என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பிரார்த்தனைகளை நிறைவேற்றும் புற்றுக்கோவில் அம்மன்
Byமாலை மலர்17 May 2021 8:04 AM GMT (Updated: 17 May 2021 8:04 AM GMT)
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பிரசித்தி பெற்ற புற்றுக்கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் வந்து வழிபட்டு அங்குள்ள நாகருக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோனேரிராஜபுரம் கிராமத்தில் மிகவும் பழமையான சர்வமங்கள மோகன குஜாம்பிகா சமேத கைலாச நாதர் சுவாமி கோவில் அமைந்து உள்ளது.
கி.பி 1117-ம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழனால் இந்த கோவிலில் திருப்பணி செய்யப்பட்டுள்ளதாக இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கிறது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்து பூஜைகள் நடைபெறாமல் இருந்துவந்த இந்த ஆலயத்தில் நூறு வருடங்களாக அம்பாள் சன்னதியின் பழமையான விமானத்தை பாம்பு புற்று தாங்கியபடி அமைந்துள்ளது வரலாற்று சாட்சியாக காணப்படுகிறது.
பாம்பு புற்று தாங்கிய விமானத்தால் மட்டுமே கைலாசநாதர் ஆலயம் அமைந்திருந்த இடம் கண்டுபிடிக்க முடிந்தது. மற்ற இடங்கள் தரைமட்டமாக இருந்தது.
அதன்பின்னர் கோனேரிராஜபுரம் மோகனராமனின் சீரிய திட்டமிடலோடு முறையான அஸ்திவார அடித்தளம் அமைத்து செய்யப்பட்ட திருப்பணி ஓராண்டிற்குள் முடிவடைந்தது.
கோனேரிராஜபுரம் வி.என்.ஆர்.கே.வைத்தியநாதன் குடும்பத்தினரின் பெரும் பங்களிப்போடு கைலாசநாதர் ஆலய திருப்பணிகள் நடந்தது. மேலும் இன்றளவும் தினசரி நடைபெறும் நித்தியபடி பூஜை சிறப்பு விழாக்கள் ஆகியவை நடந்து வருகிறது.
இவர்களுடன் கைலாசநாதர் சமய சேவா பொதுநல மன்றமும், கோனேரிராஜபுரம் கிராமவாசிகளும் இணைந்து நான்கு கால யாகசாலை பூஜையுடன் 2019-ம் ஆண்டு மே 10-ந் தேதி குடமுழுக்கு நடந்தது.
கைலாசநாத பெருமான், சர்வமங்கள மோகன குஜாம்பிகை, விநாயகர், திருச்செந்தூர் செந்தில்வேலன், நர்த்தன விநாயகர், ரகுமாயி சமேத பாண்டுரங்க சுவாமி, தட்சிணாமூர்த்தி, பைரவர், நாகர், நந்தி, பலிபீடம் ஆகிய மூர்த்தங்களுக்கு தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளது. தினசரி காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பிரசித்தி பெற்ற புற்றுக்கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் வந்து வழிபட்டு அங்குள்ள நாகருக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர். புற்றுக்கோவிலில் மட்டும் பக்தர்களே நேரிடையாக பூஜை செய்து வழிபட்டு வருவது மரபாக உள்ளது.
ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை, தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் புற்று கோவிலுக்கு திரண்டு வந்து விழா எடுத்து சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.
பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, அஷ்டமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. சிறப்பு வழிபாடு பூஜைகளை கோனேரிராஜபுரம் சம்பத்குமார் பட்டாச்சாரியார் செய்து வருகிறார். தினசரி நடைபெறும் இரண்டு கால நித்திய படி பூஜைகளை கோனேரிராஜபுரம் லட்சுமி நாராயண பட்டாச்சாரியார் செய்து வருகிறார்.
சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மன் சன்னதியில் சர்ப்பம்(பாம்பு) ஒன்று இருப்பதாகவும் அதனை பலரும் பார்த்து உள்ளதாகவும் கூறுகின்றனர். அதுவே புற்று கோவிலாகும். சுற்றுப்புற கிராம மக்களின் கண்கண்ட தெய்வமாக இன்றளவும் புற்றுக்கோவில் அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
தங்களது பிரார்த்தனைகள் உடனுக்குடன் நிறைவேறி வருவதாக இந்த கோவிலுக்கு வரும் பெண்கள் தெரிவிப்பதால் புற்றுக்கோவில் அம்மனுக்கு பெண் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
கோவில் அமைவிடம்
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்து உள்ளது. கும்பகோணம்-காரைக்கால் பஸ் வழித்தடத்தில் புதூரில் இருந்து தென்கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் இக்கோவில் அமைந்து உள்ளது. கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் செல்லும் டவுன் பஸ்சில் சென்றால் கோனேரிராஜபுரம் அருகில் இறங்கி கைலாசநாதர் கோவிலை சென்றடையலாம்.
கி.பி 1117-ம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழனால் இந்த கோவிலில் திருப்பணி செய்யப்பட்டுள்ளதாக இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கிறது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்து பூஜைகள் நடைபெறாமல் இருந்துவந்த இந்த ஆலயத்தில் நூறு வருடங்களாக அம்பாள் சன்னதியின் பழமையான விமானத்தை பாம்பு புற்று தாங்கியபடி அமைந்துள்ளது வரலாற்று சாட்சியாக காணப்படுகிறது.
பாம்பு புற்று தாங்கிய விமானத்தால் மட்டுமே கைலாசநாதர் ஆலயம் அமைந்திருந்த இடம் கண்டுபிடிக்க முடிந்தது. மற்ற இடங்கள் தரைமட்டமாக இருந்தது.
அதன்பின்னர் கோனேரிராஜபுரம் மோகனராமனின் சீரிய திட்டமிடலோடு முறையான அஸ்திவார அடித்தளம் அமைத்து செய்யப்பட்ட திருப்பணி ஓராண்டிற்குள் முடிவடைந்தது.
கோனேரிராஜபுரம் வி.என்.ஆர்.கே.வைத்தியநாதன் குடும்பத்தினரின் பெரும் பங்களிப்போடு கைலாசநாதர் ஆலய திருப்பணிகள் நடந்தது. மேலும் இன்றளவும் தினசரி நடைபெறும் நித்தியபடி பூஜை சிறப்பு விழாக்கள் ஆகியவை நடந்து வருகிறது.
இவர்களுடன் கைலாசநாதர் சமய சேவா பொதுநல மன்றமும், கோனேரிராஜபுரம் கிராமவாசிகளும் இணைந்து நான்கு கால யாகசாலை பூஜையுடன் 2019-ம் ஆண்டு மே 10-ந் தேதி குடமுழுக்கு நடந்தது.
கைலாசநாத பெருமான், சர்வமங்கள மோகன குஜாம்பிகை, விநாயகர், திருச்செந்தூர் செந்தில்வேலன், நர்த்தன விநாயகர், ரகுமாயி சமேத பாண்டுரங்க சுவாமி, தட்சிணாமூர்த்தி, பைரவர், நாகர், நந்தி, பலிபீடம் ஆகிய மூர்த்தங்களுக்கு தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளது. தினசரி காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பிரசித்தி பெற்ற புற்றுக்கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் வந்து வழிபட்டு அங்குள்ள நாகருக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர். புற்றுக்கோவிலில் மட்டும் பக்தர்களே நேரிடையாக பூஜை செய்து வழிபட்டு வருவது மரபாக உள்ளது.
ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை, தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் புற்று கோவிலுக்கு திரண்டு வந்து விழா எடுத்து சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.
பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, அஷ்டமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. சிறப்பு வழிபாடு பூஜைகளை கோனேரிராஜபுரம் சம்பத்குமார் பட்டாச்சாரியார் செய்து வருகிறார். தினசரி நடைபெறும் இரண்டு கால நித்திய படி பூஜைகளை கோனேரிராஜபுரம் லட்சுமி நாராயண பட்டாச்சாரியார் செய்து வருகிறார்.
சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மன் சன்னதியில் சர்ப்பம்(பாம்பு) ஒன்று இருப்பதாகவும் அதனை பலரும் பார்த்து உள்ளதாகவும் கூறுகின்றனர். அதுவே புற்று கோவிலாகும். சுற்றுப்புற கிராம மக்களின் கண்கண்ட தெய்வமாக இன்றளவும் புற்றுக்கோவில் அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
தங்களது பிரார்த்தனைகள் உடனுக்குடன் நிறைவேறி வருவதாக இந்த கோவிலுக்கு வரும் பெண்கள் தெரிவிப்பதால் புற்றுக்கோவில் அம்மனுக்கு பெண் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
கோவில் அமைவிடம்
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்து உள்ளது. கும்பகோணம்-காரைக்கால் பஸ் வழித்தடத்தில் புதூரில் இருந்து தென்கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் இக்கோவில் அமைந்து உள்ளது. கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் செல்லும் டவுன் பஸ்சில் சென்றால் கோனேரிராஜபுரம் அருகில் இறங்கி கைலாசநாதர் கோவிலை சென்றடையலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X