என் மலர்
கோவில்கள்
சீதையை மீட்டுக் கொண்டு ராமன் இத்தலத்துக்கு வந்து, இங்குள்ள இறைவனுக்கு ‘சத்தியவாகீசப் பெருமான்’ எனத் திருநாமம் சூட்டி வணங்கிச் சென்றார் என்பது தல வரலாறு.
நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி, களா மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியாக இருந்ததால், அது திருக்களந்தை என்று அழைக்கப்பட்டது. அந்தக் களக்காடு திருத்தலத்தில், அன்னை கோமதியுடன் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு சத்தியவாகீஸ்வரர்.
தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள் வழிபட்ட இந்த ஆலயம் கி.பி. 12ம் நூற்றாண்டில், வீரமார்த்தாண்டவர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. ராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் ‘சோரகாடவி’ என்றும் அழைக்கப்படுகிறது.
சீதையின் பிரிவால் வருந்திய ராமன், ஒரு புன்னை மரத்தின் நிழலில் குடிகொண்டிருந்த சிவபெருமானை வழிபட, ‘சீதையை மீட்டு வர யாம் துணையிருப்போம்’ என்று சத்தியவாக்கு அருளினார் ஈசன். பின்னர், சீதையை மீட்டுக் கொண்டு ராமன் இத்தலத்துக்கு வந்து, இங்குள்ள இறைவனுக்கு ‘சத்தியவாகீசப் பெருமான்’ எனத் திருநாமம் சூட்டி வணங்கிச் சென்றார் என்பது தல வரலாறு.
ஒரு போரின்போது, தேவர்கள் இங்குள்ள இறைவனை வழிபட்ட பிறகே, ஈசன் துணையுடன் அசுரர்களைப் போரில் வென்றதாகவும் சொல்லப்படுகிறது. இங்குள்ள தீர்த்தத்துக்கு ‘சத்திய தீர்த்தம்’ என்று பெயர்.
பக்தர்களால் பெரியகோயில் என அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் ஸ்ரீ சத்தியவாகீஸ்வரர், ஸ்ரீகோமதி, ஸ்ரீ நவநீதகிருஷ்ணர், ஸ்ரீதிரிபுரசுந்தரி, ஸ்ரீ துர்கை, ஸ்ரீமுருகன், ஸ்ரீகாசிவிசுவநாதரச்ர் ஸ்ரீ விசாலாட்சி ஆகியோருடன் சனீஸ்வரர், பைரவர், சந்தன நடராஜர், ஆடல்வல்லான், கஜலட்சுமி, விநாயகர், ஆஞ்சநேயர், சரஸ்வதி, ஐயப்பன் ஆகிய தெய்வங்களையும் தரிசிக்கலாம்.
சிற்பங்களும், இசைத் தூண்களும்…
சிற்ப அழகுடன் கூடிய மண்டபங்களும், அவற்றில் மணி மண்டபத்தில் உள்ள இசைத் தூண்களும் இந்தத் திருக்கோயிலின் தனிச் சிறப்பம்சங்கள் ஆகும்! இந்த இசைத் தூண்களைத் தட்டினால், ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொருவிதமான ஒலி எழுவதைக் கேட்கலாம்.
கோயில் வெளிப் பிராகாரத் தில் அந்நாளில் பயன்படுத்தப் பட்ட தானியக் கூடம் ஒன்று இன்றைக்கும் வரலாற்றுச் சின்னமாகக் காட்சியளிக்கிறது.இத்திருத்தலத்தில் மகாபாரதக் காட்சிகளை விளக்கும் வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. இவை மூலிகை வண்ணக் கலவைகளால் தீட்டப்பட்டவை ஆகும். இத்தகைய வண்ண ஓவியங்கள், தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஓவியங்களை நிகர்த்தவை என்று கூறப்படுகிறது. கோயிலின் முன் வாயிலில், இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்த வீரமார்த்தாண்டவர்மனுடன், சுந்தரரும் சேரமான் பெருமானும் உள்ளனர்.
அற்புதம்…
தொன்மையான இக்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச், செப்டம்பர் மாதங்களில் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களிலும், கருவறையில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கத் திருமேனி மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுகின்றன.
சுரங்கப் பாதை…
இக்கோயிலில் சுரங்கப் பாதை ஒன்று உள்ளது. இந்தப் பாதை திருப்புடைமருதூர் கோயிலுக்கும், களக்காடு ‘நினைத்ததை முடித்த விநாயகர்’ கோயிலுக்கும் செல்வதாகக் கூறப்படுகிறது. இந்தச் சுரங்கப் பாதையில் ரகசிய அறை ஒன்றும் உள்ளது. இந்த அறைக்குக் காற்றும், வெளிச்சமும் நன்றாக வருகிறது. ஆனால் அவை எங்கிருந்து வருகின்றன என்பது இன்றும் மர்மமாகவே உள்ளது. பண்டைய கட்டடக் கலையின் உன்னதத்துக்கு எடுத்துக்காட்டாக இதைக் கூறலாம்.
புன்னை மரம் தலவிருட்சமாகவும், பச்சையாறு தீர்த்தமாகவும் அமையப் பெற்றிருக்கும் இந்தக் கோயிலுக்கு, மகாசிவராத்திரி, மாசிமகம் முதலான புண்ணிய தினங்களில் வந்து வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள் வழிபட்ட இந்த ஆலயம் கி.பி. 12ம் நூற்றாண்டில், வீரமார்த்தாண்டவர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. ராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் ‘சோரகாடவி’ என்றும் அழைக்கப்படுகிறது.
சீதையின் பிரிவால் வருந்திய ராமன், ஒரு புன்னை மரத்தின் நிழலில் குடிகொண்டிருந்த சிவபெருமானை வழிபட, ‘சீதையை மீட்டு வர யாம் துணையிருப்போம்’ என்று சத்தியவாக்கு அருளினார் ஈசன். பின்னர், சீதையை மீட்டுக் கொண்டு ராமன் இத்தலத்துக்கு வந்து, இங்குள்ள இறைவனுக்கு ‘சத்தியவாகீசப் பெருமான்’ எனத் திருநாமம் சூட்டி வணங்கிச் சென்றார் என்பது தல வரலாறு.
ஒரு போரின்போது, தேவர்கள் இங்குள்ள இறைவனை வழிபட்ட பிறகே, ஈசன் துணையுடன் அசுரர்களைப் போரில் வென்றதாகவும் சொல்லப்படுகிறது. இங்குள்ள தீர்த்தத்துக்கு ‘சத்திய தீர்த்தம்’ என்று பெயர்.
பக்தர்களால் பெரியகோயில் என அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் ஸ்ரீ சத்தியவாகீஸ்வரர், ஸ்ரீகோமதி, ஸ்ரீ நவநீதகிருஷ்ணர், ஸ்ரீதிரிபுரசுந்தரி, ஸ்ரீ துர்கை, ஸ்ரீமுருகன், ஸ்ரீகாசிவிசுவநாதரச்ர் ஸ்ரீ விசாலாட்சி ஆகியோருடன் சனீஸ்வரர், பைரவர், சந்தன நடராஜர், ஆடல்வல்லான், கஜலட்சுமி, விநாயகர், ஆஞ்சநேயர், சரஸ்வதி, ஐயப்பன் ஆகிய தெய்வங்களையும் தரிசிக்கலாம்.
சிற்பங்களும், இசைத் தூண்களும்…
சிற்ப அழகுடன் கூடிய மண்டபங்களும், அவற்றில் மணி மண்டபத்தில் உள்ள இசைத் தூண்களும் இந்தத் திருக்கோயிலின் தனிச் சிறப்பம்சங்கள் ஆகும்! இந்த இசைத் தூண்களைத் தட்டினால், ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொருவிதமான ஒலி எழுவதைக் கேட்கலாம்.
கோயில் வெளிப் பிராகாரத் தில் அந்நாளில் பயன்படுத்தப் பட்ட தானியக் கூடம் ஒன்று இன்றைக்கும் வரலாற்றுச் சின்னமாகக் காட்சியளிக்கிறது.இத்திருத்தலத்தில் மகாபாரதக் காட்சிகளை விளக்கும் வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. இவை மூலிகை வண்ணக் கலவைகளால் தீட்டப்பட்டவை ஆகும். இத்தகைய வண்ண ஓவியங்கள், தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஓவியங்களை நிகர்த்தவை என்று கூறப்படுகிறது. கோயிலின் முன் வாயிலில், இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்த வீரமார்த்தாண்டவர்மனுடன், சுந்தரரும் சேரமான் பெருமானும் உள்ளனர்.
அற்புதம்…
தொன்மையான இக்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச், செப்டம்பர் மாதங்களில் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களிலும், கருவறையில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கத் திருமேனி மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுகின்றன.
சுரங்கப் பாதை…
இக்கோயிலில் சுரங்கப் பாதை ஒன்று உள்ளது. இந்தப் பாதை திருப்புடைமருதூர் கோயிலுக்கும், களக்காடு ‘நினைத்ததை முடித்த விநாயகர்’ கோயிலுக்கும் செல்வதாகக் கூறப்படுகிறது. இந்தச் சுரங்கப் பாதையில் ரகசிய அறை ஒன்றும் உள்ளது. இந்த அறைக்குக் காற்றும், வெளிச்சமும் நன்றாக வருகிறது. ஆனால் அவை எங்கிருந்து வருகின்றன என்பது இன்றும் மர்மமாகவே உள்ளது. பண்டைய கட்டடக் கலையின் உன்னதத்துக்கு எடுத்துக்காட்டாக இதைக் கூறலாம்.
புன்னை மரம் தலவிருட்சமாகவும், பச்சையாறு தீர்த்தமாகவும் அமையப் பெற்றிருக்கும் இந்தக் கோயிலுக்கு, மகாசிவராத்திரி, மாசிமகம் முதலான புண்ணிய தினங்களில் வந்து வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
ஆந்திராவில், சித்தூர் அருகில் உள்ள காணிப்பாக்கம் வரசித்தி விநாயகரைத் தரிசித்து மனமாற வழிபட்டால், அரிய பெரும் பேறுகளை நிச்சயம் அடையலாம் என்பது பக்தர்களின் பெரும் நம்பிக்கை!
ஒவ்வொரு கோயிலுக்கும் பொதுவாக ஒரு அதிசயம் இருக்கும். அவை கடவுளின் சக்தியால் நடக்கிறது என்பது நமது நம்பிக்கை. 500 ஆண்டுகள் மிகப் பழமை வாய்ந்த இந்த ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் எழில்மிகு அழகோடு உள்ளது. இங்கு, அதிசய ஸ்ரீவரசித்தி விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் இங்குள்ளது. இக்கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர்தான் இன்றைக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அந்த ஒரு உத்தரணி தண்ணீரைப் பெற்றுக்கொள்ளத்தான் அங்கே கூட்டம் அலை மோதுகிறது. அதனைப் பருகினால் ஊனம் தீரும் என்றும் நோய்கள் எல்லாம் நீங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் தோன்றியதே அந்தக் கிணற்றில்தான்! இன்றும் அந்த கிணற்றின் மேல்தான் அவர் காட்சி தருகிறார். அது மட்டுமல்ல, விநாயகரைச் சுற்றி கிணற்று நீர் எப்போதும் ஊறிக்கொண்டேயிருக்கிறது. நம் ஊர் பிள்ளையார்கள்போல் இவருக்குப் பெரிய அலங்காரம் எதுவும் கிடையாது. நீளத் தும்பிக்கை, பெரிய காது, சிறிய கண்கள் என்றெல்லாமும் கிடையாது. கிணற்றில் எப்படித் தானாக, சுயம்புவாகத் தோன்றினாரோ, அதேபோல, எந்த மாறுதலும் இல்லாமல் அப்படியே காட்சியளிக்கிறார். பக்தர்கள் இவரை பயபக்தியுடன் வணங்குகிறார்கள். காரணம், காணிப்பாக்கம் விநாயகர், `நல்லவருக்கு நல்லவர், கெட்டவருக்குக் கெட்டவர்’.
யாராவது, ஏதாவது விஷயத்தில் பொய் சொன்னால், அவரைத் தரதரவென இங்கே இழுத்து வந்து விடுகிறார்கள். விநாயகர் முன் சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். `காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் சாட்சியாக நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை’ என்று கூறினால், அதனை சத்தியப் பிரமாணமாக இன்றும் ஆந்திர கிராமப் பஞ்சாயத்துகளில் ஏற்றுக்கொள்கிறார்கள்.
காரணம், இந்த விநாயகர் முன் யாராவது பொய் சொன்னால் 90 நாட்களுக்குள்ளேயே பொய் சொன்னவர் கடுமையாக தண்டிக்கப்படுவார் என்பதால்தான்!உண்மை மட்டுமல்ல, ஊனமுற்றவர்களையும் இந்த விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் குறைகளையெல்லாம் தீர்த்து வைப்பதில் இவருக்கு தீராத இஷ்டம். இவர் முதலில் காட்சி தந்ததே ஊனமுற்ற மூன்று சகோதரர்களுக்குத்தான். ஊர்ப் பெயர் தோன்றியதும் அதனால்தான்!
விநாயகர் தோன்றிய கதைஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் விஹார புரி என்ற ஊரில், ஏழை விவசாயிகளான மூன்று சகோதரர்கள் இருந்தனர். அவர்களிடம் 'காணி’ நிலமே இருந்தது. அது மட்டுமல்ல, மூவருமே ஊனமுற்றவர்கள். ஒருவருக்கு வாய் பேச இயலாது. அடுத்தவருக்குக் காது கேட்காது. மூன்றாமவருக்குக் கண் தெரியாது!
தங்கள் ஊனத்தைப் பொருட்படுத்தாமல், மூவரும் ஒற்றுமையுடன் விவசாயம் செய்து பிழைத்து வந்தார்கள். கோடைக் காலத்தில் அவர்கள் நிலத்தில் இருந்த கிணற்றில் நீர் வற்றியதால், அதனை ஆழப்படுத்த முனைந்தார்கள். மண்வெட்டியுடன் கிணற்றில் இறங்கினான், வாய் பேச முடியாதவன். பூமியைத் தோண்டும்போது ஒரு பாறையின் மீது மண்வெட்டி பட்டு, ஓசை எழுந்தது. அது மட்டுமல்ல, வெட்டுப்பட்ட இடத்திலிருந்து குபுகுபுவென ரத்தம் பீரிட்டது. அதைக் கண்டதும், இதுவரை வாய் பேசாதிருந்தவன், 'ஐயோ ரத்தம்’ என்று அலறினான்! அவன் அலறியது, மேலே நின்றிருந்த, காது கேட்காதவனுக்குக் கேட்டது! எட்டிப் பார்த்த கண் தெரியாதவன், 'என்ன ஒரே சிவப்பாக இருக்கிறதே’ என்று வியந்து பார்த்தான்!
அப்புறம் என்ன? மூவரின் குறைகளும் திடீரென தீர்ந்ததைக் கண்ட கிராம மக்கள் அதிசயித்தனர். கிணற்றுக்குள் இறங்கிப் பார்த்தனர். பாறை உருவில் அங்கே வரசித்தி விநாயகர் காட்சியளிப்பது கண்டு பரவசப்பட்டனர். பயபக்தி யுடன் வணங்கினர். இன்றைக்கும் மண்வெட்டியால் ஏற்பட்ட தழும்பு விநாயகர் சிரசில் இருக்கிறது.காணி நிலத்தில் தோன்றியதாலும், பக்தர்கள், தேங்காய் உடைத்தபோது பரவிய இளநீர், ஒரு காணிப் பரப்பளவு பரவியதால் 'காணிப்பாக்கம்’ என்று பெயர் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள். மிகவும் சிறியதாக இருந்த கோயிலை 11-ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன், பெரிதாகக் கட்டித் திருப்பணி செய்தான். 1336-ல் விஜயநகர மன்னர்களும் இங்கே சிறப்பு வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது.
கோயிலின் அருகே ஒரு நதி உள்ளது. முன்னொரு காலத்தில், அரசனுக்குச் சொந்தமான மாந்தோட்டம் ஒன்று இங்கே இருந்தது. அதிலிருந்த கனிகளை விகிதா என்ற ஒருவன் பறித்துச் சாப்பிட்டான். அதனால் வெகுண்ட அரசன், விகிதாவின் இரு கைகளையும் வெட்டிவிட்டான். அறியாமல் செய்த பிழைக்கு, இவ்வளவு பெரிய தண்டனையா? என்று துடித்த விகிதா, அந்த நதியில் நீராடி, காணிப்பாக்கம் விநாயகரை நோக்கி “பாகு தா (கை தா)” என்று வேண்டினான். அவனுக்குக் கையும் கிடைத்தது, நதிக்கு 'பாகுதா’ என்ற பெயரும் ஏற்பட்டது.
அலங்காரமில்லாத வெண்மை நிற ராஜகோபுரத்தை அடுத்து உள்ளே சென்றால், அலங்காரமில்லாமல், சுயம்புவாகக் காட்சி தரும் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகரைக் காணலாம். அவரைச் சுற்றி ஈரம் கசிந்து கொண்டிருப்பதை பார்க்கலாம். அது தண்ணீர் மட்டுமல்ல, அவரது அளவிட முடியாத கருணையும்தான்.
அருகில் வேறு இரண்டு கோயில்களும் உள்ளன. ஒன்று, மணிகண்டேஸ்வரர் ஆலயம். இங்கிருந்து ஒரு பாம்பு, தினமும் காணிப்பாக்கம் விநாயகரை வணங்கிச் செல்வதாக ஒரு நம்பிக்கை. மற்றது வரதராஜ சுவாமி ஆலயம்.இன்னும் நம்மை அதிசயிக்க வைக்கும் நிகழ்வாக காணிப்பாக்கம் விநாயகர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறார்.
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் தோன்றியதே அந்தக் கிணற்றில்தான்! இன்றும் அந்த கிணற்றின் மேல்தான் அவர் காட்சி தருகிறார். அது மட்டுமல்ல, விநாயகரைச் சுற்றி கிணற்று நீர் எப்போதும் ஊறிக்கொண்டேயிருக்கிறது. நம் ஊர் பிள்ளையார்கள்போல் இவருக்குப் பெரிய அலங்காரம் எதுவும் கிடையாது. நீளத் தும்பிக்கை, பெரிய காது, சிறிய கண்கள் என்றெல்லாமும் கிடையாது. கிணற்றில் எப்படித் தானாக, சுயம்புவாகத் தோன்றினாரோ, அதேபோல, எந்த மாறுதலும் இல்லாமல் அப்படியே காட்சியளிக்கிறார். பக்தர்கள் இவரை பயபக்தியுடன் வணங்குகிறார்கள். காரணம், காணிப்பாக்கம் விநாயகர், `நல்லவருக்கு நல்லவர், கெட்டவருக்குக் கெட்டவர்’.
யாராவது, ஏதாவது விஷயத்தில் பொய் சொன்னால், அவரைத் தரதரவென இங்கே இழுத்து வந்து விடுகிறார்கள். விநாயகர் முன் சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். `காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் சாட்சியாக நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை’ என்று கூறினால், அதனை சத்தியப் பிரமாணமாக இன்றும் ஆந்திர கிராமப் பஞ்சாயத்துகளில் ஏற்றுக்கொள்கிறார்கள்.
காரணம், இந்த விநாயகர் முன் யாராவது பொய் சொன்னால் 90 நாட்களுக்குள்ளேயே பொய் சொன்னவர் கடுமையாக தண்டிக்கப்படுவார் என்பதால்தான்!உண்மை மட்டுமல்ல, ஊனமுற்றவர்களையும் இந்த விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் குறைகளையெல்லாம் தீர்த்து வைப்பதில் இவருக்கு தீராத இஷ்டம். இவர் முதலில் காட்சி தந்ததே ஊனமுற்ற மூன்று சகோதரர்களுக்குத்தான். ஊர்ப் பெயர் தோன்றியதும் அதனால்தான்!
விநாயகர் தோன்றிய கதைஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் விஹார புரி என்ற ஊரில், ஏழை விவசாயிகளான மூன்று சகோதரர்கள் இருந்தனர். அவர்களிடம் 'காணி’ நிலமே இருந்தது. அது மட்டுமல்ல, மூவருமே ஊனமுற்றவர்கள். ஒருவருக்கு வாய் பேச இயலாது. அடுத்தவருக்குக் காது கேட்காது. மூன்றாமவருக்குக் கண் தெரியாது!
தங்கள் ஊனத்தைப் பொருட்படுத்தாமல், மூவரும் ஒற்றுமையுடன் விவசாயம் செய்து பிழைத்து வந்தார்கள். கோடைக் காலத்தில் அவர்கள் நிலத்தில் இருந்த கிணற்றில் நீர் வற்றியதால், அதனை ஆழப்படுத்த முனைந்தார்கள். மண்வெட்டியுடன் கிணற்றில் இறங்கினான், வாய் பேச முடியாதவன். பூமியைத் தோண்டும்போது ஒரு பாறையின் மீது மண்வெட்டி பட்டு, ஓசை எழுந்தது. அது மட்டுமல்ல, வெட்டுப்பட்ட இடத்திலிருந்து குபுகுபுவென ரத்தம் பீரிட்டது. அதைக் கண்டதும், இதுவரை வாய் பேசாதிருந்தவன், 'ஐயோ ரத்தம்’ என்று அலறினான்! அவன் அலறியது, மேலே நின்றிருந்த, காது கேட்காதவனுக்குக் கேட்டது! எட்டிப் பார்த்த கண் தெரியாதவன், 'என்ன ஒரே சிவப்பாக இருக்கிறதே’ என்று வியந்து பார்த்தான்!
அப்புறம் என்ன? மூவரின் குறைகளும் திடீரென தீர்ந்ததைக் கண்ட கிராம மக்கள் அதிசயித்தனர். கிணற்றுக்குள் இறங்கிப் பார்த்தனர். பாறை உருவில் அங்கே வரசித்தி விநாயகர் காட்சியளிப்பது கண்டு பரவசப்பட்டனர். பயபக்தி யுடன் வணங்கினர். இன்றைக்கும் மண்வெட்டியால் ஏற்பட்ட தழும்பு விநாயகர் சிரசில் இருக்கிறது.காணி நிலத்தில் தோன்றியதாலும், பக்தர்கள், தேங்காய் உடைத்தபோது பரவிய இளநீர், ஒரு காணிப் பரப்பளவு பரவியதால் 'காணிப்பாக்கம்’ என்று பெயர் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள். மிகவும் சிறியதாக இருந்த கோயிலை 11-ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன், பெரிதாகக் கட்டித் திருப்பணி செய்தான். 1336-ல் விஜயநகர மன்னர்களும் இங்கே சிறப்பு வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது.
கோயிலின் அருகே ஒரு நதி உள்ளது. முன்னொரு காலத்தில், அரசனுக்குச் சொந்தமான மாந்தோட்டம் ஒன்று இங்கே இருந்தது. அதிலிருந்த கனிகளை விகிதா என்ற ஒருவன் பறித்துச் சாப்பிட்டான். அதனால் வெகுண்ட அரசன், விகிதாவின் இரு கைகளையும் வெட்டிவிட்டான். அறியாமல் செய்த பிழைக்கு, இவ்வளவு பெரிய தண்டனையா? என்று துடித்த விகிதா, அந்த நதியில் நீராடி, காணிப்பாக்கம் விநாயகரை நோக்கி “பாகு தா (கை தா)” என்று வேண்டினான். அவனுக்குக் கையும் கிடைத்தது, நதிக்கு 'பாகுதா’ என்ற பெயரும் ஏற்பட்டது.
அலங்காரமில்லாத வெண்மை நிற ராஜகோபுரத்தை அடுத்து உள்ளே சென்றால், அலங்காரமில்லாமல், சுயம்புவாகக் காட்சி தரும் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகரைக் காணலாம். அவரைச் சுற்றி ஈரம் கசிந்து கொண்டிருப்பதை பார்க்கலாம். அது தண்ணீர் மட்டுமல்ல, அவரது அளவிட முடியாத கருணையும்தான்.
அருகில் வேறு இரண்டு கோயில்களும் உள்ளன. ஒன்று, மணிகண்டேஸ்வரர் ஆலயம். இங்கிருந்து ஒரு பாம்பு, தினமும் காணிப்பாக்கம் விநாயகரை வணங்கிச் செல்வதாக ஒரு நம்பிக்கை. மற்றது வரதராஜ சுவாமி ஆலயம்.இன்னும் நம்மை அதிசயிக்க வைக்கும் நிகழ்வாக காணிப்பாக்கம் விநாயகர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறார்.
இத்தல இறைவனை வழிபடுபவர்களை எந்த தீங்கான செயலிலும் ஈடுபடாதவாறு இறைவன் தடுத்தாட் கொள்வார் என்பது நம்பிக்கையாக உள்ளது.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வட தமிழ்நாட்டில் அப்பர் என்னும் திருநாவுக்கரசரும், தென் தமிழ்நாட்டில் திருஞானசம்பந்தரும், சமணர்களை வென்று சைவ சமயப் பேரெழுச்சியை உண்டாக்கினார்கள். அந்த எழுச்சியின் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் சிவபெருமானுக்குக் குடைவரை கோவில்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் திருக்கோளக்குடியில் உள்ள திருக்கோளபுரீசர் ஆலயம் ஆகும்.
இந்த ஆலயம் கட்டும் பணி 8-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் இருக்கும் பல கல்வெட்டுகள் மாறவர்மன் திருப்புவனச் சக்கரவர்த்தி குலசேகரதேவன் என்னும் பாண்டிய மன்னன் ஆற்றிய பணிகளை பட்டியலிட்டுக் காண்பிப்பதாக இருக்கிறது. எனவே திருக்கோளக்குடி ஆலயத்தின் திருப்பணிகள், 13-ம் நூற்றாண்டில் முழுமை பெற்றிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
திருக்கோளபுரம் என்று வழங்கப்பெறும் இத்தலம் முல்லைக்குத் தேர் தந்த வள்ளலான பாரி வேந்தன் ஆட்சி செய்த பறம்பு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கியிருக்கிறது. மேலும் பூங்குன்ற நாட்டில் ‘யாதும் ஊரே.. யாவரும் கேளிர்’ என்று 2 ஆயிரம் ஆண்டு ளுக்கு முன்பே, உலக ஒருமைப்பாட்டையும், மனித நேயத்தையும் ஏற்றமிகு குரலில் எடுத்து முழங்கிய கணியன் பூங்குன்றனார் பிறந்த மகிபாலன்பட்டிக்கு வடக்கில் இந்த திருத்தலம் அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்ல பூங்குன்றநாடு, கோனாடு, கானாடு, கல்வாயில்நாடு என்னும் நான்கு நாடுகளுக்கும் நடுவில் அமைந்துள்ளது. அந்த நான்கு நாட்டாரும் வந்து வழிபடும் சிறப்பு பெற்ற ஆலயம் என்பதால், இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை ‘நானாட்டீசர்’ என்று தல புராணம் போற்றிப் புகழ்கிறது.
திருக்கோளக்குடி கிராமத்தின் மேற்கு எல்லையில் பெரியனவும், சிறியனவுமான கோளப்பாறைகளை சுமந்தபடி எழுந்து நிற்கிறது ஒரு குன்று. அதன் நடுவில் பெரியதொரு கோளக்குன்று அமைந்துள்ளது. அதில் தான் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது திருக்கோளக்குடி மலைக்கோவில். இந்தக் குன்றின் வடக்கு பக்கத்தில் ‘உலக்கைக் குன்று’ என்ற பெயரிலும், தென்கிழக்கு பகுதியில் ‘பிச்சூழிப்பாறை’ என்ற குன்றும் காணப்படுகின்றன. இந்தக் குன்றின் பாறைக் கோளங்கள் எந்த தருணத்தில் கீழே உருண்டு விழுமோ? என்று காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கிறது.
இந்த மலை மீது 4 ஆலயங்கள் இருக்கின்றன. அடிவாரம் ‘பொய்யாமொழீசர் ஆலயம்’, அதற்கு சற்று மேலே ‘சிவ தருமபுரீசர் ஆலயம்’, மேல் பகுதியில் ‘திருக்கோளபுரீசர் கோவில்’, அதற்கும் கொஞ்சம் மேலே ‘முருகப்பெருமான் ஆலயம்’ ஆகியவை காணப்படுகின்றன. ஒரு மலை மீது 4 ஆலயங்கள் அமைந்திருக்கும் சிறப்பு வாய்ந்த தலமாகவும் திருக்கோளக்குடி உள்ளது. முன்காலத்தில் இந்தப் பகுதியை ‘சிவபுரம்’ என்றும், ‘திருக்கோளபுரம்’ என்றும், ‘கன்னிமாநகரம்’ என்றும் அழைத்திருக்கிறார்கள்.
புண்ணியம்மிகுந்த பாண்டிய நாட்டில் ஏராளமான சிவதலங்கள் இருக்கின்றன. பாண்டிய நாட்டிற்குள் இருந்து தொடங்கும் பொதிகை மலைக்கு, திருக்கோளக்குடியில் உள்ள கன்னி மலையே மூல இடமாக விளங்குகிறது. பொதிைக மலையை விடவும், கன்னி மலையில் உள்ள சிவதருமபுரம் மிகவும் பெருமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. ஏனெனில் பூமி, அந்தரம், சொர்க்கம் என மூன்று நிலைகளில், பரமனின் அந்தரங்க இடமாக இந்த திருக்கோளக்குடி விளங்குகிறது. கயிலை மலைக்கு ஒப்பான திருத்தலம் இது என்றும், மூவுலகத்திலும் இதற்கு ஈடான பெருமை கொண்ட தலம் இல்லை என்றும் சொல்கிறார்கள். இத்தலத்தில் பெயர் களைச் சொன்னாலே, அனைத்து வினைகளும் நீங்கும் என்பது ஐதீகம்.
ஓர் உருவும் இல்லாத இறைவனை, அகத்தியர், புலத்தியர் என்று இருபெரும் முனிவர்கள் பலா மர வடிவம் கொண்டு வழிபட்டது இத்தலத்தின் பெருமையாகும். இரண்டு முனிவர்களும் நான்கு யுகங் களாக மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆன்மா, சூரியன், சந்திரர் என எட்டு வடிவங்களில் இறைவனை நினைத்து வழிபாடு செய்திருக்கிறார்கள். இந்தத் தலத்தில் அமர்ந்து உணவு உண்பது, வேள்வி செய்வதற்கு ஒப்பானதாகும். இங்கு உறக்கம் கொள்வது, சிவ யோகம் செய்வது சமமானது. அதே கோவிலை வலம் வருவது திருவிழா நடத்தியதற்கு சமமானதாகும்.
கொலை செய்தவர், பிறர் பொருளைக் களவு செய்தவர், பசுவை கொன்றவர், வேதத்தை பழித்தவர், கற்புடைய பெண்களுக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள், இத்தல இறைவனை வழிபட்டால், அவர்கள் திருந்தி வாழும்படியாக அவர்களை இறைவன் ஆட்கொள்வார் என்று கூறுகிறார்கள். இத்தல இறைவனை வழிபடுபவர்களை எந்த தீங்கான செயலிலும் ஈடுபடாதவாறு இறைவன் தடுத்தாட் கொள்வார் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஆலயத்தின் அடிவாரத்தில் பொய்யாமொழீசர் ஆலயம் இருக்கிறது. இங்கு கருவறையில் லிங்கத் திருமேனியில் இறைவன் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அன்னை மரகதவல்லியம்மை நின்ற கோலத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தின் திருப்படிக்கு முன்பாக ‘திருப்பாறை’ என்ற பெயரில் ஒரு சிறு பாறை நிலத்திற்குள் இருந்து, சுமார் 10 சதுர அடி பரப்பளவில், ஓர் அங்குல உயரத்திற்கு வெளிப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இந்தப் பாறை இறைசக்தி கொண்டது என்றும், பக்தர்களுக்கு முறையீடுகளுக்கு நீதி வழங்கும் ஆற்றல் கொண்டது என்றும் சொல்கிறார்கள். பொய்யாமொழீசரின் திருவருள் இந்தப் பாறையில் இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.
அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லும் பாதையில் 60 படிகளைக் கடந்த நிலையில் காணப்படுகிறது, சிவதருமபுரீசர் திருக்கோவில். இந்த ஆலயம் இறைவனின் பூமி, அந்தரம், சொர்க்கம் ஆகிய நிலைகளில் நடுநிலையான அந்தரம் என்று சொல்லப்படுகிறது. இத்தல மூர்த்தியான சிவதருமபுரீசர் லிங்க வடிவத்தில் உள்ளார். இவர் சுயம்புமூர்த்தியாவார். இந்த இறைவனுக்கு பின்புறத்தில் ‘தவளை படாதச்சுனை’ என்ற பெயரில் தீர்த்தம் ஒன்று உள்ளது. அதன் அருகே உட்சரிவான பாறையின் நெற்றிப்பரப்பில் மிகப்பெரிய தேன் கூடு வடிவில் சப்த கன்னியர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது. ஆலயத்தில் கிழக்கு பார்த்தபடி மலைமூர்த்தி விநாயகர் உள்ளார். இவருக்கு பல பெயர்கள் உண்டு. அதில் முக்கியமானது ‘வீரகத்தி விநாயகர்’ என்பதாகும். இவரை வழிபடுபவர்களுக்கு வீரமும், பொறுமையும் கிடைக்கும் என்பது ஐதீகம். சிவதருமபுரீசர் கோவிலின் வடக்கே கிழக்கு நோக்கியபடி சிவகாமவல்லியம்மை தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார்.
மலையின் மேல் பகுதியில் திருக்கோளபுரீசர் வீற்றிருக்கும் குடவரைக் கோவில் உள்ளது. இத்தல இறைவன் ககோளபுரீசர் என்ற திருநாமத்துடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவன் சன்னிதியை பார்த்தபடி இருக்கும் பாறையிலேயே நந்தியின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. கரு வறையில் உள்ள சிவலிங்கத் திருமேனி பாறையிலே வடிவமைக்கப்பெற்றது. முகப்பு மண்டபமும், விமான அமைப்புடன் கூடிய கருவறையும் கொண்ட அழகிய ஆலயம் இது. தனிச் சன்னிதியில் அன்னை ஆத்ம நாயகி (ஆவுடைநாயகி) அருள்பொழியும் திருமுகத் தோடு நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
இதற்கு மேல் பாறையில் படி அமைக்கப்பட்ட பாதைகள் உள்ளது. மேலே சென்றால் ஆறு திரு முகங்களும், பன்னிரு கரங்களுமாக, வள்ளி- தெய்வானையுடன் மயில் வாகனத்தில் அருள்பாலிக்கும் சுப்பிரமணியரை தரிசனம் செய்யலாம். இவர் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். அதற்கு பக்கத்தில் குன்று ஒன்று இருக்கிறது. அதில் ஒரு மண்டபம் உள்ளது. அதற்குள் ‘அன்ன லிங்கம்’ என்ற பெயரில் ஒரு சிவலிங்கம் கிழக்கு பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தெற்கேயுள்ள உயரமான நீண்ட கோளப்பாறையின் உச்சியில், திருக்கார்த் திகைத் தீப மண்டபம் உள்ளது. இந்த தீப மண்டபம் தான் திருக்கோளகிரியின் சிகரமாகும்.
தவளை இல்லாத தீர்த்தம் :
சிவபெருமான் திருமுடியில் இருந்த நாகம், திருமாலின் வாகனமான கருடனைப் பார்த்து ‘கருடா சுகமா?’ என்று கேட்டது. அந்தக் கேள்விக்கு கருடன், ‘எவரும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எந்தக் குறையும் வராது’ என்று பதிலளித்தது.
நாகத்தின் கர்வத்தை உணர்ந்த சிவபெருமான், அதனை பூலோகத்தில் வாழும்படி சாபம் கொடுத்தார். உடனே நாகம் தன்னுடைய சாபத்தை நீக்கியருளும்படி வேண்டியது.
ஈசன், ‘நீ! ககோளபுரம் சென்று தவமிருந்தால், உன்னுடைய சாபம் நீங்கும்’ என்றார்.
அதன்படி நாகம் இத்திருத்தலத்திற்கு வந்து தவம் செய்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த சுனையில் இருந்த தவளைகளை, பறவைகள் பிடித்துச் சென்று கொன்று தின்பதைப் பார்த்தது. அதைக் கண்டு வருந்திய நாகம், இறைவனை மனமுருக வேண்டியது.
உடனே ஈசன், ‘இன்று முதல் இந்தச் சுனையில் தவளைகள் இல்லாமல் விலக்கினோம்’ என்று அருள் புரிந்தார்.
தவளைகள் இல்லாத சுனைத் தீர்த்தம் என்பதால் இதற்கு ‘தவளைபடாதச் சுனை’ என்று பெயர் வந்தது. தவிர சிவகங்கை, நெல்லியடித் தீர்த்தம், ககோளத் தீத்தம், தேன் தீர்த்தம், சப்த கன்னிமார் தீர்த்தம், சிவதரும தீர்த்தம் என்ற பெயர்களும் இந்தச் சுனைக்கு உண்டு. இந்த தீர்த்தக் கரையில் இருந்து சிவபூஜை செய்தாலோ, பித்ரு கடன் செய்தாலோ சிறப்பான பலன் கிடைக்கும். மேலும் இந்தத் தீர்த்தத்தை பருகி இத்தல இறைவனை வழிபடுவோர் இன்பமான வாழ்வைப் பெறுவார்கள்.
இந்த ஆலயத்தில் ஆனித் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் தேரோட்டம், சுவாமி வீதிஉலா போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பு வாய்ந்தவை. மார்கழி திருவாதிரை, தைப்பூசம், பிரதோஷம், சங்கடகர சதுர்த்தி, பவுர்ணமி, சிவராத்திரி போன்ற நிகழ்வுகளும் சிறப்பு மிக்கவை.
அமைவிடம் :
புதுக்கோட்டையில் இருந்து ராங்கியம் வழியாக 40 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோளக்குடி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் செவ்வூர் வழியாகவும் ஆலயத்திற்கு செல்லலாம்.
இந்த ஆலயம் கட்டும் பணி 8-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் இருக்கும் பல கல்வெட்டுகள் மாறவர்மன் திருப்புவனச் சக்கரவர்த்தி குலசேகரதேவன் என்னும் பாண்டிய மன்னன் ஆற்றிய பணிகளை பட்டியலிட்டுக் காண்பிப்பதாக இருக்கிறது. எனவே திருக்கோளக்குடி ஆலயத்தின் திருப்பணிகள், 13-ம் நூற்றாண்டில் முழுமை பெற்றிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
திருக்கோளபுரம் என்று வழங்கப்பெறும் இத்தலம் முல்லைக்குத் தேர் தந்த வள்ளலான பாரி வேந்தன் ஆட்சி செய்த பறம்பு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கியிருக்கிறது. மேலும் பூங்குன்ற நாட்டில் ‘யாதும் ஊரே.. யாவரும் கேளிர்’ என்று 2 ஆயிரம் ஆண்டு ளுக்கு முன்பே, உலக ஒருமைப்பாட்டையும், மனித நேயத்தையும் ஏற்றமிகு குரலில் எடுத்து முழங்கிய கணியன் பூங்குன்றனார் பிறந்த மகிபாலன்பட்டிக்கு வடக்கில் இந்த திருத்தலம் அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்ல பூங்குன்றநாடு, கோனாடு, கானாடு, கல்வாயில்நாடு என்னும் நான்கு நாடுகளுக்கும் நடுவில் அமைந்துள்ளது. அந்த நான்கு நாட்டாரும் வந்து வழிபடும் சிறப்பு பெற்ற ஆலயம் என்பதால், இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை ‘நானாட்டீசர்’ என்று தல புராணம் போற்றிப் புகழ்கிறது.
திருக்கோளக்குடி கிராமத்தின் மேற்கு எல்லையில் பெரியனவும், சிறியனவுமான கோளப்பாறைகளை சுமந்தபடி எழுந்து நிற்கிறது ஒரு குன்று. அதன் நடுவில் பெரியதொரு கோளக்குன்று அமைந்துள்ளது. அதில் தான் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது திருக்கோளக்குடி மலைக்கோவில். இந்தக் குன்றின் வடக்கு பக்கத்தில் ‘உலக்கைக் குன்று’ என்ற பெயரிலும், தென்கிழக்கு பகுதியில் ‘பிச்சூழிப்பாறை’ என்ற குன்றும் காணப்படுகின்றன. இந்தக் குன்றின் பாறைக் கோளங்கள் எந்த தருணத்தில் கீழே உருண்டு விழுமோ? என்று காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கிறது.
இந்த மலை மீது 4 ஆலயங்கள் இருக்கின்றன. அடிவாரம் ‘பொய்யாமொழீசர் ஆலயம்’, அதற்கு சற்று மேலே ‘சிவ தருமபுரீசர் ஆலயம்’, மேல் பகுதியில் ‘திருக்கோளபுரீசர் கோவில்’, அதற்கும் கொஞ்சம் மேலே ‘முருகப்பெருமான் ஆலயம்’ ஆகியவை காணப்படுகின்றன. ஒரு மலை மீது 4 ஆலயங்கள் அமைந்திருக்கும் சிறப்பு வாய்ந்த தலமாகவும் திருக்கோளக்குடி உள்ளது. முன்காலத்தில் இந்தப் பகுதியை ‘சிவபுரம்’ என்றும், ‘திருக்கோளபுரம்’ என்றும், ‘கன்னிமாநகரம்’ என்றும் அழைத்திருக்கிறார்கள்.
புண்ணியம்மிகுந்த பாண்டிய நாட்டில் ஏராளமான சிவதலங்கள் இருக்கின்றன. பாண்டிய நாட்டிற்குள் இருந்து தொடங்கும் பொதிகை மலைக்கு, திருக்கோளக்குடியில் உள்ள கன்னி மலையே மூல இடமாக விளங்குகிறது. பொதிைக மலையை விடவும், கன்னி மலையில் உள்ள சிவதருமபுரம் மிகவும் பெருமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. ஏனெனில் பூமி, அந்தரம், சொர்க்கம் என மூன்று நிலைகளில், பரமனின் அந்தரங்க இடமாக இந்த திருக்கோளக்குடி விளங்குகிறது. கயிலை மலைக்கு ஒப்பான திருத்தலம் இது என்றும், மூவுலகத்திலும் இதற்கு ஈடான பெருமை கொண்ட தலம் இல்லை என்றும் சொல்கிறார்கள். இத்தலத்தில் பெயர் களைச் சொன்னாலே, அனைத்து வினைகளும் நீங்கும் என்பது ஐதீகம்.
ஓர் உருவும் இல்லாத இறைவனை, அகத்தியர், புலத்தியர் என்று இருபெரும் முனிவர்கள் பலா மர வடிவம் கொண்டு வழிபட்டது இத்தலத்தின் பெருமையாகும். இரண்டு முனிவர்களும் நான்கு யுகங் களாக மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆன்மா, சூரியன், சந்திரர் என எட்டு வடிவங்களில் இறைவனை நினைத்து வழிபாடு செய்திருக்கிறார்கள். இந்தத் தலத்தில் அமர்ந்து உணவு உண்பது, வேள்வி செய்வதற்கு ஒப்பானதாகும். இங்கு உறக்கம் கொள்வது, சிவ யோகம் செய்வது சமமானது. அதே கோவிலை வலம் வருவது திருவிழா நடத்தியதற்கு சமமானதாகும்.
கொலை செய்தவர், பிறர் பொருளைக் களவு செய்தவர், பசுவை கொன்றவர், வேதத்தை பழித்தவர், கற்புடைய பெண்களுக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள், இத்தல இறைவனை வழிபட்டால், அவர்கள் திருந்தி வாழும்படியாக அவர்களை இறைவன் ஆட்கொள்வார் என்று கூறுகிறார்கள். இத்தல இறைவனை வழிபடுபவர்களை எந்த தீங்கான செயலிலும் ஈடுபடாதவாறு இறைவன் தடுத்தாட் கொள்வார் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஆலயத்தின் அடிவாரத்தில் பொய்யாமொழீசர் ஆலயம் இருக்கிறது. இங்கு கருவறையில் லிங்கத் திருமேனியில் இறைவன் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அன்னை மரகதவல்லியம்மை நின்ற கோலத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தின் திருப்படிக்கு முன்பாக ‘திருப்பாறை’ என்ற பெயரில் ஒரு சிறு பாறை நிலத்திற்குள் இருந்து, சுமார் 10 சதுர அடி பரப்பளவில், ஓர் அங்குல உயரத்திற்கு வெளிப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இந்தப் பாறை இறைசக்தி கொண்டது என்றும், பக்தர்களுக்கு முறையீடுகளுக்கு நீதி வழங்கும் ஆற்றல் கொண்டது என்றும் சொல்கிறார்கள். பொய்யாமொழீசரின் திருவருள் இந்தப் பாறையில் இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.
அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லும் பாதையில் 60 படிகளைக் கடந்த நிலையில் காணப்படுகிறது, சிவதருமபுரீசர் திருக்கோவில். இந்த ஆலயம் இறைவனின் பூமி, அந்தரம், சொர்க்கம் ஆகிய நிலைகளில் நடுநிலையான அந்தரம் என்று சொல்லப்படுகிறது. இத்தல மூர்த்தியான சிவதருமபுரீசர் லிங்க வடிவத்தில் உள்ளார். இவர் சுயம்புமூர்த்தியாவார். இந்த இறைவனுக்கு பின்புறத்தில் ‘தவளை படாதச்சுனை’ என்ற பெயரில் தீர்த்தம் ஒன்று உள்ளது. அதன் அருகே உட்சரிவான பாறையின் நெற்றிப்பரப்பில் மிகப்பெரிய தேன் கூடு வடிவில் சப்த கன்னியர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது. ஆலயத்தில் கிழக்கு பார்த்தபடி மலைமூர்த்தி விநாயகர் உள்ளார். இவருக்கு பல பெயர்கள் உண்டு. அதில் முக்கியமானது ‘வீரகத்தி விநாயகர்’ என்பதாகும். இவரை வழிபடுபவர்களுக்கு வீரமும், பொறுமையும் கிடைக்கும் என்பது ஐதீகம். சிவதருமபுரீசர் கோவிலின் வடக்கே கிழக்கு நோக்கியபடி சிவகாமவல்லியம்மை தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார்.
மலையின் மேல் பகுதியில் திருக்கோளபுரீசர் வீற்றிருக்கும் குடவரைக் கோவில் உள்ளது. இத்தல இறைவன் ககோளபுரீசர் என்ற திருநாமத்துடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவன் சன்னிதியை பார்த்தபடி இருக்கும் பாறையிலேயே நந்தியின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. கரு வறையில் உள்ள சிவலிங்கத் திருமேனி பாறையிலே வடிவமைக்கப்பெற்றது. முகப்பு மண்டபமும், விமான அமைப்புடன் கூடிய கருவறையும் கொண்ட அழகிய ஆலயம் இது. தனிச் சன்னிதியில் அன்னை ஆத்ம நாயகி (ஆவுடைநாயகி) அருள்பொழியும் திருமுகத் தோடு நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
இதற்கு மேல் பாறையில் படி அமைக்கப்பட்ட பாதைகள் உள்ளது. மேலே சென்றால் ஆறு திரு முகங்களும், பன்னிரு கரங்களுமாக, வள்ளி- தெய்வானையுடன் மயில் வாகனத்தில் அருள்பாலிக்கும் சுப்பிரமணியரை தரிசனம் செய்யலாம். இவர் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். அதற்கு பக்கத்தில் குன்று ஒன்று இருக்கிறது. அதில் ஒரு மண்டபம் உள்ளது. அதற்குள் ‘அன்ன லிங்கம்’ என்ற பெயரில் ஒரு சிவலிங்கம் கிழக்கு பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தெற்கேயுள்ள உயரமான நீண்ட கோளப்பாறையின் உச்சியில், திருக்கார்த் திகைத் தீப மண்டபம் உள்ளது. இந்த தீப மண்டபம் தான் திருக்கோளகிரியின் சிகரமாகும்.
தவளை இல்லாத தீர்த்தம் :
சிவபெருமான் திருமுடியில் இருந்த நாகம், திருமாலின் வாகனமான கருடனைப் பார்த்து ‘கருடா சுகமா?’ என்று கேட்டது. அந்தக் கேள்விக்கு கருடன், ‘எவரும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எந்தக் குறையும் வராது’ என்று பதிலளித்தது.
நாகத்தின் கர்வத்தை உணர்ந்த சிவபெருமான், அதனை பூலோகத்தில் வாழும்படி சாபம் கொடுத்தார். உடனே நாகம் தன்னுடைய சாபத்தை நீக்கியருளும்படி வேண்டியது.
ஈசன், ‘நீ! ககோளபுரம் சென்று தவமிருந்தால், உன்னுடைய சாபம் நீங்கும்’ என்றார்.
அதன்படி நாகம் இத்திருத்தலத்திற்கு வந்து தவம் செய்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த சுனையில் இருந்த தவளைகளை, பறவைகள் பிடித்துச் சென்று கொன்று தின்பதைப் பார்த்தது. அதைக் கண்டு வருந்திய நாகம், இறைவனை மனமுருக வேண்டியது.
உடனே ஈசன், ‘இன்று முதல் இந்தச் சுனையில் தவளைகள் இல்லாமல் விலக்கினோம்’ என்று அருள் புரிந்தார்.
தவளைகள் இல்லாத சுனைத் தீர்த்தம் என்பதால் இதற்கு ‘தவளைபடாதச் சுனை’ என்று பெயர் வந்தது. தவிர சிவகங்கை, நெல்லியடித் தீர்த்தம், ககோளத் தீத்தம், தேன் தீர்த்தம், சப்த கன்னிமார் தீர்த்தம், சிவதரும தீர்த்தம் என்ற பெயர்களும் இந்தச் சுனைக்கு உண்டு. இந்த தீர்த்தக் கரையில் இருந்து சிவபூஜை செய்தாலோ, பித்ரு கடன் செய்தாலோ சிறப்பான பலன் கிடைக்கும். மேலும் இந்தத் தீர்த்தத்தை பருகி இத்தல இறைவனை வழிபடுவோர் இன்பமான வாழ்வைப் பெறுவார்கள்.
இந்த ஆலயத்தில் ஆனித் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் தேரோட்டம், சுவாமி வீதிஉலா போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பு வாய்ந்தவை. மார்கழி திருவாதிரை, தைப்பூசம், பிரதோஷம், சங்கடகர சதுர்த்தி, பவுர்ணமி, சிவராத்திரி போன்ற நிகழ்வுகளும் சிறப்பு மிக்கவை.
அமைவிடம் :
புதுக்கோட்டையில் இருந்து ராங்கியம் வழியாக 40 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோளக்குடி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் செவ்வூர் வழியாகவும் ஆலயத்திற்கு செல்லலாம்.
புற்றின் முன் சிவன் காட்சி தந்ததால், “புத்தூர்” என்று அழைக்கப்பட்ட இத்தலம், பின்னர் “திரு” என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு, “திருப்புத்தூர்” ஆனது. அதுவே திருப்பத்தூர்.
சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அஷ்ட பைரவர் தலங்கள் உள்ளன. பொதுவாக பைரவர், ஆடையில்லாமல், நாய் வாகனத்துடன் காட்சி தருவார். ஆனால், இவர் வெண்ணிற பட்டாடை அணிந்து, நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருகிறார்.
முன்னொரு காலத்தில் கொலை, கொள்ளை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டு வந்த வால்மீகி, தன்னை திருத்திக்கொள்ள வேண்டி கொன்றை மரங்கள் நிறைந்த ஒரு வனத்தில் சிவனை நோக்கி, கடுந்தவம் இருந்தார். நீண்டகாலம் தவம் செய்ததால், அவர் அமர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் கரையான்கள் புற்று கட்டின. அவரது தவத்தை மெச்சிய சிவன் அவருக்கு காட்சி கொடுத்தார். புற்றில் இருந்த வால்மீகிக்கு காட்சி கொடுத்ததால், இவர் “புற்றீஸ்வரர்” எனப்பட்டார். அவ்வாறு காட்சி கொடுத்ததின் அடிப்படையில் எழுப்பப்பட்ட தலமே இது. புற்றின் முன் சிவன் காட்சி தந்ததால், “புத்தூர்” என்று அழைக்கப்பட்ட இத்தலம், பின்னர் “திரு” என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு, “திருப்புத்தூர்” ஆனது. அதுவே திருப்பத்தூர். பிற்காலத்தில், இவ்விடத்தில் மன்னர்கள் கோயில் கட்டினர்.
சிவ பக்தனான இரண்யாட்சகனுக்கு அந்தகாசுரன், சம்பாசுரன் என இரண்டு மகன்கள் பிறந்தனர். இவர்கள் சிறந்த சிவ பக்தர்களாக இருந்தாலும், தேவர்களுக்கு பெரும் துன்பம் கொடுத்தனர். தேவர்கள் சிவ பெருமானை துதித்தனர். சிவன் தனது அம்சமாக விஸ்வரூபம் எடுத்து வந்தார். அந்தகாசுரன், சம்பகாசுரனை வதம் செய்தார். இவரே பைரவர் ஆவார். அசுரர்கள் என்றாலும் அவர்கள் பக்தர்கள் என்பதால் பைரவருக்கு தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க இங்கு சிவலிங்க பூஜை செய்தார்.
இவரே இத்தலத்தில் “யோகபைரவராக” காட்சி தருகிறார். இவர் வலக்கரத்தில் சிவலிங்கத்தை வைத்து, கால்கட்டை விரலை தரையில் ஊன்றியபடி யோக நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு வெண்ணிற பட்டாடை அணிவித்து அலங்கரிப்பது விசேஷம். யோக நிலையில் இருப்பதால் இவருக்கு “நாய்” வாகனம் கிடையாது. கிரக தோஷங்கள் நீங்க நவக்கிரக தலங்களுக்கு செல்ல முடியாவிட்டால், இங்குள்ள யோக பைரவரை வணங்கினால் போதும். “ஆபத்துத்தாரண பைரவர்” என்று அழைக்கப்படும் இவர் எல்லா தோஷங்களையும் நீக்குவார் என்பது ஐதீகம். தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப் பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள்.
வால்மீகி தவம் செய்த இடத்தின் வடிவம், கருவறைக்கு பின்புறம் உள்ளது. இந்திரனின் மகன் ஜெயந்தன் கந்தபுராணத்தில் முக்கிய பாத்திரம். இவனை பத்மாசுரன் கடத்தி வந்து சிறையில் அடைத்தான். தாயின் மானம் காக்க சிறைப்பட்ட ஜெயந்தனை சூரபத்மனிடம் போரிட்டு மீட்டார் முருகன். இவனுக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. சித்திரை மாதத்தில் ஜெயந்தனுக்கு இங்கு விழா எடுக்கப்படுகிறது. மகாவிஷ்ணு இத்தலத்தில் திருத்தளிநாதரை வழிபட்டுள்ளார்.
இவரும் யோகநிலையில், சுவாமிக்கு பின்புறம் தனிசன்னதியில் காட்சி தருகிறார். இவர், “யோகநாராயணர்” என்று அழைக்கப் படுகிறார். ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர் உடன் இருக்கின்றனர். இராகு கேது தோஷம் நீக்கும் திருநாகேஸ்வரர் சன்னதியும் இங்குள்ளது. இராகு காலத்தில் இவரை வணங்குகின்றனர். சுப்பிரமணியர் வடக்கு நோக்கியபடி வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். இவரை, அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார். நடராஜர் கவுரிதாண்டவ கோலத்தில் உள்ளார். தெட்சிணாமூர்த்தி சீடர்கள் இல்லாமல் உள்ளார். நவக்கிரக மண்டபத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன.
திருவிழா: சித்திரையில் பைரவர் விழா, கார்த்திகையில் சம்பகசஷ்டி.
காலை 5.30 முதல் 12.30வரை, மாலை 3.30 முதல் இரவு 8.30 மணிவரை திறந்திருக்கும்.
சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று, இவருக்கு ஒரு நாள் விழா நடக்கிறது. அப்போது பைரவர் உற்சவர் குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார். கார்த்திகையில் சம்பகசஷ்டி விழாவின்போது ஆறு நாட்கள், “அஷ்டபைரவ யாகம்” நடக்கிறது. இந்த யாகம் மிகவும் விசேஷமானது.
இருப்பிடம்: திருப்புத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் உள்ளது.
அருள்மிகு வெண்பட்டு பைரவர் (திருத்தளிநாதர்) கோயில்,
திருப்புத்தூர்,
சிவகங்கை மாவட்டம்.
முன்னொரு காலத்தில் கொலை, கொள்ளை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டு வந்த வால்மீகி, தன்னை திருத்திக்கொள்ள வேண்டி கொன்றை மரங்கள் நிறைந்த ஒரு வனத்தில் சிவனை நோக்கி, கடுந்தவம் இருந்தார். நீண்டகாலம் தவம் செய்ததால், அவர் அமர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் கரையான்கள் புற்று கட்டின. அவரது தவத்தை மெச்சிய சிவன் அவருக்கு காட்சி கொடுத்தார். புற்றில் இருந்த வால்மீகிக்கு காட்சி கொடுத்ததால், இவர் “புற்றீஸ்வரர்” எனப்பட்டார். அவ்வாறு காட்சி கொடுத்ததின் அடிப்படையில் எழுப்பப்பட்ட தலமே இது. புற்றின் முன் சிவன் காட்சி தந்ததால், “புத்தூர்” என்று அழைக்கப்பட்ட இத்தலம், பின்னர் “திரு” என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு, “திருப்புத்தூர்” ஆனது. அதுவே திருப்பத்தூர். பிற்காலத்தில், இவ்விடத்தில் மன்னர்கள் கோயில் கட்டினர்.
சிவ பக்தனான இரண்யாட்சகனுக்கு அந்தகாசுரன், சம்பாசுரன் என இரண்டு மகன்கள் பிறந்தனர். இவர்கள் சிறந்த சிவ பக்தர்களாக இருந்தாலும், தேவர்களுக்கு பெரும் துன்பம் கொடுத்தனர். தேவர்கள் சிவ பெருமானை துதித்தனர். சிவன் தனது அம்சமாக விஸ்வரூபம் எடுத்து வந்தார். அந்தகாசுரன், சம்பகாசுரனை வதம் செய்தார். இவரே பைரவர் ஆவார். அசுரர்கள் என்றாலும் அவர்கள் பக்தர்கள் என்பதால் பைரவருக்கு தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க இங்கு சிவலிங்க பூஜை செய்தார்.
இவரே இத்தலத்தில் “யோகபைரவராக” காட்சி தருகிறார். இவர் வலக்கரத்தில் சிவலிங்கத்தை வைத்து, கால்கட்டை விரலை தரையில் ஊன்றியபடி யோக நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு வெண்ணிற பட்டாடை அணிவித்து அலங்கரிப்பது விசேஷம். யோக நிலையில் இருப்பதால் இவருக்கு “நாய்” வாகனம் கிடையாது. கிரக தோஷங்கள் நீங்க நவக்கிரக தலங்களுக்கு செல்ல முடியாவிட்டால், இங்குள்ள யோக பைரவரை வணங்கினால் போதும். “ஆபத்துத்தாரண பைரவர்” என்று அழைக்கப்படும் இவர் எல்லா தோஷங்களையும் நீக்குவார் என்பது ஐதீகம். தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப் பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள்.
வால்மீகி தவம் செய்த இடத்தின் வடிவம், கருவறைக்கு பின்புறம் உள்ளது. இந்திரனின் மகன் ஜெயந்தன் கந்தபுராணத்தில் முக்கிய பாத்திரம். இவனை பத்மாசுரன் கடத்தி வந்து சிறையில் அடைத்தான். தாயின் மானம் காக்க சிறைப்பட்ட ஜெயந்தனை சூரபத்மனிடம் போரிட்டு மீட்டார் முருகன். இவனுக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. சித்திரை மாதத்தில் ஜெயந்தனுக்கு இங்கு விழா எடுக்கப்படுகிறது. மகாவிஷ்ணு இத்தலத்தில் திருத்தளிநாதரை வழிபட்டுள்ளார்.
இவரும் யோகநிலையில், சுவாமிக்கு பின்புறம் தனிசன்னதியில் காட்சி தருகிறார். இவர், “யோகநாராயணர்” என்று அழைக்கப் படுகிறார். ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர் உடன் இருக்கின்றனர். இராகு கேது தோஷம் நீக்கும் திருநாகேஸ்வரர் சன்னதியும் இங்குள்ளது. இராகு காலத்தில் இவரை வணங்குகின்றனர். சுப்பிரமணியர் வடக்கு நோக்கியபடி வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். இவரை, அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார். நடராஜர் கவுரிதாண்டவ கோலத்தில் உள்ளார். தெட்சிணாமூர்த்தி சீடர்கள் இல்லாமல் உள்ளார். நவக்கிரக மண்டபத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன.
திருவிழா: சித்திரையில் பைரவர் விழா, கார்த்திகையில் சம்பகசஷ்டி.
காலை 5.30 முதல் 12.30வரை, மாலை 3.30 முதல் இரவு 8.30 மணிவரை திறந்திருக்கும்.
சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று, இவருக்கு ஒரு நாள் விழா நடக்கிறது. அப்போது பைரவர் உற்சவர் குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார். கார்த்திகையில் சம்பகசஷ்டி விழாவின்போது ஆறு நாட்கள், “அஷ்டபைரவ யாகம்” நடக்கிறது. இந்த யாகம் மிகவும் விசேஷமானது.
இருப்பிடம்: திருப்புத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் உள்ளது.
அருள்மிகு வெண்பட்டு பைரவர் (திருத்தளிநாதர்) கோயில்,
திருப்புத்தூர்,
சிவகங்கை மாவட்டம்.
தற்போது நண்டாங்கோவில் என்று அறியப்படும் இத்தலம், தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும்.
காவிரியின் வடகரை தலங்களுள் 42–வது தலமாகத் திகழ்கிறது திருந்துதேவன்குடி. திருந்துதேவன்குடி என்னும் ஊர் இப்போது இல்லை. கோவில் மட்டும் இருக்கிறது. ஊர் இருந்த இடம் நன்செய் நிலங்களாக இருக்கின்றன. கடக ராசிக்காரர்கள் (புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) வழிபட வேண்டிய திருத்தலம் இதுவாகும்.
இறைவன் பெயர்: கற்கடேஸ்வரர்
இறைவி பெயர்: அருமருந்துநாயகி, அபூர்வநாயகி
இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.
இக்கோயில், காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தற்போது நண்டாங்கோவில் என்று அறியப்படும் இத்தலம், தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும். தல புராணப்படி, இந்திரன் சாபத்திற்கு ஆளான கந்தர்வன் ஒருவன் நண்டாக இவ்வாலயம் வந்து பூசித்தான். நண்டு தினமும் நள்ளிரவில் தீர்த்த குளத்தில் தாமரை மலரை பறித்து கோமுகம் வழியே உள்ளே சென்று இறைவனுக்கு சாத்தி வழிபட்டு வந்தது. இந்திரன் அதிகாலையில் இந்த ஆலயம் வந்து தாமரை மலர்சூட்டி வழிபடுவது வழக்கம். தனக்கு முன் மலர் சூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதைக் கண்காணித்தபோது, நள்ளிரவில் தீர்த்த குளத்தில் இருந்து தாமரை மலர் ஒன்று கோமுகம் வழியே ஈசனிடம் செல்வது கண்டு வியந்தான். மேலும், அகழியில் தன்னால் பயிரிடப்பட்ட தாமரை மலர்கள் தினமும் குறைவது கண்டு ஒருநாள் மிக கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு நண்டு வந்து தாமரை மலர்களைப் பறித்து இறைவனுக்கு சாத்தி வழிபடுவதைக் கண்டான். கோபம் கொண்ட இந்திரன், லிங்கத்தின் மீதேறி தாமரை மலர்களைச் சாத்த முயன்ற நண்டை கத்தியால் வெட்ட முயன்றான். முதல் வெட்டு தாடையில் விழுந்தது. அடுத்த வெட்டு சிவபெருமானின் நெற்றியில் விழுந்தது.
நண்டு உருவில் இருந்த கந்தர்வனைக் காப்பாற்ற நினைத்த சிவபெருமான், லிங்கத் திருமேனியில் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி, நண்டு உருவில் இருந்தவனை தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டார். இந்திரனால் சபிக்கப்பட்ட கந்தரவனே நண்டு உருவில் தன்னை பூஜிப்பதை, இறைவன் அசரீரியாக இந்திரனுக்கு உணர்த்தினார். உண்மையை உணர்ந்த இந்திரன் தன் தவறுக்கு வருந்தி திருந்தினான். அதனால், இக்கோவிலுக்கு திருந்துதேவன்குடி என்ற பெயர் வந்ததாகத் தல புராணம் கூறுகிறது. கற்கடம் என்றால் நண்டு. நண்டின் பூஜைக்கு மகிழ்ந்து அதன் சாபத்தை நீக்கி விமோசனம் தந்ததால் கற்கடேஸ்வரர் என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் இத்தலம் மூலிகை வனமாக இருந்தது. ஆகையால் இறைவனுக்கு மூலிகைவனேஸ்வரர் என்று மற்றொரு பெயரும் உண்டு. சிவனை நண்டு வழிபடும் சிற்பம் ஒன்று கோவிலில் உள்ள ஒரு கற்தூணில் செதுக்கப்பட்டு உள்ளது.
கற்கடேஸ்வரர் லிங்கத் திருமேனியில் இன்றும் வெட்டுத் தழும்புகள் இருக்கின்றன. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரம் உள்ளது. ஆடி அமாவாசையும் பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில் 21 குடம் காராம் பசும் பாலைக் கொண்டு இரவில் சிவலிங்கத்தை அபிஷேகித்தால், நண்டு வெளிப்பட்டு காட்சி கொடுக்கும் என்று வசிஷ்ட மகாத்மியம் கூறுகிறது. டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர், ஒரு நிறப் பசுவின் பால் பத்து கலம் அபிஷேகம் செய்தால், லிங்கத்தின் உச்சியில் ஒரு பொன்னிற நண்டு ஊர்தல் தரிசனம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்.
இத்தல இறைவி அருமருந்தம்மை, தீராத நோய்களை தீர்ப்பவள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், வேண்டுவோர்க்கு பிரசாதமாகப் பின்னர் வழங்கப்படுகிறது. அம்மனுக்கு சாத்தி தரப்படும் எண்ணெய், சர்வ வியாதிகளுக்கும் நிவாரணமாகக் கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும்வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப்போல் சித்திரிக்கப்பட்டுள்ளது.
சந்திரன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு தனது சாபம் நீங்கப்பெற்றான். ஆகையால், சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும். அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் சந்திரனுக்குத் தனி சந்நிதி இருக்கும். சந்திரன் நின்ற நிலையில் காணப்படுவார். இத்தலத்தில் மட்டும் சந்திரன் அமர்ந்த நிலையில், யோக நிலையில் இருக்கிறார். எல்லாவகையான யோகங்களும் கிடைக்க வழிபட வேண்டிய தோஷ பரிகார சந்திரன் இவர். குறிப்பாக, கடக ராசிக்காரர்கள் (புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால், அனைத்து தோஷங்களில் இருந்தும் நிவாரணம் பெறலாம். இத்தலத்தில் தேவர்களின் வைத்தியரான தன்வந்திரிக்கும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவில் அமைப்பு
கோவில், நான்கு புறமும் நெல் வயல்கள் சூழ அமைந்துள்ளது. அருகில் ஊர் எதுவும் இல்லை. கோவில் மதில்சுவரைச் சுற்றி கிழக்கு திசை தவிர மற்ற மூன்று புறமும் நீர் நிறைந்த அகழி உள்ளது. திருவிசநல்லூரில் இருந்து கற்கடேஸ்வரர் கோவில் வரை செல்ல நல்ல சாலை வசதி உள்ளது. முதலில் செங்கல்லால் கட்டப்பட்டு பிறகு கற்கோவிலாக திருப்பணி செய்யப்பட்ட இக்கோவில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முதல் கட்டமாக ஒரு நுழைவாயிலும், இரண்டாம் கட்டமாக ஒரு மண்டபமும் கொண்டு இக்கோவில் விளங்குகிறது. முதல் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் விநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அருமருந்துநாயகி, அபூர்வநாயகி ஆகிய இரண்டு அம்பாள் சந்நிதிகள் அமைந்துள்ளன. இத்தல விநாயகர் கற்கடக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாளிக்கிறார்.
முன் மண்டபம் வழியே நுழைந்து உள்ளே சென்றவுடன், கருவறையில் இறைவன் கற்கடேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை மேற்கு உள் பிராகாரத்தில் கணபதி, முருகர் மற்றும் கஜலட்சுமிக்கு சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறை கோஷ்டத்தில் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தியும் வடதிசை நோக்கி துர்க்கையும் உள்ளனர். நால்வர் சந்நிதியும் உள் பிராகாரத்தில் உள்ளது. தன்வந்தரி, அகஸ்தியர் ஆகியோரும் சுற்றுப் பிராகாரத்தில் உள்ளனர்.
ஆலய முகவரி
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில்,
நண்டாங்கோவில், திருந்துதேவன்குடி,
திருவிசலூர் அஞ்சல்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612 105.
எப்படிப் போவது?
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருவியலூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் திருந்துதேவன்குடி சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து திருவிசநல்லூர் செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. திருவிசநல்லூரில் இருந்து நடந்தோ அல்லது ஆட்டோ மூலமோ கற்கடேஸ்வரர் கோவில் சென்று வரலாம்.
இறைவன் பெயர்: கற்கடேஸ்வரர்
இறைவி பெயர்: அருமருந்துநாயகி, அபூர்வநாயகி
இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.
இக்கோயில், காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தற்போது நண்டாங்கோவில் என்று அறியப்படும் இத்தலம், தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும். தல புராணப்படி, இந்திரன் சாபத்திற்கு ஆளான கந்தர்வன் ஒருவன் நண்டாக இவ்வாலயம் வந்து பூசித்தான். நண்டு தினமும் நள்ளிரவில் தீர்த்த குளத்தில் தாமரை மலரை பறித்து கோமுகம் வழியே உள்ளே சென்று இறைவனுக்கு சாத்தி வழிபட்டு வந்தது. இந்திரன் அதிகாலையில் இந்த ஆலயம் வந்து தாமரை மலர்சூட்டி வழிபடுவது வழக்கம். தனக்கு முன் மலர் சூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதைக் கண்காணித்தபோது, நள்ளிரவில் தீர்த்த குளத்தில் இருந்து தாமரை மலர் ஒன்று கோமுகம் வழியே ஈசனிடம் செல்வது கண்டு வியந்தான். மேலும், அகழியில் தன்னால் பயிரிடப்பட்ட தாமரை மலர்கள் தினமும் குறைவது கண்டு ஒருநாள் மிக கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு நண்டு வந்து தாமரை மலர்களைப் பறித்து இறைவனுக்கு சாத்தி வழிபடுவதைக் கண்டான். கோபம் கொண்ட இந்திரன், லிங்கத்தின் மீதேறி தாமரை மலர்களைச் சாத்த முயன்ற நண்டை கத்தியால் வெட்ட முயன்றான். முதல் வெட்டு தாடையில் விழுந்தது. அடுத்த வெட்டு சிவபெருமானின் நெற்றியில் விழுந்தது.
நண்டு உருவில் இருந்த கந்தர்வனைக் காப்பாற்ற நினைத்த சிவபெருமான், லிங்கத் திருமேனியில் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி, நண்டு உருவில் இருந்தவனை தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டார். இந்திரனால் சபிக்கப்பட்ட கந்தரவனே நண்டு உருவில் தன்னை பூஜிப்பதை, இறைவன் அசரீரியாக இந்திரனுக்கு உணர்த்தினார். உண்மையை உணர்ந்த இந்திரன் தன் தவறுக்கு வருந்தி திருந்தினான். அதனால், இக்கோவிலுக்கு திருந்துதேவன்குடி என்ற பெயர் வந்ததாகத் தல புராணம் கூறுகிறது. கற்கடம் என்றால் நண்டு. நண்டின் பூஜைக்கு மகிழ்ந்து அதன் சாபத்தை நீக்கி விமோசனம் தந்ததால் கற்கடேஸ்வரர் என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் இத்தலம் மூலிகை வனமாக இருந்தது. ஆகையால் இறைவனுக்கு மூலிகைவனேஸ்வரர் என்று மற்றொரு பெயரும் உண்டு. சிவனை நண்டு வழிபடும் சிற்பம் ஒன்று கோவிலில் உள்ள ஒரு கற்தூணில் செதுக்கப்பட்டு உள்ளது.
கற்கடேஸ்வரர் லிங்கத் திருமேனியில் இன்றும் வெட்டுத் தழும்புகள் இருக்கின்றன. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரம் உள்ளது. ஆடி அமாவாசையும் பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில் 21 குடம் காராம் பசும் பாலைக் கொண்டு இரவில் சிவலிங்கத்தை அபிஷேகித்தால், நண்டு வெளிப்பட்டு காட்சி கொடுக்கும் என்று வசிஷ்ட மகாத்மியம் கூறுகிறது. டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர், ஒரு நிறப் பசுவின் பால் பத்து கலம் அபிஷேகம் செய்தால், லிங்கத்தின் உச்சியில் ஒரு பொன்னிற நண்டு ஊர்தல் தரிசனம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்.
இத்தல இறைவி அருமருந்தம்மை, தீராத நோய்களை தீர்ப்பவள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், வேண்டுவோர்க்கு பிரசாதமாகப் பின்னர் வழங்கப்படுகிறது. அம்மனுக்கு சாத்தி தரப்படும் எண்ணெய், சர்வ வியாதிகளுக்கும் நிவாரணமாகக் கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும்வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப்போல் சித்திரிக்கப்பட்டுள்ளது.
சந்திரன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு தனது சாபம் நீங்கப்பெற்றான். ஆகையால், சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும். அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் சந்திரனுக்குத் தனி சந்நிதி இருக்கும். சந்திரன் நின்ற நிலையில் காணப்படுவார். இத்தலத்தில் மட்டும் சந்திரன் அமர்ந்த நிலையில், யோக நிலையில் இருக்கிறார். எல்லாவகையான யோகங்களும் கிடைக்க வழிபட வேண்டிய தோஷ பரிகார சந்திரன் இவர். குறிப்பாக, கடக ராசிக்காரர்கள் (புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால், அனைத்து தோஷங்களில் இருந்தும் நிவாரணம் பெறலாம். இத்தலத்தில் தேவர்களின் வைத்தியரான தன்வந்திரிக்கும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவில் அமைப்பு
கோவில், நான்கு புறமும் நெல் வயல்கள் சூழ அமைந்துள்ளது. அருகில் ஊர் எதுவும் இல்லை. கோவில் மதில்சுவரைச் சுற்றி கிழக்கு திசை தவிர மற்ற மூன்று புறமும் நீர் நிறைந்த அகழி உள்ளது. திருவிசநல்லூரில் இருந்து கற்கடேஸ்வரர் கோவில் வரை செல்ல நல்ல சாலை வசதி உள்ளது. முதலில் செங்கல்லால் கட்டப்பட்டு பிறகு கற்கோவிலாக திருப்பணி செய்யப்பட்ட இக்கோவில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முதல் கட்டமாக ஒரு நுழைவாயிலும், இரண்டாம் கட்டமாக ஒரு மண்டபமும் கொண்டு இக்கோவில் விளங்குகிறது. முதல் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் விநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அருமருந்துநாயகி, அபூர்வநாயகி ஆகிய இரண்டு அம்பாள் சந்நிதிகள் அமைந்துள்ளன. இத்தல விநாயகர் கற்கடக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாளிக்கிறார்.
முன் மண்டபம் வழியே நுழைந்து உள்ளே சென்றவுடன், கருவறையில் இறைவன் கற்கடேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை மேற்கு உள் பிராகாரத்தில் கணபதி, முருகர் மற்றும் கஜலட்சுமிக்கு சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறை கோஷ்டத்தில் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தியும் வடதிசை நோக்கி துர்க்கையும் உள்ளனர். நால்வர் சந்நிதியும் உள் பிராகாரத்தில் உள்ளது. தன்வந்தரி, அகஸ்தியர் ஆகியோரும் சுற்றுப் பிராகாரத்தில் உள்ளனர்.
ஆலய முகவரி
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில்,
நண்டாங்கோவில், திருந்துதேவன்குடி,
திருவிசலூர் அஞ்சல்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612 105.
எப்படிப் போவது?
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருவியலூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் திருந்துதேவன்குடி சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து திருவிசநல்லூர் செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. திருவிசநல்லூரில் இருந்து நடந்தோ அல்லது ஆட்டோ மூலமோ கற்கடேஸ்வரர் கோவில் சென்று வரலாம்.
தஞ்சை-நாகை சாலையில் உள்ள ஜோதி நகரில் அமைந்து உள்ளது சித்தி விநாயகர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தஞ்சை-நாகை ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோவிலை படத்தில் காணலாம்.
சித்தி விநாயகர் கோவிலில் உள்ள முருகன், வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சி.
கோவிலில் உள்ள சித்தி விநாயகர் வெள்ளி கவசத்தில்(தங்க முலாம் பூசப்பட்டுள்ளது) பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சி.
லட்சுமி குபேரர் சன்னதியை படத்தில் காணலாம்.
தஞ்சை-நாகை சாலையில் உள்ள ஜோதி நகரில் அமைந்து உள்ளது சித்தி விநாயகர் கோவில். கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி கட்டப்பட்ட இந்த கோவிலில் கடந்த 2004, 2016-ம் ஆண்டுகளில் குடமுழுக்கு நடந்து உள்ளது.
1991-ம் ஆண்டு முதன் முதலில் இந்த கோவில் ஒரு சிறிய கொட்டகையில் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த கோவிலை சுற்றி பல்வேறு சாமிகளின் சன்னதிகள் அமைக்கப்பட்டன.
தற்போது இங்கு சித்தி விநாயகர், கல்யாண வெங்கடேச பெருமாள், லட்சுமி குபேரர், ஆஞ்சநேயர், சுப்பிரமணியர், விஷ்ணு துர்க்கை, காலபைரவர், லட்சுமி ஹயக்ரீவர், காளிங்க நர்த்தனார், லட்சுமி நரசிம்மர் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, மகாலட்சுமி ஆகிய சாமிகளுக்கும் மற்றும் அனைத்து பரிகார தலங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைந்து உள்ளன.
தொடக்கத்தில் சிறிய கொட்டகையில் விநாயகர் கோவில் அமைந்து இருந்தாலும் ஒவ்வொரு குடமுழுக்கின்போதும் முக்கிய விழாக்களின் போதும் இந்த கோவிலில் ஒவ்வொரு சன்னதிகள் ஏற்படுத்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஜோதி நகர். ராதாகிருஷ்ணன் நகர். அழகரசன் நகர், மருதுபாண்டியர் நகர், அரி நகர். ரம்யா நகர், மருது நகர், விக்டோரியா நகர், கவுதம் நகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் நாள்தோறும் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகிறார்கள்.
தினமும் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்தக் கோவில் நடை திறந்து இருக்கும்.
திருமண தடை நீக்கும் தலம்
இந்தக் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா, கார்த்திகை திருநாள் சொக்கப்பனை கொளுத்தும் விழா, கந்த சஷ்டி விழா, நவராத்திரி விழா, விநாயகர் சதுர்த்தி விழா, கிருஷ்ண ஜெயந்தி விழா, சனிப்பெயர்ச்சி, ராகு பெயர்ச்சி விழா, குருப்பெயர்ச்சி விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் இங்குள்ள தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படும். சிறப்பு அலங்காரத்தில் இங்குள்ள தெய்வங்கள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.
கந்த சஷ்டி விழாவுக்கு அடுத்த நாள் இங்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாத பெண்கள் மாலை எடுத்து வந்து சுவாமிக்கு செலுத்துவார்கள். பின்னர் அந்த மாலை திருமணம் வேண்டி வந்த பெண்களின் கழுத்தில் அணிவிக்கப்படும். இவ்வாறு திருமண தடையை நீக்குவதற்காக வந்த பெண்ணுக்கு அடுத்த கந்த சஷ்டி திருவிழாவிற்குள் திருமணம் நடைபெறும் என்பது இந்த பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மக்கள் இந்த கோவிலை திருமண தடை நீக்கும் கோவிலாக கருதி வழிபட்டு வருகிறார்கள்.
ஆண்டு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள்
இந்தக் கோவிலில் ஆண்டு முழுவதும் 12 மாதங்களும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சுக்லபட்ச சதுர்த்தி, வளர்பிறை சஷ்டி, கிருத்திகை, ரோகிணி, பவுர்ணமி, சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம், சுவாதி, அமாவாசை, திருவோணம் ஆகியவை இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கியமானவை ஆகும்.
ஒவ்வொரு அமாவாசையன்றும் குபேரனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். ஐப்பசி மாத அமாவாசை அன்று சிறப்பு யாகம் நடத்தப்படும்.
நிகழ்ச்சி தகவல்கள்
இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் ஆண்டு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து அங்கு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதில் ஆண்டு முழுவதும் என்னென்ன மாதம் மற்றும் கிழமைகளில் என்னென்ன நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது என்பது குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது.
புனித நீர் வைபவம்
இந்த கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தபோது காவிரியில் புனித நீர் எடுத்து வருவதற்காக சென்றனர். முதலில் காவிரி பாலம் அருகே புனிதநீர் எடுப்பது என முடிவு செய்தனர். பின்னர் புஷ்ய மண்டப படித்துறைக்கு சென்று அங்கு புனித நீர் எடுக்கலாம் என முடிவு செய்து அங்கு சென்றனர்.
அங்கு சென்று புனிதநீர் எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு குளித்துக்கொண்டிருந்த திருவையாறு கோவில் யானை திடீரென திரும்பி புனித நீர் எடுக்க சென்றவர்கள் மீது தும்பிக்கையால் நீரை தெளித்து உள்ளது. புனிதநீர் எடுப்பதற்காக சென்றவர்கள் இந்த அரிய நிகழ்ச்சியை கண்டு வியந்தனர். குடமுழுக்கு விழாவை விநாயகரே வந்து வாழ்த்தியதாக இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் தெரிவித்தனர்.
பெருமாள்-ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம்
ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். அதைத் தொடர்ந்து சிறப்பு யாகம் நடத்தப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். அன்று இரவு கோவிலுக்குள் விநாயகர் புறப்பாடு நடைபெறும். இதேபோல் கிருத்திகை அன்று முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும் அன்று மாலையில் கோவிலுக்குள் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
திருவோண நட்சத்திரத்தன்று இந்த கோவிலில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். அதைத்தொடர்ந்து மாலையில் கோவிலுக்குள் பெருமாள் புறப்பாடு நடைபெறும். ஒவ்வொரு அமாவாசையன்றும் இங்குள்ள காரியசித்தி ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படும். இதுபோல் சுவாதி நட்சத்திரத்தன்று ஒவ்வொரு மாதமும் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.
ராகு-கேது ேதாஷ நிவர்த்தி பெற சிறப்பு பிரார்த்தனை
இந்த கோவிலில் காளிங்க நர்த்தனார்(கிருஷ்ணர்) பாம்பின் மீது அமர்ந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படும். அன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் குழந்தை பேறு இல்லாதவர்கள் கலந்து கொண்டு குழந்தைப்பேறு வேண்டி வழிபடுவது வழக்கம்.
இந்த கோவிலின் நுழைவு வாயிலில் இடதுபுறம் அரச மரம் மற்றும் வேப்ப மரத்தடியில் விநாயகர் மற்றும் நாகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் வேறு எந்த திருத்தலத்திலும் இதுபோன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது இல்லை. இங்கு ராகு-கேது தோஷம் நிவர்த்தி பெற ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
சித்தி விநாயகர் கோவிலில் உள்ள முருகன், வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சி.
கோவிலில் உள்ள சித்தி விநாயகர் வெள்ளி கவசத்தில்(தங்க முலாம் பூசப்பட்டுள்ளது) பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சி.
லட்சுமி குபேரர் சன்னதியை படத்தில் காணலாம்.
தஞ்சை-நாகை சாலையில் உள்ள ஜோதி நகரில் அமைந்து உள்ளது சித்தி விநாயகர் கோவில். கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி கட்டப்பட்ட இந்த கோவிலில் கடந்த 2004, 2016-ம் ஆண்டுகளில் குடமுழுக்கு நடந்து உள்ளது.
1991-ம் ஆண்டு முதன் முதலில் இந்த கோவில் ஒரு சிறிய கொட்டகையில் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த கோவிலை சுற்றி பல்வேறு சாமிகளின் சன்னதிகள் அமைக்கப்பட்டன.
தற்போது இங்கு சித்தி விநாயகர், கல்யாண வெங்கடேச பெருமாள், லட்சுமி குபேரர், ஆஞ்சநேயர், சுப்பிரமணியர், விஷ்ணு துர்க்கை, காலபைரவர், லட்சுமி ஹயக்ரீவர், காளிங்க நர்த்தனார், லட்சுமி நரசிம்மர் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, மகாலட்சுமி ஆகிய சாமிகளுக்கும் மற்றும் அனைத்து பரிகார தலங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைந்து உள்ளன.
தொடக்கத்தில் சிறிய கொட்டகையில் விநாயகர் கோவில் அமைந்து இருந்தாலும் ஒவ்வொரு குடமுழுக்கின்போதும் முக்கிய விழாக்களின் போதும் இந்த கோவிலில் ஒவ்வொரு சன்னதிகள் ஏற்படுத்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஜோதி நகர். ராதாகிருஷ்ணன் நகர். அழகரசன் நகர், மருதுபாண்டியர் நகர், அரி நகர். ரம்யா நகர், மருது நகர், விக்டோரியா நகர், கவுதம் நகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் நாள்தோறும் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகிறார்கள்.
தினமும் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்தக் கோவில் நடை திறந்து இருக்கும்.
திருமண தடை நீக்கும் தலம்
இந்தக் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா, கார்த்திகை திருநாள் சொக்கப்பனை கொளுத்தும் விழா, கந்த சஷ்டி விழா, நவராத்திரி விழா, விநாயகர் சதுர்த்தி விழா, கிருஷ்ண ஜெயந்தி விழா, சனிப்பெயர்ச்சி, ராகு பெயர்ச்சி விழா, குருப்பெயர்ச்சி விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் இங்குள்ள தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படும். சிறப்பு அலங்காரத்தில் இங்குள்ள தெய்வங்கள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.
கந்த சஷ்டி விழாவுக்கு அடுத்த நாள் இங்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாத பெண்கள் மாலை எடுத்து வந்து சுவாமிக்கு செலுத்துவார்கள். பின்னர் அந்த மாலை திருமணம் வேண்டி வந்த பெண்களின் கழுத்தில் அணிவிக்கப்படும். இவ்வாறு திருமண தடையை நீக்குவதற்காக வந்த பெண்ணுக்கு அடுத்த கந்த சஷ்டி திருவிழாவிற்குள் திருமணம் நடைபெறும் என்பது இந்த பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மக்கள் இந்த கோவிலை திருமண தடை நீக்கும் கோவிலாக கருதி வழிபட்டு வருகிறார்கள்.
ஆண்டு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள்
இந்தக் கோவிலில் ஆண்டு முழுவதும் 12 மாதங்களும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சுக்லபட்ச சதுர்த்தி, வளர்பிறை சஷ்டி, கிருத்திகை, ரோகிணி, பவுர்ணமி, சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம், சுவாதி, அமாவாசை, திருவோணம் ஆகியவை இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கியமானவை ஆகும்.
ஒவ்வொரு அமாவாசையன்றும் குபேரனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். ஐப்பசி மாத அமாவாசை அன்று சிறப்பு யாகம் நடத்தப்படும்.
நிகழ்ச்சி தகவல்கள்
இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் ஆண்டு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து அங்கு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதில் ஆண்டு முழுவதும் என்னென்ன மாதம் மற்றும் கிழமைகளில் என்னென்ன நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது என்பது குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது.
புனித நீர் வைபவம்
இந்த கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தபோது காவிரியில் புனித நீர் எடுத்து வருவதற்காக சென்றனர். முதலில் காவிரி பாலம் அருகே புனிதநீர் எடுப்பது என முடிவு செய்தனர். பின்னர் புஷ்ய மண்டப படித்துறைக்கு சென்று அங்கு புனித நீர் எடுக்கலாம் என முடிவு செய்து அங்கு சென்றனர்.
அங்கு சென்று புனிதநீர் எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு குளித்துக்கொண்டிருந்த திருவையாறு கோவில் யானை திடீரென திரும்பி புனித நீர் எடுக்க சென்றவர்கள் மீது தும்பிக்கையால் நீரை தெளித்து உள்ளது. புனிதநீர் எடுப்பதற்காக சென்றவர்கள் இந்த அரிய நிகழ்ச்சியை கண்டு வியந்தனர். குடமுழுக்கு விழாவை விநாயகரே வந்து வாழ்த்தியதாக இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் தெரிவித்தனர்.
பெருமாள்-ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம்
ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். அதைத் தொடர்ந்து சிறப்பு யாகம் நடத்தப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். அன்று இரவு கோவிலுக்குள் விநாயகர் புறப்பாடு நடைபெறும். இதேபோல் கிருத்திகை அன்று முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும் அன்று மாலையில் கோவிலுக்குள் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
திருவோண நட்சத்திரத்தன்று இந்த கோவிலில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். அதைத்தொடர்ந்து மாலையில் கோவிலுக்குள் பெருமாள் புறப்பாடு நடைபெறும். ஒவ்வொரு அமாவாசையன்றும் இங்குள்ள காரியசித்தி ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படும். இதுபோல் சுவாதி நட்சத்திரத்தன்று ஒவ்வொரு மாதமும் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.
ராகு-கேது ேதாஷ நிவர்த்தி பெற சிறப்பு பிரார்த்தனை
இந்த கோவிலில் காளிங்க நர்த்தனார்(கிருஷ்ணர்) பாம்பின் மீது அமர்ந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படும். அன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் குழந்தை பேறு இல்லாதவர்கள் கலந்து கொண்டு குழந்தைப்பேறு வேண்டி வழிபடுவது வழக்கம்.
இந்த கோவிலின் நுழைவு வாயிலில் இடதுபுறம் அரச மரம் மற்றும் வேப்ப மரத்தடியில் விநாயகர் மற்றும் நாகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் வேறு எந்த திருத்தலத்திலும் இதுபோன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது இல்லை. இங்கு ராகு-கேது தோஷம் நிவர்த்தி பெற ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
சிவனே நவகிரகங்களுக்கு அதிபதியாக இருப்பதால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. இவரை தரிசித்தாலே அனைத்து தோஷங்களும் விலகும்.
சிவஸ்தலம் பெயர் - திருஅரதைப் பெரும்பாழி (தற்போது அரித்துவார மங்கலம் என்று அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர் - பாதாளேசுவரர்
இறைவி பெயர் - அலங்கார நாயகி
தல வரலாறு: பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்படுகிறது. இதில் சிவனது பாதத்தையும், திருமுடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவர்களே பெரியவர் என்ற நிபந்தனையில் போட்டி ஆரம்பமாகிறது. பிரம்மா அன்னப்பறவையில் ஏறி திருமுடியை தரிசிக்க கிளம்புகிறார். ஆனால் திருமுடி தரிசனம் கிடைக்கவில்லை. அப்போது சிவனின் தலையிலிருந்து தாழம்பூ கீழே வந்து கொண்டிருந்தது. தாழம்பூவை பார்த்த பிரம்மா, தான் சிவனின் திருமுடியை தரிசித்ததாக பொய் கூறும்படி சொன்னார்.
தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. இதையறிந்த சிவன் தாழம்பூவை பூஜைக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்றும், பிரம்மனுக்கு பூமியில் கோயில் இருக்க கூடாது என்றும் சபித்தார். விஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியை குடைந்து சிவனின் திருவடியை பார்க்க முயன்றார். முடியவில்லை போக விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். விஷ்ணு இத்தலத்தில் தான் பூமியை துவாரம் போட்டு சிவனின் திருவடி தரிசனம் தேடினார் என்று தலபுராணம் கூறுகிறது.. எனவே தான் இத்தலம் அரித்துவாரமங்கலம் ஆனது. சிவனின் திருவடி தரிசனம் காண விஷ்ணு பூமியை தோண்டிய பள்ளம் இன்றும் மூலஸ்தானத்தில் உள்ளது. இதை கல்வைத்து மூடியுள்ளார்கள். கோவில் சிவாச்சாரியாரிடம் கேட்டால் அவர் காணபிப்பார்.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் கிழக்குக் கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால் சைவ சமயக் குரவர் நால்வரில் திருஞான சம்பந்தர் தம் தல யாத்திரையின் போது இதே வரிசையில் ஐந்து கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் விளங்குகிறது. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், பதஞ்சலி வியாக்ரபாதருடன் நடராஜர், காசி விஸ்வநாதர், சனிபகவான், சூரியன், சந்திரன், பைரவர், சம்பந்தர், சுந்தரர், லிங்கோத்பவர், சப்தமாதர்கள் உள்ளனர். மூலவர் சுயம்பு லிங்க மூர்த்தி வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் பன்றியின் (வராகத்தின்) கொம்புகளுள் ஒன்றை முறித்து தன் மார்பில் அணிந்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. சிவனுக்கு வலது பக்கம் அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இவ்வாறு இருக்கும் அமைப்பை கல்யாண கோலம் என்பார்கள். அம்மன் துர்க்கை அம்சமாக இருப்பதால் துர்க்கைக்கு இத்தலத்தில் தனி சன்னதி கிடையாது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு நேரே தனிக் கோபுர வாயில் உள்ளது.
சிவனே நவகிரகங்களுக்கு அதிபதியாக இருப்பதால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. இவரை தரிசித்தாலே அனைத்து தோஷங்களும் விலகும். அரித்துவாரமங்கலத்தில் உள்ள இறைவனை தரிசித்தால் "ஹரித்துவார்" தரிசித்த பலன் கிடைக்கும் என்பர். பாதாள ஈஸ்வரரை தரிசித்தால் கடன் தொல்லை நீங்கும்.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்
கும்பகோணம் - நீடாமங்கலம் சாலை வழியில் வெட்டாறு பாலம் தாண்டியவுடன் வலதுபுறம் திரும்பிச் செல்லும் பாதையில் சென்று அரித்துவார மங்கலம் தலத்தை அடையலாம். தஞ்சாவூரிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் இத்தலத்திற்கு உள்ளன. கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கி.மி. தொலைவில் உள்ளது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அரித்துவார மங்கலம் செல்லலாம். திருஅவளிவநல்லூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 3.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு பாதாளேசுவரர் திருக்கோயில்
அரித்துவார மங்கலம்
அரித்துவார மங்கலம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612802
இறைவன் பெயர் - பாதாளேசுவரர்
இறைவி பெயர் - அலங்கார நாயகி
தல வரலாறு: பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்படுகிறது. இதில் சிவனது பாதத்தையும், திருமுடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவர்களே பெரியவர் என்ற நிபந்தனையில் போட்டி ஆரம்பமாகிறது. பிரம்மா அன்னப்பறவையில் ஏறி திருமுடியை தரிசிக்க கிளம்புகிறார். ஆனால் திருமுடி தரிசனம் கிடைக்கவில்லை. அப்போது சிவனின் தலையிலிருந்து தாழம்பூ கீழே வந்து கொண்டிருந்தது. தாழம்பூவை பார்த்த பிரம்மா, தான் சிவனின் திருமுடியை தரிசித்ததாக பொய் கூறும்படி சொன்னார்.
தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. இதையறிந்த சிவன் தாழம்பூவை பூஜைக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்றும், பிரம்மனுக்கு பூமியில் கோயில் இருக்க கூடாது என்றும் சபித்தார். விஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியை குடைந்து சிவனின் திருவடியை பார்க்க முயன்றார். முடியவில்லை போக விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். விஷ்ணு இத்தலத்தில் தான் பூமியை துவாரம் போட்டு சிவனின் திருவடி தரிசனம் தேடினார் என்று தலபுராணம் கூறுகிறது.. எனவே தான் இத்தலம் அரித்துவாரமங்கலம் ஆனது. சிவனின் திருவடி தரிசனம் காண விஷ்ணு பூமியை தோண்டிய பள்ளம் இன்றும் மூலஸ்தானத்தில் உள்ளது. இதை கல்வைத்து மூடியுள்ளார்கள். கோவில் சிவாச்சாரியாரிடம் கேட்டால் அவர் காணபிப்பார்.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் கிழக்குக் கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால் சைவ சமயக் குரவர் நால்வரில் திருஞான சம்பந்தர் தம் தல யாத்திரையின் போது இதே வரிசையில் ஐந்து கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் விளங்குகிறது. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், பதஞ்சலி வியாக்ரபாதருடன் நடராஜர், காசி விஸ்வநாதர், சனிபகவான், சூரியன், சந்திரன், பைரவர், சம்பந்தர், சுந்தரர், லிங்கோத்பவர், சப்தமாதர்கள் உள்ளனர். மூலவர் சுயம்பு லிங்க மூர்த்தி வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் பன்றியின் (வராகத்தின்) கொம்புகளுள் ஒன்றை முறித்து தன் மார்பில் அணிந்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. சிவனுக்கு வலது பக்கம் அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இவ்வாறு இருக்கும் அமைப்பை கல்யாண கோலம் என்பார்கள். அம்மன் துர்க்கை அம்சமாக இருப்பதால் துர்க்கைக்கு இத்தலத்தில் தனி சன்னதி கிடையாது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு நேரே தனிக் கோபுர வாயில் உள்ளது.
சிவனே நவகிரகங்களுக்கு அதிபதியாக இருப்பதால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. இவரை தரிசித்தாலே அனைத்து தோஷங்களும் விலகும். அரித்துவாரமங்கலத்தில் உள்ள இறைவனை தரிசித்தால் "ஹரித்துவார்" தரிசித்த பலன் கிடைக்கும் என்பர். பாதாள ஈஸ்வரரை தரிசித்தால் கடன் தொல்லை நீங்கும்.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்
கும்பகோணம் - நீடாமங்கலம் சாலை வழியில் வெட்டாறு பாலம் தாண்டியவுடன் வலதுபுறம் திரும்பிச் செல்லும் பாதையில் சென்று அரித்துவார மங்கலம் தலத்தை அடையலாம். தஞ்சாவூரிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் இத்தலத்திற்கு உள்ளன. கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கி.மி. தொலைவில் உள்ளது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அரித்துவார மங்கலம் செல்லலாம். திருஅவளிவநல்லூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 3.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு பாதாளேசுவரர் திருக்கோயில்
அரித்துவார மங்கலம்
அரித்துவார மங்கலம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612802
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பிரசித்தி பெற்ற புற்றுக்கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் வந்து வழிபட்டு அங்குள்ள நாகருக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோனேரிராஜபுரம் கிராமத்தில் மிகவும் பழமையான சர்வமங்கள மோகன குஜாம்பிகா சமேத கைலாச நாதர் சுவாமி கோவில் அமைந்து உள்ளது.
கி.பி 1117-ம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழனால் இந்த கோவிலில் திருப்பணி செய்யப்பட்டுள்ளதாக இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கிறது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்து பூஜைகள் நடைபெறாமல் இருந்துவந்த இந்த ஆலயத்தில் நூறு வருடங்களாக அம்பாள் சன்னதியின் பழமையான விமானத்தை பாம்பு புற்று தாங்கியபடி அமைந்துள்ளது வரலாற்று சாட்சியாக காணப்படுகிறது.
பாம்பு புற்று தாங்கிய விமானத்தால் மட்டுமே கைலாசநாதர் ஆலயம் அமைந்திருந்த இடம் கண்டுபிடிக்க முடிந்தது. மற்ற இடங்கள் தரைமட்டமாக இருந்தது.
அதன்பின்னர் கோனேரிராஜபுரம் மோகனராமனின் சீரிய திட்டமிடலோடு முறையான அஸ்திவார அடித்தளம் அமைத்து செய்யப்பட்ட திருப்பணி ஓராண்டிற்குள் முடிவடைந்தது.
கோனேரிராஜபுரம் வி.என்.ஆர்.கே.வைத்தியநாதன் குடும்பத்தினரின் பெரும் பங்களிப்போடு கைலாசநாதர் ஆலய திருப்பணிகள் நடந்தது. மேலும் இன்றளவும் தினசரி நடைபெறும் நித்தியபடி பூஜை சிறப்பு விழாக்கள் ஆகியவை நடந்து வருகிறது.
இவர்களுடன் கைலாசநாதர் சமய சேவா பொதுநல மன்றமும், கோனேரிராஜபுரம் கிராமவாசிகளும் இணைந்து நான்கு கால யாகசாலை பூஜையுடன் 2019-ம் ஆண்டு மே 10-ந் தேதி குடமுழுக்கு நடந்தது.
கைலாசநாத பெருமான், சர்வமங்கள மோகன குஜாம்பிகை, விநாயகர், திருச்செந்தூர் செந்தில்வேலன், நர்த்தன விநாயகர், ரகுமாயி சமேத பாண்டுரங்க சுவாமி, தட்சிணாமூர்த்தி, பைரவர், நாகர், நந்தி, பலிபீடம் ஆகிய மூர்த்தங்களுக்கு தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளது. தினசரி காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பிரசித்தி பெற்ற புற்றுக்கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் வந்து வழிபட்டு அங்குள்ள நாகருக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர். புற்றுக்கோவிலில் மட்டும் பக்தர்களே நேரிடையாக பூஜை செய்து வழிபட்டு வருவது மரபாக உள்ளது.
ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை, தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் புற்று கோவிலுக்கு திரண்டு வந்து விழா எடுத்து சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.
பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, அஷ்டமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. சிறப்பு வழிபாடு பூஜைகளை கோனேரிராஜபுரம் சம்பத்குமார் பட்டாச்சாரியார் செய்து வருகிறார். தினசரி நடைபெறும் இரண்டு கால நித்திய படி பூஜைகளை கோனேரிராஜபுரம் லட்சுமி நாராயண பட்டாச்சாரியார் செய்து வருகிறார்.
சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மன் சன்னதியில் சர்ப்பம்(பாம்பு) ஒன்று இருப்பதாகவும் அதனை பலரும் பார்த்து உள்ளதாகவும் கூறுகின்றனர். அதுவே புற்று கோவிலாகும். சுற்றுப்புற கிராம மக்களின் கண்கண்ட தெய்வமாக இன்றளவும் புற்றுக்கோவில் அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
தங்களது பிரார்த்தனைகள் உடனுக்குடன் நிறைவேறி வருவதாக இந்த கோவிலுக்கு வரும் பெண்கள் தெரிவிப்பதால் புற்றுக்கோவில் அம்மனுக்கு பெண் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
கோவில் அமைவிடம்
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்து உள்ளது. கும்பகோணம்-காரைக்கால் பஸ் வழித்தடத்தில் புதூரில் இருந்து தென்கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் இக்கோவில் அமைந்து உள்ளது. கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் செல்லும் டவுன் பஸ்சில் சென்றால் கோனேரிராஜபுரம் அருகில் இறங்கி கைலாசநாதர் கோவிலை சென்றடையலாம்.
கி.பி 1117-ம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழனால் இந்த கோவிலில் திருப்பணி செய்யப்பட்டுள்ளதாக இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கிறது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்து பூஜைகள் நடைபெறாமல் இருந்துவந்த இந்த ஆலயத்தில் நூறு வருடங்களாக அம்பாள் சன்னதியின் பழமையான விமானத்தை பாம்பு புற்று தாங்கியபடி அமைந்துள்ளது வரலாற்று சாட்சியாக காணப்படுகிறது.
பாம்பு புற்று தாங்கிய விமானத்தால் மட்டுமே கைலாசநாதர் ஆலயம் அமைந்திருந்த இடம் கண்டுபிடிக்க முடிந்தது. மற்ற இடங்கள் தரைமட்டமாக இருந்தது.
அதன்பின்னர் கோனேரிராஜபுரம் மோகனராமனின் சீரிய திட்டமிடலோடு முறையான அஸ்திவார அடித்தளம் அமைத்து செய்யப்பட்ட திருப்பணி ஓராண்டிற்குள் முடிவடைந்தது.
கோனேரிராஜபுரம் வி.என்.ஆர்.கே.வைத்தியநாதன் குடும்பத்தினரின் பெரும் பங்களிப்போடு கைலாசநாதர் ஆலய திருப்பணிகள் நடந்தது. மேலும் இன்றளவும் தினசரி நடைபெறும் நித்தியபடி பூஜை சிறப்பு விழாக்கள் ஆகியவை நடந்து வருகிறது.
இவர்களுடன் கைலாசநாதர் சமய சேவா பொதுநல மன்றமும், கோனேரிராஜபுரம் கிராமவாசிகளும் இணைந்து நான்கு கால யாகசாலை பூஜையுடன் 2019-ம் ஆண்டு மே 10-ந் தேதி குடமுழுக்கு நடந்தது.
கைலாசநாத பெருமான், சர்வமங்கள மோகன குஜாம்பிகை, விநாயகர், திருச்செந்தூர் செந்தில்வேலன், நர்த்தன விநாயகர், ரகுமாயி சமேத பாண்டுரங்க சுவாமி, தட்சிணாமூர்த்தி, பைரவர், நாகர், நந்தி, பலிபீடம் ஆகிய மூர்த்தங்களுக்கு தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளது. தினசரி காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பிரசித்தி பெற்ற புற்றுக்கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் வந்து வழிபட்டு அங்குள்ள நாகருக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர். புற்றுக்கோவிலில் மட்டும் பக்தர்களே நேரிடையாக பூஜை செய்து வழிபட்டு வருவது மரபாக உள்ளது.
ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை, தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் புற்று கோவிலுக்கு திரண்டு வந்து விழா எடுத்து சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.
பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, அஷ்டமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. சிறப்பு வழிபாடு பூஜைகளை கோனேரிராஜபுரம் சம்பத்குமார் பட்டாச்சாரியார் செய்து வருகிறார். தினசரி நடைபெறும் இரண்டு கால நித்திய படி பூஜைகளை கோனேரிராஜபுரம் லட்சுமி நாராயண பட்டாச்சாரியார் செய்து வருகிறார்.
சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மன் சன்னதியில் சர்ப்பம்(பாம்பு) ஒன்று இருப்பதாகவும் அதனை பலரும் பார்த்து உள்ளதாகவும் கூறுகின்றனர். அதுவே புற்று கோவிலாகும். சுற்றுப்புற கிராம மக்களின் கண்கண்ட தெய்வமாக இன்றளவும் புற்றுக்கோவில் அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
தங்களது பிரார்த்தனைகள் உடனுக்குடன் நிறைவேறி வருவதாக இந்த கோவிலுக்கு வரும் பெண்கள் தெரிவிப்பதால் புற்றுக்கோவில் அம்மனுக்கு பெண் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
கோவில் அமைவிடம்
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்து உள்ளது. கும்பகோணம்-காரைக்கால் பஸ் வழித்தடத்தில் புதூரில் இருந்து தென்கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் இக்கோவில் அமைந்து உள்ளது. கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் செல்லும் டவுன் பஸ்சில் சென்றால் கோனேரிராஜபுரம் அருகில் இறங்கி கைலாசநாதர் கோவிலை சென்றடையலாம்.
மன்னார்குடி அருகிலுள்ள கழுவத்தூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மன்னார்குடி அருகிலுள்ள கழுவத்தூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவாலயம் உள்ளது. சீதையை ராவணன் கடத்திச் சென்றபோது பறவைகளின் அரசனான ஜடாயு அவனை மறித்தார். ராவணனோ அவரது இறக்கையை வெட்டி வீழ்த்தினான். காயத்துடன் கிடந்த அவர் ராமனிடம் ராவணன் சீதையைக் கடத்தி செல்லும் விஷயத்தைச் சொல்லி உயிர் விட்டார் அவருக்கு ராமன் ஈமக்கிரியை செய்து வைத்தார். ஜடாயு இந்தப்பகுதியில் தங்கியிருந்தபோது பூஜித்த சிவலிங்கத்திற்கு ஜடாயுபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.1
இந்தக் கோயில் குறித்து கல்வெட்டு ஆய்வாளர் கூறுவதாவது. 11 நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கற்கோயில் இது : சோழ மண்டலத்து அருமொஃஸி தேவ வள நாட்டு புறங்கறம்பை நாட்டுக் கெழுவத்தூர் என ராஜராஜசோழனின் கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் உள்ளது. அம்பாளின் பெயர் சவுந்திர நாயகி. கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டதாம். முழுமையாக சிதிலமடைந்து விட்டது. இருப்பினும் மூலவர் சிலைகள் விக்னேஸ்வரர் சண்முகர் சண்டிகேஸ்வரர் அம்மன் சன்னதி கோபுரங்கள் நவக்கிரக மண்டபம் சகஸ்ரலிங்கம் ஆகியவை அப்படியே இருந்தன. இதையடுத்து இவற்றை மீண்டும் பிரதிஷ்டை செய்ய திருப்பணி நடந்து வருகிறது.
வேலைப்பாடு மிக்க கருங்கல் நந்தி மண்டபம் இங்குள்ளது. இங்குள்ள நர்த்தன வினாயகர் மான் மழு ஏந்திய அதிகார நந்தி அவரது மனைவி சயஸ் சிறகுகளுடன் மனித வடிவிலுள்ள ஜடாயு சிற்பங்கள் சிறப்பானவை. கருவறையில் தெற்கில் தட்சிணா மூர்த்தி வீற்றிருக்கிறார். இவர் அமர்ந்துள்ள பாறையின் கீழ் பாம்பு புலி சிங்கம் பறவைகள் படுத்த நிலையில் காளை இருப்பது வித்தியாசமானது.
மன்னார்குடியில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கழுகத்தூர். இங்கு சவுந்தரநாயகி உடனாய ஜடாயுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பிரகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால், 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.
செல்லும் வழி மன்னார்குடி முத்துப்பேட்டை ரோட்டில் 20 கிமீ தூரத்தில் கழுவத்தூர்.
இந்தக் கோயில் குறித்து கல்வெட்டு ஆய்வாளர் கூறுவதாவது. 11 நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கற்கோயில் இது : சோழ மண்டலத்து அருமொஃஸி தேவ வள நாட்டு புறங்கறம்பை நாட்டுக் கெழுவத்தூர் என ராஜராஜசோழனின் கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் உள்ளது. அம்பாளின் பெயர் சவுந்திர நாயகி. கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டதாம். முழுமையாக சிதிலமடைந்து விட்டது. இருப்பினும் மூலவர் சிலைகள் விக்னேஸ்வரர் சண்முகர் சண்டிகேஸ்வரர் அம்மன் சன்னதி கோபுரங்கள் நவக்கிரக மண்டபம் சகஸ்ரலிங்கம் ஆகியவை அப்படியே இருந்தன. இதையடுத்து இவற்றை மீண்டும் பிரதிஷ்டை செய்ய திருப்பணி நடந்து வருகிறது.
வேலைப்பாடு மிக்க கருங்கல் நந்தி மண்டபம் இங்குள்ளது. இங்குள்ள நர்த்தன வினாயகர் மான் மழு ஏந்திய அதிகார நந்தி அவரது மனைவி சயஸ் சிறகுகளுடன் மனித வடிவிலுள்ள ஜடாயு சிற்பங்கள் சிறப்பானவை. கருவறையில் தெற்கில் தட்சிணா மூர்த்தி வீற்றிருக்கிறார். இவர் அமர்ந்துள்ள பாறையின் கீழ் பாம்பு புலி சிங்கம் பறவைகள் படுத்த நிலையில் காளை இருப்பது வித்தியாசமானது.
மன்னார்குடியில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கழுகத்தூர். இங்கு சவுந்தரநாயகி உடனாய ஜடாயுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பிரகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால், 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.
செல்லும் வழி மன்னார்குடி முத்துப்பேட்டை ரோட்டில் 20 கிமீ தூரத்தில் கழுவத்தூர்.
தஞ்சாவூர் வடக்கு வீதி அருகே ராஜகோபால சுவாமி திருக்கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தை ‘மதனகோபாலப் பெருமாள் கோவில்’ என்றும் அழைப்பார்கள்.
கோவில்கள் நிறைந்த மாவட்டமாக, தஞ்சாவூர் மாவட்டம் திகழ்கிறது. இங்கு தஞ்சாவூர் வடக்கு வீதி அருகே ராஜகோபால சுவாமி திருக்கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தை ‘மதனகோபாலப் பெருமாள் கோவில்’ என்றும் அழைப்பார்கள். இந்த ஆலயத்தில் மூலவராக இருப்பது, சக்கரத்தாழ்வார். சுதர்சனவல்லி- விஜயவல்லி உடனாய சக்கரத்தாழ்வாராக, இறைவன் வீற்றிருக் கிறார்.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்டு 88 திருக்கோவில்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான், இந்த ஆலயம். பொதுவாக பெருமாள் கோவில்களில் மூலவராக பெருமாள்தான் வீற்றிருப்பார். சக்கரத்தாழ்வார், தனிச்சன்னிதியில் எழுந்தருளியிருப்பார். அவருக்கு பின்புறம் நரசிம்மரின் உருவம் இடம்பெற்றிருக்கும்.
ஆனால் இங்கு சக்கரத்தாழ்வார், மூலவராக இருக்கும் காரணத்தால், கோவில் ராஜகோபுரத்தின் பின்புறம் வலது பக்கத்தில் யோக நரசிம்மரும், இடதுபக்கத்தில் கல்யாண நரசிம்மரும் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார்கள். இந்த இரண்டு நரசிம்ம மூர்த்திகளும், நேர் பார்வையாக மூலவரான சக்கரத்தாழ்வாரை பார்த்தபடி இருப்பது ஆலயத்தின் தனித்தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. இத்தல சக்கரத்தாழ்வாருக்கு, ‘சுதர்சனர்’, ‘சக்கரபாணி’ ஆகிய பெயர்களும் உண்டு.
இந்த ஆலயத்தில் மூன்று சக்கரத்தாழ்வார்கள் இருப்பது சிறப்புக்குரியது. மூலவரான சக்கரத்தாழ்வார் 16 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். அவரைப் போலவே, உற்சவரான சக்கரத்தாழ்வாரும் கூட, 16 திருக்கரங்களுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இது தவிர அஷ்டபுஜம் எனப்படும் 8 கரங்களுடன் கூடிய சக்கரத்தாழ்வாரும் இந்த ஆலயத்தில் இருக்கிறார். ஆலயத்தின் உட்புறத்தில் நடத்தப்படும் சுவாமி புறப்பாட்டுக்காக மட்டுமே இந்த சக்கரத்தாழ்வாரை பயன்படுத்துவது சிறப்புக்குரியதாக இருக்கிறது.
இந்தக் கோவிலின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், அங்கு மற்றொரு சிறிய கோபுரம் இருக்கிறது. அந்தக் கோபுரத்தையும் கடந்து சென்றால், பலிபீடம், கருடாழ்வார் சன்னிதிகள் காணப்படுகின்றன. கருடாழ்வார், சக்கரத்தாழ்வாரை நோக்கியபடி இருக்கிறார். கருவறையில் எங்கும் இல்லாத வகையில், இரண்டு தாயார்களுடன் சக்கரத்தாழ்வார் வீற்றிருக்கிறார். இது அரிதிலும் அரிதான காட்சி என்று சொல்லப்படுகிறது.
இங்கு அருளும் சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்தால், நவக்கிரக தோஷங்கள் விலகும் என்கிறார்கள். மேலும் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே, இத்தல இறைவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்பதும் பலரது கருத்தாக இருக்கிறது. சக்கரத்தாழ்வார் சன்னிதியின் முன்பாக நின்று, அவருக்கான காயத்ரி மந்திரத்தை ஒன்பது முறை பாராயணம் செய்தால், நவக்கிரக தோஷம் விலகுமாம்.
நவக்கிரக தோஷம் இருப்பவர்கள், தொடர்ச்சியாக 9 மாதங்கள் சித்திரை நட்சத்திரம் அன்றோ அல்லது 9 வியாழக்கிழமைகளோ அல்லது 9 சனிக்கிழமைகளோ வருகை தந்து, 9 அகல் விளக்கு ஏற்றிவைத்து, 9 முறை சக்கரத்தாழ்வாரை வலம் வந்து வழிபட வேண்டும். மேலும் சிவப்பு மலர்களால் ஆன மாலையை, சக்கரத்தாழ்வாருக்கு சூட்டி, அதோடு கற்கண்டு மற்றும் உலர்ந்த திராட்சையை நைவேத்தியமாக படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால், தோஷம் நீங்கும் என்கிறார்கள். நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். முற்பிறவி, இந்த பிறவியில் உண்டான பாவங்கள் நீங்கும். திருமணத்தடை விலகும். கல்வியில் இருந்த தடை அகன்று, ஞானம் பெருகும். இந்தக் கோவிலின் தல விருட்சமாக ‘அத்தி மரம்’ உள்ளது.
அமைவிடம்
தஞ்சாவூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திலும், தஞ்சை பெரிய கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் இருக்கிறது.
சிவேந்திரர் கோவில்
சக்கரத்தாழ்வார் ஆலயத்தின் உள்ளே மேற்கு புறமாக அமைந்துள்ள ஒரு மண்டபத்தில், சிவேந்திரர் கோவில் அமைந்திருக்கிறது. இது மராட்டியர்களின் வழிபாட்டு தெய்வமாக இருந்திருக்கிறது. இந்தக் கோவிலில் சிவேந்திரர், தனது தேவியருடன் அருள்புரிகிறார். இங்குள்ள ஒவ்வொரு சிற்பத்திற்கு பின்னாலும், மிகப்பெரிய அறுங்கோணம் உள்ளது.
பகுளாமுகி அம்மன்
ராஜகோபால சுவாமி ஆலயத்தின் ராஜகோபுரத்திற்கும், இரண்டாவது கோபுரத்திற்கும் இடையே, ‘பகுளாமுகி அம்மன்’ ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த அன்னையை ‘காளியம்மன்’ என்றும் அழைப்பார்கள். இந்த அம்மன், மராட்டியர்களின் இஷ்ட தெய்வமாக இருந்திருக்கிறாள். இந்த அம்மனை, செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் மூலவரான பகுளாமுகி அம்மனைத் தவிர, கஜலட்சுமி, பைரவர், மார்த்தாண்ட பைரவர், சிவ துர்க்கை, கோலாப்பூர் மகாலட்சுமி, விஷ்ணு துர்க்கை, சப்த கன்னியர் திருமேனிகள் உள்ளன.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்டு 88 திருக்கோவில்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான், இந்த ஆலயம். பொதுவாக பெருமாள் கோவில்களில் மூலவராக பெருமாள்தான் வீற்றிருப்பார். சக்கரத்தாழ்வார், தனிச்சன்னிதியில் எழுந்தருளியிருப்பார். அவருக்கு பின்புறம் நரசிம்மரின் உருவம் இடம்பெற்றிருக்கும்.
ஆனால் இங்கு சக்கரத்தாழ்வார், மூலவராக இருக்கும் காரணத்தால், கோவில் ராஜகோபுரத்தின் பின்புறம் வலது பக்கத்தில் யோக நரசிம்மரும், இடதுபக்கத்தில் கல்யாண நரசிம்மரும் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார்கள். இந்த இரண்டு நரசிம்ம மூர்த்திகளும், நேர் பார்வையாக மூலவரான சக்கரத்தாழ்வாரை பார்த்தபடி இருப்பது ஆலயத்தின் தனித்தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. இத்தல சக்கரத்தாழ்வாருக்கு, ‘சுதர்சனர்’, ‘சக்கரபாணி’ ஆகிய பெயர்களும் உண்டு.
இந்த ஆலயத்தில் மூன்று சக்கரத்தாழ்வார்கள் இருப்பது சிறப்புக்குரியது. மூலவரான சக்கரத்தாழ்வார் 16 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். அவரைப் போலவே, உற்சவரான சக்கரத்தாழ்வாரும் கூட, 16 திருக்கரங்களுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இது தவிர அஷ்டபுஜம் எனப்படும் 8 கரங்களுடன் கூடிய சக்கரத்தாழ்வாரும் இந்த ஆலயத்தில் இருக்கிறார். ஆலயத்தின் உட்புறத்தில் நடத்தப்படும் சுவாமி புறப்பாட்டுக்காக மட்டுமே இந்த சக்கரத்தாழ்வாரை பயன்படுத்துவது சிறப்புக்குரியதாக இருக்கிறது.
இந்தக் கோவிலின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், அங்கு மற்றொரு சிறிய கோபுரம் இருக்கிறது. அந்தக் கோபுரத்தையும் கடந்து சென்றால், பலிபீடம், கருடாழ்வார் சன்னிதிகள் காணப்படுகின்றன. கருடாழ்வார், சக்கரத்தாழ்வாரை நோக்கியபடி இருக்கிறார். கருவறையில் எங்கும் இல்லாத வகையில், இரண்டு தாயார்களுடன் சக்கரத்தாழ்வார் வீற்றிருக்கிறார். இது அரிதிலும் அரிதான காட்சி என்று சொல்லப்படுகிறது.
இங்கு அருளும் சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்தால், நவக்கிரக தோஷங்கள் விலகும் என்கிறார்கள். மேலும் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே, இத்தல இறைவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்பதும் பலரது கருத்தாக இருக்கிறது. சக்கரத்தாழ்வார் சன்னிதியின் முன்பாக நின்று, அவருக்கான காயத்ரி மந்திரத்தை ஒன்பது முறை பாராயணம் செய்தால், நவக்கிரக தோஷம் விலகுமாம்.
நவக்கிரக தோஷம் இருப்பவர்கள், தொடர்ச்சியாக 9 மாதங்கள் சித்திரை நட்சத்திரம் அன்றோ அல்லது 9 வியாழக்கிழமைகளோ அல்லது 9 சனிக்கிழமைகளோ வருகை தந்து, 9 அகல் விளக்கு ஏற்றிவைத்து, 9 முறை சக்கரத்தாழ்வாரை வலம் வந்து வழிபட வேண்டும். மேலும் சிவப்பு மலர்களால் ஆன மாலையை, சக்கரத்தாழ்வாருக்கு சூட்டி, அதோடு கற்கண்டு மற்றும் உலர்ந்த திராட்சையை நைவேத்தியமாக படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால், தோஷம் நீங்கும் என்கிறார்கள். நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். முற்பிறவி, இந்த பிறவியில் உண்டான பாவங்கள் நீங்கும். திருமணத்தடை விலகும். கல்வியில் இருந்த தடை அகன்று, ஞானம் பெருகும். இந்தக் கோவிலின் தல விருட்சமாக ‘அத்தி மரம்’ உள்ளது.
அமைவிடம்
தஞ்சாவூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திலும், தஞ்சை பெரிய கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் இருக்கிறது.
சிவேந்திரர் கோவில்
சக்கரத்தாழ்வார் ஆலயத்தின் உள்ளே மேற்கு புறமாக அமைந்துள்ள ஒரு மண்டபத்தில், சிவேந்திரர் கோவில் அமைந்திருக்கிறது. இது மராட்டியர்களின் வழிபாட்டு தெய்வமாக இருந்திருக்கிறது. இந்தக் கோவிலில் சிவேந்திரர், தனது தேவியருடன் அருள்புரிகிறார். இங்குள்ள ஒவ்வொரு சிற்பத்திற்கு பின்னாலும், மிகப்பெரிய அறுங்கோணம் உள்ளது.
பகுளாமுகி அம்மன்
ராஜகோபால சுவாமி ஆலயத்தின் ராஜகோபுரத்திற்கும், இரண்டாவது கோபுரத்திற்கும் இடையே, ‘பகுளாமுகி அம்மன்’ ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த அன்னையை ‘காளியம்மன்’ என்றும் அழைப்பார்கள். இந்த அம்மன், மராட்டியர்களின் இஷ்ட தெய்வமாக இருந்திருக்கிறாள். இந்த அம்மனை, செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் மூலவரான பகுளாமுகி அம்மனைத் தவிர, கஜலட்சுமி, பைரவர், மார்த்தாண்ட பைரவர், சிவ துர்க்கை, கோலாப்பூர் மகாலட்சுமி, விஷ்ணு துர்க்கை, சப்த கன்னியர் திருமேனிகள் உள்ளன.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி திருக்கோவில் அமைந்திருக்கிறது. கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூரைப் போல, இந்த ஆலயம் இருக்கும் திருத்தலத்தையும் ‘தட்சிண துவாரகை’ என்கிறார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது, மன்னார்குடி. இங்கு ராஜகோபால சுவாமி திருக்கோவில் அமைந்திருக்கிறது. கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூரைப் போல, இந்த ஆலயம் இருக்கும் திருத்தலத்தையும் ‘தட்சிண துவாரகை’ என்கிறார்கள். 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த ஆலயத்தில் கிருஷ்ணர் வடிவமாக இறைவன் வீற்றிருக்கிறார்.
இந்த ஆலய மூலவரின் திருநாமம், ‘வாமதேவப் பெருமாள்.’ உற்சவரின் திருநாமம்தான் ‘ராஜகோபால சுவாமி.’ தாயாரின் திருநாமம் ‘செங்கமலத் தாயார்’ என்பதாகும். மேலும் செண்பகலட்சுமி, ரக்தாப்ஜ நாயகி, படிதாண்டா பத்தினி, ஹேமாம்புஜ நாயகி போன்ற பெயர்களிலும் தாயாரை அழைக்கிறார்கள். ஆலய உற்சவரின் பெயரில்தான் இந்த ஆலயம் விளங்குகிறது.
தல வரலாறு
கிருஷ்ண அவதாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், தென்பகுதியில் கோபிலர், கோபிரளயர் என்ற இரண்டு முனிவர்கள் இருந்தனர். அவர்கள் கண்ணனின் லீலைகளைக் கேட்டு, அவரைப் பார்க்க துவாரகை நோக்கி புறப்பட்டனர். அப்போது வழியில் இரு முனிவர்களையும் சந்தித்த நாரதர், கிருஷ்ணாவதாரம் முடிந்து விட்டதாக கூறினார். அதைக்கேட்ட முனிவர்கள் வருத்தம் அடைந்தனர்.
அவர்களை ஆறுதல்படுத்திய நாரதர், இருவரையும் கிருஷ்ணனை நினைத்து தவம் இருக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி முனிவர்கள் இருவரும் கடுமையான தவத்தில் ஆழ்ந்தனர். அவர்களுக்கு இறைவன், ‘கிருஷ்ணராக’ காட்சி தந்தார். அவரிடம் தங்களின் லீலைகளை காட்டி அருளும்படி முனிவர்கள் வேண்டினார்கள். அதன்படி கிருஷ்ணர் தன்னுடைய 32 லீலைகளைக் காட்டி அருளினார்.
பின்னர் முனிவர்களின் வேண்டுதலுக்காக, இந்தத் தலத்தில் கிருஷ்ணர் எழுந்தருளினார் என்று தல வரலாறு சொல்கிறது. இந்தக் கோவில் 16 கோபுரங்களுடன் 7 தூண்கள், 24 சன்னிதிகள், ஏழு மண்டபங்கள், ஒன்பது புனித தீர்த்தங்களை உள்ளடக்கி பரந்து விரிந்து கிடக்கிறது. இத்தல உற்சவர் சிலை, வெண்கலத்தால் ஆனது. இது சோழர் காலத்தைச் சேர்ந்ததாகும். இந்த ஆலயத்தில் காணப்படும் ஒரு குளம் 1,158 அடி நீளமும், 837 அடி அகலமும் கொண்டுள்ளது.
இதனை ‘ஹரித் திராந்தி’ என்று அழைக்கிறார்கள். ஆலயத்தின் நுழைவு வாசலில் மழை நீர் சேகரிப்பதற் காக பெரிய தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும் இந்த ஆலயத்தில் காணப்படுகின்றன.
இத்தல மூலவர் 12 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறார். உற்சவர் ராஜகோபால சுவாமி, இந்த ஆலயத்தில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேஷ்டி அணிந்து, அதையே தலைப்பாகையாக சுருட்டி வைத்துள்ளார். வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்திருக்கிறார்.
இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய குழந்தைகள் அணியும் அணிகலன்களை அணிந்திருக்கிறார். அவரோடு ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன. தாயார் சன்னிதி அருகே, பெருமாள் சன்னிதி எதிரே, பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார். இத்தல இறைவனுக்கு, மதுரை கள்ளழகர் கோவில் போல, தினமும் மாலையில் மட்டும் தோசை நைவேத்தியம் படைக்கப்படுகிறது.
இங்கு வெண்ணைதாழி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் ‘ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம்’ என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதால் ‘சென்பகாரண்யா ஷேத்திரம்’ எனவும், முதலாம் குலோத்துங்க சோழன் இக்கோவிலை அமைத்த காரணத்தால் ‘குலோத்துங்க சோழ விண்ணகரம்’ என்றும், ஸ்ரீ ராஜகோபாலன் கோவில் கொண்டிருப்பதால் ‘ராஜமன்னார்குடி’ என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோவில் கட்டியதால் ‘மன்னார்கோவில்’ என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது
இந்தக் கோவில் குலோத்துங்கச் சோழனால், சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு கி.பி. 1070-1125-ல் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆலயத்தின் 18 நாள் உற்சவமாக பங்குனி உத்திர விழாவும், 12 நாள் உற்சவமான விடையாற்றி விழாவும் சிறப்பு வாய்ந்தவை. இதில் விடையாற்றி உற்சவம், கிருஷ்ண தீர்த்த தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெறும். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆடிப்பூரம் அன்று செங்கமலத் தாயார் தேரில் எழுந்தருள்வார்.
அமைவிடம்
திருவாரூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவில் அமைந்திருக்கிறது.
பெரியநாயகி உடனாய வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் கோவிலின் கர்ப்பக்கிரக விமானத்தைப் பார்த்துதான், பிற்காலத்தில் தஞ்சை பெரிய கோவிலை ராஜராஜ சோழன் அமைத்ததாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன.
கடலூர் மாவட்டத்தில் உள்ளது, திருவதிகை என்ற ஊர். இங்கு பெரியநாயகி உடனாய வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலின் கர்ப்பக்கிரக விமானத்தைப் பார்த்துதான், பிற்காலத்தில் தஞ்சை பெரிய கோவிலை ராஜராஜ சோழன் அமைத்ததாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன. அத்தகைய சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் உள்ள அம்மன் சன்னிதி முன்பாகத்தான், வடலூர் வள்ளலார் பெருமான் தியானம் இருந்து அருள் பெற்றதாக சொல்லப்படுகிறது. திருநாவுக்கரசரை இந்த உலகுக்கு அளித்த ஈசன் அருளும் ஆலயம் இது. அட்ட வீரட்டத் தலங்களுள் ஈசன் திரிபுரத்தை எரித்த வீரச் செயல் நிகழ்ந்தத் தலம் என்ற சிறப்பையும் இது பெறுகிறது
திருநாவுக்கரசர் தமது உழவாரத் திருப்பணியை தொடங்கிய முதல் ஆலயமாக இந்த திருவதிகை திருத்தலம் இருக்கிறது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலம் இதுவாகும். வர்க்க சாப தோசம், முன்னோர் செய்த பாவங்கள் நீங்க இந்த ஆலயத்தில் வழிபடலாம். தீராத வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள், உடல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தல திருநீறை பூசிக்கொண்டால், வியாதிகள் மறையும் என்கிறார்கள். திருஞானசம்பந்தருக்கு ஈசன் திருநடனம் காட்டிய திருத்தலமாகவும் இது திகழ்கிறது. சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான ‘உண்மை விளக்கம்’ என்ற நூலை அருளிய மனவாசகங்கடந்தார் அவதரித்த தலமும் இதுவே. சுந்தரர், ஈசனின் திருவடி தீட்சை பெற்ற திருத்தலமாகவும் திருவதிகை விளங்குகிறது.
அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசரின் அக்காள் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம் இது. மருள்நீக்கியார் என்ற இயற்பெயரைக் கொண்ட திருநாவுக்கரசர், சமண சமயத்தைத் தழுவினார். ஒரு முறை அவருக்கு சூலை நோய் (வயிற்றுவலி) ஏற்பட்டது. அதனை எவராலும் நீக்க முடியவில்லை. இறுதியாக அவர், தன்னுடைய அக்காள் இருக்கும், திருவதிகை திருத்தலத்திற்கு வந்தார். அங்கு திலகவதியாரை சந்தித்து தனது நோயை தீர்க்குமாறு வேண்டினார். திலகவதியாரும், திருவதிகை ஈசனின் திருநீறை சாப்பிடுவதற்காக கொடுத்தார். அதை சாப்பிட்டதும் அவரது நோய் மறைந்தது. இதையடுத்து தனது முதலாவது தேவாரப் பதிகத்தை இந்த ஆலய இறைவனை நோக்கிப் பாடினார். ஈசனால் ‘திருநாவுக்கரசர்’ என்று அழைக்கப்பட்டார்.
தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி எனும் மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு எனும் மூன்று கோட்டைகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்துவந்தனர். விமானம் போல் நினைத்த இடத்திற்கு செல்ல வசதியாக, இந்த கோட்டைகளுக்கு சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக்கொண்டு தேவர்களையும், முனிவர்களையும் மூன்று அசுரர்களும் துன்புறுத்தி வந்தனர். தங்களை காத்தருளும்படி தேவர்கள், சிவபெருமானிடம் வேண்டினர்.
இதையடுத்து அவர், பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களைக் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய -சந்திரர்களை சக்கரங்களாக்கி, மற்ற உலக படைப்புகளையும், வானவர்களையும் போர்க் கருவிகளாகவும், உடல் உறுப்புகளாகவும் மாற்றினார். இச்சமயம் ஒவ்வொரு உறுப்புகளும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று கர்வம் கொள்ளத் தொடங்கின. ஈசன் இப்படையில் எந்த பயனும் இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்க நினைத்து, தேர் தட்டில் கால் வைக்க அதன் அச்சு முறிந்தது. அமரர்களின் அகந்தையை எண்ணி எம்பெருமான் எள்ளி நகைக்க அவர் சிரித்த உடனேயே வானவர் உதவி ஏதுமின்றி கோட்டைகள் மூன்றும் பொடிப்பொடியாகின. இச்சம்பவம் நடந்த திருத்தலம் தான் திருவதிகை.
இத்தல வெளிப்பிரகாரத்தில் உள்ள வராகி அம்மன் சிறப்புக்குரியவர். பஞ்சமி நாட்களில் மாலை 5 மணிக்கு சிறப்பு அபிசேகம் வராகி அம்மனுக்கு நடைபெறுகிறது. இங்கு பவுர்ணமி நன்னாளில் கிரிவலம் நடக்கிறது. திருநாவுக்கரசருக்கும், அவரது சகோதரி திலகவதிக்கும் சன்னிதிகள் இங்கு உள்ளன. இங்கு திருநாவுக்கரசர் உட்கார்ந்த நிலையில் உள்ளது சிறப்பு. இங்கு ஈசனை சுவாதி நட்சத்திர நாளில் வழிபடுவதால் அனைத்து நலன்களும், வளங்களும் பெறலாம் என்கிறார்கள்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் அமைந்திருக்கிறது..
திருநாவுக்கரசர் தமது உழவாரத் திருப்பணியை தொடங்கிய முதல் ஆலயமாக இந்த திருவதிகை திருத்தலம் இருக்கிறது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலம் இதுவாகும். வர்க்க சாப தோசம், முன்னோர் செய்த பாவங்கள் நீங்க இந்த ஆலயத்தில் வழிபடலாம். தீராத வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள், உடல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தல திருநீறை பூசிக்கொண்டால், வியாதிகள் மறையும் என்கிறார்கள். திருஞானசம்பந்தருக்கு ஈசன் திருநடனம் காட்டிய திருத்தலமாகவும் இது திகழ்கிறது. சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான ‘உண்மை விளக்கம்’ என்ற நூலை அருளிய மனவாசகங்கடந்தார் அவதரித்த தலமும் இதுவே. சுந்தரர், ஈசனின் திருவடி தீட்சை பெற்ற திருத்தலமாகவும் திருவதிகை விளங்குகிறது.
அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசரின் அக்காள் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம் இது. மருள்நீக்கியார் என்ற இயற்பெயரைக் கொண்ட திருநாவுக்கரசர், சமண சமயத்தைத் தழுவினார். ஒரு முறை அவருக்கு சூலை நோய் (வயிற்றுவலி) ஏற்பட்டது. அதனை எவராலும் நீக்க முடியவில்லை. இறுதியாக அவர், தன்னுடைய அக்காள் இருக்கும், திருவதிகை திருத்தலத்திற்கு வந்தார். அங்கு திலகவதியாரை சந்தித்து தனது நோயை தீர்க்குமாறு வேண்டினார். திலகவதியாரும், திருவதிகை ஈசனின் திருநீறை சாப்பிடுவதற்காக கொடுத்தார். அதை சாப்பிட்டதும் அவரது நோய் மறைந்தது. இதையடுத்து தனது முதலாவது தேவாரப் பதிகத்தை இந்த ஆலய இறைவனை நோக்கிப் பாடினார். ஈசனால் ‘திருநாவுக்கரசர்’ என்று அழைக்கப்பட்டார்.
தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி எனும் மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு எனும் மூன்று கோட்டைகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்துவந்தனர். விமானம் போல் நினைத்த இடத்திற்கு செல்ல வசதியாக, இந்த கோட்டைகளுக்கு சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக்கொண்டு தேவர்களையும், முனிவர்களையும் மூன்று அசுரர்களும் துன்புறுத்தி வந்தனர். தங்களை காத்தருளும்படி தேவர்கள், சிவபெருமானிடம் வேண்டினர்.
இதையடுத்து அவர், பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களைக் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய -சந்திரர்களை சக்கரங்களாக்கி, மற்ற உலக படைப்புகளையும், வானவர்களையும் போர்க் கருவிகளாகவும், உடல் உறுப்புகளாகவும் மாற்றினார். இச்சமயம் ஒவ்வொரு உறுப்புகளும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று கர்வம் கொள்ளத் தொடங்கின. ஈசன் இப்படையில் எந்த பயனும் இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்க நினைத்து, தேர் தட்டில் கால் வைக்க அதன் அச்சு முறிந்தது. அமரர்களின் அகந்தையை எண்ணி எம்பெருமான் எள்ளி நகைக்க அவர் சிரித்த உடனேயே வானவர் உதவி ஏதுமின்றி கோட்டைகள் மூன்றும் பொடிப்பொடியாகின. இச்சம்பவம் நடந்த திருத்தலம் தான் திருவதிகை.
இத்தல வெளிப்பிரகாரத்தில் உள்ள வராகி அம்மன் சிறப்புக்குரியவர். பஞ்சமி நாட்களில் மாலை 5 மணிக்கு சிறப்பு அபிசேகம் வராகி அம்மனுக்கு நடைபெறுகிறது. இங்கு பவுர்ணமி நன்னாளில் கிரிவலம் நடக்கிறது. திருநாவுக்கரசருக்கும், அவரது சகோதரி திலகவதிக்கும் சன்னிதிகள் இங்கு உள்ளன. இங்கு திருநாவுக்கரசர் உட்கார்ந்த நிலையில் உள்ளது சிறப்பு. இங்கு ஈசனை சுவாதி நட்சத்திர நாளில் வழிபடுவதால் அனைத்து நலன்களும், வளங்களும் பெறலாம் என்கிறார்கள்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் அமைந்திருக்கிறது..






