என் மலர்
கோவில்கள்
மனிதனுக்கு ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு காரணமாக இருப்பது கிரகங்களின் சுழற்சிதான். இந்த கிரகங்களுக்கான தனிக்கோவில்கள் தமிழகத்தில் 8 உள்ளன. இந்த கோவில்களை பற்றி பார்க்கலாம்.
மனிதனுக்கு ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு காரணமாக இருப்பது கிரகங்களின் சுழற்சிதான். இந்த கிரகங்களுக்கான தனிக்கோவில்கள் தமிழகத்தில் 8 உள்ளன. அவற்றில் சூரியன், சந்திரன், சுக்கிரன்,ராகு ஆகிய கிரகங்களுக்கான கோவில்கள் தஞ்சை மாவட்டத்திலும், செவ்வாய், கேது,புதன், கோவில்கள் நாகை மாவட்டத்திலும், குருபகவான் கோவில் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியிலும், சனி பகவான் ஆலயம் புதுவை மாநிலம் திருநள்ளாறிலும் உள்ளன.
சூரியனார் கோவில்(ஞாயிறு);- தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம்- ஆடுதுறை சாலையில் ஆடுதுறையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சூரியனார் கோவில். இங்கு மூல மூர்த்தியாக உள்ள சூரிய பகவானுடன் உஷா தேவியும், சாயா தேவியும் உள்ளனர். இந்த கோவிலை முதற் குலோத்துங்க சோழன் கட்டியதாக வரலாறு கூறுகிறது. இங்கு சூரிய பகவானுடன் 8 கிரகங்களும் தனித்தனி கோவில்களாக அவர்களுக்கு உரிய திசைகளில் சூழ்ந்து அமைந்துள்ளன. ஏழரைச்சனி, அஷ்டமத்துச் சனி, ஜென்மச்சனி உள்ளவர்கள் வேறு நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் சூரியனார் கோவிலுக்கு வந்து 12 ஞாயிற்றுக்கிழமைகள் வரை தலவாசம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்குவது உறுதி.
திங்களூர் சந்திரன் கோவில்(திங்கள்);-தஞ்சை மாவட்டம், திருவையாறுக்கு அருகே திங்களூரில் சந்திரன் கோவில் உள்ளது. சுற்றி வர வயல்வெளிகள் இருக்க நடுவில் ஒய்யாரமாக அமைந்துள்ளது. இங்குபெரியநாயகி சமேத கைலாசநாதர் மூலவராக அமைந்துள்ளார். திங்கட்கிழமை சந்திரனுக்கு உகந்த நாள் ஆகும். தொழுநோய் மற்றும் சித்த பிரம்மையால் அவதிப்படுபவர்கள் சந்திரனை வணங்கினால் அவை நீங்கும்.
வைத்தீசுவரன் கோவில் அங்காரகன்(செவ்வாய்);-
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வைத்தீசுவரன் கோவில். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு அதிபதியான அங்காரகன் என்னும் செவ்வாய் பகவான் இங்கு வீற்றிருக்கிறார். பிறந்தாலும், இறந்தாலும் போக மோட்சங்கள் கொடுக்கும் பெருமை உடையது இத்தலம். இங்கு வைத்தியநாதசாமியும், தையல் நாயகி அம்மனும் வீற்று இருக்கின்றனர். இந்த ஆலயம் வந்து இங்கு தரப்படும் திருச்சாந்து உருண்டையை சாப்பிடுபவர்களுக்கு அனைத்து நோய்களும் நீங்கும்.
திருவெண்காடு புதன் பகவான்(புதன்);- மிதுனம், மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன் பகவான், நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா, பூம்புகார் சாலையில் உள்ள திருவெண்காட்டில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சுவேதாரண்யேஸ்வரரை இறைவனாகவும், பிரம்ம வித்தியாம்பிகையை இறைவியாகவும் கொண்ட இக்கோவில், காசிக்கு சமமானதாக கருதப்படும் 6 தலங்களுள் ஒன்றாகும்.
ஆலங்குடி குருபரிகார தலம்(வியாழன்);-குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்று கூறுவார்கள். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குருபகவான் ஆலங்குடியில் வீற்றிருக்கிறார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே குடந்தை-மன்னார்குடி சாலையில் அமைந்துள்ளது குருபரிகார தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்.ஏழவார் குழலி அம்மையுடன் இறைவன் வீற்றிருக்கிறார். தட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதோடு மஞ்சள் உடை , புஷ்பராகம், அணிந்து மஞ்சள் நிற வஸ்திர தானம் செய்து, கொண்டக்கடலை தானம் செய்ய வேண்டும்.இதனால் மன மகிழ்ச்சி, புத்திரப்பேறு, செல்வம் முதலியவற்றை பெறலாம்.
கஞ்சனூர் சுக்கிரன் தலம்(வெள்ளி);- செல்வச் செழிப்புடன் வாழ பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சுக்கிர பகவான் ஆலயம் தஞ்சை மாவட்டம், கும்ப கோணத்தில் இருந்து கல்லணை-பூம்புகார் சாலையில் 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வெள்ளி நிறம் கொண்ட சுக்கிர பகவான் தனித்தன்மைகளோடு திகழ்கிறார். அதன்படி தன்னை வழிபடும் பக்தர்களுக்கு நல்ல மதிப்பையும், அதிர்ஷ்டத்தையும் கொடுப்பார்.
திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம்(சனி பகவான்);-புதுவை மாநிலம் திருநள்ளாறில் அமைந்துள்ளது சனீஸ்வரர் ஆலயம். காரைக்காலில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தக்கோவிலில் மூலவராக நள்ளாற்றீசுவரர்(தர்ப்பாரண்யேசுவரர்) லிங்க வடிவில் வீற்றிருக்கிறார்.கோவிலின் பலிபீடம் சற்று விலகி இருப்பது இங்கு மட்டும்தான் என்பது தனிச் சிறப்பு.
இங்கு அனுக்கிரக மூர்த்தியாக வீற்றிருக்கும் சனீஸ்வரபகவான் பாரபட்சமின்றி அனைவரையும் ஆட்டிப்படைக்கும் ஆற்றல் வாய்ந்தவர்.
திருநாகேசுவரம் ராகு பகவான்;-தஞ்சை மாவட்டம் திருநாகேசுவரத்தில் ராகு பகவான் கோவில் கொண்டுள்ளார். கிரிகுஜாம்பிகை சமேத நாகநாதர் கோவில் வெளிப்பிரகாரத்தில் தனது இரு தேவியருடன் வீற்றிருக்கிறார்.இங்கு ராகுபகவான் மீது பால் அபிஷேகம் செய்யப்படும் போது அவருடைய உடற் பாகம் நீல நிறமாக மாறுகிறது. இந்த கோவிலுக்கு வந்து நாக நாதரை வழிபடுவது பூர்வ புண்ணிய பிராப்தம் இருந்தால் தான் முடியும். என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஞாயிற்றுகிழமைகளில் ராகுகாலத்தில் ராகுபகவானை வழிபடவேண்டும். நாகராஜனுக்கும், துர்க்கைக்கும், அர்ச்சனை செய்வதால் ராகு கிரக தோஷங்களை நீக்கலாம்.
கீழப்பெரும்பள்ளம் கேது பகவான்;- நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் கீழப்பெரும்பள்ளத்தில் அமைந்துள்ளது கேது பகவான் ஆலயம்.தரும குளம் என்ற இடத்தில் இறங்கி கீழப்பெரும்பள்ளம் நோக்கி செல்ல வேண்டும். கோவிலின் வடக்கு பிரகாரத்தில் மேற்கு நோக்கி கேது பகவான் அருள்பாலிக்கிறார்.
சூரியனார் கோவில்(ஞாயிறு);- தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம்- ஆடுதுறை சாலையில் ஆடுதுறையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சூரியனார் கோவில். இங்கு மூல மூர்த்தியாக உள்ள சூரிய பகவானுடன் உஷா தேவியும், சாயா தேவியும் உள்ளனர். இந்த கோவிலை முதற் குலோத்துங்க சோழன் கட்டியதாக வரலாறு கூறுகிறது. இங்கு சூரிய பகவானுடன் 8 கிரகங்களும் தனித்தனி கோவில்களாக அவர்களுக்கு உரிய திசைகளில் சூழ்ந்து அமைந்துள்ளன. ஏழரைச்சனி, அஷ்டமத்துச் சனி, ஜென்மச்சனி உள்ளவர்கள் வேறு நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் சூரியனார் கோவிலுக்கு வந்து 12 ஞாயிற்றுக்கிழமைகள் வரை தலவாசம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்குவது உறுதி.
திங்களூர் சந்திரன் கோவில்(திங்கள்);-தஞ்சை மாவட்டம், திருவையாறுக்கு அருகே திங்களூரில் சந்திரன் கோவில் உள்ளது. சுற்றி வர வயல்வெளிகள் இருக்க நடுவில் ஒய்யாரமாக அமைந்துள்ளது. இங்குபெரியநாயகி சமேத கைலாசநாதர் மூலவராக அமைந்துள்ளார். திங்கட்கிழமை சந்திரனுக்கு உகந்த நாள் ஆகும். தொழுநோய் மற்றும் சித்த பிரம்மையால் அவதிப்படுபவர்கள் சந்திரனை வணங்கினால் அவை நீங்கும்.
வைத்தீசுவரன் கோவில் அங்காரகன்(செவ்வாய்);-
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வைத்தீசுவரன் கோவில். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு அதிபதியான அங்காரகன் என்னும் செவ்வாய் பகவான் இங்கு வீற்றிருக்கிறார். பிறந்தாலும், இறந்தாலும் போக மோட்சங்கள் கொடுக்கும் பெருமை உடையது இத்தலம். இங்கு வைத்தியநாதசாமியும், தையல் நாயகி அம்மனும் வீற்று இருக்கின்றனர். இந்த ஆலயம் வந்து இங்கு தரப்படும் திருச்சாந்து உருண்டையை சாப்பிடுபவர்களுக்கு அனைத்து நோய்களும் நீங்கும்.
திருவெண்காடு புதன் பகவான்(புதன்);- மிதுனம், மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன் பகவான், நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா, பூம்புகார் சாலையில் உள்ள திருவெண்காட்டில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சுவேதாரண்யேஸ்வரரை இறைவனாகவும், பிரம்ம வித்தியாம்பிகையை இறைவியாகவும் கொண்ட இக்கோவில், காசிக்கு சமமானதாக கருதப்படும் 6 தலங்களுள் ஒன்றாகும்.
ஆலங்குடி குருபரிகார தலம்(வியாழன்);-குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்று கூறுவார்கள். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குருபகவான் ஆலங்குடியில் வீற்றிருக்கிறார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே குடந்தை-மன்னார்குடி சாலையில் அமைந்துள்ளது குருபரிகார தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்.ஏழவார் குழலி அம்மையுடன் இறைவன் வீற்றிருக்கிறார். தட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதோடு மஞ்சள் உடை , புஷ்பராகம், அணிந்து மஞ்சள் நிற வஸ்திர தானம் செய்து, கொண்டக்கடலை தானம் செய்ய வேண்டும்.இதனால் மன மகிழ்ச்சி, புத்திரப்பேறு, செல்வம் முதலியவற்றை பெறலாம்.
கஞ்சனூர் சுக்கிரன் தலம்(வெள்ளி);- செல்வச் செழிப்புடன் வாழ பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சுக்கிர பகவான் ஆலயம் தஞ்சை மாவட்டம், கும்ப கோணத்தில் இருந்து கல்லணை-பூம்புகார் சாலையில் 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வெள்ளி நிறம் கொண்ட சுக்கிர பகவான் தனித்தன்மைகளோடு திகழ்கிறார். அதன்படி தன்னை வழிபடும் பக்தர்களுக்கு நல்ல மதிப்பையும், அதிர்ஷ்டத்தையும் கொடுப்பார்.
திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம்(சனி பகவான்);-புதுவை மாநிலம் திருநள்ளாறில் அமைந்துள்ளது சனீஸ்வரர் ஆலயம். காரைக்காலில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தக்கோவிலில் மூலவராக நள்ளாற்றீசுவரர்(தர்ப்பாரண்யேசுவரர்) லிங்க வடிவில் வீற்றிருக்கிறார்.கோவிலின் பலிபீடம் சற்று விலகி இருப்பது இங்கு மட்டும்தான் என்பது தனிச் சிறப்பு.
இங்கு அனுக்கிரக மூர்த்தியாக வீற்றிருக்கும் சனீஸ்வரபகவான் பாரபட்சமின்றி அனைவரையும் ஆட்டிப்படைக்கும் ஆற்றல் வாய்ந்தவர்.
திருநாகேசுவரம் ராகு பகவான்;-தஞ்சை மாவட்டம் திருநாகேசுவரத்தில் ராகு பகவான் கோவில் கொண்டுள்ளார். கிரிகுஜாம்பிகை சமேத நாகநாதர் கோவில் வெளிப்பிரகாரத்தில் தனது இரு தேவியருடன் வீற்றிருக்கிறார்.இங்கு ராகுபகவான் மீது பால் அபிஷேகம் செய்யப்படும் போது அவருடைய உடற் பாகம் நீல நிறமாக மாறுகிறது. இந்த கோவிலுக்கு வந்து நாக நாதரை வழிபடுவது பூர்வ புண்ணிய பிராப்தம் இருந்தால் தான் முடியும். என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஞாயிற்றுகிழமைகளில் ராகுகாலத்தில் ராகுபகவானை வழிபடவேண்டும். நாகராஜனுக்கும், துர்க்கைக்கும், அர்ச்சனை செய்வதால் ராகு கிரக தோஷங்களை நீக்கலாம்.
கீழப்பெரும்பள்ளம் கேது பகவான்;- நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் கீழப்பெரும்பள்ளத்தில் அமைந்துள்ளது கேது பகவான் ஆலயம்.தரும குளம் என்ற இடத்தில் இறங்கி கீழப்பெரும்பள்ளம் நோக்கி செல்ல வேண்டும். கோவிலின் வடக்கு பிரகாரத்தில் மேற்கு நோக்கி கேது பகவான் அருள்பாலிக்கிறார்.
சோழவள நாட்டில் அமைந்த சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்று, வைத்தீஸ்வரன் கோவில். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர், ‘வைத்தியநாதர்.’ அம்பாள் பெயர் ‘தையல்நாயகி’ என்பதாகும்.
சோழவள நாட்டில் அமைந்த சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்று, வைத்தீஸ்வரன் கோவில். பழங்காலத்தில் இந்த தலம் ‘புள்ளிருக்கு வேளூர்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. ‘புள்’ என்பது ஜடாயு என்ற பறவையையும், ‘இருக்கு’ என்பது ரிக் வேதத்தையும், ‘வேள்’ என்பது முருகனையும், ‘ஊர்’ என்பது சூரியனையும் குறிக்கும். இந்த நால்வரும் வழிபட்ட தலம் என்பதால் இது ‘புள்ளிருக்கு வேளூர்’ என்றானது. காவிரியின் வடகரை தலங்களில் அமைந்த 16-வது தலம் இது. நவக்கிரகங்களில் செவ்வாய் என்று அழைக்கப்படும் அங்காரகன் வழிபட்ட தலம் என்பதால் ‘அங்காரகபுரம்’ என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர், ‘வைத்தியநாதர்.’ அம்பாள் பெயர் ‘தையல்நாயகி’ என்பதாகும். வைத்தியநாதப் பெருமாள், சுமார் 4,500 நோய்களையும், அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்லவராக இங்கு எழுந்தருளியுள்ளார். அம்பாளும், இறைவனுக்கு உதவியாக தனது கையில் தைல பாத்திரம், அமிர்த சஞ்சீவி, வில்வ மரத்தடி மண் ஏந்தி இருக்கிறார். இப்படி அம்பாளும், சுவாமியும் தீவினை தீர்க்கும் சக்தி படைத்தவர்களாக அருள்பாலிக்கிறார்கள்.
சூரபத்மனை வெல்வதற்காக, இத்தல அம்பிகையை முருகப்பெருமான் வழிபாடு செய்தாராம். இங்கு முருகப்பெருமான் ‘செல்வமுத்துக்குமரன்’ என்னும் திருப்பெயரோடு விளங்குகிறார். ‘கோளிலித் தலம்’ என்று அழைக்கப்படும் வைத்தீஸ்வரன் ஆலயத்தில், நவக்கிரகங்கள் வரிசையாக, மூலவரின் சன்னிதிக்கு பின்புறம் அமைந்திருக்கின்றன. இங்கு அங்காரகனுக்கு தனிச் சன்னிதி உண்டு. மூல விக்கிரகத்தோடு, உற்சவர் விக்கிரகமும் காணப்படுகின்றன. அங்காரகனுக்கு ஏற்பட்ட செங்குஷ்ட நோயை, இத்தல இறைவன் தீர்த்து அருளினார். எனவே இந்த ஆலயம் அங்காரகத் தலமாக விளங்குகிறது. அங்காரக (செவ்வாய்) தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து வழிபாடு செய்தால், அந்த தோஷங்கள் நீங்கும்.
ஆலய அமைப்பு
நான்கு கோபுரங்களுடனும் உயர்ந்த மதில்களோடும் கூடிய கோவிலாக, வைத்தீஸ்வரன் கோவில் திகழ்கிறது. இங்கு இறைவன், மேற்கு நோக்கிய சன்னிதியிலும், இறைவி தெற்கு நோக்கிய சன்னிதியிலும் வீற்றிருக்கிறார்கள். இறைவனின் சன்னிதிக்கு பின்புறம் உள்ள நக்கிரகங்களுக்கு அடுத்ததாக 63 நாயன்மார்கள், சப்த கன்னியர்கள் உள்ளனர். மேலும் மருத்துவ கடவுள் என்று அழைக்கப்படும் தன்வந்திரி பகவான், இங்கு விஷ்ணு பகவானின் உருவத்தில் அமர்ந்திருக்கும் காட்சி அரிதிலும் அரியது. இங்குள்ள துர்க்கை மற்றும் சகஸ்ர லிங்கமும் விசேஷமானவை.
இந்தக் கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கு நடைபெறும் விழாக்களில் பங்குனி உற்சவம் சிறப்பு வாய்ந்தது. அதே போல் கார்த்திகை திருவிழாவும் விமரிசையாக நடைபெறும். இது அங்காரக தலமாக விளங்குவதால், செவ்வாய்க்கிழமைகளில், கோவில் பிரகாரத்தில் அங்காரகன் வலம் வருவார். கார்த்திகை மாத சோம வாரங்களில், வைத்தியநாதப் பெருமானுக்கு சங்காபிஷேகம் சிறப்பான முறையில் செய்யப்படும்.
அமைவிடம்
புதியதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது, வைத்தீஸ்வரன் கோவில். கும்பகோணம்- சீர்காழி நெடுஞ்சாலையில் உள்ளது மயிலாடுதுறை. இங்கிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திலும், சீர்காழியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது.
திருச்சாந்து உருண்டை
வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள விபூதி குண்டத்தில் (ஜடாயு குண்டம்) இருந்து விபூதியையும், சித்தாமிர்த தீர்த்தத்தின் நீரையும் சேர்த்துக் குழைப்பார்கள். அதனை ஐந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’ என்ற வார்த்தையை உச்சரித்தபடியே, செல்வமுத்துக்குமரனின் சன்னிதியில் இருக்கும் குழி அம்மியில் அரைத்து, சிறுசிறு உருண்டைகளாக பிடிப்பார்கள். பின்னர் அதனை அம்பாள் திருவடியில் வைத்து அர்ச்சிப்பார்கள். அதன்பிறகு, இத்தல இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, இறைவனின் பிரசாதமாக வழங்கப்படும். இதனை ‘திருச்சாந்து உருண்டை’ என்பார்கள். இதனை உண்பவர்களுக்கு, எப்பேர்ப்பட்ட வியாதியாக இருந்தாலும் விரைவாக நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தவளை வசிக்காத குளம்
வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள ‘சித்தாமிர்த தீர்த்தம்’ சிறப்புக்குரியது. நான்கு புறங்களிலும் மண்டபத்தோடும், படிக்கட்டுகளோடும் நடுவில் நீராழி மண்டபத்தோடும் இந்த தீர்த்தக்குளம் அமைந்திருக்கிறது. கிருத யுகத்தில், காமதேனு பசு, தன்னுடைய பால் கொண்டு இறைவனுக்கு திருமஞ்சனம் செய்ததாம். அந்த பாலே பெருகி ஓடி, தீர்த்தமாக மாறியதாக நம்பப்படுகிறது. இதனை ‘கோட்சர தீர்த்தம்’ என்றும் அழைப்பார்கள்.
இந்த ஆலயத்தில் ஒரு முறை, சதானந்த முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது பாம்பால் துரத்திவரப்பட்ட தவளை ஒன்று, இந்த தீர்த்தக் குளத்தில் குதித்தது. அப்போது தெறித்த தண்ணீர், முனிவரின் முகத்தில் பட்டு அவரது தவம் கலைந்தது. இதையடுத்து இந்தக் குளத்தில் பாம்பும், தவளையும் வசிக்கக் கூடாது என்று சபித்தார். இதன் காரணமாக இன்றளவும் இக்குளத்தில் தவளைகள் வசிப்பதில்லை என்கிறார்கள். இந்த தீர்த்தத்தில் நீராடினால், சகல நோய்களும் தீரும். நோய் தீர்வதற்காக, குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும், பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் முக்கியமான பிரார்த்தனையாக இருக்கிறது.
சித்தாமிர்த தீர்த்தம் தவிர, கோதண்ட தீர்த்தம், கவுதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், அங்கசந்தனத் தீர்த்தம், முனிவர் தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்களும் இங்கு உள்ளன.
சடாயு குண்டம்
ராவணன், சீதையை சிறைபிடித்துச் சென்றான். அப்போது அதைப் பார்த்த ஜடாயு பறவை, ராவணனோடு சண்டையிட்டது. இதில் ஜடாயுவின் சிறகை வெட்டி வீழ்த்தினான், ராவணன். ராமனும், லட்சுமணனும் சீதையை தேடி வந்த போது, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜடாயுவை பார்த்தனர். அந்தப் பறவை, ராவணன், சீதையை தூக்கிச் சென்றதையும், தான் அவனோடு போரிட்டதையும் சொல்லியபடியே உயிர்விட்டது. இதையடுத்து ராமபிரான், ஜடாயுவின் உடலுக்கு தீமூட்டி இறுதிச் சடங்கு செய்தார். ஜடாயுவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடம், வைத்தீஸ்வரன் கோவிலில் ‘ஜடாயு குண்டம்’ என்ற பெயரில் உள்ளது. இன்றும் இக்குண்டத்தில் உள்ள சாம்பலை அணிந்தால் தீராத நோய்களும் தீரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஜடாயு குண்டத்திற்கு அருகில் ஜடாயு மோட்சத்தை சிலை வடிவில் காணலாம். ஜடாயு உற்சவ மூர்த்தியாகவும் இங்கு வீற்றிருக்கிறார்.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர், ‘வைத்தியநாதர்.’ அம்பாள் பெயர் ‘தையல்நாயகி’ என்பதாகும். வைத்தியநாதப் பெருமாள், சுமார் 4,500 நோய்களையும், அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்லவராக இங்கு எழுந்தருளியுள்ளார். அம்பாளும், இறைவனுக்கு உதவியாக தனது கையில் தைல பாத்திரம், அமிர்த சஞ்சீவி, வில்வ மரத்தடி மண் ஏந்தி இருக்கிறார். இப்படி அம்பாளும், சுவாமியும் தீவினை தீர்க்கும் சக்தி படைத்தவர்களாக அருள்பாலிக்கிறார்கள்.
சூரபத்மனை வெல்வதற்காக, இத்தல அம்பிகையை முருகப்பெருமான் வழிபாடு செய்தாராம். இங்கு முருகப்பெருமான் ‘செல்வமுத்துக்குமரன்’ என்னும் திருப்பெயரோடு விளங்குகிறார். ‘கோளிலித் தலம்’ என்று அழைக்கப்படும் வைத்தீஸ்வரன் ஆலயத்தில், நவக்கிரகங்கள் வரிசையாக, மூலவரின் சன்னிதிக்கு பின்புறம் அமைந்திருக்கின்றன. இங்கு அங்காரகனுக்கு தனிச் சன்னிதி உண்டு. மூல விக்கிரகத்தோடு, உற்சவர் விக்கிரகமும் காணப்படுகின்றன. அங்காரகனுக்கு ஏற்பட்ட செங்குஷ்ட நோயை, இத்தல இறைவன் தீர்த்து அருளினார். எனவே இந்த ஆலயம் அங்காரகத் தலமாக விளங்குகிறது. அங்காரக (செவ்வாய்) தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து வழிபாடு செய்தால், அந்த தோஷங்கள் நீங்கும்.
ஆலய அமைப்பு
நான்கு கோபுரங்களுடனும் உயர்ந்த மதில்களோடும் கூடிய கோவிலாக, வைத்தீஸ்வரன் கோவில் திகழ்கிறது. இங்கு இறைவன், மேற்கு நோக்கிய சன்னிதியிலும், இறைவி தெற்கு நோக்கிய சன்னிதியிலும் வீற்றிருக்கிறார்கள். இறைவனின் சன்னிதிக்கு பின்புறம் உள்ள நக்கிரகங்களுக்கு அடுத்ததாக 63 நாயன்மார்கள், சப்த கன்னியர்கள் உள்ளனர். மேலும் மருத்துவ கடவுள் என்று அழைக்கப்படும் தன்வந்திரி பகவான், இங்கு விஷ்ணு பகவானின் உருவத்தில் அமர்ந்திருக்கும் காட்சி அரிதிலும் அரியது. இங்குள்ள துர்க்கை மற்றும் சகஸ்ர லிங்கமும் விசேஷமானவை.
இந்தக் கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கு நடைபெறும் விழாக்களில் பங்குனி உற்சவம் சிறப்பு வாய்ந்தது. அதே போல் கார்த்திகை திருவிழாவும் விமரிசையாக நடைபெறும். இது அங்காரக தலமாக விளங்குவதால், செவ்வாய்க்கிழமைகளில், கோவில் பிரகாரத்தில் அங்காரகன் வலம் வருவார். கார்த்திகை மாத சோம வாரங்களில், வைத்தியநாதப் பெருமானுக்கு சங்காபிஷேகம் சிறப்பான முறையில் செய்யப்படும்.
அமைவிடம்
புதியதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது, வைத்தீஸ்வரன் கோவில். கும்பகோணம்- சீர்காழி நெடுஞ்சாலையில் உள்ளது மயிலாடுதுறை. இங்கிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திலும், சீர்காழியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது.
திருச்சாந்து உருண்டை
வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள விபூதி குண்டத்தில் (ஜடாயு குண்டம்) இருந்து விபூதியையும், சித்தாமிர்த தீர்த்தத்தின் நீரையும் சேர்த்துக் குழைப்பார்கள். அதனை ஐந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’ என்ற வார்த்தையை உச்சரித்தபடியே, செல்வமுத்துக்குமரனின் சன்னிதியில் இருக்கும் குழி அம்மியில் அரைத்து, சிறுசிறு உருண்டைகளாக பிடிப்பார்கள். பின்னர் அதனை அம்பாள் திருவடியில் வைத்து அர்ச்சிப்பார்கள். அதன்பிறகு, இத்தல இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, இறைவனின் பிரசாதமாக வழங்கப்படும். இதனை ‘திருச்சாந்து உருண்டை’ என்பார்கள். இதனை உண்பவர்களுக்கு, எப்பேர்ப்பட்ட வியாதியாக இருந்தாலும் விரைவாக நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தவளை வசிக்காத குளம்
வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள ‘சித்தாமிர்த தீர்த்தம்’ சிறப்புக்குரியது. நான்கு புறங்களிலும் மண்டபத்தோடும், படிக்கட்டுகளோடும் நடுவில் நீராழி மண்டபத்தோடும் இந்த தீர்த்தக்குளம் அமைந்திருக்கிறது. கிருத யுகத்தில், காமதேனு பசு, தன்னுடைய பால் கொண்டு இறைவனுக்கு திருமஞ்சனம் செய்ததாம். அந்த பாலே பெருகி ஓடி, தீர்த்தமாக மாறியதாக நம்பப்படுகிறது. இதனை ‘கோட்சர தீர்த்தம்’ என்றும் அழைப்பார்கள்.
இந்த ஆலயத்தில் ஒரு முறை, சதானந்த முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது பாம்பால் துரத்திவரப்பட்ட தவளை ஒன்று, இந்த தீர்த்தக் குளத்தில் குதித்தது. அப்போது தெறித்த தண்ணீர், முனிவரின் முகத்தில் பட்டு அவரது தவம் கலைந்தது. இதையடுத்து இந்தக் குளத்தில் பாம்பும், தவளையும் வசிக்கக் கூடாது என்று சபித்தார். இதன் காரணமாக இன்றளவும் இக்குளத்தில் தவளைகள் வசிப்பதில்லை என்கிறார்கள். இந்த தீர்த்தத்தில் நீராடினால், சகல நோய்களும் தீரும். நோய் தீர்வதற்காக, குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும், பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் முக்கியமான பிரார்த்தனையாக இருக்கிறது.
சித்தாமிர்த தீர்த்தம் தவிர, கோதண்ட தீர்த்தம், கவுதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், அங்கசந்தனத் தீர்த்தம், முனிவர் தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்களும் இங்கு உள்ளன.
சடாயு குண்டம்
ராவணன், சீதையை சிறைபிடித்துச் சென்றான். அப்போது அதைப் பார்த்த ஜடாயு பறவை, ராவணனோடு சண்டையிட்டது. இதில் ஜடாயுவின் சிறகை வெட்டி வீழ்த்தினான், ராவணன். ராமனும், லட்சுமணனும் சீதையை தேடி வந்த போது, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜடாயுவை பார்த்தனர். அந்தப் பறவை, ராவணன், சீதையை தூக்கிச் சென்றதையும், தான் அவனோடு போரிட்டதையும் சொல்லியபடியே உயிர்விட்டது. இதையடுத்து ராமபிரான், ஜடாயுவின் உடலுக்கு தீமூட்டி இறுதிச் சடங்கு செய்தார். ஜடாயுவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடம், வைத்தீஸ்வரன் கோவிலில் ‘ஜடாயு குண்டம்’ என்ற பெயரில் உள்ளது. இன்றும் இக்குண்டத்தில் உள்ள சாம்பலை அணிந்தால் தீராத நோய்களும் தீரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஜடாயு குண்டத்திற்கு அருகில் ஜடாயு மோட்சத்தை சிலை வடிவில் காணலாம். ஜடாயு உற்சவ மூர்த்தியாகவும் இங்கு வீற்றிருக்கிறார்.
தமிழ்நாட்டிலுள்ள தமிழ்நாட்டிலுள்ள பஞ்சகிருஷ்ண தலங்களில் இத்தலமும் ஒன்று. தாயார் சன்னதியில் மூலவரும் உற்சவரும் ஒரே முக சாடையில் இருப்பது எங்கும் காணமுடியாத அதிசயம்.
இறைவன்: லோகநாத பெருமாள்
இறைவி: லோகநாயகி தாயார்
தீர்த்தம்: சிரவண புஷ்கரணி தீர்த்தம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
கோவிலின் சிறப்புகள்:
மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 18வது திருத்தலம். காயாமகிழ், உறங்காப்புளி, தேறா வழக்கு, உறா கிணறு திருக்கண்ணங்குடி என்பது பழமொழி. உறங்காப்புளியும் ஊறா கிணறும் இப்போது இல்லை. காய்ந்து பட்டு போகாத வரம் பெற்ற ஸ்தல விருக்ஷமான மகிழ மரம் கோவிலுக்கு பின்புறம் உள்ளது. தாயார் சன்னதியில் மூலவரும் உற்சவரும் ஒரே முக சாடையில் இருப்பது எங்கும் காணமுடியாத அதிசயம்.
கிருஷ்ண பக்தி நிறைந்த வசிஸ்டர் வெண்ணெய் மயமான கிருஷ்ணரை இளகாமல் விக்ரமாக வழிபட்டுவந்தார். பக்தியை மெய்ச்சிய கண்ணபிரான் குழந்தையாக கோபாலன் அவர் வழிபட்ட கிருஷ்ணனை உண்டுவி ட்டார். கிருஷ்ணனை வசிஸ்டர் விரட்ட மகிஷ மரத்தடியில் தவம் செய்து கொண்டு இருந்த ரிஷிகள் இருந்த பகுதிக்கு வந்தார் இதை ஞான திருஷ்டியால் உணர்ந்த ரிஷிகள் கண்ணனை பக்தியாகிய பாச கயிற்றால் கட்டிபோட்டனர்.
ரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். விரட்டி வந்த வசிஷ்டர் கண்ணனின் பாதத்தில்சரண் அடைந்தார். கண்ணன் கட்டுண்டு நின்றபடியால் கண்ணங்குடி ஆயிற்று. இங்கு திருநீரணி விழா நடைபெறுகிறது. இந்த விழாவின் போது பெருமாள் விபூதி அணிந்து மூன்றே முக்கால் நாழி மட்டும் காட்சி தருவார். பக்தகோடிகளும் விபூதி அணிந்து வருவார். சிவ வைஷ்ணவ ஒற்றுமை. உபரிசரவசு மன்னனுக்காக நடைபெறும் விழா இது.
பஞ்சகிருஷ்ண தலங்கள்:
தமிழ்நாட்டிலுள்ள தமிழ்நாட்டிலுள்ள பஞ்சகிருஷ்ண தலங்களில் இத்தலமும் ஒன்று. ஏனைய நான்கு பஞ்சகிருஷ்ண தலங்கள் கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகிய ஊர்களிலுள்ள பெருமாள் கோவில்கள் ஆகும்.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் உள்ள கீழ்வேளூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை8.00 – 11.30 மற்றும் மாலை 5.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு லோகநாத பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, நாகப்பட்டினம் மாவட்டம் 611104.
இறைவி: லோகநாயகி தாயார்
தீர்த்தம்: சிரவண புஷ்கரணி தீர்த்தம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
கோவிலின் சிறப்புகள்:
மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 18வது திருத்தலம். காயாமகிழ், உறங்காப்புளி, தேறா வழக்கு, உறா கிணறு திருக்கண்ணங்குடி என்பது பழமொழி. உறங்காப்புளியும் ஊறா கிணறும் இப்போது இல்லை. காய்ந்து பட்டு போகாத வரம் பெற்ற ஸ்தல விருக்ஷமான மகிழ மரம் கோவிலுக்கு பின்புறம் உள்ளது. தாயார் சன்னதியில் மூலவரும் உற்சவரும் ஒரே முக சாடையில் இருப்பது எங்கும் காணமுடியாத அதிசயம்.
கிருஷ்ண பக்தி நிறைந்த வசிஸ்டர் வெண்ணெய் மயமான கிருஷ்ணரை இளகாமல் விக்ரமாக வழிபட்டுவந்தார். பக்தியை மெய்ச்சிய கண்ணபிரான் குழந்தையாக கோபாலன் அவர் வழிபட்ட கிருஷ்ணனை உண்டுவி ட்டார். கிருஷ்ணனை வசிஸ்டர் விரட்ட மகிஷ மரத்தடியில் தவம் செய்து கொண்டு இருந்த ரிஷிகள் இருந்த பகுதிக்கு வந்தார் இதை ஞான திருஷ்டியால் உணர்ந்த ரிஷிகள் கண்ணனை பக்தியாகிய பாச கயிற்றால் கட்டிபோட்டனர்.
ரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். விரட்டி வந்த வசிஷ்டர் கண்ணனின் பாதத்தில்சரண் அடைந்தார். கண்ணன் கட்டுண்டு நின்றபடியால் கண்ணங்குடி ஆயிற்று. இங்கு திருநீரணி விழா நடைபெறுகிறது. இந்த விழாவின் போது பெருமாள் விபூதி அணிந்து மூன்றே முக்கால் நாழி மட்டும் காட்சி தருவார். பக்தகோடிகளும் விபூதி அணிந்து வருவார். சிவ வைஷ்ணவ ஒற்றுமை. உபரிசரவசு மன்னனுக்காக நடைபெறும் விழா இது.
பஞ்சகிருஷ்ண தலங்கள்:
தமிழ்நாட்டிலுள்ள தமிழ்நாட்டிலுள்ள பஞ்சகிருஷ்ண தலங்களில் இத்தலமும் ஒன்று. ஏனைய நான்கு பஞ்சகிருஷ்ண தலங்கள் கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகிய ஊர்களிலுள்ள பெருமாள் கோவில்கள் ஆகும்.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் உள்ள கீழ்வேளூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை8.00 – 11.30 மற்றும் மாலை 5.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு லோகநாத பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, நாகப்பட்டினம் மாவட்டம் 611104.
தென்னகத்தில் சூரியனுக்கான தனிக்கோவில் அமைந்துள்ளதும், ஒரே கோவிலுக்குள் நவகிரகங்களுக்கு என தனித்தனி கோவில்கள் அமைந்த ஒரே தலம் என்பதும் சிறப்பு.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த ஆடுதுறை அருகே அமைந்து உள்ளது சூரியனார் கோவில். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது இந்த கோவில். சூரியனார்கோவில் என்ற இந்த கோவிலின் பெயரே ஊரின் பெயராகவும் அமைந்து உள்ளது சிறப்பாகும்.
தென்னகத்தில் சூரியனுக்கான தனிக்கோவில் அமைந்துள்ளதும், ஒரே கோவிலுக்குள் நவகிரகங்களுக்கு என தனித்தனி கோவில்கள் அமைந்த ஒரே தலம் என்பதும் சிறப்பு. சூரியன் சன்னதியில் நின்று தரிசிக்கும்போது குரு பகவானின் அருட்பார்வை ஒருசேர கிடைக்கும் ஒரே தலம். நவகிரகங்கள் ஒவ்வொருவருமே தனித்தனி கோவில்களில் மூலவராக இருந்து அருள் வழங்கும் தலம்.
நவ நாயகர்களையும் முதலில் இடமாக சுற்றி வந்து பின்னர் ஒன்பது முறை வலம் வரும் அமைப்புள்ள தலம். ஒரே கோவிலில் ஒன்பது கிரகங்களுக்கும் தோஷ பரிகாரங்கள் செய்யும்படி உள்ள தலம். இரண்டு அசுப கிரகங்களுக்கு இடையில் ஒரு சுப கிரகம் என்ற வரிசை முறையில் அமைந்து அருள்பாலிக்கும் தலம். நவகிரகங்களும் ஒரு சேர்ந்து விநாயகரை பிரதிஷ்டை செய்து அவர் அருளால் தங்கள் தோஷங்களை நிவர்த்தி செய்து கொண்ட தலம்.
இனி இக்கோவில் அமைந்த வரலாற்றை பார்ப்போம்.
முன்னொரு காலத்தில் காலவ முனிவர் என்பவர் இருந்தார். அவர் முக்காலத்தையும் அறியும் மூதறிவு உடையவராக திகழ்ந்தார். சில முனிவர்கள் இவரிடம் வந்து தங்கள் வருங்காலம் பற்றி கேட்டு அறிந்து கொள்வது வழக்கம். ஒருநாள் இளம் துறவி ஒருவர், காலவ முனிவரிடம் வந்து தனது வருங்காலம் குறித்து அறிவிக்கும்படி கேட்டார்.
காலவ முனிவர் தமது ஞான திருஷ்டியால் இளம் துறவியின் வருங்காலம் பற்றி ஆராய்ந்து உமது வருங்காலம் பற்றி கூறுவதற்கு ஒன்றுமில்லை என்றார். உடனே அந்த துறவி, காலவ முனிவரிடம், மற்றவரின் வருங்காலம் பற்றி கூறும் நீர், உம்முடைய வருங்காலம் பற்றி அறிந்ததுண்டா? எனக்கேட்டு நகைத்தார்.
உடனே காலவ முனிவர் அந்த துறவியைப் பார்த்து இவ்வளவு துணிச்சலாக இதுவரை என்னிடம் யாரும் கேட்டதே இல்லை. நீ யார்? என்று கேட்டார். அதற்கு அந்த துறவி நான்தான் காலதேவன் என்று சொல்லி விட்டு அங்கிருந்து மறைந்தார்.
காலவ முனிவர் தன்னுடைய வருங்காலத்தை எண்ணிப் பார்த்தார். தன்னுடைய முன் வினைப்பயனால் கூடிய விரைவில் தமக்கு தொழுநோய் வரும் என்பதை உணர்ந்தார். மிகவும் மனம் நொந்து வாட்டம் அடைந்தார். காலவ முனிவரின் சோகம் படிந்த முகத்தை பார்த்த மற்ற முனிவர்கள் அவரிடம் சோகத்துக்கான காரணம் என்ன? என்று கேட்டனர். அதற்கு அவர், தமது வருங்கால நிலையை அவர்களிடம் எடுத்துரைத்தார்.
அதனைக் கேட்ட மற்ற முனிவர்கள் காலவ முனிவரே! முன்வினை பயனை யூட்டுகிறவர்கள் நவகிரகங்கள். அவர்களை நோக்கி தவம் செய்து வினைப்பயனில் இருந்து விடுதலை பெற முயற்சி செய்யுங்கள் என்று ஆறுதல் கூறினர். இதனையடுத்து ஒரு நல்ல நாள் பார்த்து பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவில் நின்று நவக்கிரகங்களை தியானித்து கடுந்தவம் புரிந்தார்.
தம்மை நோக்கி தவம் புரியும் காலவ முனிவரின் முன்பு நவநாயகர்கள் ஒருசேர வந்து காட்சி கொடுத்தார்கள். காலவ முனிவரின் பரவச நிலையை கண்டு மகிழ்ந்த நவ நாயகர்கள், முனிவரே உங்களுக்கு என்ன வரம் வேண்டும்? என கேட்டனர்.
காலவ முனிவர், நவநாயகர்களை நோக்கி தன்னை தொழுநோய் அணுகாதபடி வரம் தரவேண்டும் என்று வேண்டினார். அதற்கு நவ நாயகர்களும் அவ்வண்ணமே ஆகுக என்று வரம் தந்து மறைந்தனர்.
இந்த செய்தி பிரம்ம தேவருக்கு தெரிய வந்தது அதனால் பிரம்மதேவர் சினம் கொண்டு நவக்கிரகங்களை நோக்கி, நவக்கிரகங்களில் நீங்கள் தேவர்களாக இருந்தாலும் என் கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள் ஆவீர்கள். தனித்து இயங்கும் சுதந்திரம் உங்களுக்கு இல்லை.
ஆனால் நீங்கள் எமது உத்தரவுக்கு கீழ்படியாமல் மீறி நடக்கத் தொடங்கினீர்கள். நீங்கள் சுதந்திரமானவர்களாகி காலவ முனிவருக்கு தொழுநோய் அணுகாமல் இருக்க வரம் கொடுத்துள்ளீர்கள். ஆகவே நீங்கள் 9 பேரும் பூலோகத்தில் பிறந்து காலவ முனிவர் தொழுநோயால் துன்பப்பட வேண்டிய கால அளவு வரை நீங்களும் அந்த தொழுநோய் துயர் அடைவீர்கள் என்று சாபமிட்டார்.
சாபம் பெற்ற நவக்கிரகங்கள் பிரம்மதேவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினர். தங்களை மன்னிக்க வேண்டும். காலவ முனிவரின் தவத்தினை அறிந்து அவர் கேட்ட வரத்தை தந்து விட்டோம். அறியாமல் செய்த பிழையை பொறுத்து தங்களின் சாபத்துக்கு விமோசனம் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதைகேட்டு மனம் இரங்கிய பிரம்மதேவர், நவக்கிரக நாயகர்களாகிய நீங்கள் எனது கட்டளையை மீறி நடந்ததால் இந்த சாபம் பெற்றீர்கள். ஆயினும் சாபவிமோசனம் கேட்டு நிற்பதால் ஒரு வழி கூறுகிறோம்.
நீங்கள் பூலோகத்திற்கு சென்று காவிரி ஆற்றின் வடகரையில் தங்கியிருந்து தவம் புரியுங்கள். 12 ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து தவம் புரிய வேண்டும் என்று கூறினார். அதன்படி நவக்கிரகங்கள் 78 நாட்கள் தவம் புரிந்து 79-ம் நாள் திங்கட்கிழமை விடியலில் காவிரியில் நீராடி எழுந்தனர். அப்போது தங்கள் உடம்பில் இருந்த தொழுநோய் பாதிக்குமேல் குணமாகி இருப்பது கண்டு வியந்தனர்.
பின்னர் பிராணநாதரை அணுகி வழிபட்டனர். வழிபாட்டின் முடிவில் பிராணநாதர், மங்களநாயகியுடன் நவநாயகர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் பிராணநாதர், நவநாயகர்களை நோக்கி நீங்கள் தங்கி தவம் செய்த இடத்தில் உங்களுக்கு என தனி ஆலயம் உண்டாக்கி அது உங்களுக்கு உரிய தலமாக விளங்கும். அங்கே வந்து உங்களை வழிபடுவோருக்கு நீங்கள் சுதந்திரமாக அனுக்கிரகம் செய்ய வரம் தந்தோம் என்று கூறி மறைந்தருளியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
இவ்வாலயத்தின் ராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே மத்தியில் சூரியபகவான் கர்ப்பக்கிரகமும் அதைச் சுற்றி ஒரு பிரகாரமும், நாற்புறமும் உயரமான மதில்களும் உள்ளன. பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கோல் வினைதீர்த்த விநாயகர் கோவிலும், வடக்கு பிரகாரத்தில் தீர்த்தக்கிணறும் உள்ளன. சூரிய பகவானின் கர்ப்பக்கிரகத்தை ஒட்டி நவநாயகர்களில் சனி, புதன், செவ்வாய், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு என்று 7 பேருக்கும் தனித்தனி சிறு கோவில்கள் உள்ளன. சூரியனார்கோவில் தலத்தை அடைந்து மன்னர்களும், முனிவர்களும் வழிபட்டு பலன் பெற்றுள்ளதாக புராண வரலாறுகள் தெரிவிக்கிறது.
சூரியனார் கோவிலின் பிரதானமான கருவறையில் மேற்கு முகமாக நின்ற திருக்கோலத்தில் சூரிய பகவான் காட்சி அருள்கிறார். இவருக்கு இடப்புறம் உஷா தேவியும், வலப்புறம் சாயா தேவியும் நின்ற வண்ணம் காட்சி அளிக்கின்றனர். சூரியபகவான் தமது இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்தி புன்முறுவலுடன் அருள்பாலிக்கிறார்.
சூரிய பகவானின் கருவறைக்கு முன்பு மகா மண்டபத்தில் குருபகவான் எழுந்தருளி இருப்பதுபோல கருவறைக்கு வெளியே தென்மேற்கில் சனீஸ் வரனும், தெற்கில் புதனும், தென்கிழக்கில் அங்காரகனும், கிழக்கில் சந்திரனும், வடகிழக்கில் கேதுவும், வடக்கில் சுக்கிரனும், வடமேற்கில் ராகுவும் தனித்தனி கோவில்களில் எழுந்தருளி உள்ளனர். அதாவது சூரியனைச் சுற்றியுள்ள எட்டு திசைகளிலும் ஏனைய எட்டு கிரக நாயகர்களும் எழுந்தருளி உள்ளனர் என்பது சிறப்பாகும்.
கோவிலில் வழிபடும் முறை
இந்த கோவிலில், கோல் வினை தீர்த்த விநாயகரை வணங்கிய பின்னர் முதலில் சூரிய பகவானையும், அடுத்து குரு பகவானையும் வழிபடவேண்டும். மூன்றாவதாக சனி பகவானையும் தொடர்ந்து புதன், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு என்ற வரிசை முறையில் வழிபாடுகள் ஆற்றி நிறைவாக தேஜஸ் சண்டேஸ்வரரை வணங்க வேண்டும்.
கோள்வினைதீர்த்த விநாயகர்
பிரம்மனால் சாபம் பெற்ற நவக்கிரக நாயகர்கள் இத்தலத்திற்கு வந்து தவம் செய்ய தொடங்கும்போது தங்களுக்கு ஏற்பட்ட சாபப்பிணி எனும் வினை நீங்கும் பொருட்டு விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். கோள்களின் வினையை விநாயகர் தீர்த்து வைத்தால் இவருக்கு கோள்வினைதீர்த்த விநாயகர் என்ற திருப்பெயர் உண்டாயிற்று. இவ் விநாயகர் கோவில், பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. ஏகதள விமானத்துடன் கூடிய கர்ப்பக்கிரகத்தில் விநாயகர் கிழக்கு முகமாக எழுந்தருளியுள்ளார்.
கோவிலின் அமைவிடம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 15 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆடுதுறையில் இருந்து வடக்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலும், திருப்பனந்தாளில் இருந்து தெற்கே பத்து கிலோ மீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து மேற்கே 21 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.
தென்னகத்தில் சூரியனுக்கான தனிக்கோவில் அமைந்துள்ளதும், ஒரே கோவிலுக்குள் நவகிரகங்களுக்கு என தனித்தனி கோவில்கள் அமைந்த ஒரே தலம் என்பதும் சிறப்பு. சூரியன் சன்னதியில் நின்று தரிசிக்கும்போது குரு பகவானின் அருட்பார்வை ஒருசேர கிடைக்கும் ஒரே தலம். நவகிரகங்கள் ஒவ்வொருவருமே தனித்தனி கோவில்களில் மூலவராக இருந்து அருள் வழங்கும் தலம்.
நவ நாயகர்களையும் முதலில் இடமாக சுற்றி வந்து பின்னர் ஒன்பது முறை வலம் வரும் அமைப்புள்ள தலம். ஒரே கோவிலில் ஒன்பது கிரகங்களுக்கும் தோஷ பரிகாரங்கள் செய்யும்படி உள்ள தலம். இரண்டு அசுப கிரகங்களுக்கு இடையில் ஒரு சுப கிரகம் என்ற வரிசை முறையில் அமைந்து அருள்பாலிக்கும் தலம். நவகிரகங்களும் ஒரு சேர்ந்து விநாயகரை பிரதிஷ்டை செய்து அவர் அருளால் தங்கள் தோஷங்களை நிவர்த்தி செய்து கொண்ட தலம்.
இனி இக்கோவில் அமைந்த வரலாற்றை பார்ப்போம்.
முன்னொரு காலத்தில் காலவ முனிவர் என்பவர் இருந்தார். அவர் முக்காலத்தையும் அறியும் மூதறிவு உடையவராக திகழ்ந்தார். சில முனிவர்கள் இவரிடம் வந்து தங்கள் வருங்காலம் பற்றி கேட்டு அறிந்து கொள்வது வழக்கம். ஒருநாள் இளம் துறவி ஒருவர், காலவ முனிவரிடம் வந்து தனது வருங்காலம் குறித்து அறிவிக்கும்படி கேட்டார்.
காலவ முனிவர் தமது ஞான திருஷ்டியால் இளம் துறவியின் வருங்காலம் பற்றி ஆராய்ந்து உமது வருங்காலம் பற்றி கூறுவதற்கு ஒன்றுமில்லை என்றார். உடனே அந்த துறவி, காலவ முனிவரிடம், மற்றவரின் வருங்காலம் பற்றி கூறும் நீர், உம்முடைய வருங்காலம் பற்றி அறிந்ததுண்டா? எனக்கேட்டு நகைத்தார்.
உடனே காலவ முனிவர் அந்த துறவியைப் பார்த்து இவ்வளவு துணிச்சலாக இதுவரை என்னிடம் யாரும் கேட்டதே இல்லை. நீ யார்? என்று கேட்டார். அதற்கு அந்த துறவி நான்தான் காலதேவன் என்று சொல்லி விட்டு அங்கிருந்து மறைந்தார்.
காலவ முனிவர் தன்னுடைய வருங்காலத்தை எண்ணிப் பார்த்தார். தன்னுடைய முன் வினைப்பயனால் கூடிய விரைவில் தமக்கு தொழுநோய் வரும் என்பதை உணர்ந்தார். மிகவும் மனம் நொந்து வாட்டம் அடைந்தார். காலவ முனிவரின் சோகம் படிந்த முகத்தை பார்த்த மற்ற முனிவர்கள் அவரிடம் சோகத்துக்கான காரணம் என்ன? என்று கேட்டனர். அதற்கு அவர், தமது வருங்கால நிலையை அவர்களிடம் எடுத்துரைத்தார்.
அதனைக் கேட்ட மற்ற முனிவர்கள் காலவ முனிவரே! முன்வினை பயனை யூட்டுகிறவர்கள் நவகிரகங்கள். அவர்களை நோக்கி தவம் செய்து வினைப்பயனில் இருந்து விடுதலை பெற முயற்சி செய்யுங்கள் என்று ஆறுதல் கூறினர். இதனையடுத்து ஒரு நல்ல நாள் பார்த்து பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவில் நின்று நவக்கிரகங்களை தியானித்து கடுந்தவம் புரிந்தார்.
தம்மை நோக்கி தவம் புரியும் காலவ முனிவரின் முன்பு நவநாயகர்கள் ஒருசேர வந்து காட்சி கொடுத்தார்கள். காலவ முனிவரின் பரவச நிலையை கண்டு மகிழ்ந்த நவ நாயகர்கள், முனிவரே உங்களுக்கு என்ன வரம் வேண்டும்? என கேட்டனர்.
காலவ முனிவர், நவநாயகர்களை நோக்கி தன்னை தொழுநோய் அணுகாதபடி வரம் தரவேண்டும் என்று வேண்டினார். அதற்கு நவ நாயகர்களும் அவ்வண்ணமே ஆகுக என்று வரம் தந்து மறைந்தனர்.
இந்த செய்தி பிரம்ம தேவருக்கு தெரிய வந்தது அதனால் பிரம்மதேவர் சினம் கொண்டு நவக்கிரகங்களை நோக்கி, நவக்கிரகங்களில் நீங்கள் தேவர்களாக இருந்தாலும் என் கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள் ஆவீர்கள். தனித்து இயங்கும் சுதந்திரம் உங்களுக்கு இல்லை.
ஆனால் நீங்கள் எமது உத்தரவுக்கு கீழ்படியாமல் மீறி நடக்கத் தொடங்கினீர்கள். நீங்கள் சுதந்திரமானவர்களாகி காலவ முனிவருக்கு தொழுநோய் அணுகாமல் இருக்க வரம் கொடுத்துள்ளீர்கள். ஆகவே நீங்கள் 9 பேரும் பூலோகத்தில் பிறந்து காலவ முனிவர் தொழுநோயால் துன்பப்பட வேண்டிய கால அளவு வரை நீங்களும் அந்த தொழுநோய் துயர் அடைவீர்கள் என்று சாபமிட்டார்.
சாபம் பெற்ற நவக்கிரகங்கள் பிரம்மதேவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினர். தங்களை மன்னிக்க வேண்டும். காலவ முனிவரின் தவத்தினை அறிந்து அவர் கேட்ட வரத்தை தந்து விட்டோம். அறியாமல் செய்த பிழையை பொறுத்து தங்களின் சாபத்துக்கு விமோசனம் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதைகேட்டு மனம் இரங்கிய பிரம்மதேவர், நவக்கிரக நாயகர்களாகிய நீங்கள் எனது கட்டளையை மீறி நடந்ததால் இந்த சாபம் பெற்றீர்கள். ஆயினும் சாபவிமோசனம் கேட்டு நிற்பதால் ஒரு வழி கூறுகிறோம்.
நீங்கள் பூலோகத்திற்கு சென்று காவிரி ஆற்றின் வடகரையில் தங்கியிருந்து தவம் புரியுங்கள். 12 ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து தவம் புரிய வேண்டும் என்று கூறினார். அதன்படி நவக்கிரகங்கள் 78 நாட்கள் தவம் புரிந்து 79-ம் நாள் திங்கட்கிழமை விடியலில் காவிரியில் நீராடி எழுந்தனர். அப்போது தங்கள் உடம்பில் இருந்த தொழுநோய் பாதிக்குமேல் குணமாகி இருப்பது கண்டு வியந்தனர்.
பின்னர் பிராணநாதரை அணுகி வழிபட்டனர். வழிபாட்டின் முடிவில் பிராணநாதர், மங்களநாயகியுடன் நவநாயகர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் பிராணநாதர், நவநாயகர்களை நோக்கி நீங்கள் தங்கி தவம் செய்த இடத்தில் உங்களுக்கு என தனி ஆலயம் உண்டாக்கி அது உங்களுக்கு உரிய தலமாக விளங்கும். அங்கே வந்து உங்களை வழிபடுவோருக்கு நீங்கள் சுதந்திரமாக அனுக்கிரகம் செய்ய வரம் தந்தோம் என்று கூறி மறைந்தருளியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
இவ்வாலயத்தின் ராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே மத்தியில் சூரியபகவான் கர்ப்பக்கிரகமும் அதைச் சுற்றி ஒரு பிரகாரமும், நாற்புறமும் உயரமான மதில்களும் உள்ளன. பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கோல் வினைதீர்த்த விநாயகர் கோவிலும், வடக்கு பிரகாரத்தில் தீர்த்தக்கிணறும் உள்ளன. சூரிய பகவானின் கர்ப்பக்கிரகத்தை ஒட்டி நவநாயகர்களில் சனி, புதன், செவ்வாய், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு என்று 7 பேருக்கும் தனித்தனி சிறு கோவில்கள் உள்ளன. சூரியனார்கோவில் தலத்தை அடைந்து மன்னர்களும், முனிவர்களும் வழிபட்டு பலன் பெற்றுள்ளதாக புராண வரலாறுகள் தெரிவிக்கிறது.
சூரியனார் கோவிலின் பிரதானமான கருவறையில் மேற்கு முகமாக நின்ற திருக்கோலத்தில் சூரிய பகவான் காட்சி அருள்கிறார். இவருக்கு இடப்புறம் உஷா தேவியும், வலப்புறம் சாயா தேவியும் நின்ற வண்ணம் காட்சி அளிக்கின்றனர். சூரியபகவான் தமது இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்தி புன்முறுவலுடன் அருள்பாலிக்கிறார்.
சூரிய பகவானின் கருவறைக்கு முன்பு மகா மண்டபத்தில் குருபகவான் எழுந்தருளி இருப்பதுபோல கருவறைக்கு வெளியே தென்மேற்கில் சனீஸ் வரனும், தெற்கில் புதனும், தென்கிழக்கில் அங்காரகனும், கிழக்கில் சந்திரனும், வடகிழக்கில் கேதுவும், வடக்கில் சுக்கிரனும், வடமேற்கில் ராகுவும் தனித்தனி கோவில்களில் எழுந்தருளி உள்ளனர். அதாவது சூரியனைச் சுற்றியுள்ள எட்டு திசைகளிலும் ஏனைய எட்டு கிரக நாயகர்களும் எழுந்தருளி உள்ளனர் என்பது சிறப்பாகும்.
கோவிலில் வழிபடும் முறை
இந்த கோவிலில், கோல் வினை தீர்த்த விநாயகரை வணங்கிய பின்னர் முதலில் சூரிய பகவானையும், அடுத்து குரு பகவானையும் வழிபடவேண்டும். மூன்றாவதாக சனி பகவானையும் தொடர்ந்து புதன், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு என்ற வரிசை முறையில் வழிபாடுகள் ஆற்றி நிறைவாக தேஜஸ் சண்டேஸ்வரரை வணங்க வேண்டும்.
கோள்வினைதீர்த்த விநாயகர்
பிரம்மனால் சாபம் பெற்ற நவக்கிரக நாயகர்கள் இத்தலத்திற்கு வந்து தவம் செய்ய தொடங்கும்போது தங்களுக்கு ஏற்பட்ட சாபப்பிணி எனும் வினை நீங்கும் பொருட்டு விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். கோள்களின் வினையை விநாயகர் தீர்த்து வைத்தால் இவருக்கு கோள்வினைதீர்த்த விநாயகர் என்ற திருப்பெயர் உண்டாயிற்று. இவ் விநாயகர் கோவில், பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. ஏகதள விமானத்துடன் கூடிய கர்ப்பக்கிரகத்தில் விநாயகர் கிழக்கு முகமாக எழுந்தருளியுள்ளார்.
கோவிலின் அமைவிடம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 15 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆடுதுறையில் இருந்து வடக்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலும், திருப்பனந்தாளில் இருந்து தெற்கே பத்து கிலோ மீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து மேற்கே 21 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.
தஞ்சாவூர் திருமங்கலக்குடியில் அமைந்துள்ளது மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயமானது, ‘பஞ்ச மங்கள ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலக்குடி. இங்கு மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயமானது, ‘பஞ்ச மங்கள ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. தேவாரப் பாடல்கள் இடம்பெற்ற 275 சிவாலங்களில், இது 38-வது திருத்தலம் ஆகும்.
ஊரின் பெயர் - திருமங்கலக்குடி. அம்பாள் பெயர்- மங்களாம்பிகை. தல விநாயகர் பெயர்- மங்கள விநாயகர். கோவில் விமானம் - மங்கள விமானம். தீர்த்தம் - மங்கள தீர்த்தம். இப்படி 5 இடங்களில் மங்களத்தை கொண்டிருப்பதால், இந்தத் தலம் ‘பஞ்ச மங்கள ஷேத்திரம்’ ஆனது.
முதலாம் குலோத்துங்கச் சோழனிடம் மந்திரியாக இருந்தவர் அலைவாணர். இவர் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு, மன்னனின் அனுமதியைப் பெறாமல், திருமங்கலக்குடியில் சிவன் கோவிலைக் கட்டினார். இதை அறிந்த மன்னன், மந்திரியை சிறைபிடித்து, சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டார்.
தன்னை சிரச்சேதம் செய்தாலும், உடலை திருமங்கலக்குடியிலேயே தகனம் செய்யும்படி மன்னனுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார், அலைவாணர். அதன்படி சிரச்சேதம் செய்யப்பட்ட அவரது உடல், திருமங்கலக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது மந்திரியின் மனைவி, தன் கணவர் கட்டமைத்த கோவிலில் வீற்றிருக்கும் அன்னையிடம் சென்று, தன் கணவரின் உயிரைத் திரும்பத் தருமாறு வேண்டினாள். அந்த நேரத்தில் அம்மன் கரு வறையில் இருந்து, “உன் வேண்டுதல் பலிக்கும்” என்று அசரீரி கேட்டது.
அதன்படியே மந்திரியின் தலை ஒன்றிணைந்து, உயிர் வரப் பெற்றார். உயிர்பெற்றதும் கோவிலுக்குச் சென்று சிவலிங்கத்தை வழிபட்டார். மந்திரிக்கு உயிர் அளித்த காரணத்தால், இறைவன்- பிராணநாதேஸ்வரர் என்று திருநாமம் பெற்றார். மந்திரியின் மனைவிக்கு மாங்கல்ய பாக்கியம் அருளியதால், அம்பாள்- மங்காளம்பிகை என்று அழைக்கப்பட்டாள்.
இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக சிவன் கோவில்களில், ஆவுடையார் பெரியதாகவும், பாணம் சிறியதாகவும் இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள பாணம் அதிக உயரம் கொண்டதாக காட்சி தருகிறது. இவரது சன்னிதிக்கு செல்லும் முன்பாக உள்ள மண்டபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி இருவரும், துவார பாலகிகள் போல வீற்றிருக்கின்றனர். இருவரும் கால்களை மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இதில் சரஸ்வதியின் கையில் வீணை காணப்படவில்லை.
அம்பாள் தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். இங்கு அம்மன்தான், வரப்பிரசாதியாக திகழ்கிறாள். அவளது திருப்பெயரால்தான் ஆலயம் வழங்கப்படுகிறது. அம்பாளின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு இருக்கும். அம்பாளை வழிபடும் பெண்களுக்கு, தாலிக்கயிறு பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. இதை வாங்கிக்கொள்ளும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்ற பெண்கள், தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
பொதுவாக சிவன்- அம்பாள் இருக்கும் ஆலயங்களில் திருக்கல்யாணம் என்பது காலை வேளையில் நடைபெறும். மதியம் கல்யாண விருந்து வைக்கப்படும். ஆனால் இந்த ஆலயத்தில் இரவு வேளையில்தான் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பங்குனியில் நடைபெறும் ஆலய பிரம்மோற்சவத்தின் போது, இந்த திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.
ஆலய பிரகாரத்தில் நடராஜர் சன்னிதியில் இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பாளுடன் இருக்கின்றனர். பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே, பூதகணம் ஒன்று இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது. இந்த சன்னிதியில் மரகதலிங்கம் ஒன்றும் இருக்கிறது. தினமும் உச்சிகாலத்தில் மட்டும் இந்த லிங்கத்திற்கு பூஜை செய்கிறார்கள். அப்போது வலம்புரி சங்கில் பால், பன்னீர், தேன், சந்தனம் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தத்தை பருகினால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் கோவில் பிரகாரத்தில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. சூரியனும், சந்திரனும், சிவபெருமானின் இரண்டு கண்களாக விளங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அவை இரண்டும், ஈசனை குளிர்விப்பதற்காகவே இங்கு தீர்த்தங்களாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இத்தல இறைவனுக்கு இரண்டு தீர்த்தங்களின் நீரையும் சேர்த்துதான் அபிஷேகம் செய்கிறார்கள்.
இந்தக் கோவிலின் தல விருட்சமாக கோங்கு, வெள்ளெருக்கு ஆகிய மரங்கள் இருக்கின்றன. நவக்கிரக தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், எதிரி பயம் உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
எருக்கு இலையில் தயிர் சாதம்
நவக்கிரகங்கள் தங்களின் சாபம் நீங்க, வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் படைத்து இறைவனை வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. எனவே இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் உச்சிகால பூஜையின் போது, உப்பில்லாத தயிர் சாதம் சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. பித்ரு தோஷம் உள்ளவர்கள், முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள், இத்தல இறைவனுக்கு தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
நவக்கிரகங்களின் சாபம் போக்கிய ஈசன்
ஒரு முறை காலமா முனிவருக்கு ஏற்படவிருந்த நோயை, நவக்கிரகங்கள் தங்களின் சக்தியைக் கொண்டு தடுத்தன. எனவே அந்த நோய், நவக்கிரகங்களைத் தாக்கும்படி பிரம்மதேவன் சாபம் கொடுத்தார். இதை யடுத்து நவக்கிரகங்கள் அனைவரும், இந்த திருத்தலம் வந்து சிவபெருமானை வேண்டி தவம் இருந்து சாப விமோசனம் பெற்றனர். நவக்கிரகங் களின் சாபத்தைப் போக்கிய இறைவனாகவும், பிராணநாதேஸ்வரர் திகழ்கிறார். இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனிச் சன்னிதி கிடையாது. இங்கிருந்து சற்று தூரத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும் அருளும், சூரியனார் கோவில் அமைந்திருக்கிறது. ஒரே ஆலயம்தான் இப்படி இரண்டாக பிரிந்திருப்பதாகவும், அதில் பிராணநாதேஸ்வரர் கோவில்தான் பிரதானமானது என்றும் சொல்லப்படுகிறது. பிராணநாதேஸ்வரரை வழிபட்ட பிறகுதான், சூரியனார் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள ஆடுதுறையை அடைந்து, அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் சென்றால், திருமங்கலக்குடியை அடையலாம்.
ஊரின் பெயர் - திருமங்கலக்குடி. அம்பாள் பெயர்- மங்களாம்பிகை. தல விநாயகர் பெயர்- மங்கள விநாயகர். கோவில் விமானம் - மங்கள விமானம். தீர்த்தம் - மங்கள தீர்த்தம். இப்படி 5 இடங்களில் மங்களத்தை கொண்டிருப்பதால், இந்தத் தலம் ‘பஞ்ச மங்கள ஷேத்திரம்’ ஆனது.
முதலாம் குலோத்துங்கச் சோழனிடம் மந்திரியாக இருந்தவர் அலைவாணர். இவர் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு, மன்னனின் அனுமதியைப் பெறாமல், திருமங்கலக்குடியில் சிவன் கோவிலைக் கட்டினார். இதை அறிந்த மன்னன், மந்திரியை சிறைபிடித்து, சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டார்.
தன்னை சிரச்சேதம் செய்தாலும், உடலை திருமங்கலக்குடியிலேயே தகனம் செய்யும்படி மன்னனுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார், அலைவாணர். அதன்படி சிரச்சேதம் செய்யப்பட்ட அவரது உடல், திருமங்கலக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது மந்திரியின் மனைவி, தன் கணவர் கட்டமைத்த கோவிலில் வீற்றிருக்கும் அன்னையிடம் சென்று, தன் கணவரின் உயிரைத் திரும்பத் தருமாறு வேண்டினாள். அந்த நேரத்தில் அம்மன் கரு வறையில் இருந்து, “உன் வேண்டுதல் பலிக்கும்” என்று அசரீரி கேட்டது.
அதன்படியே மந்திரியின் தலை ஒன்றிணைந்து, உயிர் வரப் பெற்றார். உயிர்பெற்றதும் கோவிலுக்குச் சென்று சிவலிங்கத்தை வழிபட்டார். மந்திரிக்கு உயிர் அளித்த காரணத்தால், இறைவன்- பிராணநாதேஸ்வரர் என்று திருநாமம் பெற்றார். மந்திரியின் மனைவிக்கு மாங்கல்ய பாக்கியம் அருளியதால், அம்பாள்- மங்காளம்பிகை என்று அழைக்கப்பட்டாள்.
இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக சிவன் கோவில்களில், ஆவுடையார் பெரியதாகவும், பாணம் சிறியதாகவும் இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள பாணம் அதிக உயரம் கொண்டதாக காட்சி தருகிறது. இவரது சன்னிதிக்கு செல்லும் முன்பாக உள்ள மண்டபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி இருவரும், துவார பாலகிகள் போல வீற்றிருக்கின்றனர். இருவரும் கால்களை மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இதில் சரஸ்வதியின் கையில் வீணை காணப்படவில்லை.
அம்பாள் தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். இங்கு அம்மன்தான், வரப்பிரசாதியாக திகழ்கிறாள். அவளது திருப்பெயரால்தான் ஆலயம் வழங்கப்படுகிறது. அம்பாளின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு இருக்கும். அம்பாளை வழிபடும் பெண்களுக்கு, தாலிக்கயிறு பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. இதை வாங்கிக்கொள்ளும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்ற பெண்கள், தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
பொதுவாக சிவன்- அம்பாள் இருக்கும் ஆலயங்களில் திருக்கல்யாணம் என்பது காலை வேளையில் நடைபெறும். மதியம் கல்யாண விருந்து வைக்கப்படும். ஆனால் இந்த ஆலயத்தில் இரவு வேளையில்தான் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பங்குனியில் நடைபெறும் ஆலய பிரம்மோற்சவத்தின் போது, இந்த திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.
ஆலய பிரகாரத்தில் நடராஜர் சன்னிதியில் இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பாளுடன் இருக்கின்றனர். பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே, பூதகணம் ஒன்று இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது. இந்த சன்னிதியில் மரகதலிங்கம் ஒன்றும் இருக்கிறது. தினமும் உச்சிகாலத்தில் மட்டும் இந்த லிங்கத்திற்கு பூஜை செய்கிறார்கள். அப்போது வலம்புரி சங்கில் பால், பன்னீர், தேன், சந்தனம் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தத்தை பருகினால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் கோவில் பிரகாரத்தில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. சூரியனும், சந்திரனும், சிவபெருமானின் இரண்டு கண்களாக விளங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அவை இரண்டும், ஈசனை குளிர்விப்பதற்காகவே இங்கு தீர்த்தங்களாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இத்தல இறைவனுக்கு இரண்டு தீர்த்தங்களின் நீரையும் சேர்த்துதான் அபிஷேகம் செய்கிறார்கள்.
இந்தக் கோவிலின் தல விருட்சமாக கோங்கு, வெள்ளெருக்கு ஆகிய மரங்கள் இருக்கின்றன. நவக்கிரக தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், எதிரி பயம் உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
எருக்கு இலையில் தயிர் சாதம்
நவக்கிரகங்கள் தங்களின் சாபம் நீங்க, வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் படைத்து இறைவனை வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. எனவே இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் உச்சிகால பூஜையின் போது, உப்பில்லாத தயிர் சாதம் சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. பித்ரு தோஷம் உள்ளவர்கள், முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள், இத்தல இறைவனுக்கு தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
நவக்கிரகங்களின் சாபம் போக்கிய ஈசன்
ஒரு முறை காலமா முனிவருக்கு ஏற்படவிருந்த நோயை, நவக்கிரகங்கள் தங்களின் சக்தியைக் கொண்டு தடுத்தன. எனவே அந்த நோய், நவக்கிரகங்களைத் தாக்கும்படி பிரம்மதேவன் சாபம் கொடுத்தார். இதை யடுத்து நவக்கிரகங்கள் அனைவரும், இந்த திருத்தலம் வந்து சிவபெருமானை வேண்டி தவம் இருந்து சாப விமோசனம் பெற்றனர். நவக்கிரகங் களின் சாபத்தைப் போக்கிய இறைவனாகவும், பிராணநாதேஸ்வரர் திகழ்கிறார். இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனிச் சன்னிதி கிடையாது. இங்கிருந்து சற்று தூரத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும் அருளும், சூரியனார் கோவில் அமைந்திருக்கிறது. ஒரே ஆலயம்தான் இப்படி இரண்டாக பிரிந்திருப்பதாகவும், அதில் பிராணநாதேஸ்வரர் கோவில்தான் பிரதானமானது என்றும் சொல்லப்படுகிறது. பிராணநாதேஸ்வரரை வழிபட்ட பிறகுதான், சூரியனார் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள ஆடுதுறையை அடைந்து, அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் சென்றால், திருமங்கலக்குடியை அடையலாம்.
விழுப்புரத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில், கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மகாபாரதத்தில் குருசேத்திரப் போர் நெருங்கிக்கொண்டிருந்தது. அந்தப் போரில் பாண்டவர்கள் வெற்றிபெறுவதற்காக, சிறப்புக்குரிய ஒருவரைப் பலியிட வேண்டியிருந்தது. அதற்காக அர்ச்சுனனின் பிள்ளைகளில் ஒருவனான அரவான் முன்வந்தான். ஆனால் பலியாவதற்கு முன்பாக, திருமணம் செய்துகொள்ள அவன் விரும்பினான். இறக்கப் போகும் ஒருவனுக்குப் பெண் கொடுக்க, யார்தான் முன்வருவார்கள்? அரவானை திருமணம் செய்ய யாரும் தயாராக இல்லை. இதனால் அவனைப் பலியிடும் நாளும் தள்ளிக்கொண்டே போனது. போருக்கான நாளோ நெருங்கிவிட்டது.
இதையறிந்த கிருஷ்ணன், தானே மோகினி என்னும் பெண் உருவம் எடுத்து அரவானை மணம்புரிந்தார். அதற்கு அடுத்த நாள், அரவான் பலியிடப்பட்டான். கணவனை இழந்த மோகினி, கை வளையல்களை உடைத்து, நெற்றி பொட்டை அழித்து, தாலி அகற்றி, வெள்ளைச் சேலை உடுத்தி, விதவைக் கோலம் தரித்தாள். அதன்பின் சுயவடிவம் அடைந்த கிருஷ்ணன், பாரதப் போரினை முன்னின்று நடத்தி பாண்டவர்களுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். இப்படி அரவானுக்காக பெண் வேடத்தில் வந்த கிருஷ்ணனின் அம்சம்தான் திருநங்கைகள் என்கிறது புராணங்கள்.
திருநங்கைகள் என்றால், ஆணாகப் பிறந்து பின்னாளில் பெண்ணாக உணர்ச்சி மாற்றம் அடைபவர்கள். அதாவது, ஆண் உடம்பில் பெண்ணுக்குரிய உணர்வுகளைக் கொண்டவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். ‘திரு’ என்றால் ‘ஆண்மகன்’ என்றும், ‘நங்கை’ என்றால் ‘பெண் மகள்’ என்றும் பொருள். இரண்டும் சேர்ந்ததே ‘திருநங்கை’ என்ற வாக்கியம். இவர்கள், தெய்வாம்சம் பொருந்தியவர்கள்.
அன்று கிருஷ்ணன், மோகினியாக உருமாறி அரவானை மணந்ததை நினைவுகூரும் வகையில்தான், திருநங்கைகள் தங்கள் கணவனாக அரவானை ஏற்று சித்ரா பவுர்ணமி நன்னாளில் திருமணம் செய்து கொள்கின்றனர். மறுநாள் அதி காலையிலேயே தாலி அறுத்தல் சடங்கில் ஈடுபட்டு, விதவைக்கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து வழிபடுகிறார்கள்.
மகாபாரதக் கதையைக் கூறும் பெருந்தேவனாரின் பாரத வெண்பாவில், அரவானைப் பற்றிய குறிப்பு உள்ளது. இதில் ‘களப்பலி’ என்னும் பலி சடங்கினைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. போர்க்களத்துக்காக வீரன் ஒருவனை பலி கொடுத்தல் ‘களப்பலி’ எனப்படுகிறது. இந்த பலியைக் கொடுப்பவர்கள், போர்க்களத்தில் வெற்றிப் பெறுவார்கள் என்பது ஐதீகம். இந்த களப்பலி சடங்கில் அழகும், துணிவும் கொண்ட வீரன் ஒருவன், தன் அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தன் உயிரை காளிதேவிக்கு பலி கொடுக்க முன் வருவான். அப்படி வந்தவன்தான் அரவான்.
கிருஷ்ணன் ஆசியுடன் பின்னாளில், கூவாகத்தில் கூத்தாண்டவர் எனும் பெயரில் அரவான் திருகோவில்கொண்டார். இத்தலத்திற்கு நோயுற்ற ஆண்கள், குழந்தைகள், பெண்கள் வந்து வழிபட்டால் உடல் நோய்கள் குணமாகும். திருநங்கைகள் இங்கு வழிபட்டுவர வாழ்வின் அனைத்துவகைப் நற்பேறுகளையும் பெற்று சிறப்பாக வாழ்ந்திடுவர். மரணபயம், ஆண்மை குறைபாடுகள் அகல, ஒரு மண்டலம் கூத்தாண்டவரை வழிபட்டு வந்தால் நலம் விளையும். சித்ரா பவுர்ணமி நன்னாளில் இங்கு வந்து வழிபட வாழ்க்கையில் மன அழுத்தத்துடன் வாழ்பவர்களின் துன்பங்கள் விலகி, இன்ப வாழ்வு கிடைக்கும்.
இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளது எனவே திருவிழா நடைபெறவில்லை
அமைவிடம்
விழுப்புரத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில், கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இதையறிந்த கிருஷ்ணன், தானே மோகினி என்னும் பெண் உருவம் எடுத்து அரவானை மணம்புரிந்தார். அதற்கு அடுத்த நாள், அரவான் பலியிடப்பட்டான். கணவனை இழந்த மோகினி, கை வளையல்களை உடைத்து, நெற்றி பொட்டை அழித்து, தாலி அகற்றி, வெள்ளைச் சேலை உடுத்தி, விதவைக் கோலம் தரித்தாள். அதன்பின் சுயவடிவம் அடைந்த கிருஷ்ணன், பாரதப் போரினை முன்னின்று நடத்தி பாண்டவர்களுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். இப்படி அரவானுக்காக பெண் வேடத்தில் வந்த கிருஷ்ணனின் அம்சம்தான் திருநங்கைகள் என்கிறது புராணங்கள்.
திருநங்கைகள் என்றால், ஆணாகப் பிறந்து பின்னாளில் பெண்ணாக உணர்ச்சி மாற்றம் அடைபவர்கள். அதாவது, ஆண் உடம்பில் பெண்ணுக்குரிய உணர்வுகளைக் கொண்டவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். ‘திரு’ என்றால் ‘ஆண்மகன்’ என்றும், ‘நங்கை’ என்றால் ‘பெண் மகள்’ என்றும் பொருள். இரண்டும் சேர்ந்ததே ‘திருநங்கை’ என்ற வாக்கியம். இவர்கள், தெய்வாம்சம் பொருந்தியவர்கள்.
அன்று கிருஷ்ணன், மோகினியாக உருமாறி அரவானை மணந்ததை நினைவுகூரும் வகையில்தான், திருநங்கைகள் தங்கள் கணவனாக அரவானை ஏற்று சித்ரா பவுர்ணமி நன்னாளில் திருமணம் செய்து கொள்கின்றனர். மறுநாள் அதி காலையிலேயே தாலி அறுத்தல் சடங்கில் ஈடுபட்டு, விதவைக்கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து வழிபடுகிறார்கள்.
மகாபாரதக் கதையைக் கூறும் பெருந்தேவனாரின் பாரத வெண்பாவில், அரவானைப் பற்றிய குறிப்பு உள்ளது. இதில் ‘களப்பலி’ என்னும் பலி சடங்கினைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. போர்க்களத்துக்காக வீரன் ஒருவனை பலி கொடுத்தல் ‘களப்பலி’ எனப்படுகிறது. இந்த பலியைக் கொடுப்பவர்கள், போர்க்களத்தில் வெற்றிப் பெறுவார்கள் என்பது ஐதீகம். இந்த களப்பலி சடங்கில் அழகும், துணிவும் கொண்ட வீரன் ஒருவன், தன் அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தன் உயிரை காளிதேவிக்கு பலி கொடுக்க முன் வருவான். அப்படி வந்தவன்தான் அரவான்.
கிருஷ்ணன் ஆசியுடன் பின்னாளில், கூவாகத்தில் கூத்தாண்டவர் எனும் பெயரில் அரவான் திருகோவில்கொண்டார். இத்தலத்திற்கு நோயுற்ற ஆண்கள், குழந்தைகள், பெண்கள் வந்து வழிபட்டால் உடல் நோய்கள் குணமாகும். திருநங்கைகள் இங்கு வழிபட்டுவர வாழ்வின் அனைத்துவகைப் நற்பேறுகளையும் பெற்று சிறப்பாக வாழ்ந்திடுவர். மரணபயம், ஆண்மை குறைபாடுகள் அகல, ஒரு மண்டலம் கூத்தாண்டவரை வழிபட்டு வந்தால் நலம் விளையும். சித்ரா பவுர்ணமி நன்னாளில் இங்கு வந்து வழிபட வாழ்க்கையில் மன அழுத்தத்துடன் வாழ்பவர்களின் துன்பங்கள் விலகி, இன்ப வாழ்வு கிடைக்கும்.
இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளது எனவே திருவிழா நடைபெறவில்லை
அமைவிடம்
விழுப்புரத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில், கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது.
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து மேற்கே 11 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை மீது பாலமலை உள்ளது. இங்கு அரங்கநாதராக, திருமால் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து மேற்கே 11 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை மீது பாலமலை உள்ளது. இங்கு அரங்கநாதராக, திருமால் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
ஆலய வரலாறு :
முன் காலத்தில் காரை வனமாக இருந்த இப்பகுதியில் வசித்த மக்கள், பசு மாடுகளை வளர்த்து வந்தனர். அதில் ஒரு பசு தினமும் காரை வனத்துக்குள் புகுந்து அங்கிருந்த ஒரு காரை மரத்துக்கு அடியில் பாலை சுரந்து வந்தது. இதனைப் பார்த்த பசுவின் உரிமையாளர் இதுபற்றி ஊர் மக்களிடம் தெரிவித்தார். அவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒலித்த அசரீரி, ‘நான் இங்கு அரங்கனாக எழுந்தருளி உள்ளேன்’ என்றது.
இதைத் தொடர்ந்து அங்கு சுயம்புவாக இருந்த பெருமாளை, சிறிய குடில் அமைத்து வழிபடத் தொடங்கினர். நாளடைவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரங்கநாதருக்கு சிறிய கோவில் கட்டி வழிபட வேண்டும் என்று விரும்பினர். இந்த நிலையில் ஒரு நாள் அந்தப் பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. வெடிச்சத்தம் வந்த இடத்திற்கு சென்று மக்கள் பார்த்தனர். அப்போது ஒலித்த அசரீரி, ‘வெடி சத்தம் கேட்ட ஈசானிய மூலையில் பாறைகளும், வாயு மூலையில் மண்ணும் கிடைக்கும். அதை கொண்டு கோவில் கட்டுங்கள்’ என்றது.
அசரீரியின் வாக்குப்படியே அந்தப்பகுதியில் இருந்து கிடைத்த பாறாங்கற்களையும், மணலையும் கொண்டு கோவில் கட்டி எழுப்பப்பட்டது. கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாமல் இருந்ததால் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து 27.1.2002-ல் 3 நிலை ராஜகோபுரத்தை அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினர்.
ஆலய தரிசனம் :
திருக்கோவிலை அடைந்தவுடன் ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் அர்த்தமண்டபத்தில் சக்கரத்தாழ்வாரையும், யோக நரசிம்மரையும் ஒரே சன்னிதியில் தரிசிக்கலாம். சக்கரத்தாழ்வார் கிழக்கு நோக்கியும், அதே பீடத்தில் மேற்கு நோக்கி யோக நரசிம்மரும் காட்சி தருகின்றனர். மகா மண்டபத்தில் ஊஞ்சலில் பள்ளிகொண்ட கோலத்தில் அரங்கநாதர் உற்சவ மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கிறார். அவருடன் செங்கோதை, பூங்கோதை தாயார் வீற்றிருக்கின்றனர்.
அர்த்த மண்டபத்தில் நின்று கருவறையில் எழுந்தருளிய அரங்கநாதரை வழிபடலாம். சுமார் 4½ அடி உயரம் கொண்ட திருவுருவம், அலங்கார பிரியர் என்பதால் மலர் மாலைகள் சூழ காட்சி தருகிறார். நான்கு திருக்கரங்களுடன், நின்ற திருக் கோலத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். சுயம்பு மூர்த்தியாய் வெளிப்பட்ட அரங்கநாதருக்கு முதலில் பூஜை நடைபெற்ற பின்னர் தான் மற்ற தெய்வங்களுக்கு பூஜை நடைபெறுகிறது.
மூலவருக்கு வடக்குப்பகுதியில் பூங்கோதை தாயாரும், தென் பகுதியில் செங்கோதையம்மன் தாயாரும் தனித்தனி சன்னிதியில் நின்றபடி அருள்புரிகின்றனர். கோவிலின் தென்புறத்தில் தேவியரோடு பரமவாசுதேவன் தனி சன்னிதியில் சேவை சாதிக்க, அதன் முன்புறம் பன்னிரு ஆழ்வார்களின் திருமேனிகள் உள்ளன.
கோவிலின் பின்புறம் தும்பிக்கையாழ்வார், ராமானுஜர், காளிஅண்ணன் சுவாமி ஆகியோர் தனிசன்னிதியில் எழுந்தருளி உள்ளனர். மகா மண்டபத்தை ஒட்டி ராமதூதனான ஆஞ்சநேயர், கோரிக்கை மாலைகளை சுமந்து வடக்கு நோக்கி காட்சி தருகிறார். கோவிலின் பின்புறத்தில் தல விருட்சமாக காரை மரம் விளங்குகிறது. தும்பிக்கை ஆழ்வார் சன்னிதிக்கு பின்புறம் உள்ள பூவரச மரத்தில், பக்தர்கள் குழந்தை வரம், மாங்கல்ய வரம் வேண்டி கயிறு கட்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.
சாப விமோசனம் பெற்ற ரம்பை :
முன்னொரு காலத்தில் விஸ்வாமித்திரர் பல ஆண்டுகளாக தவம் செய்து வந்தார். அதைக் கண்டு பயந்த தேவர்கள், அவரது தவத்தைக் கலைக்க ரம்பையை அனுப்பினர். ரம்பை பூலோகம் வந்து விஸ்வாமித்திரரின் முன்பு நின்று தவத்தைக் கலைக்க முயன்றாள். இதனால் கோபமடைந்த விசுவாமித்திரர், ‘நீ கல்லாகப் போவாய்’ என்று சபித்தார். அதன்படி ரம்பை கல்லாக மாறி அவரது ஆசிரமத்தின் முன்பு பல ஆண்டுகளாக கிடந்தாள்.
இந்த நிலையில் முனிவர் ஒருவரான சபிக்கப்பட்ட கிருதாசீ என்ற தேவ கன்னிகை, ராட்சத உருவம் கொண்டாள். அவள் ஒரு முறை விசுவாமித்திரர் ஆசிரமம் வந்து அவரை தொந்தரவு செய்தாள். இதனால் ஆத்திரமடைந்த விசுவாமித்திரர், கல்லாக கிடந்த ரம்பையை எடுத்து ராட்சசியின் மீது வீசினார். இருவரும் அருகில் இருந்த பத்ம தீர்த்தத்தில் விழுந்தனர். அந்தத் தீர்த்தம் பெருமாளால் உருவாக்கப்பட்டது. எனவே அவர்கள் இருவரும் தங்கள் சுயஉருவை அடைந்தனர். பின் இத்தல இறைவனை வழிபட்டு தேவலோகம் சென்றனர்.
திருவிழாக்கள் :
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 10 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறும். சித்ரா பவுர்ணமி அன்று தேரோட்டம் நடைபெறும். இது தவிர புரட்டாசி சனிக்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி, அனுமன்ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, தீபாவளி, பொங்கல் திருநாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நடை திறந்தே இருக்கும். தினமும் 3 கால பூஜை நடைபெறுகிறது.
சிந்தையை தெளியவைக்கும் பத்மதீர்த்தம் :
சோம வம்சத்தை சேர்ந்த நந்தபூபாலர் தர்மநெறியுடன் இந்த பூமியை ஆட்சி செய்து வந்தார். பின்னர் அவர் ஆட்சி பொறுப்பை தனது புத்திரன் தர்மகுப்தரிடம் ஒப்படைத்து விட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றார். தந்தையை போல் தனயனும் சிறப்பாக தர்மநெறியுடன் ஆட்சி செய்தார்.
ஒரு முறை அவருக்கு புத்தி சுவாதீனம் இல்லாமல் போயிற்று. இதையடுத்து தர்மகுப்தரை, அவரது மந்திரிகள், காட்டில் தவம் செய்து கொண்டிருந்த நந்தபூபாலரிடம் அழைத்துச் சென்றனர். அவரும் மகனை அழைத்து கொண்டு ஜைமினி மகரிஷியை சந்தித்து, தனது மகன் சாபவிமோசனம் பெற வழிகூறுமாறு வேண்டினார்.
அதை கேட்ட மகரிஷி, ‘தென்சமுத்திர கரையோரம் பாலமலை இருக்கிறது. அங்குள்ள பத்மதீர்த்தத்தில் புனித நீராடி நாராயணனை பிரார்த்தனை செய்து வந்தால் பலன் கிடைக்கும்’ என்றார். அதன்படி பாலமலை வந்த தர்மகுப்தன் தினமும் பத்மதீர்த்தத்தில் நீராடி அரங்கனை ஒரு ஆண்டு காலம் வழிபட்டு வந்தார். தர்மகுப்தனின் பக்தியில் மனம் இரங்கிய அரங்கன், புத்தி சுவாதீனம் தெளிந்து நீங்கி மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வரம் வழங்கினார்.
அமைவிடம் :
கோவை காந்திபுரத்தில் இருந்து பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள கோவனூருக்கு அடிக்கடி அரசு டவுன் பஸ்கள் இருக்கிறது. அங்கிருந்து தனியார் ஜீப்புகள் மூலம் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பால மலைக்கு செல்லலாம். அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் உண்டு. தனியே நடந்து செல்வதோ, மோட்டார் சைக்கிளில் செல்வதோ சவுகரியம் அல்ல.
ஆலய வரலாறு :
முன் காலத்தில் காரை வனமாக இருந்த இப்பகுதியில் வசித்த மக்கள், பசு மாடுகளை வளர்த்து வந்தனர். அதில் ஒரு பசு தினமும் காரை வனத்துக்குள் புகுந்து அங்கிருந்த ஒரு காரை மரத்துக்கு அடியில் பாலை சுரந்து வந்தது. இதனைப் பார்த்த பசுவின் உரிமையாளர் இதுபற்றி ஊர் மக்களிடம் தெரிவித்தார். அவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒலித்த அசரீரி, ‘நான் இங்கு அரங்கனாக எழுந்தருளி உள்ளேன்’ என்றது.
இதைத் தொடர்ந்து அங்கு சுயம்புவாக இருந்த பெருமாளை, சிறிய குடில் அமைத்து வழிபடத் தொடங்கினர். நாளடைவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரங்கநாதருக்கு சிறிய கோவில் கட்டி வழிபட வேண்டும் என்று விரும்பினர். இந்த நிலையில் ஒரு நாள் அந்தப் பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. வெடிச்சத்தம் வந்த இடத்திற்கு சென்று மக்கள் பார்த்தனர். அப்போது ஒலித்த அசரீரி, ‘வெடி சத்தம் கேட்ட ஈசானிய மூலையில் பாறைகளும், வாயு மூலையில் மண்ணும் கிடைக்கும். அதை கொண்டு கோவில் கட்டுங்கள்’ என்றது.
அசரீரியின் வாக்குப்படியே அந்தப்பகுதியில் இருந்து கிடைத்த பாறாங்கற்களையும், மணலையும் கொண்டு கோவில் கட்டி எழுப்பப்பட்டது. கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாமல் இருந்ததால் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து 27.1.2002-ல் 3 நிலை ராஜகோபுரத்தை அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினர்.
ஆலய தரிசனம் :
திருக்கோவிலை அடைந்தவுடன் ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் அர்த்தமண்டபத்தில் சக்கரத்தாழ்வாரையும், யோக நரசிம்மரையும் ஒரே சன்னிதியில் தரிசிக்கலாம். சக்கரத்தாழ்வார் கிழக்கு நோக்கியும், அதே பீடத்தில் மேற்கு நோக்கி யோக நரசிம்மரும் காட்சி தருகின்றனர். மகா மண்டபத்தில் ஊஞ்சலில் பள்ளிகொண்ட கோலத்தில் அரங்கநாதர் உற்சவ மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கிறார். அவருடன் செங்கோதை, பூங்கோதை தாயார் வீற்றிருக்கின்றனர்.
அர்த்த மண்டபத்தில் நின்று கருவறையில் எழுந்தருளிய அரங்கநாதரை வழிபடலாம். சுமார் 4½ அடி உயரம் கொண்ட திருவுருவம், அலங்கார பிரியர் என்பதால் மலர் மாலைகள் சூழ காட்சி தருகிறார். நான்கு திருக்கரங்களுடன், நின்ற திருக் கோலத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். சுயம்பு மூர்த்தியாய் வெளிப்பட்ட அரங்கநாதருக்கு முதலில் பூஜை நடைபெற்ற பின்னர் தான் மற்ற தெய்வங்களுக்கு பூஜை நடைபெறுகிறது.
மூலவருக்கு வடக்குப்பகுதியில் பூங்கோதை தாயாரும், தென் பகுதியில் செங்கோதையம்மன் தாயாரும் தனித்தனி சன்னிதியில் நின்றபடி அருள்புரிகின்றனர். கோவிலின் தென்புறத்தில் தேவியரோடு பரமவாசுதேவன் தனி சன்னிதியில் சேவை சாதிக்க, அதன் முன்புறம் பன்னிரு ஆழ்வார்களின் திருமேனிகள் உள்ளன.
கோவிலின் பின்புறம் தும்பிக்கையாழ்வார், ராமானுஜர், காளிஅண்ணன் சுவாமி ஆகியோர் தனிசன்னிதியில் எழுந்தருளி உள்ளனர். மகா மண்டபத்தை ஒட்டி ராமதூதனான ஆஞ்சநேயர், கோரிக்கை மாலைகளை சுமந்து வடக்கு நோக்கி காட்சி தருகிறார். கோவிலின் பின்புறத்தில் தல விருட்சமாக காரை மரம் விளங்குகிறது. தும்பிக்கை ஆழ்வார் சன்னிதிக்கு பின்புறம் உள்ள பூவரச மரத்தில், பக்தர்கள் குழந்தை வரம், மாங்கல்ய வரம் வேண்டி கயிறு கட்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.
சாப விமோசனம் பெற்ற ரம்பை :
முன்னொரு காலத்தில் விஸ்வாமித்திரர் பல ஆண்டுகளாக தவம் செய்து வந்தார். அதைக் கண்டு பயந்த தேவர்கள், அவரது தவத்தைக் கலைக்க ரம்பையை அனுப்பினர். ரம்பை பூலோகம் வந்து விஸ்வாமித்திரரின் முன்பு நின்று தவத்தைக் கலைக்க முயன்றாள். இதனால் கோபமடைந்த விசுவாமித்திரர், ‘நீ கல்லாகப் போவாய்’ என்று சபித்தார். அதன்படி ரம்பை கல்லாக மாறி அவரது ஆசிரமத்தின் முன்பு பல ஆண்டுகளாக கிடந்தாள்.
இந்த நிலையில் முனிவர் ஒருவரான சபிக்கப்பட்ட கிருதாசீ என்ற தேவ கன்னிகை, ராட்சத உருவம் கொண்டாள். அவள் ஒரு முறை விசுவாமித்திரர் ஆசிரமம் வந்து அவரை தொந்தரவு செய்தாள். இதனால் ஆத்திரமடைந்த விசுவாமித்திரர், கல்லாக கிடந்த ரம்பையை எடுத்து ராட்சசியின் மீது வீசினார். இருவரும் அருகில் இருந்த பத்ம தீர்த்தத்தில் விழுந்தனர். அந்தத் தீர்த்தம் பெருமாளால் உருவாக்கப்பட்டது. எனவே அவர்கள் இருவரும் தங்கள் சுயஉருவை அடைந்தனர். பின் இத்தல இறைவனை வழிபட்டு தேவலோகம் சென்றனர்.
திருவிழாக்கள் :
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 10 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறும். சித்ரா பவுர்ணமி அன்று தேரோட்டம் நடைபெறும். இது தவிர புரட்டாசி சனிக்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி, அனுமன்ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, தீபாவளி, பொங்கல் திருநாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நடை திறந்தே இருக்கும். தினமும் 3 கால பூஜை நடைபெறுகிறது.
சிந்தையை தெளியவைக்கும் பத்மதீர்த்தம் :
சோம வம்சத்தை சேர்ந்த நந்தபூபாலர் தர்மநெறியுடன் இந்த பூமியை ஆட்சி செய்து வந்தார். பின்னர் அவர் ஆட்சி பொறுப்பை தனது புத்திரன் தர்மகுப்தரிடம் ஒப்படைத்து விட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றார். தந்தையை போல் தனயனும் சிறப்பாக தர்மநெறியுடன் ஆட்சி செய்தார்.
ஒரு முறை அவருக்கு புத்தி சுவாதீனம் இல்லாமல் போயிற்று. இதையடுத்து தர்மகுப்தரை, அவரது மந்திரிகள், காட்டில் தவம் செய்து கொண்டிருந்த நந்தபூபாலரிடம் அழைத்துச் சென்றனர். அவரும் மகனை அழைத்து கொண்டு ஜைமினி மகரிஷியை சந்தித்து, தனது மகன் சாபவிமோசனம் பெற வழிகூறுமாறு வேண்டினார்.
அதை கேட்ட மகரிஷி, ‘தென்சமுத்திர கரையோரம் பாலமலை இருக்கிறது. அங்குள்ள பத்மதீர்த்தத்தில் புனித நீராடி நாராயணனை பிரார்த்தனை செய்து வந்தால் பலன் கிடைக்கும்’ என்றார். அதன்படி பாலமலை வந்த தர்மகுப்தன் தினமும் பத்மதீர்த்தத்தில் நீராடி அரங்கனை ஒரு ஆண்டு காலம் வழிபட்டு வந்தார். தர்மகுப்தனின் பக்தியில் மனம் இரங்கிய அரங்கன், புத்தி சுவாதீனம் தெளிந்து நீங்கி மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வரம் வழங்கினார்.
அமைவிடம் :
கோவை காந்திபுரத்தில் இருந்து பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள கோவனூருக்கு அடிக்கடி அரசு டவுன் பஸ்கள் இருக்கிறது. அங்கிருந்து தனியார் ஜீப்புகள் மூலம் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பால மலைக்கு செல்லலாம். அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் உண்டு. தனியே நடந்து செல்வதோ, மோட்டார் சைக்கிளில் செல்வதோ சவுகரியம் அல்ல.
மலையைக் குடைந்து, குடைவரைக் கோயிலாகக் கட்டப்பட்ட தலம் இது. சுமார் 1500 வருடங்களுக்கு முந்தைய ஆலயம் என்பதை, கற்களும் கட்டுமானப் பணிகளும் தெரிவிக்கின்றன.
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில், சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது வள்ளியூர். இங்கே, குன்றின் மேலே கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசுப்ரமண்யர்! குன்றிருக்கும் இடத்தில் குமரன் இருப்பான். குமரன் இருக்கும் இடத்தில், நமக்கு குறைவே இருக்காது என்பது ஐதீகம்!
வேலாண்டித் தம்பிரான் சுவாமிகள், அருணாசலம் பிள்ளை ஆகியோர் திருப்பணிகள் மேற்கொண்டதாகத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் உள்ளன. மிகப் புராதனமான, சாந்நித்தியம் நிறைந்த திருக்கோயில் என்று சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்.
இந்திரன், அகத்திய முனிவர், அருணகிரிநாதர், இடைக்காட்டு சித்தர் ஆகியோர் இங்கு வந்து நெடுங்காலம் தங்கி, ஸ்ரீசுப்ரமண்யரை வழிபட்டு, வரம் பெற்றுள்ளனர் என்கிறது ஸ்தல புராணம். வண்ணச்சரபம் தண்டபாணி தேசிகர் சுவாமிகள், இங்கே உள்ள ஸ்ரீசுப்ரமண்யரின் அழகில், சொக்கிப் போய் மனமுருகி பல பாடல்கள் பாடி அருளியுள்ளார்.
வள்ளியை மணம் முடித்த முருகப்பெருமான், மகேந்திரகிரி மலைக்கு கிழக்கு புறமுள்ள மலைக்குன்றில் தனிக்குடித்தனம் நடத்தியதால் அந்த தலம் வள்ளியூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. முன்னொரு காலத்தில் கிரவுஞ்ச அசுரன் மலை உருவில் இருந்தான். அகத்தியரின் சாபம் காரணமாக முருகப்பெருமானின் வேல் பட்டு அந்த மலை 3 துண்டுகளாக சிதறியது. அந்த அசுரனின் தலைப்பாகம் தான் வள்ளியூர் குன்று என்றும் புராணத்தகவலில் கூறப்பட்டுள்ளது. அந்த குன்றில் முருகப்பெருமான் வசித்ததால் அது பூரணகிரி என்று அழைக்கப்பட்டது.
முருகப்பெருமான் வள்ளியுடன் பூரணகிரியில் இருப்பதை அறிந்த அகத்தியர் அங்கு வந்து முருகப்பெருமானை வணங்கினார். முருகனும் அகத்தியருக்கு குரு ஸ்தானத்தில் கிழக்கு முகமாக நின்று நான்மறை பொருளுரைத்தார். அகத்தியரும் மேற்கு முகமாக மாணவன் ஸ்தானத்தில் நின்று நான்மறை பொருளை உபதேசம் பெற்று பூரணகிரியை வலம் வந்தார். அப்போது குகையின் தெற்கு புறத்தில் தெய்வானை சோகத்துடன் நிற்பதை கண்டு அகத்தியர் திடுக்கிட்டார். முருகப்பெருமானை காணவந்த தன்னை வள்ளி அனுமதிக்காததால் வெளியே நிற்பதாக கூறி மனம் வருந்தினாள் தெய்வானை.
அகத்தியரும் தெய்வானையை வள்ளியிடம் அழைத்துச்சென்று வள்ளிதெய்வானை ஆகிய இருவரின் முந்தைய பிறவியை எடுத்துக்கூறினார். அதன்படி இருவரும் சகோதரிகள் என்பதை அறிந்ததும் அவர்கள் சண்டைபோடுவதை நிறுத்திக்கொண்டு முருகப்பெருமானின் இருபுறமும் நின்று அகத்தியருக்கு அருள்பாலித்தனர். இப்படிப்பட்ட சிறப்பு கொண்ட வள்ளியூர் தலம் நெல்லை மாவட்டத்தில் பெரிய குகைக்கோயிலாக கருதப்படுகிறது. பிற கோயில்களில் முருகன் குன்றின் மேல் நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆனால் இங்கு குன்றுக்குள் இருந்து அருள்பாலிக்கிறார் என்பது விசேஷம்.
கோயிலின் கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக்கொண்டிருக்கிறார். தேவரூபமாயிருந்து முருகனை பிம்பரூபமாக இருக்க தேவேந்திரன் வேண்டினார். முருகனும் பிம்பரூபமாக தன் இருதேவியருடன் காட்சி தந்தார். தேவேந்திரனும் பிம்ப பிரதிஷ்டையை ஆகம முறையில் செய்து முருகனை வணங்கினார். அப்போது முருகப்பெருமான் வள்ளியுடன் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று தெப்பத்தில் காட்சி கொடுத்தார். அதுவே இன்றும் தெப்பத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
அதேபோல வள்ளியின் வேண்டுகோளின்படி முருகப்பெருமான் தன் கைவேலை ஊன்றி புனித தீர்த்தத்தை உருவாக்கினார். அதுவே சரவணப்பொய்கை என்று அழைக்கப்பட்டு வருகிறது. கனகவல்லி என்ற பெண்ணும், ஒரு வேடனும் தாங்கள் செய்த பாவத்தால் நாயாய் பிறந்தனர். அவர்கள் இருவரும் இந்த சரவணப்பொய்கையில் மூழ்கி முக்தி பெற்றார்கள் என்று கூறுகிறது தலப்புராணம். இங்குள்ள குமரனையும் வள்ளிதெய்வானை தேவியரையும் வணங்குவோர் நல்லறிவும் ஞானமும் பெற்று சர்வ நலமுடன் வாழ்வர் என்பது நம்பிக்கை.
வள்ளியூரை ஆண்டு வந்த அற்பகன் என்ற அரசன் தனது மனைவி மகாபாகையுடன் மகேந்திரகிரியில் குழந்தை வேண்டி தவம் செய்தான். அங்குவந்த பரசுராமர் வல்லிக்கொடி ஒன்றை அந்த அரசனிடம் கொடுத்தார். அந்த கொடி பெண் குழந்தையாக மாற அந்த குழந்தையை கொண்டு வந்து வல்லி என்ற பெயரிட்டு வளர்த்து வந்தனர். பெண் குழந்தை பருவமடைந்த பின்னர் அரச முறைப்படி முருகன் வள்ளியின் அம்சமாகிய வல்லியை மணம் செய்தார்.
இந்நகரை வல்லி ஆண்டதால் வல்லி மாநகரம் என்றும் அழைத்தார்கள்.இப்படி சிறப்பு பெற்ற வள்ளியூர் தலத்தில் சித்திரை மாதம் அசுவதி நட்சத்திரத்தில் கொடியேறி 10 நாட்கள் திருவிழா நடைபெறும். 9வது நாளில் தேரோட்டம் நடைபெறும். வைகாசி விசாகத்தின் வசந்தம் திருவிழா 10 நாட்களும், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தெப்பத்திருவிழாவும் நடைபெறும்.
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் வள்ளியூர் அமைந்துள்ளது. வள்ளியூரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் வள்ளியூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. வள்ளியூர் ரயில் நிலையத்தின் மிக அருகில் இந்த கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலாண்டித் தம்பிரான் சுவாமிகள், அருணாசலம் பிள்ளை ஆகியோர் திருப்பணிகள் மேற்கொண்டதாகத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் உள்ளன. மிகப் புராதனமான, சாந்நித்தியம் நிறைந்த திருக்கோயில் என்று சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்.
இந்திரன், அகத்திய முனிவர், அருணகிரிநாதர், இடைக்காட்டு சித்தர் ஆகியோர் இங்கு வந்து நெடுங்காலம் தங்கி, ஸ்ரீசுப்ரமண்யரை வழிபட்டு, வரம் பெற்றுள்ளனர் என்கிறது ஸ்தல புராணம். வண்ணச்சரபம் தண்டபாணி தேசிகர் சுவாமிகள், இங்கே உள்ள ஸ்ரீசுப்ரமண்யரின் அழகில், சொக்கிப் போய் மனமுருகி பல பாடல்கள் பாடி அருளியுள்ளார்.
வள்ளியை மணம் முடித்த முருகப்பெருமான், மகேந்திரகிரி மலைக்கு கிழக்கு புறமுள்ள மலைக்குன்றில் தனிக்குடித்தனம் நடத்தியதால் அந்த தலம் வள்ளியூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. முன்னொரு காலத்தில் கிரவுஞ்ச அசுரன் மலை உருவில் இருந்தான். அகத்தியரின் சாபம் காரணமாக முருகப்பெருமானின் வேல் பட்டு அந்த மலை 3 துண்டுகளாக சிதறியது. அந்த அசுரனின் தலைப்பாகம் தான் வள்ளியூர் குன்று என்றும் புராணத்தகவலில் கூறப்பட்டுள்ளது. அந்த குன்றில் முருகப்பெருமான் வசித்ததால் அது பூரணகிரி என்று அழைக்கப்பட்டது.
முருகப்பெருமான் வள்ளியுடன் பூரணகிரியில் இருப்பதை அறிந்த அகத்தியர் அங்கு வந்து முருகப்பெருமானை வணங்கினார். முருகனும் அகத்தியருக்கு குரு ஸ்தானத்தில் கிழக்கு முகமாக நின்று நான்மறை பொருளுரைத்தார். அகத்தியரும் மேற்கு முகமாக மாணவன் ஸ்தானத்தில் நின்று நான்மறை பொருளை உபதேசம் பெற்று பூரணகிரியை வலம் வந்தார். அப்போது குகையின் தெற்கு புறத்தில் தெய்வானை சோகத்துடன் நிற்பதை கண்டு அகத்தியர் திடுக்கிட்டார். முருகப்பெருமானை காணவந்த தன்னை வள்ளி அனுமதிக்காததால் வெளியே நிற்பதாக கூறி மனம் வருந்தினாள் தெய்வானை.
அகத்தியரும் தெய்வானையை வள்ளியிடம் அழைத்துச்சென்று வள்ளிதெய்வானை ஆகிய இருவரின் முந்தைய பிறவியை எடுத்துக்கூறினார். அதன்படி இருவரும் சகோதரிகள் என்பதை அறிந்ததும் அவர்கள் சண்டைபோடுவதை நிறுத்திக்கொண்டு முருகப்பெருமானின் இருபுறமும் நின்று அகத்தியருக்கு அருள்பாலித்தனர். இப்படிப்பட்ட சிறப்பு கொண்ட வள்ளியூர் தலம் நெல்லை மாவட்டத்தில் பெரிய குகைக்கோயிலாக கருதப்படுகிறது. பிற கோயில்களில் முருகன் குன்றின் மேல் நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆனால் இங்கு குன்றுக்குள் இருந்து அருள்பாலிக்கிறார் என்பது விசேஷம்.
கோயிலின் கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக்கொண்டிருக்கிறார். தேவரூபமாயிருந்து முருகனை பிம்பரூபமாக இருக்க தேவேந்திரன் வேண்டினார். முருகனும் பிம்பரூபமாக தன் இருதேவியருடன் காட்சி தந்தார். தேவேந்திரனும் பிம்ப பிரதிஷ்டையை ஆகம முறையில் செய்து முருகனை வணங்கினார். அப்போது முருகப்பெருமான் வள்ளியுடன் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று தெப்பத்தில் காட்சி கொடுத்தார். அதுவே இன்றும் தெப்பத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
அதேபோல வள்ளியின் வேண்டுகோளின்படி முருகப்பெருமான் தன் கைவேலை ஊன்றி புனித தீர்த்தத்தை உருவாக்கினார். அதுவே சரவணப்பொய்கை என்று அழைக்கப்பட்டு வருகிறது. கனகவல்லி என்ற பெண்ணும், ஒரு வேடனும் தாங்கள் செய்த பாவத்தால் நாயாய் பிறந்தனர். அவர்கள் இருவரும் இந்த சரவணப்பொய்கையில் மூழ்கி முக்தி பெற்றார்கள் என்று கூறுகிறது தலப்புராணம். இங்குள்ள குமரனையும் வள்ளிதெய்வானை தேவியரையும் வணங்குவோர் நல்லறிவும் ஞானமும் பெற்று சர்வ நலமுடன் வாழ்வர் என்பது நம்பிக்கை.
வள்ளியூரை ஆண்டு வந்த அற்பகன் என்ற அரசன் தனது மனைவி மகாபாகையுடன் மகேந்திரகிரியில் குழந்தை வேண்டி தவம் செய்தான். அங்குவந்த பரசுராமர் வல்லிக்கொடி ஒன்றை அந்த அரசனிடம் கொடுத்தார். அந்த கொடி பெண் குழந்தையாக மாற அந்த குழந்தையை கொண்டு வந்து வல்லி என்ற பெயரிட்டு வளர்த்து வந்தனர். பெண் குழந்தை பருவமடைந்த பின்னர் அரச முறைப்படி முருகன் வள்ளியின் அம்சமாகிய வல்லியை மணம் செய்தார்.
இந்நகரை வல்லி ஆண்டதால் வல்லி மாநகரம் என்றும் அழைத்தார்கள்.இப்படி சிறப்பு பெற்ற வள்ளியூர் தலத்தில் சித்திரை மாதம் அசுவதி நட்சத்திரத்தில் கொடியேறி 10 நாட்கள் திருவிழா நடைபெறும். 9வது நாளில் தேரோட்டம் நடைபெறும். வைகாசி விசாகத்தின் வசந்தம் திருவிழா 10 நாட்களும், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தெப்பத்திருவிழாவும் நடைபெறும்.
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் வள்ளியூர் அமைந்துள்ளது. வள்ளியூரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் வள்ளியூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. வள்ளியூர் ரயில் நிலையத்தின் மிக அருகில் இந்த கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்புடைமருதூரில் உள்ள நாறும்பூநாதர் கோவில் ‘கடையார்ச்சுனம்’ என்று போற்றப்படுகிறது. இந்த ஆலயமானது சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு கோமதி உடனாய நாறும்பூநாதர் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
நாறும்பூநாதர்
ஆலயத் தோற்றம்
கோமதி அம்பாள்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது திருப்புடைமருதூர் திருத்தலம். இங்கு நாறும்பூநாதர் கோவில் அமைந்துள்ளது. இது அம்பாசமுத்திரத்திற்கு வடகிழக்கே, தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த சிவாலயம் ஆகும்.
மருத மரத்தில் சிவபெருமான் எழுந்தருளிய திருத்தலங்கள், ‘அர்ச்சுன தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன. ‘அர்ச்சுனம்’ என்றால் ‘மருதமரம்’ என்று பொருள். அந்த வகையில் அர்ச்சுன தலங்களில் ‘தலையார்ச்சுனம்’ என்று அழைக்கப்படுவது ஸ்ரீசைலம். இது தேவார வைப்புத் தலம் ஆகும்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில், ‘இடையார்ச்சுனம்’ என்று அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் உள்ள நாறும்பூநாதர் கோவில் ‘கடையார்ச்சுனம்’ என்று போற்றப்படுகிறது. இந்த ஆலயமானது சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவிலாகும். இங்கு கோமதி உடனாய நாறும்பூநாதர் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
தல வரலாறு
வீரமார்தாண்டவர்மன் என்ற மன்னன், ஒரு முறை மருத வனமாக இருந்த இந்தப் பகுதிக்கு வேட்டையாட வந்தான். அப்போது அவனது கண்ணில் ஒரு மான் தென்பட்டது. அந்த மானை நோக்கி மன்னன் அம்பு எய்தான். அந்த மான் அங்கிருந்த ஒரு மருத மரத்திற்குள் சென்று மறைந்தது.
மன்னனும் அந்த மரத்தின் அருகில் சென்று, அதில் இருந்த பொந்துக்குள் உற்று நோக்கினான். அப்போது அதிசயிக்கும் விதமாக அந்த மான், சிவலிங்கமாக மாறி, இந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் நாறும்பூநாதராக மன்னனுக்கு காட்சியளித்தது. இதையடுத்து வீரமார்த்தாண்டவர்மன், இந்தப் பகுதியில் இறைவனுக்கு ஆலயம் எழுப்பியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்த ஆலயத்தில் சிவபெருமான், ‘திருநாறும்பூநாதர்’ என்ற பெயரில் லிங்க உருவத்தில் காட்சி தருகிறார். இவரது திருமேனி சற்றே சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. அம்பாளின் திருப்பெயர் ‘கோமதி.’ மிகச்சிறந்த வரப்பிரசாதியாகவும், பெருங்கருணைக் கொண்டவளாகவும் விளங்கும் இந்த அன்னை, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில், இத்தல அம்பாள் தன்னுடைய உச்சி முதல் பாதம் வரை ருத்ராட்சத்தை தாங்கியபடி வீற்றிருப்பது விசேஷமான அமைப்பாகும். இது `தாரகா சக்தி பீடம்' என்று அழைக்கப்படுகிறது.
பெரும்பாலும் சிவாலயங்களில் சிவலிங்கம் தான் சுயம்புமூர்த்தியாக இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில், சிவலிங்கம், அம்பாள் இருவருமே சுயம்பு மூர்த்தியாக இருப்பது அரிதிலும் அரிதான சிறப்புக்குரியது. காசியில் பாயும் கங்கையானது, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பாய்வதைப் போல, திருப்புடைமருதூரில் பாயும் தாமிரபரணியானது, தெற்கில் இருந்து வடக்காக பாய்கிறது. எனவே இந்த தலத்தை ‘தென்னக காசி’ என்றும் அழைக்கிறார்கள்.
திருப்புடைமருதூர் திருக்கோவில் அமைந்த ஆற்றங்கரையில் உள்ள தீர்த்த கட்டத்திற்கு, ‘சுரேந்திர மோட்ச தீர்த்தம்’ என்று பெயர். இந்திரனும், அவனது மனைவி இந்திராணியும் இந்த இடத்தில் தவம் செய்து, தங்களுடைய தோஷம் நீங்க வேண்டி, இந்த தீர்த்த கட்டத்தில் நீராடியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.
ஐந்து நிலைகளையும், 11 கலசங்களையும் கொண்டதாக, இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் திகழ்கிறது. கோபுரத்தின் தளங்களில் ஏராளமான சுவர் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், கந்தபுராணம், தசாவதாரம் போன்றவற்றின் காட்சிகளும், கோவில் தல வரலாறு குறித்த காட்சிகளும், சீன நாட்டு வணிகர்களின் வருகை பற்றிய தகவல்களும் வரையப்பட்டுள்ளன.
இந்த ஆலயத்தில் கஜானன் மகராஜ் கைங்கர்ய சபா சார்பில், வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை), இந்த வருடத்தின் முதல் சனி மகாப் பிரதோஷம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவோடு, ராஜகோபுரத்தின் திருப்பணியை மேற்கொள்வதற்கான வேண்டுதல் விழாவும் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் ஆலயம் முழுவதும் 10 ஆயிரத்து 8 தீபங்கள் ஏற்றப்படுகிறது.
24-ந் தேதி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த மகா பிரதோஷ பூஜையின் சிறப்பு அம்சமாக மூவாயிரத்து இருபத்து நான்கு செவ்விளநீர் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதோடு செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை மலர்களைக் கொண்டு அலங்காரமும் செய்யப்படுகிறது.
ஜாதகரீதியாக கெடுபலன் உள்ளவர்கள், இந்த பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டால், அவர்கள் நிலை நல்லவிதமாக மாறும் என்பது ஐதீகம். இதில் கலந்துகொள்ளும் பக்தர்கள், தங்களின் வேண்டுதல்களை ஒரு பேப்பரில் எழுதி சமர்ப்பிக்கும் வகையில், பிரார்த்தனைப் பெட்டி வைக்கப் பட்டுள்ளது. ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் சிரமப்படாமல் இருக்க, வீரவநல்லூர் மற்றும் முக்கூடல் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து திருப்புடைமருதூர் ஆலயத்திற்கு மதியம் 2 மணி முதல் பஸ்கள் இலவசமாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வீரவநல்லூர். இங்கிருந்து பிரியும் சாலையில் 7 கிலோமீட்டர் தூரம் சென்றால், திருப்புடைமருதூர் திருத்தலத்தை அடையலாம்.
செவி சாய்த்துக் கேட்கும் ஈசன்
திருப்புடைமருதூர் நாறும்பூநாதரை தரிசிப்பதற்காக, கருவூர் சித்தர் வந்தார். அப்போது தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் அவரால், ஆற்றைக் கடந்து மறுகரையில் இருந்த கோவிலுக்குச் செல்ல முடியவில்லை. அதனால் இருந்த இடத்திலேயே மனமுருக ஈசனை வேண்டினார். ஈசனை மனதில் நினைத்து பாடல் ஒன்றையும் பாடினார். அந்தப் பாடலை ரசித்து கேட்க விரும்பிய ஈசன், தனது இடது காதில் கை வைத்து, ஒரு புறம் சாய்வாக திரும்பினார்.
பின்னர் கருவூர் சித்தரிடம், “என்னை நினைத்தபடியே ஆற்றில் இறங்கி நடந்து வருக” என்றார். கருவூராரும் அப்படியே செய்து, ஆற்றைக் கடந்து சிவனை தரிசித்தார். பின்னர் ஈசனிடம், “ஐயனே.. எக்காலத்திலும் இங்கு வரும் பக்தர்களின் பிரார்த்தனையை செவி சாய்த்து கேட்டு, அதனை நிறைவேற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அதன்படியே இன்றளவும் இத்தல ஈசன், பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை கேட்க செவிசாய்த்தபடி இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆலயத் தோற்றம்
கோமதி அம்பாள்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது திருப்புடைமருதூர் திருத்தலம். இங்கு நாறும்பூநாதர் கோவில் அமைந்துள்ளது. இது அம்பாசமுத்திரத்திற்கு வடகிழக்கே, தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த சிவாலயம் ஆகும்.
மருத மரத்தில் சிவபெருமான் எழுந்தருளிய திருத்தலங்கள், ‘அர்ச்சுன தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன. ‘அர்ச்சுனம்’ என்றால் ‘மருதமரம்’ என்று பொருள். அந்த வகையில் அர்ச்சுன தலங்களில் ‘தலையார்ச்சுனம்’ என்று அழைக்கப்படுவது ஸ்ரீசைலம். இது தேவார வைப்புத் தலம் ஆகும்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில், ‘இடையார்ச்சுனம்’ என்று அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் உள்ள நாறும்பூநாதர் கோவில் ‘கடையார்ச்சுனம்’ என்று போற்றப்படுகிறது. இந்த ஆலயமானது சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவிலாகும். இங்கு கோமதி உடனாய நாறும்பூநாதர் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
தல வரலாறு
வீரமார்தாண்டவர்மன் என்ற மன்னன், ஒரு முறை மருத வனமாக இருந்த இந்தப் பகுதிக்கு வேட்டையாட வந்தான். அப்போது அவனது கண்ணில் ஒரு மான் தென்பட்டது. அந்த மானை நோக்கி மன்னன் அம்பு எய்தான். அந்த மான் அங்கிருந்த ஒரு மருத மரத்திற்குள் சென்று மறைந்தது.
மன்னனும் அந்த மரத்தின் அருகில் சென்று, அதில் இருந்த பொந்துக்குள் உற்று நோக்கினான். அப்போது அதிசயிக்கும் விதமாக அந்த மான், சிவலிங்கமாக மாறி, இந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் நாறும்பூநாதராக மன்னனுக்கு காட்சியளித்தது. இதையடுத்து வீரமார்த்தாண்டவர்மன், இந்தப் பகுதியில் இறைவனுக்கு ஆலயம் எழுப்பியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்த ஆலயத்தில் சிவபெருமான், ‘திருநாறும்பூநாதர்’ என்ற பெயரில் லிங்க உருவத்தில் காட்சி தருகிறார். இவரது திருமேனி சற்றே சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. அம்பாளின் திருப்பெயர் ‘கோமதி.’ மிகச்சிறந்த வரப்பிரசாதியாகவும், பெருங்கருணைக் கொண்டவளாகவும் விளங்கும் இந்த அன்னை, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில், இத்தல அம்பாள் தன்னுடைய உச்சி முதல் பாதம் வரை ருத்ராட்சத்தை தாங்கியபடி வீற்றிருப்பது விசேஷமான அமைப்பாகும். இது `தாரகா சக்தி பீடம்' என்று அழைக்கப்படுகிறது.
பெரும்பாலும் சிவாலயங்களில் சிவலிங்கம் தான் சுயம்புமூர்த்தியாக இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில், சிவலிங்கம், அம்பாள் இருவருமே சுயம்பு மூர்த்தியாக இருப்பது அரிதிலும் அரிதான சிறப்புக்குரியது. காசியில் பாயும் கங்கையானது, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பாய்வதைப் போல, திருப்புடைமருதூரில் பாயும் தாமிரபரணியானது, தெற்கில் இருந்து வடக்காக பாய்கிறது. எனவே இந்த தலத்தை ‘தென்னக காசி’ என்றும் அழைக்கிறார்கள்.
திருப்புடைமருதூர் திருக்கோவில் அமைந்த ஆற்றங்கரையில் உள்ள தீர்த்த கட்டத்திற்கு, ‘சுரேந்திர மோட்ச தீர்த்தம்’ என்று பெயர். இந்திரனும், அவனது மனைவி இந்திராணியும் இந்த இடத்தில் தவம் செய்து, தங்களுடைய தோஷம் நீங்க வேண்டி, இந்த தீர்த்த கட்டத்தில் நீராடியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.
ஐந்து நிலைகளையும், 11 கலசங்களையும் கொண்டதாக, இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் திகழ்கிறது. கோபுரத்தின் தளங்களில் ஏராளமான சுவர் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், கந்தபுராணம், தசாவதாரம் போன்றவற்றின் காட்சிகளும், கோவில் தல வரலாறு குறித்த காட்சிகளும், சீன நாட்டு வணிகர்களின் வருகை பற்றிய தகவல்களும் வரையப்பட்டுள்ளன.
இந்த ஆலயத்தில் கஜானன் மகராஜ் கைங்கர்ய சபா சார்பில், வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை), இந்த வருடத்தின் முதல் சனி மகாப் பிரதோஷம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவோடு, ராஜகோபுரத்தின் திருப்பணியை மேற்கொள்வதற்கான வேண்டுதல் விழாவும் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் ஆலயம் முழுவதும் 10 ஆயிரத்து 8 தீபங்கள் ஏற்றப்படுகிறது.
24-ந் தேதி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த மகா பிரதோஷ பூஜையின் சிறப்பு அம்சமாக மூவாயிரத்து இருபத்து நான்கு செவ்விளநீர் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதோடு செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை மலர்களைக் கொண்டு அலங்காரமும் செய்யப்படுகிறது.
ஜாதகரீதியாக கெடுபலன் உள்ளவர்கள், இந்த பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டால், அவர்கள் நிலை நல்லவிதமாக மாறும் என்பது ஐதீகம். இதில் கலந்துகொள்ளும் பக்தர்கள், தங்களின் வேண்டுதல்களை ஒரு பேப்பரில் எழுதி சமர்ப்பிக்கும் வகையில், பிரார்த்தனைப் பெட்டி வைக்கப் பட்டுள்ளது. ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் சிரமப்படாமல் இருக்க, வீரவநல்லூர் மற்றும் முக்கூடல் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து திருப்புடைமருதூர் ஆலயத்திற்கு மதியம் 2 மணி முதல் பஸ்கள் இலவசமாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வீரவநல்லூர். இங்கிருந்து பிரியும் சாலையில் 7 கிலோமீட்டர் தூரம் சென்றால், திருப்புடைமருதூர் திருத்தலத்தை அடையலாம்.
செவி சாய்த்துக் கேட்கும் ஈசன்
திருப்புடைமருதூர் நாறும்பூநாதரை தரிசிப்பதற்காக, கருவூர் சித்தர் வந்தார். அப்போது தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் அவரால், ஆற்றைக் கடந்து மறுகரையில் இருந்த கோவிலுக்குச் செல்ல முடியவில்லை. அதனால் இருந்த இடத்திலேயே மனமுருக ஈசனை வேண்டினார். ஈசனை மனதில் நினைத்து பாடல் ஒன்றையும் பாடினார். அந்தப் பாடலை ரசித்து கேட்க விரும்பிய ஈசன், தனது இடது காதில் கை வைத்து, ஒரு புறம் சாய்வாக திரும்பினார்.
பின்னர் கருவூர் சித்தரிடம், “என்னை நினைத்தபடியே ஆற்றில் இறங்கி நடந்து வருக” என்றார். கருவூராரும் அப்படியே செய்து, ஆற்றைக் கடந்து சிவனை தரிசித்தார். பின்னர் ஈசனிடம், “ஐயனே.. எக்காலத்திலும் இங்கு வரும் பக்தர்களின் பிரார்த்தனையை செவி சாய்த்து கேட்டு, அதனை நிறைவேற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அதன்படியே இன்றளவும் இத்தல ஈசன், பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை கேட்க செவிசாய்த்தபடி இருப்பதாக சொல்லப்படுகிறது.
கொத்தங்குடி மீனாட்சி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர், சந்தான சுந்தரேஸ்வரர் ஆலயம் தேவார வைப்புத் தலமாகும். திருஞானசம்பந்தர் க்ஷேத்திர கோவை பதிகத்தில் கொத்தங்குடி என இத்தலத்தை குறிப்பிட்டு அருளியுள்ளார்.
சோழமண்டலத்தில் தேவார பாடல் பெற்ற தலங்கள் பல உள்ளன. இவற்றுள் கொத்தங்குடி மீனாட்சி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர், சந்தான சுந்தரேஸ்வரர் ஆலயம் தேவார வைப்புத் தலமாகும். திருஞானசம்பந்தர் க்ஷேத்திர கோவை பதிகத்தில் கொத்தங்குடி என இத்தலத்தை குறிப்பிட்டு அருளியுள்ளார்.
சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவிலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் கிழக்கே கொத்தங்குடி கிராமத்தில் ஆலயம் அமைத்து ஆராதித்து அருள் பெற்றுள்ளனர். தேவாதி தேவர்களும், மகா முனிவர்களும், ஆன்றோர்களும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
பக்தர்களுக்கு உன்னதமான பக்தி பலன்களையும், செல்வங்களையும் வாரி வழங்கி மிகப்பெரிய ஆவுடையாருடன் மிக அழகான பானத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கிறார் சுந்தரேஸ்வரர். இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் சுந்தரேஸ்வரர் திருமேனி ஆனது சதுரஸ்ரவ்ருத்தம் என்ற அரியதொரு மூர்த்தமாக காட்சி அளிக்கிறது. இத்தலத்தில் பீமன் மானசீகமாக பூஜை செய்ததால் பீமேஸ்வரம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.
இவ்வாலயத்தில் பூக்களை மாலையாகக் கட்டி சூட்டுவதை விட உதிரியாக அதையே புஷ்பார்ச்சனை(புஷ்பாபிஷேகம்) இறைவனுக்கு செய்வதே தல சிறப்பாகும். இத் தலமானது மனிதன் எக்காலத்திலும் கர்வம் கொள்ளலாகாது என்பது கிருஷ்ண பகவான் அர்ஜுணனுக்கு உணர்த்தப்பட்ட திருத்தலம்.
கொத்தங்குடி தலத்தில் அருளாட்சி செய்யும் மீனாட்சி அம்மை பக்தர்களின் குறைகளை, வேண்டுதல்களை, பிரார்த்தனைகளை பல்வேறு தேவைகளை சுந்தரேஸ்வரரிடம் பக்தர்களுக்காக பரிந்து எடுத்துக்கூற, அதனை இறைவன் செவிமடுத்து கேட்பதற்கு ஏற்ப சற்றே தலை சாய்ந்து இருப்பது போல் இறைவன் திருமேனி அமைந்துள்ளது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
புத்திர தோஷம் என்பது குழந்தை இல்லாதது முதல் பிறந்த குழந்தைகள் பெற்றோரை பேணி பாதுகாக்காதது வரையிலான பல கட்ட தோஷங்களாக கூறப்படுகிறது. நன்மக்கட்பேறு எனும் சற்புத்திர சந்தான பாக்கியம், குழந்தை உண்டாவது முதல் அந்த குழந்தை பிறந்து, வளர்ந்து, ஆளாகி குடும்ப தலைவராகி தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு பணிவிடை செய்வதுபோல் தங்களை பெற்றெடுத்த பெற்றோர்களின் முதுமை காலத்தில் அவர்களுக்கு பணிவிடை செய்யும் அனைத்து வகையான குணங்களுடன் கூடிய குழந்தை பாக்கியத்தை அருளும் பிரார்த்தனை தலமாகும்.
கொத்தங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர், சந்தான சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தொட்டில் குழந்தை ரூபத்தில் குலம் செழிக்க, குலம் தழைக்க, புத்திர பாக்கிய பெரும்பேறு சந்தான விருத்தி நல்கி பேரருள் வழங்கும் தலமாக விளங்குகிறது.
ஜனக மகாராஜன் நீண்ட காலம் குழந்தைப்பேறு இல்லாமல் சஞ்சலப்பட்டு பின் யாக பூமியை உழுதபோது கிடைத்த மழலைச் செல்வம் தான் சீதை. தசரதர் பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்து அமிர்தம் பெற்று பிறந்தவர்கள்தான் ராம, லட்சுமண, பரத, சத்துருக்கணர்கள். அதைப்போல மலையத்துவஜனின் குறைதீர்க்க பிறந்தவள் மீனாட்சி.
குழந்தைப் பேற்றிற்காக யாகம், ஹோமம் செய்வது இக்காலகட்டங்களில் இயலாத காரியம். எனவே கொத்தங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்தான சுந்தரேஸ்வரரை வழிபடவே புத்திர பாக்கியம் உண்டாகும் என நம்பப்படுகிறது. ஏழை, எளியவர்கள் புத்திர பாக்கியம் பெறுவதற்காகவும், கடவுள் நம்பிக்கை உள்ள செல்வந்த பெருமக்களும் ஒரு சிறிய உரிய பரிகார வழிபாட்டின் மூலம் சற்புத்திர சந்தான பாக்கியம் பெறுவதற்காகத்தான் கொத்தங்குடி திருத்தலத்தில் அருள்மிகு சந்தான சுந்தரேஸ்வரர் தொட்டில் குழந்தை ரூபத்தில் அனுக்கிரகம் செய்து கொண்டிருக்கிறார்.
இந்த ஆலயத்தின் நிர்வாக பணிகளை மீனாட்சி-சுந்தரேசுவரர் அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இதன் தலைவராக கே.ஜெயராமன், செயலாளராக வி.ரகுபதி, பொருளாளராக பி.மணிகண்டன் மற்றும் பொறுப்பாளர்களாக விஜய், சுவாமிநாதன், முரளிதரன், ஆலோசகராக சங்கரன் ஆகியோர் உள்ளனர். மற்றும் ஆலய அர்ச்சகர் சுந்தரேஸ்வரர் சிவாச்சாரியார் மற்றும் கொத்தங்குடி கிராமவாசிகள் விழாக்களை நடத்தி வருகின்றனர்.
பரிகார பூர்த்தி செய்யும் முறை
சந்தான சுந்தரேஸ்வரரின் பெருங்கருணையால் புத்திர பாக்கியம் குழந்தைப் பேறு பெற்றவர்கள், தங்களின் குழந்தை தொட்டில் குழந்தையாக உள்ள பருவ காலத்திலேயே கொத்தங்குடி தலத்திற்கு மீண்டும் வந்து குழந்தையும், தெய்வமும் ஒன்று என்ற அனுபவ மொழிக்கு ஏற்ப தாங்கள் ஏற்கனவே செய்த முதற்கட்ட வேண்டுதல் பிரார்த்தனை பரிகாரத்தின் தொடர்ச்சியாக சுவாமி-அம்பாளுக்கு அர்ச்சனை செய்து இரண்டாவது கட்ட பரிகாரமாக சந்தான சுந்தரேஸ்வரருக்கு உரிய தெய்வ தொட்டிலில் தங்களின் கைக்குழந்தையை கிழக்கு-மேற்காக உதிரிப்பூ மெத்தையில் படுக்க வைத்து நன்றி கடன் செலுத்தி இரண்டாம் கட்ட பரிகாரத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
கோவிலின் சிறப்புகள்
ஆண்டுதோறும் பங்குனி பவுர்ணமி முதல் நாளில் இருந்து நான்கு நாட்களுக்கு சூரிய உதயத்தில் இருந்து சூரிய பகவான் தன் அருள் கரங்களால் இறைவன் மீது பற்றொளி வீசுவது தனிச்சிறப்பாகும்.
1300 ஆண்டுகள் பழமையான தலம். தேவாரத்தில் திருஞான சம்பந்தர் போற்றிய வைப்புத்தலம். பீமன் இத்தல இறைவனை பூஜித்ததால் பீமேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. சந்தான பாக்கியம் அருளும் தலம்.
மானசீகமான பூஜையே உயர்ந்தது என்று உணர்த்திய தலம். பக்தர்களின் குறைகளை செவிமடுத்து கேட்பதால் இறைவன் சற்றே தலை சாய்ந்து இருப்பது சிறப்பாகும்.
சுந்தரேஸ்வரர் திருமேனியானது சதுரஸ்ரவ்ருத்தம் என்ற அரியதொரு சிவ வடிவம் ஆகும்.
முதற்கட்ட பரிகார முறை
மீனாட்சி அம்மைக்கும், சுந்தரேஸ்வரருக்கும் அர்ச்சனை வழிபாடு செய்து விட்டு பக்தர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளுவதற்காகவே பிறந்த குழந்தை ரூபத்தில் வடிவெடுக்கும் சந்தான சுந்தரேஸ்வரரை சிவாச்சாரியார் மூலம் இரு கரம் தாங்கி ஏந்திக்கொண்டு தெய்வக் குழந்தையின் தொட்டில் அருகில் அடியில் அமர்ந்து கொண்டு தாயாகப் போகும் தங்களின் தாய் மடியில் ஸ்ரீசந்தான சுந்தரேஸ்வரரை சிறிது நேரம் வைத்திருந்து விட்டு பிறகு பத்திரமாக எழுந்து தொட்டியில் உதிரிப் பூ மெத்தை படுக்கையில் குழந்தையை கிழக்கு மேற்காக வைத்து தொட்டிலை மெதுவாக ஆட்டி விட்டு சந்தான சுந்தரேஸ்வரருக்கு மனப்பூர்வமாக வேண்டி முதற்கட்ட பரிகார வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.
கோவில் நடை திறக்கும் நேரம்
ஆண்டுதோறும் இவ்வாலயத்தில் மாத பிரதோஷங்கள், நவராத்திரி மற்றும் சிவராத்திரி சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும். மாலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும். தினமும் காலை 9 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் பரிகாரம் செய்து வழிபடலாம்.
கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக மாத்தூர்- நன்னிலம் சாலையில் கொத்தங்குடி ஆத்துப்பாலம் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவிலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் கிழக்கே கொத்தங்குடி கிராமத்தில் ஆலயம் அமைத்து ஆராதித்து அருள் பெற்றுள்ளனர். தேவாதி தேவர்களும், மகா முனிவர்களும், ஆன்றோர்களும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
பக்தர்களுக்கு உன்னதமான பக்தி பலன்களையும், செல்வங்களையும் வாரி வழங்கி மிகப்பெரிய ஆவுடையாருடன் மிக அழகான பானத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கிறார் சுந்தரேஸ்வரர். இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் சுந்தரேஸ்வரர் திருமேனி ஆனது சதுரஸ்ரவ்ருத்தம் என்ற அரியதொரு மூர்த்தமாக காட்சி அளிக்கிறது. இத்தலத்தில் பீமன் மானசீகமாக பூஜை செய்ததால் பீமேஸ்வரம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.
இவ்வாலயத்தில் பூக்களை மாலையாகக் கட்டி சூட்டுவதை விட உதிரியாக அதையே புஷ்பார்ச்சனை(புஷ்பாபிஷேகம்) இறைவனுக்கு செய்வதே தல சிறப்பாகும். இத் தலமானது மனிதன் எக்காலத்திலும் கர்வம் கொள்ளலாகாது என்பது கிருஷ்ண பகவான் அர்ஜுணனுக்கு உணர்த்தப்பட்ட திருத்தலம்.
கொத்தங்குடி தலத்தில் அருளாட்சி செய்யும் மீனாட்சி அம்மை பக்தர்களின் குறைகளை, வேண்டுதல்களை, பிரார்த்தனைகளை பல்வேறு தேவைகளை சுந்தரேஸ்வரரிடம் பக்தர்களுக்காக பரிந்து எடுத்துக்கூற, அதனை இறைவன் செவிமடுத்து கேட்பதற்கு ஏற்ப சற்றே தலை சாய்ந்து இருப்பது போல் இறைவன் திருமேனி அமைந்துள்ளது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
புத்திர தோஷம் என்பது குழந்தை இல்லாதது முதல் பிறந்த குழந்தைகள் பெற்றோரை பேணி பாதுகாக்காதது வரையிலான பல கட்ட தோஷங்களாக கூறப்படுகிறது. நன்மக்கட்பேறு எனும் சற்புத்திர சந்தான பாக்கியம், குழந்தை உண்டாவது முதல் அந்த குழந்தை பிறந்து, வளர்ந்து, ஆளாகி குடும்ப தலைவராகி தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு பணிவிடை செய்வதுபோல் தங்களை பெற்றெடுத்த பெற்றோர்களின் முதுமை காலத்தில் அவர்களுக்கு பணிவிடை செய்யும் அனைத்து வகையான குணங்களுடன் கூடிய குழந்தை பாக்கியத்தை அருளும் பிரார்த்தனை தலமாகும்.
கொத்தங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர், சந்தான சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தொட்டில் குழந்தை ரூபத்தில் குலம் செழிக்க, குலம் தழைக்க, புத்திர பாக்கிய பெரும்பேறு சந்தான விருத்தி நல்கி பேரருள் வழங்கும் தலமாக விளங்குகிறது.
ஜனக மகாராஜன் நீண்ட காலம் குழந்தைப்பேறு இல்லாமல் சஞ்சலப்பட்டு பின் யாக பூமியை உழுதபோது கிடைத்த மழலைச் செல்வம் தான் சீதை. தசரதர் பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்து அமிர்தம் பெற்று பிறந்தவர்கள்தான் ராம, லட்சுமண, பரத, சத்துருக்கணர்கள். அதைப்போல மலையத்துவஜனின் குறைதீர்க்க பிறந்தவள் மீனாட்சி.
குழந்தைப் பேற்றிற்காக யாகம், ஹோமம் செய்வது இக்காலகட்டங்களில் இயலாத காரியம். எனவே கொத்தங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்தான சுந்தரேஸ்வரரை வழிபடவே புத்திர பாக்கியம் உண்டாகும் என நம்பப்படுகிறது. ஏழை, எளியவர்கள் புத்திர பாக்கியம் பெறுவதற்காகவும், கடவுள் நம்பிக்கை உள்ள செல்வந்த பெருமக்களும் ஒரு சிறிய உரிய பரிகார வழிபாட்டின் மூலம் சற்புத்திர சந்தான பாக்கியம் பெறுவதற்காகத்தான் கொத்தங்குடி திருத்தலத்தில் அருள்மிகு சந்தான சுந்தரேஸ்வரர் தொட்டில் குழந்தை ரூபத்தில் அனுக்கிரகம் செய்து கொண்டிருக்கிறார்.
இந்த ஆலயத்தின் நிர்வாக பணிகளை மீனாட்சி-சுந்தரேசுவரர் அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இதன் தலைவராக கே.ஜெயராமன், செயலாளராக வி.ரகுபதி, பொருளாளராக பி.மணிகண்டன் மற்றும் பொறுப்பாளர்களாக விஜய், சுவாமிநாதன், முரளிதரன், ஆலோசகராக சங்கரன் ஆகியோர் உள்ளனர். மற்றும் ஆலய அர்ச்சகர் சுந்தரேஸ்வரர் சிவாச்சாரியார் மற்றும் கொத்தங்குடி கிராமவாசிகள் விழாக்களை நடத்தி வருகின்றனர்.
பரிகார பூர்த்தி செய்யும் முறை
சந்தான சுந்தரேஸ்வரரின் பெருங்கருணையால் புத்திர பாக்கியம் குழந்தைப் பேறு பெற்றவர்கள், தங்களின் குழந்தை தொட்டில் குழந்தையாக உள்ள பருவ காலத்திலேயே கொத்தங்குடி தலத்திற்கு மீண்டும் வந்து குழந்தையும், தெய்வமும் ஒன்று என்ற அனுபவ மொழிக்கு ஏற்ப தாங்கள் ஏற்கனவே செய்த முதற்கட்ட வேண்டுதல் பிரார்த்தனை பரிகாரத்தின் தொடர்ச்சியாக சுவாமி-அம்பாளுக்கு அர்ச்சனை செய்து இரண்டாவது கட்ட பரிகாரமாக சந்தான சுந்தரேஸ்வரருக்கு உரிய தெய்வ தொட்டிலில் தங்களின் கைக்குழந்தையை கிழக்கு-மேற்காக உதிரிப்பூ மெத்தையில் படுக்க வைத்து நன்றி கடன் செலுத்தி இரண்டாம் கட்ட பரிகாரத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
கோவிலின் சிறப்புகள்
ஆண்டுதோறும் பங்குனி பவுர்ணமி முதல் நாளில் இருந்து நான்கு நாட்களுக்கு சூரிய உதயத்தில் இருந்து சூரிய பகவான் தன் அருள் கரங்களால் இறைவன் மீது பற்றொளி வீசுவது தனிச்சிறப்பாகும்.
1300 ஆண்டுகள் பழமையான தலம். தேவாரத்தில் திருஞான சம்பந்தர் போற்றிய வைப்புத்தலம். பீமன் இத்தல இறைவனை பூஜித்ததால் பீமேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. சந்தான பாக்கியம் அருளும் தலம்.
மானசீகமான பூஜையே உயர்ந்தது என்று உணர்த்திய தலம். பக்தர்களின் குறைகளை செவிமடுத்து கேட்பதால் இறைவன் சற்றே தலை சாய்ந்து இருப்பது சிறப்பாகும்.
சுந்தரேஸ்வரர் திருமேனியானது சதுரஸ்ரவ்ருத்தம் என்ற அரியதொரு சிவ வடிவம் ஆகும்.
முதற்கட்ட பரிகார முறை
மீனாட்சி அம்மைக்கும், சுந்தரேஸ்வரருக்கும் அர்ச்சனை வழிபாடு செய்து விட்டு பக்தர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளுவதற்காகவே பிறந்த குழந்தை ரூபத்தில் வடிவெடுக்கும் சந்தான சுந்தரேஸ்வரரை சிவாச்சாரியார் மூலம் இரு கரம் தாங்கி ஏந்திக்கொண்டு தெய்வக் குழந்தையின் தொட்டில் அருகில் அடியில் அமர்ந்து கொண்டு தாயாகப் போகும் தங்களின் தாய் மடியில் ஸ்ரீசந்தான சுந்தரேஸ்வரரை சிறிது நேரம் வைத்திருந்து விட்டு பிறகு பத்திரமாக எழுந்து தொட்டியில் உதிரிப் பூ மெத்தை படுக்கையில் குழந்தையை கிழக்கு மேற்காக வைத்து தொட்டிலை மெதுவாக ஆட்டி விட்டு சந்தான சுந்தரேஸ்வரருக்கு மனப்பூர்வமாக வேண்டி முதற்கட்ட பரிகார வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.
கோவில் நடை திறக்கும் நேரம்
ஆண்டுதோறும் இவ்வாலயத்தில் மாத பிரதோஷங்கள், நவராத்திரி மற்றும் சிவராத்திரி சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும். மாலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும். தினமும் காலை 9 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் பரிகாரம் செய்து வழிபடலாம்.
கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக மாத்தூர்- நன்னிலம் சாலையில் கொத்தங்குடி ஆத்துப்பாலம் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
தற்போதுள்ள கேதார்நாத் கோவில் முதல் முதலாக பாண்டவர்களால் கட்டப்பட்டது என்றும், அதன் பின்னர் ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மூலவர்:கேதாரீஸ்வரர்
அம்மன்/தாயார்:கேதார கவுரி
தீர்த்தம்:உதககுண்ட தீர்த்தம், கவுரி குண்டம், மந்தாகினி தீர்த்தம்.
ஊர்:கேதார்நாத்
பொது தகவல்:
பரிவார மூர்த்திகள் பைரவர், பிள்ளையார், நந்தி, பாண்டவர்கள், கண்ணன், ஆதிசங்கரர், மாருதி, ஈசாணிஸ்வரர் விஷ்ணு, கார்த்திகேயன், அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர். யாத்திரைக்கு ஏற்ற காலம்: இக்கோயில் வருடந்தோறும் ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் போது (அதாவது புத்தாண்டு தினத்தன்று) பொது ஜன தரிசனத்திற்காக திறப்பார்கள். ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கோயில் திறந்திருக்கும். அதன் பின்னரே தீபாவளியை ஒட்டி கோயில் நடை அடைக்கப்படுகின்றது. பின்னர் ஆறு மாத காலம் இமயமலையின் கடும் குளிர் காரணமாக இக்கோயில் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுவிடும். எனவே, பொதுவாக கேதார் யாத்திரை புறப்படும் முன்னர் அங்குள்ள சீதோஷ்ணம், கோயில் திறப்பு போன்ற விபரங்களை நன்கு தெரிந்த பின்னர் யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.
கேதார்நாத் திருக்கோயில் தீபாவளியை ஒட்டி, கோயில் மூடப்படும் முன்னர் கோயிலுக்குள் மிகப்பெரிய நெய் விளக்கு ஏற்றப்படும். பின்னர் நடை மூடப்படும். அதன் பின்னர் ஆறு மாதங்கள் கழித்து ஏப்ரல் மாதத்தில் பனிக்கட்டிகளை அகற்றி கோயிலை திறக்கும் பொழுது கோயிலில் உள்ள விளக்கு அணையாமல் எரிந்துகொண்டிருக்கும். இந்த அற்புதக்காட்சிகளை காண ஏராளமான அளவில் பக்தர்கள் கேதார்நாத் நோக்கி வருவது வழக்கம்.
இக்கோயில் சம்பிரதாயப்படி ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மனிதர்களுக்காகவும், பனி மூடியிருக்கும் காலத்தில் தேவர்கள் வழிபடுவதாகவும் ஐதீகம். முன்பு கேதாரநாதம் நமது நாட்டின் உத்திரப் பிரதேச மாநிலத்தில் வடகோடி இமயமலையில் இருந்த நந்ததேவி சிகரத்தில் சுமார் 3583 மீட்டர் (11750 அடி) உயரத்தில் உள்ளது. சிவபெருமான் விரும்பியிருக்கும் புனித தலம். தற்போது புதிய உத்ராஞ்சல் மாநிலத்தில் உள்ளது.
தலபெருமை:
சிவபெருமான் விரும்பியிருக்கும் புனிததலம் கேதார்நாத். கவுரி குண்ட்-ல் உள்ள அக்னி குண்டத்தில் (வெந்நீர் ஊற்று) நீராடிய பின்னரே 14 கி.மீ. மலைப்பாதையில் பயணிக்க வேண்டும். கார், பஸ், வேன்கள் யாவும் கவுரி குண்ட் வரை மட்டுமே செல்ல முடியும். திருமால் நரநாராயணராக இங்கே தவம் செய்து சிவபெருமானை ஜோதிர்லிங்கமாக இத்தலத்தில் எழுந்தருளச்செய்தாராம். இது அத்தகைய புனித தலம். ஸ்ரீஆதிசங்கரர் இக்கோயிலை திருப்பணி செய்து உலகறிய சிறக்கச்செய்துள்ளார். ஆதிசங்கரர் சுவாமிகள் கேதார்நாத் தரிசனம் செய்து முடித்த பின்னர் தான் வாழ்ந்தது போதும் என்று முடிவுசெய்து, இங்கு சிவபெருமானை வேண்டிக்கொண்ட பின்னர் தன்னை இனிமேல் யாரும் பின்தொடர வேண்டாம் என்று இக்கோயிலின் பின் வழியாக உள்ள இமயமலையின் சிகரம் வழியாக சொர்க்கத்தை (இறைவனடி) அடைந்தார் என்று கூறப்படுகின்றது.
அதுபோல இங்குதான் பாண்டவர்கள் பிறந்து வளர்ந்ததாகவும், சில காலம் வாழ்ந்ததாகவும் கேதார்நாத் கோயிலின் பின்புறம் உள்ள வழியில் பாண்டவர்கள் திரௌபதியுடன் சொர்க்கம் சென்றதாகவும் கூறுகின்றனர். அர்ச்சுனன் தவம் செய்து சிவபெருமானிடம் பாசுபதாஸ்வரம் பெற்றதும் இத்தலமே. இராவணன் தவம் செய்து கயிலாய மலையை தூக்க முயன்று முடியாமல் உயிர்பிழைத்து தப்பிய இடம் இத்தலமே ஆகும்.
இமயமலை – கேதார்நாத்தில் சிறு ஓடையாக உருவாகும் மந்தாகினி என்ற நதியும், பத்ரிநாத்தில் உருவாகும் அலக்நந்தா என்ற நதியும், ருத்ர பிரயாக் என்ற இடத்தில் கலந்து பல்வேறு நதிகளை இணைத்து, ஹரித்துவாரில் கங்கையாக ஓடுகின்றது. புனித கங்கா என்ற ஒரு பெயரில் இந்தியாவில் கவுரி குண்ட் -டிலிருந்து கேதார்நாத் வரை செல்லும் 14 கி.மீ. மலைப்பாதையில் பசுமையான காடுகளும், நீர் வீழ்ச்சிகளும் மற்றும் ஆல்பைன் மரங்களும் நிறைந்து காணப்படுகின்றது. பல நீரோடைகளும் நதிகளும் கேதாரிலிருந்து மந்தாகினி நதியாக பெருக்கெடுத்து ஓடுகின்றது. சிவ அஷ்டோத்திரம், சிவநாமாவளி, சிவசகஸ்ர நாமம் ஆகியவை நடத்தலாம். பூஜைக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. தரிசனம் செய்ய கட்டணம் ஏதும் இல்லை. இது தவிர பக்தர்கள் மூலவருக்கு நெய் அபிஷேகம் செய்து கேதார்லிங்க வடிவில் உள்ள சிவனை வணங்கி தழுவிக்கொள்கின்றனர்.
இமயமலையில் இத்தலம் உள்ளதால் யாத்திரை செய்யவும், இறைவன் தரிசனத்திற்கும் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இமயமலையில் யாத்திரை செய்யும்போது மக்கள் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. இங்குள்ள கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டது. பாண்டவர்கள் வைணவர்கள். வைணவர்கள் சிவன் கோயில் கட்டி சிவபெருமானை வழிபட்டது. மத ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக் காட்டு ஆகும். இத்தலத்தில் சிவலிங்கம் மற்றெந்தத் தலத்திலும் இல்லாத ஒன்றாக, முற்றிலும் மாறுபட்டதாக ஒரு முக்கோண வடிவில் உள்ள பாறை. சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது.
ஜோதிர்லிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர். கேதார் நாத் கோயிலில் பல சிற்பங்கள் உள்ளன. பக்தர்கள் அதனைத் தரிசித்து மகிழ்ச்சி அடைகின்றனர். ஆதி சங்கராச்சாரியார் இக்கோயிலைத் திருப்பணி செய்து சிறக்கச் செய்துள்ளார். அவரது கோயிலும் இங்கே உள்ளது. கேதார் நாதம் போகும் வழியில் பல புண்ணியத் தலங்களும், புனிதத்தீர்த்தங்களும் உள்ளன. அவைகளைத் தரிசனம் செய்தவர்கள் புனிதம் அடைகின்றார்கள். இங்கே பல அடி உயரத்தில் பனிபடர்ந்த மலையில் இரண்டு வெந்நீர் ஊற்றுக்கள், பக்தர்களுக்காகவே உண்டாக்கியதுபோல இருப்பது மிகவும் அதிசயமான ஒன்றாகும். ஆதிசங்கரரும் இவ்வழியே தான் சுவர்க்கம் சென்றார். அவர் தாபித்த சக்திபீடம் இங்கே உள்ளது என்கின்றனர்.
இராவணன் தவம் செய்து, கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமல் உயிர் பிழைத்து தப்பிய இடம் இத்தலமே ஆகும். இத்தலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஓர் இடத்தில் பரசுராமருடைய கோடாலி உள்ளது. பொதுவாக இமயமும், வனப்பகுதியும் பக்தர்கள் மனங்கவரும்படியாகவும், அவர்கள் பக்தியுணர்வை மேலும் வளர்க்கக் கூடியதாகவும் உள்ளது.
பிரம்ம கமலம் எனும் அபூர்வ தாமரைப் பூக்களைக் கொண்டு இவருக்கு அர்ச்சனை செய்வது விசேஷமான ஒன்று! யாத்திரீகர்கள் கங்கோத்ரியில் இருந்து கங்கை நீரையும், யமுனோத்ரியில் இருந்து யமுனை தீர்த்ததையும் கொண்டு சென்று கேதாரநாதருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
தல வரலாறு:
மகாபாரத போரில் பல்வேறு வீரர்களைக்கொன்று குவித்து வெற்றி பெற்ற பாண்டவர்கள் பாப விமோசனம் பெறுவதற்காக சிவபெருமானை வேண்டி வாரணாசி செல்கின்றனர். அங்கே அவர் இல்லையென்றும் இமயமலையில் வாழ்வதாகவும் கேள்விப்பட்ட பின்னர் இமயமலையை நோக்கி வருகின்றனர். அப்போது இமயமலை காடுகளில் சிவபெருமானை தேடி பாண்டவர்கள் அலைகின்றனர்.
பின்னர் இளைப்பாறும்போது சிவபெருமான் அசரீரி வாயிலாக தான் மனித உருவிலோ அல்லது தெய்வமாகவோ காட்சிதரமுடியாது என்றும், முடிந்தால் தன்னை கண்டுபிடிங்கள் என்றும் சிவபெருமான் கூறி மறைந்தார். பின்னர் மிக உயரமான கேதார் சிகரத்தின் காடுகளில் திரிந்தபோது காட்டில் ஏராளமான எருமைகள் மேய்வதை பாண்டவர்களில் பலசாலியான பீமன் கண்டார். அதில் ஒரு எருமையின் முன் கால்களில், ஒரு காலில் மட்டும் சலங்கை கட்டியிருந்ததை கண்டு, அந்த எருமை தான் சிவபெருமானாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து ஓடிச்சென்று எருமை உருவில் இருந்த சிவபெருமானை தொட்டு வணங்கினார்.
ஆனால் சிவபெருமான் எருமை உருவத்திலிருந்து பூமிக்குள் நுழைந்தார். பீமன் எருமையை தொட்டு நிறுத்தியதால் எருமை உருவின் முதுகு பகுதி மட்டும் பூமியின் மேல் பகுதியில் அசையாமல் நின்று விட்டது. எனவே கேதார்நாத்தில் எருமை உருவில் சிவபெருமானின் முதுகு பகுதியை மட்டும் தரிசிக்கலாம். பின்னர் அசரீரி மூலம் கேதார்நாத்தில் தனது முதுகு பகுதியை இங்கு தரிசிக்கலாம் என்றும், பஞ்ச பாண்டவர்கள் மோட்சம் பெற நேபாளில் உள்ள பசுபதி நாத்தில் பஞ்சமுகங்களுடன் காட்சியளிப்பதாகவும் கூறி மறைந்தார்.
பின்னர் பாண்டவர்கள் பசுபதி நாத்தில் சிவபெருமானை தரிசித்த பின்னர் கேதார்நாத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு கோயிலாக கட்டி உலகிற்கு அர்ப்பணித்தனர். தற்போதுள்ள கேதார்நாத் கோயில் முதல் முதலாக பாண்டவர்களால் கட்டப்பட்டது என்றும், அதன் பின்னர் ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் திரௌபதியுடன் பாண்டவர்கள் கேதார் தரிசனத்திற்கு பின்னர் இமயமலை வழியாக சுவர்க்கம் நோக்கி சென்றனர் என்று வரலாறு கூறுகின்றது.
திறக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
முகவரி:
கேதாரீஸ்வரர் திருக்கோயில் நந்ததேவி மலை,
கேதார்நாத்,
கவுரி குண்ட் – 246476.
ருத்ரப்ரயாக் மாவட்டம்,
உத்ரகாண்ட் மாநிலம்.
அம்மன்/தாயார்:கேதார கவுரி
தீர்த்தம்:உதககுண்ட தீர்த்தம், கவுரி குண்டம், மந்தாகினி தீர்த்தம்.
ஊர்:கேதார்நாத்
பொது தகவல்:
பரிவார மூர்த்திகள் பைரவர், பிள்ளையார், நந்தி, பாண்டவர்கள், கண்ணன், ஆதிசங்கரர், மாருதி, ஈசாணிஸ்வரர் விஷ்ணு, கார்த்திகேயன், அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர். யாத்திரைக்கு ஏற்ற காலம்: இக்கோயில் வருடந்தோறும் ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் போது (அதாவது புத்தாண்டு தினத்தன்று) பொது ஜன தரிசனத்திற்காக திறப்பார்கள். ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கோயில் திறந்திருக்கும். அதன் பின்னரே தீபாவளியை ஒட்டி கோயில் நடை அடைக்கப்படுகின்றது. பின்னர் ஆறு மாத காலம் இமயமலையின் கடும் குளிர் காரணமாக இக்கோயில் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுவிடும். எனவே, பொதுவாக கேதார் யாத்திரை புறப்படும் முன்னர் அங்குள்ள சீதோஷ்ணம், கோயில் திறப்பு போன்ற விபரங்களை நன்கு தெரிந்த பின்னர் யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.
கேதார்நாத் திருக்கோயில் தீபாவளியை ஒட்டி, கோயில் மூடப்படும் முன்னர் கோயிலுக்குள் மிகப்பெரிய நெய் விளக்கு ஏற்றப்படும். பின்னர் நடை மூடப்படும். அதன் பின்னர் ஆறு மாதங்கள் கழித்து ஏப்ரல் மாதத்தில் பனிக்கட்டிகளை அகற்றி கோயிலை திறக்கும் பொழுது கோயிலில் உள்ள விளக்கு அணையாமல் எரிந்துகொண்டிருக்கும். இந்த அற்புதக்காட்சிகளை காண ஏராளமான அளவில் பக்தர்கள் கேதார்நாத் நோக்கி வருவது வழக்கம்.
இக்கோயில் சம்பிரதாயப்படி ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மனிதர்களுக்காகவும், பனி மூடியிருக்கும் காலத்தில் தேவர்கள் வழிபடுவதாகவும் ஐதீகம். முன்பு கேதாரநாதம் நமது நாட்டின் உத்திரப் பிரதேச மாநிலத்தில் வடகோடி இமயமலையில் இருந்த நந்ததேவி சிகரத்தில் சுமார் 3583 மீட்டர் (11750 அடி) உயரத்தில் உள்ளது. சிவபெருமான் விரும்பியிருக்கும் புனித தலம். தற்போது புதிய உத்ராஞ்சல் மாநிலத்தில் உள்ளது.
தலபெருமை:
சிவபெருமான் விரும்பியிருக்கும் புனிததலம் கேதார்நாத். கவுரி குண்ட்-ல் உள்ள அக்னி குண்டத்தில் (வெந்நீர் ஊற்று) நீராடிய பின்னரே 14 கி.மீ. மலைப்பாதையில் பயணிக்க வேண்டும். கார், பஸ், வேன்கள் யாவும் கவுரி குண்ட் வரை மட்டுமே செல்ல முடியும். திருமால் நரநாராயணராக இங்கே தவம் செய்து சிவபெருமானை ஜோதிர்லிங்கமாக இத்தலத்தில் எழுந்தருளச்செய்தாராம். இது அத்தகைய புனித தலம். ஸ்ரீஆதிசங்கரர் இக்கோயிலை திருப்பணி செய்து உலகறிய சிறக்கச்செய்துள்ளார். ஆதிசங்கரர் சுவாமிகள் கேதார்நாத் தரிசனம் செய்து முடித்த பின்னர் தான் வாழ்ந்தது போதும் என்று முடிவுசெய்து, இங்கு சிவபெருமானை வேண்டிக்கொண்ட பின்னர் தன்னை இனிமேல் யாரும் பின்தொடர வேண்டாம் என்று இக்கோயிலின் பின் வழியாக உள்ள இமயமலையின் சிகரம் வழியாக சொர்க்கத்தை (இறைவனடி) அடைந்தார் என்று கூறப்படுகின்றது.
அதுபோல இங்குதான் பாண்டவர்கள் பிறந்து வளர்ந்ததாகவும், சில காலம் வாழ்ந்ததாகவும் கேதார்நாத் கோயிலின் பின்புறம் உள்ள வழியில் பாண்டவர்கள் திரௌபதியுடன் சொர்க்கம் சென்றதாகவும் கூறுகின்றனர். அர்ச்சுனன் தவம் செய்து சிவபெருமானிடம் பாசுபதாஸ்வரம் பெற்றதும் இத்தலமே. இராவணன் தவம் செய்து கயிலாய மலையை தூக்க முயன்று முடியாமல் உயிர்பிழைத்து தப்பிய இடம் இத்தலமே ஆகும்.
இமயமலை – கேதார்நாத்தில் சிறு ஓடையாக உருவாகும் மந்தாகினி என்ற நதியும், பத்ரிநாத்தில் உருவாகும் அலக்நந்தா என்ற நதியும், ருத்ர பிரயாக் என்ற இடத்தில் கலந்து பல்வேறு நதிகளை இணைத்து, ஹரித்துவாரில் கங்கையாக ஓடுகின்றது. புனித கங்கா என்ற ஒரு பெயரில் இந்தியாவில் கவுரி குண்ட் -டிலிருந்து கேதார்நாத் வரை செல்லும் 14 கி.மீ. மலைப்பாதையில் பசுமையான காடுகளும், நீர் வீழ்ச்சிகளும் மற்றும் ஆல்பைன் மரங்களும் நிறைந்து காணப்படுகின்றது. பல நீரோடைகளும் நதிகளும் கேதாரிலிருந்து மந்தாகினி நதியாக பெருக்கெடுத்து ஓடுகின்றது. சிவ அஷ்டோத்திரம், சிவநாமாவளி, சிவசகஸ்ர நாமம் ஆகியவை நடத்தலாம். பூஜைக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. தரிசனம் செய்ய கட்டணம் ஏதும் இல்லை. இது தவிர பக்தர்கள் மூலவருக்கு நெய் அபிஷேகம் செய்து கேதார்லிங்க வடிவில் உள்ள சிவனை வணங்கி தழுவிக்கொள்கின்றனர்.
இமயமலையில் இத்தலம் உள்ளதால் யாத்திரை செய்யவும், இறைவன் தரிசனத்திற்கும் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இமயமலையில் யாத்திரை செய்யும்போது மக்கள் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. இங்குள்ள கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டது. பாண்டவர்கள் வைணவர்கள். வைணவர்கள் சிவன் கோயில் கட்டி சிவபெருமானை வழிபட்டது. மத ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக் காட்டு ஆகும். இத்தலத்தில் சிவலிங்கம் மற்றெந்தத் தலத்திலும் இல்லாத ஒன்றாக, முற்றிலும் மாறுபட்டதாக ஒரு முக்கோண வடிவில் உள்ள பாறை. சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது.
ஜோதிர்லிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர். கேதார் நாத் கோயிலில் பல சிற்பங்கள் உள்ளன. பக்தர்கள் அதனைத் தரிசித்து மகிழ்ச்சி அடைகின்றனர். ஆதி சங்கராச்சாரியார் இக்கோயிலைத் திருப்பணி செய்து சிறக்கச் செய்துள்ளார். அவரது கோயிலும் இங்கே உள்ளது. கேதார் நாதம் போகும் வழியில் பல புண்ணியத் தலங்களும், புனிதத்தீர்த்தங்களும் உள்ளன. அவைகளைத் தரிசனம் செய்தவர்கள் புனிதம் அடைகின்றார்கள். இங்கே பல அடி உயரத்தில் பனிபடர்ந்த மலையில் இரண்டு வெந்நீர் ஊற்றுக்கள், பக்தர்களுக்காகவே உண்டாக்கியதுபோல இருப்பது மிகவும் அதிசயமான ஒன்றாகும். ஆதிசங்கரரும் இவ்வழியே தான் சுவர்க்கம் சென்றார். அவர் தாபித்த சக்திபீடம் இங்கே உள்ளது என்கின்றனர்.
இராவணன் தவம் செய்து, கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமல் உயிர் பிழைத்து தப்பிய இடம் இத்தலமே ஆகும். இத்தலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஓர் இடத்தில் பரசுராமருடைய கோடாலி உள்ளது. பொதுவாக இமயமும், வனப்பகுதியும் பக்தர்கள் மனங்கவரும்படியாகவும், அவர்கள் பக்தியுணர்வை மேலும் வளர்க்கக் கூடியதாகவும் உள்ளது.
பிரம்ம கமலம் எனும் அபூர்வ தாமரைப் பூக்களைக் கொண்டு இவருக்கு அர்ச்சனை செய்வது விசேஷமான ஒன்று! யாத்திரீகர்கள் கங்கோத்ரியில் இருந்து கங்கை நீரையும், யமுனோத்ரியில் இருந்து யமுனை தீர்த்ததையும் கொண்டு சென்று கேதாரநாதருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
தல வரலாறு:
மகாபாரத போரில் பல்வேறு வீரர்களைக்கொன்று குவித்து வெற்றி பெற்ற பாண்டவர்கள் பாப விமோசனம் பெறுவதற்காக சிவபெருமானை வேண்டி வாரணாசி செல்கின்றனர். அங்கே அவர் இல்லையென்றும் இமயமலையில் வாழ்வதாகவும் கேள்விப்பட்ட பின்னர் இமயமலையை நோக்கி வருகின்றனர். அப்போது இமயமலை காடுகளில் சிவபெருமானை தேடி பாண்டவர்கள் அலைகின்றனர்.
பின்னர் இளைப்பாறும்போது சிவபெருமான் அசரீரி வாயிலாக தான் மனித உருவிலோ அல்லது தெய்வமாகவோ காட்சிதரமுடியாது என்றும், முடிந்தால் தன்னை கண்டுபிடிங்கள் என்றும் சிவபெருமான் கூறி மறைந்தார். பின்னர் மிக உயரமான கேதார் சிகரத்தின் காடுகளில் திரிந்தபோது காட்டில் ஏராளமான எருமைகள் மேய்வதை பாண்டவர்களில் பலசாலியான பீமன் கண்டார். அதில் ஒரு எருமையின் முன் கால்களில், ஒரு காலில் மட்டும் சலங்கை கட்டியிருந்ததை கண்டு, அந்த எருமை தான் சிவபெருமானாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து ஓடிச்சென்று எருமை உருவில் இருந்த சிவபெருமானை தொட்டு வணங்கினார்.
ஆனால் சிவபெருமான் எருமை உருவத்திலிருந்து பூமிக்குள் நுழைந்தார். பீமன் எருமையை தொட்டு நிறுத்தியதால் எருமை உருவின் முதுகு பகுதி மட்டும் பூமியின் மேல் பகுதியில் அசையாமல் நின்று விட்டது. எனவே கேதார்நாத்தில் எருமை உருவில் சிவபெருமானின் முதுகு பகுதியை மட்டும் தரிசிக்கலாம். பின்னர் அசரீரி மூலம் கேதார்நாத்தில் தனது முதுகு பகுதியை இங்கு தரிசிக்கலாம் என்றும், பஞ்ச பாண்டவர்கள் மோட்சம் பெற நேபாளில் உள்ள பசுபதி நாத்தில் பஞ்சமுகங்களுடன் காட்சியளிப்பதாகவும் கூறி மறைந்தார்.
பின்னர் பாண்டவர்கள் பசுபதி நாத்தில் சிவபெருமானை தரிசித்த பின்னர் கேதார்நாத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு கோயிலாக கட்டி உலகிற்கு அர்ப்பணித்தனர். தற்போதுள்ள கேதார்நாத் கோயில் முதல் முதலாக பாண்டவர்களால் கட்டப்பட்டது என்றும், அதன் பின்னர் ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் திரௌபதியுடன் பாண்டவர்கள் கேதார் தரிசனத்திற்கு பின்னர் இமயமலை வழியாக சுவர்க்கம் நோக்கி சென்றனர் என்று வரலாறு கூறுகின்றது.
திறக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
முகவரி:
கேதாரீஸ்வரர் திருக்கோயில் நந்ததேவி மலை,
கேதார்நாத்,
கவுரி குண்ட் – 246476.
ருத்ரப்ரயாக் மாவட்டம்,
உத்ரகாண்ட் மாநிலம்.
பத்தினித் தெய்வமான கண்ணகி அம்மனின் கால் சிலம்புக்கு சின்னம்மை, பெரியம்மை, சின்னமுத்து, கூவக்கட்டு, குக்கல் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் அதிசயமான சக்தி உண்டு என்பது மக்களின் பொதுவான நம்பிக்கையாகும்.
கண்ணகி அம்மன் வழிபாடு கி.பி 171 முதல் கி.பி 193வரை அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த கஜபாகு என்ற அரசனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதென இராஜவாளி என்ற சிங்கள நூல் கூறுகிறது.
கஜபாகு ஆட்சி காலத்தில் சேரமன்னன் செங்குட்டுவன் தனது தலைநகராகிய வஞ்சியில், இமயமலையில் இருந்து கொண்டுவந்த கல்லில் கண்ணகிக்கு சிலை செய்து கோயில் அமைத்து பெருவிழா எடுத்தான். கி.பி 178ல் நடந்த அவ்விழாவிற்கு செங்குட்டுவனின் அழைப்பையேற்று அவன் நண்பணாகிய கஜபாகு விழாவில் கலந்து கொண்டான்.
இவ்விழாவில் பாண்டிய மன்னன் வெற்றிவேற் செழியனும், சோழ அரசன் பெருநற்கிள்ளியும், கொங்குதெச அரசன் இளங்கோ அடிகளும், மகததேச மன்னரும் கலந்துகொண்டாதாக துரைஜெயநாதன் “ஆதிதிராவிடரும் அழிந்துபொன சங்கங்களும் “என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
விழாவில் கலந்த கஜபாகு கண்ணகியின் அற்பதங்களைக் கண்டு வியந்தான். கஜபாகு, கண்ணகியை செங்குட்டுவனைப்போல் நித்தியபூசை செய்து வலம் வந்து தன் நாட்டிலும் எழுந்தருளி அருள்புரிய வேண்டும் என்று அவன் கேட்டு பிரார்த்தித்தான்.
அவன் விரும்பியபடி எல்லாம் நடக்குமென அசிரீரி கேட்டு கஜபாகு உள்ளம் நெகிழ்ந்து கண்ணகிமேல் கூடிய நம்பிக்கை கொண்டான். இலங்கையில் கண்ணகி வழிபாட்டினை பரப்பப் தன் விருப்பததை செங்குட்டுவனிடம் கஜபாகு தெரிவித்தான்.
செங்குட்டுவன், சந்தன மரத்தால் செய்த கண்ணகி சிலையையும் ஒரு காற்சிலம்பையும் சந்தனமரப்பேழையில் வைத்து கஜபாகுவிடம் கையளித்தான். கஜபாகு கண்ணகி விக்கிரகத்துடன் இலங்கைக்குத் திரும்பும்போது தன்னுடன் பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பல்குடிமக்களையும் அழைத்துச்சென்றான்.
அவன் வந்திறங்கிய சிலையுடன் வந்திறங்கியது மாதகலுக்கருகேயுள்ள ஐம்புகோள துறைமுகம். யானை மேல் சிலையைவைத்து பல யானைகள் பின்னே வர ஊர்வலமாய் பூனகரி ஊடாக தெற்கு இலங்கைக்கு எடுத்துச்சென்றான். ஊர்வலம் நின்றயிடமெல்லாம் கண்ணகி வழிபாடு தோன்றிற்று.
இம்மன்னனால் யாழ்ப்பாணத்தில் முதலாவது கண்ணகி கோயில் ஸ்தாபிக்கப்பட்ட இடம் அங்கனாக்கடவை எனப்படும் இடம். அங்கனா என்பது அம்மனைக் குறிக்கும். சிங்களநாட்டில் பத்தினி தெய்யோ என கண்ணகி அம்மனை அழைக்க ஆரம்பித்தனர். நந்திக்கடல் வற்றாப்பளை அம்மன் கோவிலுக்கு அருகேயுள்ளது.
முல்லைத்தீவில் உள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் நந்திக்கடல் அருகே இருந்து வருகிறது. கஜபாகு அரசனால் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட பழமைவாய்ந்த பத்தாவது கண்ணகியம்மாள் கோயில் எனக்கருதப்படுகிறது. பளையென்பது தங்குமிடத்தைக் குறிக்கும். கண்ணகியம்மாள் வந்தமர்ந்த பத்தாவது இடமாகிய பத்தாம்பளை. என்பது மருவி வற்றாப்பளையாயிற்று என்பது வரலாறு.
முன்பு ஒரு காலத்தில், நந்திக் கடலோரத்தில், ஆட்டிடையர் குலச் சிறுவர்கள் ஒரு முதுமை வாய்ந்த அம்மையார் ஒருத்தி மரத்தின் கீழ இருப்பதைக் கண்டார்கள். தனக்குத் தங்குவதற்கு இடமில்லை என அவ்வம்மையார் சிறுவர்களிடம் முறையிட்ட போது அவர்கள் மரத்திற்கு அருகே ஒரு குடிசை அமைத்து கொடுத்தது மட்டுமன்றி அம்மையாருக்கு உண்பதற்கு பொங்கலும் செய்து கொடுத்தார்கள்.
மாலைப் பொழுதானதும் குடிசைக்குள் விளக்கு ஏரிவதற்கு எண்ணெய் இல்லையே என்று மனம் வருந்தினர். அவர்கள் கவலைப் படுவதைக்கண்ட அம்மூதாட்டியர் “பிள்ளைகளே கடல் நீரை எடுத்து எண்ணையாகப பாவித்து, திரிவைத்து விளக்கேற்றுங்கள் என்றார். இன்றும் கடல் நீரில் அம்மனுக்கு விளக்கு எரிப்பது வழக்கமாய் இருந்து வருகிறது தனக்கு குடிசை அமைத்து விளக்கேற்றி கொடுத்த சிறுவர்களைப் பார்த்து தனது தலை கடிக்கிறது பேன் பார்த்து விடும்படி கேட்டார்.
மூதாட்டியாரின் தலை முடியை வகுத்த சிறுவர்கள், தலையெல்லாம் கணகளாயிருப்பதைக் கண்டு பயந்து அலர, “நான் ஒரு வைகாசித் திங்களன்று திரும்பவும் வருவேன்” எனக் கூறி மறைந்தார். சிறுவர்கள் நடந்ததை ஊர் ஜனங்களுக்கு எடுத்துச்சொன்னபோது அந்த அதிசயம் நடந்த குடிசையிருந்த இடத்தைச் சிறுவர்கள் அவர்களுக்கு காட்டினார்கள்.
அந்த குடில் இருந்த இடத்தில் ஏதோ அதிசயம் இருப்பதாகக் கருதி அவ்விடத்தில் கண்ணகி அம்மனுக்கு கோவில் கட்டி, வைகாசி பௌர்ணமி தினத்தன்று பொங்கல் பொங்கி கடல் நீரில் விளக்கேற்றி வழிபடத் தொடங்கினர். ஆதிகாலத்தில் அம்மன் காட்சி கொடுத்த ஆடு மேய்க்கும் பரம்பரையை சேர்ந்தவர்களே கோவில் பூசை வழிபாட்டில் பிரதான பங்கு வகிக்கிறார்கள்.
வைகாசிப் பொங்கலுக்கு ஒரு கிழமைக்கு முன்பே, கோயில் பூசாரி, பக்தர்கள், கோயில் நிர்வாகிகள், ஒரு பித்தளைக் குடத்தை மேளதாளத்தோடு சிலாவத்தை என்ற கட்றகரைக்கு எடுத்துச் சென்று, கடல் நீரை குடத்தில் நிறப்புவார்கள். கடல் அலை பொங்கி வரும் போது குடத்தை சரித்து, கடல் நீரை ஒரே தடவையில் மொண்டி அள்ளுவது வழமையாக இருந்து வருகிறது. குடத்தை நீரோடு முள்ளியவளையில உள்ள காட்டா விநாயகர் ஆலயத்தில் வைப்பார்கள்.
வைகாசி பொங்கல் தினத்தன்று விநாயகர் கோவிலில் இருந்து கண்ணகி அம்மன் கோவிலுக்கு தண்ணீர்க் குடத்தை எடுத்துச் சென்று, மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் அம்மனுக்கு குடத்தில் உள்ள கடல் நீரில் விளக்கேற்றி வழிபடுவார்கள்.
பொங்கி, நடுச்சாமம், பிராமணர்கள் மந்திரம் ஓத, கட்டாடி உடையார் என வழங்கப்படும் ஒருவர் பொங்கல் பானையை மடியில் வைத்து, அதைச் சுற்றி மாவிலை கட்டி அடுப்பில் வைப்பார். உடையாருக்கு உருவந்து, அடியார்களுக்கு கொடுக்கும் அரிசியை ஒவ்வொரு திசையிலும் வானத்தை நோக்கி உயர வீசுவார்.
அவர் வீசும் அரிசி அம்மனின் தோழிகளைப் போயடையும் என்பது நம்பிக்கை. மேலே எறிந்த அரிசி, மண்ணிலோ அல்லது பக்தர்கள் தலையிலோ விழுவதில்லை. இதுவும் அம்மனின் அற்புதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திருக்குறளில் அனிச்ச மலர் மென்மையான மலராக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவவொரு தலத்துக்கும் தல விருட்சம் என்று ஒன்றுண்டு.
வற்றாப்பளை அம்மனின் மூலஸ்தானத்துக்கருகே அனிச்ச மரம் ஒன்றுண்டு. இந்த மரத்துக்கு ஒரு வரலாறு உண்டு. போர்த்துக்கேயர் தம்மதத்தைத் தவிர வேறு மதங்களை மதிக்காதவர்கள். பல இந்துக் கோவில்களையும், புத்த விகாராக்களையும் இடித்துத் தள்ளியவர்கள் என்கிறது வரலாறு.
போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்டபோது முல்லைத்தீவுப் பகுதியும் அவர்களது ஆட்சிக்கு கீழ் இருந்தது. ஒரு போர்த்துக்கேய அதிகாரி ஒவ்வொரு முறையும் கோவிலை குதிரையில் தாண்டிச் செல்லும் போது, அம்மனை பரிகாசம் செய்வாராம்.
ஒரு நாள் கண்ணகி அம்மன் கோவில அருகே வந்த போது “எங்கே உங்கள் கடவுள் அதிசயங்கள் செய்வதாக கேள்விப்பட்டேன். அது உண்மையானால் எங்கே இப்போது செய்து காட்டட்டும் “என்றார் அனிச்ச மரத்தின் கீழ், குதிரையில் அம்ர்ந்தபடியே அம்மனை அகங்காரத்தோடு தூற்றியவாறு. உடனே தீடிரென அனிச்ச மரம் குளுங்கத் தொடங்கியது. காற்று பயங்கரமாக வீசத்தொடங்கியது.
மரத்தில் இருந்த அனிச்சம் காய்கள், அம்மனைப் பரிகாசம் செய்த அதிகாரி மேல்விழுந்தன. அனிச்சம் காய்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது அதிகாரி காயமடைந்து குதிரையிலிருந்து, மூர்ச்சித்து கீழே விழுந்தான். அவன் அகங்காரம் அடங்கியது. அதன் பின் இன்றுவரை அந்த அனிச்ச மரம் பூப்பதும், காய்ப்பதும் இல்லை. அதுவும் அம்மனின் அதிசயங்களில் ஒன்று.
பத்தினித் தெய்வமான கண்ணகி அம்மனின் காற்சிலம்புக்கு சின்னம்மை, பெரியம்மை, சின்னமுத்து, கூவக்கட்டு, குக்கல் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் அதிசயமான சக்தி உண்டு என்பது மக்களின் பொதுவான நம்பிக்கையாகும்.
கஜபாகு ஆட்சி காலத்தில் சேரமன்னன் செங்குட்டுவன் தனது தலைநகராகிய வஞ்சியில், இமயமலையில் இருந்து கொண்டுவந்த கல்லில் கண்ணகிக்கு சிலை செய்து கோயில் அமைத்து பெருவிழா எடுத்தான். கி.பி 178ல் நடந்த அவ்விழாவிற்கு செங்குட்டுவனின் அழைப்பையேற்று அவன் நண்பணாகிய கஜபாகு விழாவில் கலந்து கொண்டான்.
இவ்விழாவில் பாண்டிய மன்னன் வெற்றிவேற் செழியனும், சோழ அரசன் பெருநற்கிள்ளியும், கொங்குதெச அரசன் இளங்கோ அடிகளும், மகததேச மன்னரும் கலந்துகொண்டாதாக துரைஜெயநாதன் “ஆதிதிராவிடரும் அழிந்துபொன சங்கங்களும் “என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
விழாவில் கலந்த கஜபாகு கண்ணகியின் அற்பதங்களைக் கண்டு வியந்தான். கஜபாகு, கண்ணகியை செங்குட்டுவனைப்போல் நித்தியபூசை செய்து வலம் வந்து தன் நாட்டிலும் எழுந்தருளி அருள்புரிய வேண்டும் என்று அவன் கேட்டு பிரார்த்தித்தான்.
அவன் விரும்பியபடி எல்லாம் நடக்குமென அசிரீரி கேட்டு கஜபாகு உள்ளம் நெகிழ்ந்து கண்ணகிமேல் கூடிய நம்பிக்கை கொண்டான். இலங்கையில் கண்ணகி வழிபாட்டினை பரப்பப் தன் விருப்பததை செங்குட்டுவனிடம் கஜபாகு தெரிவித்தான்.
செங்குட்டுவன், சந்தன மரத்தால் செய்த கண்ணகி சிலையையும் ஒரு காற்சிலம்பையும் சந்தனமரப்பேழையில் வைத்து கஜபாகுவிடம் கையளித்தான். கஜபாகு கண்ணகி விக்கிரகத்துடன் இலங்கைக்குத் திரும்பும்போது தன்னுடன் பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பல்குடிமக்களையும் அழைத்துச்சென்றான்.
அவன் வந்திறங்கிய சிலையுடன் வந்திறங்கியது மாதகலுக்கருகேயுள்ள ஐம்புகோள துறைமுகம். யானை மேல் சிலையைவைத்து பல யானைகள் பின்னே வர ஊர்வலமாய் பூனகரி ஊடாக தெற்கு இலங்கைக்கு எடுத்துச்சென்றான். ஊர்வலம் நின்றயிடமெல்லாம் கண்ணகி வழிபாடு தோன்றிற்று.
இம்மன்னனால் யாழ்ப்பாணத்தில் முதலாவது கண்ணகி கோயில் ஸ்தாபிக்கப்பட்ட இடம் அங்கனாக்கடவை எனப்படும் இடம். அங்கனா என்பது அம்மனைக் குறிக்கும். சிங்களநாட்டில் பத்தினி தெய்யோ என கண்ணகி அம்மனை அழைக்க ஆரம்பித்தனர். நந்திக்கடல் வற்றாப்பளை அம்மன் கோவிலுக்கு அருகேயுள்ளது.
முல்லைத்தீவில் உள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் நந்திக்கடல் அருகே இருந்து வருகிறது. கஜபாகு அரசனால் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட பழமைவாய்ந்த பத்தாவது கண்ணகியம்மாள் கோயில் எனக்கருதப்படுகிறது. பளையென்பது தங்குமிடத்தைக் குறிக்கும். கண்ணகியம்மாள் வந்தமர்ந்த பத்தாவது இடமாகிய பத்தாம்பளை. என்பது மருவி வற்றாப்பளையாயிற்று என்பது வரலாறு.
முன்பு ஒரு காலத்தில், நந்திக் கடலோரத்தில், ஆட்டிடையர் குலச் சிறுவர்கள் ஒரு முதுமை வாய்ந்த அம்மையார் ஒருத்தி மரத்தின் கீழ இருப்பதைக் கண்டார்கள். தனக்குத் தங்குவதற்கு இடமில்லை என அவ்வம்மையார் சிறுவர்களிடம் முறையிட்ட போது அவர்கள் மரத்திற்கு அருகே ஒரு குடிசை அமைத்து கொடுத்தது மட்டுமன்றி அம்மையாருக்கு உண்பதற்கு பொங்கலும் செய்து கொடுத்தார்கள்.
மாலைப் பொழுதானதும் குடிசைக்குள் விளக்கு ஏரிவதற்கு எண்ணெய் இல்லையே என்று மனம் வருந்தினர். அவர்கள் கவலைப் படுவதைக்கண்ட அம்மூதாட்டியர் “பிள்ளைகளே கடல் நீரை எடுத்து எண்ணையாகப பாவித்து, திரிவைத்து விளக்கேற்றுங்கள் என்றார். இன்றும் கடல் நீரில் அம்மனுக்கு விளக்கு எரிப்பது வழக்கமாய் இருந்து வருகிறது தனக்கு குடிசை அமைத்து விளக்கேற்றி கொடுத்த சிறுவர்களைப் பார்த்து தனது தலை கடிக்கிறது பேன் பார்த்து விடும்படி கேட்டார்.
மூதாட்டியாரின் தலை முடியை வகுத்த சிறுவர்கள், தலையெல்லாம் கணகளாயிருப்பதைக் கண்டு பயந்து அலர, “நான் ஒரு வைகாசித் திங்களன்று திரும்பவும் வருவேன்” எனக் கூறி மறைந்தார். சிறுவர்கள் நடந்ததை ஊர் ஜனங்களுக்கு எடுத்துச்சொன்னபோது அந்த அதிசயம் நடந்த குடிசையிருந்த இடத்தைச் சிறுவர்கள் அவர்களுக்கு காட்டினார்கள்.
அந்த குடில் இருந்த இடத்தில் ஏதோ அதிசயம் இருப்பதாகக் கருதி அவ்விடத்தில் கண்ணகி அம்மனுக்கு கோவில் கட்டி, வைகாசி பௌர்ணமி தினத்தன்று பொங்கல் பொங்கி கடல் நீரில் விளக்கேற்றி வழிபடத் தொடங்கினர். ஆதிகாலத்தில் அம்மன் காட்சி கொடுத்த ஆடு மேய்க்கும் பரம்பரையை சேர்ந்தவர்களே கோவில் பூசை வழிபாட்டில் பிரதான பங்கு வகிக்கிறார்கள்.
வைகாசிப் பொங்கலுக்கு ஒரு கிழமைக்கு முன்பே, கோயில் பூசாரி, பக்தர்கள், கோயில் நிர்வாகிகள், ஒரு பித்தளைக் குடத்தை மேளதாளத்தோடு சிலாவத்தை என்ற கட்றகரைக்கு எடுத்துச் சென்று, கடல் நீரை குடத்தில் நிறப்புவார்கள். கடல் அலை பொங்கி வரும் போது குடத்தை சரித்து, கடல் நீரை ஒரே தடவையில் மொண்டி அள்ளுவது வழமையாக இருந்து வருகிறது. குடத்தை நீரோடு முள்ளியவளையில உள்ள காட்டா விநாயகர் ஆலயத்தில் வைப்பார்கள்.
வைகாசி பொங்கல் தினத்தன்று விநாயகர் கோவிலில் இருந்து கண்ணகி அம்மன் கோவிலுக்கு தண்ணீர்க் குடத்தை எடுத்துச் சென்று, மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் அம்மனுக்கு குடத்தில் உள்ள கடல் நீரில் விளக்கேற்றி வழிபடுவார்கள்.
பொங்கி, நடுச்சாமம், பிராமணர்கள் மந்திரம் ஓத, கட்டாடி உடையார் என வழங்கப்படும் ஒருவர் பொங்கல் பானையை மடியில் வைத்து, அதைச் சுற்றி மாவிலை கட்டி அடுப்பில் வைப்பார். உடையாருக்கு உருவந்து, அடியார்களுக்கு கொடுக்கும் அரிசியை ஒவ்வொரு திசையிலும் வானத்தை நோக்கி உயர வீசுவார்.
அவர் வீசும் அரிசி அம்மனின் தோழிகளைப் போயடையும் என்பது நம்பிக்கை. மேலே எறிந்த அரிசி, மண்ணிலோ அல்லது பக்தர்கள் தலையிலோ விழுவதில்லை. இதுவும் அம்மனின் அற்புதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திருக்குறளில் அனிச்ச மலர் மென்மையான மலராக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவவொரு தலத்துக்கும் தல விருட்சம் என்று ஒன்றுண்டு.
வற்றாப்பளை அம்மனின் மூலஸ்தானத்துக்கருகே அனிச்ச மரம் ஒன்றுண்டு. இந்த மரத்துக்கு ஒரு வரலாறு உண்டு. போர்த்துக்கேயர் தம்மதத்தைத் தவிர வேறு மதங்களை மதிக்காதவர்கள். பல இந்துக் கோவில்களையும், புத்த விகாராக்களையும் இடித்துத் தள்ளியவர்கள் என்கிறது வரலாறு.
போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்டபோது முல்லைத்தீவுப் பகுதியும் அவர்களது ஆட்சிக்கு கீழ் இருந்தது. ஒரு போர்த்துக்கேய அதிகாரி ஒவ்வொரு முறையும் கோவிலை குதிரையில் தாண்டிச் செல்லும் போது, அம்மனை பரிகாசம் செய்வாராம்.
ஒரு நாள் கண்ணகி அம்மன் கோவில அருகே வந்த போது “எங்கே உங்கள் கடவுள் அதிசயங்கள் செய்வதாக கேள்விப்பட்டேன். அது உண்மையானால் எங்கே இப்போது செய்து காட்டட்டும் “என்றார் அனிச்ச மரத்தின் கீழ், குதிரையில் அம்ர்ந்தபடியே அம்மனை அகங்காரத்தோடு தூற்றியவாறு. உடனே தீடிரென அனிச்ச மரம் குளுங்கத் தொடங்கியது. காற்று பயங்கரமாக வீசத்தொடங்கியது.
மரத்தில் இருந்த அனிச்சம் காய்கள், அம்மனைப் பரிகாசம் செய்த அதிகாரி மேல்விழுந்தன. அனிச்சம் காய்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது அதிகாரி காயமடைந்து குதிரையிலிருந்து, மூர்ச்சித்து கீழே விழுந்தான். அவன் அகங்காரம் அடங்கியது. அதன் பின் இன்றுவரை அந்த அனிச்ச மரம் பூப்பதும், காய்ப்பதும் இல்லை. அதுவும் அம்மனின் அதிசயங்களில் ஒன்று.
பத்தினித் தெய்வமான கண்ணகி அம்மனின் காற்சிலம்புக்கு சின்னம்மை, பெரியம்மை, சின்னமுத்து, கூவக்கட்டு, குக்கல் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் அதிசயமான சக்தி உண்டு என்பது மக்களின் பொதுவான நம்பிக்கையாகும்.






