந்தது. அதன்பின்னர், ஊரில் பரவியிருந்த நோயின் தாக்கம் குறையத் தொடங்கியது. மக்களும் நோய்களில் இருந்து முற்றிலுமாக நீங்கி, மீண்டும் இன்பமாக வாழத் தொடங்கினர். அதன்பின் ஆண்டுதோறும் இந்த வழக்கத்தின்படி திருவிழா நடைபெற்று வருகிறது.
ஆலய விழா
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பரணி நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு 10 நாட்கள் பிரமோற்சவம் நடைபெறுகிறது. பத்தாம் நாளன்று ‘வேள்வி விழா’ நடைபெறும். அன்றைய தினம் கால்நடை பலி கொடுக்கப்படும். ஆனால் அது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி, பத்து நாட்கள் விழாவை ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, விழாவை சிறப்பாக நடத்துகின்றனர்.
மீன்பிடி தொழிலை செய்து வரும் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், இந்த விழா காலத்தில் மட்டும் சைவர்களாக இருந்து விழாவை வெகு சிறப்பாக நடத்துகின்றனர். கி.பி. 1900-ல், காசியில் இருந்து வந்த கங்காதர சுவாமிகள், இந்த ஆலயத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது இந்தப் பகுதி மக்கள், நாள் தவறாமல் மீன்பிடித் தொழிலை செய்து வருவதையும், அம்மன் வழிபாட்டில் குறை இருப்பதையும் கண்டு மனம் வருந்தினார்.
இதையடுத்து அவர் இந்தப் பகுதி மக்களிடம், வாரத்திற்கு ஒரு நாள், வெள்ளிக்கிழமை அன்று மட்டும் மீன்பிடித் தொழிலை விட்டு விட்டு, அம்மன் வழிபாட்டில் ஈடுபடுமாறு சத்திய வாக்கு பெற்றுக் கொண்டார். அதன்படி இன்றும் கூட இந்தப் பகுதி மீனவர்கள் வெள்ளிக்கிழமைகளில் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குள் செல்வதில்லை. அன்றைய தினம் அம்மனை வழிபட்டு வருகின்றனர். 1920-ல் இந்த ஆலயம் புனரமைக்கப்பட்டது. 1950-ல் ஆலயத்தில் பிற பரிகார தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 1982-ல் இந்த ஆலயம், மீண்டும் புனரமைக்கப்பட்டு, வெகு சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
தொன்மை சிறப்பு
உடப்பு கிராமத்தில் வாழும் பெரும்பாலானவர்கள், இந்திய வம்சாவழி சேர்ந்தவர்கள் ஆவர். ராமேஸ்வரத்தில் உள்ள ‘அக்கா மடம்’, ‘தங்கச்சி மடம்’ பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் இவர்கள். மீன்பிடித் தொழிலை தங்களுடைய வாழ்வாதாரமாக கொண்டவர்கள். கி.பி. 1650-ல் இவர்கள் சமுதாயத்தைச் சேர்ந்த கமலக்கன்னி என்ற அழகிய இளம் பெண்ணை மணம் புரிய இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னன் விரும்பினான். ஆனால் அதற்கு அந்த பெண் சம்மதிக்கவில்லை. பெண்ணுக்கு விருப்பம் இல்லாததால், உறவினர்களும்கூட அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.
இதனால் கோபம் கொண்ட மன்னன், அந்தப் பகுதியையே அழித்து, பெண்ணை திருமணம் செய்வது என முடிவுக்கு வந்தான். மன்னனின் கோபத்தில் இருந்து தப்பிக்க நினைத்த அந்தப் பகுதியில் வாழ்ந்த 18 குடும்பத்தைச் சேர்ந்த மக்கள், 18 படகுகளில் ஏறி, பாக் ஜலசந்தி வழியாக இலங்கையை நோக்கி பயணமானார்கள்.
இதுபற்றி அறிந்த மன்னன், மற்றொரு படகில் அவர்களை துரத்திச் சென்றான். நடுக்கடலில் படகு சென்று கொண்டிருந்தபோது, மன்னனிடம் இருந்து தப்பிப்பதற்காக, கமலக்கன்னி கடலில் குதித்து தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டாள். கமலக்கன்னி இறந்ததும், இனி தான் அவர்களை துரத்துவதில் உபயோகம் இல்லை என்பதை உணர்ந்து மன்னன் தன்னுடைய நாடு திரும்பினான். 18 படகுகளில் சென்றவர்களும், இலங்கையில் உள்ள உடப்பு என்ற பகுதியில் குடியேறினர். அங்கு மானத்துக்காகவும், தங்களுக்காகவும் உயிர்த் தியாகம் செய்த கமலக்கன்னியை, தங்களுடைய குலதெய்வமாக நினைத்து மதித்து வழிபடத் தொடங்கினர். ஆடி மாத செவ்வாய்க்கிழமை அன்று படையல் வைத்து தங்களைக் காத்தருளுமாறு வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இலங்கை உடப்புப் பகுதியில் பார்த்தசாரதி திரவுபதி அம்மன், அய்யனார், மாரியம்மன் கோவில்களில், பிற மத வழிபாட்டுத் தலங்களும் அமைந்துள்ள இதில் மிகப்பெரிய ஆலயமாக திரவுபதி அம்மன் கோவில் இருக்கிறது. இந்தக் கடற்கரை கிராமத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர். என்றாலும் சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களும் அதிக அளவில் மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள்.
இங்குள்ள பத்ரகாளியம்மன், தன்னை வழிபடுபவர் களுக்கு நோய் தீர்க்கும் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள். இந்த ஆலயத்தில் வழங்கப்படும் ‘காயம்’ என்னும் நைவேத்திய பிரசாதம், குழந்தை இல்லாத தம்பதியினருக்கு, குழந்தை வரம் அருளும் வரப்பிரசாதமாக திகழ்கின்றது.
ஆலய அதிசயம்
தல வரலாற்றில் கூறியபடி, ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் நடைபெறும் விழாவில், இன்றளவும் கடல் நீரைக் கொண்டே விளக்கு ஏற்றுகிறார்கள். அது சுடர் விட்டு எரியும் அதிசயத்தைக் காண பக்தர்கள் திரள்வதும் வாடிக்கையாக இருக்கிறது. அதே போல் விழாவின் கோவில் கும்பத்தில் நட்டு வைக்கப்படும், வேப்பிலைக் கொம்பு, பத்து நாட்களில் பூத்துக்குலுங்கி காய் காய்த்து பழமாகும் அதிசயமும் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருப்பது, இத்தல பத்ரகாளி அம்மனின் சக்தியை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.
அமைவிடம்
இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள புத்தளம் மாவட்டத்தில்தான் உடப்பு என்ற அழகிய கடற்கரை கிராமம் அமைந்துள்ளது. இது கொழும்புக்கு வடக்கே 105 கிலோமீட்டர் தூரத்திலும், சிலாபம் நகரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது. பஞ்சேஸ்வரங்களில் ஒன்றான முன்னேஸ்வரம் என்ற பழமையான சிவாலயம், இங்கிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பனையபுரம் அதியமான்.
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் இருக்கிறது, பெருநாடு என்ற பகுதி. இந்த இடத்தில் அமைந்திருக்கும் காக்காட்டு கோயிக்கால் தரும சாஸ்தா கோவில் ‘பெண்களின் சபரிமலை’ என்று பெருமையாகச் சொல்லப்படுகிறது.
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் இருக்கிறது, பெருநாடு என்ற பகுதி. இந்த இடத்தில் அமைந்திருக்கும் காக்காட்டு கோயிக்கால் தரும சாஸ்தா கோவில் ‘பெண்களின் சபரிமலை’ என்று பெருமையாகச் சொல்லப்படுகிறது.
தல வரலாறு
பந்தள நாட்டு மன்னன் ராஜசேகரனுக்குக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தது. ஒரு முறை மன்னன் காட்டிற்குச் சென்றபோது, அங்கு கிடைத்த ஒரு குழந்தையை எடுத்து வந்து ராணியிடம் கொடுத்து வளர்த்து வந்தான். ராணியும் அவனுக்கு மணிகண்டன் என்று பெயரிட்டு, அவன் மீது அன்பு காட்டி வளர்த்து வந்தாள்.
இந்த நிலையில் ராணிக்கு, ராஜராஜன் என்றொரு மகன் பிறந்தான். அதன் பிறகு, ராணியின் மனம் மாறத் தொடங்கியது. தான் பெற்றக் குழந்தையை முதன்மைப்படுத்த விரும்பிய அவள், வளர்த்து வந்த மணிகண்டனை வெறுத்து ஒதுக்கத் தொடங்கினாள். மந்திரி ஒருவர் துணையுடன் மணிகண்டனை அழிக்கவும் சதித்திட்டம் தீட்டினாள்.
அந்தச் சதித்திட்டத்தின்படி, தனக்குத் தீராத தலைவலி இருப்பதாகச் சொல்லி, அதனைத் தீர்க்கப் புலிப்பாலைக் கொண்டு வர வேண்டும் என்று அரண்மனை வைத்தியர் மூலமாகச் சொல்ல வைத்தாள், ராணி. அரண்மனையில் இருந்த படைவீரர்கள் பலரும் காட்டிற்குள் சென்று, புலியின் பாலைக் கறந்து வர முடியாது என்று மறுத்து விட்டனர்.
இந்நிலையில் ராணி எதிர்பார்த்தபடி, புலிப்பால் கொண்டு வருவதாகச் சொல்லித் தன்னுடன் சில படைவீரர்களை அழைத்துக் கொண்டு காட்டிற்குள் சென்றான், மணிகண்டன். காட்டில் அவனை வழிமறித்தாள், மகிஷி என்னும் அரக்கி. மகிஷி யுடன் சண்டையிட்டு அவளைக் கொன்றான், மணிகண்டன். இதையடுத்து மணிகண்டன் இந்த பூமியில் அவதரித்ததற்கான நோக்கம் நிறைவேறியது. தேவர்களையும், முனிவர்களையும் தன்னுடைய அசுர பலத்தால் துன்புறுத்தி வந்த, மகிஷி இறந்தது பற்றி அறிந்ததும், தேவர்களும், முனிவர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஈசனுக்கும், மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவுக்கும் பிறந்த அந்த மணிகண்டனை அனைவரும் வாழ்த்தினர்.
அதன் பின்னர், தேவலோகத்தின் தலைவனான இந்திரன், புலி உருவெடுத்தான். அந்தப் புலியின் மேல் அமர்ந்த மணிகண்டன், காட்டில் இருந்து நாட்டிற்கு திரும்பினார். அந்தப் புலியின் பின்னால், தேவலோகத்தினர் சிலர் புலிகளாக மாறி உடன் வந்தனர். காட்டிற்குள் சென்ற மணிகண்டன், பல புலிகளுடன் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் ஒதுங்கி ஓடினர். அரண்மனையில் உள்ளவர்களுக்கு இதுபற்றிய செய்தி தெரிவிக்கப்பட்டது.
இதையறிந்த ராணி பதறிப்போனாள். தான் செய்த தவறை உணர்ந்து, மணிகண்டனிடம் மன்னிப்பு வேண்டினாள். அதற்கு மணிகண்டன், ‘எனது அவதாரத்தின் நோக்கமே, அரக்கியான மகிஷியை வதம் செய்வதுதான். அந்த நோக்கம் நீங்கள் புலிப்பால் கேட்டதன் காரணமாகத்தான் நிகழ்ந்தது. அதனால்தான் என்னால் காட்டிற்குள் சென்று, மகிஷியைக் கொல்ல முடிந்தது. எனவே என்னை காட்டிற்கு அனுப்பியதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை’ என்று ஆறுதல்படுத்தினார்.
அதன் பிறகு மணிகண்டன் அரண்மனையில் இருந்து வெளியேறி, தேவலோகம் செல்லப் போவதாகச் சொன்னார். அதனைக் கேட்ட மன்னர் ராஜசேகரும், ராணியும் வருத்தமடைந்தனர். அவர்கள் வருத்தத்தைக் கண்ட மணிகண்டன் தனது தந்தையிடம், அம்பு ஒன்றை எய்வதாகவும், அந்த அம்பு விழும் இடத்தில் தனக்குக் கோவில் ஒன்றைக் கட்டும்படியும் கூறினார். அந்த ஆலயத்திற்கு ஆண்டுதோறும் மகரசங்கராந்தி நாளில் வந்து வழிபடும்படியும், அப்போது தான் ஜோதி வடிவில் காட்சி தருவதாகவும் சொன்னார்.
அதன்படி, மணிகண்டன் எய்த அம்பு, சபரிமலையில் போய் விழுந்தது. பந்தள மன்னன் ராஜசேகரனும், அவனது படை வீரர்களும் பெருநாட்டில் தங்கியிருந்து சபரிமலையில் கோவில் கட்டும் பணிகளை மேற்கொண்டனர். கோவில் கட்டி முடிக்கப்பட்ட பின்பு பந்தள மன்னன், மணிகண்டன் தெரிவித்தபடி, மகர சங்கராந்தி நாளில் சபரிமலை சென்று மணிகண்டனை வழிபட்டான்.
மன்னன் ராஜசேகரன் சபரிமலை செல்லும் போது, ராணியும் மற்ற பெண்களும் பெருநாட்டில் தங்கி அங்கே ஓரிடத்தில் மணிகண்டனை நினைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். அதன் பின்னர், மன்னர் பெருநாட்டில் ராணியும் மற்ற பெண்களும் வழிபட்ட இடத்தில் இந்த சாஸ்தா கோவிலைக் கட்டினார் என்று இந்த ஆலயத்தின் தல வரலாறு தெரிவிக்கிறது.
சபரிமலை ஆரணத்திற்கு பூஜை
சபரிமலை சாஸ்தாவிற்கு அணிவிப்பதற்காக ஆரணமுளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து கொண்டு வரப்படும் தங்கத்தாலான ஆடை மற்றும் திருவாபரணங்கள், மூன்றாம் நாளில் பெருநாடு சாஸ்தா கோவிலில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதன் பின்னர் சபரிமலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மண்டல பூஜை நிறைவு நாளில் தங்கத்தாலான ஆடை மற்றும் திருவாபரணங்கள் சபரி மலையில் இருக்கும் சாஸ்தாவிற்கு அணிவிக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. அதன் பின்னர் மகர ஜோதி நிறைவுக்குப் பின்னர், அந்த தங்கத்தாலான ஆடை மற்றும் திருவாபரணங்கள் பெருநாடு கொண்டு வரப்பட்டு, அங்கிருக்கும் சாஸ்தாவிற்கு அணிவிக்கப்பெற்றுச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இவ்விழாவில் பந்தள மன்னரின் மரபுரிமையர் மற்றும் பெண்கள் பலரும் பங்கேற்று சாஸ்தாவை வழிபட்டுச் செல்கின்றனர். இக்கோவிலைப் ‘பெண்களின் சபரிமலை’ என்று பெருமையாகச் சொல்கின்றனர்.
கோவில் அமைப்பு
பெருநாட்டில் அமைந்திருக்கும் இந்த சாஸ்தா கோவிலை, ‘காக்காட்டுக் கோயிக்கல் சாஸ்தா கோவில்’ என்றும், ‘வாளியக் கோவில்’ என்றும் சொல்கின்றனர். இந்த ஆலயமானது, கேரளக் கட்டுமானத்தில் அமைந்த மிகவும் பழமையான கோவிலாக இருக்கிறது. இங்கிருக்கும் சாஸ்தா அமர்ந்த நிலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில் சித்திரை விசு, மண்டல வழிபாட்டு நாட்கள் உள்ளிட்ட ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் 10 நாட்கள் ஆண்டுத் திருவிழா நடைபெறுகிறது.
அமைவிடம்
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம், ராணி வட்டத்தில் அமைந்திருக்கும் பெருநாடு சாஸ்தா கோவில், பத்தினம்திட்டாவில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், ராணியில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கோவிலுக்குச் செல்ல பத்தினம்திட்டா, ராணி ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
தேனி மு.சுப்பிரமணி
தல வரலாறு
பந்தள நாட்டு மன்னன் ராஜசேகரனுக்குக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தது. ஒரு முறை மன்னன் காட்டிற்குச் சென்றபோது, அங்கு கிடைத்த ஒரு குழந்தையை எடுத்து வந்து ராணியிடம் கொடுத்து வளர்த்து வந்தான். ராணியும் அவனுக்கு மணிகண்டன் என்று பெயரிட்டு, அவன் மீது அன்பு காட்டி வளர்த்து வந்தாள்.
இந்த நிலையில் ராணிக்கு, ராஜராஜன் என்றொரு மகன் பிறந்தான். அதன் பிறகு, ராணியின் மனம் மாறத் தொடங்கியது. தான் பெற்றக் குழந்தையை முதன்மைப்படுத்த விரும்பிய அவள், வளர்த்து வந்த மணிகண்டனை வெறுத்து ஒதுக்கத் தொடங்கினாள். மந்திரி ஒருவர் துணையுடன் மணிகண்டனை அழிக்கவும் சதித்திட்டம் தீட்டினாள்.
அந்தச் சதித்திட்டத்தின்படி, தனக்குத் தீராத தலைவலி இருப்பதாகச் சொல்லி, அதனைத் தீர்க்கப் புலிப்பாலைக் கொண்டு வர வேண்டும் என்று அரண்மனை வைத்தியர் மூலமாகச் சொல்ல வைத்தாள், ராணி. அரண்மனையில் இருந்த படைவீரர்கள் பலரும் காட்டிற்குள் சென்று, புலியின் பாலைக் கறந்து வர முடியாது என்று மறுத்து விட்டனர்.
இந்நிலையில் ராணி எதிர்பார்த்தபடி, புலிப்பால் கொண்டு வருவதாகச் சொல்லித் தன்னுடன் சில படைவீரர்களை அழைத்துக் கொண்டு காட்டிற்குள் சென்றான், மணிகண்டன். காட்டில் அவனை வழிமறித்தாள், மகிஷி என்னும் அரக்கி. மகிஷி யுடன் சண்டையிட்டு அவளைக் கொன்றான், மணிகண்டன். இதையடுத்து மணிகண்டன் இந்த பூமியில் அவதரித்ததற்கான நோக்கம் நிறைவேறியது. தேவர்களையும், முனிவர்களையும் தன்னுடைய அசுர பலத்தால் துன்புறுத்தி வந்த, மகிஷி இறந்தது பற்றி அறிந்ததும், தேவர்களும், முனிவர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஈசனுக்கும், மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவுக்கும் பிறந்த அந்த மணிகண்டனை அனைவரும் வாழ்த்தினர்.
அதன் பின்னர், தேவலோகத்தின் தலைவனான இந்திரன், புலி உருவெடுத்தான். அந்தப் புலியின் மேல் அமர்ந்த மணிகண்டன், காட்டில் இருந்து நாட்டிற்கு திரும்பினார். அந்தப் புலியின் பின்னால், தேவலோகத்தினர் சிலர் புலிகளாக மாறி உடன் வந்தனர். காட்டிற்குள் சென்ற மணிகண்டன், பல புலிகளுடன் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் ஒதுங்கி ஓடினர். அரண்மனையில் உள்ளவர்களுக்கு இதுபற்றிய செய்தி தெரிவிக்கப்பட்டது.
இதையறிந்த ராணி பதறிப்போனாள். தான் செய்த தவறை உணர்ந்து, மணிகண்டனிடம் மன்னிப்பு வேண்டினாள். அதற்கு மணிகண்டன், ‘எனது அவதாரத்தின் நோக்கமே, அரக்கியான மகிஷியை வதம் செய்வதுதான். அந்த நோக்கம் நீங்கள் புலிப்பால் கேட்டதன் காரணமாகத்தான் நிகழ்ந்தது. அதனால்தான் என்னால் காட்டிற்குள் சென்று, மகிஷியைக் கொல்ல முடிந்தது. எனவே என்னை காட்டிற்கு அனுப்பியதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை’ என்று ஆறுதல்படுத்தினார்.
அதன் பிறகு மணிகண்டன் அரண்மனையில் இருந்து வெளியேறி, தேவலோகம் செல்லப் போவதாகச் சொன்னார். அதனைக் கேட்ட மன்னர் ராஜசேகரும், ராணியும் வருத்தமடைந்தனர். அவர்கள் வருத்தத்தைக் கண்ட மணிகண்டன் தனது தந்தையிடம், அம்பு ஒன்றை எய்வதாகவும், அந்த அம்பு விழும் இடத்தில் தனக்குக் கோவில் ஒன்றைக் கட்டும்படியும் கூறினார். அந்த ஆலயத்திற்கு ஆண்டுதோறும் மகரசங்கராந்தி நாளில் வந்து வழிபடும்படியும், அப்போது தான் ஜோதி வடிவில் காட்சி தருவதாகவும் சொன்னார்.
அதன்படி, மணிகண்டன் எய்த அம்பு, சபரிமலையில் போய் விழுந்தது. பந்தள மன்னன் ராஜசேகரனும், அவனது படை வீரர்களும் பெருநாட்டில் தங்கியிருந்து சபரிமலையில் கோவில் கட்டும் பணிகளை மேற்கொண்டனர். கோவில் கட்டி முடிக்கப்பட்ட பின்பு பந்தள மன்னன், மணிகண்டன் தெரிவித்தபடி, மகர சங்கராந்தி நாளில் சபரிமலை சென்று மணிகண்டனை வழிபட்டான்.
மன்னன் ராஜசேகரன் சபரிமலை செல்லும் போது, ராணியும் மற்ற பெண்களும் பெருநாட்டில் தங்கி அங்கே ஓரிடத்தில் மணிகண்டனை நினைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். அதன் பின்னர், மன்னர் பெருநாட்டில் ராணியும் மற்ற பெண்களும் வழிபட்ட இடத்தில் இந்த சாஸ்தா கோவிலைக் கட்டினார் என்று இந்த ஆலயத்தின் தல வரலாறு தெரிவிக்கிறது.
சபரிமலை ஆரணத்திற்கு பூஜை
சபரிமலை சாஸ்தாவிற்கு அணிவிப்பதற்காக ஆரணமுளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து கொண்டு வரப்படும் தங்கத்தாலான ஆடை மற்றும் திருவாபரணங்கள், மூன்றாம் நாளில் பெருநாடு சாஸ்தா கோவிலில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதன் பின்னர் சபரிமலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மண்டல பூஜை நிறைவு நாளில் தங்கத்தாலான ஆடை மற்றும் திருவாபரணங்கள் சபரி மலையில் இருக்கும் சாஸ்தாவிற்கு அணிவிக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. அதன் பின்னர் மகர ஜோதி நிறைவுக்குப் பின்னர், அந்த தங்கத்தாலான ஆடை மற்றும் திருவாபரணங்கள் பெருநாடு கொண்டு வரப்பட்டு, அங்கிருக்கும் சாஸ்தாவிற்கு அணிவிக்கப்பெற்றுச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இவ்விழாவில் பந்தள மன்னரின் மரபுரிமையர் மற்றும் பெண்கள் பலரும் பங்கேற்று சாஸ்தாவை வழிபட்டுச் செல்கின்றனர். இக்கோவிலைப் ‘பெண்களின் சபரிமலை’ என்று பெருமையாகச் சொல்கின்றனர்.
கோவில் அமைப்பு
பெருநாட்டில் அமைந்திருக்கும் இந்த சாஸ்தா கோவிலை, ‘காக்காட்டுக் கோயிக்கல் சாஸ்தா கோவில்’ என்றும், ‘வாளியக் கோவில்’ என்றும் சொல்கின்றனர். இந்த ஆலயமானது, கேரளக் கட்டுமானத்தில் அமைந்த மிகவும் பழமையான கோவிலாக இருக்கிறது. இங்கிருக்கும் சாஸ்தா அமர்ந்த நிலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில் சித்திரை விசு, மண்டல வழிபாட்டு நாட்கள் உள்ளிட்ட ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் 10 நாட்கள் ஆண்டுத் திருவிழா நடைபெறுகிறது.
அமைவிடம்
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம், ராணி வட்டத்தில் அமைந்திருக்கும் பெருநாடு சாஸ்தா கோவில், பத்தினம்திட்டாவில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், ராணியில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கோவிலுக்குச் செல்ல பத்தினம்திட்டா, ராணி ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
தேனி மு.சுப்பிரமணி
தாமிரபரணி கரையில் சிறப்பு பெற்ற தலங்களில், வெள்ளூர் நடுநக்கர் ஆலயமும் ஒன்றாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் சிவனின் தலங்களில் நவலிங்கபுரங்கள் ஒன்பது உள்ளன.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் பழம் பெரும் சிறப்பினைப் பறைசாற்றும் வகையில் பெருமாள் கோவிலும், சிவன்கோவிலும் அமைந்துள்ள சிறப்பான ஊர். பச்சை பசேலென்று படர்ந்து கிடக்கும் வயல்வெளிகளுக்குள், பொங்கி கிளம்பும் நீர் சுனைகள் கொண்ட தெப்பக்குளத்தின் பின்புறம் மிகப்பிரமாண்டமாக காட்சி தரும் சிவன்கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
செவ்வேல் அழகன் முருகன், திருச்செந்தூரில் சிவபெருமானைப் பஞ்சலிங்கங்கள் அமைத்து வழிபாடு செய்தது போல், இவ்வூரிலும் நடுநக்கர் எனும் பெயர் தாங்கிய சிவ பெருமானை முருகப்பெருமான் வழிபாடு செய்துள்ளார். இவ்வூர் ‘வேல்லூர்’ என்றழைக்கப்பட்டு அதுவே மருவி ‘வெள்ளூர்’ என அழைக்கப்படுகிறது. முருகப் பெருமானின் வேலை வைத்து வணங்கினர் என்றும், அதனால் இவ்வூர் ‘வேல்லூர்’ என்றழைக்கப்பட்டது என்பர்.
தாமிரபரணி கரையில் சிறப்பு பெற்ற தலங்களில், வெள்ளூர் நடுநக்கர் ஆலயமும் ஒன்றாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் சிவனின் தலங்களில் நவலிங்கபுரங்கள் ஒன்பது உள்ளன. வல்லநாடு திருமூல நாதர், கொங்கராயகுறிச்சி சட்ட நாதர், புதுக்குடி வடநக்கர், வெள்ளூர் நடுநக்கர், மளவராயநத்தம் தென்நக்கர், தெற்கு காரசேரி குலசேகரமுடையார், காந்தீஸ்வரம் ஏகாந்த லிங்ககேஸ்வரர், புறையூர் அயனாதீஸ்வரர், காயல்பட்டணம் மெய்கண்டீஸ்வரர் ஆகியவை அந்த ஆலயங்கள் ஆகும்.
நவலிங்கபுரத்தில் நடுநாயகமாக இருப்பது வடநக்கர், நடுநக்கர், தென்நக்கர் ஆகிய தலங்களாகும். இத்தலத்திற்குத் தெற்கே உள்ள மழவராயநத்தத்தில் தென் நக்கரும், வடக்கே உள்ள புதுக்குடியில் வடநக்கரும் வீற்றிருக்கிறார்கள். இரண்டு தலத்திற்கும் இடையே இத்தலம் அமைந்துள்ள காரணத்தினால், இங்குள்ள பெருமான் ‘நடுநக்கர்’ எனவும் அழைக்கப்படுகிறார். அகத்திய மாமுனிகள் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள இறைவனைப் பூஜித்து வழிபட்டதாகப் புராணச் செய்திகள் கூறுகிறது.
இத்திருக்கோவிலில் அன்னை சிவகாமி அம்மாள், மீனாட்சி திருக்கோலத்தில் காட்சி அருளுகின்றாள். இந்த அன்னை, சிவபெருமானின் வலது புறத்தில் தவக்கோலத்தில் அமர்ந்திருக்கிறாள். இங்கு வந்து திருமண தடை நீங்க வேண்டி நிற்போருக்கு உடனே திருமணம் நடைபெறுகிறது. குழந்தை வரமும் கிடைக்கிறது.
‘நக்கல்’ என்றால் ஒளி. ஒளியுருவானவர் ‘நக்கர்’ என பொருள் கொள்ளலாம். ‘நக்கல்’ என்றால் ‘சிரித்தல்’ என்ற பொருளும் உண்டு. சிரித்த முகத்தோடு அமர்ந்து அனைவர் பிரச்சினையையும் தீர்க்க வல்லவர் என்றும் இத் தலத்து இறைவனுக்கு பொருள் கூறலாம். முப்புரங்களை எரித்தவர் என்பதால் ஈசனுக்கு ‘நக்கர்’ என்ற பொருளும் உண்டு. ‘நக்கர்’ என்றால் ‘ஆடையில்லாதவன்’ என்ற பொருளும் உண்டு. இதுபோல் பல அர்த்தங்களை தரக்கூடிய இறைவன் இங்கே அருள்புரிகிறார். சிவபெருமான் ‘நடுநக்கர் மத்திய பதீஸ்வரர்’ எனவும் அழைக்கப்படுகிறார். ‘நடுநக்கர்’ என்பது தூய தமிழ்ச் சொல். மத்தியபதீஸ்வரர் என்பது அதற்கு இணையான வடமொழிச் சொல் என்பர். ஒரே பொருள் கொடுக்கின்ற இரண்டு மொழிகளின் சொற்களும் இணைந்து இறைவனின் திருப்பெயராக அமைந்துள்ளது சிறப்பாகும்.
இரண்டு சிவநெறி செல்வர்களுக்கு இடையில் சிவபக்தியில் சிறந்தவர்கள் யார் என்ற வழக்கும் ஏற்பட்டது. இந்த வழக்கை யாராலும் தீர்க்க முடியவில்லை. இறைவன் முதியவர் போல தோன்றி, அவர்கள் இருவரின் வழக்கைத் தீர விசாரித்தார். சிவபக்தியில் ஒருவருக்கு ஒருவர் சிறந்தவர்கள் அல்ல. எல்லோரும் சரிசமமானவர்களே என அறிவுறுத்தி அவர்கள் அறியாமையைத் தீர்த்து வைத்தார். துறவி வடிவில் வந்து தீர்ப்பு வழங்கியதால் இறைவன், ‘மத்தியபதீஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார்.
இவ்வூரில் பெருமாள் கோவிலும், சிவன் கோவிலும் மிகப்பிரமாண்டமாக உள்ளன. 1944-க்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. அதன்பின் பல வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, தற்போது கோவில் புது பொலிவுடன் காட்சியளிக்கிறது. அரசு ஆவணங்களின்படி இவ்வூர் பெருமாள் கோவிலில் ஆறுக் கல்வெட்டுக்கள் உள்ளன. கல்வெட்டுகளில் இவ்வூர் ‘வேலூரான மதுரோதையபுரம்’ என்றும், ‘வெள்ளூரான மதுரோதையபுரம்’ என்றும் இரண்டு வகையான பெயரில் குறிப்பிடப்படுகின்றது.
பெருமாள் கோவிலில் எழுந் தருளி இருக்கும் இறைவன் தற்போது ‘அழியங்கைப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். ‘தம்பித்துணை விண்ணகர் எம்பெருமாள்’ என்பதும், ‘தம்பித்துணை விண்ணகர் ஆழியார்’ என்பதும் கல்வெட்டுக்களுள் காணப்படும் இறைவன் பெயர்களாகும். இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுக்களில் பழமையானது, சடாவர்மன் குலசேகரனுடையது ஆகும். எனவே இக்கோவில் அவன் காலத்திலேயே கட்டப்பட்டிருக்க வேண்டும்.
மகா மண்டபம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் எழுப்பப்பட்டதை, இம்மண்டபக் கல்வெட்டு ஒன்று குறிப்பிடப்படுகின்றது. சடாவர்மன் குலசேகரன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகரன், மாறவர்மன் குலசேகரன் ஆகிய மன்னர்களுடைய கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன. இவ்வூரின் சிவன் கோவில் கல்வெட்டுக்கள் இக்கோவிலை ‘நற்காண்டார் கோவில்’ என்று குறிப்பிடுகின்றன.
வீரபாண்டியனுடைய துண்டுக் கல்வெட்டு ஒன்றும், குலசேகரப்பாண்டியனுடைய துண்டு கல்வெட்டு ஒன்றும் இக்கோவிலில் காணப்படுகின்றன. இக்கோவிலின் தென்கிழக்கு மூலையில் ‘கங்கை அம்மன்’ என்ற பெயரில் துர்க்கையின் கற்சிற்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இத்திரு உருவம் எட்டு திருக்கரங்களோடு அசுரனை வதம் செய்யும் நிலையில் அழகாக வடிக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோவில் ஆகம விதிப்படி பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த பாண்டிய மன்னர்களான வீரபாண்டிய சடாவர்மன், குலசேகர பாண்டியன் மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் பிரபவ வருடம் கொல்லம் 109-ம் ஆண்டு தை மாதம் ஞாயிற்றுக்கிழமை (ஆங்கில வருடம் கி.பி. 934-ல்) கட்டப்பட்ட பழமையும், பெருமையும் வாய்ந்தது என்பதை உணர்த்தும் கல்வெட்டுகள் தற்போது கிடைத்துள்ளன.
இக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவர் தலையில் கிரீடத்துடன் காணப் படுகிறார். எனவே இவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்து வழிப்பட்டால் தேர்தலில் வெற்றி கிடைக்கும். இதற்கான சிறப்பு பூஜை இக்கோவிலில் நடை பெறுகிறது. ஒளி வடிவமானவர் ‘நக்கர்’ என்ற பொருளுக்கேற்ப, மூலவர் நடுநக்கர் சன்னிதிக்குள் வித்தியாசமான ஒளி பரவுவதை இங்குள்ள பக்தர்கள் கண்டு பரவசமடைந்துள்ளனர்.
புதுக்குடியில் உள்ள வடநக்கர் கோவில் சிதையுண்ட காரணத்தினால், வடநக்கர் மூலவர் நடுக்கர் ஆலயத்தில் இடது புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். எனவே இந்த கோவிலில் வந்து வணங்கி நின்றால் இரண்டு சிவனை வணங்கிய புண்ணியம் கிட்டும். இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவும், சூரசம்ஹாரமும் மிகச்சிறப்பாக நடைபெறும். ஐப்பசி திருக்கல்யாணம், நவராத்திரி 9 நாள் கொலுவும், தை அமாவாசை சப்பரத்தில் சிவன் சக்தியின் புறப்பாடும் மிகவும் பிரசித்தம். திருக்கார்த்திகையை முன்னிட்டு சொக்கப்பனை விழா மற்றும் சுவாமி புறப்பாடும், மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி, பவுர்ணமி, அமாவாசை, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், கார்த்திகை உள்பட பூஜைகளும் மிகச்சிறப்பாக நடைபெறும்.
16 வகை செல்வம் தரும் மாசி திருவிழா
இத்திருக்கோவிலில் மாசி மாதம் 10 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சதய நட்சத்திரத்தில் தொடங்கி, திருவாதிரை நட்சத்திரத்தில் திருவிழா நிறைவு பெறும். 6-ம் திருவிழாவை முன்னிட்டு சிவபெருமான் தேவமாந்தர்களை கண்டு மையல் கொண்டதாகவும், இதையறிந்து மீனாட்சி சிவனிடம் ஊடல் கொண்டதாகவும், அன்னையை சுந்தரர் நேரில் சென்று சமாதானம் செய்வதாகவும் ஐதீகம். இதற்காக ஓதுவார், சுந்தரர் பாடல்களை பாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான செம்பு பட்டயம் கோவிலில் உள்ளது.
9-வது திருவிழாவில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக திருத்தேர் பவனி நடைபெற்று வருகிறது. 10 நாள் திருவிழா தீர்த்தவாரியுடன் முடிவடைகிறது. இக்கோவிலுக்கு வந்து வணங்கி நின்றால் வெண்குஷ்டம் போன்ற நோய்கள் தீருகிறது. திருமணம் முடிந்த தம்பதிகளுக்கு புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மைகள், பொன், நல்வாழ்வு, நெல், நுகர்க்கி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோய் இன்மை, வாழ்நாள் போன்ற 16 செல்வங்களும் கிடைக்க, இக்கோவிலில் அபிஷேகம் செய்து வழிபட்டால் கிடைக்கும் என்கிறார்கள்.
இவ்வூரை சேர்ந்தவர்கள் எந்த வேலையை தொடங்குவதாக இருந்தாலும், நடுநக்கரை வணங்கியே தொடங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் வெற்றியும் பெற்றுள்ளனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
இந்த கோவிலுக்குச் செல்ல திருநெல்வேலி - திருச்செந்தூர் ரெயில் மற்றும் பஸ் மார்க்கத்தில் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி என்னும் இடத்தில் இறங்கி 1 கிலோமீட்டர் தூரம் சென்றால், வெள்ளூரை அடையலாம்.
முத்தாலங்குறிச்சி காமராசு
செவ்வேல் அழகன் முருகன், திருச்செந்தூரில் சிவபெருமானைப் பஞ்சலிங்கங்கள் அமைத்து வழிபாடு செய்தது போல், இவ்வூரிலும் நடுநக்கர் எனும் பெயர் தாங்கிய சிவ பெருமானை முருகப்பெருமான் வழிபாடு செய்துள்ளார். இவ்வூர் ‘வேல்லூர்’ என்றழைக்கப்பட்டு அதுவே மருவி ‘வெள்ளூர்’ என அழைக்கப்படுகிறது. முருகப் பெருமானின் வேலை வைத்து வணங்கினர் என்றும், அதனால் இவ்வூர் ‘வேல்லூர்’ என்றழைக்கப்பட்டது என்பர்.
தாமிரபரணி கரையில் சிறப்பு பெற்ற தலங்களில், வெள்ளூர் நடுநக்கர் ஆலயமும் ஒன்றாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் சிவனின் தலங்களில் நவலிங்கபுரங்கள் ஒன்பது உள்ளன. வல்லநாடு திருமூல நாதர், கொங்கராயகுறிச்சி சட்ட நாதர், புதுக்குடி வடநக்கர், வெள்ளூர் நடுநக்கர், மளவராயநத்தம் தென்நக்கர், தெற்கு காரசேரி குலசேகரமுடையார், காந்தீஸ்வரம் ஏகாந்த லிங்ககேஸ்வரர், புறையூர் அயனாதீஸ்வரர், காயல்பட்டணம் மெய்கண்டீஸ்வரர் ஆகியவை அந்த ஆலயங்கள் ஆகும்.
நவலிங்கபுரத்தில் நடுநாயகமாக இருப்பது வடநக்கர், நடுநக்கர், தென்நக்கர் ஆகிய தலங்களாகும். இத்தலத்திற்குத் தெற்கே உள்ள மழவராயநத்தத்தில் தென் நக்கரும், வடக்கே உள்ள புதுக்குடியில் வடநக்கரும் வீற்றிருக்கிறார்கள். இரண்டு தலத்திற்கும் இடையே இத்தலம் அமைந்துள்ள காரணத்தினால், இங்குள்ள பெருமான் ‘நடுநக்கர்’ எனவும் அழைக்கப்படுகிறார். அகத்திய மாமுனிகள் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள இறைவனைப் பூஜித்து வழிபட்டதாகப் புராணச் செய்திகள் கூறுகிறது.
இத்திருக்கோவிலில் அன்னை சிவகாமி அம்மாள், மீனாட்சி திருக்கோலத்தில் காட்சி அருளுகின்றாள். இந்த அன்னை, சிவபெருமானின் வலது புறத்தில் தவக்கோலத்தில் அமர்ந்திருக்கிறாள். இங்கு வந்து திருமண தடை நீங்க வேண்டி நிற்போருக்கு உடனே திருமணம் நடைபெறுகிறது. குழந்தை வரமும் கிடைக்கிறது.
‘நக்கல்’ என்றால் ஒளி. ஒளியுருவானவர் ‘நக்கர்’ என பொருள் கொள்ளலாம். ‘நக்கல்’ என்றால் ‘சிரித்தல்’ என்ற பொருளும் உண்டு. சிரித்த முகத்தோடு அமர்ந்து அனைவர் பிரச்சினையையும் தீர்க்க வல்லவர் என்றும் இத் தலத்து இறைவனுக்கு பொருள் கூறலாம். முப்புரங்களை எரித்தவர் என்பதால் ஈசனுக்கு ‘நக்கர்’ என்ற பொருளும் உண்டு. ‘நக்கர்’ என்றால் ‘ஆடையில்லாதவன்’ என்ற பொருளும் உண்டு. இதுபோல் பல அர்த்தங்களை தரக்கூடிய இறைவன் இங்கே அருள்புரிகிறார். சிவபெருமான் ‘நடுநக்கர் மத்திய பதீஸ்வரர்’ எனவும் அழைக்கப்படுகிறார். ‘நடுநக்கர்’ என்பது தூய தமிழ்ச் சொல். மத்தியபதீஸ்வரர் என்பது அதற்கு இணையான வடமொழிச் சொல் என்பர். ஒரே பொருள் கொடுக்கின்ற இரண்டு மொழிகளின் சொற்களும் இணைந்து இறைவனின் திருப்பெயராக அமைந்துள்ளது சிறப்பாகும்.
இரண்டு சிவநெறி செல்வர்களுக்கு இடையில் சிவபக்தியில் சிறந்தவர்கள் யார் என்ற வழக்கும் ஏற்பட்டது. இந்த வழக்கை யாராலும் தீர்க்க முடியவில்லை. இறைவன் முதியவர் போல தோன்றி, அவர்கள் இருவரின் வழக்கைத் தீர விசாரித்தார். சிவபக்தியில் ஒருவருக்கு ஒருவர் சிறந்தவர்கள் அல்ல. எல்லோரும் சரிசமமானவர்களே என அறிவுறுத்தி அவர்கள் அறியாமையைத் தீர்த்து வைத்தார். துறவி வடிவில் வந்து தீர்ப்பு வழங்கியதால் இறைவன், ‘மத்தியபதீஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார்.
இவ்வூரில் பெருமாள் கோவிலும், சிவன் கோவிலும் மிகப்பிரமாண்டமாக உள்ளன. 1944-க்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. அதன்பின் பல வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, தற்போது கோவில் புது பொலிவுடன் காட்சியளிக்கிறது. அரசு ஆவணங்களின்படி இவ்வூர் பெருமாள் கோவிலில் ஆறுக் கல்வெட்டுக்கள் உள்ளன. கல்வெட்டுகளில் இவ்வூர் ‘வேலூரான மதுரோதையபுரம்’ என்றும், ‘வெள்ளூரான மதுரோதையபுரம்’ என்றும் இரண்டு வகையான பெயரில் குறிப்பிடப்படுகின்றது.
பெருமாள் கோவிலில் எழுந் தருளி இருக்கும் இறைவன் தற்போது ‘அழியங்கைப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். ‘தம்பித்துணை விண்ணகர் எம்பெருமாள்’ என்பதும், ‘தம்பித்துணை விண்ணகர் ஆழியார்’ என்பதும் கல்வெட்டுக்களுள் காணப்படும் இறைவன் பெயர்களாகும். இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுக்களில் பழமையானது, சடாவர்மன் குலசேகரனுடையது ஆகும். எனவே இக்கோவில் அவன் காலத்திலேயே கட்டப்பட்டிருக்க வேண்டும்.
மகா மண்டபம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் எழுப்பப்பட்டதை, இம்மண்டபக் கல்வெட்டு ஒன்று குறிப்பிடப்படுகின்றது. சடாவர்மன் குலசேகரன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகரன், மாறவர்மன் குலசேகரன் ஆகிய மன்னர்களுடைய கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன. இவ்வூரின் சிவன் கோவில் கல்வெட்டுக்கள் இக்கோவிலை ‘நற்காண்டார் கோவில்’ என்று குறிப்பிடுகின்றன.
வீரபாண்டியனுடைய துண்டுக் கல்வெட்டு ஒன்றும், குலசேகரப்பாண்டியனுடைய துண்டு கல்வெட்டு ஒன்றும் இக்கோவிலில் காணப்படுகின்றன. இக்கோவிலின் தென்கிழக்கு மூலையில் ‘கங்கை அம்மன்’ என்ற பெயரில் துர்க்கையின் கற்சிற்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இத்திரு உருவம் எட்டு திருக்கரங்களோடு அசுரனை வதம் செய்யும் நிலையில் அழகாக வடிக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோவில் ஆகம விதிப்படி பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த பாண்டிய மன்னர்களான வீரபாண்டிய சடாவர்மன், குலசேகர பாண்டியன் மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் பிரபவ வருடம் கொல்லம் 109-ம் ஆண்டு தை மாதம் ஞாயிற்றுக்கிழமை (ஆங்கில வருடம் கி.பி. 934-ல்) கட்டப்பட்ட பழமையும், பெருமையும் வாய்ந்தது என்பதை உணர்த்தும் கல்வெட்டுகள் தற்போது கிடைத்துள்ளன.
இக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவர் தலையில் கிரீடத்துடன் காணப் படுகிறார். எனவே இவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்து வழிப்பட்டால் தேர்தலில் வெற்றி கிடைக்கும். இதற்கான சிறப்பு பூஜை இக்கோவிலில் நடை பெறுகிறது. ஒளி வடிவமானவர் ‘நக்கர்’ என்ற பொருளுக்கேற்ப, மூலவர் நடுநக்கர் சன்னிதிக்குள் வித்தியாசமான ஒளி பரவுவதை இங்குள்ள பக்தர்கள் கண்டு பரவசமடைந்துள்ளனர்.
புதுக்குடியில் உள்ள வடநக்கர் கோவில் சிதையுண்ட காரணத்தினால், வடநக்கர் மூலவர் நடுக்கர் ஆலயத்தில் இடது புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். எனவே இந்த கோவிலில் வந்து வணங்கி நின்றால் இரண்டு சிவனை வணங்கிய புண்ணியம் கிட்டும். இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவும், சூரசம்ஹாரமும் மிகச்சிறப்பாக நடைபெறும். ஐப்பசி திருக்கல்யாணம், நவராத்திரி 9 நாள் கொலுவும், தை அமாவாசை சப்பரத்தில் சிவன் சக்தியின் புறப்பாடும் மிகவும் பிரசித்தம். திருக்கார்த்திகையை முன்னிட்டு சொக்கப்பனை விழா மற்றும் சுவாமி புறப்பாடும், மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி, பவுர்ணமி, அமாவாசை, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், கார்த்திகை உள்பட பூஜைகளும் மிகச்சிறப்பாக நடைபெறும்.
16 வகை செல்வம் தரும் மாசி திருவிழா
இத்திருக்கோவிலில் மாசி மாதம் 10 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சதய நட்சத்திரத்தில் தொடங்கி, திருவாதிரை நட்சத்திரத்தில் திருவிழா நிறைவு பெறும். 6-ம் திருவிழாவை முன்னிட்டு சிவபெருமான் தேவமாந்தர்களை கண்டு மையல் கொண்டதாகவும், இதையறிந்து மீனாட்சி சிவனிடம் ஊடல் கொண்டதாகவும், அன்னையை சுந்தரர் நேரில் சென்று சமாதானம் செய்வதாகவும் ஐதீகம். இதற்காக ஓதுவார், சுந்தரர் பாடல்களை பாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான செம்பு பட்டயம் கோவிலில் உள்ளது.
9-வது திருவிழாவில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக திருத்தேர் பவனி நடைபெற்று வருகிறது. 10 நாள் திருவிழா தீர்த்தவாரியுடன் முடிவடைகிறது. இக்கோவிலுக்கு வந்து வணங்கி நின்றால் வெண்குஷ்டம் போன்ற நோய்கள் தீருகிறது. திருமணம் முடிந்த தம்பதிகளுக்கு புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மைகள், பொன், நல்வாழ்வு, நெல், நுகர்க்கி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோய் இன்மை, வாழ்நாள் போன்ற 16 செல்வங்களும் கிடைக்க, இக்கோவிலில் அபிஷேகம் செய்து வழிபட்டால் கிடைக்கும் என்கிறார்கள்.
இவ்வூரை சேர்ந்தவர்கள் எந்த வேலையை தொடங்குவதாக இருந்தாலும், நடுநக்கரை வணங்கியே தொடங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் வெற்றியும் பெற்றுள்ளனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
இந்த கோவிலுக்குச் செல்ல திருநெல்வேலி - திருச்செந்தூர் ரெயில் மற்றும் பஸ் மார்க்கத்தில் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி என்னும் இடத்தில் இறங்கி 1 கிலோமீட்டர் தூரம் சென்றால், வெள்ளூரை அடையலாம்.
முத்தாலங்குறிச்சி காமராசு
சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் செல்லும் பாதையில் சற்றே உள்ளடங்கிய திருக்குருகாவூர் கிராமத்தில் உள்ளது அருள்மிகு வெள்விடை நாதர் ஆலயம்.
சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் செல்லும் பாதையில் சற்றே உள்ளடங்கி உள்ள கிராமம் திருக்குருகாவூர். இங்குள்ளது அருள்மிகு வெள்விடை நாதர் ஆலயம். இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘வெள் விடைநாதர்’ என்பதாகும். வெள்ளடை ஈஸ்வரர், வெள்ளடை நாதர், சுவேத ரிஷபேஸ்வரர் என்பன இறைவனுக்குள்ள பிற பெயர்கள். இறைவியின் பெயர் ‘காவியங்கண்ணி அம்பாள்’ என்பது. இறைவியின் இன்னொரு பெயர் ‘நீலோத்பவ விசாலாட்சி’ என்பதாகும்.
ஆலய முகப்பில் கோபுரமில்லை. முகப்பு வாசலைக் கடந்து உள்ளே சென்றால், வலதுபுறம் அம்மன் சன்னிதி உள்ளது. பிள்ளையார் பலிபீடம், நந்தி ஆகியவைகளும் எதிரே உள்ளன. அர்த்த மண்டப நுழைவு வாசலின் இடதுபுறமும் வலதுபுறமும் விநாயகர் திருமேனிகளும், துவாரபாலகர் திருமேனிகளும் உள்ளன. அடுத்துள்ள கருவறையில் இறைவன் வெள்விடைநாதர் லிங்கத்திருமேனியில் அருள்பாலிக்கிறார். சதுர ஆவுடையார் சிறிய பாணம் கொண்ட திருமேனியுடன் இறைவன் காட்சி தருகிறார்.
இங்குள்ள அம்மனுக்கு நான்கு கைகள். மேல் இரண்டு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தியும், கீழ் இரண்டு கரங்களில் அபய, ஹஸ்த முத்திரைகளுடன் இளநகை தவழ நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள் அன்னை.
ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம். தீர்த்தம்-பால்கிணறு. இது ஆலயத்திற்கு வெளியே இருக்கிறது. ஒரு தை அமாவாசையின்போது இறைவன் - இறைவிக்கு தீர்த்தம் கொடுக்க, இந்த கிணற்றருகே வந்தபோது இந்த கிணற்று நீர், பால் நிறமாக மாறியதாம். அது முதல் இக்கிணறு ‘பால் கிணறு’ என்றே அழைக்கப்படுகிறது.
பண்டைய சோழநாட்டின் வடகரைத் தலம் இது. பசியோடு வந்த சுந்தரருக்கு இறைவனே முன் வந்து உணவும் தண்ணீரும் அளித்த தலம் இது.
ஆம்.. ஒரு முறை தன் பயணத்தின் போது சுந்தரமூர்த்தி சுவாமிகள், தன் அடியவர் திருக்கூட்டத்துடன் சீர்காழியில் இருந்து இத்தலம் நோக்கிப் புறப்பட்டார். தன்னை வழிபட வரும் பக்தரும், அவர்தம் கூட்டமும் பசியோடு வருவதை உணர்ந்த இத்தல இறைவன் மனம் நெகிழ்ந்தார். சுந்தரர் வரும் வழியில், ஒரு பந்தலை அமைத்து பொதி சோற்றுடனும் தண்ணீருடனும் காத்திருந்தார் இத்தல இறைவன். சுந்தரரும் அவரது அடியார்களும் களைப்புடனும் பசியுடனும் வந்தனர். சுந்தரர் அப்பந்தலில் தங்கி இளைப்பாற, முதியோர் உருவில் இருந்த இறைவன் அவரருகே சென்றார்.
‘ஐயனே, நீங்கள் மிகவும் பசியுடன் இருப்பதாக உணருகிறேன். நான் பொதி சோறு கொண்டு வந்துள்ளேன். இதை உண்டு பசியாறுங்கள். தண்ணீரும் கொண்டு வந்துள்ளேன். நீர் அருந்தி களைப்பாறுங்கள்’ என்றார் இறைவன்.
சுந்தரர் மனம் மகிழ்ந்து ‘சரி’ என்றார். இறைவன் கொண்டு வந்த பொதி சோற்றினை சுந்தரரும், அவரது அடியார்களும் வயிறார உண்டனர். பொதி சோறு குறையாது பெருகியது.
இறைவனை யாரென்று அறியாத சுந்தரர் அவருக்கு நன்றி கூறிவிட்டு இளைப்பாறி உறங்கத் தொடங்கினார். அடியவர்களும் உறங்கினர். உறக்கம் கலைந்த சுந்தரர் தனக்கு உணவளித்த அடியவரைக் காணாது தவித்தார். பின்னர் தனக்கு பொதிசோறு அளித்தது, குருகாவூர் இறைவனே என உணர்ந்தார். மனம் சிலிர்த்தார்.
‘இத்தனையா மாற்றை ...’ என்று திருப்பதிகம் பாடிக் கொண்டே ஆலயத்தினுள் சென்ற சுந்தரர், இறைவனை பதிகம் பாடி மனம் மகிழ்ந்தார்.
சம்பந்தராலும் பாடல் பெற்ற தலம் இது. இந்த ஆலயத்தில் ராசேந்திர சோழன், குலோத்துங்க சோழன், ராஜாதி ராஜ சோழன் ஆகியோர் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. குலோகத்துங்க சோழன் காலத்தில் மூவர் திருவுருவங்கள் இக்கோவிலில் எழுந்தருளிவிக்கப்பெற்றன.
சுந்தரருக்கும் அடியவர்களுக்கும் இறைவன் அமுதூட்டிய இடம் ‘வரிசைபற்று’ என்ற பெயரில், இத்தலத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் கட்டமுதளித்த இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமியில் மிகவும் சிறப்பாக இங்கு கொண்டாடப்படுகிறது.
இங்குள்ள அன்னைக்கு மூன்று வாரங்கள் தொடர்ந்து நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து புடவை வாங்கி அணிவித்தால் குழந்தை பேறு நிச்சயம் என பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந் திருக்கும்.
அமைவிடம்
ஆலய முகப்பில் கோபுரமில்லை. முகப்பு வாசலைக் கடந்து உள்ளே சென்றால், வலதுபுறம் அம்மன் சன்னிதி உள்ளது. பிள்ளையார் பலிபீடம், நந்தி ஆகியவைகளும் எதிரே உள்ளன. அர்த்த மண்டப நுழைவு வாசலின் இடதுபுறமும் வலதுபுறமும் விநாயகர் திருமேனிகளும், துவாரபாலகர் திருமேனிகளும் உள்ளன. அடுத்துள்ள கருவறையில் இறைவன் வெள்விடைநாதர் லிங்கத்திருமேனியில் அருள்பாலிக்கிறார். சதுர ஆவுடையார் சிறிய பாணம் கொண்ட திருமேனியுடன் இறைவன் காட்சி தருகிறார்.
இங்குள்ள அம்மனுக்கு நான்கு கைகள். மேல் இரண்டு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தியும், கீழ் இரண்டு கரங்களில் அபய, ஹஸ்த முத்திரைகளுடன் இளநகை தவழ நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள் அன்னை.
ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம். தீர்த்தம்-பால்கிணறு. இது ஆலயத்திற்கு வெளியே இருக்கிறது. ஒரு தை அமாவாசையின்போது இறைவன் - இறைவிக்கு தீர்த்தம் கொடுக்க, இந்த கிணற்றருகே வந்தபோது இந்த கிணற்று நீர், பால் நிறமாக மாறியதாம். அது முதல் இக்கிணறு ‘பால் கிணறு’ என்றே அழைக்கப்படுகிறது.
பண்டைய சோழநாட்டின் வடகரைத் தலம் இது. பசியோடு வந்த சுந்தரருக்கு இறைவனே முன் வந்து உணவும் தண்ணீரும் அளித்த தலம் இது.
ஆம்.. ஒரு முறை தன் பயணத்தின் போது சுந்தரமூர்த்தி சுவாமிகள், தன் அடியவர் திருக்கூட்டத்துடன் சீர்காழியில் இருந்து இத்தலம் நோக்கிப் புறப்பட்டார். தன்னை வழிபட வரும் பக்தரும், அவர்தம் கூட்டமும் பசியோடு வருவதை உணர்ந்த இத்தல இறைவன் மனம் நெகிழ்ந்தார். சுந்தரர் வரும் வழியில், ஒரு பந்தலை அமைத்து பொதி சோற்றுடனும் தண்ணீருடனும் காத்திருந்தார் இத்தல இறைவன். சுந்தரரும் அவரது அடியார்களும் களைப்புடனும் பசியுடனும் வந்தனர். சுந்தரர் அப்பந்தலில் தங்கி இளைப்பாற, முதியோர் உருவில் இருந்த இறைவன் அவரருகே சென்றார்.
‘ஐயனே, நீங்கள் மிகவும் பசியுடன் இருப்பதாக உணருகிறேன். நான் பொதி சோறு கொண்டு வந்துள்ளேன். இதை உண்டு பசியாறுங்கள். தண்ணீரும் கொண்டு வந்துள்ளேன். நீர் அருந்தி களைப்பாறுங்கள்’ என்றார் இறைவன்.
சுந்தரர் மனம் மகிழ்ந்து ‘சரி’ என்றார். இறைவன் கொண்டு வந்த பொதி சோற்றினை சுந்தரரும், அவரது அடியார்களும் வயிறார உண்டனர். பொதி சோறு குறையாது பெருகியது.
இறைவனை யாரென்று அறியாத சுந்தரர் அவருக்கு நன்றி கூறிவிட்டு இளைப்பாறி உறங்கத் தொடங்கினார். அடியவர்களும் உறங்கினர். உறக்கம் கலைந்த சுந்தரர் தனக்கு உணவளித்த அடியவரைக் காணாது தவித்தார். பின்னர் தனக்கு பொதிசோறு அளித்தது, குருகாவூர் இறைவனே என உணர்ந்தார். மனம் சிலிர்த்தார்.
‘இத்தனையா மாற்றை ...’ என்று திருப்பதிகம் பாடிக் கொண்டே ஆலயத்தினுள் சென்ற சுந்தரர், இறைவனை பதிகம் பாடி மனம் மகிழ்ந்தார்.
சம்பந்தராலும் பாடல் பெற்ற தலம் இது. இந்த ஆலயத்தில் ராசேந்திர சோழன், குலோத்துங்க சோழன், ராஜாதி ராஜ சோழன் ஆகியோர் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. குலோகத்துங்க சோழன் காலத்தில் மூவர் திருவுருவங்கள் இக்கோவிலில் எழுந்தருளிவிக்கப்பெற்றன.
சுந்தரருக்கும் அடியவர்களுக்கும் இறைவன் அமுதூட்டிய இடம் ‘வரிசைபற்று’ என்ற பெயரில், இத்தலத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் கட்டமுதளித்த இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமியில் மிகவும் சிறப்பாக இங்கு கொண்டாடப்படுகிறது.
இங்குள்ள அன்னைக்கு மூன்று வாரங்கள் தொடர்ந்து நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து புடவை வாங்கி அணிவித்தால் குழந்தை பேறு நிச்சயம் என பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந் திருக்கும்.
அமைவிடம்
நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்குருகாவூர் என்ற இந்த தலம்.
மல்லிகா சுந்தர்
பாதாள புவனேஷ்வர் கோவில், டெல்லியில் இருந்து 506 கிலோமீட்டர் தூரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ் சோதியான இறைவன், எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான். இதனால்தான் சித்தர்கள் காடுகளிலும், மலைகளிலும், குகைகளிலும் தவம் இருந்து இறைவனை தரிசித்தனர். இயற்கையுடன் இணைந்த இறைவன், ஒரு குகையில் ‘பாதாள புவனேஷ்வர்’ என்ற நாமம் தாங்கி தன்னை நாடி வரும் பக்தர் களுக்கு நலமும், வளமும் வழங்கி வருகிறார்.
உத்ரகாண்ட் மாநிலத்தில் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ளது, குமா ஊன் என்ற பகுதி. நெடிந்துயர்ந்த மலை, சுற்றிலும் பாய்ந்தோடிச் செல்லும் நதி, அடர்ந்த மரங்கள் நிறைந்த இடம் என இயற்கை எழில் சூழ்ந்த சோலையில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. பாதாள புவனேஷ்வர் வீற்றிருந்து அருள்புரியும் இடம், சுண்ணாம்பு குகை ஆகும். இந்தக் குகை 100 அடி ஆழமும், 160 அடி நீளமும் கொண்டது.
இந்தக் குகையில் சிவபெருமானுடன் முப்பத்து முக்கோடி தேவர்களும் வீற்றியிருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். பிரசித்திப்பெற்ற ஒவ்வொரு கோவிலுக்கும் தலபுராணம் இருப்பதைப் போன்று, இந்தக் கோவிலுக்கும் ஒரு தல புராணம் சொல்லப்படுகிறது. அது விநாயகப்பெருமானின் பிறப்போடு தொடர்புடையாக இருக்கிறது.
சிவபெருமான் ஒருமுறை வெளியே சென்று இருந்தபோது, பார்வதி தேவி நீராடச் சென்றார். அப்போது தனக்கு காவல் காக்க ஒருவர் வேண்டும் என்று நினைத்தார். உடனடியாக குளிப்பதற்காக வைத்திருந்த சந்தனத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்து, ஒரு உருவம் செய்தார். இறைவன் அருளால் அந்த உருவத்திற்கு உயிர் வந்தது. அந்த குழந்தையை, தன் பிள்ளையாக பாவித்த பார்வதி தேவி, ‘எவரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது’ என்று கூறிவிட்டு நீராடச் சென்று விட்டார்.
அந்த நேரம் பார்த்து, வெளியே சென்றிருந்த சிவபெருமான் வருகை தந்தார். அவரை தடுத்து நிறுத்திய விநாயகர், உள்ளே செல்லக்கூடாது என்று தடை போட்டார். இதனால் சினம் கொண்ட சிவபெருமான், விநாயகரின் தலையை சூலாயுதத்தால் வெட்டி வீழ்த்தினார்.
நீராடிவிட்டு வந்து பார்த்த பார்வதிக்கு, நடந்தது அனைத்தும் புரிந்து விட்டது. அவர் கண்ணீர் விட்டு கதறினார். அதைக் கண்டு மனம் இரங்கிய சிவபெருமான், பிரம்மதேவனை அழைத்து, விநாயகரின் தலையில்லாத உடலில் பொருத்த ஒரு தலையைக் கொண்டு வரும்படி சொன்னார். இதையடுத்து பிரம்மன் வெளியில் சென்றபோது, எதிரே ஒரு யானை வந்தது. அதன் தலையை வெட்டி எடுத்து வந்து, விநாயகரின் உடலில் பொருத்தினார். பின்னர் எட்டு இதழ் கொண்ட பாரிஜாதப் பூவில் இருந்து சொட்டிய நீரினை தெளித்து விநாயகரை, சிவபெருமான் உயிர்ப்பித்தார். அந்த இடம் இது என்று சொல்லப்படுகிறது.
பாதாள புவனேஷ்வர் ஆலயத்தில் இயற்கையாக அமைந்துள்ள எட்டு இதழ்களுடன் கூடிய பாரிஜாதப்பூ மரம் இன்றும் இங்கு இருப்பதாக சொல்கிறார்கள்.
இந்து மதத்தின்படி கால சுழற்சி, ஒரு யுகமாக அளவிடப்படுகிறது. ஒரு மகா யுகம் என்பது கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலியுகம் என்று நான்கு கூறுகளைக் கொண்டுள்ளது. மகாபாரதத்தில் குருஷேத்தர யுத்தம் முடிவடைந்த பின்னர் கலியுகம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.
திரேதா யுகத்தில் ரிதுபர்ணன் என்ற மன்னன், முதலில் பாதாள புவனேஷ்வர் குகைக் கோவிலை கண்டுபிடித்து வழிபடச் சென்றார். அப்போது நாகர்களின் ராஜாவான ஆதிசேஷனை அவர் சந்தித்தார். ஆதிசேஷன், ரிதுபர்ணனை குகையை சுற்றி அழைத்துச் சென்றார். அங்கு ரிதுபர்ணன் வெவ்வேறு கடவுள்களையும் பிரமிக்க வைக்கும் காட்சியையும் கண்டார். சிவபெருமானையும் தரிசித்தார்.
அதன் பின்னர் துவாபார யுகத்தின் போது பாண்டவர்கள் சிவ பெருமானை இங்கு பிரார்த்தனை செய்தார்கள். கலியுகத்தில் வாழ்ந்த ஆதிசங்கரர் இங்கு வந்து லிங்கத்திற்கு செப்பிலான காப்பு வைத்து பூஜை செய்தார். இந்த குகைக்கு நான்கு கதவுகள் இருந்ததாகவும், அதில் இரண்டு கடந்த யுகத்தில் மூடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
குறுகலான குகையின் வாசல் வழியாக ஒவ்வொருவராக தவழ்ந்து பக்கவாட்டில் உள்ள கம்பியை பிடித்துக்கொண்டு சுமார் 80 படிகள் இறங்க வேண்டும். வயதானவர்கள், குழந்தைகள், சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை. குகையில் ஆக்சிஜன் குறைவாக இருப்பதால் மூச்சுத்திணறல் ஏற்படும். படியைவிட்டு இறங்கியவுடன் சுவாசத்திற்காக ஆக்சிஜன் சிலிண்டருடன் உபகரணங்கள் வைத்திருக்கிறார்கள். எல்லோரும் ஆக்சிஜனை எடுத்து வைத்துக்கொண்டு, பிறகுதான் குகைக்குள் சென்று பார்க்க முடியும்.
படிகளின் நடுவே நரசிம்மரின் உருவம் பிரமாண்டமாக காட்சி யளிக்கிறது. கீழே இறங்கியவுடன் முதலில் தெரிவது ஆதிஷேசன். அவர் பூமியை தாங்கி பிடித்திருப்பது போன்ற காட்சி பிரமிக்கவைக்கிறது. அதைத் தாண்டி உள்ளே சென்றால் ஒரு யாக குண்டம் தென்படுகிறது.
இங்குதான் ஜனமேஜயன், தன் தந்தை பரீஷித்து மகாராஜாவின் மரணத்துக்கு பழி வாங்குவதற்காக உல்லாங்க முனிவரின் கூற்றுப்படி, சர்ப்ப யாகம் செய்ததாக சொல்லப்படுகிறது. பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத் லிங்க வடிவங்கள், இங்கும் தத்ரூபமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளன. காலபைரவர் நாக்கை நீட்டிக்கொண்டு உக்ரமான தோற்றத்தில் காட்சி தருகிறார்.
சிவன் தன் சடாமுடியை அவிழ்த்து விட்டது போல், விழுதுகள் காணப்படுகின்றன. அதில் இருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கிறது. மேற்பகுதியில் பாரிஜாதப் பூ காணப்படுகிறது. அது தேவலோகத்தை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. காமதேனு பசுவின் மடி காம்பில் இருந்து பால் சுரப்பது போன்ற அமைப்பு காணப்படுகிறது. அதன் கீழே பைரவர், முப்பது முக்கோடி தேவர்கள் வணங்கியபடி நிற்கிறார்கள்.
கருவறையில் இயற்கையின் மூன்று சக்திகளான படைத்தல், காத்தல், அழித்தலை குறிக்கும் வண்ணம் மூன்று லிங்கங்கள் காணப்படுகின்றன. இவை ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவையாகும். இதன் மேல் செப்பு கவசம் சாத்தப்பட்டு இருக்கிறது. பக்தர்களை அதன் அருகில் உட்காரவைத்து பூஜை செய்கிறார்கள். இந்த லிங்கங்கள் மேல் நீர் கொட்டிக்கொண்டே இருப்பது விசேஷமானதாகும். அடுத்ததாக கழுத்தில் பாம்பை சுற்றிய படி ஜடா முடியுடன் சிவபெருமான் காட்சி தரு கிறார். சிவன், பார்வதியுடன் சொக்கட்டான் ஆடும் காட்சி காண்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது.
குகையின் ஒரு பகுதியில் கலி யுகத்தை குறிக்கும் சிவலிங்கம் உள்ளது. இது நாள் தோறும் வளர்கிறதாம். இதன் மேல் இருக்கும் கூம்பு, எப்பொழுது மலையை தொடுகிறதோ அப்பொழுது கலி யுகம் முடியும் என்பது நம்பிக்கை. மேலே அன்னாந்து பார்த்தால் ஆயிரம் கால்களுடன் ஐராவதம். இவ்வளவு அதிசயங்கள் எல்லாம் இயற்கையாகவே அமையப்பெற்றவை என்பதுதான், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விஷயம்.
இந்த ஆலயத்தில் உள்ள புவனேஷ்வரரை மனமுருக வேண்டிக்கொண்டால், நீடித்த ஆயுள், குறையாத செல்வம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தக் குகை கோவில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் பாதுகாக்கப்படுகிறது. இந்த ஆலயம் ஒவ்வொருவருக்கும், ஏதோ தேவலோகத்திற்கே வந்து விட்டது போன்ற உணர்வை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
மூதாதையர் ஆசிபெற உதவும் நந்தி வழிபாடு
பாதாள புவனேஷ்வர் கோவிலில், சனிப் பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆகும். அன்றைய தினம் நந்தி வழிபாட்டில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தால், மரணமடைந்த மூதாதையர்களுக்கு சிவபெருமான் சாந்தி அளிப்பதாக கூறப்படுகிறது. அப்படி அவர்களுக்கு சாந்தி கிடைத்தால், அவர்கள் மகிழ்ச்சியில் தங்களின் சந்ததியினரை ஆசீர்வதிக்கின்றனர் என்பது ஐதீகம்.
அமைவிடம்
பாதாள புவனேஷ்வர் கோவில், டெல்லியில் இருந்து 506 கிலோமீட்டர் தூரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பாதாள புவனேஷ்வருக்கு அருகிலுள்ள ரெயில் நிலையம் 154 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனக்பூர் ஆகும். பாதாள புவனேஷ்வர் கோவில், பித்தோராகர் மாவட்டம் கங்கோலிஹாட்டில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பாதாள புவனேஷ்வருக்கு அருகிலுள்ள விமான நிலையம், சுமார் 226 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பந்த்நகர் விமான நிலையம் ஆகும்.
மருத்துவர் நா.மோகன்தாஸ்
உத்ரகாண்ட் மாநிலத்தில் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ளது, குமா ஊன் என்ற பகுதி. நெடிந்துயர்ந்த மலை, சுற்றிலும் பாய்ந்தோடிச் செல்லும் நதி, அடர்ந்த மரங்கள் நிறைந்த இடம் என இயற்கை எழில் சூழ்ந்த சோலையில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. பாதாள புவனேஷ்வர் வீற்றிருந்து அருள்புரியும் இடம், சுண்ணாம்பு குகை ஆகும். இந்தக் குகை 100 அடி ஆழமும், 160 அடி நீளமும் கொண்டது.
இந்தக் குகையில் சிவபெருமானுடன் முப்பத்து முக்கோடி தேவர்களும் வீற்றியிருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். பிரசித்திப்பெற்ற ஒவ்வொரு கோவிலுக்கும் தலபுராணம் இருப்பதைப் போன்று, இந்தக் கோவிலுக்கும் ஒரு தல புராணம் சொல்லப்படுகிறது. அது விநாயகப்பெருமானின் பிறப்போடு தொடர்புடையாக இருக்கிறது.
சிவபெருமான் ஒருமுறை வெளியே சென்று இருந்தபோது, பார்வதி தேவி நீராடச் சென்றார். அப்போது தனக்கு காவல் காக்க ஒருவர் வேண்டும் என்று நினைத்தார். உடனடியாக குளிப்பதற்காக வைத்திருந்த சந்தனத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்து, ஒரு உருவம் செய்தார். இறைவன் அருளால் அந்த உருவத்திற்கு உயிர் வந்தது. அந்த குழந்தையை, தன் பிள்ளையாக பாவித்த பார்வதி தேவி, ‘எவரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது’ என்று கூறிவிட்டு நீராடச் சென்று விட்டார்.
அந்த நேரம் பார்த்து, வெளியே சென்றிருந்த சிவபெருமான் வருகை தந்தார். அவரை தடுத்து நிறுத்திய விநாயகர், உள்ளே செல்லக்கூடாது என்று தடை போட்டார். இதனால் சினம் கொண்ட சிவபெருமான், விநாயகரின் தலையை சூலாயுதத்தால் வெட்டி வீழ்த்தினார்.
நீராடிவிட்டு வந்து பார்த்த பார்வதிக்கு, நடந்தது அனைத்தும் புரிந்து விட்டது. அவர் கண்ணீர் விட்டு கதறினார். அதைக் கண்டு மனம் இரங்கிய சிவபெருமான், பிரம்மதேவனை அழைத்து, விநாயகரின் தலையில்லாத உடலில் பொருத்த ஒரு தலையைக் கொண்டு வரும்படி சொன்னார். இதையடுத்து பிரம்மன் வெளியில் சென்றபோது, எதிரே ஒரு யானை வந்தது. அதன் தலையை வெட்டி எடுத்து வந்து, விநாயகரின் உடலில் பொருத்தினார். பின்னர் எட்டு இதழ் கொண்ட பாரிஜாதப் பூவில் இருந்து சொட்டிய நீரினை தெளித்து விநாயகரை, சிவபெருமான் உயிர்ப்பித்தார். அந்த இடம் இது என்று சொல்லப்படுகிறது.
பாதாள புவனேஷ்வர் ஆலயத்தில் இயற்கையாக அமைந்துள்ள எட்டு இதழ்களுடன் கூடிய பாரிஜாதப்பூ மரம் இன்றும் இங்கு இருப்பதாக சொல்கிறார்கள்.
இந்து மதத்தின்படி கால சுழற்சி, ஒரு யுகமாக அளவிடப்படுகிறது. ஒரு மகா யுகம் என்பது கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலியுகம் என்று நான்கு கூறுகளைக் கொண்டுள்ளது. மகாபாரதத்தில் குருஷேத்தர யுத்தம் முடிவடைந்த பின்னர் கலியுகம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.
திரேதா யுகத்தில் ரிதுபர்ணன் என்ற மன்னன், முதலில் பாதாள புவனேஷ்வர் குகைக் கோவிலை கண்டுபிடித்து வழிபடச் சென்றார். அப்போது நாகர்களின் ராஜாவான ஆதிசேஷனை அவர் சந்தித்தார். ஆதிசேஷன், ரிதுபர்ணனை குகையை சுற்றி அழைத்துச் சென்றார். அங்கு ரிதுபர்ணன் வெவ்வேறு கடவுள்களையும் பிரமிக்க வைக்கும் காட்சியையும் கண்டார். சிவபெருமானையும் தரிசித்தார்.
அதன் பின்னர் துவாபார யுகத்தின் போது பாண்டவர்கள் சிவ பெருமானை இங்கு பிரார்த்தனை செய்தார்கள். கலியுகத்தில் வாழ்ந்த ஆதிசங்கரர் இங்கு வந்து லிங்கத்திற்கு செப்பிலான காப்பு வைத்து பூஜை செய்தார். இந்த குகைக்கு நான்கு கதவுகள் இருந்ததாகவும், அதில் இரண்டு கடந்த யுகத்தில் மூடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
குறுகலான குகையின் வாசல் வழியாக ஒவ்வொருவராக தவழ்ந்து பக்கவாட்டில் உள்ள கம்பியை பிடித்துக்கொண்டு சுமார் 80 படிகள் இறங்க வேண்டும். வயதானவர்கள், குழந்தைகள், சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை. குகையில் ஆக்சிஜன் குறைவாக இருப்பதால் மூச்சுத்திணறல் ஏற்படும். படியைவிட்டு இறங்கியவுடன் சுவாசத்திற்காக ஆக்சிஜன் சிலிண்டருடன் உபகரணங்கள் வைத்திருக்கிறார்கள். எல்லோரும் ஆக்சிஜனை எடுத்து வைத்துக்கொண்டு, பிறகுதான் குகைக்குள் சென்று பார்க்க முடியும்.
படிகளின் நடுவே நரசிம்மரின் உருவம் பிரமாண்டமாக காட்சி யளிக்கிறது. கீழே இறங்கியவுடன் முதலில் தெரிவது ஆதிஷேசன். அவர் பூமியை தாங்கி பிடித்திருப்பது போன்ற காட்சி பிரமிக்கவைக்கிறது. அதைத் தாண்டி உள்ளே சென்றால் ஒரு யாக குண்டம் தென்படுகிறது.
இங்குதான் ஜனமேஜயன், தன் தந்தை பரீஷித்து மகாராஜாவின் மரணத்துக்கு பழி வாங்குவதற்காக உல்லாங்க முனிவரின் கூற்றுப்படி, சர்ப்ப யாகம் செய்ததாக சொல்லப்படுகிறது. பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத் லிங்க வடிவங்கள், இங்கும் தத்ரூபமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளன. காலபைரவர் நாக்கை நீட்டிக்கொண்டு உக்ரமான தோற்றத்தில் காட்சி தருகிறார்.
சிவன் தன் சடாமுடியை அவிழ்த்து விட்டது போல், விழுதுகள் காணப்படுகின்றன. அதில் இருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கிறது. மேற்பகுதியில் பாரிஜாதப் பூ காணப்படுகிறது. அது தேவலோகத்தை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. காமதேனு பசுவின் மடி காம்பில் இருந்து பால் சுரப்பது போன்ற அமைப்பு காணப்படுகிறது. அதன் கீழே பைரவர், முப்பது முக்கோடி தேவர்கள் வணங்கியபடி நிற்கிறார்கள்.
கருவறையில் இயற்கையின் மூன்று சக்திகளான படைத்தல், காத்தல், அழித்தலை குறிக்கும் வண்ணம் மூன்று லிங்கங்கள் காணப்படுகின்றன. இவை ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவையாகும். இதன் மேல் செப்பு கவசம் சாத்தப்பட்டு இருக்கிறது. பக்தர்களை அதன் அருகில் உட்காரவைத்து பூஜை செய்கிறார்கள். இந்த லிங்கங்கள் மேல் நீர் கொட்டிக்கொண்டே இருப்பது விசேஷமானதாகும். அடுத்ததாக கழுத்தில் பாம்பை சுற்றிய படி ஜடா முடியுடன் சிவபெருமான் காட்சி தரு கிறார். சிவன், பார்வதியுடன் சொக்கட்டான் ஆடும் காட்சி காண்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது.
குகையின் ஒரு பகுதியில் கலி யுகத்தை குறிக்கும் சிவலிங்கம் உள்ளது. இது நாள் தோறும் வளர்கிறதாம். இதன் மேல் இருக்கும் கூம்பு, எப்பொழுது மலையை தொடுகிறதோ அப்பொழுது கலி யுகம் முடியும் என்பது நம்பிக்கை. மேலே அன்னாந்து பார்த்தால் ஆயிரம் கால்களுடன் ஐராவதம். இவ்வளவு அதிசயங்கள் எல்லாம் இயற்கையாகவே அமையப்பெற்றவை என்பதுதான், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விஷயம்.
இந்த ஆலயத்தில் உள்ள புவனேஷ்வரரை மனமுருக வேண்டிக்கொண்டால், நீடித்த ஆயுள், குறையாத செல்வம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தக் குகை கோவில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் பாதுகாக்கப்படுகிறது. இந்த ஆலயம் ஒவ்வொருவருக்கும், ஏதோ தேவலோகத்திற்கே வந்து விட்டது போன்ற உணர்வை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
மூதாதையர் ஆசிபெற உதவும் நந்தி வழிபாடு
பாதாள புவனேஷ்வர் கோவிலில், சனிப் பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆகும். அன்றைய தினம் நந்தி வழிபாட்டில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தால், மரணமடைந்த மூதாதையர்களுக்கு சிவபெருமான் சாந்தி அளிப்பதாக கூறப்படுகிறது. அப்படி அவர்களுக்கு சாந்தி கிடைத்தால், அவர்கள் மகிழ்ச்சியில் தங்களின் சந்ததியினரை ஆசீர்வதிக்கின்றனர் என்பது ஐதீகம்.
அமைவிடம்
பாதாள புவனேஷ்வர் கோவில், டெல்லியில் இருந்து 506 கிலோமீட்டர் தூரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பாதாள புவனேஷ்வருக்கு அருகிலுள்ள ரெயில் நிலையம் 154 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனக்பூர் ஆகும். பாதாள புவனேஷ்வர் கோவில், பித்தோராகர் மாவட்டம் கங்கோலிஹாட்டில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பாதாள புவனேஷ்வருக்கு அருகிலுள்ள விமான நிலையம், சுமார் 226 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பந்த்நகர் விமான நிலையம் ஆகும்.
மருத்துவர் நா.மோகன்தாஸ்
பாடல் பெற்ற ஸ்தலங்களில் திருகன்றாப்பூர் (கோவில் கண்ணாப்பூர்) நடுத்தறியப்பர் கோவிலும் ஒன்று. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் சோழ மன்னர்கள் ஆட்சி செய்த இடங்களில் ஏராளமான கோவில்கள் கட்டினர். சங்க இலக்கியங்களைப் படைத்த பல்வேறு தமிழ் அறிஞர்கள் பல கோவில்களைப் பற்றிப் பாடல்களையும் பாடியுள்ளனர். அவ்வாறு பாடல் பெற்ற ஸ்தலங்களில் திருகன்றாப்பூர் (கோவில் கண்ணாப்பூர்) நடுத்தறியப்பர் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் இருந்து 8 கிலோ மீட்டர் சுற்றளவில் தேவார பதிகம் பாடப் பெற்ற பத்து கோவில்கள் அமைந்துள்ளன.
திருகன்றாப்பூர் கோவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. சிறிய அளவில் மூன்று ராஜ கோபுரங்களைப் பார்க்க முடிகிறது. கோவிலில் கொடிமரம் இல்லை. பலிபீடம், நந்தி சற்று உயந்த பீடத்தில் காணப்படுகிறார். கோவிலின் உள் பிரகாரத்தைச் சுற்றி வரும் போது ஆறு வகையான விநாயகர், முருகன், பிடாரியம்மன், துர்க்கை, சந்திரன், லிங்கோத்பவர், சூரியன், நவக்கிரகங்கள், சனீஸ்வரன் சன்னிதிகள் உள்ளன. சனி பகவானுக்கு அருகில் திருஞானசம்பந்தரையும், அப்பரையும் காணலாம்.
பிரகாரத்தை சுற்றி வந்த பிறகு, வலதுபுறம் வள்ளிநாயகி என்ற மாதுமை நாயகி அம்பாள் நின்ற நிலையில் காட்சி தரும் சன்னிதி உள்ளது. அதற்கு நேராக மூலவர் நடுதறிநாதர் என்றழைக்கப்படும் நடுதறியப்பர் தரிசனம் தருகிறார். கோவிலின் மகாமண்டபத்தில், பத்து பதிகமும் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு
தன்னுடைய கோபத்திற்கு ஆளான சுதாவல்லி எனும் வித்யாதரப் பெண்ணை, மண்ணுலகத்தில் பிறந்து சிவனைப் பூஜித்து எம்மை அடைவாய் என்று சபித்தார், உமாதேவி. அதன்படி அந்தப் பெண், சோழநாட்டில் தேவூருகுத் தெற்கே அமைந்துள்ள இத்திருத்தலத்தில், சைவ வேளாளர் மரபில் கமலவல்லி என்றத் திருப்பெயருடன் பிறந்து வளர்ந்து வந்தாள். சைவ நெறியில் வளர்ந்து சிவபெருமானையே நினைத்து, பூஜை செய்து வந்தாள்.
திருமண வயது வந்தவுடன் அவளுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்குப் பிறகும், சிவபெருமானிடம் பேரன்பு கொண்டதால், உரிய பூஜைகள் செய்து வாழ்ந்து வந்தாள். ஆனால் கணவரும், மாமியாரும் சிவனை வழிபடுவதை விரும்பவில்லை. எனவே அவர்கள் இருவருக்கும் தெரியாதவறு சிவலிங்க வழிபாடு செய்து வந்தாள்.
ஒருநாள் சிவலிங்க வழிபாட்டைக் கண்ட கணவன், அந்த சிவலிங்கத்தை கிணற்றில் எறிந்து விட்டான். கணவனின் செயலைக் கண்டு வருந்திய கமலவல்லி, வீட்டின் பின்புறம் கன்றுக் குட்டிகள் கட்டப்பட்டு இருந்த, ஒரு தறியையே (ஆப்பு) சிவபெருமானாக பாவனை செய்து வழிபட்டு வந்தாள். அதையும் கண்டுபிடித்த அவளது கணவன், கடுமையாகக் கோபம் கொண்டு அத்தறியைக் கோடரியால் வெட்டினான். இரண்டாக பிளவுபட்ட தறியில் இருந்து ரத்தம் வழிந்தது.
கமலவல்லியின் ஆத்மார்த்த பக்தியை உலகில் உள்ளவர்களும், அவளது கணவனும் அறிய வேண்டுமென்பதற்காக அக்கட்டுத் தறியில் லிங்க வடிவத்தில் இறைவன் காட்சி தந்தார். கமலவல்லியும், அவளது கணவனும் சிவலோகம் அடைந்தனர். சிவபெருமான் தறி என்ற ஆப்பிலிருந்து வெளிப்பட்டு சைவப் பெண்ணிற்கு அருள்புரிந்த இடம் என்பதாலும், கன்று கட்டும் தறி லிங்கமாக மாறியதாலும் இத்தலம் திருக்கன்றாப்பூர் (கன்று+ஆப்பு+ஊர்) என்றழைக்கப்படுகிறது.
அந்த கன்றுக் குட்டியின் நடுதறி இருந்த இடமே, இன்று நடுதறிநாதர் கோவிலாக விளங்குகின்றது. இன்றும் மூலவரது உச்சியில் கோடரி வெட்டு உள்ளதைக் காணலாம். இடும்பன் என்னும் அசுரன் இத்தலத்தில் நடுதறிநாதரை வழிபட்டு அருள்பெற்றான்.
இக்கோவிலின் வழியே நடந்துசென்றால், இக்கோவிலில் தங்கி வாழ்ந்த புண்ணியத்தைப் பெறலாம். இக்கோவிலில் தங்கி உதவி செய்தால், நல்ல மனைவி - நல்ல மகள் கிடைக்கப் பெற்று, எல்லா வளங்களையும் செல்வங்களையும் பெறுவர். ‘கன்றாப்பூர்’ என்று ஒருமுறை சொன்னாலேயே பாவம் கெடும். நோய் நீங்கும். நல்வாழ்வு கிட்டும். இத் தலத்தில் வாழ்வோர் இம்மையில் சிவயோகத்தில் அமர்ந்து மறுமையில் சிவபோகம் துய்ப்பர்.
கண் சம்பந்தப்பட்ட நோய் இருப்பவர்கள், இந்தக் கோவிலுக்கு அருகில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் குளித்தால் கண் நோயில் இருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது.
இந்த ஆலயத்தின் தல விருட்சமாக பனை மரம் (கல்பனை) உள்ளது. இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
ரா.சுந்தர்ராமன்
திருகன்றாப்பூர் கோவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. சிறிய அளவில் மூன்று ராஜ கோபுரங்களைப் பார்க்க முடிகிறது. கோவிலில் கொடிமரம் இல்லை. பலிபீடம், நந்தி சற்று உயந்த பீடத்தில் காணப்படுகிறார். கோவிலின் உள் பிரகாரத்தைச் சுற்றி வரும் போது ஆறு வகையான விநாயகர், முருகன், பிடாரியம்மன், துர்க்கை, சந்திரன், லிங்கோத்பவர், சூரியன், நவக்கிரகங்கள், சனீஸ்வரன் சன்னிதிகள் உள்ளன. சனி பகவானுக்கு அருகில் திருஞானசம்பந்தரையும், அப்பரையும் காணலாம்.
பிரகாரத்தை சுற்றி வந்த பிறகு, வலதுபுறம் வள்ளிநாயகி என்ற மாதுமை நாயகி அம்பாள் நின்ற நிலையில் காட்சி தரும் சன்னிதி உள்ளது. அதற்கு நேராக மூலவர் நடுதறிநாதர் என்றழைக்கப்படும் நடுதறியப்பர் தரிசனம் தருகிறார். கோவிலின் மகாமண்டபத்தில், பத்து பதிகமும் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு
தன்னுடைய கோபத்திற்கு ஆளான சுதாவல்லி எனும் வித்யாதரப் பெண்ணை, மண்ணுலகத்தில் பிறந்து சிவனைப் பூஜித்து எம்மை அடைவாய் என்று சபித்தார், உமாதேவி. அதன்படி அந்தப் பெண், சோழநாட்டில் தேவூருகுத் தெற்கே அமைந்துள்ள இத்திருத்தலத்தில், சைவ வேளாளர் மரபில் கமலவல்லி என்றத் திருப்பெயருடன் பிறந்து வளர்ந்து வந்தாள். சைவ நெறியில் வளர்ந்து சிவபெருமானையே நினைத்து, பூஜை செய்து வந்தாள்.
திருமண வயது வந்தவுடன் அவளுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்குப் பிறகும், சிவபெருமானிடம் பேரன்பு கொண்டதால், உரிய பூஜைகள் செய்து வாழ்ந்து வந்தாள். ஆனால் கணவரும், மாமியாரும் சிவனை வழிபடுவதை விரும்பவில்லை. எனவே அவர்கள் இருவருக்கும் தெரியாதவறு சிவலிங்க வழிபாடு செய்து வந்தாள்.
ஒருநாள் சிவலிங்க வழிபாட்டைக் கண்ட கணவன், அந்த சிவலிங்கத்தை கிணற்றில் எறிந்து விட்டான். கணவனின் செயலைக் கண்டு வருந்திய கமலவல்லி, வீட்டின் பின்புறம் கன்றுக் குட்டிகள் கட்டப்பட்டு இருந்த, ஒரு தறியையே (ஆப்பு) சிவபெருமானாக பாவனை செய்து வழிபட்டு வந்தாள். அதையும் கண்டுபிடித்த அவளது கணவன், கடுமையாகக் கோபம் கொண்டு அத்தறியைக் கோடரியால் வெட்டினான். இரண்டாக பிளவுபட்ட தறியில் இருந்து ரத்தம் வழிந்தது.
கமலவல்லியின் ஆத்மார்த்த பக்தியை உலகில் உள்ளவர்களும், அவளது கணவனும் அறிய வேண்டுமென்பதற்காக அக்கட்டுத் தறியில் லிங்க வடிவத்தில் இறைவன் காட்சி தந்தார். கமலவல்லியும், அவளது கணவனும் சிவலோகம் அடைந்தனர். சிவபெருமான் தறி என்ற ஆப்பிலிருந்து வெளிப்பட்டு சைவப் பெண்ணிற்கு அருள்புரிந்த இடம் என்பதாலும், கன்று கட்டும் தறி லிங்கமாக மாறியதாலும் இத்தலம் திருக்கன்றாப்பூர் (கன்று+ஆப்பு+ஊர்) என்றழைக்கப்படுகிறது.
அந்த கன்றுக் குட்டியின் நடுதறி இருந்த இடமே, இன்று நடுதறிநாதர் கோவிலாக விளங்குகின்றது. இன்றும் மூலவரது உச்சியில் கோடரி வெட்டு உள்ளதைக் காணலாம். இடும்பன் என்னும் அசுரன் இத்தலத்தில் நடுதறிநாதரை வழிபட்டு அருள்பெற்றான்.
இக்கோவிலின் வழியே நடந்துசென்றால், இக்கோவிலில் தங்கி வாழ்ந்த புண்ணியத்தைப் பெறலாம். இக்கோவிலில் தங்கி உதவி செய்தால், நல்ல மனைவி - நல்ல மகள் கிடைக்கப் பெற்று, எல்லா வளங்களையும் செல்வங்களையும் பெறுவர். ‘கன்றாப்பூர்’ என்று ஒருமுறை சொன்னாலேயே பாவம் கெடும். நோய் நீங்கும். நல்வாழ்வு கிட்டும். இத் தலத்தில் வாழ்வோர் இம்மையில் சிவயோகத்தில் அமர்ந்து மறுமையில் சிவபோகம் துய்ப்பர்.
கண் சம்பந்தப்பட்ட நோய் இருப்பவர்கள், இந்தக் கோவிலுக்கு அருகில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் குளித்தால் கண் நோயில் இருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது.
இந்த ஆலயத்தின் தல விருட்சமாக பனை மரம் (கல்பனை) உள்ளது. இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
ரா.சுந்தர்ராமன்






